திங்கள், 6 ஜூலை, 2009

கோவையில் த மு மு க ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவை ரத்து செய்ய முயலும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் கோவையில் 3-7-2009 அன்று மாலை 4-00 மணிக்கு காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு நடந்தது.

இதில் மாவட்ட தலைவர் அப்துல் பசிர் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட நிர்வாகிகள் சாகுல்ஹமிது, அகமதுகபிர், சேட், ரபிக் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அப்பாஸ், ஷாஜகான், பர்கத்அலி, கோவை தங்கப்பா, அப்பாஸ், ஹக் மற்றும் மாநகரம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இறுதியில் மாவட்ட பேச்சாளர் முஜிப்புர்ரஹ்மான், ஜாக் நிர்வாகி சித்திக் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

செய்தி-படம், கோவை தங்கப்பா

கருத்துகள் இல்லை: