புதன், 19 செப்டம்பர், 2012

அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் வரலாறு காணாத போராட்டம்-ஸ்தம்பித்தது சென்னை





சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் செனனை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே சில மணி நேரம் ஆடிப் போய் விட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்குள்ளானது. இதைத் தொடர்ந்து 2 நாட்களுக்குஅமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இன்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை , அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன.
இன்னொரு பக்கம் அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தால் மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது. சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எங்கு செல்கிறது மன்ப உல் உலா பள்ளி??????





அன்புடைய என் அருமை சகோதரர்களே, அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

சின்ன சிங்கப்பூர் என்று அழைக்கப்பட்ட சீரும் சிறப்பும் உடைய நமது ஊர் கூத்தாநல்லூர் பற்றி நான் உங்களிடம் கூற விரும்புகிறேன்.

எந்த ஒரு சமுகம் கல்வியினை பெற விரும்பவில்லையோ அல்லது கல்வியில் போதிய அக்கறை காட்டாமல் வாழ்ந்து வருகின்றார்களோ அந்த சமுகம் முன்னேற்ற பாதையில் சென்றதாக வரலாற்று இல்லை. இந்திய அளவில் முஸ்லிம் சமுகம் பின் தங்கிய நிலையில் இருப்பதாக "சச்சார் கமிட்டியின்" மூலம
் நாம் அறிந்து கொள்கிறோம். இந்நிலையில் நம் ஊரில் நமக்காக அதாவது கூத்தாநல்லூர்ல வாழகூடிய முஸ்லிம்கள் கல்வியில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக 1939 -ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு குடிசை பள்ளி தான் இப்போது மலை போலே வளர்ந்து நிக்குற மன்ப உல் உலா மேல் நிலை பள்ளி.

நான் இப்பள்ளியை பற்றிய உண்மைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சுதந்திரத்திற்கு முன்னும், சுதந்திரத்திற்கு பின்னும் கல்வி நிலையில் பின்தங்கிய சில சமுக மக்களின் நலனுக்காக, சில பகுதி மக்களின் நலனுக்காக, அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழும் நல்ல எண்ணம் படைத்த, நல்ல நிலையில் வாழ்ந்த படித்த இளைஞர்களால் நாடு முழுவதும் சிறுபான்மை மக்களாக வாழகூடிய முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் அவர்கள் வாழகூடிய பகுதியில் அவர்களின் மக்களுக்காக பள்ளியினை திறக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழிவகுத்து, சில சிறப்பு அந்தஸ்தையும் இது போன்ற பள்ளிகளுக்கு தந்தது. இதன் அடிபடையில் நாடு முழுவதும் சிறுபான்மையினர் நலனுக்காக பள்ளிகள் தொடங்கபட்டது. இவாறாக தான் நம் பள்ளியும் தொடங்கப்பட்டது.

இப்பள்ளி எதோ ஒரு நபரின் சொத்துகளை கொண்டு உருவாக்கப்பட்ட பள்ளி அல்ல. நமது கூத்தாநல்லூர்-ஐ உருவாகிய சீரும் சிறப்பும் உடைய நமது முன்னோர்கள் பலரால் உருவாக்கப்பட்ட மன்ப-உல்-உலா மதராஸவின் ( சின்னப்பள்ளியின் ) சொத்து. அதாவது கூத்தாநல்லூர் வக்ப் சொத்து ஆகும். இப்பள்ளியினை யாரும் இது எங்கள் முன்னோர்கள் சொத்து என்று உரிமை கோர முடியாது. என்பதினை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் மதரசாவில் படித்த பிள்ளைகளுக்கு இப்பள்ளியில் உலக கல்வியினை பெற அனுமதிக்கப்பட்டனர். இப்பள்ளியில் ஆரம்பக்கால கட்டத்தில் இஸ்லாமிய உணர்வுகளோடு பள்ளி நிர்வாகம் இஸ்லாமிய இளைஞர்களை கொண்டு இஸ்லாமிய பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்தது.

அதனால் இன்றோ?... நம்மிடையே இஸ்லாமிய சகோதர உணர்வு குறைந்தது. மாற்று மதத்தவர்களோடு நெருங்கிய உறவு ஏற்பட்டது. அவர்களை நம் வீட்டில் அனுமதித்தோம், அதன் விளைவு நம் படுக்கை அறையை பகிர்ந்து கொண்டனர். அவர்களை நம் வணிகத்தில் அனுமதித்தோம், சொத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களை நிர்வாகத்தில் ( அதாவது நகராட்சி உள்ளூர் நிர்வாகம் ) அனுமதித்தோம். இப்போது அதனை அவர்களே பெற்று விட்டார்கள் (எடுத்துக் கொண்டனர்). இவாறாக இஸ்லாமிய உணர்வு, சகோதரத்துவம், இஸ்லாமிய அடையாளம் அனைத்தையும் இழந்தோம். இப்போது கூத்தாநல்லூர் மாற்று மதத்தவரின் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகி சீரழிகின்றது. வட்டிக்கு விட்ட பால் காரன் இன்று பணக்காரன், அவனுக்கு ஆதரவளித்த நம் சகோதர்கள், இன்று அவனுக்கே சில நேரங்களில் விளக்கு பிடிக்கும் அவல நிலை நடந்துள்ளது. தெரு எங்கிலும் வெளி ஊரில் இருந்து வரும் வட்டி காரர்கள், இதன் பாதிப்பு 3 பெண்கள் வட்டிகார்களோடு ஓடிய நிலை. இதெற்கெல்லாம் மூல காரணமே மார்க்க அறிவு இல்லாதது தான்.

இந்த பின் விளைவின் ஒரு விளைவு தான் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட மன்ப உல் உலா பள்ளி. இன்று இப்பள்ளியில் 3-ல் ஒரு பங்கு மட்டுமே இஸ்லாமிய குழந்தைகள் அரசு மானிய உதவியோடு படிக்கின்றனர். ( அதாவது மன்ப உல் உலா பள்ளி 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை ( தமிழ் வழி ) அரசு மானியம். அதாவது குறைந்த கல்விக் கட்டணம் செலுத்தினால் போதும், ஆனால் 6 -ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை ( ஆங்கிலவழி ) மற்றும் 9 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை ( தமிழ் மற்றும் ஆங்கில வழி ) பள்ளிக்கட்டணம் மிக அதிகம். என்ன? நம்ப மறுகின்றீர்களா? உங்களுக்கு இஸ்லாமிய உணர்வு இருந்தால் பள்ளிக்கு சென்று பாருங்கள். மேலும், முஸ்லிம் மாணவர்கள் வேண்டுமென்றே உயர்ப்பள்ளி மற்றும் மேல் நிலை பள்ளி ( 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு )-ல் சேர்க்கை தவிர்க்க படுகின்றன. உதாரணத்திற்கு மாற்று மதத்தவர்கள் 1st group -ல் சேர 300 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தால் போதும் ஆனால் முஸ்லிம் மாணவர்கள் 1st group -ல் சேர 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கவேண்டும். ஆச்சர்யமாக இருகின்றதா? முடிந்தால் சோதனை செய்து பாருங்கள்.

முஸ்லிம்கள் 1st group மற்றும் 2nd group -ல் படித்தால் தான் அவர்களால் பிற்காலத்தில் டாக்டர் மற்றும் இஞ்சினியர் ஆக முடியும். ஆனால் வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு 3rd group வழங்கி உள்ளது. முஸ்லிம் மாணவர்களை பள்ளியில் சேர விடாமல் காரணங்களை சொல்லி தவிர்க்கும் மன்ப உல் உலா தலைமை ஆசிரியர். இந்நிலை இருக்கும் வரை நமதூரை சேர்ந்த ஒரு முஸ்லிம்கள் கூட டாக்டராக வரமுடியாது. தலைமை ஆசிரியர் மட்டும் இதற்கு காரணம் கூற முடியாது, அவருடைய ஆசிரியர் குழுமம் தான். ஏன் என்றால் மன்ப உல் உலா மேல் பள்ளியில் தற்போது ஒரு ஆசிரியர் கூட முஸ்லிம்கள் கிடையாது. மன்ப உல் உலா பள்ளியில் 3 -ல் ஒரு பங்கு முஸ்லிம் மாணவர்கள் படிப்பதற்கு ஒரு ஆசிரியர் கூட முஸ்லிம்கள் இல்லாமல் ஆனதுக்கு திட்டமிட்டு செய்யப்பட்ட சதியே காரணம். நான் கூறிய செய்திகளை நீங்கள் கொஞ்சம் கவனமாக கவனியுங்கள் (அல்லது ) நான் மேற்கூறிய செய்திகளை நீங்கள் நம்ப மறுகின்றீர்களா? மன்ப உல் உலா பள்ளி என்றாலே கூத்தாநல்லூர் வட்டாரத்தில் சீரும் சிறப்பும் பெற்ற பள்ளி மற்றும் அந்த பள்ளியில் படித்தால் நிச்சயமாக 10 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று விடுவார்கள். என்றெல்லாம் செய்தியை கேள்விப்பட்டு இருகின்றோம், பார்த்தும் இருகின்றோம். இதனால் மேற்கூறிய செய்திகளை நம்ப மறுத்து நீ ஒரு விஷமி என்று நீங்கள் என்னை நினைத்தால் பின்வரும் திட்டமிட்டு செய்யப்பட்ட, முஸ்லிம்களுக்கு எதிராக செய்யபடுகின்ற மறைமுக செயல்களை அறிந்து உண்மையில் நீங்கள் முஸ்லிமாக இருந்தால் தடுத்து பாருங்களேன், பார்ப்போம்!!!

நமக்கு எதிரான மறைமுக செயல்பாடுகள்
முஸ்லிம் மாணவர்களுக்கு வேண்டுமென்றே டாக்டர் மற்றும் இஞ்சினியர் படிபதற்க்குரிய Group 1 மற்றும் 2 ஐ தர மறுக்கபடுகிறது. ( கேள்வி கேட்டால் அவனால் அதனை எல்லாம் படிக்க முடியாது என்று சாக்கு போக்கு சொல்லி படிக்க தெரியாத அப்பாவி முஸ்லிம் பெற்றோர்களை ஏமாற்றி விடுகின்றனர்.

வெளி ஊரில் இருந்து எல்லாம் மன்ப உல் உலா பள்ளிக்கு மாணவர்கள் வருகின்றார்கள் என்று பெருமையடித்து கொள்ளும் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் போன்றோர்கள், ஏன்? ஒரு முஸ்லிம் மாணவர் கூட வெளி ஊரில் இருந்து ( மன்னார்குடி. திருவாரூர் ) வர வில்லை. அதாவது இந்து மாணவர்களை மற்றும் சேர்கின்றனர். முஸ்லிம் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிபதில்லை. முஸ்லிம்களின் பள்ளியில் முஸ்லிம் மாணவர்களுக்கு இடம் இல்லை என்ற நிலையில் தான் நம் பள்ளி உள்ளது.

முஸ்லிம் சிறுபான்மைக்கு சிறந்த அடையாளம் வெள்ளிகிழமை விடுமுறை மற்றும் ஞாயிற்று கிழமை பள்ளி வைப்பது. இந்த நிலை வந்த காரணம் வெள்ளிகிழமை ஜும்மா தொழுகை இருக்கின்ற காரணத்தால், ஆனால் இவர்கள் கிருஸ்துவ மதத்தினை பின்பற்றுகின்றார்கள் போலும், ஏனெனில் கிருஸ்துவர்கள் ஞாயிற்று கிழமை Prayer க்காக எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டார்கள், அதனால் ஞாயிற்று கிழமை விடுமுறை விட்டு விடுவார்கள். கிருஸ்துவர்கள் அவர்களின் கொள்கை கோட்பாடுகளில் பிடிப்பாக இருகின்றனர். ஆனால் முஸ்லிம்கலாகிய நாம் நம்முடைய பள்ளி ஜும்மவிற்கு விடுமுறை அளிக்காமல் இந்த ஆண்டு தொடகத்திலிருந்து வெள்ளி கிழமை பள்ளி வேலை நாட்களாக அறிவித்தது ஏன்? இதெற்கெல்லாம் காரணம் மாற்று மதத்தவர் பள்ளியை முழுமையாக கையாடல் செய்தது தான்.

இஸ்லாமிய நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில் ஒரு இஸ்லாமிய ஆசிரியர் கூட இல்லையே ஏன்? முஸ்லிம் ஆசிரியரே கிடைக்கவில்லையா? நமதூரை சேர்ந்த இளைஞர்கள் யாரும் படிக்கவே இல்லையா? முஸ்லிம் ஆசிரியரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் ( நீங்கள் அடிக்கும் கொள்ளையில் பங்கேற்றல் ) தகுதி இல்லையா?

தொடக்கப்பள்ளியில் 9 ஆசிரியர்கள் இவர்களில் 2 ஆசிரியர்கள் முஸ்லிம் பெண்கள், நடுநிலை பள்ளியில் வேலை பார்க்கும் 13 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை, என்ன? கொடுமை இது. இந்திய அரசாங்கம் வேண்டுமென்றே, முஸ்லிம்கள் மேம்பாடு அடைந்து விட கூடாது என்று அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு அரசு வேலை கிடைக்க கூடாது என்பதற்கான சதி வேலைகளை செய்கின்றது என்றால், முஸ்லிம் பள்ளிகளில் முஸ்லிம்களுக்கு வேலை இல்லையாம், என்னையா இது கேக்குறதுக்கு ஆள் இல்லேன்னா என்ன வேணாலும் செய்வாங்களோ?

நான் முன்பே அறிவித்தது போன்று 1 முதல் 8 -ம் வகுப்பு வரை அரசு மானியம். அதாவது 1 முதல் 8 -ம் வகுப்பு வரை வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் தெரியுமா உங்களுக்கு? ருபாய் 25000 முதல் 38000 வரை ஒரு மாதத்திற்கான சம்பளம் பெறுகின்றனர். இதுவே நல்ல திறமை இருந்து வேலை இல்லாத எத்தனையோ முஸ்லிம் ஆசிரியர்கள் இருகின்றனர். நமதூரில் மேற்படிப்பு படித்த பட்டதாரி இளைஞர்கள் இருகின்றார்கள். இவ்வளோ சம்பளம் கொடுக்கப்பட்டால் நாம் ஏன் வெளி நாடுகளில் போய் கஷ்டப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த வாய்ப்பினை கொடுக்க கூடாதா? சொல்லுங்கள்.

கிருஸ்துவ பள்ளியில் ( மன்னார்குடி செயின்ட் ஜோசப் கான்வண்ட் பள்ளியில் அல்லது இந்து சமய பள்ளியில் ஒரு முஸ்லிம்களுக்கு கூட ஆசிரியர் வாய்ப்பு தந்து அவர்களை சிறப்பித்தது இல்லை. ஏன் நீங்களே போய் பாருங்களேன். மன்னார்குடியில் உள்ள கான்வன்ட்டில் ஒரு முஸ்லிம்களுக்கு கூட வேலை இல்லை. ஆனால் நமது ஊர் கூத்தாநல்லூர்ல அப்படியே தலைகீழ், முஸ்லிம் என்றாலே வேலை இல்லை. நமது பள்ளியில் தான், என்ன? கொடுமை இது? முஸ்லிம்களின் பள்ளியில் ஒரு முஸ்லிமுக்கு வேலை கொடுக்க வில்லை என்றால் மற்ற மத பள்ளிகளில் எப்படி வேலை கொடுப்பார்கள்? சொல்லுங்கள்.

நாம் வெளி நாட்டிற்க்கு செல்கிறோம் என்றால் எதற்காக? உள் நாட்டில் வாழ வழி தெரியவில்லை, நம் குடும்பங்கள் நல்ல விதமாக கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவே தான். நானும் ஒரு ஆசிரியர் படிப்பு படித்து இருந்தால், நானும் ஒரு டாக்டராக ஆகி இருந்தால், நானும் ஒரு நல்ல வழிகாட்டுதலை பெற்று இருந்தால், நான் ஏன்? வெளி நாட்டிற்க்கு செல்ல போகின்றேன் என்று ஏங்குவோர் பலர். போதிய வழிகாட்டுதலை மாணவர்கள் பெறுவதே பள்ளியில் தான். பள்ளி தான் ஒரு இளைஞனின் முதல் வழிக்காட்டி, ஆனால் அந்த பள்ளியே அவனின் தலை எழுத்தினை மாற்றி எழுதி விடுகின்றது. ( திட்டமிட்ட சதி ) என்றால் இவனை காப்பாற்றுவது யார்? சொல்லுங்கள்


மன்ப உல் உலா பள்ளியில் 100 % தேர்ச்சி பெறுகின்றனர் உண்மை தான். எப்படி நடகின்றது தெரியுமா? மாடு போன்று அவனை அடித்து கொடுமை செய்து, அவனுக்கு புரியுதோ இல்லையோ, அவனுக்கு திணித்து அவனுக்கு படிப்பு மேலே வெறுப்பினை ஏற்படுத்தி 100 % தேர்ச்சி பெறுவது எதற்காக? ஒழுக்கமுள்ள மாணவனை உருவாக்குவதற்காகவா? அல்ல! இவர்கள் மீது யாரும் குறை கூற கூடாது என்பதற்காகவா? முஸ்லிம்களின் நலனுக்காக பாடுபடுகின்ற ஒரு நல்ல முஸ்லிம் ஆசிரியரால் தான் முஸ்லிம்களின் முன்னேற்றத்தினை பெற வைக்க முடியுமே ஒழிய, மாற்று மதத்தவர்களால் முடியாது.

முஸ்லிம் மாணவர்களை முட்டாளாக்கி அவர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்வது, முஸ்லிம் ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்களை தொடர்ந்து நாம் அனுமதித்தால், பிற்காலத்தில் மன்ப உல் உலா பள்ளி மிக விரைவில் நம்மை விட்டு போய்விடும்.

எவ்வொருவர் தம்மை சுற்றிலும் நடைபெறுவதை அறிந்து கொள்ளவில்லையோ அவர் சீக்கிரமே அழிக்கபடுவார் என்பது உலக நியதி எச்சரிக்கை.

என்னால் முடிந்த வரை உங்களுக்கு விழிப்புணர்வையும் எச்சரிக்கையும் செய்து விட்டேன், இனி அனைத்தும் அல்லாஹ் நாடினால் உங்கள் கையில்...

என்னால் முடிந்தவரை தகவலை சேகரித்து கொடுத்துள்ளேன், இது வெறும் சிறிதளவு தான், இன்னும் அதிகளவில் நடைபெறுவதையும், மனிதனை ரணமாக்கும் செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு... நாம் ஒவ்வொருவரும் பொருப்பாளர்களே! மன்ப உல் உலா பள்ளி சொத்துக்களை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. இதனை செய்ய தவறினால் நாளை மறுமையில் அல்லாஹ் கேட்க்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல காத்திருக்கின்றோம் என்பதினை உணர்ந்து இனிமேலாவது மன்ப உல் உலா பள்ளியை இஸ்லாமிய மயமாகுவதர்க்கு முயல்வோம்.

எச்சரிகையுடன்
பழைய மன்ப உல் உலா பள்ளி மாணவன்
 

நன்றி  : Koothanallur Flashnews

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது


நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது
உலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக "இன்னொசன்ட் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தை சாம் பாசைல் என்ற யூத மதவெறியன் வெளியிட்டிருக்கிறார். இதன் பிரத்யேக காட்சிகள் "யூ டியூப்' இணையதளத்தில் வெளியாகி உலகமெங்கும் கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்; அமெரிக்காவும் அதன் ஆதரவு சக்திகளும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்திய அரசு அமெரிக்கத் தூதரை அழைத்து தமது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்; "யூ டியூப்' இணையதளத்திலிருந்து அத்திரைப்படக் காட்சிகளை நீக்கவேண்டும் - ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திரைப்படம் குறித்து சென்னை உட்பட பல நகரங்களில் ஜும்ஆ உரையின் போது உலமாக்கள் உரை நிகழ்த்தினர். தொழுகைக்குப் பின்னர் முஸ்லிம்களிடையே தமுமுகவினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதனையடுத்து அமெரிக்க தூதரகம் அருகிலுள்ள ஆயிரம் விளக்கு பள்ளிவாசல் அருகில் முஸ்லிம்கள் மாலை 4 மணியிலிருந்தே சாரை சாரையாக வந்தவண்ணம் இருந்தனர்.

மாலை 4.15 மணியளவில் தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி முழக்கங்களை எழுப்பினார். மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மாநிலச் செயலாளர்கள் பி.எஸ்.ஹமீது, கோவை செய்யது, காஞ்சி மீரான் மொய்தீன், தென்சென்னை மாவட்டத் தலைவர் சீனிநெய்னா முஹம்மது, வடசென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி, காஞ்சி வடக்கு மாவட்டத் தலைவர் யாகூப், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதனிடையே, ஒரு பெரும் கூட்டம் அண்ணா சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டது. அதற்குள் தொண்டரணியினர் களத்தில் இறங்கி தூதரகத்தை நோக்கிச் சென்ற மக்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினர்.
பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடியதால் காவல்துறையினரால் கைது நடவடிக்கையை தொடர முடியாமல் போனது. முதல் இரண்டு மண்டபங்களும் நிரம்பி வழிந்தன. தொடர்ந்து கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைஅலையாய் அமெரிக்க தூதரகத்தை நோக்கி புறப்பட்ட வண்ணம் இருந்தனர். இதனிடையே முறைப்படுத்தப்பட்ட பேரணி இராயப்பேட்டையை நோக்கி திரும்பியது. தூதரகம் அருகே குவிந்த மக்கள் ஊர்வலத்தை நோக்கி திரும்பினர். அனைவரும் காவல்துறையினரால் பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே மணி 6ஐ நெருங்கியதும் அருகிலுள்ள புதுக்கல்லூரி வளாகத்துக்கு அனைவரும் அழைத்து வரப்பட்டனர். அனைவரையும் பதிவு செய்ய வசதி இல்லாததால் மக்ரிப் தொழுகை முடிந்ததும் அனைவரும் தாமாகவே கலைந்து சென்றனர்.
அமெரிக்க தூதரகமே அஞ்சி நடுங்கும் அளவுக்கு முஸ்லிம்களின் கோபம் கட்டுமீறியதை செய்தி ஊடகங்கள் இச்செய்தியை முதன்மை செய்தியாக்கின.
இதுபோல் தமிழகம் முழுவதும் 22 நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டங்கள் மிகுந்த கோபாவேசத்துடன் நடந்து முடிந்திருக்கிறது. பல இடங்களில் தடையை மீறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வரை பல்வேறு நகரங்களில் தமுமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற உள்ளன.




படங்கள்: ராமேஸ்வரம் ராபி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநால்லூரில் - நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி த.மு.மு.க - கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநால்லூரில் -  நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி த.மு.மு.க - கண்டன ஆர்ப்பாட்டம், ஓபாமா உருவ பொம்மை ஏறிக்கபட்டது


 

Add comment

திங்கள், 10 செப்டம்பர், 2012

தமுமுக-மமக தலைமை செயற்குழு தீர்மானங்கள்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் 8.9.2012 அன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழுக் கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, ம.ம.க. பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1: சிறைவாசிகளை விடுதலை செய்க
நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனைப் பெற்று பத்து ஆண்டுகள் தண்டனை முடித்த முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூகங்களைச் சார்ந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை தமிழக ஆளுநர், அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் 161ஐ பயன்படுத்தி, வரும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2: இடஒதுக்கீடு
2011 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர், முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தற்போது வழங்கப்பட்டு வரும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்தித்தர வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3: முழுமையான மதுவிலக்கு
தமிழகத்தில் அரசு மதுக்கடைகளால் மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. எனவே, டாஸ்மாக் மதுவிற்பனை மூலம் வருமானத்தைப் பார்க்காமல், மக்களின் எதிர்கால நானைக் கருத்தில் கொண்டு மக்கள் நல அரசாக செயல்பட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: பட்டாசு தொழிற்சாலைகள்
கடந்த 5.9.2012 அன்று சிவகாசி அருகே முதலிப்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை தீவிபத்தில் சிக்கி உயிர் இழந்த குடும்பங்களுக்கு இச்செயற்குழு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. இத்தொழிற்சாலையின் உரிமம் முடிந்து ஒருவார காலமாகியும் தொழிற்சாலை இயங்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும், தமிழகத்தில் பாதுகாப்பு குறைபாடுள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளையும் மூடவேண்டுமெனவும் இச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5: அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுக
அரசியல் அமைப்புச் சட்டம் உறுப்பு எண் 19/1ஏ பேசுவதற்கும், கருத்துக்கள் வெளியிடுவதற்கும் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராக அதைப் பறிக்கும் வகையில் திமுக தலைவர் கலைஞர், அதன் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு உள்ளிட்ட பொதுவாழ்வில் உள்ளவர்கள் மீதும் பத்திரிக்கைகள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6: நிலத்தடி நீரைப் பாதுகாத்தல்
2003ஆம் ஆண்டு அதிமுக அரசு கொண்டு வந்த நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டத்தை அதில் உள்ள குறைகளை நீக்கி நடைமுறைப்படுத்துவதோடு குளம், கண்மாய் ஆகியவைகளை தூர்வாரி அதைப் பாதுகாப்பதோடு, ஆக்கிரமிப்புகளை செய்து கட்டிடங்கள் கட்டுவதைத் தடுக்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7: காவிரி நீர்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8: ஆற்றுமணல், கிரானைட்
ஆற்றுமணல், கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்விஷயத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படக் காரணமான அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 9: மின்சாரம்
தமிழக மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்திவரும் மின்தடையைப் போக்க நெய்வேலி உட்பட தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டுமென மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 10: மீனவர் நலன்
தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட நமக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கையிடமிருந்து திரும்பப்பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இதுவரை கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 11: இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி
இலங்கையில் அப்பாவி ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த மற்றும் தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டவர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது என மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 12: கர்நாடக முஸ்லிம்கள்
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கி அவர்கள் மீது பொய் வழக்குப் போடும் கர்நாடக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு இவ்வழக்குகளை நடுநிலையான அதிகாரிகளைக் கொண்டு பூர்வாங்க விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 13: மத்தியில் இடஒதுக்கீடு
நீதிபதி ரெங்கநாத மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு இனியும் தாமதிக்காமல், சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென இச்செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 14: அஸ்ஸாம் முஸ்லிம்கள் மீது தாக்குதல்
அஸ்ஸாமில் அம்மாநில முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திவரும் போடோ தீவிரவாதிகளிடமிருந்து அதிபயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 15: மியான்மர் முஸ்லிம்கள் மீது தாக்குதல்
மியான்மர் நாட்டில் முஸ்லிம்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசு, மியான்மர் நாட்டின் தூதரக அதிகாரியை உடனே இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 16: சமச்சீர் கல்வியில் சீர்திருத்தம்
சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை முதல் தாளாகப் படிக்கும் பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே தமிழ்ப்பாடம் பயில்வோருக்கு சமமான நிலை வழங்கப்பட வேண்டும். இதற்கு எதிராக கடந்த ஆட்சியில் போடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என இச்செயற்குழு கோருகிறது.

தீர்மானம் 17: காலிப் பணியிடங்களை நிரப்புதல்
சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டு பல மாதங்கள் ஆகியும் அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை கல்வி அமைச்சகங்களால் எடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வியும், சிறுபான்மையினரின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக கல்வித்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 18: கூடங்குளம் - அரச வன்முறை
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவரும் மக்களை ஒடுக்கும் அரச வன்முறையை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கூடங்குளம் மக்களின் ஜனநாயகக் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இச்செயற்குழு கோருகிறது.

தீர்மானம் 19: வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களுக்கான வாரியம்
சென்ற ஆட்சியில், வெளிநாட்டில் மற்றும் வெளிமாநிலத்தில் பணியாற்றும் தமிழர்களுக்கான வாரியம் அமைக்கப்பட்டு அது வெறும் பெயரளவில் மட்டும் உள்ளது. இந்த ஆணையத்திற்கான சட்ட விதிமுறைகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 20: எஸ்.எம்.ஜின்னா - பிரார்த்தனை
தமுமுகவின் மாநில துணைச் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றி சமீபத்தில் மரணமடைந்த சகோதரர் எஸ்.எம்.ஜின்னா அவர்களின் பணிகளை இச்செயற்குழு நினைவுகூர்கிறது. மேலும் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமென அனைவரையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

புதன், 5 செப்டம்பர், 2012

நெல்லை ஏர்வாடியில் 'சுவனத்தை நோக்கி...' இஸ்லாமிய மகளிர் மாநாடு


நெல்லை ஏர்வாடியில் கடந்த 26.08.12 ஞாயிற்றுக்கிழமை அன்று தமுமுக மகளிர் அணி சர்பாக சுவனத்தை நோக்கி என்ற தலைப்பில் இஸ்லாமிய மகளிர் மாநாடு நடைபெற்றது. இது கிளை தலைவர் பக்ருதீன் அலி அஹமது தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் M. பர்வின் பாத்திமா ஆலிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிளை துணை செயலாளர் P.பர்வின் பாத்திமா வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி M.L. முபாரக் மதனி, சகோதரி அஜ்ஹரா ஆலிமா மற்றும் சகோதரி பரக்கத் பதுருன் நிஷா ஆலிமா அகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஏர்வாடியை சேர்ந்த மாணவிகளும், ஆலிமாக்களும் உரையாற்றினர். ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். கிளை துணை செயலாளர் A.சேக் மும்தாஜ் பானு நன்றியுரை ஆற்றினர்