புதன், 5 செப்டம்பர், 2012

நெல்லை ஏர்வாடியில் 'சுவனத்தை நோக்கி...' இஸ்லாமிய மகளிர் மாநாடு


நெல்லை ஏர்வாடியில் கடந்த 26.08.12 ஞாயிற்றுக்கிழமை அன்று தமுமுக மகளிர் அணி சர்பாக சுவனத்தை நோக்கி என்ற தலைப்பில் இஸ்லாமிய மகளிர் மாநாடு நடைபெற்றது. இது கிளை தலைவர் பக்ருதீன் அலி அஹமது தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் M. பர்வின் பாத்திமா ஆலிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிளை துணை செயலாளர் P.பர்வின் பாத்திமா வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி M.L. முபாரக் மதனி, சகோதரி அஜ்ஹரா ஆலிமா மற்றும் சகோதரி பரக்கத் பதுருன் நிஷா ஆலிமா அகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஏர்வாடியை சேர்ந்த மாணவிகளும், ஆலிமாக்களும் உரையாற்றினர். ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். கிளை துணை செயலாளர் A.சேக் மும்தாஜ் பானு நன்றியுரை ஆற்றினர்

 

கருத்துகள் இல்லை: