ஞாயிறு, 31 ஜனவரி, 2010

இலங்கை முஸ்லிம்களிடம் இருந்தும் விடுதலை புலிகள் பறித்த நான்காயிரம் கிலோ தங்கம் எங்கே?

03 August 1990ல் புலிகள் காத்தான்குடி பள்ளியில் நடத்திய வெறியாட்டம்.

அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, பொன்சேகா மீது புதியக் குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணை நடத்த இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. உள்நாட்டுப் போரின் போது, புலிகளிடம் கைப் பற்றப்பட்ட நான்காயிரம் கிலோ தங்கம் பற்றிய விசாரணையும் நடக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புலிகள், இயக்கம் துவங்கியபோது, தமிழர்களிடம் இருந்து பணம், பொருட்களை கட்டாயமாக பெற்றனர். யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த பல ஆயிரம் முஸ்லிம்கள், புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது, உடமைகள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் 1990 ம் ஆண்டு, ஜூன் 29 ம் தேதி தமிழீழ மீட்பு நிதியம் ஒன்றை புலிகள் துவங்கினர். இதில் நிதியை சேர்க்க பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அதன் ஒரு பகுதியாக குடும்பத்துக்கு தலா இரண்டு பவுன் தங்கம் கொடுக்க வேண்டும் என்று 1990 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு, கட்டாய வசூலில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணம் வாசிகள் கூறினர்.

பெருஞ்செல்வந்தர்களாக இருந்த முஸ்லிம் குடும்பப் பெண்களிடம் இருந்த தங்கம் மற்றும் மதிப்பு மிக்கப் பொருட்களை புலிகள் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது போல் பல முறை நடந்துள்ளதாக யாழ்ப்பாணம் வாசிகள் கூறினர். அப்போது பறித்து புலிகளின் பிடியில் வைத்திருந்த தங்கம் 4 ஆயிரம் கிலோ என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த தங் கம் மற்றும் தங்க நகைகள் பற்றிய கேள்வி இப்போது எழுந்துள்ளது.வெளிநாடுகளில் வசூலித்த பணம் மற்றும் போதை மருந்து கடத்தலில் கிடைத்தப் பணத்தில் தான் புலிகள் ஆயுதங்களை வாங்கிவந்தனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

புதன், 27 ஜனவரி, 2010

சியோனிஸ்டுகளின் அரசு ஒரு நாள் காணாமல் போகும்: ஈரான் ஆன்மீகத் தலைவர்

டெஹ்ரான்:மத்திய கிழக்கு நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கவே சியோனிஸ்டுகளின் அரசு ஒரு நாள் காணாமல் போகும் என ஈரான் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யது அலி காமினி கூறினார்.
IRNA செய்தி நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. மெளரிட்டானியா அதிபர் முஹம்மது ஓத் அப்துல் அஸீஸ் டெஹ்ரானில் காமினியை சந்தித்து பேசும் பொழுதுதான், "சந்தேகமின்றி ஒருநாள் சியோனிஷ ஆட்சி காணாமல் போகும்.அதற்கு மத்திய கிழக்கு நாடுகள் சாட்சி பகருவார்கள்" என்றார்.

இந்த சந்திப்பின்போது ஈரான் அதிபர் மஹ்மூத் நிஜாதும் உடனிருந்தார். மேலும் காமினி கூறுகையில், "அந்த நாள் அருகிலோ அல்லது தொலைவிலோ உள்ளது அது முஸ்லிம் நாடுகளின் நடவடிக்கையைப் பொறுத்தது. இஸ்ரேல் முஸ்லிம் நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். ஏனெனில் இஸ்ரேல் இந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது.முஸ்லிம் நாடுகளுடான உறவு என்பது ஈரானின் வெளியுறவுக்கொள்கையின் தூணாகும்.மேலும் மெளரிட்டானியா அதிபரின் வருகை இரு நாடுகளுக்கு இடையேயான உறவை விரிவுப்படுத்தும். இஸ்ரேலுடனான உறவை துண்டித்த மெளரிட்டானியாவின் நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்று. இந்நடவடிக்கை சில அரபு நாட்டு அரசுகளுக்கு சிறந்த முன்மாதிரியாகும்." என்றார்.

மெளரிட்டானியா அதிபர் கூறுகையில்,"ஈரானின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப முன்னேற்றம் உலக முழுவதுமுள்ள முஸ்லிம்களை பெருமிதம் கொள்ளவைக்கிறது" என்றார். மேலும் அவர் ஈரான் மற்றும் மெளரிட்டானியா நாடுகளுக்கிடையேயான உறவை விரிவுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
source:presstv

ரசிக்கும் உரிமை கணவனுக்கே



Thanks to : சகோதரி. பாத்திமா ஜொஹ்ரா

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.


முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

'ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

'ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம் ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

'ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

னெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். 'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்' என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக போலீசார் கடும் வாக்குவாதம் கோவையில் பதற்றம் போலீஸ் குவிப்பு ..

கோவை,ஜனவரி, 22கோவை உக்கடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும்,போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்றபட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகிற பிப்ரவரி மாதம் 20-21ம் தேதிகளில் மதுரையில் நடத்தும் சமூக எழுச்சி மாநாட்டையொட்டி கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பிச்சார பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றன. பொதுக்கூட்டம் மேடையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் நிர்வாகிகள் பொதுக்கூட்ட மேடை அருகே வந்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர்கள் குமாரசாமி,பாலாஜி சரவணன், முத்துராஜ், தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளிடம் இங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், எனவே தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள். என்றும் போலீஸார் தெரிவித்தனர். இதானால் போலீசாருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் சில நிர்வாகிகள் திடீரென்று பொதுக்கூட்ட மேடையில் ஏறி பேசத் தொடங்கினார்கள். இதனால் பிரச்சினை பெரிதானது. இந்த பிரச்சினை பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் கோவை தெற்கு தாசில்தார் சுப்பிரமணியம் அங்கு வந்தார். அவர் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தாரிடம் கூட்டத்தில் கொள்கைகளை மட்டுமே விளக்கி பேசுவோம் என்று நிர்வாகிகள் உறுதி அளித்தன் பேரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கூட்டம் சுமுகமாக நடைபெற்றது. இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாரும் வாபஸ் பெறப்பட்டனர். இந்த சம்பவத்தால் கோவை உக்கடம், கோட்டை மேடு, நகரம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதே பகுதிக்கு காலையில் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்தார் அதலால் கோவையில் எங்கு பார்தாலும் போலீஸ் தொப்பிகளாக தெரிந்தது. பரபரப்பு ஏற்பட்டது.
மேடையில் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா பேசியதாவது:-
நம் தேசத்தின் வளர்ச்சியில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய பங்கீடு வழங்கப்பட வேண்டும். மேலும் சுதந்திர, நீதி. பாதுகாப்பு இவையணைத்தும் அனைத்து சமூக மக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கப் பெற வேண்டும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே அந்த வளர்ச்சி சொந்தமாகிக் கொண்டிருக்கிறது. இந்திய குடிமக்களின் முக்கிய சமூகங்களான முஸ்லிம், தலித்துகள், பழங்குடியினர், ஆதிவாசியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தபட்ட வகுப்பினர் ஆகியோர் தேசத்தின் வளர்ச்சியில் புறக்கணிக்கபடுகின்றனர். வஞ்சிக்கப்படும் சமூகங்களில் முதலிடத்தில் இருப்பது முஸ்லிம் சமூகமே. ஆகவே அனைத்து சமூகங்களும் எழுச்சி பெற வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக எழுச்சி மாநாட்டை நடத்த முன் வந்துள்ளது.ஆகவே சமுதாய கண்மணிகள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஒற்றிணைவோம் ! சக்தி பெறுவோம் !! என்று உரைநிகழ்தினர்.
இந்த பிரச்சார பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமையில் நடந்தது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே. எம். ஷரீஃப். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கேரளா மாநில தலைவர் நஸ்ருதீன், எஸ்.டி.பி.ஜ.யின் மாநில துனைதலைவர் அப்துல் ஹமீது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் ஹமீது ஆகியோர் உரைநிகழ்தினார்கள். முடிவில் முஸ்தபா நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .இதில் 1500பேர் கலந்து கொண்டார்கள்.

source:mediavoice

திருப்பூர் மாவட்ட த மு மு க மாவட்ட தலைவர் மீது போலீஸ் தாக்குதல்.

திருப்பூர்- ஜனவரி26 போலீஸ் ஸ்டேஷனில் தமுமுக மாவட்ட தலைவர் தாக்கப்பட்டதாக கூறி, திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை தமுமுகவினர் நேற்று இரவு முற்றுகையிட்டு மறியல் செய்தனர். விடிய விடிய பதற்றம் நிலவியது.
திருப்பூர், கோம்பைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது யூசுப்(வயது 42) . தமுமுக மாவட்ட தலைவரான இவர் மீது திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்காக முஹம்மது யூசுப் நேற்று திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வரவழைக்கப்பட்டார்.
எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் இவரை ஏ.டி.எஸ்.பி முருகசாமி மற்றும் பெண் எஸ்.ஜ மல்லிகா ஆகியோர் இவரை கண்முடிதானமாக தாக்கினர்.அப்போது இவர் நான் தமுமுக மாவட்ட தலைவர் என்று கூறியுள்ளார். அதற்கு நீ எவனா இருந்தால் எனக்கு என்ன என்று முருகசாமி கூறியுள்ளார். பிறகு இவரை நிர்வாணப்படுத்தி தாக்க முயற்ச்சித்திருக்கிறர்கள் அதனால் இவர் கதறிகியிருக்கிறார். இவரை மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கிறார்கள். அப்போது யூசுப் "நான் இப்போது தான் தலையில் ஆபரேஷன் செய்து உள்ளேன். நான் என்ன தவறு செய்தேன் சொல்லுங்கள்". என்று கேட்டுள்ளார். ஆனாலும் இவரை விட்டு விடவில்லை.
பிறகு மாவட்ட தமுமுக, மாவட்ட மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்க உடனே காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர்.
பிறகு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தவுடன். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீஸ் அங்கு குவிக்கப்பட்டனர்.போலீசாரை கண்டித்து தாராபுரம் ரோட்டில் தமுமுகவினர் சாலை மறியலும் ஈடுபட்டனர். டி.ஐ.ஜி. பாலநாகதேவி, எஸ்.பி.அருண் ஆகியோர் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.

தமுமுக மாநில நிர்வாகிகளுடன் உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
பிறகு யூசுப் கோவை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முற்றுகை, சாலைமறியலால், விடிய, விடிய பதற்றம் நீடித்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து கோவை, திருப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி:kovaimediavoice

சோசியல் டெமோக்ரேடிக் பார்டிக்கு முதல் வெற்றி

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் சவாய் மடாய்பூர் மாவட்டத்திலிலுள்ள சன் பஞ்சாயத்தில் சர்பான்ச் பதவிக்கு(நம்மவூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சமம்) போட்டியிட்ட சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வேட்பாளர் முஹம்மது ஹனீஃப் வெற்றிப் பெற்றுள்ளார்.

1960 ஆம் ஆண்டு இக்ராமுத்தீன் காழிக்கு பிறகு வெற்றிப் பெற்றுள்ள ஒரே முஸ்லிம் வேட்பாளர் முஹம்மது ஹனீஃப் ஆவார். 1960 க்கு பிறகு இத்தொகுதியில் இதுவரை மீனா, குஜ்ஜார் இனத்தைச்சார்ந்த வேட்பாளர்களே வெற்றிப் பெற்று வந்தனர்.

இத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் முஹம்மது ஹனீஃபுக்கு 2448 வாக்குகள் கிடைத்தன. பா.ஜ.க வைச்சார்ந்த கம்லேஷ் 1224 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இத்தொகுதியில் 1700 முஸ்லிம் வாக்குகள் தான் பதிவாகியுள்ளன. அவ்வாறெனில் ஹனீஃப்க்கு கிடைத்த அதிகமான வாக்குகள் இதர மதத்தைச் சார்ந்த மக்களிடமிருந்து கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி ராஜஸ்தானில் மாற்று மத மக்களிடமும் செல்வாக்கு பெற்று வருவதையே இந்த தேர்தல் முடிவு சுட்டிக்காட்டுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

முஸ்லிம் விஞ்ஞானிகளைக் குறிவைக்கும் பயங்கரவாதம்!



Dr .மசூத் முஹம்மத்

பிப்ரவரி 2007 ஆண்டு அமெரிக்காவின் டெனிசி பல்கலைகழகதின் - University of Tennessee- சட்டத்துறை பேராசிரியர் றிநோல்ட் -Glenn "Instapundit" Reynolds- அமெரிக்கா ஈரானின் இஸ்லாமிய தலைவர்களையும் , அணுவாயுத விஞ்ஞானிகளையும் கொலை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். 12.01.2010- மேற்கு பயங்கரவாதம் ஈரான் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலைகழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை கொலை செய்துள்ளது. இது றிநோல்டின் என்ற ஒருவருடைய வாதம் அல்ல இது ஒரு சிந்தனை போக்கு இதை மேற்கு பயங்கரவாதம் றிநோல்டின் வாதத்திக்கு முன்னரும் பின்னரும் அழகாக செய்து வருகின்றது.


மேற்கு பயங்கரவாதம் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலைகழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை ஈரான் தலை நகரில் அவரின் வீட்டின் அருகில் ரிமோட் மூலம் இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குண்டின் மூலம் கொலை செய்துள்ளது இதை அமெரிக்க, இஸ்ரேலிய பயங்கரவாதம் என ஈரான் கூறியுள்ளது. இந்த கொலை இஸ்லாமிய உலகத்துக்கு புதியது அல்ல அதிகமான முஸ்லிம் விஞ்ஞானிகள் அன்மை காலமாக கொலை செய்யப்படுகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர்.


ஈராக் ஆக்ரமிக்கபட்டு ஆரம்ப 18 மாதங்களில் மட்டும் 310 முஸ்லிம் விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் முக்கிய அணு விஞ்ஞானத்துடன் தொடர்புடையவர்கள்,17500கும் அதிகமான விஞ்ஞானிகள் நாட்டை விட்டும் வெளியேரிவிட்டனர் இவர்களில் அதிகமானவர்கள் மேற்கு மேலாதிக்க பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்க வைக்கப்பட்டுள்ளனர் அல்லது ஏதே ஒரு வகையில் அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர் என்று இது பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஒரு எகிப்திய ஆய்வுமையம் கூறுகிறது என்பதுடன் இந்த கொலைகள் அமெரிக்க, இஸ்ரேலிய உளவு நிறுவனங்களினால் செய்யப்பட்டவை என சுட்டிகாட்டுகிறது.


ரஷிய கம்யூனிஸ ராஜ்ஜியம் பிரிந்து உடைந்த போது கீர்கிஸ்தான்- Kyrgyzstan- , தாஜ்கிஸ்தான்-Tajikistan-, டேக்மிஸ்தான் -Turkmenistan-, உஸ்பெக்கிஸ்தான்-Uzbekistan- என்ற நாடுகள் கம்யூனிஸ அராஜகதில் இருந்து முஸ்லிம் நாடுகளாக விடுதலை பெற்று நிமிர்ந்தன அங்கும், செச்னியா-Chechnya-, டாகஸ்தான்- Dagestan- , இங்குஸ்கீட்டியா-Ingushetia- ஆகிய ரஷ்ய ஆக்கிரமிப்பு தேசங்களிலும் பல முஸ்லிம் விஞ்ஞானிகள் ,புத்திஜீவிகள் கடத்த பட்டு காணாமல் போயுள்ளனர் அல்லது கொலை செய்யபட்டுள்ளனர் கடத்தப்பட்ட முஸ்லிம் விஞ்ஞானிகள் பற்றி கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்பதை தவிர வேறு எந்த தகவலும் இதுவரையும் கிடைக்கவில்லை , இங்கு நடந்த கடத்தல் , காணாமல் போதல் என்பனவற்றின் சூத்திரதாரிகளாக ரஷிய , அமெரிக்க மேலாதிக்கங்கள் இருப்பதாக நம்பபடுகிறது.அதேபோன்று மேற்கு நாடுகளில் பணியாற்றும் முஸ்லிம் விஞ்ஞானிகள் ஐந்து வேலை தொழுதாலும் பயங்கரவாத பிரிவுகளினால் கைதாகின்றனர்.


கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முஸ்லிம் அணு விஞ்ஞானி ஒருவர் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரும் இவரின் சகோதரர்களும் இணையத்தின் வாயிலாக அல்ஜீரியா இஸ்லாமிய போராளிகளின் இணைய தளங்களை பார்க்கிறார்கள் தாடி வைத்துள்ளார் ஐந்து தடவை தொழுகிறார் என்ற காரணத்தால் வட ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்லாமிய போராளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி . இவருடன் சேர்ந்து, அவரது 2 விஞ்ஞான துறை மாணவர்களான சகோதரர்களையும் கைது செய்தனர்.


Dr.ஆபியா : பாகிஸ்தானிலும் பல முஸ்லிம் அணுவாயுத விஞ்ஞானிகள் கடத்தபடுகின்றனர் இந்த வரிசையில் பாகிஸ்தானைச் சேர்ந்த Dr.ஆபியா என்ற பெண் முஸ்லிம் விஞ்ஞானி 2003 மார்ச் 30ல் கடத்தப்பட்டு காணாமல் போனார் . கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார் . சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கும் ஆளாகியுள்ளார்.


இந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் தேதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். இவோன் ரெட்லி இதை வெளிகொண்டுவந்ததால் உலகம் இதை அறிந்து கொண்டது அல்லது மற்ற ஆயிர கணக்கான முஸ்லிம் விஞ்ஞானிகள், முஸ்லிம் புத்திஜீவிகள் , போன்று இதுவும் அறியப்படாத செய்தியாக இருந்திருக்கும்



இருட்டில் இருந்த இருந்த ஐரோப்பாவை விஞ்ஞா யுகத்துக்கு அழைத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் தான் இதுபற்றி Marguis' எனும் அறிஞர் தனது ‘speeches delivered in ' எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


'It is to Muslim science, to Muslim art and to Muslim literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.' '


ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று குறிபிடுகிறார் .'8-12ம் நூற்றாண்டு காலப்பகுதி 'ஐரோப்பா அறியாமை இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என வரலாறு கூறுகின்றது.


இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு விஞ்ஞான அடிபடைகளை உருவாக்கி இருந்தது இந்த கால பகுதியில் இருட்டில் இருந்த ஐரோப்பாவுக்கு எழுச்சி, புரட்சி விஞ்ஞானம் என்று சிந்திப்பதற்கு கற்றுகொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று உலக வரலாறு கூறுகிறது.இன்றைய நவீன விஞ்ஞானத்துக்கு அஸ்திவாரமாக அமைந்த முஸ்லிம்களின் 1000 வருட விஞ்ஞானம் திட்மிட்டு மேற்கு உலகால் மறைக்கபட்டுள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் . ஆனாலும் இப்போது அவை மீண்டும் வெளிகொண்டுவரபடுகின்றது என்பது மகிழ்ச்சியளிகிறது.


இன்று இஸ்லாத்தின் எழுச்சியை தடுக்க இஸ்லாம் மீண்டும் உலகை ஆள்வதை தடுக்க இஸ்ரேல மற்றும் அமெரிக்க,மேற்குலக பயங்கரவாதம் இஸ்லாத்தை நேசிக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளை கொலை செய்து வருகின்றது.


கடந்த வருடம் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடந்த சர்வதேச அளவிலான பெண் விஞ்ஞானிகளுக்கான போட்டி (Korea International Women's Invention Exposition) யில் 12 தங்கப் பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், 6 வெண்கலப்பதக்கங்களையும் அள்ளி முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் உலகில் முதலிடம் பெற்றனர்.விஞ்ஞானத்தில் சாதனை புரிந்து வரும் 25 நாடுகள் இதில் கலந்து கொண்டன என்பதும் முஸ்லிம் பெண் விஞ்ஞானி மெஹ்ராஜ் கோல்கின்பர், மின் உற்பத்தித் திட்டம் (electricity generator system) ஒன்றை வடிவமைத்ததற்காகச் சிறப்புப் பரிசு பெற்றார் . மூன்றாம் உலக நாடுகளின் பயன்பாடுகளுக்காக என்றே தனித்துவமாகவும் அதேவேளை சுற்றுப்புறச் சூழல்களுக்கு மாசு விளைவிக்காத முதல் மின் உற்பத்தி நிலையம் என்பதாலும் இவரது கண்டுபிடிப்பு சிறப்புப் பரிசை வென்றது.


சோனியா சப்ரீ பல்வேறு மூலப்பொருட்கள் சேர்ந்து உருவாக்கும் "நானோ காம்ப்போஸைட்" கண்டுபிடிப்புகள் World Intellectual Property Organization (WIPO) பரிசினை பெற்றார், மரியம் இஸ்லாமி என்பவரின் எலும்புகள் தொடர்பான நோய் அறுவை சிகிச்சை முறைக்கான புதிய தொழில் நுட்பம், International Federation of Inventors' Associations (IFIA)வின் பரிசை வென்றுள்ளது என்பனவும் அவதானிக்க ப்படவேண்டியவை.


இந்த முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் இருவர் பிரித்தானியாவுக்கு சென்ற போது அங்கு பிரித்தானிய உளவு துறையால் பல மணி நேரம் விசாரிக்க பட்டார்கள் என்பதும் இவர்கள் இஸ்லாமிய உடைஅணிந்தவர்கள் என்பது குறிபிட்டதக்கது.


லகளாவிய இஸ்லாமிய எழுச்சியை, இஸ்லாமிய ஆட்சியை-இஸ்லாமிய கிலாபத்- தடுக்க, தாமதபடுத்த மேற்கு பயங்கரவாதம் பல களங்களில் முனைகிறது அதில் ஒன்றுதான் இந்த முஸ்லிம் விஞ்ஞானிகளை, புத்திஜீவிகளை ஊதி அணைக்க முனையும் முயற்சி.


நிராகரிபவர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும், அல்லாஹ் அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். அல் குர்ஆன் (9:32)


நன்றி M.ஷாமில் முஹம்மட் -

லங்கா முஸ்லிம்

திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்

திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்

1. சிறுபாண்மையினருக்கு தேசிய அளவில் இடஒதுக்கீடு :

அரசுப்பணிகளில் சி று பா ன் மை யி ன ர் கு றி ப் பா க மு ஸ் லி ம் க ள் மி க வு ம் புறக்கணிக்கப்பட்டுள்ளதை நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலை ஆய்வுக்குழு மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்பித்துள்ளது.

சிறுபாண்மை மக்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் தெளிவான ஆய்வுகளுக்குப்பிறகு அரசுப்பணிகளில் சிறுபாண்மை மக்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீட்டையும் அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டையும் பரிந்துரைத்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த ஆட்சியில் அமைந்த ஆணைய பரிந்துரைகள் இப்போதும் ஆ ட் சி தொடரும் நிலையில் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. ச மூ க நீதியின் ச Vர ம் அடங்கிய ஆணைய பரிந்துரைகளை கா ல ம் தாழ்த்துவதும், ஏற்க மறுப்பதும் மிகப்பெரிய சமூக அநீதியாகவும், ஒடுக்கு முறையாகவும் அமையும் என இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

2. விவசாயிகளின் பாதுகாப்பு:

மரபணு மாற்றம் செய்யப்பட்ட யவீ கத்திரிக்காய் ம க் க ளை நோயாளிகளாக்கி மண்ணையும் மலடாக்கக்கூடியவையாகும். வெளிநாட்டு விதை நிறுவனங்களின் சதி வலைகளில் விழுந்து சொந்த நாட்டு மக்களின் உடல் நலத்திற்கு உலை வைக்கத்துணிந்த மத்திய அமைச்சர் சரத்பவாரை இம்மாநாடு வண்மையாக கண்டிக்கிறது.யவீகத்திரிக்காய்களைஇந்திய மண்ணில் அனுமதிக்கக்கூடாது எனக் குரல் கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் கருத்தை இம்மாநாடு வரவேற்கிறது.

மான்சாண்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகள் ஆந்திர விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளின.

வெளிநாட்டு விதைகள் தாய்நாட்டின் மண்ணை த ரிசாக்கும் ஆயுத கணைகள் என்று எச்சரிப்பதோடு மரபணு மாற்ற விதைகளுக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வழியுறுத்துகிறது.

3. விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை:

விவசாய நாடாகிய நம் நாட்டில் விவசாயிகளின் நிலை வேதனைக்குறியதாகவே தொடர்ந்து வருகிறது. இறக்குமதி கோதுமைக்கு அதிக விலை கொடுக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என அன்மையில் கூறிய மத்திய உணவு அமைச்சர் சரத்பவார் உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவு தாணியங்களுக்கு உரிய கொள்முதல் விலை கொடுக்க மறுத்து வருவது கொடுமையானதாகும். நெல் சாகுபடியாளர்களுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும்விவசாயிகள் நிர்ணயிக்கின்ற நியாயமான கொள்முதல் விலையை அரசாங்கம் கொடுக்கவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4. ஜோதிபாசுவுக்கு இரங்கல்:

மேற்கு வங்காளத்தில் 23 ஆண்டுகாலம் முதலமைச்சராக தொடர்ந்து சாதனை படைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசுவின் மறைவிற்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. எளிமையும் நேர்மையும் கடும் உழைப்பும் கொண்ட அவரதுமறைவு இந்திய அரசியலுக்கு பெரும் இழப்பாகும்.

இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு வந்த போதும் தன் கட்சிக்கு கட்டுப்பட்டு பிரதமர் பொறுப்பை ஏற்க மறுத்த அ வ ர து நேர்மை மிகுந்த நிலைபாட்டை இம்மாநாடு பெருமையுடன் நினைவுகூர்கிறது.

5.குடும்ப அட்டை:

புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டுகளுக்கு மேலாகியும் சரியான முறையில் புதிய குடும்ப அட்டை வினியோகிக்காததால் சம்மந்தப்பட்டவர்கள் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்த முடியவில்லை. உடனடியாக சம்பந்தப்பட்டத் துறையினர் புதியகுடும்ப அட்டைகளை விரைந்து வினியோகிக்க இம்மாநாடு வற்புறுத்துகிறது.

6. சாதி, மதவெறியை தூண்டுபவர்களுக்குக் கண்டனம்:

நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டை அடித்தளமாக கொண்டது. எனவே சாதிவெறி மதவெறியை தூண்டிவிடுபவர்களையும் அப்படி பொது இடங்களில் பேசுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

7.திருவாரூருக்கு விமான நிலையம் தேவை:

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தமாகவும், வேலை நிமித்தமாக செல்பவர்களில் திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்பதால் இம்மாவட்ட மக்களின் நலன் கருதி திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. விரைவில் மத்திய பல்கலை கழகமும், மருத்துவக்கல்லூரியும் திருவாரூரில் அமைய உள்ளதால் நாடு முழுவதிலுமிருந்து பேராசிரியர்களும், மாணவர்களும் வருகை தர இது உ த வு ம் என்பதால் மத்திய அ ர சு இக்கோரிக்கையை பரிசீலிக்க வேண்டு மென்று இம்மாநாடு கோருகிறது. இது காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் செயல்படும் துறைமுகங்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்பதால் தமிழக அரசு இவ்விசயத்தில் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

8.பாஸ்போர்ட் அலுவலகம்:

திருச்சி கிளை பாஸ்போர்ட் அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதால் திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நாகை, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும் அது தொடர்பான இதர வேலைகளை செய்து முடிப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தஞ்சாவூரில் புதிய பாஸ்போர்ட் கிளை அலுவலகம்விரைந்து அமைக்க மத்திய அரசு உதவ வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

9.இரயில் போக்குவரத்து:

நாகூரிலிருந்து திருவாரூர் வழியாக சென்று கொண்டிருந்த சென்னை, எர்ணாகுளம், பெங்களூர் செல்லும் இரயில்கள் அகல இரயில் பாதைக்காக நிருத்தப்பட்டன. இப்போது அகலஇரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மேற்கண்ட நகரங்களுக்கு மீண்டும் இரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும் என இரயில்வே அமைச்சகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மேலும் நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு, தரங்கம்பாடி, பூம்புகார், கோடியக்கரை, முத்துப்பேட்டை போன்ற சுற்றுலா தளங்கள் சோழ மண்டலத்தில் இருப்பதால்,சுற்றுலாவையும்,தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நாகூர் அல்லது வேளாங்கண்ணியிலிருந்து நாகப்பட்டினம் திருவாரூர் வழியாக மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு இரயில் போக்குவரத்தை ஏற்படுத்தி தருமாறு இரயில்வே அமைச்சகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வழியாக காரைக்குடி சென்று கொண்டிருந்த இரயில் நிறுத்தப்பட்டுள்ளது. அகல இரயில் பாதை பணிகளை தீவிரப்படுத்தி விரைந்து அந்த இரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்கி அதை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என இம்மாநாடு இரயில்வே அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறது.

10.மீனவர்களின் பிரச்சினை:

புதிய மீன்பிடி மசோதா ஒன்றை விரைவில் மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இச்சட்டம் மீனவர்களின் பாரம்பரிய உரிமையை பாதிப்பதோடு அவர்களின் வாழ்வுரிமையை பறித்து பன்னாட்டு நிறுவனங்களிடம் அடமானம் வைக்கும் மோசடி சட்டம் என்பதால் அதை எந்த வடிவிலும் மத்திய அரசு கொண்டு வரக்கூடாது என இம்மாநாடு எச்சரிக்கிறது.

தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி உயிர்களையும் உடைமைகளையும் தொடர்ந்து பறித்து வரும் இலங்கை கடற்படையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது . இதனை தடுத்து நிறுத்தும் வகையில் சர்ச்சைக்குறிய கடற்பகுதியில் இந்திய கடற்படை ரோந்து சுற்றித மி ழ க மீனவர்களை காக்க வேண்டும் எ ன இம்மாநாடு ம த் தி ய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.

11. முல்லை பெரியாறு விவகாரம்:

முல்லை பெரியாறுக்கு குறுக்கே புதிய அணையை கட்ட நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி கேரள அரசு மறைமுக வேலைகளை தொடங்கி நடத்தி வருகிறது. இதற்கு மத்திய அரசு மறைமுகமாகத் துணைபோகிறதோ என்ற அய்யம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்விசயத்தில் எந்த நிலையிலும் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது. மத்திய ஆட்சியில் பங்காளியாக இருக்கும் திமுக தனது செல்வாக்கை பயன் படுத்தி இவ்விசயத்தில் உறுதியாக செயல்பட வேண்டும் என்றும் அனைத்து கட்சிகளும் இத்தகைய முயற்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்றும் இம்மாநாடு அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.

12. புதிய பாலம் தேவை:

திருவாரூரில் பழைய நாகை சாலையிலுள்ள இரயில்வே லெவல் கிராசிங் அமைந்துள்ள சிறிய மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து நடப்பதாலும், பல உயிர்கள் பலியாகியுள்ளதாலும் அந்த பாலத்தை இடித்து விட்டு புதிய அகல மேம்பாலத்தை கட்டித்தருமாறு இம்மாநாடு அரசை வற்புறுத்துகிறது.

13. தடுப்பணைகள் தேவை:

காவிரி நதி கடலை நோக்கி ஓடிவரும் மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழைகாலத்தில் பல வீனிளீ தண்ணீர் கடலில் வீணாய் கலக்கிறது. இதை தடுக்கும் நோக்கிலும் திருவாரூர் மற்றும் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓடும் காவிரி ஆறு மற்றும் வாய்க்கால்களில் சிறிய தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

14. ஆட்டோ கட்டண கட்டுப்பாடு:

திருவாரூர் நகரில் ஓடும் ஆட்டோக்கள் வரம்பில்லாமல் அதிக கட்டணத்தை வசூலித்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் மாவட்ட நிர்வாகமும் வட்டார போக்குவரத்து அதிகாரியும் தலையிட்டு ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

15. ரியல் எஸ்டேட்டுக்கு கட்டுப்பாடு:

விவசாயத்தில் தொடரும் சோதனைகளால் விரக்தி அடைந்த விவசாயிகளிடமிருந்து விளை நிலங்களை விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் செய்யப்படுவதை இம்மாநாடு கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. விவசாய நிலங்கள் தொடர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலால் காங்கிரிட் பிரதேசங்களாக மாறினால் தேசம் மிகப்பெரிய உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் . எனவே விளை நிலங்களை பாதிக்கும் வகையில் ரியல் எஸ்டேட் போடுவதற்கு அரசு தடை விதிப்பதோடு அரசாங்கமும் விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

16. மத்திய பல்கலை கழகம், மருத்துவக்கல்லூரி வரவேற்பு:

திருவாரூரில் மத்திய பல்கலைகழகமும் மருத்துவக் கல்லூரியும் அமைய முயற்சி எடுத்தமைக்காக தமிழக அரசுக்கு இம்மாநாடு நன்றி தெரிவிக்கிறது. கடைநிலையில் இருக்கின்ற மக்களுக்கு தரமான கல்வியும், மருத்துவமும் பரவலாக்கப்பட வேண்டுமென இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

17. இலங்கை தமிழர் பாதுகாப்பு:

உள்நாட்டுப்போரால் சீரழிக்கப்பட்டுள்ள இலங்கையின் சிறுபான்மை மக்களான நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு இ ம் மா நா டு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவிக்கிறது.இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கை அரசு சிங்கள பேரின வாத வெறியுடன் தமிழர்களை நசுக்காதிருக்க இந்திய பேரரசு உளப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு வழியுறுத்துகிறது. ஆயுத குழுக்களாலும் சிங்கள வெறியர்களாலும் சீரழிக்கப்பட்டுள்ள இலங்கையின் முஸ்லிம் தமிழர்கள், மலையக தமிழர்கள், ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழர்களின் வாழ்வுரிமையும், வாழ்க்கை பாதுகாப்பும் உறுதி செய்யப்பட இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வழியுறுத்துகிறது.

18.படுகுழிகளை மூட வேண்டும்:

பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் திருவாரூர் முழுவதும் படுகுழிகளாக்கப்பட்டு அவை இன்னும் மூடப்படாமல் பொது மக்களுக்கு அபாயம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் திருவாரூரின் பல பகுதிகளிலும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத அவதி தொடர்ந்து வருகிறது. இதனால் நோயாளிகளும், கர்பிணிகளும், முதியவர்களும், மாணவர்களும் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். உடனடியாக திருவாரூர் நகராட்சி நிர்வாகம் தோண்டிய பள்ளங்களை மூடவேண்டும் என இம்மாநாடு வழியுறுத்துகிறது.

19. சேதுக்கால்வாய்:

ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சாமல் தமிழகத்திற்குப் பெரும் நன்மை பயக்கக்கூடிய சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிது.

20.சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் சுயநிதி பிரிவு ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம்:

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்பட்ட வகுப்புகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு அரசு மாணியம் அளிக்க மறுத்து வருகின்றது. அரசின் இந்த பாரபட்ச போக்கை இம்மாநாடு வண்மையாக கண்டிக்கிறது. இப்பள்ளிகள் பெரும்பாலும் தமிழ்வழி பள்ளிகளாகவும் மொழிவாரி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்களாக இருந்து வருகின்றன. தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு ஆண்டுக்கு ரூபாய் 100 கோடிக்கும் குறைவாகவே தேவைப்படும் மாணியத்தை வழங்கி தமிழ்வழி பள்ளிகளில் பணியாற்றும் சுயநிதி ஆசிரியர்களின் துயரத்தை நீக்க வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.

21.பணநாயகமாக மாறியுள்ள ஜனநாயகம்:

உலகின் மிகப்பெரும் ஜனநாயகமான இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் பணம் ஜனநாயகத்தை குழித் தோண்டி புதைக்கும் அவல நிலையை நீக்க இரும்பு கரம் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.

22. தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை கொடுக்க வேண்டும். ஒருநாள் கூலி ரூபாய் 150/- கொடுக்க வேண்டும். மேற்படி வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய வேண்டும். ஊழலற்ற திட்டம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

23. குடியிருக்க இடம் இல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை, ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இலவச துவீட்டு மனைகளை அதிகாரிகளே அபகறித்துக் கொள்வதை தடுத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைகள் கொடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

மக்கள் வெள்ளத்தில் திணறியது திருவாரூர்: மனிதநேய மக்கள் கட்சியின் இலக்கு 2016!


மக்கள் வெள்ளத்தில் திணறியது திருவாரூர்: மனிதநேய மக்கள் கட்சியின் இலக்கு 2016!
திருவாரூர் மாநாட்டில் பிரகடனம்!
இடியும், மின்னலும் இல்லாமல் மழை இல்லை. உழைப்பும், போராட்டமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற எழுச்சி முழக்கத்தோடு உற்சாகமாய் நடந்து முடிந்தது, திருவாரூர் மாவட்ட மாநாடு.

கடந்த ஆண்டு பிப் -7 அன்று மனித நேய மக்கள் கட்சியின் தொடக்க விழா மாநாடு தாம்பரத்தில் லட்சக்கணக்கான மக்களோடு நடந்தேறியது.

ஒரே வருடத்தில், முதல் மாவட்ட மாநாட்டினை திருவாரூரில் நடத்தி அம்மாவட்ட மக்கள் மற்றொரு எழுச்சியை உருவாக்கியிருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதமாக மாவட்ட மெங்கும் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களும், பிரம்மாண்ட டிஜிட்டல் தட்டிகளும் மாநாட்டின் பிரச்சாரங்களாய் பரபரப்பூட்டிக் கொண்டிருந்தன.

முஸ்லிம்களை மட்டுமே குறி வைக்காமல், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் செய் யப்பட்டிருந்த பிரச்சாரங்கள் தான் மமகவின் அரசியல் முதிர்ச்சியை வெளி காட்டுவதாக அமைந்தது.

அதன் பலனை மாநாட்டில் திரண் டிருந்த கூட்டத்தில் காண முடிந்தது. பல்வேறு சமுதாய மக்களும் தங்களது நிகழ்ச்சியாக கருதி மாநாட்டில் பங்கேற்றது தான் மமகவின் ஜனரஞ்சக வளர்ச்சியை அடையாளம் காட்டுவதாக இருந்தது.

மாநாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே திருவாரூர் நகரமெங்கும் மமக கொடிகள் கம்பீரமாய் பறக்க விடப்பட்டிருந்தன. இளைஞர் அணியின் சார்பில் செயல்பட்ட சகோதரர்கள் போர்கால அடிப்படையில் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.

ஜனவரி 24 அன்று பழைய தஞ்சைப் பகுதிக்கே உரிய ஒலைகளால் வேயப்பட்ட நுழைவாயில்கள் ஆங் காங்கே மாநாட்டுக் குழுவின் சார்பில் பிரம்மாண்டமாய் எழுப்பப்பட்டிருந்தது.

மாலை 5 மணியிலிருந்தே மக்கள் கூட்டம் வரத்தொடங்கியது. போலிஸார் சில இடங்களில் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதாக செய்தி வந்தது. உயர்அதிகாரிகளிடம் பேசிய பிறகு, அவை தடங்களின்றி நகருக்குள் நுழைந்தன.
நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கொடி களும், ஆயிரக்கணக்கான ட்யூப் லைட்களும், கம்பங்களில் கட்டப் பட்டிருந்த விளம்பர பலகைகளும் மாநாட்டுக்கு வருகை தந்த மக்களை உற்சாகப்படுத்த, மாநாடு களை கட்ட தொடங்கியது.

தேரோடும் பிரம்மாண்டமானஅந்த அகல வீதி, சுமார் 1/2 கிலோ மீட்டர் நீளமிருக்கும் பல்லாயிரக் கணக்கில் நாற்காலிகளை வரிசைப்படுத்திக் கொண்டே வந்த இளைஞர் அணி யினர் ஒரு கட்டத்தில் களைப்பு காரணமாக சோர்ந்து விட்டனர். இந்த பெரிய வீதியை யார் மாநாட்டிற்கு தேர்ந்தெடுத்தது? என்று சலித்துக் கொண்டனர். ஆனால், அலை அலையாய் வந்த பல்லா யிரக்கணக்கான மக்களால் அந்த நாற்காலிகள் நிரம்பியதும், இளைஞர் அணியினரின் முகத்தில் ஏற்பட்ட உற்சாகத்தை நம்மால் உணர முடிந்தது.

ஒருபுறம் புத்தக கடைகளில் மக்கள் கூட்டம், மறுபுறம் சிடி கடைகளில் கூட்டம், இதற்கிடையே பி.டி கத்தரிக்காய்க்கு எதிரான கையெழுத்து இயக்கம் வேறு நடத்தப் பட்டுக்கொண்டிருந்தது.

அந்த பரபரப்புகளுடன் 5.30 மணிக்கு கொள்கை விளக்கப் பாடல்களுடன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கின.

அப்போது மாநாட்டு வளாகம் நிரம்பத் தொடங்கியது.

6 மணி அளவில் மஹ்ரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. பக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண மண்டபத்தில் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் மாநாட்டிற்கு வருகை தந்திருந்த சகோரத சமுதாய மக்கள் அமைதிகாத்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருந்தது அவர்களின் புரிந்துணர்வை வெளிக்காட்டுவதாக இருந்தது.

பிறகு நிகழ்ச்சிகள் மீண்டும் உற்சாகத்தோடு தொடங்கின. இரவு சூழ, பனி விழ அந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான ஹாலோஜன் விளக்குகளின் ஒளியில் மாநாட்டு பகுதிகள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன.

மாநாட்டின் இடதுபுறம் எதிர் பார்ப்புகளை தாண்டி பெண்கள் கூட்டம் நிறைந்ததும், மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

பெண்கள் பகுதியில் அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு, இளைஞர் அணியின் சார்பில் குழுக்கள் அவர்களுக்காக நிறுத்தப்பட்டிருந்தன.

இவ்வளவு உற்சாகத்திற்கும் மத்தியில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தது.

நிகழ்ச்சிகளுக்கு இடையில் மமகவின் 2010 ஆம் ஆண்டுக்கான மாதந்திர காலண்டரை பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது வெளியிட மமகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் மௌலா. நாஸர் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து மீனவர்களின் சார்பாக நாகை சந்திசேகரன், விவசாயிகளின் சார்பாக தாளாண்மை உழவர் இயக்க தலைவர் கோ.திருநாவுக்கரசு ஆகியோர் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.

இலங்கை தமிழர்களின் விவகாரம் குறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் புதுவை. கோ.சுகுமாறன் அவர்கள் தெளிவாக விளக்கிப் பேசினார்.

இடையிடையே தீர்மானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்க, நிகழ்ச்சிகள் உற்சாக மாய் போய்க் கொண்டிருந்தது.

பேரா. ஜெ. ஹாஜாகனி, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ஜின்னா, உயர்நிலைக்குழு உறுப்பினர் ஜே.எஸ்.ரிபாயி, அமைப்புச் செயலாளர் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன், துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமூன் அன்சாரி, பொருளாளர் ஹாரூன் ரஷீது, பொதுச்செயலாளர் பி.அப்துல் சமது, ஒருங்கிணைப்பாளர் பேரா.ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் அடுத்தடுத்து உரையாற்ற இரவு 12 மணியை நெருங்கும் போது மாநாட்டு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.

ஒரு மாவட்ட மாநாட்டை மாபெரும் எழுச்சியோடு நடத்தி முடித்த திருப்தியில் புறப்பட்டது அந்த பெரும்படை!

தேர்தல் தோல்விகளுக்கு பின் னாலும், பன்மடங்கு எழுச்சியோடு மமக செயல்படுகிறது என்பதை அதிகார வர்க்கம் உணர்ந்தது.

முதல்வர். கலைஞர் கருணாநிதியின் அரசியல் பிறப்பிடத்தில், தனது பலத்தை வெளிக்காட்டிய மமக வின் துணிச்சல் புதிய அரசியல் பாதைகளை திறக்கும் என்பதில் ஐயமில்லை.

தமுமுக தலைமையகத்தில் குடியரசு தினவிழா



சென்னை, மண்ணடி, வட மரைக்காயர் தெருவிலுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில் நமது நாட்டின் 61வது குடியரசு தின விழா நடைபெற்றது. தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கொடியேற்றியேற்றினார். கொடியேற்றிய பின்னர் உரையாற்றிய தமுமுமு தலைவர் 'எழுச்சி மிகு இந்தியாவைக் கட்டமைப்போம் . தாயகத்தை உலகின் முதல் தர வல்லரசாக்க உறுதி ஏற்போம். இந்தியக் குடியரசை வடிவமைக்க பாடுபட்ட தியாக சீலர்களை நினைத்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். அரசியல் சாசனத்தின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறவும் இந்திய மக்களின் வாழ்வில் அனைத்து வளங்களும் நலன்களும் கிடைத்திட வாழ்த்துகிறோம்.

இல்லாமை, கல்லாமை நீங்க பாடுபடுவோம். எழுச்சி மிகு இந்தியாவை கட்டமைக்க இந்த குடியரசு நாளில் உறுதி ஏற்போம்' என அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரபிக் மற்றும் வட சென்னை மற்றும் தென் சென்னை தமுமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் உரிமை குடும்பத்தினர்களும் முன்னிலை வகித்தனர்.


செவ்வாய், 26 ஜனவரி, 2010

அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இஸ்லாத்தின் நற்செய்தி அடையாளம் காணப்படும்:யுவான் ரிட்லி.


அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.

கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.

ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும்,ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.

இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.

ஏகாதிபத்தியமும், சியோனிஷமுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சவுதி விசா கிடைக்க புதிய நிபந்தனை, இன்று முதல் அமலுக்கு வருகிறது

சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் பெறப்பட்ட ஒப்புதல் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் சவுதி விசா கிடைக்கும் என்ற புதிய நிபந்தனை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இப்புதிய நிபந்தனையை இந்தியாவில் உள்ள சவுதி அரேபியா தூதரகங்கள் இந்திய பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் சவுதி அரேபியாவுக்காக இந்தியர்களை பணிக்கு தேர்ந்தெடுத்து அனுப்பும் ஏஜென்சி நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளன.

இந்த சான்றிதழ்களை காவல் நிலையம் விரும்பினால் பாஸ்போர்ட் அலுவலகங்களே வழங்கும். அவ்வாறு வழங்கப்படும் சான்றிதழில் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி மேல்சான்று ஒப்பமிட வேண்டும். அந்தச் சான்றிதழில் இறுதியாக சவுதி வெளியுறவு அமைச்சகமும் கையெழுத்திட வேண்டும். இந்திய அரசின் சம்மதத்தின் பேரில்தான் இந்த புதிய நிபந்தனை அமலுக்கு வருகிறது.

இனி சட்டத்தை மதித்து நடக்கும் இந்தியர்கள் மட்டுமே சவுதிக்கு பணியாற்ற வரமுடிம். மேலும் சவுதியில் உள்ள இந்திய சமூகத்தினரில் குற்றவாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள் என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறினார்.

சவுதி அரேபிய சிறையில் உள்ள சுமார் 1300 இந்தியர்களின் தண்டனை காலம் முடிந்ததும் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள். இதற்கான ஒப்பந்தமும் இரு தரப்பு சம்மதத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் சவுதியில்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் இந்தியர்கள் சிறையில் உள்ளனர். இரண்டாவது இடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களுக்கு அங்கு 1221 இந்தியர்கள் சிறையில் உள்ளனர்.
source:dinakaran

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


குடியரசு தின சிந்தனைகள்

ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலைப் பெற்ற இந்திய திருநாட்டிற்கு ஒரு அரசியல் சாசனம் தேவைப்பட்டது. இதற்காக டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக்குழு பல்வேறு நாடுகளின் சட்டங்களை ஆராய்ந்து ஒரு அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கியது. அந்த அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்தான் ஜனவரி 26, 1950. அந்த தினம்தான் இந்தியதேசம் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அதனை நினைவுக்கூறூம் விதமாகத்தான் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் நாளை குடியரசு தினமாக இந்திய நாட்டு குடிமக்கள் அனைவரும் வேறுபாடின்றி கொண்டாடி வருகிறோம்.

இந்தியாவின் அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை குடியரசு தினமாக பாகுபாடின்றி கொண்டாடும் நமது இந்திய குடிமக்கள் அந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையான சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற பாகுபாடற்ற தன்மையுடன் நடத்தப்படுகிறார்களா? என்றால் அதன் பதில் இல்லை என்று கூற எந்த தயக்கமும் இல்லை.

இந்திய தேசத்தைப் பொறுத்தவரை அடிப்படையில் சோசியலிச ஜனநாயக மதசார்பற்ற நாடு. இந்திய தேசத்தின் அடிப்படைக் கொள்கையான ஜனநாயகத்துடன் நாற்பத்திரெண்டாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 1976 இன் மூலம், அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை திருத்தம் செய்யப்பட்டது. அத்திருத்தம்தான் இந்தியாவை ‘இறையாண்மை சோசலிச மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசு' என்கிறது.

சாதி, சமய, இன, மொழி, பாலின வேறுபாடுகளையெல்லாம் கடந்து, இந்திய குடிமக்கள் அனைவரையும் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாக்கி, சமப்படுத்துகிறது அது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித கண்ணியம் போன்றவை குடிமக்கள் அனைவருக்கும் வாய்க்க உறுதியளிக்கிறது. மேற்கண்ட மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட இந்திய அரசமைப்பு, இந்திய மக்களுக்கு வழங்கியிருக்கும் வழிமுறைதான் மக்களாட்சியாகும். அத்தகைய மக்களாட்சி அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்றுவதில் நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட்டுவருகிறதா? என்பதே நம் முன் எழும் கேள்வி!

ஹிந்து பார்ப்பணர்களால் உருவாக்கப்பட்ட சாதீயத்தையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் மாற்றியமைக்கக் கூடியதாக மக்களாட்சி இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாக இருந்தாலும், அதன் அடிப்படைக் கட்டமைப்புகள் இன்னும் சரிந்து விடவில்லை என்பது நம்பிக்கையளிக்கும் ஒன்றாகும்.அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு 1975-77 ஆம் ஆண்டுக் காலக்கட்டங்களில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசிடமிருந்து தாக்குதல்கள் நிகழ்ந்தபோதும் அதன் அடிப்படைக்கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை.

இந்திய தேசம் ஒரு சோசியலிச நாடாகும். சோசியலிசம் என்றால் வருமானத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் ஏற்றத்தாழ்வுகளை களைவதாகும். ஆனால் இன்றைய நிலைமை என்ன? இந்திய தேசத்தை அப்பட்டமான முதலாளித்துவ சார்புள்ள நாடாக ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டார்கள். மூலதனங்களும் பகிர்மானங்களும் மக்களின் வசமிருக்க வேண்டும் என்ற சோசியலிச நிலைப்பாட்டிற்கெதிராக இந்தியாவின் பூர்வீக குடிமக்களான மலைவாசி, ஆதிவாசிகளை விரட்டிவிட்டு அங்கிருக்கும் கனிம வளங்களை கைப்பற்றி முதலாளித்துவ சக்திகளுக்கு தாரை வார்க்கத்தான் இந்திய ஆட்சியாளர்கள் திட்டம் தீட்டுகிறார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற அடிப்படை சித்தாந்தத்திற்கெதிராக பணக்காரனுக்கு ஒரு நீதி ஏழைக்கு ஒரு நீதி என்று நீதி பங்கு வைக்கப்படுகிறது. நீதிக்காக குரல் கொடுப்பவர்களை நக்ஸல்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரைக் குத்தி வழக்கு பதிவுச் செய்யப்படுகிறது.

நீதியை நிலைநாட்டும் நீதிமன்றங்கள் கூட அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கெதிரான நிலைப்பாட்டினை மேற்க்கொள்வதை காண்கிறோம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்போம் என்று சத்தியப்பிரமாணம் எடுத்துவிட்டு ஆட்சிக்கட்டிலில் உட்காரும் அரசியல்வாதிகள் குடிமக்களை சுரண்டியே தனது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்கின்றனர்.

தேர்தலில் ஜனநாயகத்திற்கு இனி அகராதியில் பணநாயகம் என்று மாற்றவேண்டுமோ என்ற அளவிற்கு பண தண்ணீராக வாரியிறைக்கப்படுகிறது. வாக்காளர்களும் பணம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்திய அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமைக்கெதிராக பெரும்பான்மை பயங்கரவாதம் கட்டவிழ்த்துப்படுகிறது.பாப்ரி மஸ்ஜிது அதன் ஒரு உதாரணமே. சிறுபான்மை மக்களின் உயிர்களும், உடமைகளும் மலிவானப் பொருளாக மாற்றப்பட்டுள்ளன. கமிஷன்கள் போடப்பட்டு அவை பின்னர் கவனிப்பாரற்று குப்பைக் கூடையை எதிர் நோக்கியுள்ள சூழல்.

இறையாண்மை மிக்க தேசம் என்ற இந்திய சித்தாந்தம் காற்றில் பறக்கவிடப்பட்டு ஏகாதிபத்திய தேசங்களுக்கு அடிமை சேவகம் புரியும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்திய குடியரசு தினத்தை சடங்கிற்காக ஆண்டுதோறும் கொண்டாடும் மக்கள் இந்திய தேசத்தின் தற்போதைய சூழலையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் விழிப்புணர்வு பெறாவிட்டால் ஆட்சியாளர்கள் மீண்டும் நம்மை அந்நியனுக்கு அடகு வைத்துவிடுவார்கள் எச்சரிக்கை.

நல்ல(!) நேரம்

நல்ல/கெட்ட நேரம் இல்லைமூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.

உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும்.

ஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், "காலையில் யார் முகத்தில் விழித்தோனோ?" என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே.

இதேபோல்தான் ஒரு பொருளை, ஒரு நிறத்தை, ஒரு எண்ணை, ஒரு நாளை அல்லது நேரத்தை நல்லதாகவோ தீயதாகவோ மனிதன் கருதுவது இன்றைய நவீனகாலத்திலும் அன்றாட நிகழ்வுகளாகக் காண முடிகிறது. 13 என்ற எண் தீமை பயப்பது என்பதாகக் கருதி அதைத் தமது இல்லங்களுக்கோ வாகனங்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ தவிர்த்துக் கொள்ளக்கூடிய மக்களை இன்றும் மேற்குலகில் பரவலாகக் காணமுடிகிறது. சில முன்னேற்றமடைந்த நாடுகளிலும் வீட்டு எண்ணிக்கையில் 13ஐத் தவிர்ப்பதும், மாடிக் கட்டடங்களிலும் 12ஆவது மாடியை அடுத்து 13ஐத் தவிர்த்து அடுத்த எண்ணான 14ஐத் தருவது போன்றவையும் மூடநம்பிக்கையாகும்.

அதேபோல் ஒரு சில எண்களை/பொருள்களை அதிர்ஷ்டமானதாகக் கருதி அந்த எண்களை/பொருட்களைத் தேடி அதிக விலைகொடுத்துப் பெறுதலும் அந்த எண்/பொருள் தனக்கு அதிகமான இலாபத்தை அல்லது பாதுகாப்பை வழங்கிடும் என்று கருதும் மூடநம்பிக்கையும் நடப்பில் உள்ளது.

அறிவியல், கல்வி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்று எல்லாவிதத்திலும் வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாகக் கருதப்படும் தற்போதய காலத்திலும் இந்த மூடநம்பிக்கை எனும் நோய் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.

இதுபோன்ற மூடநம்பிக்கைகளைக் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் முதல் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் நன்கு படித்த இளைஞர்கள் முதியவர்கள் என்ற அனைவர்களிடமும், பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள் முதல் ஆன்மீகவாதிகளிலும் பரவலாகக் காணமுடிகிறது. சிலர் இதற்கு மதச் சாயம் பூசிடுவதும் அதன் மூலம் இதைச் சரிகாணுவதும் இம்மடமையை ஆதரிக்கும் சிலருடைய துணையுடன் இதைத் தொடர்ந்து நிலை நாட்டிவருவதும் சுய இலாப நோக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒரு துர்ப்பாக்கியமான காரியம் ஆகும்.

ஒரு நாள் என்பது நல்லநாள் அல்லது கெட்டநாளாக; ஒரு நேரம் என்பது நல்லநேரம் அல்லது கெட்டநேரமாக எப்படி அமையும்? ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு சிலருக்கு நல்லதும் மற்றவர்களுக்குத் தீயதும் இழப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன என்பதை எவரும் மறுத்திட இயலாது.

உதாரணத்திற்கு ஒரே நேரத்தில் பிறப்புகளும் இறப்புகளும் இவ்வுலகத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சிலர் நோயுறுவதும் நிலர் நிவாரணம் பெறுவதும், சிலர் கல்வியில் தேர்ச்சி பெறுவதும் சிலர் தோல்வியுறுவதும், சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் ஆகும். அதே போல் ஒரே நேரத்தில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் இரு அணிகளில் ஒன்று வெல்வதும் ஒன்று தோல்வியுறுவதும் இயல்பானதும் தவிர்க்க இயலாத ஒன்றுமாகும்.

இன்னும் குறிப்பிட்ட ஒருநேரத்தில் ஒரே வீட்டில் திருமணம் அல்லது பிறப்பு போன்றதும் அதே வீட்டில் அதே குறிப்பிட்ட நேரத்தில் இறப்புகளும் ஏற்படுவதையும் காண்கிறோம். குழந்தை பிறக்கும்போது மரணித்த தாயும், தாய் இருக்க மரணித்த குழந்தையும் பிறந்த இரு குழந்தைகளுள் ஒன்று மரணித்தும் மற்றொன்று உயிருடனும் இருக்கவும் காண்கிறோம். மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் சில பிறப்புகள் சில இறப்புகள் போன்ற எண்ணற்ற நேர்மறை எதிர்மறையான நிகழ்வுகள் என்பதெல்லாம் ஒரே நேரத்தில் நடந்து, "நேரம் என்பதில் நல்லதோ கெட்டதோ இல்லை" என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன,

ஒரு நேரம் நல்லது எனில் அதில் எங்கும் யாருக்கும் எந்த ஒரு கெடுதியும் இழப்பும் துன்பமும் கவலையும் நோயும் கஷ்டமும் ஏற்படக் கூடாது. அப்போதுதான் அது "நல்ல நேரம்" ஆகமுடியும். அப்படி ஒரு நேரம் இருக்கிறதா என்றால் இல்லையென்பதே உண்மை. அதேபோல் ஒரு நேரம் கெட்ட நேரம் என்றால் அதில் எங்கும் யாருக்கும் எந்த ஒரு நல்லதும், இலாபமும், பலனும், சந்தோஷமும், இன்பகரமானதும் நிகழவே கூடாது. அப்போதுதான் அது கெட்ட நேரம் என்றாகும். இந்த நிலையும் இல்லை என்பதே மறுக்க இயலாத உண்மை.

அதேபோல், "அவருக்கு நேரம் சரியில்லை; இவருக்கு நல்ல நேரம்; நல்ல காலம்; கெட்ட காலம்" என்று நிகழ்வுகளை நேரத்தோடு தொடர்பு படுத்துவதும் தவறான அடிப்படையில் அமைந்த ஒரு மூடநம்பிக்கையேயாகும். "இந்த மாதத்தில் இந்த நாளில் அல்லது இந்த நேரத்தில் சில புதிய காரியங்கள், திருமணம், புதிய வீடு புகுதல், வியாபாரங்கள் போன்ற நல்லவற்றை துவக்கக் கூடாது; அது நிறைவேறாது; அது நஷ்டமானதாக அமையும்; இழப்பை ஏற்படுத்தும்" என்று கருதி அவற்றைத் தவிர்த்து எச்சரிக்கையாக நல்லநாள், நல்லநேரம் பார்த்து துவங்கப்பட்ட திருமணம் போன்ற எத்தனையோ காரியங்கள் கெடுதியையும் மண விலக்குகளையும் கொலை, தற்கொலை போன்ற உயிரிழப்பையும் பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் பரவலாக சமுதாயத்தில் காணமுடிவதும் மூடநம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் சான்றுகளாகும்.

"எல்லாம் இறைவிருப்பப்படி நமக்கு நிகழ்கின்றன; அந்த இறைவனின் நாட்டமின்றி எந்த ஒரு நன்மையும்-தீமையும் நோயும்-நிவாரணமும், இலாபமும்-நஷ்டமும், இன்பமும்-துன்பமும், பிறப்பும்-இறப்பும், என்று எதுவுமே ஏற்படுவது இல்லை. எல்லாம் அவன் நாட்டப்படியே நடைபெறுகின்றன" என்று போதிக்கும் இறைமார்க்கமாம் இஸ்லாத்தில் மூடநம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லையென்ற போதும் "நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம்" என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம்கள் சிலரிடமும் இதுபோன்ற ஒருசில மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன என்பது வருத்தத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.

முழு மனிதசமுதாயத்திற்கும் வழிகாட்டிட ஏக இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாம் எனும் மார்க்கமும் குர்ஆன் நபிவழிகள் எனும் இறை ஒளியின் மூலம் அனைவருக்கும் வழிகாட்டியாக வாழ வேண்டிய முஸ்லிம்களில் சிலர் இது போன்ற அறியாமை இருளில் மூழ்கியிருப்பது கைச்சேதமே.

"ஸஃபர் மாதம் என்பது பீடைமாதம்" என்று சில முஸ்லிம்கள் கருதுவதும் கூறுவதும் இந்த மாதத்தில் நல்ல காரியங்களைத் துவக்காமல் தள்ளிப் போடுவதும், திருமணங்கள், வியாபாரங்கள் போன்ற நல்ல நிகழ்வுகளைச் செய்தால் அது கேடாக முடியும் என்று தவிர்ப்பதும் புதிதாக மணமுடித்துள்ள தம்பதியரை இம்மாதத்தில் இல்லறம் நடத்த விடாமல் (நடத்தினால் பிறக்கும் குழந்தைக்குக் கேடு, அல்லது குழந்தையால் அவர்களுக்குக் கேடு ஏற்படும் என்று) பிரித்து வைத்தலும், புதுமனை புகுதல் அல்லது புதுவீடு கட்டுதல் போன்றவற்றைத் தள்ளிப் போடுதல் ஆகிய - சில முஸ்லிம்களிடம் நடைமுறையில் உள்ள - அனைத்தும் எவ்வித ஆதாரமுமற்ற கண்டிக்கப் படக்கூடிய மூடநம்பிக்கைகளாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் கியாமத் எனும் இறுதி நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் (நம்பிக்கை)கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும்" ஆதாரம் : முஸ்லிம்.

மேற்காணும் நபிமொழியின்படி "எல்லாவித நன்மையும் தீமையும் அல்லாஹ் வித்தித்துள்ள விதியின் படியே நிகழ்கிறது" என்று ஒரு மூஸ்லிம் நம்ப வேண்டும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும், பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

சோதனைகள் நன்மைகள் தீமைகள் ஆகிய அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன என நம்ப வேண்டிய முஸ்லிம்களுள் சிலர், ஸஃபர் மாதம் என்பது பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையைக் கழிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன்கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து, சில சடங்குகளையும் செய்து அந்தப் பீடையைப் போக்கவேண்டும் என்று மூடநம்பிக்கை கொண்டு, பல வீண் விரயமான சடங்கு சம்பிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் செய்கின்றார்கள்.

மேலும் மாவிலையில் குங்குமப் பூவின் மையினால் சில வாசகங்களை எழுதிக் கரைத்துக் குடிப்பதும் அதன் மூலம் பலா-முஸீபத்துகள், பீடைகள், நோய்கள், கஷ்டங்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாவல் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூடநம்பிக்கையுமாகும். இஸ்லாத்திற்கு மாற்றமான இவ்வாறான மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு "அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது" என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.

ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை அல்லாஹ்வோ நபி(ஸல்) அவர்களோ நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறைவசனமோ நபிமொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதைத் தடுக்கும் நபிமொழியைத்தான் நாம் காண் முடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை; துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது; ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது; ஸஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசு என்பதெல்லாமில்லை" ஆதாராம்: முஸ்லிம்.

ஸஃபர் மாதத்தைப் பீடையுள்ள மாதம் என்பதற்கு, சிலர் கூறும் காரணம், "நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில் நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்ததுபோல், நாமும் பீடையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும்" என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான வாதமாகும். நோயுறுவது பீடையன்று.

நோயும் நிவாரணமும் அல்லாஹ்வின் விதிப்படி ஏற்படுபவை; "நான் நோயுற்றால் குணப்படுத்துபவன் அவனே" (அல்குர்ஆன் 26:80) என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள்?

ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல் மரணித்தார்கள். அந்த மாதத்தை/நாளை யாராவது பீடையுள்ள மாதம்/நாள் என்று கூறுகின்றார்களா? மாறாக, அந்த நாளை, எவருடைய பிறந்த நாளையும் சிறப்பித்துக் கொண்டாடாத நபி(ஸல்) அவர்களுக்கே பிறந்த நாளாக - மீலாது விழா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். ஏன் இந்த முரண்பாடு?

நோய் வரும், தீரும். மரணம் அவ்வாறில்லையே!

பல அறிவிப்புகளின்படி நபி (ஸல்) அவர்கள் பிறந்ததும் இறந்ததும் ரபீஉல் அவ்வல் பிறை 12இல்தான். அந்த நாளையோ வேறு எந்த நாளையுமோ நல்லநாள்/கெட்டநாள் என்று ஏற்படுத்திக் கொண்டு, கொண்டாட்டம்/சோகம் போன்றதை அனுஷ்டிப்பதற்கு மார்க்கத்தில் சிறிதும் இடமில்லை.

ஆகவே ஸஃபர் மாதத்தைப் பீடைமாதம் என்றோ கெட்டமாதம் என்றோ கூறாமல் மற்ற மாதங்களைப் போன்று நினைத்து நமது அன்றாட காரியங்களைத் தொடரவேண்டும்

இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்:

"ஆதமுடைய மகன் (மனிதன்) காலத்தைக் குறை கூறுவதன் மூலம் என்னை (அல்லாஹ்வை) குறை கூறுகிறான். ஏனெனில் நானே காலமாக (காலத்தை இயக்குபவனாக) இருக்கிறேன்" ஆதாரம் : புகாரி 4826.

காலத்தையும் நேரத்தையும் குறை கூறுவது மூடநம்பிக்கை மட்டுமின்றி நம்மைப் படைத்த அல்லாஹ்வைக் குறைகூறும் ஒரு பாவமான காரியமாகும் என்பதை உணர்ந்து இதைப் போன்ற அனைத்து வீணான மூடநம்பிக்கைகளைக் களைந்து நமது பொன்னான நேரத்தையும் செல்வத்தையும் அவனது உண்மையான மார்க்கத்தை அறிந்து பின்பற்றிச் செலவழித்து இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றிட வழி வகுப்போமாக.

-ஆக்கம் : இபுனு ஹனீஃப்

திருவாரூர் மாநாடு புகைப்படத் தொகுப்பு

திருவாரூர் மாவட்ட மாநாட்டின் புகைப்படத் தொகுப்பு

சனி, 23 ஜனவரி, 2010

வரலாற்று வீரம்... வாரிசுகளின் பரிதாபம்! தியாகி பென்சனுக்காக அலையும் கான்சாஹிபின் வாரிசுகள்!!

வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு மடிந்த மருதநாயகத்தின் வாரிசான நான் தியாகி பென்ஷனுக்காக 20 வருஷமா மனு போடுகிறேன். இன்னும் பென்ஷன் கிடைத்தபாடில்லை. இனி அலைவதற்கு உடம்பில் திராணி இல்லை. ஆகவே, நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டோம்!' - மதுரையை ஆண்ட கான்சாஹிபு என்ற மருதநாயகத்தின் வாரிசுகளில் ஒருவரான பாபா சாஹிபுவிடமிருந்துதான் நமக்கு இப்படியரு கண்ணீர்க் கடிதம்!

மருதநாயகம் என்கிற வித்தியாசமான மனிதரின் வீர வரலாற்றை நடிகர் கமல்ஹாசன் படமாக எடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை நாடறியும். ஆனால், அந்த வீரருடைய வாரிசுகளின் பஞ்சடைந்த பரிதாப வாழ்க்கை யாருக்குத் தெரியும்?

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக வசிக்கும் பாபா சாஹிபுவை சந்திக்கச் சென்றோம். மண்ணால் கட்டப்பட்ட அந்த வீட்டுக்குக் கொஞ்சம் ஓலையும் கொஞ்சம் தகரமும் சேர்ந்து மேல் கூரையாக இருந்தது. வீட்டுக்குக் கதவுகள் இல்லை; கரன்ட் வசதியும்இல்லை.

'ஜூ.வி-யிலிருந்து வந்திருக்கிறோம்...'' என்றதும் தட்டுத்தடுமாறி எழுந்து வணக்கம் சொன்ன பாபா சாஹிபு, தனது மனக்குறையை மளமளவெனக் கொட்ட ஆரம்பித்தார். 'மொகலாயர்களின் ஆட்சி தென்னிந்தியாவில் ஏற்பட்டபோது, வரி வசூலிப்பதற்காக மதுரைக்கு அனுப்பப்பட்டவர் கான்சாஹிபு துரை. பிற்பாடு, 1759 முதல் 1764 வரை மதுரையை ஆண்டதால் அவருக்கு மதுரைநாயகம் என்ற பட்டப் பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மருதநாயகம் என்றாகிவிட்டது. வரி வசூலில் ஒரு பகுதியை ஆங்கிலேயர்களுக்குக் கப்பமாகச் செலுத்தும் முறை அப்போது இருந்தது. கான்சாஹிப் துரை அதை எதிர்த்து வெள்ளையர்களோடு போரிட்டார். கடைசியில், அவர்களாலேயே தூக்கிலிடப்பட்டார்.

தங்களை எதிர்த்த கான்சாஹிபு போன்றவர்களைக் கொன்று சொத்துகள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டது வெள்ளையர் அரசாங்கம். கான்சாஹிப் துரையின் வாரிசுகளில் எஞ்சியிருப்பது நான் மட்டுமே. எனக்கு 71 வயதாகிறது. என் மனைவி மஹபூர் பியாரி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறாள். நசீராபேகம், சுபேதாரனி என்ற மகள்களும், சிக்கந்தர் பாட்ஷா, ஹீரால்சேட் பாட்ஷா, திவான் பாட்ஷா ஆகிய மகன்களும் இருக்கிறார்கள். வறுமை காரணமாக இவர்களில் யாருக்குமே என்னால் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. 42 வயதாகும் என் மூத்த மகள் நசீராபேகம் இப்போது மனநோயாளியாகி விட்டாள். மூத்தவன் சிக்கந்தர் பாட்ஷா வீட்டை விட்டே ஓடிவிட்டான். நுட (எலும்பு) வைத்தியம் பார்த்துப் பிழைப்பு நடத்திய எனக்கும் இப்போது வலது கை விளங்காமல் போய்விட்டது. ஏதோ என் பிள்ளைகளின் சொற்ப சம்பாத்தியத்தில் என் வாழ்க்கை ஓடுகிறது...' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் பாபா சாஹிபு.

அவர் மகன் திவான் பாட்ஷா நம்மிடம், 'யாரையும் குறைத்து மதிப்பிட்டு நான் இதைச் சொல்லவில்லை. ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். கட்டபொம்மன், மருது சகோதரர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு வெள்ளையரை எதிர்த்தவர்கள். கான்சாஹிப் துரையோ மதுரை மண்டலத்தையும் நெல்லை மண்டலத்தையும் சேர்த்து ஆண்டவர். அப்படிப்பட்டவரின் வாரிசை இந்த அரசு ஏன் இப்படி கேவலப்படுத்துகிறது என்றே புரியவில்லை. பென்ஷனுக்காக 1988-ம் ஆண்டிலிருந்து இது வரை கலெக்டர், முதல்வர், ஜனாதிபதி என அதிகாரம் படைத்த அத்தனை பேருக்கும் என் தந்தை மனுப் போட்டு ஓய்ந்து போய்விட்டார். அவற்றுக்கு வந்த பதில்கள் மட்டுமே ஒரு தகரப் பெட்டி நிறைய இருக்கிறது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள என் அக்கா சுபேதாரனி ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 வருடமாக தினக்கூலியாக இருக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகியின் வாரிசு என்ற அடிப்படையில் அவரை நிரந்தரம் செய்யக்கோரி ரெண்டு வருஷமா போராடுறேன். இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போய்த்தான் கடைசியாக ஒரு கடிதத்தை ஜூ.வி-க்கு எழுதச் சொன்னார் அப்பா...'' என்றவர், ''இனிமேலும் எங்கள் கோரிக்கைகள் கவனிக்கப்படாவிட்டால், நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம். அதற்கு முன் தமிழக முதல்வரும், விருதுநகர் கலெக்டரும் எங்கள் பக்கம் பார்வையை திருப்புவார்களா?'' என்றபோது பாட்ஷாவின் குரல் உடைந்து போனது!

பென்ஷன் வழங்கும் பணிக்கு பொறுப்பான விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் வசந்தாவிடம் இது பற்றிக் கேட்டோம். சம்பந்தப்பட்ட செக்ஷன் கிளார்க்கை அழைத்து விவரங்களைத் தெரிந்துகொண்டு நம்மிடம் பேசியவர், 'நேரடியான தியாகிகள் பென்ஷன் என்றால், உரிய விசாரணைகள் மூலம் மாவட்ட நிர்வாகமே வழங்கலாம். சுதந்திரப் போராட்ட காலத்துக்கு முந்தைய வீரர்களின் வாரிசுகளுக்கு என்றால், தமிழக அரசு ஆணை பிறப்பித்தால்தான் ஓய்வூதியம் வழங்க முடியும். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. உரிய கல்வித் தகுதியும், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவும் இருப்பதாகச் சொல்வதால் சுபேதாரனிக்கு அரசு வேலை வழங்க உடனடியாகப் பரிந்துரை செய்யத் தயாராக இருக்கிறோம்...'' என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட பிறகும், இது போன்ற தியாகிகளின் வாரிசுகள் பென்ஷனுக்காக அலைக்கழிக்கப்படுவது யாருக்கு அசிங்கம்?
- கே.கே.மகேஷ்
படங்கள்: கே.குணசீலன்
நன்றி ஜூவி.

மத வெறியர்கள்- போலி முற்போக்குவாதிகள் - ஹிஜாப்




சமீப காலமாகவே இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் எந்த வகையிலாவது களங்கப்படுத்திட வேண்டும் என வெறி பிடித்த சில கூட்டங்கள் இணைய தளத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் அலைந்து கொண்டிருப்பதை பல இணையதளங்களையும் பார்வையிடுவோர் மிக எளிதில் உணரலாம். இப்படி இஸ்லாத்தை விமர்சிக்க கிளம்பிய பல அறிவுஜீவிகள் (தங்களைத் தாங்களே அவ்வாறு தான் நினைத்துக் கொள்கின்றனர்) ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை முன்வைத்தால் அவர்களுக்கு பதில் சொல்லிவிடலாம். ஆனால் வெறுமனே தங்கள் மனதினில் ஊடுருவியிருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒற்றைத் தனத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து கருத்துகளை முன்வைக்கின்றனர். எந்த கருத்தை முன்வைக்கின்றனரோ அதில் இஸ்லாமிய நிலைப்பாடு என்ன என்பதைக் கூட அறியாத பல அறிவிலிகள் தான் இத்தகைய அறிவுஜீவி வேடம் தரித்து இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய அறிவிலிகளை இரண்டு வகையினராக மிக எளிதில் பிரித்து விடலாம். முதல் கூட்டம் மதக் காழ்ப்புணர்ச்சியுடன் திரிந்து கொண்டிருப்பவர்களை அடிப்படையாக வைத்து உருவானது. தாங்கள் பின்பற்றும் மதத்தினில் இருக்கும் பல பிற்போக்குத்தனங்களை மறைக்க வேண்டியோ அல்லது அதை நியாயப்படுத்த வேண்டியோ இஸ்லாத்தின் மீது அவதூறு சேற்றை அள்ளி இறைக்கின்ற வகையினர் இவர்கள். இரண்டாவது கூட்டம் மதங்களை புறக்கணித்து ஏதோ ஒரு மனித மூளையினில் உருவான சித்தாந்தத்தை வாழ்வின் வெற்றிக்கான உத்தியாக நினைத்துக் கொள்பவர்கள். இவர்கள் தங்களுடைய சித்தாந்தம் தான் சிறந்தது என நிரூபிக்க வேண்டி மற்ற மதங்களை போலவே இஸ்லாத்திலும் பிற்போக்குத்தனம் இருக்கின்றது என்ற ரீதியில் பொய்ப்பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இவர்களுடைய மதங்களும் சித்தாந்தங்களும் இவர்கள் கண்ணெதிரிலேயே பரிதாபகரமான தோல்வியை தழுவி நிற்பதை காண சகிக்காமல், அத்தகைய தோல்விக்கு காரணமாய் இருக்கின்ற இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் கறைப்படுத்தி விட வேண்டும் என இவர்களின் ஆழ்மனதில் படிந்து விட்ட இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியே அவ்வப்போது இணையத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு சகோதரி சுமஜ்லாவின் பதிவுகள் வரப்பிரசாதமாக அமைந்து விட்டன. என்னைப் பொறுத்தவரை சுமஜ்லா மிகவும் தைரியமான ஒரு மங்கை. அவர் மேல் வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் அவர் தனி ஆளாக நின்றே பதில் கொடுக்கும் திறமை வாய்ந்தவர். என்னுடைய இந்த கட்டுரை தன்னுடைய பேசுபொருளாக முன்வைப்பது "ஹிஜாப்" என்ற பெண்களின் உடையைப் பற்றியது. ஹிஜாப் என்பது பெண்கள் தங்களுடைய முழுமுகம் மற்றும் முன்கைகள் இரண்டை தவிர மற்றதை மறைத்துக் கொள்ளும் வகையில் உடையனிதலாகும். வெறுமனே கருப்பு அங்கி மட்டும் ஹிஜாபல்ல. முகம் மற்றும் முன்கைகளை தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் வண்ணம் உடல் அங்கங்கள் வெளியே தெரியாத வண்ணம் இறுக்கமாக இல்லாமல் எந்த உடை அணிந்தாலும் அவை ஹிஜாப் என்றே அழைக்கப்படும். இந்த ஹிஜாபை தான் ஆணடிமைத்தனம் என்றும் பிற்போக்குத்தனம் என்றும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாம் என்பது மதமன்று. பல மதங்கள், சித்தாந்தங்கள் போன்று ஒரு சிலவற்றை சொல்லிவிட்டு பலவற்றை சொல்ல தெரியாத, அப்படியே சொல்லியிருந்தாலும் இன்றைய வாழ்வியலுக்கு ஒத்துவராத கோட்பாடுகளை கொண்டவையுமல்ல. மாறாக வாழ்வியலின் அனைத்து நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள வாழ்வியலுக்கான வழிகாட்டியாக விளங்கும் மார்க்கமாகும். ஒரு பெண் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டுமேயானால் அவளுடைய கண்ணியம் காக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் ஹிஜாப் என்னும் உடையின் மூலம் பெண்களை கண்ணியப்படுத்தி சமூகத்தில் வாழ செய்கின்றது இஸ்லாம். இல்லை நான் அரைகுறை ஆடை தான் அணிவேன் என ஒரு பெண் சொன்னால் தாரளாமாக அவற்றை அணிந்து கொள்ளலாம். ஏனெனில் இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை. "மார்க்கத்தில் நிர்பந்தம் என்பது இல்லை ...(குர்ஆன் 2:256 )".

தம்முடைய கண்ணியத்தையும் அடுத்தவர்களின் காமக் கண் கொடூர பார்வையையும் தவிர்க்க வேண்டும் என்று விரும்பும் எந்த பெண்ணாக இருப்பினும் அவர் ஹிஜாபை தெரிவு செய்து கொள்ளலாம். அதற்கு இஸ்லாமியராக தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இந்த உடை அணிவதினால் பெண்களுக்கு கண்ணியம் ஏற்படுகின்றது என்பதை ஹிஜாபை எதிர்க்கும் மத வெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் மறுப்பார்களா? இந்தியாவின் உயர்ந்த பீடத்தினில் இருக்கின்ற இன்றைய குடியரசுத்தலைவர் அவர்களே மிக அழகாக பெரும்பாலான நேரங்களில் ஹிஜாபை பேனுபவராகவே இருக்கின்றார். இஸ்லாம் பெண்களின் உடை விடயத்தினில் ஒரு அளவை மிகத் தெளிவாக சொல்லிவிட்டது. இதற்கு மாற்றுக் கருத்து சொல்லுபவர்கள் பெண்களின் உடை விடயத்தினில் எந்த ஒரு கருத்தையும் தெளிவாக சொல்லவில்லை. உடையணிதல் தனிப்பட்ட பெண்களின் உரிமையை சார்ந்த விடயம் என்று வாதிடும் இவர்கள் திரைப்படத்தினில் நடிகைகளின் அரைகுறை ஆடைகளை ஆபாசம் அருவெறுப்பு என்றும் எழுதுகின்றனர் என்பதுதான் நகைச்சுவையின் உச்சம். அப்படி அரைகுறை ஆடை அணிவது அந்த நடிகையின் தனிப்பட்ட உரிமை என்ற வாதத்தை அப்பொழுது வசதியாக மறந்து விடுகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை மதவெறி மற்றும் போலி முற்போக்காளர்களே?

வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வருவது கூட பெண்கள் சுதந்திரத்தின் அங்கமாகவே நினைக்கின்ற சில பெண்கள் இன்று உருவாகி விட்டனர். பெண் சுதந்திரம் என்ற அடிப்படையில் இவர்களை ஏற்றுக் கொண்டு இந்த மாதிரி பெண்களை திருமணம் செய்ய ஹிஜாபை எதிர்க்கும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் தயாரா? தவறுகள் சர்வசாதரணமாக சமூகத்தில் உலா வரும் போது அவை தவறு என்ற எண்ணமே மறைக்கப்பட்டு விடும். இதற்கு சரியான உதாரணம் புகைப்பிடித்தலை சொல்லலாம். இதே மாதிரி தான் அரைகுறை ஆபாச உடை விடயத்தையும் கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு தடையாக இருப்பது ஹிஜாபே ஆகும். எனவே தான் இதற்கு எதிராக இவ்வளவு ஆக்ரோஷமாக கிளர்த்தெழுகின்றனர். இதில் போலி முற்போக்குவாதிகள் மத வெறியர்கள் என்ற வித்தியாசமெல்லாமில்லை.

அன்பின் சகோதரி சுமஜ்லா நீங்கள் கண்ணியம் வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள். ஆகவே ஹிஜாபை பேணுகின்றீர்கள். ஆனால் வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வந்த அல்லது வலம் வருவதை ஆதரிக்கின்ற அல்லது தங்கள் வீட்டு பெண்களை இத்தகைய கேடு கேட்ட நிலையினில் தள்ளப் போகின்றவர்கள் "கலகல" என ஏதாவது ஒன்றை கவிதை வரியினில் எழுதியதால் மனம் தளர வேண்டாம். நடிகைகள் தங்களுடைய அரைகுறை உடையினை ஆபாசம் என்று என்றைக்குமே ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் போன்றே இவர்களும் என விட்டுத் தள்ளுங்கள். ஹிஜாபின் கண்ணியத்தை உங்களைப் போன்ற பெண்கள் சொல்லுவதுதான் அதற்கு இன்னும் கண்ணியத்தைக் கொடுக்கின்றது. எழுத்தாளர் சகுந்தலா நரசிம்ஹன் கூட சமீபத்தில் ஹிஜாபின் கண்ணியத்தைப் பற்றி தன்னுடைய அனுபவத்தை மிகத் தெளிவாக எழுதியிருந்தார். மறைந்த மாபெரும் எழுத்தாளர் கமலா சுரையா கூட ஹிஜாபினால் தனக்கு எவ்வளவு தூரம் பாதுகாப்பு கிடைத்தது என்பதை பல தருணங்களில் நினைவு கூர்ந்திருக்கின்றார்.

ஹிஜாபை பேணுகின்ற சுமஜ்லா போன்ற பெண்களை மதவெறிப் பிடித்தவர்கள் என பொய்ப்பரப்புரை செய்ய உண்மையில் மதவெறி பிடித்து போய் திரிகின்றவர்களும், பிற்போக்குத்தனத்திலும் ஆணடிமைத்தனத்திலும் ஊறியவர்கள் இஸ்லாமியப் பெண்கள் என நிலைநாட்ட போலி முற்போக்கு கும்பல்களும் (ம.க.இ.க உட்பட) முயலுகின்றன. அதன் வெளிப்பாடு தான் கவிதை கட்டுரை பின்னூட்டமென சமீப காலத்தில் இவர்கள் எடுக்கும் அவதாரங்கள். இறுதியாக, நான் சமீபத்தில் படித்த ஒரு கவிதையை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன். அந்த கவிதை எழுதியவருக்கு என்னுடைய நன்றிகள்.

பொன்னையும் பொருளையும்
பெட்டியில் பத்திரமாய்
பூட்டி வைத்து பாதுகாக்கும்
தன் எஜமானனிடம்
வேலியோரத்தில் சுதந்திரமாய்
விட்டெறியப்பட்ட
விளக்குமாறு ஒன்று
வீறுகொண்டு தன் கடுங்குரலில் அகவியதாம்,
"என்னைப்போல் அவற்றுக்கும் கொடு-விடுதலை"-என..!

பெட்டிக்குள்ளே
உள்ள'நற்குடிகளுக்கு'
தெரியாதா
'எது கண்ணியமான பாதுகாப்பு'-என்று..!

பாவம்...பரிதாபப்படுவோம்...
'விளக்குமார்கள் என்றாவதொருநாள்
விளங்குவார்கள் உண்மையை'
என நம்பிவைப்போம்
இப்போதைக்கு...!


பி.ஏ.ஷேக் தாவூத்