காவி தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவி தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன?



தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமன் கடந்த 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அதே தினத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் நல்லடக்கம் நடைபெற்றது.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் கலாமின் நல்லடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதைக் காண ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் யாகூப் மேமன் உடல் நல்லடக்கத்தின்போது ஊடகங் களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதற்கு ஊடகங்களும் கட்டுப் பட்டு செயல்பட்டன. இரு காரணங் களுக்காக ஊடகங்களும் யாகூப் மேமன் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டன.
முக்கியமாக அந்த இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொள்ளாமல் கட்டுப்படுத்தி வன்முறை ஏற்படாமல் தடுப்பதும் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவரின் மீது தேவையற்ற அனுதாபம் ஏற்படுவதை தடுப்பதுமே ஆகும். மும்பையில் உள்ள சில டி.வி. சேனல்கள் இதுபோன்ற மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்துவிட்டன. எனினும் அடுத்த நாளில் நாளிதழ்களில் வந்த புகைப்படங்கள், செய்திகள் மூலம் யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் தெரியவந்தது. யாகூப் மேமன் நமாஸில் 8 ஆயிரம் முஸ்லிம்கள் பங்கேற்றதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இவ்வளவு பேர் ஏன் வந்தார்கள் என்ற கேள்வி இப்போது முக்கியமாக எழுகிறது.
இதுபற்றி பாஜக மூத்த தலைவரும் திரிபுரா ஆளுநருமான தத்தகதா ராய் ட்விட்டரில் ஒரு கருத்து தெரித்தார். அதில் யாகூப் மேமனின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தவிர மற்றவர்களில் பெரும்பாலானோர் தீவிரவாதிகளாக இருப்பார்கள். எனவே இதில் உளவுத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இவ்வளவு பேர் யாகூப் இறுதிச் சடங்கில் குவிந்ததற்கு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் பரவிய தகவலும் முக்கிய காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவை தவிர யாகூப் தூக்கி லிடப்பட்டதை தொடர்புபடுத்தி வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய தகவல்கள் பரவியதாகவும், அது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. யாகூப் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் எவ்வித கோஷங்களும் எழுப்பக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்தனர். அதனால் பிரச்சினை ஏதும் இன்றி இறுதிச் சடங்கு முடிந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்படி இருக்கும்போது ஏன் இவ்வளவு போலீஸ் கெடுபிடி என்பது அடுத்து எழும் கேள்வி.
1993-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளியான யாகூப் இப்போது தூக்கிலிடப்பட்டுள்ளார். அதே ஆண்டு ஜனவரியில் மும்பையில் நடைபெற்ற கலவரத்தில் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும், 200-க் கும் மேற்பட்ட இந்துக்களும் உயிரிழந்துள்ளனர். அதற்கு ஒரு மாதம் முன்புதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
எனவே மும்பை தொடர் குண்டு வெடிப்பு என்பது வேறு பல்வேறு தொடர் சம்பவங்களுடன் தொடர்புள்ளது. இந்த சம்பவங் களில் இறந்தவர்கள் ஒருபுறம் என்றால் தொழிலை இழந்தவர்கள், காயமடைந்தவர்கள், பலாத் காரத்துக்கு உள்ளான பெண்கள், வாழ்ந்து வந்த இடத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள், வாழ் வாதாரத்தை இழந்தவர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இது தான் குண்டுவெடிப்புகளுக்கு பின்னணி.
யாகூப் தூக்குக்கு முன்பாகவும் பல சர்ச்சைகள் எழுந்தன. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவரை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டுமென்று டி.வி. சேனல்களில் பல விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனிடையே, இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவர்களில் 94 சதவீதம் பேர் முஸ்லிம் மற்றும் தலித்துகள் என்று தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரத்தை தந்தது ஒரு பத்திரிகை. இது தாம் பின்பற்றும் மதம் காரணமாகவே தாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என முஸ்லிம்கள் மனதில் உள்ள கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
பாஜக சார்ந்த மாயா கோத்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியோர் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர் என்றும் ஒருசாரார் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் தீவிரவாதம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகளுக்கு வாசகர்கள்தரும் விமர்சனத்தை படிக்கும்போது. பல இடங்களில் முஸ்லிம்கள் என்றால் நம்பத்தக்கவர்கள் அல்ல என்ற கருத்தே உள்ளது. இதனால் முஸ்லிம்களுக்கு வேலை தேடுவதில் இருந்து வீடு கிடைப்பது வரை பிரச்சினை ஏற்படுகிறது.இதுதான் இந்தியாவில் முஸ்லிம்களாக உள்ளவர்களின் உண்மை நிலை.
யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் கூடியவர்கள் அனைவரும் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்பதாலோ அல்லது, வன்முறையில் ஈடுபடவோ வரவில்லை. தாங்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அனுதாபம் தெரிவிக்க வந்தவர்கள்.

thaks : 
http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article7489835.ece?homepage=true

வியாழன், 30 ஜூலை, 2015

டைகர்கள் உலகில் யாகூப்கள் பலிகடாக்கள்




யாகூப் மேமன் தனது கர்ப்பிணி மனைவி ராஹினைக் கராச்சியில் விட்டுவிட்டு காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 1994-ல் சரணடைந்தார். ராஹினுக்கு துபாயில் குழந்தை பிறந்தது. தானும் குழந்தையும் யாகூபுடன் மறுபடியும் சேர்ந்து புதுடெல்லியில் புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.


“நான் மனசாட்சி உள்ள மனிதன். டைகரின் தவறான செயல்களிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ள விரும்பினேன்” என்றார் யாகூப் மேமன். அது 1998-ல் நடந்தது. அப்போது நான் மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ‘பிளாக் ஃபிரைடே’ என்ற எனது புத்தகத்துக்காக ஆய்வு மேற்கொண்டிருந்தேன். யாகூபைச் சந்தித்தபோது, தனது கதையைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஆனால், விசாரணை முடிவதற்கு முன் அந்தக் கதையை நான் எழுதப்போய், அதனால் இந்த வழக்குக்கு ஏதாவது குந்தகம் ஏற்படுமோ என்று அவர் பயந்தார். அவ்வப்போது தெளிவற்ற சில தகவல்களை உதிர்ப்பார். அவற்றை நான் பின்தொடர்ந்து சென்றால், மிகவும் முக்கியமான தகவல்களாக அவை இருக்கும்.
புத்திசாலித்தனமான, மனசாட்சியுள்ள மனிதர் யாகூப். சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்டாக இருந்திருக்கிறார். இந்து மதத்தவரான தனது பங்குதாரர் சேத்தன் மேத்தாவுடன் இணைந்து வெற்றிகரமான நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். சிபிஐ-க்கு யாகூப் அளித்த வாக்குமூலத்தின்படி, மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றி அவர் முதன்முதலில் கேள்விப்பட்டது, துபாயில் இருந்தபோது 1993 மார்ச் 13 அன்று மாலை 4 மணிக்கு பிபிசி செய்திகள் மூலமாகத்தான்.
பாகிஸ்தானில் சிறைவைப்பு
துபாயில் இருந்த ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் குண்டுவெடிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ந்துபோனார்கள். டைகர் மேமன் மட்டும் விதிவிலக்கு. அவர் அந்தக் குண்டுவெடிப்புகளைக் கொண்டாட விரும்பினார். துபாய் அரசு அந்தக் குடும்பத்தினரை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. அங்கே அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை டைகர் செய்திருந்தார். கராச்சியில் வெவ்வேறு மாளிகைகள், ராணுவக் குடியிருப்புகள் என்று அவர்கள் மாற்றப்பட்டுக்கொண்டேயிருந்தார்கள். எனினும், டைகர் மேமனையும் அயூப் மேமனையும் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பத்தினருக்கும் இப்படிச் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்துத் துளியும் விருப்பமில்லை. அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கு ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.
யாகூப் ஒன்றும் துணிச்சல் மிக்கவர் அல்ல. ஆனால், ஒரு நொடியில் ஏற்படும் துணிவுதான், துணிச்சலான நபரையும் கோழையையும் வேறுபடுத்துகிறது. தனது கொடிய சகோதரனையும் ஐஎஸ்ஐயையும் மீறிக்கொண்டு, எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்தியா திரும்புவதென்ற முடிவை அவர் தீர்க்கமாக எடுத்தார். மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐஎஸ்ஐயின் முக்கியப் புள்ளியான தௌஃபிக் ஜாலியாவாலாவுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தார். ரகசிய இடங்களை வீடியோ எடுத்துக்கொண்டார்; புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்; உரையாடல்களையெல்லாம் பதிவு செய்துகொண்டார். பிறகு, போலி பாஸ்போர்ட்டுகள், பாகிஸ்தான் அரசு வழங்கியிருந்த வெவ்வேறு அடையாள அட்டைகள் போன்ற ஆவண ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டார்.
தனது பயணப்பெட்டி முழுவதும் ஆதாரங்கள் நிரம்பியதும், காராச்சி-காத்மாண்டு-துபாய்-காத்மாண்டு-கராச்சி என்று சுற்றுவழி பயணச்சீட்டை லூஃப்தான்ஸா விமானத்தில் எடுத்துக்கொண்டார். அவர் திரும்பிவருவார் என்ற உறுதியில் ஐஎஸ்ஐ ஆட்கள் அவரது பயணத்துக்கு முட்டுக்கட்டை போட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படி ஒரு ஏற்பாடு. இந்தியாவுக்கு நேரடியாகப் போக முடியாதென்பது யாகூபுக்குத் தெரியும். பாகிஸ்தான் அதிகாரிகளும் துபாய் அதிகாரிகளும் கூட்டாளிகள் என்பதால், துபாயில் சரணடைவது என்பது மிகவும் ஆபத்தாக முடிந்துவிடும். நேபாளம் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு என்று அவர் நினைத்ததால் காத்மாண்டுவைத் தேர்ந்தெடுத்தார். நம்பகத்தன்மை கொண்ட ஒரு தவறை அவர் வேண்டுமென்றே செய்ய நினைத்தார்.
பாதுகாப்புப் பரிசோதனையின்போது யாகூப் தனது பெட்டியைத் திறப்பதற்காக வேண்டுமென்றே தடுமாறியபோது, நிறைய பாஸ்போர்ட்டுகள் பெட்டியிலிருந்து சிதறிக் கீழே விழுந்தன. அதிகாரிகள் பிடித்தார்கள். யூசுஃப் அஹமத் என்ற பெயரில் சென்றிருந்த அவர் தனது உண்மையான பெயர் யாகூப் மேமன் என்ற உண்மையை, தான் பிடிபட்ட உடனேயே வெளிப்படுத்தினார். ரகசிய ஏற்பாட்டின்படி 48 மணி நேரத்துக்குள் அவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். சிபிஐ தரப்பு கூறும் விளக்கம் சற்றே மாறுபடுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் யாகூபின் பெட்டியில் துப்பாக்கி போன்ற ஏதோ ஒன்றைக் கண்டதாகவும் அதனால் பெட்டியைத் திறந்துகாட்ட அவர்கள் கேட்டதாகவும் அப்போதுதான் பாஸ்போர்ட்டுகள் சிதறி விழுந்தன என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட பிறகு, நேபாள எல்லைக்கு அருகே யாகூப் விடப்பட்டார். தனி விமானம் ஒன்றில் அங்கிருந்து புதுடெல்லி அழைத்துவரப்பட்டார். புதுடெல்லி ரயில் நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் ஏதும் தன் வாழ்க்கையில் நிகழவேயில்லை என்று தான் எழுதிய கடிதமொன்றில் யாகூப் தெரிவிக்கிறார்.
வெகு விரைவில் யாகூப் எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டார். சில வாரங்களுக்குள், யாகூப் மேமனின் உதவியோடு, மேமன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரச்செய்தது சிபிஐ. யாகூப் கைதுசெய்யப்பட்டதும் மேமன் குடும்பத்தினரின் மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் அவர்களுடைய முந்தைய திட்டத்தின்படி இந்தியாவுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையில் துபாய்க்குச் சென்றிருந்தனர்.
பரபரப்பான ஒரு நடவடிக்கையின் மூலம் மேமன் குடும்பத்தினரை ஐஎஸ்ஐயின் கண்காணிப்பிலிருந்து சிபிஐ அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். பின்தொடரும் ஐஎஸ்ஐ ஆட்களை ஏமாற்றிவிட்டு, மேமன் குடும்பத்தினரில் எட்டுப் பேரை இந்தியாவுக்கு சிபிஐ அழைத்துவந்தது. எட்டு பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளில் சில நிமிடங்களுக்குள், அதுவும் விண்ணப்பதாரர்களைச் சந்திக்காமலேயே, இந்திய விசாக்களுக்கான முத்திரை இடப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுதான் ஒற்றை நிகழ்வாக இருக்கலாம். டைகர், அயூப், அவர்களின் மனைவியர் ஆகியோர் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் திரும்பிவந்துவிட்டார்கள். ஒரு மாதக் குழந்தை ஜுபைதாவைக் கைகளில் ஏந்திய ராஹினும் சில நாட்களுக்குப் பிறகு அவர்களோடு சேர்ந்துகொண்டார்.
மன்னிப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையில்
ஒட்டுமொத்த நடவடிக்கையும் சாத்தியமானது ஒரே ஒரு மனிதரின் அசாத்தியமான துணிவாலும் உறுதியாலும்தான்: அவர்தான் யாகூப் மேமன். கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத இந்தப் பணியை நிறைவேற்றியதற்குப் பரிசாகத் தண்டனைக் குறைப்பும் மன்னிப்பும் கிடைக்கும் என்று யாகூப் எதிர்பார்த்தார். ஆனால், அரசு அவர் மீது தாக்குதல் நிகழ்த்த ஆரம்பித்தது. சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ‘என்கவுன்ட்டர்’ செய்யப்போகிறோம் என்று சொல்லி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கும்கூட ஒரு முறை அழைத்துப்போயிருக்கிறார்கள். ஆனால், தொலைக்காட்சியிலும், ஆரம்பத்தில் தன்னைக் கையாண்ட சிபிஐ அதிகாரிகளிடமும் சொல்லியவற்றைத் தவிர, சொல்வதற்கு யாகூபிடம் வேறு எதுவும் இல்லை.
தண்டனை நிறுத்திவைக்கப்படும் என்று அவர் எதிர்நோக்கிக்கொண்டிருந்தார். வாரங்கள் மாதங்களாகின, மாதங்கள் ஆண்டுகளாகின, ஆண்டுகள் தசாப்தங்களாகின. இப்போது அவர் தூக்கு மேடையில் நிற்கிறார். ஒட்டுமொத்த விசாரணையிலும் பெரிய இழப்பு யாகூபுக்கு என்பதுதான் இதில் முரண்பாடான விஷயம். இந்திய விசாரணை முகமைகளுக்கு ஏராளமான ஆதாரங்களை அவர் கொடுத்து உதவியிருக்கிறார். அதனாலேயே, இந்தத் திட்டத்தின் மூளை என்று கடைசியில் ஆக்கப்பட்டிருக்கிறார். ஒருமுறை டைகர் மேமனும் யாகூப் மேமனும் அனல்பறக்க விவாதித்தபோது, டைகர் மேமன் யாகூபிடம் சொல்லியிருக்கிறார், “காந்தியவாதியாக இந்தியாவுக்கு நீ போகிறாய், ஆனால் கோட்சேவாக நீ இந்தியாவில் தூக்கிலிடப் படுவாய்”. இதற்கு யாகூப் மேனன் இப்படிப் பதிலடி கொடுத்தார், “நீ சொன்னது தவறு என்பதைக் கடைசியில் நான் நிரூபிப்பேன்.”
இந்த உலகில் டைகர் மேமன்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுவதும் யாகூப்களெல்லாம் தூக்கு மேடைக்கு அனுப்பப்படுவதும்தான் பெரும் துயரம்!
- எஸ். ஹுஸைன் ஜைதி, புலனாய்வுப் பத்திரிகையாளர், மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றிய ‘பிளாக் ஃபிரைடே’ புத்தகத்தின் ஆசிரியர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்),
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

thanks : http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7480529.ece?homepage=true

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

இந்து சகோதரர்களே எச்சரிக்கை ! எச்சரிக்கை ! !



இந்து சகோதரர்களே எச்சரிக்கை ! எச்சரிக்கை ! !
****************
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்க்காக இந்துக்களின் வீடுகளை எரித்த பா ஜ க தலைவர் கைது செய்யப்பட்டார்.
****************** 
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்க்காக இந்துக்களின் வீடுகளை பா ஜ க தலைவர் ஒருவரே எரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து
அந்த பா ஜ க தலைவர் உட்பட 36 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
குஜராத் மாநிலம் பரோடா நகர பாரதிய ஜனதா தலைவராக இருப்பவர் மனிஷ் வாக், இவர் கடந்த சில நாட்களாக இங்கு வசிக்கும் முஸ்லிம் மக்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் கலவரம் ஏற்ப்பட்டது இதையொட்டி சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரோடா நகரில் நவபுரா பகுதியில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த சிலருடைய வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது..
இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி மனிஷ் வாக் உள்பட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 36 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்து மக்கள் வீடு எரிக்கப்பட்ட வழக்கில் பாரதீய ஜனதா தலைவர் கைது செய்யப்பட்டது சில சந்தேகங்களை ஏற்ப்படுத்தி உள்ளது கலவரத்தை பெரித்தாக்க இவரே இந்து மக்களின் வீடுகளுக்கு தீ வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிரார்கள்.
செய்தி : தீக்கதிர் (05-10-14)
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ,தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை குறிவைத்து பேசி உள்ளநிலையில் இந்துக்களும்- முஸ்லிம்களும் இங்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
சங்கபரிவார சதிகாரர்கள் அரசியல் அதிகாரத்தை அடைய எதையும் செய்வார்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான வெகு மக்கள் ஊடகங்கள் இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டி கொள்ளாது.
நமது மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாக்க,
நாம் எச்சரிக்கையாக இருப்போம்!
நமது நாட்டை காப்போம் !!
ஜெய் ஹிந்த் !

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஹிந்துத்துவ வெறியர்களின் மதவெறி

ஒரு முஸ்லிம் கசாப்புகடைகாறரை மாட்டின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவைத்த ராஜஸ்தான் ஹிந்துத்துவ வெறியர்கள்.

திங்கள், 14 ஜூலை, 2014

கொலைகாரனுக்குப் பாதுகாப்பு ! நீதி கேட்டால் பொய்வழக்கு ! !

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நடந்த இந்துவெறி பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமை ஆர்வலரான தீஸ்தா சேதல்வாதைப் பழிவாங்க அவர்மீது பொய்வழக்கு போட்டு, அவரைக் கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது குஜராத் அரசு.
தீஸ்தா சேதல்வாத்
குஜராத் அரசால் பொய்வழக்கு போடப்பட்டு பழிவாங்கப்படும் தீஸ்தா சேதல்வாத் (கோப்புப் படம்).
குஜராத்தில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்குச் சட்ட உதவிகள் செய்வதை நோக்கமாகக் கொண்டு “நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு” என்ற தன்னார்வ அறக்கட்டளையை தீஸ்தாவும் அவரது கணவர் ஜாவீத் ஆனந்த் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, மும்பை இந்துவெறி பயங்கரவாதத்துக்குப் பின்னர் “சப்ரங்” என்ற தன்னார்வ அமைப்பை 1993-ல் இவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
குஜராத் படுகொலையின்போது, குல்பர்க் சொசைட்டி எனும் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் கொடூரமான முறையில் 69 பேரைக் கொன்று இந்துவெறியர்கள் நடத்திய பாசிச வெறியாட்டத்தின் வரலாற்று சாட்சியமாக அந்த இடத்தையே ஒரு நினைவகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். குல்பர்க் நினைவகத்துக்காக இவர்கள் திரட்டிய தொகை ரூ 4.5 இலட்சத்தில் ரூ 50 ஆயிரம் மட்டுமே வெளிநாடுகளிலுள்ள தீஸ்தாவின் நண்பர்கள் வழங்கிய நன்கொடை. இதற்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும், குல்பர்க் குடியிருப்பைச் சேர்ந்த சிலரை மிரட்டி, தீஸ்தாவுக்கெதிராக நிதி மோசடிக் குற்றம் சாட்டி பொய்ப்புகார் ஒன்றை எழுதி வாங்கியிருக்கிறது குஜராத் போலீசு. பொய்வழக்குப் போட்டு சிறை வைக்க முயன்றது. அவர்களது வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருக்கிறது. எனினும், உயர்நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி யிருக்கிறது.
குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் மோடி உள்ளிட்டு குஜராத் அரசின் உயரதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதை தீஸ்தாவும் குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரசு எம்.பி.யான இஷான் ஜாப்ரியின் துணைவியார் ஜாகியா ஜாப்ரியும் உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டில் ஆதாரங்களுடன் அறிக்கையாகச் சமர்ப்பித்தனர். இந்த வழக்கின் கடைசி முனை மோடியை நெருங்கியதால், அன்று முதலே தீஸ்தாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடங்கி விட்டன. இந்த அறிக்கையைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது. மோடியின் நேரடிப் பார்வையில்தான் குஜராத் இனப்படுகொலை நடத்தப்பட்டது என்பதைச் சட்ட ரீதியாகவே நிலைநாட்டுவதற்கு வலுவான சாட்சியங்கள் இருந்தபோதிலும், சிறப்புப் புலனாய்வுக் குழு படுகொலைக்கு அவரைப் பொறுப்பாக்குவதற்கான சாட்சியங்கள் இல்லை எனக்கூறி 2012-ல் மோடியை விடுவித்தது.
இதனை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்யுமாறு மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரனை நியமித்தது உச்ச நீதிமன்றம். சிறப்புப் புலனாய்வுக் குழு திரட்டியுள்ள சாட்சியங்களின்படியே மோடியின் மீது குற்றம் சாட்ட முடியும் என்று அவரது அறிக்கை கூறியது. மோடியைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பதா என்பதை முடிவு செய்து கொள்ளுமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். விசாரணை நீதிமன்றம் மோடியைக் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கவில்லை. விசாரணை நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறார் ஜாகியா ஜாப்ரி.
கார்ப்பரேட் முதலாளிகளின் அதிகார பலம், பண பலம், சட்ட வல்லுநர்கள் படை, அரசு அதிகாரம் ஆகிய அனைத்து வலிமைகளும் பொருந்திய ஒரு பாசிஸ்டுக்கு எதிராக, நீதிமன்றத்தில் இத்தகைய விடாப்படியானதொரு சட்டப்போராட்டம் நடத்துவதென்பது சாதாரண விசயமல்ல. தன் உயிரைப் பணயம் வைத்துத்தான் இத்தகைய நடவடிக்கையில் யாரும் இறங்க முடியும்.
இதுவரை 5 பொய் வழக்குகள் தீஸ்தாவின் மீது போடப்பட்டிருக்கின்றன. பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜாகிரா ஷேக் என்ற பெண்ணை மிரட்டியும் பணம் கொடுத்தும் தீஸ்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்க வைத்தது பாரதிய ஜனதா கும்பல். அதனையெல்லாம் சட்டரீதியாக முறியடித்தது மட்டுமல்ல, இந்து பாசிசம் கோலோச்சும் அந்த மாநிலத்தில், தம் குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்தவர்களான சாட்சிகளுக்குத் தைரியம் கொடுத்து, அவர்களைச் சாட்சி சொல்ல வைத்து குற்றவாளிகளுக்கு எதிராகத் தீர்ப்பும் பெற்றிருக்கிறார் தீஸ்தா.
ரதயாத்திரை, மும்பை படுகொலை உள்ளிட்டு நாடு முழுவதும் நடந்துள்ள நூற்றுக்கணக்கான முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் எதிலும் இதுநாள்வரை இந்து வெறியர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதில்லை. குஜராத்தில் இதுவரை 117 இந்துவெறியர்கள் குற்றவாளிகள் என்று நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளதிலும், நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் மோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் உழைப்பும் பங்கும் முக்கியமானவை.
தீஸ்தா, ஜாகியா ஜாப்ரி மற்றும் பிற மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தை ஆதரித்து தோள்கொடுப்பதன் மூலம்தான், இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகப் போராடுவதற்கான உந்துதலையும் துணிவையும் அனைவருக்கும் ஏற்படுத்த முடியும்.
- கதிர்

http://www.vinavu.com/2014/07/14/false-cases-foisted-on-teesta-setalvad/

செவ்வாய், 8 ஜூலை, 2014

காரைக்காலில் சங்பரிவார தீவிரவாதிகளின் ஆட்சியா ?





நேரு நகர் பள்ளிவாசல் கஞ்சி காய்ச்சும் பிரச்சனை
உண்மை நிலையும், விளக்கமும்
நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில நோன்பு கஞ்சி காய்ச்ச கடந்த 3.7.2014 அன்று காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகம் தடை விதித்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. ஏன் இந்த தடை ?
நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் நேரு நகர் பள்ளிவாசலுக்கு பக்கத்திலேயே உள்ளது, அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதர்க்காக அந்த பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனை அறிந்த ஹிந்து முன்னணி, RSS, BJP யினர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் முஸ்லிம்கள் இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்போகிறார்கள், மேலும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலமும் (சுடுகாடு) இங்கு அமைக்க போகிறார்கள் என்ற ஒரு தவறான செய்தியை பரப்பி, இதே விஷயத்தை அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்ச விட கூடாது என வலியுறுத்தி போராட்டமும் நடத்தினார்கள். காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகமும் முறையாக நேரு நகர் பள்ளிவாசல் நிர்வாகிகளிடத்தில் விசாரிக்காமல் அந்த இடத்தில் கஞ்சி காய்ச்ச கூடாது என கூறி ஏராளமான போலிசாரையும் அங்கு குவித்தனர், தகவல் அறிந்த தமுமுக மற்றும் ஒரு சில ஜமாஅத் இளைஞர்கள் அங்கு கூடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ஒன்றும் செய்ய முடியாத மாவட்ட நிர்வாகம் அரசு சமாதான கமிட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அந்த சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட நேரு நகர் ஜமாஅத் நிர்வாகிகள், தமுமுக மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் நோன்புக்காக கஞ்சி மட்டுமே காய்ச்சுகிறோம், சங்பரிவார் குறிப்பிடுவதுபோல் பள்ளிவாசலோ, முஸ்லிம்களின் அடக்கஸ்தலமோ (சுடுகாடு) அங்கு அமைக்க மாட்டோம் என தெரியப்படுத்திய பின் மாவட்ட ஆட்சியர் நீங்கள் கஞ்சி காய்ச்சி கொள்ளுங்கள், நான் சங்பரிவார் அமைப்புகளோடு பேசுகிறேன் என்று முஸ்லிம்கள் தரப்பில் கூறினார். பின்னர் சங்பரிவார் அமைப்புகளோடு பேசியபோது அவர்கள் விடாப்பிடியாக அங்கு கஞ்சி காய்ச்ச கூடாது, அந்த இடத்திற்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் மீண்டும் போராட்டம் நடத்தினர்.
அனைத்து உண்மை நிலைகளையும் தெரிந்திருந்தும் புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் சங்பரிவார்களின் பொய் கூற்றை ஏற்று முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சென்ற 3.7.2014 அன்று இரவு 9 மணிக்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முஸ்லிம்கள் கஞ்சி காய்ச்ச கூடாது என தடை விதித்து, பள்ளிவாசல் இடத்திற்கும் சீல் வைத்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டு உரிமைக்காக போராடி கொண்டிருந்த முஸ்லிம்களிடத்தில் காரைக்கால் நகர காவல்துறை ஆய்வாளர் பாலசந்தர், நகர துணை ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் நடந்து கொண்ட விதமும், முஸ்லிகளின் மத உணர்வுகளை கொச்சை படுத்தும் விதமாக பேசிய பேச்சும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த புதுச்சேரி N.R .காங்கிரஸ் அரசு முழுமையாக செயல்படுகிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில் ஒரு உண்மையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அமைதி நகரமான காரைக்காலில் அனைத்து மதத்தினரும் மிக நெருக்கமாக அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த ஒற்றுமையை குழைக்கும் விதமாக சங்பரிவார் அமைப்புகள் ஒரு தவறான தகவலை ஹிந்து மக்கள் மத்தியில் பரப்பி அதன் மூலம் காரைக்காலின் அமைதியை குழைக்க முயல்கின்றனர். அதற்கு இந்த அரசும் ஒத்து போகிறதோ சென்ற சந்தேகம் நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த ஜனநாயக நாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்திலேயே முஸ்லிம்கள் நோன்பு கஞ்சி கூட காய்ச்ச தடை என்றால், ஜமாஅத்களும், சமூக சிந்தனையாளர்களும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டாமா ? தமுமுக மற்றும் ஒரு சில ஜமாஅத் இளைஞர்கள் மட்டுமே உரிமைக்காக போராடும்போது ஜமாஅத்கள் ஒதுங்கியிருப்பது ஏன் ? அல்லாஹ்வுடைய பள்ளிக்கு ஆபத்து என்றால் போராடாமல் அரசியல் விளையாட்டு தேவையா? ஜமாஅத் பெரியவர்களே, இளைஞர்களே இப்படியே விட்டால் இன்று நேரு நகர் பள்ளிவாசல், நாளை ?
சிந்திப்போம்! அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்வோம். தகவல்
Abdul Rahim

காரைக்கால் அன்சாரி facebook பக்கத்தில் இருந்து

திங்கள், 9 ஜூன், 2014

புனே கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது


கடந்த வாரம் புனேயில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லிம் இளைஞர் முஃஸின் ஷேக் 30 க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பலால் அடித்தே படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் இன்னும் 2 முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீக்கீரையாக்கப்பட்டது. காலையில் தொடங்கிய இந்த வன்முறை மறுநாள் நள்ளிரவு வரை தொடர்ந்தது.
தற்போது அந்த கலவரத்தை ஆராய்ந்த குழு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது, அதில் சம்பவம் நடந்த மே 31 மற்றும் ஜூன் 1 ம் தேதிகளில் குறிப்பிட்ட சில பேக்கரி மற்றும் முடி திருத்தும் கடைகள் சரியாக கலவரம் நடக்கும் நேரத்தில் மூடி இருந்தது, அவர்களுக்கு எப்படி தெரியும் அது மட்டுமல்லாது மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் அந்த கடைகளின் பெயர்கள் உள்ளன, அதன் உரிமையாளர்கள் முஸ்லிம்கள் இல்லை.
ஆனால் தாக்குதலுக்கு உள்ளான அனைத்து கடைகளும் உருது மொழியில் எழுதப்பட்ட முஸ்லிம்கள் கடைகளாகும், ஆகவே, முன் கூட்டியே இந்துக்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து தாக்கியதாக, திட்டமிட்ட செயலாகவே உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது
Sources:- 

http://timesofindia.indiatimes.com/india/Violence-that-killed-Pune-techie-planned/articleshow/36268460.cms

http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31805&articlexml=Violence-against-Pune-Muslims-appears-planned-09062014007028

வெள்ளி, 6 ஜூன், 2014

திட்டமிடப்பட்ட வன்முறை இசுலாமியர்கள் மீது நடத்தப்படுகிறது.




பூனா நகரில் 24 வயது இசுலாமிய பணியாளர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இவர் கொலை செய்யப்பட்ட செய்தியை இந்து ராஸ்ட்ர சேனா என்கிற அமைப்பினர் “ முதல் விக்கெட் விழுந்திருக்கிறது” என்று குறுஞ்செய்தியை பகிர்ந்திருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட மோசினின் தந்தை,” கொலை செய்யப்பட்ட தினத்தின் மதியத்தில் கூட அவனிடம் பேசினேன். எங்களுக்கு மதக்கலவரம் பற்றிய அச்சம் இல்லை. ஏனெனில் பூனா பாதுகாப்பானது என்றே நாங்கள் நம்பினோம். அவன் ஒருவன் மட்டுமே எங்கள் குடும்பத்தினருக்கான வருமானத்தினை ஈட்டுபவன்” என்று சொல்லுகிறார். முகநூலில் ஏற்றப்பட்ட படங்களுக்கு எந்தவகையிலும் சம்பந்தப்படாத மோசின் கொலை செய்யப்பட்டது , மதவெறியின் உக்கிரத்தினை காட்டுகிறது.

பூனாவில் 500க்கும் அதிகமானோர் இசுலாமிய வீடுகளை தாக்கி அழித்திருக்கிறார்கள். பல வணிக கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளது. பல மசூதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இசுலாமிய மத குருமார் மீதும், மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தபட்டிருக்கிறது. இசுலாமியருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கு எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. 20க்கும் மேற்பட்ட பேக்கரிகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகமான அழிவுகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இசுலாமியர் குடியிருப்புப் பகுதியில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்கி இருக்கிறார்கள். இப்படியாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதைப்பற்றிய பெரிய விவரங்களை, விவாதங்களை ஊடகங்களில் காணமுடிவதில்லை. மோடியின் வெற்றியின் கொண்டாட்ட மனநிலையை கலைத்துவிட விருப்பமில்லாமல் ஊடகங்கள் செயல்படுகின்றனவோ என அய்யம் எழுகிறது.

பூனே நகரில் இசுலாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் திட்டமிட்ட வன்முறையை கண்டிப்போம். மனிதநேயமற்ற மதவெறிபிடித்த அரசியல் உடனடியாக எதிர்க்கப்படவேண்டியது. அப்பாவிகளை பலியிட்டு வளர்த்தப்படும் மதவெறி அரசியல் தடுத்து நிறுத்த ஒன்றாக குரல் கொடுப்போம்.

எக்காலத்திலும், மதவெறி மனிதர்களை வேட்டையாட அனுமதிக்கக் கூடாது.

http://caravandaily.com/portal/muslim-homes-mosques-madrassas-vandalized-in-pune-by-hindu-radicals/

(via) Thirumurugan Gandhi

நன்றி: https://www.facebook.com/palani.periaswamy


வியாழன், 5 ஜூன், 2014

மகாராஷ்டிரா புனேவில் ஓர் அப்பாவி இளம் முஸ்லிம் பொறியாளர் ஹிந்து ராஷ்டிர சேனா தீவிரவாதிகளால் அடித்தே கொலை

நிகில் திகோன் எனும் சமூக விரோதி, '#நிஹால்_கான்' என்ற போலி முகநூல் ஐடியில், முஸ்லிம் போல தம்மை காட்டிக்கொண்டு...

(ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் படி) மும்பை கலவர கொலைகார ரவுடி பால் தாக்கரே பற்றியும் போர்-ஒப்பந்த விதிமுறை மீறல் செய்து நயவஞ்சகமாக அப்சல் கானை கொலை செய்த மராட்டிய கோழை சிவாஜி பற்றியும் மற்றும் சில இந்து கடவுள்கள் பற்றியும் படம் போட்டதால்...

மகாராஷ்டிரா புனே வில் வன்முறை கலவரம் எல்லாம் நடந்து அதில் எவ்வித தொடபும் இல்லாத முஹ்ஸின் ஸாதிக் சேக் என்ற ஓர் அப்பாவி இளம் முஸ்லிம் பொறியாளர் ஹிந்து ராஷ்டிர சேனா தீவிரவாதிகளால் அடித்தே கொலை செய்யப்பட்டார். இன்னாலில்லாஹி...

அந்த மாதிரி தப்பான போட்டோக்கள் உருவாக்கி முகநூல் & வாட்ஸ்அப்பில் புனைப்பெயரில் போட்ட அந்த ஆள் மாறாட்ட நய வஞ்சகன் நிகில் திகோன் கைது செய்யப்பட்டு விட்டான்.

தொழுது விட்டு தொப்பியுடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த தாடி வைத்திருந்த ஓர் இளம் பொறியாளரை கலவரம் நிகழ்த்தி கொலை செய்த 13 ஹிந்து ராஷ்டிர சேனா தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

இதுபோன்ற மதக்கலவரம் நிகழ்த்தி கொலை செய்வோருக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்காமல் அதில் ஈடுபடுவோர் மீது மிகக்கடுமையான தண்டனை தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவே எனக்கு கூசுகிறது..!


போட்டோ : நிகில் திகோன் & முஹ்ஸின் ஸாதிக் சேக்
நன்றி:
https://www.facebook.com/photo.php?fbid=703680953000559&set=a.217678638267462.52731.100000759817071&type=1&theater 

புதன், 4 ஜூன், 2014

வேலூரில் பதற்றம்! பள்ளிவாசலுக்குள் புகுந்து முஸ்லிம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

 
 
வேலூர் மாவட்டம் கே.கே.நகர்பகுதியில் உள்ள ஆர்.என்.பாளையம் மஸ்ஜிதே சுபானியா “03-06-2014 இன்று மாலை மக்ரீஃப் தொழுகைக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பி.ஜே.பி.பாசிச சக்திகள் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தீடீரென பள்ளிவாசலுக்குள் புகுந்து சராமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்


இந்த திடீர் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல் மோதினார் பலத்த காயம் அடைந்து மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார் .

பள்ளிவாசல் மற்றும் பள்ளிவாசல் பக்கத்தில் உள்ள வீடுகள் என பயங்கரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். முஸ்லீம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்தவுடன் தாங்கள் வந்த
பைக்கை விட்டுவிட்டு வன்முறையாளர்கள் தப்பி ஓடினர் ..

கயவர்கள் வந்த பைக்கை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர் (அந்த பைக்கை மேலே உள்ள புகைப்படத்தில் நீங்கள் காணலாம்). காவல்துறைக்கு தகவல் கொடுத்தபின் வந்த போலிசார் ஓன்று கூடியிருந்த மக்களை விரட்டி அடித்தனர்.

செவ்வாய், 3 ஜூன், 2014

இந்தியர்களின் நேரத்தை வீண்ணடித்த நரேந்திரமோடி







இந்தியர்களின் நேரத்தை வீண்ணடித்த நரேந்திரமோடி..!
நரேந்திரமோடி எப்படி இந்தியர்களின் நேரத்தை வீண்ணடித்தார் என கேட்கிறீர்களா?
தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பெரிய லிஸ்ட்யை தாயார் செய்து அதை சமூக வலை தளங்களிலும், தனது தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டார்.
அதாவது, இந்தியா பொருளாதரத்தில் முன்னேற வேண்டுமானால் நாம் அந்நிய நாட்டு பொருட்களை பயன்படுத்தாமல் இந்திய தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என கூறிவந்தார்.
அதற்காக ஒரு பெரிய லிஸ்ட்-யை தயார் செய்து சமூக வலைதளங்களில் பரவ செய்தார்.
ஆனால் தற்பொழுது நரேந்திர மோடி அவர் சொன்ன சொல்லை அவராலேயே பின்பற்ற முடியவில்லை. அதற்காக நேரத்தை ஒதுக்கி படித்த மக்கள் அனைவரின் நேரத்தை வீண்ணடித்து முட்டாள் ஆக்கியுள்ளார்.
தான் பிரதமர் ஆனா பின்பு ஏற்கனவே பயன்படுத்தி வந்த இந்திய தயாரிப்பான ஸ்கார்பியோ காரை விட்டு விட்டு அந்நிய தயாரிப்பான BMW காரை பயன்படுத்த துவங்கியுள்ளார்.
அதே தொழில்நுட்பத்தில் நாங்கள் காரை உருவாக்கி தருகிறோம் என மகேந்திரா நிறுவனம் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மோடி அதனை ஏற்க மறுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?
அவர் தயாரித்து அனுப்பிய லிஸ்ட்-யை நீங்களே படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும். பதவி வந்த உடன் சொன்னைதை மறந்து விடுவார்கள் என்பது நரேந்திர மோடியின் விசயத்திலும் பொருந்தியுள்ளது.
I am Naredra Modi
PLEASE SHARE it with everyone and with all your groups ..
- अगर सभी भारतीय 90 दिन तक कोई भी विदेशी सामान नहीं ख़रीदे..
तो भारत दुनिया का दूसरा सबसे अमीर देश बन सकता है..
सिर्फ 90 दिन में ही भारत के
2 रुपये 1 डॉलर के बराबर हो जायेंगे..
हम सबको मिल कर
ये कोशिश आजमानी चाहिए
क्युकी ये देश हमारा है...!!!!
plz share & aap bhi sahyog kare
Plz frwd this msg to all groups and say
Is desh me rahena he to jag jao
In 1970 1$ = Rs. 4
Today 1$ = Rs. 68
Estimated 1$ by end of the year = Rs. 72
Dollar is not getting stronger, rupee is getting weaker!
&
nobody else is responsible for d fall, except us!
How can we change it!
1. A Cold Drink produced for 70-80 paisa sold at Rs. 9-10!
Stop drinking them,
Drink Lemon juice, Lassi, Fruit juice, butter milk etc. instead of coke, pepsi.
========================
2. Use Soaps such as Cinthol, Santoor,Medimix, Neem, Godrej brands
instead of :-
Lux,lifebuoy, rexona, liril, dove, pears, hamam,camay, palmolive!
========================
3. Toothpaste-
Use Neem, babool, vicco, dabur
Instead of :-
Colgate,close up,pepsodent, cibaca
========================
4. Toothbrush :-
Use prudent, ajanta,promise, instead of :-
colgate, close up, oral-b, pepsodent,forhans.
========================
5. Shaving cream:-
Use godrej, emami,
Instead of :-
Palmolive,old spice, gillete.
========================
6. Blade-
Use supermax, topaz, laser, ashoka
Instead of :-
Seven-o-clock, 365, gillete
========================
7. Talcum powder:-
Use santoor, gokul,cinthol, boroplus
Instead of :-
ponds, old spice, johnson,shower
to shower.
========================
8. Milk powder:-
Use indiana, amul,amulya
Instead of :-
anikspray,milkana, everyday milk, milkmaid.
=======================
9. Shampoo :-
Use Nirma, Velvette
Instead of :-
halo, all clear, sunsilk, head and shoulders, pantene.
========================
10. Mobile connections-
Use bsnl, airtel,reliance,idea,docomo
Insteaf of :-
Vodafone
========================
11. Food :-
Eat at jay bhavani, TGB, local restaurants
Instead of :-
mac-d, subway, pizza hut, kfc.
========================
12. Mobiles :-
Use micromax, karbonn, lava,croma
Instead of :-
samsung,apple, htc, sony.
13. Bikes :-
Use hero, bajaj
Instead of :-
Honda, yamaha.
========================
14. Footwear:-
Use paragon, chavda,lakhani
Instead of :-
Nike, reebok, adidas,converse.
========================
15. Jeans and shirts:-
Use spykar, k-lounge
Instead of :-
Lee, levi's,U.s. Polo, pepe, benetton.
========================
16. Watch :-
Use titan, sonata ,fasttrack
Instead of :-
tommy, Citizen, zodiac, tissot.
========================
Dont use products from hindustan lever,
Only name is hindustan it has been taken by foreign company
We blame politicians
Now go and check the things you use and ask yourself how much do you contribute to the decreased value of RUPEE
You use these foreign made products...
&
Government have to pay in dollars for d same...thus value of rupee Decreases...
Aren't u responsible for fall of rupee..
Samsung S4 at Rs 41k.. Same features Micromax Can4 comes at Rs 17k..means u waste Rs 24k..and these 24k go to south Korea in dollars..
None of the indian products are subordinate in quality, they might look a bit less fancy!!
Why is china so ahead, because the whole world uses made in china items.
We indians could atleast use made in india items!
Change comes from within! spread the change by broadcasting this msg to everyone on your contact list!
lets see by the end of this year does 1$ become Rs. 70 or it becomes Rs. 50..
JAAAAGO.
Some of these we follow....but we can make our possible to make a change.
Before deleting, HELP your frnds by passing it..!
Let it reach d 121 crores Indians.
It might help sum1. Fwd to as many as u can.
WhatsApp to free hai,, soo..frwrd it plz..
All the best.
Sent from My Blackberry® @ Tata Docomo
நன்றி
http://indru.todayindia.info/narendra-modii-ndian-elections-2014/

சனி, 16 மார்ச், 2013

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்


சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே!
மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்? அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது.
அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் 'ஹாட்ரிக்' சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை 'சூசகமாக' தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!
"இது போன்ற முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ராஜ்நாத்சிங் வியந்து புகழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியாவில் குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வருகிறதோ, இல்லையோ பாரதப் பிரதமருக்கான பஞ்சம் நிறையவே வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளையவர் ராகுல் காந்திதான் பிரதமருக்குரிய அனைத்துத் தகுதிகளோடும் அதற்கான அங்க அடையாளங்களோடும் தென்படுவதால் அவரை முன்னிறுத்துகிறார்கள். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏழைகளின் தலையில் விலைவாசி உயர்வும் பிரதமர் பற்றாக் குறையைத் தவிர்க்க நேரு குடும்பத்தின் வாரிசுகளில் யாராவது ஒருவரும் தேர்ந்தெடுக்கப் படலாம். அது அக்கட்சியின் மரபுரீதியிலான ஜனநாயகம்!
எரிக்கும் பூ! இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கும் பி.ஜே.பி.யால்தான் முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், ஏற்கெனவே பி.ஜே.பி.யின் ஆட்சியில் நடந்தேறிய ஊழல்களும் பயங்கரவாத சம்பவங்களும் அவர்களிடத்தில் அனுபவமாக நிறைய இருக்கிறது. அதை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர, பி.ஜே.பி.யின் கண்களுக்கு மோடி இன்னொரு ராமராக காட்சி தருகிறார்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக்கலவரங்களை மிகத் தேர்ந்த முறையில் "கையாண்டு" வெற்றி பெற்ற மோடி போன்ற ஒரு முதலமைச்சரை ராஜ்நாத்சிங் பார்த்திருக்க முடியாதுதான். பவர்கட் இல்லாத மாநிலம், மது இல்லாத மாநிலம், என இந்தியாவில் குஜராத் ஒரு மாடல் மாநிலமாக ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டதால் நடந்து முடிந்த வகுப்புக் கலவரங்கள் வெற்றியின் மூலம் மறந்தே போனது அல்லது மறைக்கப்பட்டது.
மசூதி இடிக்கப்படுவதற்கு முன்புவரை அங்குள்ள இடத்தைச் சுத்தப்படுத்தி, சமதளமாக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவே நீதிமன்றத்தின் முன்னால் கூறிக்கொண்டிருந்தார்கள். இடித்த பிறகும் 'அதுவாக இடிந்துவிட்டது' என்றும் "கரசேவையின் வெற்றி" என்றும் "பூகம்பம் ஏற்பட்டால் சில அதிர்வுகள் இருக்கத்தானே செய்யும்" என்றும் கூறிக்கொண்டார்கள்.
ஆயிரம் முகமூடிகளை அணியும் அபூர்வ சிந்தாமணிகளான சங்பரிவார் அமைப்பினருக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி என்ற முகமூடி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், குஜராத் அல்ல இந்தியா! எத்தனை முறை கோட்சே அவதாரம் எடுத்து மகாத்மாவைக் கொன்றாலும் மதச்சார்பற்ற இந்திய மக்களின் நல்லிணக்கத்தை அவர்களால் வீழ்த்த முடியாது.
பிரித்தாளும் முறையை அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை வாக்குப் பிரிவுகளை பலப்படுத்துவதில் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது. ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.
இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின் கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது. அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களைப் பயன்படுத்துகிறது. ஜனநாயக நிர்வாக அமைப்புகளுக்குள் ஊடுருவுவதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தேர்தலில் ஆதாயம் பெறுவதே சங்பரிவாரத்தின் சூழ்ச்சியாகும்.
பசு வதை தடைச் சட்டம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குகிறது. குஜராத்தில் இச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு இந்துத்துவாவின் முக்கிய கொள்கையாகும். அதை மோடி அரசு உயர்த்திப் பிடித்துள்ளது.
முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்களுக்கு சில பள்ளிகளில் சேர்க்கைக்கான அனுமதி கிடைப்பதில்லை. இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் நகர்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. வீட்டுக் கடன், வங்கிக் கடன், மாணவர்களுக்கான உதவித்தொகை இவற்றில் தலித், கிறிஸ்துவர், முஸ்லிம் ஆகியோருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அமைதியான முறையில் பிரித்தாளும் தந்திரங்கள் அங்கே நிறைவேற்றப்படுகின்றன.
இச்சாதனை இந்தியா முழுமைக்கும் தொடர நேர்ந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவங்களுக்கு முன்னால் மோடி அணிந்திருந்த மதச்சார்பற்ற முகமூடி, அதன் பின்னால் தொடர்ந்த கலவரங்களின்போது கழன்று விழுந்தது. இஸ்லாமிய மக்களும் பெண்களும் குழந்தைகளும் கூட அடித்தும் உயிரோடு எரித்தும் கொல்லப் பட்டார்கள். வீடுகளும் கட்டடங்களும் எரித்து சாம்பலாக்கப் பட்டன.
கர்ப்பிணிப் பெண்ணைக் கொல்ல மனமில்லாமல் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவினை எடுத்து தன் காதில் அணிந்தபடி அசுரப் பெண்ணை போரில் அழித்ததாக தமிழக கிராமத்தின் வக்கிரகாளியம்மன் வழிபாட்டு புராணக்கதை கூறுகிறது.
ஆனால், இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி.யின் பெண் அமைச்சர் மாயா முன்னிலையில் இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பிலே எரித்துக் கொன்ற சம்பவம் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் 28 ஆண்டு கால சிறைத் தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இச்சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கி எடுத்தன.
பிரிட்டிஷ் ஆட்சியில் வகுப்புக் கலவரங்கள் நிறைந்த நகரமாக கொல்கத்தா விளங்கியது. ஆனால், கடந்த 34 ஆண்டுகால இடதுமுன்னணி ஆட்சியில் ஒரு வகுப்புக் கலவரச் சம்பவமும் நடைபெறவில்லை என்பது அந்த ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். 5 முறை தொடர்ச்சியாகவும் 7 முறை ஆட்சியிலும் இடது முன்னணியே வெற்றிபெற்ற திரிபுராவில் எந்த கலவரச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு இது ஒரு சாதனையாகத் தெரிவதும் இல்லை.
தொழில் வளர்ச்சியில் குஜராத் சாதனை என்று புகழப்படுகிறது. ஆனால், அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வரும். 3.95% இருந்த குஜராத்தின் தொழில் வளர்ச்சி 12.65% ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவிலோ 6.04% ஆக இருந்த தொழில் வளர்ச்சி 17.53% ஆக உயர்ந்துள்ளதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வங்கியின் வர்த்தக முதலீட்டில் குஜராத் முழுவதும் 4.7 % தான். ஆனால், ஆந்திராவில் 5.2 %, தமிழ்நாடு 6.2%. வங்கிக் கடன் வழங்கலில் குஜராத் 4.22 % ஆகவும், மகாராஷ்டிரா 26.6% ஆக கடன் வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மா பயிரிட்டுள்ளது. ரிலையன்ஸ் மேங்கோஸ் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. உருளைக்கிழங்கு, பருத்தி, எள், வெங்காயம், மாம்பழம் போன்ற பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள விவசாயிகள் இதைச் செய்யவில்லை. அக்ரோசெல், மெக்டொனால்ட், ஜெயின் போன்ற நிறுவனங்களே செய்கிறது. இதனால் சிறு குறு விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . விவசாயத் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளார்கள். பட்டினியால் 166 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என குஜராத் முதல்வரே சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
வறுமை, பட்டினி, ஊட்டச்சத்தின்மை, பெண்கள், குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் பீடித்துள்ளது. இவைதான் குஜராத்தின் மறைக்கப்பட்ட சாதனைகளாக விளங்குகிறது. கள்ளச்சாராய சாவுகள் அங்கே நிகழ்ந்தபோது மோடி அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. காந்தியின் கொள்கையை இம்மாநில அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது எனவும் மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே! மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்?
பாலபாரதி MLA,.
 நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (14-03-2013)
 நன்றி :   http://www.nidur.info