ஞாயிறு, 27 ஜூலை, 2014

முஸ்லிம் மாணவிகள் இருவரைச் சேர்த்துக் கொள்ள அனுமதி மறுத்த டெல்லி அரசுப் பள்ளி

                                                     (தந்தை இர்ஷாத்துடன் இரண்டு மகள்கள்.)

டெல்லி அரசுப் பள்ளி ஒன்றில் இரண்டு முஸ்லிம் மாணவிகளுக்கு இடமில்லை என்று அனுமதி மறுத்திருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

டெல்லியில் வசித்து வருபவர் இர்ஷாத், இவர் டெய்லர் தொழில் பார்த்து வருபவர். இவருக்கு குல்சும் மற்றும் யாஸ்மின் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்களை முறையே 9 மற்றும் 11ஆம் வகுப்பில் சேர்க்க தந்தை இர்ஷாத் டெல்லி ரகுவீர் நகரில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியை அணுகியுள்ளார். பலமுறை அணுகிவிட்டார். ஆனாலும் பெண்களுக்கு கல்விபெற அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

இதனையடுத்து தந்தை இர்ஷாத், கல்வியுரிமை புலத்தில் சேவையாற்றி வரும் அசோக் அகர்வால் என்ற வழக்கறிஞரை அணுகியுள்ளார். அவர் பள்ளிக் கல்வி இயக்குனரகத்திற்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பள்ளியில் ஏற்கனவே நிறைய நெரிசல் உள்ளது என்று அந்த அரசுப் பள்ளி தட்டிக் கழித்து வந்துள்ளது. ஆனால் கல்வியுரிமைச் சட்டப்படி யாருக்கும் கல்வி அனுமதி மறுக்க முடியாது என்கிறார் வழக்கறிஞர் அகர்வால்.

மேலும் சமூகத்தின் ஏழ்மையான பிரிவிலிருந்து வரும் இவர்களுக்கு அனுமதியளிக்க தாமதம் செய்வது அநீதியாகும் என்கிறார் அகர்வால்.

ஒரு பள்ளி மட்டுமல்ல, 3 அரசுப் பள்ளிகள் இந்த இரண்டு மாணவிகளுக்கும் தொடர்ந்து அனுமதி மறுத்துள்ளது. அதாவது ஏப்ரல் மாதம் முதல் இந்த ஏழை முஸ்லிம் தந்தை மகள்களை பள்ளியில் சேர்க்கப் போராடி வருகிறார்.

அனுமதிக்கான ஆவணங்கள் சரியாக உள்ள நிலையில், பலமுறை இர்ஷாத் கடிதம் எழுதியும் இந்தப் பள்ளிகளிலிருந்து ஒரு பதிலும் வரவில்லை. பள்ளியின் இத்தகைய செயல் அநீதியானது என்று கூறும் இர்ஷாத், இது இவர்கள் இருவரது வாழ்வையும் சீர்குலைக்கும் முயற்சி என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

டெல்லி அரசு அதிகாரிகள் இதில் தலையிட்டு இந்த இரு மாணவிகளுக்கும் அனுமதி அளிக்க உத்தரவிட்டும் பள்ளித் தலைமை மௌனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வியைத்தான் இப்போது அகர்வால் நோட்டீஸ் மூலம் கேட்டுள்ளார். 
source :-
 http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/article6252474.ece

வியாழன், 17 ஜூலை, 2014

இஸ்ரேலின் இனப்படுகொலை.. ராஜ்யசபாவில் விவாதத்தை தடுத்த சுஷ்மா ஸ்வராஜ்- கொந்தளித்த எதிர்க்கட்சிகள்!!



டெல்லி: இஸ்ரேல் நடத்தி வரும் பாலஸ்தீன இனப்படுகொலை குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு அந்த விவாதம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினார். காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். காஸா பகுதிக்குள் நுழைந்திருக்கும் இஸ்ரேலிய தரைப்படையோ அந்த மண்ணின் மக்களை சொந்த மண்ணைவிட்டு வெளியேறச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நாடாளுமன்றம் பாதிப்பு 
ஆனால் மத்திய அரசோ இதுபற்றி விவாதிக்க மறுத்து வருகிறது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ராஜ்யசபா அலுவலல் குறிப்பில்..
 இந்நிலையில் இன்று ராஜ்யசபா அலுவல் குறிப்பில், காஸா தாக்குதல் மீதான விவாதம் பூஜ்ய நேரத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் கூடியிருந்தனர்
சுஷ்மா திடீர் எதிர்ப்பு
 ஆனால் சபை கூடியபோது காஸா தாக்குதல் மீதான விவாதத்தை அனுமதிக்க முடியாது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இஸ்ரேல்- பாலஸ்தீன உறவு பாதிக்கும்
 இத்தகைய விவாதத்தின் மூலம் இஸ்ரேல், பாலஸ்தீனத்துடனான நட்புறவு பாதிக்கப்படும் என்றார். மேலும் இன்று காலை அலுவல் பட்டியலை பார்த்தபோதே, காஸா தாக்குதல் மீதான விவாதம் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை தான் கவனித்ததாகவும், ராஜ்யசபா தலைவருக்கு மரியாதை அளிக்கும் வகையிலேயே சபைக்கு வந்திருப்பதாகவும் கூறினார்.
சபாநாயகருக்கு கடிதம் தன்னிடம் 
ஆலோசனை மேற்கொள்ளாமல் அலுவல் குறிப்பில், காஸா தாக்குதல் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருப்பதாக சுஷ்மா கூறினார். மேலும் இஸ்ரேல்-காஸா பிரச்சனையை விவாததிற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவரது முடிவுக்காக காத்திருப்போம். அவரது முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
ஒத்திவைப்பு 
சுஷ்மா ஸ்வராஜ் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக உணவு இடைவேளைக்கு முன்னர் இரண்டு முறையும் அதன் பின்னர் பிற்பகல் 3 மணி வரையும் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. 3 மணிக்கு சபை மீண்டும் கூடிய போதும் அமளி நீடித்ததால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அன்றும் எதிர்ப்பு 
முன்பு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் எதிர்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் தீர்மானம் கொண்டுவரவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது இஸ்ரேலின் பாலஸ்தீன இனப்படுகொலை குறித்து விவாதிக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இலங்கைக்காக பயப்படும் சுஷ்மா? 
இஸ்ரேலின் பாலஸ்தீன இனப்படுகொலையை விவாதித்தால் இலங்கையின் இனப்படுகொலை குறித்து விவாதிக்க நேரிடும் என்பதாலும் கூட சுஷ்மா ஸ்வராஜ் இத்தகைய கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கக் கூடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
நன்றி  தட்ஸ் தமிழ்



திங்கள், 14 ஜூலை, 2014

கொலைகாரனுக்குப் பாதுகாப்பு ! நீதி கேட்டால் பொய்வழக்கு ! !

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நடந்த இந்துவெறி பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமை ஆர்வலரான தீஸ்தா சேதல்வாதைப் பழிவாங்க அவர்மீது பொய்வழக்கு போட்டு, அவரைக் கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது குஜராத் அரசு.
தீஸ்தா சேதல்வாத்
குஜராத் அரசால் பொய்வழக்கு போடப்பட்டு பழிவாங்கப்படும் தீஸ்தா சேதல்வாத் (கோப்புப் படம்).
குஜராத்தில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்குச் சட்ட உதவிகள் செய்வதை நோக்கமாகக் கொண்டு “நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு” என்ற தன்னார்வ அறக்கட்டளையை தீஸ்தாவும் அவரது கணவர் ஜாவீத் ஆனந்த் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, மும்பை இந்துவெறி பயங்கரவாதத்துக்குப் பின்னர் “சப்ரங்” என்ற தன்னார்வ அமைப்பை 1993-ல் இவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
குஜராத் படுகொலையின்போது, குல்பர்க் சொசைட்டி எனும் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் கொடூரமான முறையில் 69 பேரைக் கொன்று இந்துவெறியர்கள் நடத்திய பாசிச வெறியாட்டத்தின் வரலாற்று சாட்சியமாக அந்த இடத்தையே ஒரு நினைவகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். குல்பர்க் நினைவகத்துக்காக இவர்கள் திரட்டிய தொகை ரூ 4.5 இலட்சத்தில் ரூ 50 ஆயிரம் மட்டுமே வெளிநாடுகளிலுள்ள தீஸ்தாவின் நண்பர்கள் வழங்கிய நன்கொடை. இதற்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும், குல்பர்க் குடியிருப்பைச் சேர்ந்த சிலரை மிரட்டி, தீஸ்தாவுக்கெதிராக நிதி மோசடிக் குற்றம் சாட்டி பொய்ப்புகார் ஒன்றை எழுதி வாங்கியிருக்கிறது குஜராத் போலீசு. பொய்வழக்குப் போட்டு சிறை வைக்க முயன்றது. அவர்களது வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருக்கிறது. எனினும், உயர்நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி யிருக்கிறது.
குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் மோடி உள்ளிட்டு குஜராத் அரசின் உயரதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதை தீஸ்தாவும் குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரசு எம்.பி.யான இஷான் ஜாப்ரியின் துணைவியார் ஜாகியா ஜாப்ரியும் உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டில் ஆதாரங்களுடன் அறிக்கையாகச் சமர்ப்பித்தனர். இந்த வழக்கின் கடைசி முனை மோடியை நெருங்கியதால், அன்று முதலே தீஸ்தாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடங்கி விட்டன. இந்த அறிக்கையைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது. மோடியின் நேரடிப் பார்வையில்தான் குஜராத் இனப்படுகொலை நடத்தப்பட்டது என்பதைச் சட்ட ரீதியாகவே நிலைநாட்டுவதற்கு வலுவான சாட்சியங்கள் இருந்தபோதிலும், சிறப்புப் புலனாய்வுக் குழு படுகொலைக்கு அவரைப் பொறுப்பாக்குவதற்கான சாட்சியங்கள் இல்லை எனக்கூறி 2012-ல் மோடியை விடுவித்தது.
இதனை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்யுமாறு மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரனை நியமித்தது உச்ச நீதிமன்றம். சிறப்புப் புலனாய்வுக் குழு திரட்டியுள்ள சாட்சியங்களின்படியே மோடியின் மீது குற்றம் சாட்ட முடியும் என்று அவரது அறிக்கை கூறியது. மோடியைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பதா என்பதை முடிவு செய்து கொள்ளுமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். விசாரணை நீதிமன்றம் மோடியைக் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கவில்லை. விசாரணை நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறார் ஜாகியா ஜாப்ரி.
கார்ப்பரேட் முதலாளிகளின் அதிகார பலம், பண பலம், சட்ட வல்லுநர்கள் படை, அரசு அதிகாரம் ஆகிய அனைத்து வலிமைகளும் பொருந்திய ஒரு பாசிஸ்டுக்கு எதிராக, நீதிமன்றத்தில் இத்தகைய விடாப்படியானதொரு சட்டப்போராட்டம் நடத்துவதென்பது சாதாரண விசயமல்ல. தன் உயிரைப் பணயம் வைத்துத்தான் இத்தகைய நடவடிக்கையில் யாரும் இறங்க முடியும்.
இதுவரை 5 பொய் வழக்குகள் தீஸ்தாவின் மீது போடப்பட்டிருக்கின்றன. பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜாகிரா ஷேக் என்ற பெண்ணை மிரட்டியும் பணம் கொடுத்தும் தீஸ்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்க வைத்தது பாரதிய ஜனதா கும்பல். அதனையெல்லாம் சட்டரீதியாக முறியடித்தது மட்டுமல்ல, இந்து பாசிசம் கோலோச்சும் அந்த மாநிலத்தில், தம் குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்தவர்களான சாட்சிகளுக்குத் தைரியம் கொடுத்து, அவர்களைச் சாட்சி சொல்ல வைத்து குற்றவாளிகளுக்கு எதிராகத் தீர்ப்பும் பெற்றிருக்கிறார் தீஸ்தா.
ரதயாத்திரை, மும்பை படுகொலை உள்ளிட்டு நாடு முழுவதும் நடந்துள்ள நூற்றுக்கணக்கான முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் எதிலும் இதுநாள்வரை இந்து வெறியர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதில்லை. குஜராத்தில் இதுவரை 117 இந்துவெறியர்கள் குற்றவாளிகள் என்று நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளதிலும், நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் மோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் உழைப்பும் பங்கும் முக்கியமானவை.
தீஸ்தா, ஜாகியா ஜாப்ரி மற்றும் பிற மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தை ஆதரித்து தோள்கொடுப்பதன் மூலம்தான், இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகப் போராடுவதற்கான உந்துதலையும் துணிவையும் அனைவருக்கும் ஏற்படுத்த முடியும்.
- கதிர்

http://www.vinavu.com/2014/07/14/false-cases-foisted-on-teesta-setalvad/

கூத்தாநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

இன்ஷா அல்லாஹ்..

கூத்தாநல்லூரில் மாபெரும்
கண்டன
ஆர்ப்பாட்டம்..
பாலஸ்தீனத்தில்
அப்பாவி மக்களை கொன்று குவிக்கும்
இஸ்ரேலிய
பயங்கரவாதிகளை கண்டித்து
எதிர்வரும் 16-07-2014 அன்று மாலை 4 மணியளவில்
தமுமுக சார்பில் மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது..
அநீதிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்திற்கு.. அலைகடெலன திரண்டு வாரீர்.....
அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கூத்தாநல்லூர் நகரம்

மதானிக்கு ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்


பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, கேரளாவின், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர், அப்துல் நாசர் மதானிக்கு, ஜாமின் வழங்கி, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

உடல் நலக்குறைவால் அவதிப்படும் அவர், தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, பல முறை கர்நாடக கோர்ட்டுகளில் மனு செய்தார். அங்கு அந்த மனுக்கள் தள்ளுபடியானதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். அந்த வழக்கு நேற்று விசாரிக்கப்பட்டது. மதானி சார்பில், மூத்த வழக்கறிஞர், பிரஷாந்த் பூஷன் ஆஜரானார். 

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமின் வழங்கக் கூடாது என வாதாடினார்.  கர்நாடக சிறையிலேயே, மதானிக்கு, சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என, அப்போது அவர் கூறினார். எனினும், மதானிக்கு ஜாமின் வழங்கி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

நாசர் மதானி அவர்கள் நிறந்தர விடுதலை பெற எல்லாம் வல்ல ஏக இறைவனை பிரார்த்திப்போம்

சனி, 12 ஜூலை, 2014

இலங்கயில் ஐநா விசாரணை நடத்துவதை எதிர்க்கிறோம்:மோடி அரசு

வன்னிப் இனவழிப்பின் போது நடைபெற்ற இரு தரப்புப் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு செயற்படுவதாகக் கூறிவருவது தெரிந்ததே. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், இலங்கை உள்விவகாரங்களில் மனித உரிமைக்குழுக்கள் தலையிடக் கூடாது என்றார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்திதது நடத்திய பேச்சுக்கள் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையிலேயே அக்பருதீன் அவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில் இரண்டு அமைச்சர்களும் இருதரப்பு முதலீடுகள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
உலக நாடுகள் முழுவதும் இலங்கையைச் சூறையாட ராஜபக்ச கிரிமினல் அரசு வழியைத் திறந்துவிட்டுள்ளது. ஐ.நா விசாரணை என்ற தலையங்கத்தில் முன்னை நாள் போராளிகளைப் போர்க்குற்றவாளிகளாக்கிவிட்டு இனக்கொலையாளிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைக்கு விசாரணை எனப் பெயரிட்டுள்ளனர். விசாரணையின் விளைவுகள், அதன் உள்ளர்த்தம், இன்றைய அரசியல் சூழல் தொடர்பான அடிப்படை அறிதலின்றி தமிழ் இனவாதக் கும்பல்கள் அமெரிக்க மற்றும் ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் முழுச்சமூகத்தையும் அமிழ்த்தியுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட இந்திய ஆளும் வர்க்கத்தை வாக்குப் பொறுக்குவதற்காகவும், தமது வியாபார நலன்களுக்காகவும் ஆதரிக்கும் தமிழ் இனவாதக் கும்பல்களின் ஒரு பகுதியினர் நரேந்திர மோடியின் வரவை ஆதரித்தனர்.
அழிவுகளுக்கு எல்லாம் பின்புலத்தில் செயற்படும் இக் கும்பல்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அனைவரையும் ஆட்சிக்குக் கொண்டுவர அரும்பாடுபட்டனர். எல்லா அழிவுகளுக்கும் பொறுப்பான இவர்கள் இன்றும் தமே தமிழ்ச் சமூகத்தின் தலைமை என்கின்றனர்.இன்று தமிழ் இனவாதிகள் ஆதரித்த பாசிஸ்ட் மோடியின் அரசு ஐ.நா விசாரணை வேண்டாம் என்கிறது.
ஐ.நா விசாரணை என்ற பூச்சாண்டியக் காட்டி மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் இலங்கை இந்திய அரசுகள் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் சூறையாடலைத் தீவிரப்படுத்தியுள்ளன.
விசாரணையை எதிர்க்கிறோம் என்றும் ஆதரிக்கிறோம் என்றும் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க சிங்கள பௌத்தமயமாக்கலும், நிலப்பறிப்பும், பல்தேசியக் கொள்ளையும் துரித கதியில் நடைபெறும்.
http://inioru.com/?p=41255

ஆவணங்களை அழித்து வரலாற்றை மாற்றும் சதி

“என்னது, காந்தி செத்துட்டாரா” – இன்னும் கொஞ்ச நாளில் இந்த கலாய்த்தல் எடுபடாமல் போய் விடும். அதாவது காந்தியை கோட்சே கொன்றது மட்டும் வரலாற்றில் இருக்கும். கோட்சேவின் இந்துத்துவ தொடர்பு, சங்க பரிவார தொடர்பு – சிந்தனை அனைத்தும் அதிகாரப் பூர்வ ஆவணங்களில் இல்லாமல் போகலாம்.
rewriting-history-2வாஜ்பாயி தலைமையில் அமைந்த முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு வரலாற்று பாடப் புத்தகங்களை திருத்தி புகழ் பெற்றது. இப்போது பா.ஜ.க.வின் தனிப்பெரும்பான்மை அரசு புத்தகங்களை மட்டுமின்றி அரசு ஆவணங்களையும், தரவுகளையும் அழிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
மோடி பதவி ஏற்ற பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் மகாத்மா காந்தி கொலை வழக்கு தொடர்பான கோப்புகள் உட்பட 1.5 லட்சம் முக்கிய கோப்புகளை அவசர அவசரமாக அழித்திருக்கிறது. காந்தி கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் கோப்புகளை அழித்து விடுமாறு மோடி கூறியதன்படி இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று  சி.பி.எம் உறுப்பினர் ராஜீவி மாநிலங்களவையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “கோப்புகளை அழிக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார் என்பதை நான் உறுதியாக மறுக்கிறேன்” என்று அரசின் சார்பில் பதில் சொல்லியிருக்கிறார். அதாவது, கோப்புகள் அழிக்கப்பட்டதை அரசு மறுக்கவில்லை, மோடி அறிவுறுத்தலின் பேரில் அது நடக்கவில்லை என்பது மட்டும்தான் அவர்களது பதில்.
காந்தி கொல்லப்பட்ட செய்தியை வெளியிடுவதற்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தின் பதிவுகள் அடங்கிய கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் என்னென்ன கோப்புகள் அழிக்கப்பட்டன என்பது மோடிக்கும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும்தான் வெளிச்சம்.
இன்னும் கொஞ்ச நாளில் காந்தி சாகவேயில்லை, காந்தியை கோட்சே கொல்லவேயில்லை, காந்தியை சுட்ட கோட்சேவுக்கு ஆர்.எஸ்.எஸ்சுடன் தொடர்பே இல்லை, ஆர்.எஸ்.எஸ் இந்து பாசிச பயங்கரவாத அமைப்பு இல்லை என்று அடுத்தடுத்து வரிசையாக வரலாற்றை திருத்துவதற்கு ஏற்ப பதிவுகள் அழிக்கப்படும், அல்லது மாற்றப்படும்.
இதைத் தொடர்ந்து அரவிந்தன் நீலகண்டன் போன்ற ‘ஆய்வாளர்கள்’ காந்தி கொல்லப்படவே இல்லை என்று ஆதாரங்களுடன் ஆய்வு நூல் வெளியிடுவார்கள். கோட்சே காந்தியை கொன்றதற்கும், இந்து-முஸ்லீம் பிளவை ஆர்.எஸ்.எஸ் ஊக்குவித்ததற்கும் ஆதாரமே இல்லை என்று வாதிடுவார்கள்.
குஜராத் படுகொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் மோடியை பிரதமராகவும், கிரிமினல் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் அமித் ஷாவை கட்சித் தலைவராகவும் அமர்த்தியுள்ள கிரிமினல் கும்பலின் நிர்வாகத்திடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
ஆனால், மோடி அரசு கொண்டு வரும் அன்னிய அடிமைத்தனம் வழங்கும் பலன்களை எதிர்பார்த்து சப்புக் கொட்டிக் கொண்டிருக்கும் நடுத்தரவர்க்க அறிவுஜீவிகள், இந்து உணர்வு கொண்ட கரையான்கள் கோப்புகளை தின்று விட்டன என்றோ, அக்கினி பகவான் அருளால்  கோப்புகள் தானாக எரிந்து விட்டன என்று சொன்னாலும் அதற்கும் சப்பைக் கட்ட தயாராகத்தான் இருக்கின்றனர்.
உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் (வழக்கம் போல பெயர் சொல்ல விரும்பாதவர்), “தற்போதைய அரசின் கீழ் ஏதாவது முக்கியமான கோப்புகள் அழிக்கப்பட்டனவா என்ற கேள்விக்கு அமைச்சரவையின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் இல்லை என்ற பதில் கிடைத்திருக்கிறது. அமைச்சகம் இதை நாடாளுமன்ற பதிவுகளில் கொண்டு வரப் போகிறது” என்று கூறியிருக்கிறார். காந்தி கொலை தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை கண்டறிய துறை முழுவதும் அதிகாரிகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆதாரம் இருக்கா இல்லையா என்பதை ஒரு கமிட்டி போட்டு நேரில் பார்த்தால் தெரிந்து விடப்போகிறது? இதற்கு ஏன் கருத்துக் கணிப்பு?
இப்பேர்ப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிகாரிகள் அனைவரும் எந்த முக்கியமான கோப்பும் அழிக்கப்படவில்லை என்று கருத்து சொல்லியிருப்பதால், அதை நாடாளுமன்றமும், நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமது நம்பிக்கையின்படி அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதையே நீதிமன்றம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என உத்திரவு போட்ட பா.ஜ.கவினருக்கு இது எல்லாம் புதிதில்லை.
மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் கூறிய பதிலை அடுத்து இந்த விஷயத்தை மேலும் விவாதிக்க முடியாது என்று இழுத்து மூடியிருக்கிறார் மாநிலங்களவை துணைத்தலைவர் காங்கிரசைச் சேர்ந்த சூரியநெல்லி புகழ் பி.ஜே.குரியன். இவர் தலைமையில் இயங்கும் மாநிலங்கள் அவை இனி மோடி அரசின் கிரிமினல் தனங்களை மறைக்கும் அறிகுறி இப்போதே தெரிகிறது.
கோப்புகளை அழித்தாலும் வரலாற்றை மாற்றி விட முடியாது என்று கூறியிருக்கும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் சென்ற ஆண்டு வரை பா.ஜ.கவுடன் கூடிக் குலாவி மத்தியிலும், பீகார் மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தவர்தான். இந்த வரலாற்றிலிருந்து பார்த்தால் சரத் யாதவின் கூற்றுக்கு என்ன வரலாற்று முக்கியத்துவம் இருக்க முடியும்?
பாசிஸ்டுகளின் ஆட்சியில் உண்மையும், ஜனநாயகமும் எப்படி படிப்படியாக அரிக்கப்படும்; அதற்கு ‘ஜனநாயக’ அமைப்புகளும், நடுத்தர வர்க்கமும் எப்படி மௌன சாட்சியங்களாக இருப்பார்கள் என்பதற்கும் இந்த கோப்புகள் அழிப்பு ஒரு சான்று. 2-ம் உலகப்போரில் உலகைக் காப்பாற்றிய சோவியத் யூனியன் பங்கை அழிப்பதற்கு அமெரிக்கா எடுத்த வரலாற்று முயற்சி போல அமெரிக்காவின் அடிமையாக இருக்கும்  மோடி அரசு தனது கொடுமைகளை அழிக்க முயற்சி செய்கிறது.
ஆனால் ஆவணங்களில் மட்டும் வரலாறு இல்லை. வர்க்கப் போராட்டத்தால் உருவாகும் வரலாற்றை உழைக்கும் மக்கள் மீட்டு வருவார்கள்.

thanks : http://www.vinavu.com/2014/07/11/modi-govt-destroys-historic-files/

புதன், 9 ஜூலை, 2014

காஸாவில் இஸ்ரேல் என்ன செய்ய முயல்கிறது?

காஸா மீதான தனது தாக்குதல்களை முழு பலஸ்தீனத்திற்கும் எதிரான தாக்குதல்களாக விஸ்தரிக்கப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அத்துடன் தங்களது தாக்குதல்கள் ஆனது மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லாமல் நீண்ட காலம் நீடிக்கும் தாக்குதலாக நிகழ்த்தப்படும் என்றும் அது அறிவித்துள்ளது. பலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நகரங்கள் மீது நடாத்தும் ரொக்கெட், மற்றும் மோட்டார் தாக்குதல்களிற்கு ஒரு நிரந்தர தீர்வினை காணாமல் ஓயப்போதவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேல் தாங்கள் செய்த தவறின் வலிகளை பலஸ்தீன பயங்கரவாதிகளும் அவர்களிற்கு ஆதரவளித்தவர்களும் பல தலைமுறைகளிற்கு உணரும் அளவிற்கு தாங்கள் தகுந்த பாடம் புகட்ட உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. இதனை அதனது பாதுகாப்பு அமைச்சர் Moshe Yaalon காட்டமான வார்த்தைகளின் ஊடாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினமான செவ்வாய்க்கிழமை (08-07-2014) வரை இஸ்ரேலிய ஸியோனிஸ்ட்களினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களின் காரணமாக 27 பலஸ்தீனர்கள் மரணமாகியுள்ளதாகவும், 137 பேர் கடுமையான காயங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் பலஸ்தீன தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய உளவு ஏஜென்சிகள் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் கட்டிடங்கள், வாகனங்கள், வீடுகள் போன்றவற்றை இஸ்ரேலிய விமானங்கள் தாக்கி வருகின்றன. ஒரு சிறிய பிரதேசத்தில் 01 மில்லியன் மக்கள் அடர்த்தியாக வாழும் காஸா மீதான தாக்குதல் என்பது அதிக உயிர்ச்சேதங்களை விளைவிக்க வல்லதாக உள்ளன.

தாங்கள் வான் தாக்குதல்கள் ஊடாக சில அடிப்படை சுத்திகரிப்புக்களை செய்துள்ளதாகவும், கடந்த செய்வாய்க்கிழமை வரை 180 இற்கும் அதிகமான சோட்டீஸ்களை (வான் பறப்பு தாக்குதல்களை) செய்து முடித்துள்ளதாகவும், இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை தாங்கள் அடைந்துள்ளதாகவும், இதன் பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் (IDF) பலஸ்தீன எல்லை நிலங்களை ஊடறுத்து தரை தாக்குதல்களை நிகழ்த்த உள்ளதாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட தாக்குதலிற்கு 40,000 இஸ்ரேலிய படையினர் பலஸ்தீன் நோக்கி நகர்த்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தாங்கள் 50 இற்கும் மேற்பட்ட பலஸ்தீன பயங்கரவாதிகளின் இலக்குகளை குறி வைத்துள்ளதாகவும், இவர்கள் மீது விமானங்கள் மட்டுமல்லாது கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள், ஆட்டிலறி எனும் நீண்ட தூர பீரங்கிகள் மூலமும் சமகாலத்தில் தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என்றும் இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இம்முறை தங்கள் முதன்மை இலக்காக இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் படையணியின் முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும், அவர்கள் எங்கும் செல்ல முடியாத படி ஹீயுமன் சீல் நிலையில் தங்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அழித்தொழிப்பதை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நிகழும் என்றும் தாங்கள் தங்கள் திட்டத்தை வெளிப்படையாக அறிவிப்பதாகவும் இம்முறை இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இஸ்ரேலிய அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 40,000 இஸ்ரேலிய ரிசேர்வ போர்ஸஸ் இதில் பங்கேற்க உள்ள நிலையில் சுமார் 1500 இஸ்ரேலின் சிறப்பு படையினர், IDF's special K-9 யுனிட், Sayeret Maglan யுனிட் 212, Yamam யுனிட் போன்ற தாக்குதல் அணிகளும் முன்னிலைகளை கடந்த நிலையில் பலஸ்தீனில் நுழைய முற்பட்டுள்ளன.

அல்-குதுஸ் பிரிக்கேட்டின் கொமாண்டர் Hafiz Hamad, பெய்த் ஹனூனில் நடைபெற்ற வான் தாக்குதல்களில் ஏலவே மரணித்துள்ளார். 2012-ல் இஸ்ரேலிய ஸியோனிஸ இராணுவம் இது போன்றே காஸாவில் உள்நுழைந்து 08 நாட்கள் சமரிட்டது. ஆனால் ஹமாஸ் போராளிகளின் அர்ப்பணம் நிறைந்த தாக்குதல்களை முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்வாங்கிச் சென்றனர். அப்போது முதலே அவர்கள் காஸா மீதான இன்னொரு இனவழிப்பு தாக்குதலை நிகழ்த்த அவாக்கொண்டிருந்தனர், பத்ரில் தோற்று உஹதை எதிர்பார்திருந்த குறைசிய காபிர்கள் போன்று.

2012-ல் நடைபெற்ற சண்டைகளில் இஸ்ரேலிய இராணுவத்தின் பெரிய பலமே அவர்களது அல்-மர்க்கபா யுத்த டாங்கிகளாகும். ஆனால் கஸ்ஸாம் போராளிகளின் தாக்குதல்களில் பல டாங்கிகள் சிதறடிக்கப்பட்டன. அவற்றின் இழப்புக்கள் ஆரம்பித்த மறு மணித்தியாலங்களிலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தங்கள் இலக்கை வெற்றிகரமாக செயற்படுத்தி முடித்து விட்டதாக கூறி பின்வாங்க ஆரம்பித்தனர். பலஸ்தீனம் மீதான இப்போதைய தாக்குதல்களில் இஸ்ரேலிய இராணுவம் சின்-பெட்டினால் வழங்கப்பட்டுள்ள துல்லியமான உளவுத்தகவல்களையும், ட்ரோன் விமானங்களையும் பெரிதும் நம்பியுள்ளது. “எமக்கு இழப்புக்கள் அற்ற எதிரிக்கு அதிகபட்டச இழப்புக்களை உருவாக்கும் ஒப்பரேசன் இது” என ஏலவே ஜெரூஸலம் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்ததனை நாம் இங்கு சுட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

நன்றி : கைபர் தளம்

செவ்வாய், 8 ஜூலை, 2014

காரைக்காலில் சங்பரிவார தீவிரவாதிகளின் ஆட்சியா ?





நேரு நகர் பள்ளிவாசல் கஞ்சி காய்ச்சும் பிரச்சனை
உண்மை நிலையும், விளக்கமும்
நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில நோன்பு கஞ்சி காய்ச்ச கடந்த 3.7.2014 அன்று காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகம் தடை விதித்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. ஏன் இந்த தடை ?
நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் நேரு நகர் பள்ளிவாசலுக்கு பக்கத்திலேயே உள்ளது, அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதர்க்காக அந்த பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனை அறிந்த ஹிந்து முன்னணி, RSS, BJP யினர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் முஸ்லிம்கள் இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்போகிறார்கள், மேலும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலமும் (சுடுகாடு) இங்கு அமைக்க போகிறார்கள் என்ற ஒரு தவறான செய்தியை பரப்பி, இதே விஷயத்தை அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்ச விட கூடாது என வலியுறுத்தி போராட்டமும் நடத்தினார்கள். காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகமும் முறையாக நேரு நகர் பள்ளிவாசல் நிர்வாகிகளிடத்தில் விசாரிக்காமல் அந்த இடத்தில் கஞ்சி காய்ச்ச கூடாது என கூறி ஏராளமான போலிசாரையும் அங்கு குவித்தனர், தகவல் அறிந்த தமுமுக மற்றும் ஒரு சில ஜமாஅத் இளைஞர்கள் அங்கு கூடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ஒன்றும் செய்ய முடியாத மாவட்ட நிர்வாகம் அரசு சமாதான கமிட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அந்த சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட நேரு நகர் ஜமாஅத் நிர்வாகிகள், தமுமுக மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் நோன்புக்காக கஞ்சி மட்டுமே காய்ச்சுகிறோம், சங்பரிவார் குறிப்பிடுவதுபோல் பள்ளிவாசலோ, முஸ்லிம்களின் அடக்கஸ்தலமோ (சுடுகாடு) அங்கு அமைக்க மாட்டோம் என தெரியப்படுத்திய பின் மாவட்ட ஆட்சியர் நீங்கள் கஞ்சி காய்ச்சி கொள்ளுங்கள், நான் சங்பரிவார் அமைப்புகளோடு பேசுகிறேன் என்று முஸ்லிம்கள் தரப்பில் கூறினார். பின்னர் சங்பரிவார் அமைப்புகளோடு பேசியபோது அவர்கள் விடாப்பிடியாக அங்கு கஞ்சி காய்ச்ச கூடாது, அந்த இடத்திற்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் மீண்டும் போராட்டம் நடத்தினர்.
அனைத்து உண்மை நிலைகளையும் தெரிந்திருந்தும் புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் சங்பரிவார்களின் பொய் கூற்றை ஏற்று முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சென்ற 3.7.2014 அன்று இரவு 9 மணிக்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முஸ்லிம்கள் கஞ்சி காய்ச்ச கூடாது என தடை விதித்து, பள்ளிவாசல் இடத்திற்கும் சீல் வைத்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டு உரிமைக்காக போராடி கொண்டிருந்த முஸ்லிம்களிடத்தில் காரைக்கால் நகர காவல்துறை ஆய்வாளர் பாலசந்தர், நகர துணை ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் நடந்து கொண்ட விதமும், முஸ்லிகளின் மத உணர்வுகளை கொச்சை படுத்தும் விதமாக பேசிய பேச்சும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த புதுச்சேரி N.R .காங்கிரஸ் அரசு முழுமையாக செயல்படுகிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில் ஒரு உண்மையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அமைதி நகரமான காரைக்காலில் அனைத்து மதத்தினரும் மிக நெருக்கமாக அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த ஒற்றுமையை குழைக்கும் விதமாக சங்பரிவார் அமைப்புகள் ஒரு தவறான தகவலை ஹிந்து மக்கள் மத்தியில் பரப்பி அதன் மூலம் காரைக்காலின் அமைதியை குழைக்க முயல்கின்றனர். அதற்கு இந்த அரசும் ஒத்து போகிறதோ சென்ற சந்தேகம் நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த ஜனநாயக நாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்திலேயே முஸ்லிம்கள் நோன்பு கஞ்சி கூட காய்ச்ச தடை என்றால், ஜமாஅத்களும், சமூக சிந்தனையாளர்களும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டாமா ? தமுமுக மற்றும் ஒரு சில ஜமாஅத் இளைஞர்கள் மட்டுமே உரிமைக்காக போராடும்போது ஜமாஅத்கள் ஒதுங்கியிருப்பது ஏன் ? அல்லாஹ்வுடைய பள்ளிக்கு ஆபத்து என்றால் போராடாமல் அரசியல் விளையாட்டு தேவையா? ஜமாஅத் பெரியவர்களே, இளைஞர்களே இப்படியே விட்டால் இன்று நேரு நகர் பள்ளிவாசல், நாளை ?
சிந்திப்போம்! அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்வோம். தகவல்
Abdul Rahim

காரைக்கால் அன்சாரி facebook பக்கத்தில் இருந்து

திங்கள், 7 ஜூலை, 2014

விபத்தில் சிக்கியவர்களுக்கு தனது காரைக் கொடுத்து விட்டு ஆட்டோவில் போன அமைச்சர்!

பெங்களூரு: கர்நாடகாவின் சுகாதாரத் துறை அமைச்சர் சாலை விபத்தில் மாட்டியவர்களை தன்னுடைய காரில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆட்டோவில் சென்ற சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 கர்நாடக மாநில சுகாதார துறை அமைச்சர் யு.டி. காதர். அவர் நேற்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, வயதான தம்பதியர் விபத்தில் சிக்கி பரிதவித்ததைப் பார்த்தார். உடனே அவர்களை தன்னுடைய காரின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, ஆட்டோ மூலம் தன்னுடைய பயணத்தை தொடர்ந்துள்ளார். விபத்தில் சிக்கியவர்களுக்கு தனது காரைக் கொடுத்து விட்டு ஆட்டோவில் போன அமைச்சர்! " அமைச்சர் தன்னுடைய தொழுகைக்காக சென்று கொண்டிருந்தார்.
ரம்ஜான் நேரம் என்பதால் அவர் நோன்பிலும் இருந்தார். அப்போதுதான் மெக்ரி சர்க்கிள் அருகில், ஆட்டோ ரிக்‌ஷாவில் விபத்துக்குள்ளான தம்தியினரைப் பார்த்துள்ளார். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தன்னுடைய கார் ஓட்டுநரின் மூலமாக கே.ஜி. மருத்துவமனை மல்லேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்பு காதர் அங்கிருந்து ஆட்டோ மூலமாக மசூதிக்கு சென்றுள்ளார். மேலும், தன்னுடைய நோன்பையும் தாமதமாக முடித்துள்ளார்.

source: http://tamil.oneindia.in/news/india/karnataka-minister-ut-haider-gives-his-car-accident-victims-takes-auto-205315.html

ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லி: முஸ்லிம்களின் ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தனிமனித உரிமைகளைப் பறிக்கும் ஃபத்வா உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் விஸ்வ லோசன் மாதன் என்ற வழக்கறிஞர் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள், நாட்டின் நீதித்துறைக்கு இணையானவையான செயல்படுகின்றன. இவை பிறப்பிக்கும் ஃபத்வா உத்தரவுகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம், தாருல் குவாஜா, தாருல் இஃப்தா போன்ற மத அமைப்புகளின் செயல்பாடுகளில் நீதிமன்றம் தலையிடாது; அதே நேரத்தில் ஷரியத் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஃபத்வா உத்தரவுகளை ஏற்பதும் ஏற்காததும் தனிநபர் விருப்பம் என்றும் கூறியிருந்தது.

மேலும் இந்த உத்தரவுகளை யார் மீதும் திணிக்க முடியாது. இதனால் தங்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதாக கருதினால் மாநில அரசுகள் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உதாரணமாக, தசரா பண்டிகையை குறிப்பிட்ட தேதியில் கொண்டாட வேண்டும் என்று இந்து மதகுருக்கள் கூறினால் தவறில்லை. அதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தினால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. "ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படியானவை அல்ல; அந்த நீதிமன்றங்களுக்கு எந்த ஒரு சட்ட அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. மக்களின் அடிப்படை உரிமையை பறிக்க எந்த ஒரு மதத்துக்கும் உரிமை இல்லை. அடிப்படை உரிமைகளை பறிக்கும் மத அடிப்படையிலான உத்தரவுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. தனிமனித உரிமைகளைப் பறிக்கும் மத அடிப்படையிலான உத்தரவுகள் சட்டவிரோதமானவை" என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

என் முன்பாகவே 2வது மனைவியுடன் உறவில் ஈடுபட்டதால் கொன்றேன்.. இந்து முன்னணி தலைவரின் மனைவி!



சங்கரன்கோவில்: விருதுநகர் மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. ஜீவராஜை அவரது முதல் மனைவியே அரிவாள் மனையால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து முதல் மனைவியான அய்யம்மாளை போலீஸார் கைது செய்துள்ளனர். சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் ஜீவராஜ் (37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை யாரோ சிலர் வந்து கொலை செய்து விட்டதாக முதலில் போலீஸார் கருதினர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜீவராஜுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பெயர் அய்யம்மாள். 2வது மனைவி பெயர் ஷர்மிளா. இவர்களிடம் விசாரித்தபோது அய்யம்மாள் மீது போலீஸாருக்குச் சந்தேகம் வந்தது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்தான் கொலை செய்தார் என்பது உறுதியானது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடம் அய்யம்மாள் கொடுத்த வாக்குமூலத்தில், எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினசரி குடித்து விட்டு என்னிடம் சண்டை பிடிப்பார். அவரைத் திருத்த முயன்றேன். முடியவில்லை. இதையடுத்து எனது பெற்றோர் வீட்டுக்குப் போய் விட்டேன். நான் போனதால் கோபமடைந்த அவர் ஷர்மிளா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரிடம் சண்டை பிடித்தேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக என் கண் முன்பாக அவர் ஷர்மிளாவுடன் உறவு கொண்டு என்னை சீண்டினார். இது எனக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜீவராஜைக் கொலை செய்யத் திட்மிட்டேன். சம்பவத்தன்று நான் வீட்டுக்கு வந்தபோது ஷர்மிளா அங்கு இல்லை. எனது கணவரும் நல்ல போதையில் இருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து ஜீவராஜின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு வீட்டுக்கு வெளியே உடலைப் போட்டு விட்டேன் என்றார்.
Source:- thatstamil.com


  இந்து முன்னணி இராம கோபாலன்  காமெடி

சமுதாய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய ஜீவராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு வேலை செய்கிறதா? என்ற சந்தேகத்தை இந்தக் கொலை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட கொடூர குற்றச் செயல்கள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்குச் செல்கிறதா? என்பதும் தெரியவில்லை.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த படுகொலைகளில் காவல்துறையின் நடவடிக்கை கவலை அளிக்கும் வகையிலேயே உள்ளது.
இதற்கு காவல் துறையும், அரசும் பதில் சொல்லாமல் இருக்கலாம், ஆனால், மக்கள் தங்களது எதிர்ப்பை உரிய நேரத்தில் பதிவு செய்வார்கள்.இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பது தெரிந்தும் காவல்துறை அலட்சியமாக நடந்து கொள்கிறது.
காவல்துறை மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டால் அது பேராபத்தாகிவிடும்.அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்பதற்காக குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்பவர்களிடம்கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட படுகொலைகள் நடந்தும்கூட நமது அரசியல்வாதிகள் வாய் மூடி மெளனியாக இருக்கிறார்கள்.
இனியும் இது தொடர்ந்தால் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே, தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என இராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
-தினமணி   

  இந்து முன்னணி, இராம. கோபாலனின் சமுக சேவை என்பது
  குடிப்பது முதல் மனைவி முன் இரண்டாம் மனைவியுடன் உறவில் ஈடுபட்டுவது தான்.