ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஈரானின் முதல் அணுசக்தித் தொழிற்சாலையில் எரிபொருள் நிரப்புதல் துவங்கியது

டெஹ்ரான்,ஆக22:ஈரானின் முதல் அணுசக்தித் தொழிற்சாலையான புஷஹரில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியது.

தெற்கு ஈரானில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் ரஷ்ய அதிகாரிகளின் முன்னிலையில் இப்பணித் துவங்கியது. ரஷ்யாவின் மேற்பார்வையில் நடைபெறும் இந்தத்திட்டத்திற்கு எரிபொருள் அளிப்பதும், கழிவுகளை சேகரிப்பதும் ரஷ்யாவாகும்.

அணுசக்தி செறிவூட்டுதல் திட்டத்தின் பெயரால் ஐ.நா நான்குமுறை ஈரானின் மீது தடையை ஏற்படுத்தியுள்ளது.பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் செலவிட்டு புஷஹர் அணுசக்தி நிலைய நிர்மாணம் பூர்த்தியானது.

எல்லாவித நிர்பந்தங்களையும், தடைகளையும் தாங்கிக் கொண்டு ஈரானின் அமைதியான அணுசக்தித்திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக ஈரானின் அணுசக்திப்பிரிவு தலைவர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்தார்.

இஸ்லாமிக் குடியரசின் எதிரிகளுக்கெதிரான வெற்றியாக சிறப்பிக்கப்படும் இத்திட்டத்தின் துவக்கத்தை தேசிய திருவிழாவாகக் கொண்டாட நிகழ்ச்சிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு மாதத்திற்குள் அணுசக்தி நிலையத்திலிருந்து மின்சாரம் உற்பத்திச் செய்யப்படும் எனக் கருதப்படுகிறது.செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ள ஈரான் அணுகுண்டு தயாரிக்க இதனை பயன்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட சில மேலைநாடுகள் பிரச்சாரம் செய்துவருகின்றன.

ஆனால், புஷஹரில் யுரேனியம் மூன்று சதவீதம் மட்டுமே செறிவூட்டப்படுகிறது.

மருத்துவ ஆராய்ச்சி ரியாக்டருக்காக 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தையும் ஈரான் துவக்கியுள்ளது.நதான்ஸ் ப்ளாண்டில் தேவையான செண்ட்ரிஃப்யூஜ்கள் நிறுவிவிட்டால் 30 டன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்திச் செய்யலாம் என ஸாலிஹி தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: