சனி, 28 ஜனவரி, 2012

தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்

இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்......

மாநில தலைவராக

மௌலவி JS. ரிபாயி

JS Rifaai

மாநில பொதுச்செயலாளராக

P. அப்துல் சமது

Abdul samad

மாநில பொருளாளராக

O.U. ரஹ்மத்துல்லாஹ்

OU Rahmathullah

மமக மாநில பொதுச்செயலாளராக

M. தமிமுன் அன்சாரி

Thamimun Ansari

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.....

குடியரசு தினத்தை முன்னிட்டு கூத்தாநல்லூர் தமுமுக மற்றும் விநாயாக மிஷன் மருத்துவக்கல்லூரி இனைந்து நடத்திய இலவச பொது மருத்துவமுகாம் புகைப்படம்






கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு பதட்டம்

கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு பதட்டம்

கோவை குனியமுத்தூர் மூவேந்தர் நகர் பகுதியில் தாஜீல் இஸ்லாம் ஹனிபி சுன்னத் ஜமாத் கிளை பள்ளிவாசல் உள்ளது.

நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பள்ளிவாசல் முன்புறம் உள்ள ஜன்னல் கண்ணாடியை கல்வீசி தாக்கினர். பள்ளிவாசலில் தங்கியிருந்த மோதினார் நூர்முகமது சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது சிலர் அங்கிருந்து ஒடியுள்ளனர். பள்ளிவாசல் அருகே தமுமுக மாவட்ட துணைத்தலைவர் ரபீக் வீடு உள்ளது. அவரது காரைவீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பள்ளிவாசலில் தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் கார் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைத்துள்ளனர்.தகவல் அறிந்ததும் .தமுமுக மாநில செயலாளர் கோவை உம்மர் தலைமையில் தமுமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பள்ளிவாசல் முன்பு திரண்டனர் தகவல்அறிந்ததும் போலிஸ் கமிஷனர் சுந்தரமுர்த்தி, துணைக்கமிஷனர் ஹேமா கருணாகரன், உதவிகமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு
வந்து விசாரித்தனர். வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இதே பள்ளிவாசலில் 2009 ம் ஆண்டு இதுபோல் ஜன்னல் கண்ணாடியை உடைத்துனர். கோவை மீண்டும் கலவர நடக்க அதிகமாக வாய்ப்பு உள்ளது இறைவன் பாதுகாப்பான். அமீன்

கோவை தங்கப்பா

வியாழன், 19 ஜனவரி, 2012

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்

இந்திய இசுலாமியர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றன. இசுலாமியர்கள் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்கள், வெளியேற்றப்பட வேண்டியவர்கள் போன்ற துவேச பிரச்சாரத்தை நீண்ட நாட்களாக இந்த அமைப்புகள் செய்து கொண்டு இருக்கின்றன. இந்த பிரச்சாரத்தின் விளைவாக இந்தியாவில் ஆயிரக் கணக்கான உயிர்களை பழி வாங்கிய மதக்கலவரங்களும், மதமோதல்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்தப் பொய்பிரச்சாரம் இந்தியாவின் அமைதியை நிலை குலைய செய்த வேளையில் இந்திய சமய சார்பின்மையையும் கேள்வி குறியாக மாற்றியுள்ளது.

இந்த மதவாத பிரச்சாரத்திற்கு சாதகமாக இசுலாமியர்கள் இந்திய நாட்டை கட்டமைப்பதற்கு இயற்றிய தொண்டினை திட்டமிட்டு திரைக்கு பின்னால் மூடி மறைக்க கூடிய சதி வேலைகளும் முதன்மையாக நடந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக இசுலாமியர்கள் தேச விடுதலைக்கு இயற்றிய தொண்டு வெளிச்சத்திற்கு வராமல் தடை செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்இந்திய இசுலாமியர்கள் தேசிய எழுச்சியின் தொடக்கம் முதல் இந்திய விடுதலைக்கான தியாக தீபத்தை எற்றுவதில் பங்காற்றியுள்ளனர். இந்தியாவில் தேசியம் மற்றும் ஆங்கிலேய விரோத எண்ணங்கள் விதைக்கப்படுவதில் முஸ்லிம்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர். இதில் தமிழக முஸ்லிம்கள் தங்களுக்கே உரிய முற்போக்கு தன்மையுடன் முதன்மையான முறையில் தங்கள் தியாகத்தை பதிவு செய்துள்ளனர். தமிழக முஸ்லிம்களின் தியாக செயல்கள் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியாமல் இருக்கின்றது.

இந்திய சமயசார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட சில சகோதரர்கள் வெளிக்கொணர படாத இந்த உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்ற புனித நோக்கோடு அல்லும் பகலும் வியர்வை சிந்திக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் உழைப்பு வீணாகாமல் இருக்க, காணாமல் போன வரலாற்றுக் கதாபாத்திரங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று, இந்திய சமயசார்பின்மை நிலைநாட்ட உதவிட வேண்டும் என்ற நோக்கோடு இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது.

தமிழக ஆங்கிலேயே சிப்பாய்கள் ஆங்கில அரசிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்களின் ஆணைக்கு இணங்கி அமைதியான முறையில் செயல்பட்டதாக நீண்ட நாட்களாக நம்பப்படுகிறது. சென்னை ஆவணகாப்பகத்தில் இருக்க கூடிய ஓரு ஆவணம் இந்த நம்பிக்கையை தகர்த்து எரிகின்றது. தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த 9வது பட்டா¬யன் படையை மும்பைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆங்கில அரசு 1775ல் முடிவு செய்திருந்தது. இந்த முடிவை எற்க மறுத்து இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்கியவர் மக்தும் சாஹிப் என்பது ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்டது. ஆங்கில அரசு அவருக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்து, கேப்டன் கெல் என்கிற ஆங்கில அதிகாரி 900 சிப்பாய்கள் முன்னிலையில் மக்தும் சாஹெப்பை இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றார். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இடம் பிடிக்க வேண்டிய இந்த தகவல் ஆவண காப்பகத்தில் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு 1806ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் திப்பு சுல்தானின் வாரிசுகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் இயற்றிய குறிப்பிடத்தக்க பங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அந்த சிப்பாய் கலகத்தில் பங்கேற்றதன் காரணமாக ஆங்கில அரசு இசுலாமியர்களை சந்தேகத்துடன் நோக்கினார்கள் என்பது ஃர்ம்ஸ் என்ற ஆங்கில அதிகாரியின் குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. இந்த புரட்சியில் பங்கேற்றதன் எதிரொலியாக ஆங்கில இராணுவத்தில் இசுலாமியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பல இசுலாமியர்கள் சென்னையிலும் வேலூரிலும் சிறை வைக்கப்பட்டனர். சிலர் காடுகள் நிறைந்த தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்1806ல் எற்பட்ட எழுச்சியும், அதில் முஸ்லிம்களின் பங்களிப்பும் பரவலாக இன்று அறியபட்டாலும், 1839ல் வேலூர் முஸ்லிம்கள் மீண்டும் ஓரு எழுச்சிக்கு தீவிரமாக திட்டமிட்டு அது தோற்றுப்போன வரலாறு பலருக்கு தெரியாத செய்தியாக இருந்து கொண்டு இருக்கிறது. 1806க்கு பிறகு பல இஸ்லாமிய மௌல்விகளும், பக்கீர்களும் வட இந்தியாவில் இருந்து வேலூருக்கு குடிபெயர்ந்தனர். இந்த மௌல்விகளும், பக்கீர்களும் வேலூர் பகுதியில் ஆங்கில விரோத தீயை பற்ற வைத்து கொண்டிருந்தனர். அந்த கால கட்டங்களில் ஜøம்மா பயான்கள் ஆங்கில அரசுக்கு எதிரான கொந்தளிப்புகளை ஊருவாக்க கூடியதாக இருந்தன.

புரஹா ஷா என்கின்ற பக்கீர் வேலூரில் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து வேலூரில் தங்கி இருந்த மௌல்விகளுக்கும், பக்கீர்களுக்கும் ஆஜ்மீர் நகரில் இருந்த ஆங்கில அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இருந்த தொடர்பும், வேலூர் முஸ்லிம்கள் 1839ல் கிளர்ச்சி செய்ய தீட்டிய திட்டமும் வெளியானது. அதே போல் அதே கால கட்டத்தில் வேலூர் பக்கீர் காதர் மீரா என்பவர் கைது செய்யப்பட்டபோது வேலூர் முஸ்லிம்களுக்கும், சென்னை பல்லாவரத்தில் இருந்த ஆங்கில எதிர்ப்பு சிப்பாய்களுக்கும் இருந்த தொடர்பும் அவர்கள் சதித்திட்டத்திற்காக இணங்கி செயல்பட்டது தெளிவானது. அதே வேளையில் வேலூரில் ஆங்கில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகத்ததற்காக லத்தீப் சாஹிப் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழ¬ல் வேலூரில் இருந்து வெளிவந்த சுல்தானா அக்பர் என்கின்ற தினசரி பத்திரிக்கை ஆங்கில விரோத கருத்துக்களை முஸ்லிம்கள் மத்தியில் பதிய செய்தது. ஆக வேலூர் முஸ்லிம்கள் 1806 க்கு பிறகும் ஆங்கில அரசுக்கு தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வேளையில் தேசியம் செழித்து வளர வித்திட்டன என்பது உறுதியாகிறது.

1857 புரட்சியின் பாதிப்புகள் தமிழகத்தை எட்டவில்லை என நீண்ட நாட்களாக போதிக்கப்பட்டு வந்தது. இதனால், சமீபகாலமாக தமிழகத்திலும் 1857ன் எழுச்சியின் பிரதிபழிப்புகள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த காலகட்டத்திலும் தமிழக முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்துள்ளனர் என்பது அறிந்து பெருமை பட வேண்டிய செய்தி மட்டும் ஆல்ல அதை இசுலாமிய சகோதரர்களிடம் கொண்டு சென்று இந்த நாட்டின் விடுதலைக்கு வித்திட்டவர்களில் இசுலாமியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்த வேண்டும்.

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்1857 புரட்சியின் போது சென்னையில் ஆற்காடு நவாப் அவர்களின் தலைமையிடமாக கருதப்பட்ட திருவல்¬லிக்கேணியில் புரட்சியின் தாக்கம் தென்பட வாய்ப்புகள் இருந்ததாக கருதிய ஆங்கிலேயர்கள், இந்த பகுதியை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். குலாம் கௌஸ் மற்றும் ஷேக்மன்னு என்கின்ற இரண்டு நபர்கள் சென்னை மாகாணத்தை சேர்ந்தவர்கள் புரட்சியில் பங்கேற்க வேண்டும் என்கின்ற அவர்களின் எண்ணத்தை வழியுறுத்தி போஸ்டர்கள் ஓட்டிய காரணத்தால் கைது செய்யப்பட்டனர். அன்றைய வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சையத் குசா முஹம்மத் ஆவ்குர்ஹா ஹøசைன் என்பவர் வேலூர் மற்றும் புங்கனூர் பகுதிகளில் 1857 புரட்சிக்கு ஆட்களை திரட்டிய காரணத்தால் மார்ச் 1857ல் கைது செய்யப்பட்டார் ஆகஸ்டு 1, 1857ல் சேலம், புட்நூல் தெருவில் ஆய்யம் பெருமாள் சாரி என்பவரின் வீட்டுக்கு முன் ஆங்கில ஆட்சி அன்றைய தினம் வீழ்ந்துவிடும் என்ற செய்தியை எதிர்பார்த்து பலர் கூடியிருந்தனர். அந்த கூட்டத்தில் ஓருவராக இருந்த ஹைதர் என்பவர் இவ்வளவு நேரம் சென்னையில் இந்திய தேசிய கொடி எற்றப்பட்டிருக்கும் என்று தெரிவித்தது அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1857 புரட்சியின்போது செங்கல்பட்டில் அருணகிரி மற்றும் கிருஷ்ணா என்கின்ற இருவர் இந்த பகுதியில் மக்களை திரட்டி கலகம் விளைவித்து கொண்டிருந்தனர். செங்கற்பட்டில் எற்பட்டிருக்க கூடிய இந்த எழுச்சியை ஓருங்கிணைக்க சென்னையில் இருந்து சுல்தான் பக்ஷ் என்பவர் செங்கல்பட்டு சென்றார். இந்த தகவல்களையும் சுல்தான் பக்ஷின் நடவடிக்கைகள் சம்மந்தமாகவும் செங்கற்பட்டு மாஜிஸ்ரேட் சென்னை மாகாண அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக முஸ்லிம் 1857 புரட்சிக்கு முன்னரும், புரட்சியின் நேரத்திலும் மட்டும் இல்லாமல் புரட்சிக்கு பின்னரும் தொடர்ந்து ஆங்கில எதிர்ப்புணர்வை பல இன்னல்களுக்கிடையே கடைப்பிடித்துதான் பரப்பியும் வந்தனர்.

1869ல் கூட வேலூர் நகரத்தில் கலவர சூழ்நிலை இருந்ததாகவும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 20 வது பட்டாயன் வேலூரில் தங்கி இருந்த ஐரோப்பியர்களை சுட்டுக் கொல்ல திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியானதால் அங்கு இருந்த ஐரோப்பியர்கள் அனைவரும் தற்காப்புக்காக துப்பாக்கிகள் வைத்துக்கொள்ளக் கூடிய உரிமை வழங்கப்பட்டது என்பது அரசு உவணங்களில் பதிவாகியுள்ளது.

ஆக இசுலாமியர்கள் இந்திய தேசியவாத எழுச்சியின் தொடக்கம் முதல் சுதந்திர போராட்டத்தின் பல்வேறு கட்டங்களிலும் தங்களின் வீரத்தை விதைத்து போராடி, தியாகித்து, இரத்தம் சிந்தி அந்த இயக்கத்தை வளர்த்து இருக்கின்றனர். இதில் தமிழக முஸ்லிம்கள் முண்ணணியில் இருந்தார்களேயல்லாமல், இரண்டாம் இடத்தில் இருக்கவில்லை. இது முஸ்லிம்கள் பெருமை கொள்ள வேண்டிய, அறிந்து பெருமைப்பட வேண்டியதன்றோ!

-ஆபுல் பாசல்

source : tmmk.in

புதன், 18 ஜனவரி, 2012

பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் போலியானது என்கவுன்டரில் போலீஸ்தான் கொன்றது”

பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் போலியானது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கொளுத்திப் போட்ட வெடி டில்லி அரசியல் மட்டங்களில் நன்றாகவே வெடிக்கத் தொடங்கிவிட்டது.

என்கவுன்டர் நடந்தபோது அப்பார்ட்மென்டுக்கு அருகே சிதறி ஓடும் பொதுமக்கள்

பாரதீய ஜனதா கட்சி “ஆமா.. அதுதானே..” என்று தொடங்கி, பாட்லா ஹவுஸ் போலி என்கவுன்டர் தொடர்பில் அரசு பதில்லொல்லியே ஆகவேண்டும். தார்மீகப் பொறுப்பேற்று உட்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறிவிட, “எனக்கு இருக்கும் சிக்கல் போதாதென்று, இது வேறா?” என அதிர்ந்து போயுள்ளார் உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அவசர அவசரமாக தனது கட்சிப் பிரமுகரின் கூற்றையே மறுத்துள்ள அமைச்சர் சிதம்பரம், “2008-ல் பாட்லா ஹவுஸ் துப்பாக்கிச் சண்டை நிஜமானது. பாதுகாப்புப் படையினரும் தீவிரவாதிகளும் நிஜமாகவே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். அந்தச் சண்டையில்தான் இரு தீவிரவாதிகளும் இறந்து போனார்கள்” என்று கூறியுள்ளார்.

இவர்கள் குறிப்பிடும் என்கவுன்டர் 2008-ம் ஆண்டு செப்டெம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. ஆபரேஷன் பாட்லா ஹவுஸ் என்பது அதற்கு சூட்டப்பட்ட பெயர். டில்லி ஜாமியா நகர் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் அத்திய முஜாஹிதீன் அமைப்பினர் தங்கியிருப்பதாக கிடைத்த உளவுத் தகவலை அடுத்து, இந்த ஆபரேஷன் திட்டமிடப்பட்டது என்றது டில்லி போலீஸ்.

என்கவுன்டரின் பின் தடயங்களைத் தேடும் போலீஸ்

டில்லி போலீஸின் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மோகன் சர்மா தலைமையில் போலீஸ் படை அந்த வீட்டை சுற்றி வளைத்தது. துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது.

இறுதியில், இரு தீவிரவாதிகள் (ஆதிஃப் அமின், மொஹமெட் சஜித்) கொல்லப்பட்டார்கள், இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என டில்லி போலீஸ் அறிவித்தது.

தாக்குதலுக்கு தலைமை வகித்துச் சென்ற என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்ஸ்பெக்டர் மோகன் சர்மாவும் கொல்லப்பட்டார்.

இந்த என்கவுன்டர் தொடர்பாக அவ்வப்போது புதிய புதிய கதைகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இது எப்போதுமே ஒரு சர்ச்சைக்குரிய என்கவுன்டராகவே இருந்தது.

இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரே இது போலி என்கவுன்டர் என்று சொல்லிவிட்டதில், பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. பூதத்துக்கு பிரியாணி போட பாரதீய ஜனதாவும் தயாராகி விட்டது.

என்கவுன்டர் முடிந்தபின் அங்கு குவிந்த மக்கள்

பா.ஜ.க. பேச்சாளர் ரவி ஷங்கர் பிரசாத், “அமைச்சர் சிதம்பரம் இது நிஜமான என்கவுன்டர் என்று சொல்கிறார். ஆனால், அவரது கட்சித் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் போலி என்கவுன்டர் என்கிறார். திக்விஜய் சிங் இந்தக் குற்றச்சாட்டை சுமத்திய மேடையில் ராகுல் காந்தியும் இருந்தார்.

ராகுல் காந்தி முன்னிலையில் திக்விஜய் சிங் சொல்வதை நம்புவதா, அமைச்சர் சிதம்பரம் சொல்வதை நம்புவதா? சோனியா காந்தியும் ராகுலும் இது தொடர்பாக வாய் திறந்து ஏதாவது கூறும் உத்தேசம் ஏதாவது உள்ளதா?” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.

“எனக்குத் தெரிந்தவரை இது நிஜமான என்கவுன்டர்தான். இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் நான் பார்த்துவிட்டேன். போலியாக எதுவும் தெரியவில்லை” என்கிறார் அமைச்சர் சிதம்பரம்.

ஆட்சியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது, கட்சியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தியோ இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

நிலைமை கழுத்துவரை இறுகும்வரை கருத்து தெரிவிக்கும் வழக்கம் அவர்களுக்கு இல்லை.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

சமூக பொறுப்பற்ற தினமலர்..!

கீழே நீங்கள் காணும் படமானது இன்று தினமலர் நாளிதழில் நெஞ்சினிலே ஆல்பம் பகுதியில் இடம் பெற்ற படம் தான் அது.

பசுவின் பக்கதி
தீ மிதிக்கும் பசு: மகர சங்கராந்தியை முன்னிட்டு,
பெங்களூரு மல்லேஸ்வரம் மைதானத்தில் நடந்த
"சங்கராந்தி கோ உற்சவா' நிகழ்ச்சியில், தீ மிதித்த பசு.



மனிதன் தீ மிதிகின்றான் என்றால் அவன் தனது பகுத்தறிவை பயன்படுத்தி? கடவுள் என்று ஒன்று
இருக்கின்றது. அந்த கடவுளுக்கு இது போல பல தேவைகள் இருக்கிறது. கடவுள் நம் தேவையை நிறைவேற்றினால் அந்தகடவுள் நம்மை இதுபோல் வருத்தி கொள்ள விரும்புகின்றான் என்ற அடிப்படையில் தீ மிதிகின்றான்.
அது அவனின் கடவுள் நம்பிக்கை இது மூட பழக்கம்மா இல்லையா என்ற விவாதத்திற்கு நாம் செல்லவேண்டாம். அதை பற்றி விவாதிக்க
நிறைய பேர் இருக்கின்றனர்.
ஆனால் ஒரு பகுத்தறிவற்ற வாயில்லா ஜீவனை கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் இப்படி தீயில் நடக்கவைத்து துன்புறுத்துவது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. இதை கடவுள் பக்தி என்று சொல்லுவதா? அல்லது பைத்திய காரத்தனம் என்றுசொல்லுவதா?. உனக்கு கடவுள் பக்தி அதிகமானால்
நீ தீயில் இறங்கு அல்லது நாக்குல வேல் குத்திக்க அல்லது என்ன வேண்டுமானாளும் செய்துகொள். உன்னை யாரும் எதுவும் செய்ய போவது
இல்லை.
இந்த வாயில்லாத ஜீவனை வருத்துவது அனைத்து சாமானிய மனிதருக்கும் மூடபழக்கம் என்று தெரியும். ஆனால் இந்த தினமலர் நாளிதழ் இதை அங்கீகரிப்பது போல படத்தை வெளியிட்டுள்ளது. சாதாரண
பொதுமக்களை விட சமூக பொறுப்பில் அதிக அக்கறையுடன் நடந்துகொள்ள
வேண்டிய ஒரு நாளிதழ் அதை அங்கீகரிப்பது போல செய்தி வெளியிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
இதை நான் எந்த மதத்தையும் புண்படுத்த வேண்டும் என்பர்த்காக சொல்ல வில்லை. கடவுள்நம்பிக்கை என்பது அவரவர் மனம் சார்ந்தது ஒருவர்
கடவுளை எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம். அது அவர்களின்
தனிபட்ட உரிமை. ஆனால் ஒரு நாளிதழ் அப்படி இருக்க கூடாது அது சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்க்க்காகவே இதை எழுதுகின்றேன்.
நான் பார்த்த வரையில் தினமலர் நாளிதழ் சமூக பொறுப்பற்ற ஒரு பத்திரிக்கையாகவே இன்று வரை தனது செய்திகளை
வழங்கி வருகின்றது. என்னை பொறுத்தவரையில் தினமலர் மக்களால்
புறக்கணிக்க வேண்டிய ஒரு நாளிதழ். இந்த மக்கள் என்றுதான் சிந்திக்க போகின்றர்களோ தெரியவில்லை.

source : http://kalamarudur.blogspot.com/2012/01/blog-post_16.html