ஞாயிறு, 31 மே, 2009

பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா மரணமடைந்தார்.



பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா மரணமடைந்தார். 75 வயது நிரம்பிய அவர் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் அதிகாலை 2 மணிக்கு இறந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பல நாவல்கள் எழுதியுள்ள கமலா சுரய்யாவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான வாசகர்கள் உண்டு.

1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காட்டில் நாலப்பாட்டு குடும்பத்தில் பிறந்த கமலாசுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா. தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். பால்யகால ஸ்மரணகள், நிர்மாதளம் பூத்தகாலம், பக்ஷியுடைய மரணம், யா அல்லாஹ், என்ற கதா என்பவை இவருடைய பிரசித்திப்பெற்ற நாவல்கள். கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

அவருக்கு 65 வயதானபோது 1999 இல் அவர் இஸ்லாம் மதத்தை தழுவினார். மாதவிக்குட்டி என்ற தனது பெயரையும் கமலா சுரய்யா என்று மாற்றிக் கொண்டார்.

அவரின் இறுதி மரியாதைகளைக் கேரளத்தில் வைத்து நிறைவேற்றுவதற்காக அவரது உடல் கொச்சி கொண்டு வரப்படும் என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சீக்கிய மதத்தில் ஜாதிப் பிரச்சனை

ஜாதியத்தில் கட்டுண்டு கிடக்கும் இந்து சமுதாயத்தின்மீது ஏற்பட்ட அதிருப்தியால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களில் ஒன்றுதான் சீக்கிய மதம்.

மனிதனை மனிதன் ஏற்றத்தாழ்வு கூறி பாகுபடுத்துவதை எதிர்த்து அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் முன் சரிசமம் என்பதையும், எங்கும் நிறைந்த அந்தப் பரம்பொருளுக்கு உருவமில்லை என்பதையும் நிலைநாட்டும் விதத்தில் குருநானக்கால் உருவாக்கப்பட்ட சீக்கிய மதத்தின் அடிப்படை, ஆதாரம் எல்லாமே குருகிரந்த சாஹிப் என்கிற அவர்களது வேதம் மட்டுமே.

ஜாதியத்தின் தடைகளை உடைத்தெறிய மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் எப்படி வேறு சில மதங்களில் பழைய ஜாதிய கண்ணோட்டத்துடன் நடத்தப்படுகிறார்களோ அதே அனுபவம் தான் சீக்கிய மதத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சந்த் ரவிதாஸ் என்பவர் 700 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரலை உயர்த்தியவர். இவரது பல உபதேசங்கள் குருகிரந்த சாஹிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

உயர் ஜாதி சீக்கியர்கள் சந்த் ரவிதாஸ் குருநானக்கின் சீடராகக் கருதுகிறார்கள். ஆனால் ரவிதாஸின் சீடர்களோ அவரையே குருவாகக் கருதுகிறார்கள்.

1920-ல் மங்குராம் என்கிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஜாதி சீக்கியருக்கு எதிராக ரவிதாஸரை முன்னிறுத்தி ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நில உடைமையாளர்களாவது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது.

மங்குராமைத் தொடர்ந்து பல தாழ்த்தப்பட்ட சமுதாய இயக்கங்கள் தோன்றி விட்டன. சச்கண்ட் என்று அழைக்கப்படும் இந்த இயக்கங்கள் தாழ்த்தப்பட்டவர்களை இணைப்பது மட்டுமல்லாமல், சீக்கிய மதத்திலேயே ஒரு தனி அமைப்பாகவும் கலந்துவிட்டிருக்கின்றன. சீக்கிய மதத்திலும் தேராசச்சா சௌதா, தேராசச்கண்ட் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.

ஜாதி சீக்கியர்களின் சபையாக இருப்பது எஸ்.ஜி.பி.சி. எனப்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி. இதுதான் எல்லா சீக்கிய குருத்வாராக்களையும் இணைத்து மேலாண்மை செலுத்தும் அமைப்பு.

அமிருதசரஸ் பொற்கோவிலில் தான் இதன் தலைமையகம். ஏறத்தாழ, வாட்டிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபையைப் போன்றது இது எனலாம். இதில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் ஆங்காங்கே செயல்படுகின்றன.

அநேகமாக பஞ்சாபிலுள்ள எல்லா ஊர்களிலும் எஸ்.ஜி.பி.சி.யின் குருத்வாராவும் தாழ்த்தப்பட்டவர்களின் குருத்வாராவும் காணப்படுகின்றன.

இப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் ஜாதி சீக்கியர்களைப்போலவே வசதி பெற்றவர்களாகி விட்டனர். உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றனர். இவர்களது வளர்ச்சி தங்களுக்குச் சவாலாக அமையும் என்று கருதுகிறது எஸ்.ஜி.பி.சி.

இத்தனை நாளும் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த ஜாதிப் பிரச்னை இப்போது எரிமலையாக வெடித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவு எளிதாக இந்த எரிமலை அடங்கி விடாது. அரசியல் கட்சிகள் அடங்க அனுமதிக்கவும் மாட்டார்கள்.

நன்றி: தினமணி (தலையங்கத்தின் ஒரு பகுதி)

இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது சந்திரபாபு நாயுடு பேச்சு.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது
தெலுங்கு தேச மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேச்சு


ஐதராபாத், மே.30 வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

தெலுங்கு தேச கட்சியின் 2 நாள் மாநாடு ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பேசுகையில் கூறியதாவது:

இயந்திரங்களில் மோசடி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அதனால்தான் தேர்தலில் தெலுங்கு தேசம் தோற்று விட்டதாக கருதுகிறேன். அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகத்தில் இல்லை.

நான் வெற்றி பெற்ற குப்பம் தொகுதிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற போது, ஒரு மூதாட்டி என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு, "வாக்குச்சீட்டுகள் மூலம் ஓட்டுப் போடும் முறை வந்தால்தான் நீ ஆட்சியை பிடிப்பாய். எனவே அடுத்த தேர்தலிலாவது அந்த நிலைமையை ஏற்படுத்திக் கொள்" என்றார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதோ மோசடி இருப்பதாகவும் அவர் கூறினார்.

நிபுணர்கள் குழு
எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய தேசிய அளவில் நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். மறைந்த தலைவர் என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதற்காக மத்திய அரசை வற்புறுத்துவோம்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

வாக்குரிமை மறுக்கப்பட்ட தலித் மக்கள்!

-அபூசாலிஹ்


இரும்பு மங்கை என்றும் தலித் மக்களின் பெருந் தலைவி என்றும் மாயாவதி அகில இந்திய அளவிலும் புகழப்பட்டாலும் தலித் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் இன்னும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.


விடுதலை பெற்ற 60 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் உரிமை மறுக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது.


தலித் மக்களின் உரிமைகள் பறிக்கும் விவகாரங்கள் குறித்து தலித் உரிமை காக்கும் அமைப்பு 500 முறையீடுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.


1)2009 மக்களவைத் தேர்தலில் ஏழை தலித் வாக்களிக்கச் சென்ற போது தடுத்து நிறுத்தியதாக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த புள்ளிகள்.


2) அரசியல்வாதிகள்


3) அரசியல் (கு) தொண்டர்கள்


4) தேர்தல் பணியாளர்கள்


5) காவல்துறை அதிகாரிகள்


தலித் மக்களின் உரிமைகளை ஆதிக்க சாதிவெறியினர் மறுத்ததில் முதலிடம் வகுத்ததை அந்த உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


தலித் மக்களின் வாக்குரிமை மறுக்கும் விஷயத்தில் முதலிடத்தில் ஆந்திராவும், இரண்டாவது இடத்தில் மாயவதி ஆளும் உத்தரப் பிரதேசத்திலும், மூன்றாவது இடத்தில் ராஜஸ்தானும், நான்காவது இடத்தில் பீகாரும், ஐந்தாவது இடத்தில் மகராஷ்ட்ராவும் உரிமை பறிப்பு விஷயத்தில் முன்னிலை வகிக்கின்றன.


உரிமை மறுக்கப்படுவது தேசத்தின் உச்சகட்ட வன்முறை என தேசிய தலித் கண்காணிப்பகம் வேதனை தெரிவித்துள்ளது.


தலித் மக்களின் உரிமை மறுக்கப் பட்ட விவகாரத்தில் 28 சதவீத சம்பவங்கள் ஆதிக்க சாதியினரால் தலித் மக்கள் ஓட்டுப் போடாவிடாமல் விரட்டப் பட்டனர்.


தேர்தல் நாளன்று தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிகளைக் குறி வைத்து ஆதிக்க சக்திகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவை சீர்குலைக்கும் செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது.


தலித் வாக்காளர்களின் உரிமைகளை மறுப்பதில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று பட்டு இருப்பதாக தேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் பி.எஸ் கிருஷ்ணன் தெரிவிக்கிறார். 2 சதவீதத்தினர் கிராம பஞ்சாயத்துகளில் தலித் வாக்களர்களின் உரிமையை மறுக்கின்றனர்.


13 சதவீதம் தலித் வாக்குரிமை முறையீடுகள் அரசு இயந்திரம் தலித்களுக்கு எதிராக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றன.


11 சதவீத வழக்குகள் தேர்தல் அதிகாரிகள்தலித் வாக் காளர்கள் வாக்களிப்பதற்கு தடையாக இருப்பதாக குறிப்பிடுகின்றன. 10 சதவீத வழக்குகள் ஆதிக்க சாதியினர் தலித்களுக்கு பதிலாக கள்ள ஓட்டு போடும் கொடுமைகளைக் குறித்து நொந்து கொள்கிறது.


மூன்று சதவீத தலித் மக்களின் வாக்குரிமை காவல் துறையினர் நிகழ்ந்த்தும் அடக்குமுறைகளால் பறிக்கப் படுகிறது.


மீதம் உள்ள தலித் வாக்காளர்கள் பணம் மற்றும் மதுவிற்கு விலை போகும் அவலம் நீடிப்பதாக தேசிய தலித் ஆணையம் குறிப்பிடுகிறது.


தலித்களின் துயரம் வாக்குப்பதிவு நாளோடு முற்றுப்பெறுவதில்லை. அதன் பிறகு தான் கிளைமாக்ஸ்.


தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அக்கிரமத்தின் உச்சகட்டம் நிகழ்த்தப்படுகிறது.


இந்த அநீதியை எதிர்த்து தேசிய தலித் கண்காணிப்பகம் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், மூன்று தலைமை தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்ட போதும் பலன் ஒன்றும் விளையவில்லை என தங்களது உள்ளக் கொதிப்பை வெளியிட்டுள்ளனர்.


சட்டம் தலித்களின் விஷயத்தில் செயல்படவேயில்லை. தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தல் நடைபெற உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.


தலித் மக்களின் வாக்கு மறுப்பு தொடர்பாக தொடுக்கப்பட்ட அனைத்து முறையீடுகளின் மீதும் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய தலித் தேர்தல் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.


செல்வி மாயாவதி தேர்தல் களத்தில் முன்னிறுத்தப்படலாம். ஆனால் இந்தியாவில் எண்ணற்ற கிராமங்களில் தலித் மக்களின் வாக்குரிமை மறுக்கப்படுகின்றன. சேரிகளில் வெளிச்சக் கீற்று தென்படுவது எப்போது.

மத்திய அமைச்சரவையில் இடம்கிடைக்காத மூத்த தலைவர்களுக்கு கவர்னர் பதவி?

மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் களுக்கு கவர்னர் பதவி அளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப் பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 19 கேபினட் அமைச்சர்கள் முதலில் பதவியேற்றுக் கொண்டனர். இதில் 6 பேருக்கு இலாகா அறிவிக்கப்பட்டது. கடந்த முறை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, கமல்நாத், ப.சிதம்பரம், கபில்சிபல் என பலருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அர்ஜுன்சிங், சைபுதீன் சோஸ், சிவராஜ் பாட்டீல், பரத்வாஜ், சிஸ்ராம் ஒலா போன்ற பல மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அமைச்சரவை யில் இடம் கிடைக்காது என்பதை அர்ஜுன்சிங், சிவராஜ் பாட்டீல் போன்ற வர்கள் ஏற்கனவே உணர்ந்திருந்தனர். ஆனால் இதை எதிர்பார்க்காத சைபுதீன் சோஸ், பரத்வாஜ், சிஸ்ராம் ஒலா ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர்.


சைபுதீன் சோஸ் பகிரங்கமாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எல்லோருக்கும் ஆசைகளும் கனவுகளும் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் பெற்றிபெற பாடுபட்டுள்ளேன். கடந்த முறை அமைச்சராக இருந்த போது சிறப்பாகப் பணியாற்றியுள்ளேன். இதை விட நான் என்ன செய்ய முடியும்? என வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதேபோல் முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மந்திரி பதவி கிடைக் காதது குறித்து கருத்து தெரிவித்த அர்ஜுன்சிங், ''நான் தளர்ந்து விட்டது உண்மைதான். ஆனால் அரசியலிருந்து இன்னும் ஓய்வெடுக்கவில்லை'' என்றார்.


இந்நிலையில் ஓரளவு செல்வாக்குள்ள மூத்த தலைவர்களுக்கு கவர்னர் பதவி கொடுத்து சமாதானப்படுத்த காங்கிரஸ் மே­டம் திட்டமிட்டுள்ளது.


தற்போது நாடு முழுவதும் 13 மாநிலங்களில் கவர்னர் பதவி கா­யாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக அணிக்கு தாவிய தெலுங்கானா கட்சி உடைகிறது!

ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) குறைந்த இடங்களே கிடைத்துள்ளதால் கட்சியின் அதிருப்தியாளர்களால் அக்கட்சி உடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கம் வேண்டும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கோரி வருகிறார். கடந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த இக்கட்சி, தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத தால் அங்கிருந்து விலகியது.


தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது கூட்டணியின் சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட்டது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. ஆனால் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து கொண்டார் சந்திரசேகர ராவ்.


தங்களது கட்சித் தலைவரின் எதேச் சதிகாரப் போக்கால் அவரது கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே சந்திரசேகர ராவின் செயல்பாடுகள் பிடிக்காமல் இக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பிரகாஷ், கட்சியிலிருந்து விலகினார். இக்கட்சியின் மற்றொரு ததலவரான திலீப் குமார், சந்திரசேகர ராவ் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார். கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்து தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வற்புறுத்தப் போவதாக திலீப் குமார் தெரிவித்துள்ளார்.


தெலுங்கானா தனி மாநில கோரிக்கையில் தீவிரம் காட்டும் ககாதியா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஜெயக்குமார், மக்கள் போர்ப்படை நக்சல் இயக்கத்தின் தலைவராக இருந்த பல்லதீர் கட்டார் ஆகியோர் இவரது புதிய கட்சி யில் இணைவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனி, 30 மே, 2009

79 .5 இது கணித எழுத்து அல்ல. சமுதாயத்தின் தலையெழுத்து!

பதினைந்தாவது நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, கடந்த முறையைவிட சற்றே கூடுதல் பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. காங்கிரசை பொறுத்தவரையில் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு விஷயத்தில் சிறு துரும்பையும் அசைக்கவில்லை என்பது சிறு குழந்தையும் அறியும். காங்கிரஸின் இந்த துரோகத்தை முன்வைத்துதான் தமிழகத்தில் காங்கிரசை ஆதரிக்கமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியவர்கள் பின்பு 'மாவட்ட முடிவு' என்று மாறி காங்கிரசை ஆதரித்தார்கள். இது ஒருபுறமிருக்க, ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ், முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தருமா? தராதா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தாலும், குறைந்த பட்சம் தனது மந்திரி சபையில் கூட முஸ்லிம்களுக்கு சரியான பிரதிநித்துவம் வழங்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் மொத்தம் 79 மந்திரிகள் இதுவரை பதவி ஏற்றுள்ளனர். இதில் முஸ்லிம் மந்திரிகள் எண்ணிக்கை வெறும் ஐந்துதான். இந்த ஐந்தும் கூட அதிகாரமுள்ள கேபினட் அமைச்சர்களா? என்றால் இருவர் தான் கேபினட் அமைச்சர்கள். ஒருவர் இணையமைச்சர்[தனிப்பொறுப்பு] மற்ற இருவர் வெறும் இணையமைச்சர்கள். மொத்தம் 29 முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளநிலையில், அளிக்கப்பட்ட மந்திரிகளின் சதவிகிதம் வெறும் 5 .8 சதவிகிதம்தான்.

சரி! முஸ்லிம்களின் ஆபத்துபான்டவர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் கருணாநிதியும், அவருக்கு வெண்சாமரம் வீசும் முஸ்லிம் அமைப்புகளும் இருக்கும் நிலையில், திமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தாத நிலையில், இப்போது மத்திய அரசில் திமுக மூன்று கேபினட் அமைச்சர்கள் உள்ளிட்ட எழு அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. திமுகவில் தான் முஸ்லிம் எம்பிக்கள் இல்லையே பின்பு எப்படி பதவி வழங்கமுடியும் என்று சில 'வெண்சாமரங்கள்' கேட்கலாம். ஆனால் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அப்துர்ரஹ்மான் முஸ்லிம் லீக் அமைப்பை சேர்ந்தவர் என்றாலும், அவர் திமுகவின் உறுப்பினராகி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர். நாடாளுமன்றத்தில் அவர் திமுக உறுப்பினராகவே கருதப்படுவார். கருணாநிதிக்கு உண்மையில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது பரிவு இருக்குமானால் அப்துர்ரஹ்மானை அமைச்சராக்கி இருக்கலாம். ஆனால் அவர்தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு இதயத்தில் இடம் தந்துவிட்டாரே!

தமிழக காங்கிரஸில் வாசனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது வரவேற்க தக்கதுதான்.ஆனால் நீண்டகாலமாக காங்கிரசில் இருக்கும் ஜே.எம். ஹாரூன் புறக்கணிக்கப்பட்டுள்ளார். காரணம் என்ன? மற்ற சமுதாயத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டால் அடுத்த தேர்தலில் அந்த சமுதாய மக்கள் ஒன்றுபட்டு தங்களின் எதிர்ப்பை வாக்குகள் மூலம் காட்டுவார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டால் அப்படி ஒரு நிலை வராது என்பது அனைத்து அரசியல் கட்சிகளும் அறிந்த உண்மை. ஏனெனில் இந்த அரசியல்வாதிகள் என்னதான் முஸ்லிம்களை புறக்கணித்தாலும், அவர்களுக்கு வெண்சாமரம் வீச அமைப்புகள் என்ற போர்வையில் சிலர் இருக்கிறார்கள். ஒருவர் கைவலித்து விசிரியை கீழே வைத்தால், அடுத்த தலைவர் வீச தயாராக இருக்கிறார்கள்.

வாழ்க சமுதாய தலைவர்கள்! வளர்க! இயக்கங்கள்!! வாழ்க தலையாட்டும் என் சொந்தங்கள்!!

இஸ்ரேல் ஆயுத ஊழல், ஏர் இந்தியா மேனேஜர் கைது!

இஸ்ரேலுடனான 1200 கோடி ரூபாய் ஆயுதபேரத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த ஏர் இந்தியா முன்னாள் துணை பொது மேலாளர் ரமேஷ் நம்பியாரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. இஸ்ரேல் மிலிட்டரி இண்டஸ்ட்ரீஸுடனான ஆயுத ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கமிசன் பெற, கொல்கத்தாவிலுள்ள ஆர்டினன்ஸ் ஃபேக்டரி போர்டு முன்னாள் டைரக்டர் ஜெனரல் சுதீப்தா கோஷிற்கு ரமேஷ் நம்பியார் உதவியதாக கடந்த தினம் சி.பி.ஐ தெரிவித்திருந்தது. இந்த ஊழல் தொடர்பாக கோஷ் மற்றும் அவரது உதவியாளர் கனாய்லால் தாஸையும் கடந்த 19 ஆம் தேதி சி.பி.ஐ கைது செய்திருந்தது. ரமேஷ் நம்பியாரின் கைப்பெட்டியிலிருந்து 1.29 இலட்சம் ரூபாயும் 19 ஆம் தேதி அவரின் வீட்டில் நடத்திய சோதனையில் 22.92 இலட்சம் ரூபாய் மற்றும் பல வெளிநாட்டு வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை சி.பி.ஐ கைப்பற்றியது. கொல்கத்தா மற்றும் டெல்லியில் சமீபகாலங்களில் சி.பி.ஐ நடத்தியப் பல்வேறு ரெய்டுகளில், சுதீப்தா கோஷிற்கும் தனியார் ஆயுத வியாபாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்கள் சி.பி.ஐக்குக் கிடைத்துள்ளது.கொல்கத்தாவிலிருந்து அஷீஷ் போஸ், டெல்லியிலிருந்து பிரதீப் ராணா ஆகிய இருவரையும் இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நான்கு நபர்களுக்கும் ஆயுத வியாபாரி சுதீர் சௌதரியுடன் தொடர்புண்டு என்ற விவரம் முன்னரே வெளியாகியிருந்தது.

முதல் செயற்கைக்கோளை ஏவுகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது முதல் செயற்கைக்கோளை வரும் அக்டோபர் மாதம் விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது. இது அந்நாட்டு அரசு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தொலைத் தொடர்பு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அல்-யாஹ் செயற்கைக்கோள் தொடர்பு நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் மார்டின் ஜீ, கலீஜ் டைம்ஸ் (Khaleej Times) நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், செயற்கைக்கோளின் வடிவம் மற்றும் அது சுமந்து செல்லும் பொருட்களின் எடை இறுதி செய்யப்பட்டு விட்டதாகக் தெரிவித்துள்ளார். யாஷாட்-1ஏ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், அந்நாட்டின் தொலைத் தொடர்பு சேவைக்காக பயன்படுத்தப்படும் என்றும் மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு சேவையை வழங்க இது பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.யாஷாட்-1ஏ செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், இதற்கு அடுத்தப்படியாக யாஷாட்-1பி என்ற செயற்கைக்கோளை 2011ஆம் ஆண்டின் மத்தியில் விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி?!

சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-2009 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான மூன்றாம் பரிசை வென்ற இக்கட்டுரையை வடித்தளித்த சகோ. எம்.பைஜுர் ஹாதிக்குச் சொந்த ஊர் மயிலாடுதுறையை அடுத்த நீடுராகும். M.Com, PGDBM பட்டதாரியான இவர் பெரும்பாலான இஸ்லாமிய இதழ்களில் எழுதி, சில போட்டிகளில் வென்றவருமாவார். துபையின் பிரபல்யமான ETA குழுமத்தின் Trading And Shipping துணை நிறுவனத்தில் Accountant ஆகப் பணியாற்றிக் கொண்டு, எழுத்துலகிலும் காலூன்றியுள்ள சகோதரரின் கட்டுரை, இவ்வாண்டுக்கான போட்டியில் மூன்றாம் பரிசை வென்றதற்காக நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். - சத்தியமார்க்கம் நடுவர் குழு.

அறுபத்திரண்டுஆண்டுகளுக்குமுன் நாம் விரட்டியடித்தது ஆங்கிலேயே அதிகாரிகளையும் அவர்களின் படைகளையுமே தவிர வேறில்லை என்ற உண்மையினைத் தற்போது உணர்ந்து கொண்டிருக்கிறோம். சுதந்திர தினக்கொண்டாட்டங்களை நாம் கொண்டாடுவதில் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. உண்மையாளர்களும் உழைப்பாளர்களும் சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்டோரும் நடுத்தர, மற்றும் அடித்தட்டு மக்களும் சுதந்திரம் என்ற வார்த்தையை வாசிக்கலாமேயொழிய ருசிக்க முடியாது என்ற நிலையே 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு இருக்கும்போது அரசியல்வாதிகளும் கொலைகாரார்களும் கொள்ளைக்காரர்களுமே சுதந்திரக் காற்றினை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1947இல் நிறுத்திய சுதந்திரப் போராட்டத்தினைத் தொடர வேண்டிய சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆங்கிலேய அதிகாரத்தை விரட்டியடித்த நாம், சாதீயக் கொடுமைகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் ஊழல் நிர்வாகத்தினையும் சிறுபான்மை விரோதப் போக்கினையும் மறுக்கப்படும் நீதியையும் விரட்டியடிக்க மறந்துவிட்டோம் என்று சொல்வதை விட மறுத்துவிட்டோம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆம், சுதந்திரப் போராட்டத்தின்போது சில தலைவர்கள்(?) செய்த சதியின், சூழ்ச்சியின் விளைவுகளைத்தாம் நாம் அனுபவித்து வருகிறோம்.
இத்தகைய சூழ்ச்சிகளை முறியடிக்கவும் உண்மையான சுதந்திரக் காற்றினை ஒவ்வொரு குடிமகனும் சுவாசிக்கவும் இந்தியா மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தினை சந்திக்கவேண்டியிருக்கிறது. சுதந்திரப் போராட்டம் எனும்போது அதனை எதன் வழியில் எடுத்துசெல்வது என்ற கேள்வி இயற்கையாகவே தோன்றும். ஆம், ஆங்கிலேயர்களின் அதிகாரத்தினை நாட்டிலிருந்து விரட்டியடிக்க இஸ்லாமியர்களின் வீரமும் தியாகங்களும் எவ்வாறு முன்னணியில் நின்றதோ அதுபோலவே தற்போதைய போராட்டத்திலும் இஸ்லாமும் முஸ்லிம்களுமே முன்னணியில் நிற்க முடியும். அதனை வழிநடத்தும் ஆற்றலும் தகுதியும் இஸ்லாத்திடமே இருக்கிறது என்பதனை உலகம் உணரத் துவங்கிவிட்டது. இந்தியா மற்றுமொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி தள்ளப்படுவதற்கான காரணங்கள் சிலவற்றை காண்போம்:

சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை:

"இந்திய தேசத்தில் முஸ்லிமாக இருப்பதுதான் இப்போது உலகில் ரிஸ்க்கான விஷயம்!" (ஆனந்த விகடன்20-08-08).

இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது என்பதற்கு பாகல்பூர், சூரத், பம்பாய், கோயம்புத்தூர், குஜராத், ஒரிஸ்ஸா முதல் காஷ்மீர் வரை நிகழ்ந்த - நிகழ்ந்து கொண்டிருக்கின்ற காட்சிகளே போதுமானது. சமூக விரோதிகள் ஒரு பக்கம் சிறுபான்மை மக்களைத் தாக்குகிறார்கள்; காவல்துறை மற்றொரு பக்கம் தாக்குகிறது. அரசுகள் மெளனமாக வேடிக்கை பார்க்கின்றன. பள்ளிவாசல்களும் கிறிஸ்தவ ஆலயங்களும் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கப் படுகின்றன. இஸ்லாமியப் பெண்கள் மற்றும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளின் கற்புகள் ஆர்.எஸ்.எஸ் போன்ற சமூக விரோதிகளால் சூரையாடப்படுகின்றன. இதற்குக் காரணமான கொடூரர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படுவதற்கு பதிலாக அரசின் அரவணைப்பில் ஆனந்த வாழ்வு வாழுந்து கொண்டிருக்கிறார்கள். என்கவுண்ட்டர் என்ற பெயரில் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவதும் கேள்விக்கணக்கின்றி ஆண்டுகணக்கில் எந்தவிதமான விசாரணையுமின்றி சிறையிலடைக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டன. இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா? சுதந்திரம் என்பது இதுபோன்ற கயவர்களூக்குதானா? இதுபோன்ற நிகழ்வுகள் சிறுபான்மை சமூகத்தை மீண்டுமொறு சுதந்திர போராட்டத்தினை நோக்கியே இட்டுச் செல்லாதா?. சிறுபான்மை மக்களும் சுதந்திரக் காற்றினை சுவாசிக்க அரசுகள் ஆவன செய்யாமல் அடிமைத் தனத்தில் ஆழ்த்தும்போது மீண்டுமொரு சுதந்திரப் போராட்டமே சரியான தீர்வாக இருக்கமுடியும். மதச்சார்பற்ற இந்தியா என்பது வார்த்தைகளில் இருக்கிறதேயொழிய வாழ்க்கையில் இருப்பதாகத் தெரியவில்லை. உரிமைகளையே சலுகைகள் என்ற பெயரில்தான் பெறமுடியும் என்ற அவலநிலையிலேயே சிறுபான்மையினர்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்வதும், அரசும் காவல்துறையும் மதவெறி பிடித்தவர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் உறுதியாக எடுக்க மறுப்பதின் விளைவே சிறுபான்மை மக்கள் ஒரு சுதந்திரப் போராட்டத்தினை நிகழ்த்தக் காரணங்களாக இருக்கிறது.

சாதீய பாகுபாடு:

"இந்தியாவில் சட்டங்கள் ஆட்சி செய்யவில்லை, சாதிகளே ஆட்சி செய்கின்றன" - ஆம்னெஸ்டி 2008

இந்த வார்த்தையில் இருக்கும் உண்மையையும் சொல்லித்தான் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. தற்போதைய நாட்டு நடப்புகளை பார்த்தாலே எளிதில் தெரிந்துவிடும்.

இந்தியாவில் உண்மையான பெரும்பான்மை மக்களாகத் திகழும் ஆதிதிராவிட, தலித்தின அன்பர்களின் வாழ்வுரிமை இன்று கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை. இந்தியாவில் இருக்கும் தலித்துகளில் சுமார் 60 சதவீதம் பேர் தனக்கென சொந்தமாக ஒரு சிறுதுண்டு நிலமில்லாதவர்களாகவும் அதில் 40 சதவீதம் பேர் அடிமைத் தொழிளாளர்களாகவும் இருப்பதாக ஓர் அறிக்கை கூறுகிறது. ஏறக்குறை இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் சாதியக் கொடுமை அரங்கேறுவது வாடிக்கையாகிவிட்டது. மாட்டிற்கு வழங்கும் மரியாதையை மனிதனுக்கு வழங்க மறுக்கும் ஆதிக்கவர்க்கத்தினைத் தண்டிக்க இந்திய அரசுகள் மெத்தனம் காட்டுவது நாம் உண்மையிலேயே சுதந்திரம் பெற்றுவிட்டோமா? என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது. தலித்துகளை உயிரோடு எரிப்பதும் தலித் பெண்களின் கற்புகள் சூறையாடப்படுவதும் தலித்துகள் மனிதனின் மலத்தினை திண்ண வற்புறுத்தப் படுவதும் ஆங்காங்கே அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. வற்றுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க அரசுகள் திராணியற்று நிற்கும்போது மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தினை துவங்குவதைத்தவிர வேறுவழி இருப்பதாக தெரியவில்லை.

D துல்சிராம் என்ற ஒரு சமூக ஆர்வளர் கூறுகையில் "இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகிலிருந்து ஏறக்குறைய சுமார் 10 லட்சம் தலித்துகள் கொல்லப்பட்டும், 30 லட்சம் தலித் பெண்களின் கற்பு கயவர்களால் சூறையாடப்பட்டுள்ளதாக"வும் கூறுகிறார். "இது சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்றப் போர்களில் நாம் இழந்த இராணுவத்தினரின் எண்ணிக்கையை விட 25 மடங்கு அதிகமாகும்" என்றும் அவர் கூறுகிறார்.

1991ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட ர் அறிக்கையின்படி ஒரு நாளைக்குச் சராசரியாக 2 தலித்துகள் கொல்லப்படுவதாகவும் 3 தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் 2 தலித்துகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுவதாகவும் கூறுகிறது.

இத்தகைய சூழ்நிலையின் எதிர்வினை என்னவாக இருக்க முடியும்?. நிச்சயமாக மீண்டுமொரு சுதந்திர போராட்டத்தினை நிகழ்த்துவதாக மட்டுமே இருக்க முடியும்.

நீதி(?) த்துறை:

"இந்திய அரசு என்பது நீதி மறுக்கப்பட்ட ஒரு அபாயப் பிரதேசம்" - தருண் தேஜ்பால்

அசாமில் மோர்காவ் எனும் கிராமத்தில் 27.12.2008 அன்று மசாவ் லாலூங் என்ற 80 வயது முதியவர் இறந்தார். இது ஒரு செய்தி அல்ல. ஆனால், அவரது 60 ஆண்டு கா வாழ்க்கை இந்திய சிறையிலேயே கழிந்தது என்பதுதான் செய்தி. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனையாக அல்ல. வெறும் விசாரணைக் கைதியாக என்பதுதான் இதில் உச்சக்கட்டக் கொடுமை.

இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா? நம் முன்னோர்கள் செய்த தியாகங்களின் பலன் இதுதானா? அதற்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுவா?

நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறையே இவ்வளவு அநியாயமாக நடந்துக்கொள்ளுமேயானால் நீதியைத்தேடி மக்கள் எங்கே செல்வார்கள்?. வெளியில் வந்தது ஒரு மசாவ் லாலூங் என்றால் வெளியில் வராத எத்தனை எத்தனை லாலூங்குகள் இருக்கிறார்களோ? சிறையில் கழித்த ஆண்டுகள் வேண்டுமானால் ஒருவேளை குறைவாக இருக்கலாம். குற்றவாளிகளைத் தண்டிக்க இந்தியாவில் சட்டங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்ததாக வரலாறு இல்லை. ஏன்? சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் ஒருபுறமென்றால் தாமதப்படும் நீதியே தலையாய காரணமாக இருக்கிறது. தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் அல்லது தவறு இல்லையென்றால் விடுதலை செய்யவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இவை இரண்டையுமே செய்ய நீதிமன்றங்கள் அலட்சியம் செய்கின்றன.

சுதந்திர(?) இந்தியாவின் நீதித்துறையில் கறுப்புக் காலங்கள் ஏராளம். அவற்றுள் குறிப்பாகக் கூறவேண்டுமெனில் தடா என்ற கொடூரமான சட்டம் அமலில் இருந்த காலமும் ஒன்று. தடா சட்டத்தின் மூலம் "66,000 அப்பாவிகள் எவ்விதக் குற்றமும் செய்யாமல் எவ்வித வழக்கு விசாரணையும் நடைபெறாமல் காவல் துறையாலும் நீதிமன்றத்தாலும் பல ஆண்டுகள் சட்ட விரோதமாகச் சிறைவைக்கப் பட்டுத் தண்டிக்கப்பட்டனர். 725 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டது".

தற்போதைய நீதித்துறையைப் பற்றி புகழ்பெற்ற சமூக ஆர்வளர் அருந்ததி ராய் கூறுகையில்

"நீதிமன்றங்களில் மக்கள் இயக்கங்கள் நியாயம் வேண்டி நின்ற காலம் ஒன்று இருந்தது. நீதிமன்றங்கள் அநீதியான தீர்ப்புகளைத் தருகின்றன. வறிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் நீதிமன்றம் பயன்படுத்தும் மொழியைக் கேட்கும்போது, அதிர்ச்சியில் நமது மூச்சே நின்றுவிடும் போலிருக்கிறது" - - தெஹல்கா: 31.03.07

நீதிகள் மறுக்கப்படும் போதும் தாமதப்படும் போதும் அதனை எதிர்த்து போராடாமல் அமைதி காப்பது எந்த விதத்திலும் நியாயமாக இருக்க முடியாது. சுதந்திர இந்திய வரலாற்றில் எத்தனையே இயக்கங்கள் தடை செய்யப்பட்டதுண்டு. அதில் சிமியும் ஒன்று. ஆனால் தடை செய்யப்பட்ட மற்ற இயக்கங்களுக்கும் சிமி தடை செய்யப்பட்டதிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்திய நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு விரோதமாகச் செயல்பட்டதற்கான ஆதரங்களை வைத்துதான் அனைத்து இயக்கங்களும் தடைசெய்யப்பட்டன. ஆனால் தடை செய்த பிறகு ஆதாரங்களைத் தேடி அரசும் காவல்துறையும் அலைவது சிமிக்கு மட்டுமே பொருந்தும். (இந்த ஆக்கம் உருவாகும்வரை சிமிக்கு எதிராக இந்தியக் காவல்துறையினரால் வலுவான ஓர் ஆதாரத்தைக்கூடத் திரட்டமுடியவில்லை). நாட்டில் சதி வேலைகளில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட சிமி இயக்கத்தினர் மீது தொடரப்பட்ட வழக்குகள் பற்றி தெஹல்கா என்ற இணையதளம் தனது ஆய்வறிக்கையில் கூறுகையில், "அனைத்தும் ஆதாரங்கள் அற்றவை; குற்ற விசாரணைகளின் சாதாரண அடிப்படை நடைமுறை நடவடிக்கைகள்கூட மறுக்கப்பட்ட வழக்குகள்; இந்திய இளம் தலைமுறையினருடைய வாழ்க்கையை, அவர்களுடைய குடும்பங்களுடைய வாழ்க்கையை ஈவிரக்கமின்றிக் கசக்கி எறியும் வழக்குகள் அவை" என்று குறிப்பிட்டது இங்கு நினைவு கூரத் தக்கது.

நீதியைக் காக்க வேண்டிய காவல்துறையினர்மீது பெரும்பாலான இந்திய மக்கள் எப்பொழுதுமே நம்பிக்கை வைப்பதில்லை. நீதியை வழங்கவேண்டிய நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கை ஊசாலாடிக்கொண்டிருப்பதின் தாக்கமே இந்திய சமூகத்தை உண்மையா சுதந்திர தாகத்தினை நோக்கி இட்டுச்செல்கிறது.

ஊழல்மயம், லஞ்சமயம்:

"இந்தியாவுடைய மந்தமான வளர்ச்சிக்கு முதன்மை காரணம் ஊழல்" - என். விட்டல், முன்னாள் இந்திய ஊழல் தடுப்பு ஆணையர்.

ஆம், நூறு சதவீதம் இது உண்மை என்று சொல்லலாம். இந்தியாவிற்கும் இந்திய ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் எதிர்காலத்திற்கும் முக்கியமான ஆபத்தாக விளங்குவது ஊழல்தான். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு தங்க பதக்கம் வாங்கினாலே அது உலக சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தியர்களிடம் திறமையில்லை என்று அர்த்தமில்லை. விளையாட்டுத் துறையிலும் ஊழல் நிறைந்திருப்பதே இதற்கும் காரணம். ஆனால் ஊழலில் யார் முதலிடம் பிடிப்பார் என்று போட்டி வைத்தால் இந்தியா அதில் வெற்றிக்கொடி நாட்டி விடும். இந்த அளவிற்கு தலைவிரித்தாடும் ஊழலானது இன்று நேற்று உருவானதல்ல. சுதந்திர(?) இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னாலயே அது தோன்றி விட்டது.

லஞ்சத்திலும் ஊழலிலும் மூழ்கியிருப்போர் சதவீதத்தில்

அமைச்சர்கள் / அரசியல்வாதிகள்

98 %

காவல்துறையினர்

97 %

அரசு அதிகாரிகள்

88 %

வழக்கறிஞர்கள்

80 %

தொழிலதிபர்கள்

76 %

வங்கி அலுவலர்கள்

69 %

நீதிபதிகள்

66 %

பத்திரிக்கையாளர்கள்

55 %

ஆசிரியர்கள்

43 %

சாதாரண குடிமக்கள்

38 %

கடந்த ஐம்பது ஆண்டுகால ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கினால் இந்த அளவிற்கு இந்தியாவை அது அச்சுறுத்துக்கொண்டிருக்கிறது. ட்சியாளர்கள் முதல் சாதார குடிமகன்வரை இந்தியாவில் ஊழலும் லஞ்சமுமே ஆதிக்கம் செலுத்துகிறது. அனைத்து மட்டத்திலும் அது மிக வலுவாக காலுன்றியிருப்பதனை பல ஆய்வறிக்கைகள் நமக்கு தெள்ளத்தெளிவாக நிரூபிக்கின்றன.

இந்த உண்மை மிகக் கேவலமானது! மற்ற நாடுகளில் காணப்படும் லஞ்சத்திற்கும் இந்தியாவில் காணப்படும் லஞ்சத்திற்கும் பெரிய வித்தியாசம் என்னவென்றால் மற்ற நாடுகளில் அதிகாரிகள் தங்களுடைய கடமை தவறுவதற்குத்தான் லஞ்சம் கேட்பார்கள். ஆனால் இந்தியாவில் தங்களுடைய கடமையை செய்வதற்கே அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். இந்தியாவை நாம் ஏழ்மையான நாடு என்று கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சுவிஸ் வங்கியில் அடைபட்டிருக்கும் தொகையில் இந்திய அளவைப் பார்க்கும் எவரும் இனி அப்படி சொல்ல மாட்டார்கள். 2006ஆம் ஆண்டு சுவிஸ் வங்கி வெளியிட்ட கணக்கின்படி இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகையானது சுமார் 1456 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது வெளிநாடுகளில் இந்தியாவிற்கு இருக்கும் கடன் தொகையை விட 13 மடங்கு அதிகம். இதில் ஏற்க்குறைய 95 சதவீதம் கருப்புப் பணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதி ல்லை. சுவிஸ் நாட்டிற்கு ஆண்டுதோறும் சுமார் 80,000 இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் சிறியதொரு இடைவெளிக்கு ஒருமுறை செல்வதாகவும் ஒர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பயணம் மேற்கொள்ளும் இவர்கள் சுற்றுலா பயணிகள் அல்ல. கருப்புப் பணத்தை அங்கே போடுவதற்காகச் செல்பவர்கள். ஊழல் தொடர்பாக பல வழக்குகள் இந்தியாவையே உலுக்கிய வரலாறுகள் உண்டு:

போபர்ஸ் பீரங்கி பேர வழக்கு

ஜெ.எம்.எம்.எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழக்கு

பங்குச்சந்தை ஹர்ஷத் மேத்தா வழக்கு

யூரியா ஊழல் வழக்கு

ஹவாலா வழக்கு

என அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் மேற்கூறி அத்தனை வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவே இல்லை என்பதுதான் நாம் இங்குத் தெரிந்து கொள்ள வேண்டிய சுதந்திர இந்தியாவின் கசப்பான உண்மை. வறியவர்களிடமிருந்து லஞ்சமாகக் கொள்ளையடிக்கப்பட்ட பணம் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயனளிக்காமல் முடங்கி கிடக்கிறது. ஏழை எளியவர்கள்மீது தனது அதிகாரத்தைப் பிரயோகிக்கும் அரசுகள், ஊழல்வாதிகளின் மீதும் கருப்புப் பண முதலைகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் இந்தியா மீண்டுமொரு சுதந்திர போராட்டத்தினைச் சந்தித்தே தீர வேண்டும்.

அடாவடி அரசியல்:

தங்களுடைய உயிர், உடைமை, உற்றார் உறவினர்களை இழந்த தியாகச் செம்மல்களால் பெறப்பட்ட சுதந்திர இந்தியா(?) இன்றோ அயோக்கியர்களும் அடாவடிகளும் ஆதிக்கம் செய்யும் புகலிடமாக மாறியுள்ளது. நாட்டை வழிநடத்துவதற்காக மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட உறுப்பினர்களின் அனேகம் பேர்களே நாம் கூறிய அயோக்கியர்கள். ஓர் ஆய்வறிக்கையின்படி தற்போதைய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் சுமார் 120 உறுப்பினர்கள் குற்றவழக்கினை ஆனந்தமாக சுமந்து கொண்டிருப்பவர்கள். இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 22.10 சதவீதமாகும். இவர்கள் அரங்கேற்றியது சாதாரண குற்றமாக இருக்கக் கூடுமென்று நினைத்தால் நாம்தான் பெருத்த ஏமாளியாக இருப்போம். ஏனெனில், இவர்கள் செய்த குற்றங்களின் வரிசையைப் பார்த்தால்,

கொலை செய்தது,

கொலை செய்ய முயன்றது,

கொள்ளையடித்தது,

பெண்களின் கற்பைச் சூறையாடியது,

ஆட்களைக் கடத்தியது,

அதிபயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது,

சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது

ன, சட்டம் இயற்ற(!)க் கூடிய இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. இதில் எந்த கட்சியைச் சார்ந்தவர்கள் முதலிடம் பிடிப்பார்கள் என்பது பெரிதாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. நாட்டில் எங்கு வன்முறை வெறியாட்டம் நடந்தாலும் சரி, அப்பாவிகளை அதிலும் குறிப்பாக முஸ்லிமைகளைக் குறிவைத்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினாலும் சரி, மக்களை உயிருடன் கொளுத்துவதிலும் சரி, அப்பாவிப் பெண்களை கற்பழிப்பதிலும் சரி முதலிடம் வகிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கூட்டமான பி.ஜே.பி.தான் இதிலும் முதலிடம் வகிக்கிறது. குற்றப்பின்னணியுள்ள இந்த 120 எம்.பி.க்களில் சுமார் 29 உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் வகுப்பறையில் பயின்ற பி.ஜே.பி கட்சியினைச் சார்ந்தவர்கள். அடுத்தடுத்த இடங்களில் காங்கிரஸ் =24, சமாஜ்வாதி =11, ரா.ஜனதா தளம் =8, சி.பி.எம் =7, பகுஜன் சமாஜ் கட்சி =7, தே.காங்கிரஸ் =5, சி.பி.ஐ.=2, மீதமுள்ள வக்குகளை மற்ற கட்சிகள் பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மேற்கூறிய ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறான கொள்கையுடையவை என்பதுதான். ஆக, நாடாளும் மன்றத்தில் ஒருவர் உறுப்பினராக வேண்டுமென்றால் அவர் மேற்கூறிய குற்றங்களில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது எழுதப்படாத தகுதியாக நடைமுறைக்கு வந்துவிட்டதின் வெளிப்பாடே இவைகள். கொலைப் பின்னணியும் கொள்ளைப் பின்னணியும் கற்பழிப்பு பின்னணியுமுடையவர்கள் ஆட்சி அதிகாரத்தில் ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கும்போது சாதாரண மக்களுக்கோ, எளியவகளூக்கோ, வழிவர்களுக்கோ, பெண்களுக்கோ எப்படி பாதுகாப்பு இருக்க முடியும்?. ஆங்கிலேய ஆட்சி 50 வருடத்திற்கு முன்பு எண்ணவெல்லாம் செய்ததோ அதனையே இன்று நம் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க ஒரு சுதந்திரப் போராட்டம் தேவைப்பட்டதுபோல் தற்போதும் நம் நாட்டில் புரையோடிப் போய்விட்ட மேற்கூறிய அனைத்துவகைக் குற்றங்களையும் களையெடுப்பு நடத்திட இன்னும் ஒரு சுதந்திரப் போராட்டம் தேவைப்படுகிறது.

இந்தியா மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய அவசியத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கா சொற்ப காரணங்களை மட்டுமே நாம் மேலே சுருக்கமாக ஆராய்ந்தோம். ஆனால் உண்மையில் அவை மட்டுமே காரணங்களாக இருக்காவிட்டாலும் அவை முக்கியக் காரணங்கள் என்பதனை அரசுகள் சிந்திக்க வேண்டும். இந்திய அரசு இயந்திரங்கள் காட்டும் முஸ்லிம் விரோதப் போக்கினை விளக்க முற்பட்டோமேயானால் அதன் பட்டியல் நீளும் என்பதனை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்திய மக்களை அரசு இயந்திரங்கள்தான் புதியொரு சுதந்திர வேட்கையை நோக்கி இழுத்துச்செல்கிறது என்பதனை அரசுகள் உணர வேண்டும். நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் ஏறக்குறைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் அரசுகளும் அரசு இயந்திரங்களும் நீதித்துறையும் காட்டும் பாரபட்சமான பார்வைகளூம் நேர்மையற்ற நடவடிக்கைகளும் ஒரு தலைபட்சமா அணுகுமுறைகளுமே என்பதுதான் நிதர்சனமா உண்மை. சாதாரண மற்றும் அடித்தட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டிய பத்திரிகைத் துறையோ இந்தியாவில் என்றோ தோற்றுவிட்டது. பாசிச மயமாகிவிட்ட இந்திய ஊடகத்துறையினால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளி உலகிற்கு எடுத்துரைக்க இயலாது என்பதனால் இனிவரும் காலங்களில் தங்களால் இயன்ற வழியில் மக்களே போராட வேண்டும் அதன் மூலமே வெற்றியினையும் ஈட்ட வேண்டும்.

மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான் (அல் குர் ஆன் 14:42)

(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், தீயதும், நல்லதும் சமமாகா. எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்று நீர் கூறுவீராக (அல் குர் ஆன் 5:100).

ஆக்கம்: எம்.பைஜுர் ஹாதி, நீடூர்.