செவ்வாய், 28 ஜூலை, 2009

சிரியாவை சரிகட்ட அமெரிக்க தூதர் டமாஸ்கஸில்


ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிகாலத்தில் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த சிரியாவை சரிக்கட்டுவதற்கு அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதர் ஜார்ஜ் மிச்சேல் மீண்டும் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் வந்துள்ளார்.
சிரிய அதிபர் பஸ்ஸாருல் அஸதுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக பேச்சுவார்த்தைக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் மிச்சேல் தெரிவித்தார். அரப் இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைகளில் சிரியாவின் பூரண பிரநிதித்துவத்தை அமெரிக்கா எதிர்ப்பார்க்கிறது. இஸ்ரேல் சிரியாவிற்கிடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கும் என மிச்சேல் குறிப்பிட்டார்.
சிரியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு மிச்சேல் நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். பதவியேற்றபின் இரண்டாம் முறையாக மிச்சேல் சிரியா சென்றுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சிரியாவை தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடாகவே கருதியிருந்தார்.இதனால் இரு நாடுகளுக்குமிடையே தொடர்புகள் ஒன்றும் இல்லாமலிருந்தது. ஈரானுடனான சிரியாவின் உறவின் விரிசல் ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம். அதே நேரத்தில் இஸ்ரேல் கைப்பற்றியுள்ள கோலான் குன்றுகளை சிரியாவிடம் ஒப்படைக்காதவரை சமாதானத்திற்கு சாத்தியமில்லை என்று பஸ்ஸாருல் அஸத் மிச்சேலிடம் தெளிவுப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

முஸ்லிம்களை சீண்டும் சினிமாத்துறை!



முஸ்லிம்கள் மீது சினிமாத்துறையினருக்கு அப்படி என்னதான் கடுப்போ தெரியவில்லை. சினிமாவில் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக என்பதில் தொடங்கி அத்துணை அயோக்கிய செயல்கள் செய்பவர்களாக முஸ்லிம்களை காட்டுவதில் இந்த கனவுலக சிற்பிகளுக்கு அத்துணை ஆனந்தம். இது மட்டுமன்றி முஸ்லீம் பெண்ணை இந்து மற்றும் கிறிஸ்தவ ஆண்களோடு காதல் வயப்படுவதாக தொடர்ந்து காட்டுவது; இவ்வாறு சினிமாவிற்கு சம்மந்தமில்லாத முஸ்லிம்களை சினிமாவில் இழிவு படுத்துவதே தலையாய பணியாக ஒரு கூட்டம் செய்து வருகிறது. இவ்வாறு இவர்கள் துணிந்து செய்வதற்கு காரணம் முஸ்லீம் சமுதாயம் இவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான்.
பாரதிகண்ணம்மா என்றொரு திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஹீரோ உயர் சாதி என அறியப்பட்ட பிரிவை சேர்ந்த ஹீரோயினை காதலித்து இறுதியாக உயிர்நீத்த ஹீரோயினுடன் உடன்கட்டை ஏறுவது போன்ற காட்சி அமைப்பு இருக்கும். இதற்கு எதிராக உயர்சாதி அமைப்பினர் கொந்தளித்தது தமிழகம் அறிந்த ஒன்றே! ஆனால், ரோஜாவிலும்-அயோத்தியாவிலும்-ராமன் அப்துல்லாவிலும்-இன்னும் இதுபோன்ற பல்வேறு படங்களில் முஸ்லீம் சமுதாய பெண் மாற்றுமத ஹீரோவை காதலிப்பதாக- மணப்பதாக காட்டினார்கள். பொக்கிஷத்தில் காட்டவிருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம்களிடத்தில் பெரிய அளவில் எதிர்ப்புணர்வு இல்லை. கேட்டால், நாம் இதையெல்லாம் எதிர்த்தால் அந்த படம் பாப்புலாரிட்டியாகி வெற்றி படமாகிவிடுகிறது என்று சாக்கு போக்கு சொல்லும் தலைவர்களும் சமுதாயத்தில் உண்டு. படம் வெற்றி பெற்றால் என்ன? தோற்றால் என்ன? நமது எதிர்ப்பை பதிவு செய்தோமா என்பதுதான் முக்கியம் என்பதை இந்த சமுதாய தலைவர்கள் உணர மறுப்பது ஏன்?
அதே நேரத்தில், எதிர்ப்பை பதிவு செய்ததால் ஒரு விளம்பரம் சம்மந்தமாக முஸ்லிம்களிடத்தில் இயக்குனர் ஷக்திசிதம்பரம் வருத்தம் தெரிவித்ததை நாம் அறிவோம். இப்போது 'ஈசா' என்ற பெயரில் 'அவனே கடவுள்' என்ற அடைமொழியோடு ஒரு படம் வெளிவர இருக்கிறது. ஈஸா[ அலை] அவர்களை முஸ்லிம்கள் இறைவனின் தூதர் என்று நம்புகிறோம். அந்த ஈஸா[அலை] அவர்களை சம்மந்தப்படுத்தி தலைப்பிட்டு படம் எடுப்பதை குறித்து உரியவர்களிடம் சமுதாய அமைப்பினர் எடுத்துக்கூறி தலைப்பை மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும். அதோடு கதையின் தன்மை ஈஸா[ அலை] அவர்களை பற்றி விமர்சிக்கும்வகையில் இருந்தால் அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். இல்லையேல் நாளை 'முஹம்மத்' என்று படமெடுக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதை சமுதாயம் உணரவேண்டும்.

இடைத் தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு

மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் இன்று சென்னையில் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

மனிதநேய மக்கள் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியவுடன் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு 2011ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகமெங்கும் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மனிதநேய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. இச்சூழலில் தமிழக சட்டமன்றத்திற்கு ஐந்து தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் எவ்வித முக்கியத்துவமில்லாத தேர்தல் என மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. எனவே இந்த இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்படுகின்றது.


இளையாங்குடி தொகுதியில் மனிதநேய கட்சி போட்டியிட வேண்டுமென மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விடுத்த அன்பு வேண்டுகோளுக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி எந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதை சென்னையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறவுள்ள தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்படுகின்றது

திங்கள், 27 ஜூலை, 2009

சென்னை: அவசரமாக தரையிறங்கிய ஷார்ஜா விமானம்

சென்னையில் இருந்து ஷார்ஜா செல்லவிருந்த விமானம், தொழில்நுட்ப ‌கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. 128 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில், கிளம்பிய சில நொடிகளி‌லேயே பிரச்னை ஏற்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்

இஸ்லாத்தின் மீதான அவதூறு - மன்னிப்புக் கேட்டது பிபிஸி!

இஸ்லாத்தின் மீது பெரும் அவதூறைச் சுமத்தியதற்காக பிபிஸி நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அத்துடன் தனது தவறுக்கு வருந்தி, தான் அவதூறு பரப்பிய பிரிட்டனிலுள்ள முஸ்லிம் பேரவையின் (Muslim council of Britain) தலைவரான டாக்டர். முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்குகிறது.


பிபிஸியின் "கேள்வி நேரம்" நிகழ்ச்சி ஒன்றின் போது பிரிட்டிஷ் படை வீரர்களைக் கடத்திக் கொலை செய்வது பற்றிய ஒரு விவாதத்தில் அவதூறான சில கருத்துக்களை பிபிஸி நடுவர் குழு தெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்த முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் இச்செயலை முழு மனதுடன் ஆதரித்துப் பேசினார் என இந்நிகழ்ச்சியை நடத்தும் நடுவர் குழு பழி சுமத்தியது.

இது முற்றிலும் பொய்யான அவதூறாகும் என்று முஹம்மத் அப்துல் பாரி இதனை எதிர்த்துத் குரல் எழுப்பினார். தான் கூறாத ஒரு கருத்தைத் தான் கூறியதாகவும் அதுவே இஸ்லாத்தின் நிலைபாடாகவும் பொய்யான செய்தி வெளியிட்ட பிபிஸிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2007 இல் ஈராக்கில் பிரிட்டிஷ் படைவீரர்கள் கொல்லப் பட்டதை எதிர்த்து தான் பேசியதாகவும், அதனை பிபிஸி நடுவர்கள் குழு திரித்து அவர்கள் கொல்லப்படுவதைத் தான் ஆதரித்துப் பேசியது போன்று தம் மீதும் தூய இஸ்லாமிய நெறிகள் மீதும் பிபிஸி பழி சுமத்தியுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பதிவான நிகழ்ச்சியை மீண்டும் ஆராய்ந்த பிபிஸி இறுதியில் தனது தவற்றினை முழுமையாக ஒப்புக் கொண்டு முஹம்மத் அப்துல் பாரி அவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. இச்செய்தி பிபிஸி தளத்திலும் வெளியாகியுள்ளது.

சம்பவத்துக்குக் காரணமான கேள்வி நேரம்(Question Time) நிகழ்ச்சியினைக் கடந்த மார்ச் 12, 2009 இல் பிபிஸி பதிவு செய்தது. அதில், பிரிட்டிஷ் படை வீரர்களை எதிர்த்து ஈராக் மற்றும் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பற்றிய நிகழ்வு தொடர்பாக ஒரு பார்வையாளர் எழுப்பிய கேள்விக்கு முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் பதில் அளித்திருந்தார்.

பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட வேண்டுமா? என்று பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு முஹம்மத் பாரி பதில் சொல்ல முற்படுகையில் குறுக்கிட்ட நடுவர் குழு, "பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் பிரிட்டிஷ் படைவீரர்களை எதிர்த்து இத்தகையப் போராட்டங்கள் பல நடந்தும் அதனைக் கண்டனம் செய்யத் தவறியதால் முஹம்மத் பாரி இதனை ஆதரிக்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்!" என்று கருத்துத் தெரிவித்தது.

அத்துடன் நில்லாமல் "பிரிட்டிஷ் படைவீரர்கள் மீது நிகழும் இத்தகைய கடத்தல் மற்றும் கொலைகளை முஹம்மத் பாரி அவர்கள், ஏகமனதாக ஆதரிக்கிறார்" என்றும் "இதுவே இஸ்லாம் கூறும் வழியாகும்!" என்றும் சர்வதேச அளவில் நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்கள் அதிரும் வண்ணம் நடுவர் குழு அந்நிகழ்ச்சியில் பழியும் சுமத்தியது. பிபிஸி நடுவர் குழுவின் இத்தகைய அவதூறான பேச்சில் மறைமுகமாக பிரிட்டனின் முஸ்லிம் பேரவையைக் குறிவைத்துத் தாக்கியிருந்தது வெளிப்பட்டுள்ளது.

பிபிஸியின் மோசமான இந்தச் செயல்பாட்டை எதிர்த்து முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து, பிபிஸி தன்னுடைய இஸ்லாமிய விரோத அவதூறுக்கு மன்னிப்பு கேட்டு வருந்தியதோடு முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்கவும் சம்மதித்துள்ளது. இந்தத் தொகையினைத் தாம் அறக்கட்டளைகளுக்கு தர்மமாக வழங்கி விடப் போவதாக முஹம்மத் பாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.


source :

http://news.bbc.co.uk/2/hi/programmes/question_time/8153401.stm

http://www.mcb.org.uk/media/presstext.php?ann_id=362

http://www.satyamargam.com/



ஞாயிறு, 26 ஜூலை, 2009

மோடியிடம் உண்மை அறியும் சோதனை நடத்த வேண்டும்'

ராஜ்கோட்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் குஜராத் மாநில அமைச்சர் எஸ்.எஸ். வகேலா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ராஜ்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத் கலவரம் தொடர்பாக மோடியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்.

குஜராத் கலவரம் தொடர்பாக எஸ்.ஐ.டியிடம் ஒரு மாதிரியும், நானாவதி கமிஷனிடம் வேறு மாதிரியும் பேசி வருகிறது மோடி அரசு.

எனவே உண்மையைக் கண்டறிய மோடிக்கும் அவரது அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும்.

நானாவதி கமிஷன் விசாரணைக்கு ஒத்துழைக்கும் மோடி, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஒத்துவர மாட்டேன் என்கிறார் வகேலா.

சனி, 25 ஜூலை, 2009

சுதந்திர இந்தியாவில் மறைமுக சித்திரவதை சிறைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- அசாவுத்தீன் உவைசி


கடந்தவாரம் மீடியாக்கள் மூலம் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்ப்படுத்திய மறைமுக சித்ரவதை சிறைச்சாலைகளைப் பற்றியும் அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சித்ரவதை செய்யப்படுவது பற்றியும் மக்களவையில் கேள்வி எழுப்பாததைப்பற்றி அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லீஸ் இத்திகாதுல் முஸ்லிமீன் உறுப்பினரும் ஹைதராபாத் எம்.பி யுமான அசாவுத்தீன் உவைசி யிடம் கேட்கையில்; தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை பிடிப்பதும் அவர்களை சிறையில் அடைத்து ஆதிக்க அமெரிக்காவில் இருக்கும் குவான்டனமோ மறைமுக சிரைச்சாலையில் நடக்கும் சித்ரவதையைப் போன்று சுதந்திர இந்தியாவில் நடக்கும் இந்த மாபாதக செயலை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; அது மட்டும் இல்லாமல் அது போன்ற சிறைச்சாலைகளை மூடும்படி இந்திய அரசை வற்புறுத்த போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஹைதராபாதில் அப்பாவி நிரபராதி இளைஞர்கள் கைது செய்யப்படுவது பற்றி கேட்டதற்கு, ஆம் தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை பிடிப்பதும் அவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை போன்ற தொடரும் கொடுமைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதையும் வலியுறுத்துவேன் என பதில் அளித்தார்.

source: Twocircles

பாட்லா ஹவுஸ்:நீதி விசாரணை நடத்த முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

புதுடெல்லி:ஜாமிஆ நகர் பாட்லா ஹவுஸில் நடந்த என்கவுண்டரில் டெல்லி காவல்துறையினரை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கிய தேசிய மனித உரிமை கமிஷனுக்கெதிராக முஸ்லிம் எம்பிக்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் இந்நிகழ்வைகுறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்றும் முஸ்லிம் எம்.பிக்களான ஜனதாதளத்தைச்சார்ந்த இஜாஸ் அலி, ராஷ்ட்ரிய லோக்தளத்தைச் சார்ந்த மஹ்மூத் மதனி ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
அதேவேளையில் உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு புலனாய்வுக்குழுவைக்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிடுமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஆக்டிவ் நவ் ஃபார் ஹார்மனி அன்ட் டெமோக்ரஸி என்ற அமைப்பின் தலைமையில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி

U.A.E அபுதாபியில் வெளிநாடு இந்திய‌ர் ந‌ல‌ அமைச்ச‌க‌த்தின் சார்பில் தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌விடும் நோக்கில் இல‌வ‌ச தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.

வெளிநாட்டு இந்தியர் நலத்துறை அமைச்சகம் இந்த சேவையை வழங்குகிறது. வெளிநாடுக‌ளுக்கு குறிப்பாக‌ வ‌ளைகுடா நாடுக‌ளுக்குச் செல்லும் தொழிலாள‌ர்க‌ள் ஏஜெண்டுக‌ளின் க‌வ‌ர்ச்சியான‌ வாக்குறுதிக‌ளைக் கேட்டு ஏமாந்து விடுகின்ற‌ன‌ர்.

இத‌ன் கார‌ண‌மாக‌ ம‌னைவியின் ந‌கைக‌ள், சொத்து உள்ளிட்ட‌வ‌ற்றை விற்று பிழைப்பு தேடி வ‌ரும் இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து அறியாமையின் கார‌ண‌மாக‌ ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இத்த‌கைய‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்திம் வ‌கையில் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் இந்த‌ சேவையின் மூல‌ம் ஏமாற்றும் ஏஜ‌ண்டுக‌ள் குறித்தும் புகார் த‌ர‌லாம்.

த‌ற்பொழுது ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், குவைத்,ச‌வுதி அரேபியா உள்ளிட்ட‌ வ‌ளைகுடா நாடுக‌ளில் ப‌ணிபுரியும் தொழிலாள‌ர்க‌ள் 800 091 202 53 என்ற‌ இல‌வ‌ச‌ தொலைபேசி எண்ணில் வார‌த்தின் ஏழு நாட்க‌ளும், 24 ம‌ணி நேர‌மும் தொட‌ர்பு கொள்ள‌லாம்

புதன், 22 ஜூலை, 2009

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ஜுனாகட் மாநகராட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இது முதல்வர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மாநிலத்தில் காணாமல் போயிருந்த காங்கிரஸ் கட்சி மிக அதிக இடங்களைக் கைப்பற்றி மாநகராட்சியைப் பிடித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. 51 வார்டுகளைக் கொண்ட இந்த மாநகராட்சியில் 26 இடங்களை காங்கிரஸ் கட்சியும், 21 இடங்களை பாஜகவும், 3 இடங்களை பகுஜன் சமாஜ் கட்சியும், ஒரு இடத்திலும் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு மாபெரும் வெற்றி கிடைக்காத நிலையில் இந்தத் தேர்தலை பாஜக கெளரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியது. நரேந்திர மோடியே பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

2004ம் ஆண்டு நட்த மாநகராட்சித் தேர்தலில் பாஜக 35 இடங்களைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தின் முக்கிய நகர்ப் பகுதியான இங்கு நரேந்திர மோடிக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. இப்போது அங்கு பெரும் சரிவு ஏற்பட்டு்ள்ளது.

யூத குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு அமெரிக்காவிலிருந்து குவியும் நிதி உதவி

வாஷிங்டன்: மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலமிலும் யூத குடியிருப்புகளை நிர்மாணிப்பதை நிறுத்துவதற்கு ஒரு பக்கம் அமெரிக்கா வலியுறுத்திக் கொண்டிருக்கவே இன்னொரு பக்கம் அமெரிக்காவிலிருந்து லட்சக்கணக்கான டாலர்கள் நிதி உதவிகள் குடியேற்றங்களை கட்டுவதற்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் தி கார்டியன் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கலிபோர்னியாவை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஒரு மனித உரிமை அமைப்பின் போர்வையில்தான் இந்த நிதி உதவிகள் அனுப்பப்படுகின்றன. அமெரிக்காவைச்சார்ந்த‌ டாக்டர் இர்விங் மோட் கோவிட்ஸ் என்ற யூதர்தான் இதன் நிறுவனர். "பிங்கோ" என்றழைக்கப்படும் சூதாட்டத்தின் மூலம் அதிகமான நிதி சேகரிக்கப்படுகிறது. சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர்களானாலும் சரி தோற்பவர்களானாலும் சரி போதுமான நிதி உதவியை அளிப்பதாக மோட் கோவிட்ஸ் கூறுகிறார்.
யூத குடியிருப்புகளின் விரிவாக்கத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாக இந்த அமைப்பு நித உதவிகளை வழங்கிக்கொண்டிருப்பதாக தி கார்டியன் பத்திரிகை கூறுகிறது. அதே வேளையில் மோட் கோவிட்ஸின் இந்த செயலுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஃபலஸ்தீன் எதிர்ப்பு அறிக்கைகளுக்கு முக்கியக்காரணகர்த்தாவாக விளங்குபவர்தான் மோட்கோவிட்ஸ். இஸ்ரேல் ஃபலஸ்தீன் சமாதான பேச்சுவார்த்தைகளை அடிபணிதல் என்று வர்ணிப்பவர் மோட்கோவிட்ஸ்.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

இன்னொரு அடிமை சாச‌ன‌ம் ?


ஏற்க‌ன‌வே அணுச‌க்தி ச‌ம்ப‌ந்த‌மாக‌ அமெரிக்காவிற்கு அடிமைசாச‌ன‌ம் எழுதிக்கொடுத்த‌ ம‌ன்மோக‌ன் சிங் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ முற்போக்கு கூட்ட‌ணி அர‌சு த‌ற்ப்போது அமெரிக்க‌ வெளியுற‌வுச்செய‌ல‌ர் ஹிலாரி கிளிண்ட‌னின் ச‌மீப‌த்திய‌ இந்திய‌ சுற்றுப‌ய‌ண‌த்தின் போது இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் ஒப்ப‌ந்த‌ங்க‌ளில் கையெழுத்திட்டுள்ள‌து.
இந்த‌ முக்கிய‌த்துவம் வாய்ந்த‌ இந்தியாவின் பாதுகாப்பு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ஒப்ப‌ந்த‌ங்க‌ள் கையெழுத்தாகுமுன் பாராளும‌ன்ற‌த்தின் இரு அவைக‌ளிலும் விவாதிப்ப‌த‌ற்கு கூட‌ துணியாம‌ல் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ கையெழுத்திட்ட‌தின் நோக்க‌ம் என்ன‌ என்ப‌த‌ற்கு வெளியுற‌வுத்துறை அமைச்ச‌ரான‌ எஸ்.எம்.கிருஷ்ணாவிட‌ம் எந்த‌ ப‌திலையும் காணோம்.
ஒப்ப‌ந்த‌த்தின் சாராம்ச‌ம் இதுதான் இந்தியாவிற்கு அமெரிக்காவால் விற்க‌ப்ப‌டும் அணுச‌க்தித்தொட‌ர்பான‌ க‌ருவிக‌ள் எந்த‌ ப‌ய‌ன்பாட்டிற்காக‌ வாங்க‌ப்ப‌ட்ட‌தோ அந்த‌ ப‌ய‌ன்பாட்டிற்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌தா என்ப‌தை ஆய்வுச்செய்யும் உரிமையை அமெரிக்காவிற்கு அளிப்ப‌து. இத‌ன் மூல‌ம் இந்திய‌ ராணுவ‌ த‌ள‌ங்க‌ள் ம‌ற்றும் அணுமின் நிலைய‌ங்க‌ளுக்கு அமெரிக்க‌ குழு நேர‌டியாக‌ வ‌ந்து ஆய்வு செய்யும் உரிமை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இத‌ற்கு முன் ர‌ஷ்யா, பிரான்சு போன்ற‌ நாடுக‌ளுட‌ன் செய்ய‌ப்ப‌ட்ட‌ ஒப்பந்த‌ங்க‌ளின் போது விட்டுக்கொடுக்க‌ப்ப‌டாத‌ உரிமை த‌ற்ப்போது கொடுக்க‌ப்ப‌ட்ட‌த‌ன் மூல‌ம் இந்தியா த‌ன‌து த‌னித்த‌ன்மையை இழ‌ந்து நிற்கும் சூழ‌ல் ஏற்ப‌ட்டுள்ள‌து.
இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ பாராளும‌ன்ற‌த்தின் இரு அவைக‌ளிலும் எதிர்க்க‌ட்சிக‌ள் க‌ட்சி வேறுபாடின்றி ம‌த்திய‌ அர‌சின் இந்த‌ தான்தோன்றித்தன‌மான‌ போக்கை க‌டுமையாக‌ விம‌ர்சித்து அவைக‌ளிலிருந்து வெளி ந‌ட‌ப்புச்செய்த‌ன‌. முன்ன‌தாக‌ அவையில் பேசிய‌ ராஷ்ட்ரீய‌ ஜ‌ன‌தா த‌ள‌த்த‌லைவ‌ர் லாலு பிர‌சாத் யாத‌வ் பேசுகையில், "பார்லிமென்ட் கூட்ட‌த்தொட‌ர் ந‌ட‌ந்துக்கொண்டிருக்கும் சூழ‌லில் அணுச‌க்தி ஒப்ப‌ந்த‌ம் தொட‌ர்பான‌ விஷ‌ய‌த்தை அர‌சு ம‌றைக்க‌ முய‌ல்கிற‌து. அமெரிக்காவுட‌ன் கைக்கோர்ப்ப‌த‌ற்கு முன்பாக‌ ஈராக் முன்னாள் அதிப‌ர் ச‌தாம் ஹுசைனுக்கு ஏற்ப்ப‌ட்ட‌ நிலையை நினைத்து பார்க்க‌வேண்டும். அமெரிக்காவின் உத்த‌ர‌வுக்கு இண‌ங்க‌ ம‌றுத்தால் ச‌தாம் ஹுசைனுக்கு ஏற்ப‌ட்ட‌ க‌திதான் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌டும். இதை உல‌க‌ம் முழுவ‌த‌ற்கும் செய்தியாக‌ கூற‌ விரும்புகிறேன். "இவ்வாறு கூறினார். அமெரிக்காவுட‌னான‌ இந்தியாவின் கூடா ந‌ட்பு இனி என்னென்ன‌ விப‌ரீத‌ங்க‌ளை உருவாக்க‌ப்போகிற‌தோ இறைவ‌னுக்கே வெளிச்ச‌ம்!

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர்- ஒரு சின்ன அலசல்!


தமிழக சட்டமன்றத்தின் 11 வது கூட்டத்தொடர் ஜூன் 17 தொடங்கி ஜூலை 21 தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் இறுதிநாள் வரை பிரதான எதிர்க்கட்சிகள் அதிலும் குறிப்பாக அண்ணா திமுக -மதிமுக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்யாத நாளே இல்லை என சொல்லலாம். இவர்கள் வெளிநடப்பு செய்ததில் பெரும்பாலான விஷயங்கள் உப்பு சப்பில்லாதவையே! இதுபோக தள்ளாத வயதிலும் தளராமல் அவைக்கு வந்து கடமையாற்றும் முதல்வரின் பணியை பாராட்டும் அதே வேளையில், அவைக்கு வந்து ஆளும்கட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளையும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளையும், உரிய ஆதாரத்துடன் அடுக்கவேண்டிய அம்மையார் ஜெயலலிதா[ சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்] ஆழ்ந்த ஓய்வில் இருப்பதால் அவைப்பக்கமே தலைவைத்து படுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளான இவர்கள் நிலை இவ்வாறிருக்க, இவர்களுக்கு அதாவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வளித்து குஷிப்படுத்தியுள்ளது திமுக அரசு.

கருணாநிதி ஆட்சியில் அன்றாடங்காட்சிக்கு திண்டாட்டம்; அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம் என்ற கருத்து எப்போதும் உண்டு. அடித்தட்டு மக்களை அன்றாடம் பயன்படுத்தும் அரிசி தொடங்கி துவரம் பருப்புவரை பயம்காட்டிக்கொண்டிருக்க, விண்முட்டும் விலைவாசி உயர்வு பற்றி மக்கள் சிந்திக்காமல் இருக்க அவர்களுக்கு கலர் டிவிகளை வழங்கி கனவு காண விட்டுவிட்டு, கனவில் கூட மக்கள் நலனையும், தொகுதி நலனையும் கண்டுகொள்ளாத எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் உயர்த்தி வறுமைக்கோட்டுக்கு[?] கீழ் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அவர்களின் வளமான வாழ்வுக்கு வழிகாட்டியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

2005 ஏப்ரலில் அதிமுக ஆட்சியில் எம்எல்ஏக்களின் சம்பளம், படிகள் ஆகியவற்றை ரூ.12,000லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தினார் ஜெயலலிதா.2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் செப்டம்பரில் சம்பளம், படிகள் ஆகியவற்றை ரூ.20,000 ஆக உயர்த்தினார் முதல்வர் கருணாநிதி. இது 2007ல் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது.2008 மே மாதத்தில் எம்எல்ஏக்களின் மொத்த ஊதியம் மீண்டும் உயர்த்தப்பட்டு ரூ.30,000 ஆனது.2009ம் ஆண்டு பிப்ரவரியில் இது ரூ.45,000 ஆக உயர்த்தப்பட்டது.இந் நிலையில் நேற்று மீண்டும் ரூ.5,000 உயர்த்தப்பட்டு இப்போது எம்எல்ஏக்களின் மொத்த ஊதியம் ரூ.50,000 ஆகிவிட்டது.இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.தமிழகத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் கடந்த 3 ஆண்டுகளில் [திமுக ஆட்சிக்கு வந்தபின்னர்]ரூ.34,000 உயர்த்தப்பட்டுள்ளது.

இதைத்தான் 'மக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் மூணு கெட்டு வெளக்கமாறு' என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். சரி! சம்பளத்தை அள்ளிக்கொடுத்தீர்கள். சபைக்கு வராமலே இருக்கிறார்களே அவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் வாரி வழங்குவது நியாயமா? சபைக்கு வந்து தலைகாட்டிவிட்டு 'வெளிநடப்பு' என்று தலை தெறிக்க ஒடுபவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்குவது நியாயமா? குறைந்த பட்சம் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்களின் அன்றைய ஊதியம் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டாமா? சரி! இவர்களாவது 'சிட்டிங்' எம்.எல்.ஏக்கள். அதனால் அள்ளிக்கொடுத்துவிட்டீர்கள். முன்னால் எம்.எல்.ஏக்களுக்கும் ஊதியத்தை எட்டு ஆயிரத்திலிருந்து பத்து ஆயிரமாக உயர்த்தியுள்ளீர்களே! அவர்கள் என்ன அரசு ஊழியர்களா? ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு? எனக்கு தெரிந்த ஒரு முன்னால் ராணுவவீரர் சொல்வார்; மாப்ளே! நான் பணியில் இருந்தபோது எனக்கு சம்பளம் மூனாயிரம்தான். ஆனா இப்ப எனக்கு ஓய்வூதியம் பதிமூனாயிரம் என்பார்.
அதுபோல் இந்த எக்ஸ் எம்.எல்.ஏக்களுக்கு பணியில் பெற்ற ஊதியத்தைவிட கூடுதலாக ஓய்வூதியம் வழங்குகிறது திமுக அரசு. என்ன செய்வது! மக்கள் இலவசங்களில் இதயத்தை பறிகொடுத்தால் பறிகொடுத்தால் இதுதான் நிலை.

அடுத்து, இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது திருமணங்களை அனைத்து மதத்தினரும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்ற சட்டம். இந்த சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை கைவைக்கும் முயற்சியாகவும், பொது சிவில் சட்டத்தின் வெள்ளோட்டமாகவும் எமக்கு படுகிறது. ஏனெனில், இந்த சட்டம் குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் துரைமுருகன், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படிதான் இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது.இந்து திருமண பதிவு சட்டம் ஏற்கனவே இருக்கிறது. மற்ற மதத்தினரும் எந்த முறையில் திருமணம் நடத்தினாலும் அதை பதிவு செய்யவேண்டும். இதில் எந்த தவறும் இல்லை. பெண்களுக்கு இது பாதுகாப்புத்தான். மேலும் ஏமாற்றிவிட்டு ஓடமுடியாது. இதன் மூலம் பால்ய விவாகத்தையும், பலதார மனத்தையும் தடுக்கலாம் என்று கூறியுள்ளார்.


இதில் அமைச்சர் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு என்று கூறவில்லை. ஆக இந்த சட்டப்படி முஸ்லிம்கள் தங்களின் திருமணத்தை பதிவு செய்தால், விவாகரத்து தேவையெனில் இப்போது இந்துக்கள் செல்வது போல் கோர்ட்டில் போய்தான் பெறவேண்டுமா? ஜீவனாம்சம் வழங்கும் நிலை வருமா? பலதார மனம் செய்து கொள்ளமுடியாதா? என்பதை அரசும் முஸ்லீம் சட்ட வல்லுனர்களும் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். தமிழக அரசின் இச்சட்டம் முஸ்லீம் ஷரியத்தை கைவைக்குமானால் அதை முஸ்லிம்கள் ஒருங்கிணைத்து தமது எதிர்ப்பை பதிவு செய்து முறியடிக்கவேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் நாமறிந்தவரை முஸ்லிம்லீக் நீங்கலாக மற்ற அமைப்புகள் தங்களின் கருத்தை தெரிவிக்காதது ஏன் என விளங்கவில்லை.

ம‌த்‌திய அரசு சா‌ர்‌பி‌ல் இலவச சமைய‌ல்கலை ப‌‌யி‌ற்‌சி

ம‌த்‌திய அர‌சி‌ன் சு‌ற்றுலா‌த்துறை சா‌ர்‌பி‌ல் நட‌த்த‌ப்படு‌ம் இலவச தேசிய விருந்தோம்பல் திறன் சான்றித‌ழ் பயிற்சி, உணவு சமையல்கலை பயிற்சி‌, உணவு பரிமாறும் முறை பயிற்சி‌க்கு ‌விருப்பமுள்ளவ‌ர்க‌ள் செ‌ன்னை தரம‌ணி‌யி‌ல் உ‌ள்ள உணவு மேலாண்மை நிறுவன‌‌த்தை அணுகலா‌ம்.


ம‌த்‌திய அரசின் சுற்றுலாத்துறையால் உருவாக்கப்பட்ட “உணவக மேலாண்மை, சமையல் கலை மற்றும் ஊட்டநெறி தொழில்நுட்பக் கல்லூரி” சென்னையிலுள்ள தரமணியில் இயங்கி வருகிறது.

இங்கு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றித‌ழ் படிப்பு ஆகிய நிலைகளில், விருந்தோம்பல், உணவு விடுதி நிர்வாகம் போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில், பணியாளர்களுக்கான திறன் வளர்ப்பு திட்டத்தின் கீ‌ழ் பின்வரும் பயிற்சிகளை மைய அரசின் சுற்றுலாத்துறை இலவசமாக அளிக்கவுள்ளது.

3 நாட்கள் தேசிய விருந்தோம்பல் திறன் சான்றித‌ழ் பயிற்சி‌க்கு வழக்கமான கல்வி, சான்றித‌ழ் ஏதுமில்லாமல் அனுபவ அறிவுடன் பெரிய, சிறிய உணவகங்களில் பணிபுரியும் நபர்களுக்கு சமையல்காரர் மற்றும் உணவு பரிமாறுபவர்களுக்கான பயிற்சி அளிக்கப்படும். வயது வரம்பு கிடையாது. பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படு‌கிறது.

8 வாரங்களுக்கு உணவு சமையல்கலை பயிற்சி‌க்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெ‌ற்‌றிரு‌க்க வே‌ண்டு‌ம். 18 முத‌ல் 25 வயது‌க்கு‌ள்ளவ‌ர்க‌ள் இ‌ப்ப‌‌யி‌ற்‌‌‌சி‌க்கு விண்ணப்பிக்கலாம். ஊக்கத் தொகை ரூ.2000 வழங்கப்படு‌கிறது. மேலும், சீருடை, சமையல் பொருட்கள், பயிற்சிக்கான பொருட்கள் போன்றவையும், மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படு‌கிறது.

6 வாரம் உணவு பரிமாறும் முறை பயிற்சி‌க்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெ‌ற்‌றிரு‌க்க வே‌ண்டு‌ம். வயது வரம்பு 18 25க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊக்கத் தொகை ரூ.1500 வழங்கப்படு‌கிறது. மேலும், சீருடை, சமையல் பொருட்கள், பயிற்சிக்கான பொருட்கள் போன்றவையும், மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படு‌கிறது.

இப்பயிற்சி வருகின்ற 03.08.2009 அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் முகவரியில் உள்ள இந்நிறுவனத்தை வேலை நாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

உணவு மேலாண்மை நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி அஞ்சல், சென்னை 600 113 (இந்திரா நகர் இரயில் நிலையம் அருகில்) தொலைபேசி எ‌ண் 22542029. கல்லூரியின் தொலைபேசி எண். 044 22542029. இணைய தளம் முகவரி www.ihmchennai.org.

செவ்வாய், 21 ஜூலை, 2009

ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்டுதாம்

முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் என்ற முஸ்லீம் அமைப்புக்கு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பயிற்சி முகாமை நடத்துகிறது. இதுதொடர்பான பயிற்சி முகாம், நாக்பூரில் ஜூன் 7ம் தேதி தொடங்கியது. 15 மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பயிற்சி வகுப்பின் தொடக்கத்தில், ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் பேசுகையில், இங்கிலாந்துக்காரர்கள் (அவர்கள் மட்டும்தானா?), முஸ்லீம்களையும், இந்துக்களையும் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக பிரித்து வைத்தனர். அந்த பிரிவினைவாத அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்தான் நம்மைப் பிரித்து வைத்துள்ளது. ஆனால் கலாச்சாரம் நம்மை சேர்த்து வைக்கிறது.
அன்பு, அமைதி ஆகிய தத்துவங்களை மக்களிடையே நாம் பிரசாரம் செய்ய வேண்டும். நாம் அனைவருக்கும் ஒரே மூதாதையர்தான், கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் அனைத்தும் ஒன்றுதான் என்பதை இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் என்ற மாபெரும் மதத்தின் உயரிய தத்துவங்களை நாம் புரிந்து கொண்டு அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும்.
பார்சிகள், யூதர்கள், ஆங்கிலோ இந்தியர்கள்தான் இந்தியாவின் சிறுபான்மையினர். முஸ்லீம்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு வரவில்லை. இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள்தான் முஸ்லீம்கள். தங்களது வழிபாட்டு முறை, மதப் பழக்கங்களை அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கும், இந்து சகோதரர்களுக்கும் ஒரே மூதாதையர்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பின் காப்பாளராக தன்வீர் அகமது, தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக முகம்மது அப்சல், சலாபத் கான் ஆகியோரும், ஒருங்கிணைப்பு செயலாளராக கிரீஷ் ஜுயூல், மக்கள் தொடர்பாளராக உணர் இலியாசி ஆகியோர் செயல்படுவார்கள் என பயிற்சி வகுப்பின்போது அறிவிக்கப்பட்டது.

வருண்காந்திக்கு நோட்டீஸ்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிலிபிட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார் வருண்காந்தி.

இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும்படி பேசியதாகவும், அது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமாதலால் அவரது வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வீரேந்திர மோகன்சிங் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு வருண்காந்திக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்

கடந்த இரு ஆண்டுகளாக தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையத்தில் புகார்கள் குவிந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பதாவது:தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையத்தில் கடந்த இரு ஆண்டுகளாக புகார்கள் குவிந்து வருகின்றன. சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2007-08ல் ஆயிரத்து 508 புகார்களும், 2008-09ல் 2,250 புகார்களும் குவிந்துள்ளன. 2009-10ம் ஆண்டில் கடந்த ஜூன் 30ம் தேதி வரை 472 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால், உரிய நபர்களுக்கு தாக்கீதும் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஓரினச் சேர்க்கை தவறல்ல! மாபாதகச்செயலுக்கு துணைப்போகும் உச்சநீதி மன்றம்!!


டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்கள் மனம் ஒத்து செக்ஸில் ஈடுபடுவது சட்டப்பூர்வமாக சரியே என்று டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசுக்கு அது 8 வார கால அவகாசத்தையும் அளித்துள்ளது.
ஜூலை 2ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தீர்ப்பில், ஓரினச் சேர்க்கையாளர்கள், மனம் ஒத்து செக்ஸ் உறவில் ஈடுபடுவது சட்டவிரோதம் அல்ல. இதுதொடர்பான 377வது சட்டப் பிரிவு செல்லாது எனறு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையை எட்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்வது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

பிள்கள்: உலகம் மீண்டும் ஒரு ர(த்)த யாத்திரை அத்வானி திட்டம்



நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக, இன்னும் அதிலிருந்து மீளவில்லை. தோல்வியையடுத்து, மேல்மட்ட தலைவர்களுக்கு இடையேயான உட்கட்சி பூசல். இதிலிருந்து மீள தனது பிரபலமான ஆயுதமான "யாத்ரா' வை தூசி தட்டி பாஜகவிற்கு உயிரோட்டமளிக்க அத்வானி முடிவு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், இந்த யாத்ரா பிரச்சாரமாக இல்லாமல், கட்சியின் அடிமட்ட தொண்டனை ஊக்குவிக்கும் வகையில் இருக்குமென தெரிகிறது. ஜனநாயக நாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம், ஆகவே அதிலிருந்து மீள்வதற்கான வழியை கண்டுபிடிக்கும் கட்டாயத்திற்கு பாஜக தள்ளப்பட்டிருக்கிறது. பாஜக மீது கட்சியின் தொண்டர்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டுவதுதான் யாத்திரையின் நோக்கமாக இருக்கும் என அத்வானிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

முன்பு இதுபோன்ற பல்வேறு (த்) யாத்திரைகளில் தனது முஸ்லிம் விரோத பேச்சுக்களின் மூலம் பாசிசவாதிகளை சூடேற்றி முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரங்களை தூண்டிவிட்டவர் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்த ஏழு இந்திய ராணுவத்தினர் அதிரடி கைது

இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்ததாக இதுவரை ஏழு இந்திய ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறினார்.

லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது அவர் கூறியதாவது:

இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளில், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் உளவு பார்த்ததாக எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, ஏழு ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.


கடந்த 2006-09ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒன்பது பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இருந்துள்ளது என்றார்.

தேசத்திற்கு எதிராக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள தேச துரோகிகளின் விபரங்களை மக்கள் முன் வெளியிடுமா அரசு?

சனி, 18 ஜூலை, 2009

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் குண்டு வெடிப்பு:9 பேர் மரணம்

இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவிலுள்ள இரண்டு ஆடம்பர ஹோட்டல்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் 50 பேர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.பிரபல ரிட்ஸ் கார்ட்டன்,மாரியட் ஆகிய ஆடம்பர ஹோட்டல்களில்தான் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.குண்டுவெடிப்பில் இறந்தவர்களில் நான்கு பேர் வெளிநாட்டினர் என்று கூறப்படுகிறது. இந்தோனேஷியாவின் மெட்ரோ தொலைக்காட்சி வெளியிட்டுள்ள குண்டுவெடிப்பு வீடியோக்காட்சிகளில் மரண என்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை?! சீக்கியர்கள் டர்பன் அணிய தடை இல்லை! - பிரான்ஸ் அரசின் பாரபட்சம்




பிரான்சில் பள்ளிகளில் மத அடையாளங்களைத் தடை செய்யும் சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக பிரெஞ்சு அரசு இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபிற்கு தடை விதித்தநிலையில் பிரான்சில் வாழும் சீக்கிய மக்கள் தலைப்பாகை (டர்பன்) அணிய தடைவிதிக்கப்படாது என அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ்சர்கோஸி தெரிவித்துள்ளார்.
எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேய்க் நகரில் நடந்த அணி சேரா நாடுகளின் 15வது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசிய போது, சீக்கிய மாணவர்கள் டர்பன் அணிய தடைவிதிக்க பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருவது குறித்து அதிபர் சர்கோஸியிடம் விவாதித்தாகவும், இப்பிரச்சனைக்கான தீர்வு அடங்கிய கடிதத்தை தாம் அவரிடம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
எனினும்
, பிரான்ஸில்
டர்பன் அணிவதற்கு தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் தமது அரசுக்கு இல்லை என அதிபர் சர்கோஸி தன்னிடம் தெரிவித்ததாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
பிரான்சில் உள்ள 6000க்கும் அதிகமான சீக்கியர்கள், பிரெஞ்சு அரசின் இந்தச் சட்டத்தை தீவிரமாக எதிர்க்கின்றனர். தங்களின் தலைப்பாகை மத அடையாளம் அல்ல; மாறாக தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்று அவர்கள் கூறுகின்றனர்.

வியாழன், 16 ஜூலை, 2009

வருண் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

டெல்லி: உ.பி. மாநிலம் பிலிபித் தொகுதியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியது தொடர்பான வழக்கில் பாஜக எம்.பி. வருண் காந்தி மீது உ.பி. போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

177 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கை, பிலிபித் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் 38 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. உ.பி. அரசின் உத்தரவைத் தொடர்ந்து இன்று போலீஸார் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து விரைவில் கோர்ட் குற்றப்பத்திரிக்கையை பரிசீலித்து அதன் நகலை வருண் காந்திக்கு வழங்கும்.

இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்!

ஹாஜாகனி

இஸ்ரேல் இந்த பூமிப் பந்தின் மீது அராஜகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. மண்ணின் மைந்தர்களான அரபுகளை அழித்தொழிக்கும் யூத வந்தேறிகளின் வன்முறைக்கு அமெரிக்கா காவலுக்கு நிற்கிறது. ஐ.நா.வோ அநீதிகளை அமைதியாய் ஆதரிக்கிறது.

இஸ்ரேல் என்ற தேசத்தை ஏற்கவே கூடாது என்றார் தேசத்தந்தை காந்தி. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுக் கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவே இல்லாமல் இருந்தது. நரசிம்மராவ் ஆட்சியில்தான் இஸ்ரேலுடன் உறவு என்ற கேவலம் தொடங்கியது. பின்னர் பாஜக தலைமையிலான அரசு அதை நன்றாக வளர்த்தது.

அதன் உச்சகட்டமாக உலகிலேயே இஸ்ரேலிடம் அதிகமாக ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்த நாடு என்ற அவமானத்தை கடந்த ஆட்சியாளர்கள் பெற்றுத் தந்தனர். அரபு நாடுகளை வேவு பார்க்கும் இஸ்ரேலின் உளவு செயற்கைக்கோள், இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ரகசியங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ரகசியங்களையும் இஸ்ரேல் அறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய சதித் திட்டத்தோடு களமிறங்கியுள்ளது.

இந்தியக் குடிமக்கள் அனை வருக்கும் அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக இஸ்ரேலிய அரசு நிறுவனம் மும்முரமாக முயற்சி செய்கிறது. மத்திய அரசின் உயர் அதிகாரி களையும் இந்நிறுவனம் உரிய(?) விதத்தில் அணுகி வருகிறது.

Israel International Co-operation Institute (IICI)
என்ற இஸ்ரேல் அரசின் பங்கேற்புடைய தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதந்து ஒப்பந்தம் பெறுவதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

100 கோடி இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக மொத்த திட்டச் செலவான ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில், 90 சதவீதம் செலவிடப்பட உள்ளது. இதற்காக சர்வதேச டெண்டரும் விடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை எப்படியும் பெற்றுவிடுவது என்ற முடிவில் இஸ்ரேல் மென்பொருள் மேம்பாட்டுத்துறை நிர்வாகி க்ரின்மெலாமெடின் தலைமையில் இஸ்ரேல் குழுவினர் ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வந்தனர். 14 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் குழுவினர் இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அவற்றுள் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து, அடையாள அட்டை ஒப்பந்தத்தைப் பெறும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.

சொத்து விவரம், கல்வித் தகுதி, நோய் சிகிச்சை, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 40 முக்கியமான விவரங்கள் இந்த அட்டைக்காக ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்பட்டு, மத்திய சேவை மென்பொருளில் (ஈங்ற்ழ்ஹப் நங்ழ்ஸ்ங்ழ்) பதிவு செய்யப்படும்.

இதன்மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட தகவல்களையும் (டங்ழ்ள்ர்ய்ஹப்) இஸ்ரேல் பார்வையிட முடியும்.
பயங்கரமான சதிகளைச் செய்வதில் கைதேர்ந்த இஸ்ரேலிடம் இந்தியர்களின் அந்தரங்கத் தகவல்கள் சிக்குவது மிக ஆபத்தானது.

இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை எக்காரணத்தை முன்னிட்டும் இஸ்ரேல் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத் தரக்கூடாது. மேலும், இதில் அந்நிய நிறுவனங்களையும் நுழையவிடக் கூடாது.

மத்திய அரசு இதில் அலட்சியம் காட்டினால் விளைவுகள் வருத்தத்திற்குரியதாகிவிடும் என்பது திண்ணம்.

சிமிக்கு தடை! மாவோயிஸ்டுகளுக்கு வரவேற்பு!!கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடம்!!!

ஆயுத பயிற்சியில் மாவோயிஸ்டுகள்

அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தில் சிமி உறுப்பினர்கள் (பழைய படம்)

-இனியவன்

மேற்குவங்க மாநிலம் லால்கரில் பழங்குடி மக்கள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடி மக்கள் நிறைந்த லால்கர் பகுதி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களுடன் இராணுவம் மற்றும் அரசு இயந்திரங்களை தாக்கி வருகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு இம் மக்களை புறக்கணித்தது அதன் விளைவு இம்மக்கள் அரசை எதிர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. அதுமட்டு மின்றி சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இம்மக்களின் நிலங்களைப் பறித்து முதலாளித்துவ சேவை செய்ய நினைத் ததுதான் ஏழைப் பங்காளர்களான தோழர்கள் பழங்குடி மக்களிடம் அடிவாங்க முதல் காரணமாய் அமைந்து விட்டது.

போலீசையும்,இராணுவத்தையும் ஆயுதம் கொண்டு பல ஆண்டுகளாக எதிர்த்து தனி அரசை நடத்தி வரும் மாவோயிஸ்டுகள் மீது இப்போதுதான் தடைவிதிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி தடையும் விதித்தது. இதுவரை மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டு அமைப்பு தடை செய்யப்படவில்லை என்பதுதான் காமெடி. மத்திய அரசு தடை செய்தவுடன் மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசு தடையை ஏற்பதா வேண்டாமா? என தவித்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் 'மாவோயிஸ்டுகள் மீதான தடையை ஏற்றுக் கொள்ள முடியாது. தடை போடுவதால் மட்டுமே அவர் களை அடக்க முடியாது.அரசியல் ரீதியாக மட்டுமே மாவோயிஸ்டு பிரச்சினை யில் தீர்வு காண வேண் டும்' என கரிசனம் காட்டியுள்ளார்.

ஆனால், இதுவரை அமைதி காத்த மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தடையை தனது அரசு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். (அவர் வலி அவருக்குத்தானே தெரியும்). ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளுக்கு தடை விதிக்கத் தயங்கும் இந்தக் கம்யூனிஸ்டுகள்தான் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (சிமி) சட்டவிரோதமாக மத்திய அரசால் தடை செய்யப்பட்ட போது, எந்தக் கேள்வியையும் கேட்காமல் தனது மாநிலத்தில் சிமி அமைப்புக்குத் தடை விதித்தனர். அதன் தலைவர்களையும், உறுப்பினர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிமியைத் தடை செய்த 8 மாநிலங்களில் சிமிஆளும் கேரளா மற்றும் மேற்கு வங்கமும் அடங்கும்.

சிமி தலைவர்களோ உறுப்பினர்களோ அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்யவில்லை. நாட்டின் எந்தப் பகுதி யையும் பிடித்துக் கொண்டு விடுதலைப் பிரதேசமாக அறிவிக்கவில்லை. நாட்டில் நடந்த எந்த குண்டு வெடிப்பிலாவது சிமி அமைப்பு ஈடுபட்டது என்பதற்கான நேரிடையான எந்தவொரு ஆதாரத்தையும் மத்திய அரசு இதுவரை காட்டவில்லை. கம்யூனிஸ்டுகளும் காட்டவில்லை. மாவோயிஸ்டு பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் கம்யூனிஸ தோழர்கள் சிமி அமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜெயில் களி மூலமாக மட்டும்தான் தீர்வு காணுவார்களாம்.

முஸ்லிம் அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக காட்டுவது காங்கிரஸ், பிஜேபி மட்டுமல்ல முற்போக்கு வேடம் போடும் கம்யூனிஸ்டு கட்சியினரின் நிலைப்பாடும் அதுதான். முஸ்லிம்கள் முட்டாள்கள் என்றே இன்றும் மற்ற கட்சிகளோடு கம்யூனிஸ்டுகளும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சரியான பாடத்தை சிறுபான்மை மக்கள் கடந்த தேர்தலில் புகட்டியது போல வரும் தேர்தல்களிலும் புகட்டுவார்கள்.ஏன் இந்த இரட்டை வேடம் தோழ்ர்களே ?.


சிமியை பற்றிய தெஹல்காவின் கட்டுரை

புதன், 15 ஜூலை, 2009

மைசூர் கலவரத்திற்கு பின்னால் ஸ்ரீராம‌ சேனா

மைசூரிலிலுள்ள கைதாம‌ர‌ந‌ஹ‌ள்ளியில் இந்த‌ மாத‌ம் 2ஆம் தேதி ந‌டைபெற்ற‌ க‌ல‌வ‌ர‌த்தில் 3 பேர் ம‌ர‌ணிப்ப‌த‌ற்கு கார‌ண‌மான‌ ப‌ள்ளிவாச‌லில் ப‌ன்றியின் மாமிச‌த்தை எறிந்த‌ ச‌ம்ப‌வ‌த்திற்கு பின்னால் ஸ்ரீராம‌ சேனா தான் கார‌ண‌ம் என‌ கைதுச்செய்ய‌ப்ப‌ட்ட‌ அத‌ன் உறுப்பின‌ர்க‌ள் ச‌ம்ம‌தித்துள்ள‌ன‌ர்.
ஹிந்துத்தீவிர‌வாத‌ இய‌க்க‌மான‌ ஸ்ரீராம‌சேனாவின் தீவிர‌த்தொண்ட‌ர்க‌ளாகிய‌ கிருஷ்ணா, ராஜு ஆகியோர்தான் ப‌ன்றியின் மாமிச‌த்தை ப‌ள்ளிவாச‌லில் போட்ட‌து. இதைத்தொட‌ர்ந்து ஏற்ப‌ட்ட‌ க‌ல‌வ‌ர‌த்தில்தான் 3 பேர் ம‌ர‌ண‌ம‌டைய‌வும் ஏராள‌மானோர் காய‌ம‌டைய‌வும் கார‌ண‌மான‌ க‌ல‌வ‌ர‌ம் ஏற்ப‌ட்ட‌து. ச‌ம்ப‌வ‌த்தைத்தொட‌ர்ந்து கைதுச்செய்ய‌ப்ப‌ட்ட‌ கிருஷ்ணா(வ‌ய‌து30)குற்ற‌த்தை ஒப்புக்கொண்ட‌தை உய‌ர் போலீஸ் அதிகாரிக‌ள் தெரிவித்த‌ன‌ர். இவ‌னுடைய‌ கூட்டாளியான‌ த‌லைம‌றைவாக‌ இருக்கும் ராஜுவை கைதுச்செய்வ‌த‌ற்கு காவ‌ல்துறை முடுக்கிவிட‌ப்ப‌ட்டுள்ள‌து. இர‌ண்டுமுறை கைதாம‌ர‌ந‌ஹ‌ள்ளியில் ஸ்ரீராம‌சேனா த‌லைவ‌ன் பிர‌மோத் முத்த‌லிக் ந‌ட‌த்திய‌ ஆவேச‌க‌ர‌மான‌ உண‌ர்ச்சியைத்தூண்டும் உரைதான் ப‌ன்றியின் மாமிச‌த்தை ஹ‌லீமா ப‌ள்ளிவாச‌லில் எறிய‌ கார‌ண‌மான‌து என‌ கைதுச்செய்ய‌ப்ப‌ட்ட‌ கிருஷ்ணா போலீஸ் விசார‌ணையில் கூறியுள்ளான்.
முன்பே ஸ்ரீராம‌சேனாதான் ப‌ள்ளிவாச‌லில் ப‌ன்றியின் மாமிச‌த்தை போட்ட‌து என‌ ப‌த்திரிகையாள‌ர் ச‌ந்திப்பில் வெளிப்ப‌டுத்திய‌ பாப்புல‌ர் ஃப்ர‌ண்டின் மாவ‌ட்ட‌த்த‌லைவ‌ர் செய்ய‌த் க‌லீம் உட்ப‌ட‌ 14 மாவ‌ட்ட‌ பாப்புல‌ர்ஃப்ர‌ண்ட் பொறுப்பாள‌ர்க‌ளை கைதுச்செய்து ஜாமீன் வ‌ழ‌ங்க‌முடியாத‌ வ‌ழ‌க்குக‌ளை ப‌திவுச்செய்து சிறையில் அடைத்த‌து க‌ர்நாட‌கா காவ‌ல்துறை. ஸ்ரீர‌ங்க‌ப்ப‌ட்டின‌த்திலிலுள்ள‌ ஒரு இறைச்சி வியாபாரியிட‌மிருந்து 1500 ரூபாய்க்கொடுத்து பூஜைக்காக‌ என்றுச்சொல்லி பன்றி இறைச்சியை வாங்கி ப‌ள்ளிவாச‌லில் கொண்டு போட்ட‌தாக‌ கிருஷ்ணா கூறியுள்ளான். மேலும் இவ‌னுக்கு கைதாம‌ர‌ந‌ஹ‌ள்ளியிலிலுள்ள ஒரு ந‌பருடைய‌ உத‌வியும் கிடைத்துள்ள‌து.
மைசூர் க‌ல‌வ‌ர‌த்தில் கைதுச்செய்ய‌ப்பட்டு பல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ அப்பாவி முஸ்லிம்க‌ள் ம‌ற்றும் ஹிந்துக்க‌ள் 300க்கு மேற்ப்ப‌ட்டோர்க‌ளை விடுத‌லைச்செய்ய‌ கோரி மைசூரில் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாத்தலைமையில் முஸ்லிம்க‌ள் ந‌ட‌த்திய‌ அமைதியான‌ ஆர்ப்பாட்ட‌த்தில்தான் காவ‌ல்துறை அராஜ‌கமாக‌ அடித‌டி ந‌ட‌த்தி க‌ண்ணீர் புகை உப‌யோகித்த‌து. முஸ்லிம்க‌ளை ஆவேச‌ம் அடைய‌ச்செய்து க‌ல‌வ‌ர‌த்தை ஏற்ப‌டுத்த‌ ஸ்ரீராம‌சேனாவும் அத‌னுடைய‌ த‌லைவ‌ன் பிர‌மோத் முத்த‌லிக்கும் ந‌ட‌த்திய‌ ச‌தித்திட்ட‌ம் வெளிப்ப‌டுத்த‌ப்ப‌டுள்ள‌தைத்தொட‌ர்ந்து க‌ர்நாட‌கா அர‌சும், காவ‌ல்துறையும் சிக்க‌லில் மாட்டியுள்ள‌ன‌.
ப‌ஜ்ர‌ங்த‌ள் ம‌ற்றும் ஸ்ரீராம‌சேனா ஆகிய‌வ‌ற்றை த‌டைச்செய்து பிர‌மோத் முத்த‌லிக்கை கைதுச்செய்ய‌வேண்டும் என‌ க‌ர்நாட‌கா ச‌ட்ட‌ச‌பை காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ள் கூட்ட‌த்தில் வ‌லியுறுத்த‌ப்ப‌ட்ட‌து.

மைசூர்:நீதி விசாரணை கோரிக்கையை நிராகரித்தது கர்நாடகா அரசு

மைசூர் பள்ளிவாசலில் பன்றியின் மாமிசங்களை எறிந்ததினால் ஏற்ப்பட்ட கலவரத்தைத்தொடர்ந்து 3 நபர்கள் பலியான நிகழ்வைக்குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று எதிர்கட்சிகளின் கோரிக்கையை மாநில பா.ஜ.க அரசு நிராகரித்தது. இதனால் எதிர்கட்சிகள் சட்டசபையிலிருந்து வெளிநடப்புச்செய்தன.
போலீஸ் விசாரணை தற்பொழுது நடைப்பெற்றுக்கொண்டிருப்பதால் நீதி விசாரணைக்கு தேவையில்லை என்று கூறிய முதல் அமைச்சர் எடியூரப்பா சம்பவத்திற்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவும், கர்நாடகா ஃபாரம் ஃபார் டிக்னிடியும் தான் காரணம் எனக்குற்றம் சாட்டினார்.
ஆனால் பள்ளிவாசலை அசுத்தப்படுத்தி மக்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சிச்செய்த சங்க்பரிவார்களின் சதித்திட்டத்தை முறியடிக்க காவல்துறையோடு ஒத்துழைத்து அமைதியை ஏற்படுத்திய பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களை அநியாயமாக கைதுச்செய்ததுதான் புதிய பிரச்சனைகளுக்கு காரணம் என பாப்புலர் ஃப்ரண்ட் தலைமை ஏற்கனவே தெளிவுப்படுத்தியிருந்தது. கலவரத்தின் பெயரால் கைதுச்செய்யப்பட்ட அப்பாவிகளான முஸ்லிம்களையும் ஹிந்துக்களையும் விடுதலைச்செய்ய கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்களின் மீது அராஜகத்தாக்குதல் நடத்தியதாக பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதற்கிடையே கலவரத்தைத்தொடர்ந்த்து மைசூரில் ஏற்படுத்தியிருந்த ஊரடங்கு உத்தரவை நீட்டியுள்ளது அரசு. இதற்கு காரணம் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுதலைச்செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி நடத்த இருப்பதை முன்னிட்டுதான் என்று கூறப்படுகிறது.

செவ்வாய், 14 ஜூலை, 2009

காந்திமாநிலத்தை கள்ளச்சாராய மாநிலமாக்கிய மோடி!


குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை, குஜராத்தை தொழில் துறையில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழும் அளவுக்கு முன்னேற்றியவர். இவர் பிரதமராவதற்கு மிக தகுதி படைத்தவர் என சோ போன்ற 'அவாள்கள்' மோடிக்கு ஒரு புறம் புகழ்மாலை சூட்டிக்கொண்டிருக்க, குஜராத்தை மோடி எந்த துறையில் முன்னேற்றி இருக்கிறார் என்று அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்துகொண்டுதான் இருக்கிறது. 'லேட்டெஸ்ட்' ஆக குஜராத்தை கள்ளசாராய சந்தையாக மாற்றியுள்ள சாதனை வெளியாகியுள்ளது.

பூரண மது விலக்கு அமலில் உள்ள மாநிலமான குஜராத்தில், கள்ளசாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறதோ என்று என்னும் அளவுக்கு கள்ளச்சாராயம் குடித்து மரணித்தவர்களின் எண்ணிக்கை இரு நூறை நெருங்குவதாகவும், சுமார் 227 பேர் மருத்துவ-மனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. சாவு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அகிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணில் அப்பாவிகள் ஆயிரக்கணக்கானோர் ரத்தம் குடித்து தங்களை கோட்சேவின் வாரிசுதான் என்று நிரூபித்தவர்கள், 'மதுவெனும் அரக்கனை ஒழிக்கணும்' என்ற காந்தியின் கொள்கைக்கு மாற்றமாக,
ஒருபுறம் நாங்கள் எங்கள் மாநிலத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தியிருக்கிறோம் என்று மார்தட்டிக்கொண்டு மறுபுறம் சாராய முதலைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இன்று குஜராத்தில் ஒரு புறம் பிணம் எரிய மறுபுறம் குடும்பத்தலைவனை- மகனை- சகோதரனை இழந்தவர்களின் வயிறு எரிகிறது.

இந்த கள்ளசாராய சாவை அடுத்து குஜராத்தில் சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் மோடிக்கு எதிரான குரல் பலமாக ஒழிக்க ஆரம்பித்துள்ளது. தார்மீக பொறுப்பேற்று மோடி பதவி விலகவேண்டும் என பிரதான கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. குஜராத்தில் மக்கள் மத்தியிலும் மோடிக்கு எதிரான சிந்தனை துளிர் விட ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் கோபுரத்தில் ஒட்டியுள்ள குப்பை வெகு விரைவில் வீழும். அங்கே ஆட்சி மாற்றம் நிகழும் என்பதே அரசியல் கணிப்பாக நமக்கு புலப்படுகிறது. [இன்ஷா அல்லாஹ்]

பெண் சாமியார் பிரஞ்யா தற்கொலை மிரட்டல்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTw24Gq87h0nwuu0je9sdpLS_H1IdpGVA0MoPArnus55nyq_e7KmpEkwADr3ZqwPljEQoFzDek-TUuivjhnA6hvHzzHsc5qLP2Mx5a6i2SF2BVuLLUdsr9OGlJA4C8RA6mCsjkJLCPEipz/s320/sadvi-pragya250_04112008.jpgமும்பை: மலேகாவ்ன் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண் சாமியார் பிரஞ்யா சிங் தாகூர் சிறையிலேயே தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மலேகாவ்ன் நகரில் குண்டுவெடிப்புகள் நடத்தி பலர் பலியாகக் காரணமாக இருந்த சாத்வி பிரஞ்யா கைது செய்யப்பட்டு பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையிலும், மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் தான் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாக பத்திரிக்கைகளுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், என் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் என்னை ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் போலீஸ் ஜீப்பில் கொண்டு சென்றனர். ஆனால், மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடத்திய அஜமல் கஸாபுக்கு விஐபி ட்ரீட்மெண்ட் தரப்படுகிறது.

நான் இந்துத்துவா போராளி என்பதால் என்னை அவமதிக்கிறார்கள். என்னை இந்த வழக்கில் பொய்யாக சேர்த்துள்ளனர். இதை கண்டித்து நான் சிறையிலேயே தற்கொலை செய்வேன். என்று கூறியுள்ளார்.

மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு வழக்கில் பிரஞ்யா சிங் தாகூர் மற்றும் ராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.

ஞாயிறு, 12 ஜூலை, 2009

மேற்குவங்காளம்:முர்ஷிதாபாத்தில் கலவரம், 6 பேர் மரணம்

மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்ப்பட்ட கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். நவோதயா மேல்நிலைப்பள்ளியில் இரு மாணவர் பிரிவினரிடையே தொடங்கிய இக்கலவரம் கிராமங்களுக்கும் பரவியது.
வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகைக்குச்செல்லவிருந்த முஸ்லிம் மாணவர்களை இன்னொரு பிரிவு மாணவர்கள் தடுத்ததுதான் கலவரத்திற்கு காரணம். வெள்ளிக்கிழமைகளில் உணவு இடைவேளையை ஒரு மணி நேரத்திலிருந்து அரை மணி நேரமாக மாற்றவேண்டும் என்று சங்க்பரிவார்களோடு தொடர்புடைய மாணவர் அமைப்பு ஒன்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது.
இந்த பிரச்சனை இருக்கும்பொழுதுதான் ஜும்ஆத் தொழுகைக்குச் சென்ற மாணவர்களை சிலர் பள்ளிக்கூடத்தின் கேட்டை பூட்டி தடைச்செய்தனர். மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் வெளியில் உள்ளவர்களும் தலையிட்டதால் கலவரமாக மாறியது. கலவரத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் போலீஸ் வேடத்தில் வந்த சில விஷமிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல் உண்டு.தொடர்ந்து கார்த்திக் மஹராஜ் என்பவரின் தலைமையிலான பாரத் சேவா சங்கம் என்ற ஆசிரமத்தின் தொண்டர்கள் திரிமோஹினி கிராமத்தில் கலவரத்தை ஏற்படுத்தியதாக கண்ணால் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.
கலவரத்தில் 40 மேற்பட்ட நபர்களுக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் ஏராளமான கடைகளை கொள்ளையடிக்கவும் அவற்றை தீக்கிரையாக்கவும் செய்துள்ளனர். கலவரம் கட்டுப்படுத்தப்பட்டதாக உள்துறைச்செயலாளர் அர்சேது சென் கூறுகிறார். கலவரப்பகுதிகளில் தடை உத்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள‌ நாளிதழ்

மைசூர்:பாப்புலர் ஃபிரண்ட் தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் அராஜகம்,ஏராளமானோர் காயம்,நூற்றுக்கணக்கானோர் கைது


கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று மைசூரில் பள்ளிவாசல் காம்பவுண்டில் பன்றியின் மாமிசத்தை எறிந்ததால் ஏற்பட்ட கலவரத்தில் அபாண்டமாக குற்றம் சுமத்தி 200 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததைக்கண்டித்தும் அவர்களை உடனே விடுதலைச்செய்யக்கோரியும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் உள்ளிட்ட முஸ்லிம்கள் மீது கர்நாடகா காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் கைதுச்செய்யப்பட்டுள்ளனர்.இதில் பாப்புலர் ஃபிரண்ட் மாநிலத்தலைவர் கே.அப்துல்லத்தீப் மற்றும் பொதுச்செயலாளர் அஃப்ஸர் பாஷா ஆகியோரும் அடங்கும். கைதுச்செய்யப்பட்டவர்கள் இதுவரை விடுதலைச்செய்யப்படவில்லை. இச்சம்பவத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயலகம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
செய்தி ஆதாரம் :Twocircles

அதே இடத்தில் பாபர் மசூதியைக் கட்டி கொடுங்கள்-திருமா

சென்னை: லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வர வேண்டும். பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்னதாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னதாக மதவெறி கும்பல் ஒன்று பாபர் மசூதியை இடித்தது. அது குறித்து விசாரணை நடந்த லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது.

பொதுவாக எந்தவொரு விசாரணை அறிக்கையும் 6 மாதங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், லிபரான் தனது அறிக்கையை அரசு அளிக்க சுமார் 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிலரின் உள்நோக்கம் காரணமாக இந்த கமிஷன் சுமார் 48 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து மக்களு முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக அந்த விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன்.

இந்த பிரச்சனையின் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும் என்றார் திருமாவளவன்.

பாபர் மசூதி வழக்கு பைல்கள் மாயம்


1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இது தொடர்பான லிபரான் விசாரணை குழு மத்திய அரசிடம் சமீபத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.


இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான 23 பைல்கள் மாயமாகி உள்ளன. கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இந்த பைல்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதி கூறியுள்ளார்.

கம்ப்யூட்டருடன் பிஎட் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கல்வி அமைச்சர் தகவல்

சென்னை, ஜூலை 11- கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்கள் பொன்னுசாமி, ராஜ்குமார், ஜி.கே.மணி (பாமக), எச். வசந்தகுமார் (காங்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
தமிழ்நாட்டில் 200 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முழுவதும் அரசின் நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளது. மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும்போது அந்த தீர்ப்புக்கு கண்டுப்பட வேண்டும்.

கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகமா னோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு துறை தரும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் பணி உத்தரவு பிறப்பிக்க முடியும்.

தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் நியமனத்தில் கம்ப் யூட்டர் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டனர்.

வருங்காலங்களில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை

சனி, 11 ஜூலை, 2009

ஜியாலஜி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: விண்ணப்பிக்க 20ந் தேதி கடைசி நாள்

மத்திய நிலத்தடி நீர் வாரியம், ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா ஆகியவற்றில் காலியாக உள்ள ஜியாலஜிஸ்ட் (மண்ணியல் நிபுணர்) பணி இடங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. எம்.எஸ்சி. ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, மெரைன் ஜியாலஜி படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது 21 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி. வகுப்பினருக்கு
3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. இதற்கான விண்ணப்ப படிவங்கள் தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ.20 ஆகும்.

மேலும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
இணையதளத்திலும் தேர்வு பற்றிய தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை இந்த மாதம் 20 ந் தேதிக்குள் டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா:உரும்கியில் அரசு ஏற்படுத்திய தடையை மீறி தொழுகை

சீனாவின் கட்டுப்பட்டில் உள்ள உரும்கி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் ஹான் இனத்தவர்களும் காவல்துறையும் நடத்திய நரவேட்டையில் 156 பேர் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரசூழலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்ஜிதுகளில் அரசு வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த தடை விதித்திருந்தது.
ஆனால் அதையும் மீறி சில பள்ளிகளில் தொழுகை நடைப்பெற்றது. ஏராளமான முஸ்லிம்கள் கூட்டமாக இத்தொழுகையில் கலந்துக்கொண்டனர்.

இஸ்ரேல் எழுப்பிய மதில் சுவரை இடிக்க ஐ.நா வலியுறுத்தல்


ஜெருசலம்: சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பிரிவினை மதிலை தகர்க்கவேண்டுமென்ற சர்வதேச நீதி நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச சட்டங்களை பேணாமல் இஸ்ரேல் கட்டிய மதில் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன மக்களின் சுதந்திரத்தை பறிப்பதாக ஜெருசலத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலர் தெரிவித்தார்.
ஃபலஸ்தீன் போராளிகளின் தாக்குதலை தடுப்பதற்கு என்ற பெயரில் 2002 ஆம் ஆண்டு மேற்குக்கரையை ஃபலஸ்தீன் பூமியிலிருந்து தனிமைப்படுத்த இஸ்ரேல் இந்த மதிலை கட்ட ஆரம்பித்தது. மதிலை சுற்றிலும் கிடங்குகளும் மின்சார கம்பிகளும் இருப்பதால் அங்குள்ள மக்களுக்கு வெளி உலகத்தோடு தொடர்புக்கொள்ள முடியாத சூழல் இருந்தது. 2004இல் சர்வதேச நீதிக்கான நீதி மன்றம் மதில் சுவரை எழுப்புவதற்கெதிராக எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை அலட்சியப்படுத்திவிட்டு இஸ்ரேல் மதில் சுவர் கட்டும் பணியைத்தொடர்ந்தது. இதுவரை மதிலின் 3‍இல் 2 பாகம் பூர்த்தியாகிவிட்டது. மதில் சுவர் கட்டும் பணி பூர்த்தியாகும்பொழுது 35 ஆயிரம் ஃபலஸ்தீனர்கள் தனிமைப்படுத்தப்படவும், ஒன்றேகால் லட்சம் ஃபலஸ்தீனர்கள் 3 பிரதேசங்களில் பிரிக்கப்படவும்செய்வார்கள். ஃபலஸ்தீனர்களின் சுதந்திரத்தின் மீது இஸ்ரேல் அரசு நடத்தும் கடுமையான கட்டுப்பாடுகள்தான் அடிப்படையான பிரச்சனை. ஆதலால் மதில் சுவரை உடனே தகர்க்கவேண்டும் என்றும் மதில் சுவரை கட்டியதால் பாதிப்படைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டுமென்றும் வலியுறுத்திய ஐ.நா ஹைக்கமிஷனர் நவநீதம் பிள்ளை நீதி மன்ற உத்தரவை செயல்படுத்த உலகநாடுகள் இஸ்ரேலை நிர்பந்திக்கவேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

அத்வானி முக்கியக் குற்றவாளி! லிபரான் ஆணைய வழக்குரைஞர் 'அனுபம் குப்தா' பேட்டி!

பாபரி மஸ்ஜித் இடிக்கப்படு வதற்கான சூழ்நிலை குறித்து, ஆய்வு செய்த நீதிபதி லிபரான் ஆணையத்தின் வழக்குரைஞர் அனுபவம் குப்தா. பாபரி மஸ்ஜித் இடிப்பின் முக்கி யக் குற்றவாளி அத்வானி தான் என அழுத்தம் திருத் தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

'அவுட் லுக்' செய்தி ஏட்டிற்கு அனுபம் குப்தா அளித்த நேர்காணலில், பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு அத்வானியும், அவரது இயக்கமும் தான் முழு முதற் காரணம். அவரது தூண்டுதல் இல்லாமல் பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டது என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று அனுபம் குப்தா கூறியுள்ளார்.

அத்வானியின் ராமஜென்ம பூமி இயக்கத்தையும், அதன் ஓர் அங்கமான குஜராத் மாநிலம் சோம்நாத் ஆலயத்திலிருந்து அவர் தொடங்கிய ரதயாத்திரை யையும், இந்தியாவின் மதச்சார்பின்மை வரலாற்றுக்கு எதிரான இயக்கம் என அனுபம் குப்தா வர்ணித்துள்ளார். 2001ம் ஆண்டு லிபரான் ஆணையம் முன்பு உள்துறை அமைச்சராக அத்வானி சாட்சியமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1992 டிசலி6ல் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் இடிப்புச் சம்பவம் தேசந் தழுவிய, முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத் தின் விளைவாகும். இந்த மதவெறிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தியவர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.
லிபரான் ஆணைய அறிக்கையின் விளைவாக பாஜக பழைய நிலையிலிருந்து பல்டி யடித்து உண்மை நிலையை மறைத்து தனது மென்மை (?) நிலையைப் பேசியாக வேண்டும். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள்தான் என் வாழ்வின் சோகமான நாள் என்கிற ரீதியில் அத்வானி கதை விட்டது போல மேலும் பல கரடி களை அவிழ்த்து விட வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக் குப் பிறகு 1998 முதல் 2004 வரை 6 ஆண்டுகள் பதவி ருசிகண்ட பாஜக, இந்து, இந்தி, இந்தியா கொள்கை யைக் கைவிட்டு, பன்முகப் பண்பாட்டை நாட்டின் பன் முகத் தன்மையை ஆதரிக்கத் தொடங் கியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யில், மதச்சார்பற்ற கட்சி கள் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என பா.ஜ.க ஆசைப் படுகிறது. லிபரான்ஆணைய அறிக்கை பாஜகவின் மதவெறி சதிகளை அம்ப லப் படுத்துவதால், பெயர ளவு மதச் சார்பற்றக் கட்சி களும் தே.ஜ.கூட்டணில் தொடர் வது கேள்விக் குறியாகிறது.

1999ம் ஆண்டு லிபரான் ஆணையத்தின் வழக்குரைஞராக 2007ம் ஆண்டு வரை எந்த விசாரணை குறித்தும் கலந்தாலோசனை செய்யப்பட வில்லை என்று அவரே தெரிவித்துள்ளார்.

நத்தை முதுகில் சவாரி செய்த லிபரான் ஆணையம் விசாரணை அறிக் கையை தாக்கல் செய்துள்ளது. முக்கியக் குற்றவாளியும், உடன் சிக்கிய பிற குற்றவாளிகளும் தண்டிக்கப் படுவார்களா?

போராட்டமே வாழ்க்கையாகிப்போன காஷ்மீர் முஸ்லிம்களின் பரிதாபநிலை!



இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீரமாக இருந்த காலம் மீண்டும் வராதா என ஏங்கும் வண்ணம் அழகான காஷ்மீரத்தை குரங்கு கையில் கிடைத்த பூமாலை போன்று ஆளுக்கொரு பங்காக இந்தியாவும்- பாகிஸ்தானும் பிய்த்துக்கொள்ள, இந்தியாவிற்குட்பட்ட காஷ்மீரத்து மக்களின் சுதந்திர தாகத்தை தீவிரவாதமாக கருதிய இந்திய அரசு, தனது இராணுவம் மூலமும்- உள்ளூர் காவல்துறை மூலமும் தீவிரவாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் மானத்திற்கும் இழப்புகளை ஏற்படுத்துவதை அவர்களின் நடவடிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. காஷ்மீர சுதந்திரத்திற்கு போராடும் குழுக்கள் ஏதேனும் ஒரு அசம்பாவிதத்தை செய்துவிட்டால் அலறும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் காஷ்மீரத்து முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை.

சில மாதங்களாக முஸ்லிம்களை கோபத்திற்கு உள்ளாக்கும் செயல்களை ராணுவமும்- உள்ளூர் காவல்துறையும் செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு பதிலாக அவர்களில் சிலரின் உயிர்கள்தான் பறிபோகிறது. கடந்த மாதம் சி.ஆர்.பி.எஃப் படையினரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலோபர்-ஆசியா ஆகியோருக்காக நீதி கேட்டு மக்கள் போராட்டம் நடத்தினர் . இதற்கு அடுத்த சில நாட்களில் காவல்நிலையத்திற்கு சென்ற முஸ்லிம் பெண் ஒருவர் காவலர்கள் சிலரால் மானபங்கப்படுத்தப்பட்டதையடுத்து நடந்த போராட்டத்தில் ராணுவத்திற்கும்- மக்களுக்கும் நடந்த மோதலில் அப்பாவிகள் நால்வர் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞன் கழுத்து அறுபட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மீண்டும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.இதையடுத்து ராணுவத்திற்கும் -மக்களுக்கும் மீண்டும் முறுகல் நிலை நீடிக்கிறது.

காஷ்மீரத்து பிரச்சினையை இந்த அரசியல்வாதிகள் ஏன் தீர்ப்பதில் இழுத்துகடத்துகிறார்கள்? ஏற்கனவே உள்ள ஒப்பந்த அடிப்படையில் அந்த மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை வழங்கிவிட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். அதை விடுத்து இந்தியாவும்-பாகிஸ்தானும் ஆட்சி மாற்றம் நிகழும்போதெல்லாம், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்போம் என்பதும் இரு நாடுகளும் பெயருக்கு சந்திப்பதும் பின்பு பழைய நிலையே தொடர்வதும், அப்பாவிகள் பலியாவதும் தொடர்கதையாக உள்ளது.
என்றுதான் அந்த காஷ்மீரில் தென்றல் வீசுமோ..?