செவ்வாய், 10 டிசம்பர், 2013

ஆர்.எஸ்.எஸ்.இரகசிய சுற்றறிக்கை




தமிழர்களே!
                              தமிழனாய் பிறந்த நாம்,இந்தியா எங்கின்ற ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கோண்டு ஒற்றுமையாய் வாழ்ந்து வருகிறோம்.ஆரிய சூழ்ச்சியாலும்,திராவிட துரோகத்தாலும் தமிழன் கொஞ்சம்,கொஞ்சமாக  தன் தமிழ் தாயின் மடியிலேயே தன் அடையாளத்தை தொலைத்து வருகிறான் மதமற்ற தமிழனிடம் வைதீக மதமாக உட்புகுந்த பிராமணியம் ஆட்சி அதிகாரத்தின் துனை கொண்டு இந்து மதமாக உருமாற்றம் செய்து உழைப்பு பிரிவினையை , மாற்ற முடியாத சாதி பிரிவினையாக நிலைபெறச் செய்தது.இச் சாதி வேற்றுமையின் கொடுமை தாங்காது,மாற்று மதமாகிய இஸ்லாம்,கிறித்துவ மதத்திற்கு தமிழர்களில் ஒரு பகுதியினர் மாறிச்சென்றனர்.இன்நிலையில் அகண்ட பாரதம் என்னும்(இந்தியா,பாக்கிஸ்தான்,இலங்கை,பர்மா,மலேசியா,இந்தோனேசியாவை உள்ளடக்கிய) இந்துதுவ பாசிச கொள்கையை கொண்ட ஆர்.எஸ்.எஸ்.,சங் பரிவார் கூட்டம் திடீரென்று தமிழ் தேசியம்,தமிழர் நலன்,ஈழ விடுதலை பேசி வருகிறது தமிழ் நாட்டில் மட்டும்.நாடு முழுவதும் தேசிய இனப்பிரச்சனை கூர்மை அடைவதை கண்ட அகண்ட பாரத சங் பரிவார் கூட்டம் அதே தேசிய இனப் பிரச்சனையை பேசி குழப்பம் விளைவிக்கின்றது.தமிழ் தேசிய வாதிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழ் பற்றாளர்களில் ஒரு பெரும் பிரிவினர் இந்த அகண்ட பாரத கூட்டம்,போட்டுக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய முகமூடியை அறிந்தும்,அறியாமலும் பின்னே சென்று கொண்டிருக்கிறது.இந்த சங் பரிவாரங்கள் இந்திய தலைமையை கைப்பற்றினால் தமிழ் தேசிய எழுச்சி இன்னும் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என்பது தவிர்க்க  முடியாத்தாகிவிடும்.15 ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தன் சங் பரிவாரங்களுக்கு அனுப்பிய இரகசியச் சுற்றறிக்கையின் தமிழாக்கம் விடுதலை நாளிதழில் (27/03/1995)வெளியான தகவல் இங்கு தரப்படுகிறது.இதை பார்த்த பிறகாவது தமிழர்கள் பி.ஜே.பி. யையும்,பி.ஜே.பி. யுடன் கூட்டுச்சேரும் கட்சியையும் புறக்கணித்து தேர்தலில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
http://madhamatratamilan.blogspot.ae/2013/12/blog-post_7.html?m=1

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்


(http://cmcell.tn.gov.in/register.php ) என்ற
முகவரியில் சென்று தங்களின்
புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக
தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள்
அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/login.php )

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....

Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

சனி, 10 ஆகஸ்ட், 2013

இந்தியாவை ஜாதி மத அடிப்படையில் துண்டு துண்டாக உடைக்க B.J.P சதி



காங்கிரஸ் சிறுபான்மையினருக்கு சலுகை என்று கூறி உங்களை அந்நியப்படுத்தி ஏமாற்றி வருகிறது. கல்வி வேலை வாய்ப்பில் உங்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை. நீங்கள் வாழ்வில் முன்னேறாமல் இருக்க காங்கிரஸ்தான் காரணம், நாங்கள் வந்தால்தான் உங்களுக்கு சம உரிமை கொடுத்து உங்களை வாழ்வியல் ரீதியில் முன்னேற்றுவோம், (ஆறு வருடங்களாக ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை என்பது வேறு விஷயம்) என்று ஊடங்களில் பிதற்ரி வரும் போலி காவி கும்பலே, உங்கள் தேவதூதன் மோடி ஆட்சியில் நடந்துள்ள இன்னொரு கொடூரம் இதோ:-

அதிர்ச்சி தகவல்:- குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள ஹிமாலயா மால் எனும் ஷாப்பிங் மாலில் முஸ்லீம்களுக்கு மட்டும் ரூ.20/-நுழைவு கட்டணம் வசூலிக்கும் கொடுமை....!! ........ரமலானில் முஸ்லீம்களை கேவலப்படுத்திய குஜராத் நரேந்திர மோதி அரசு....!! ..........நரேந்திர மோதியை பிரதமர் ஆக்கிட்டீங்கன்னா இந்தியா முழுக்க முஸ்லீம்கள் எங்கு சென்றாலும் கட்டணம்,தடை போன்றவை அமுலாகும் அபாயம்.....!! ......அப்படியே இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 19(1)(d)-Freedom of movement-ஐ தூக்கி குப்பைல வீசிடுங்கடா.....!!

இனி சம உரிமை பேணுவோம் என்று ஊடகங்களில் புலம்பும் நாதரிகளையும், மலேஷியாவில் பாருங்கள் பாத்ரூமில் சாப்பிட சொல்கிறார்கள் என்று குரைக்கும் பைரவன்களையும், கேரளாவில் பாருங்கள் நோன்பு நாளில் பிள்ளைகளை சாப்பிட மறுக்கிறார்கள் என்று உறுமும் வராகங்களையும், பார்த்தால் செருப்பால் அடிக்கவேண்டும். த்தூ...நாதாரிகளே.......

http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/On-Eid-Ahmedabad-mall-charges-entry-fee-from-Muslims/articleshow/21737568.cms


 நன்றி:Natpudan Nowshath
 https://www.facebook.com/photo.php?fbid=498196050254631&set=a.447702705303966.1073741828.443385899068980&type=1&ref=nf

தமிழகத்தில் பார்ப்பணுத்துவம்


பார்ப்பனத்துவ ஆதிக்கம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தமிழகத்திலும், சமூக-அரசியல்-கலாச்சார நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெளிவான, உறுதியானக் கொள்கையை அந்தக் கட்சியின் துவக்க விழாவில் செப்டம்பர் 18, 1949 அன்று அறிஞர் அண்ணா அழகாக படம்பிடித்துக் காட்டினார்: “திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான், திட்டமும் வேறு அல்ல, என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டு பட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வட நாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வட நாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக்காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும்.” ஆனால் கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. அதே வைதீகபுரியோடும், வடநாட்டு ஏகாதிபத்தியத்தோடும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, பா.ஜ.க. அரசில் அங்கம் வகித்தது, பின்னர் காங்கிரசு அரசிலும் பங்கேற்றது. திரு. கருணாநிதியின் குடும்பத்தினரே பார்ப்பன கோவில்களில் பயபக்தியோடு வழிபடுவதும், கோவிலுக்குப் போய்விட்டு தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதும் வேதனையான “திராவிட முன்னேற்ற” உண்மை.
தமிழகத்தின் இன்னொரு முக்கியக் கட்சியான அ.தி.மு.க. பார்ப்பன மூட நம்பிக்கைகளில் முழு நம்பிக்கையுள்ள ஒரு பார்ப்பனப் பெண்ணான செல்வி. ஜெயலலிதாவால் வழிநடத்தப்படுகிறது. அவர் வெற்றி பெற்ற சிறீரங்கம் தொகுதியில் ஒரு பார்ப்பனர் “பிராமணாள் கபே” எனும் உணவகத்தை 2012 அக்டோபர் மாதம் துவங்கினார். தந்தை பெரியார் காலத்தில் அவரால் போராடி மூடப்பட்ட “பிராமணாள் கபே” தற்போது திரும்பவும் முளைப்பது கவனிக்கப்பட வேண்டிய நிகழ்வு. பெரும்பாலான தமிழக அரசியல் தலைவர்கள் ஜோதிடர்களை சந்திப்பது, ஜாதகம் பார்ப்பது, தோஷ நிவர்த்திக்காகப் பரிகாரங்கள் செய்வது என்றே செயல்படுகின்றனர். பொதுக் கலாச்சாரத்திலும் பிரதோஷம், சந்திராஷ்டமம், அக்ஷயத் திருதியை என்பன போன்ற வார்த்தைகள், கருத்தியல்கள், நம்பிக்கைகள் புகுந்து அழிவைத் தருகின்றன. பார்ப்பன மந்திரங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்கள் வீட்டு விழாக்களிலும் வந்தேறி விட்டன.
இன்னொரு பக்கம் கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள், நியூட்ரினோ ஆய்வு மையம், இராணுவத் தளவாட தயாரிப்பு நிலையங்கள் போன்றவை வரவேற்கப்படுகின்றன. தி.மு.க. - அ.தி.மு.க. எனும் தமிழகத்தின் இரண்டு முக்கியக் கட்சிகளுமே பார்ப்பணுத்துவத்தை எந்தக் கேள்வியும் கேட்காது ஏற்றுக்கொள்கின்றன. தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது மாநிலங்களவை கன்னிப்பேச்சில் (2007) இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசினார். “நான் நிகழ்த்தவிருக்கும் இந்த முதல் பேச்சானது முக்கியத்துவம் வாய்ந்த 123 ஒப்பந்தத்தைப் பற்றிய என் கட்சியின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும்” என்று சொன்ன அவர் “இவ்விஷயத்தில் எங்கள் கட்சியோ அல்லது கட்சித் தலைவரோ தங்கள் நிலைபாட்டிலிருந்து என்றுமே மாறியதில்லை என்பதை நான் இங்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பவர்கள்தாம்” என்றார். தொடர்ந்து பேசிய கனிமொழி பார்ப்பணுத்துவத்தை விவரித்தார்:
இந்த 123 ஒப்பந்தமானது தானாக ஒன்றும் வந்துவிடவில்லை. இதை ஆரம்பித்து அப்போதைய அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்திய பாரதீய ஜனதா கட்சி முதல் இப்பொழுதும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் புதுதில்லி மற்றும் வாஷிங்டனில் உள்ள இன்றைய அரசுகள்வரை, இந்த ஒப்பந்தத்தை நம் நாட்டின் வளர்ச்சிக்கான - அதாவது, 300 மில்லியன் மக்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவித்தல், பாலின மற்றும் ஜாதிப் பாகுபாடு, கிராமப்புறத்தை அலட்சியப்படுத்துதல் மற்றும் கல்லாமையை ஒழித்தல் ஆகியவற்றுக்கான - ஒரு கருவியாகவே கருதிவந்துள்ளனர்.
சீன ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து 1962-ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அண்ணா நிகழ்த்திய சொற்பொழிவில் இடம்பெற்ற வார்த்தைகளோடு கனிமொழி தனது உரையை முடித்துக்கொண்டார்: "நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தற்பொழுது உருவாக்கப்பட்டுவரும் பெருமைமிகு வருகைப் பதிவேட்டில் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) பெயரைப் பதிவுசெய்கிறேன்!". இப்படியாக அண்ணா தனிநாடு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல, கனிமொழி தி.மு.க.வின் தமிழர்நலக் குரலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிய பிறகு, போராடும் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக தி.மு.க. தலைவர் ஓரிரு குழப்பமான அறிக்கைகள் விடுத்தாலும், அவர்களின் பார்ப்பணுத்துவ நிலைப்பாடு அப்படியேத் தொடர்கிறது.
அ.தி.மு.க.வின் கதையும் கிட்டத்தட்ட இதே போன்றதுதான். கூடங்குளம் அணுமின் நிலயத்துக்கு எதிரானப் போராட்டம் 2011 செப்டம்பர் மாதம் துவங்கியபோது, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா அந்தத் திட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். பிறகு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, போராடும் மக்களிடம் “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று உத்தரவாதம் அளித்தார். கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி போராளிகளோடுப் பேசுவதற்கு தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழுவில், அணுசக்தித் துறையைச் சார்ந்த எம். ஆர். ஸ்ரீநிவாசனையே உறுப்பினராக நியமித்தார். பின்னர் 2012 மார்ச் மாதம் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், மீண்டும் கூடங்குளம் திட்டத்தை ஆதரித்தார். 2012 செப்டம்பர் மாதம் காவல்துறை வன்முறையை ஏவிவிட்டு, “கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. அணுஉலை திறக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அணுஉலைக்கு எதிர்ப்பு என்ற கொள்கையுடைய எதிர்ப்பாளர்களின் மாயவலையில் மீனவர்கள் யாரும் விழ வேண்டாம்” என்று கோரிக்கை வைத்தார்.
தமிழகக் காங்கிரசு கட்சி, பாரதீய ஜனதா கட்சி, இந்து முன்னணி போன்ற பார்ப்பணுத்துவ இயக்கங்கள் எல்லாம் போராடும் மக்களை தேசத்துரோகிகள் என்று வர்ணித்தனர். தமிழகத்தில் அணுசக்திக்கு ஆதரவாக, கூடங்குளம் போராட்டத்துக்கு எதிராக எழுதிய, பேசிய, செயல்பட்ட பார்ப்பணுத்துவவாதிகளுள் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள்: ‘தினமலர்’ உரிமையாளர்கள் லெட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி, கோபால்ஜி, ‘துக்ளக்’ ஆசிரியர் சோ ராமசுவாமி, ‘இந்து’ உரிமையாளர் என். ராம், ‘புதிய தலைமுறை’ இதழாசிரியர் மாலன் நாராயணன் உள்ளிட்டோர். தேசிய அளவிலும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற உதவிய (2008) உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அவரைப் போன்ற பல பார்ப்பனரல்லாத இந்திய அரசியல் தலைவர்கள் தங்கள் கொள்கைகளை மறந்து, துறந்து பார்ப்பணுத்துவத்துக்குப் பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கின்றனர். பார்ப்பணுத்துவம் தான் மீட்டெடுத்த முக்கியத்துவத்திலும், அதிகாரத்திலும், ஆதிக்கத்திலும் மூழ்கித் திளைத்து நிற்க, பார்ப்பனத்துவ இயக்குனர்கள் புதிய வல்லரசு தேசபக்தி நாடகத்தைப் பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றனர்.

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
ஆகஸ்ட் 6, 2013
 நன்றி : சுப. உதயகுமாரன்  , 
சுப. உதயகுமாரன்  அவர்களின் facebook பதிவில் இருந்து 
https://www.facebook.com/spudayakumar1?fref=ts

சனி, 27 ஜூலை, 2013

ஆர்.எஸ்.எஸ்., வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளிக்கிறது திக்விஜய்சிங்


ஆர்.எஸ்.எஸ். தனது உறுப்பினர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வருவதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் திக்விஜய்சிங் கூறினார்.
திக்விஜய்சிங்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், அவ்வப்போது சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். டெல்லியில் போலீஸ் அதிகாரி எம்.சி.சர்மாவின் உயிரை பறித்த என்கவுண்டர் சம்பவம் போலியானது என்று அவர் கூறி வந்தார்.
ஆனால், அது உண்மையானது என்றும், அவ்வழக்கில் பிடிபட்ட இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி குற்றவாளிதான் என்றும் டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், திக்விஜய்சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.
இந்நிலையில், திக்விஜய்சிங் மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். தனது உறுப்பினர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பதற்கான பயிற்சியை அளித்து வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு ஒரு கோவில் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த 6 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்க்ரா ஆகிய 2 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் சுனில் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் ஆவார். அவரை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே கொலை செய்து விட்டனர்.
வீடியோ ஆதாரம்
அதுமட்டுமின்றி, பிடிபட்ட 4 ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள், தாங்கள் வெடிகுண்டு தயாரிக்க ஆர்.எஸ்.எஸ்.சால் பயிற்சி அளிக்கப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்தனர். அவர்கள் பேசிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த குற்றச்சாட்டை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.
உடனே ஆர்.எஸ்.எஸ். என் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தது. நான் வீடியோ ஆதாரத்தை தாக்கல் செய்தவுடன், வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

புதன், 24 ஜூலை, 2013

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் 23.07.2013 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு


பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு மதசாயம் பூச முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் சேலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். இது போன்ற கொடிய நிகழ்வுகள் அமைதிப் பூங்காவான தமிழகத்திற்கு ஏற்புடையதல்ல. அதே நேரத்தில் இந்த க் கொலையின் பின்னணி பற்றி முறையாக புலனாய்வு வெளிவருவதற்கு முன்பாகவே பா.ஜ.க. பிரமுகர் கொலை என்றாலே அதை முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் ஊதி பெரிதாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதற்கு முன்பும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதையும் அறிய முடிகிறது. அது போன்று இந்தப் படுகொலையையும் நியாய உணர்வோடும் நடுநிலையோடும் அரசும் காவல்துறையும் அணுக வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்துத்துவா சக்திகளும் சமூக விரோதிகளும் இணைந்து இந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைத்து விடுவார்களோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

எனவே, தமிழக முதல்வர் அவர்கள் இந்தக் கொலை விவகாரத்தில் உண்மைக் குற்றவாளியைக் கண்டறிய தமிழக காவல்துறைக்கு உரிய அறிவுரை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என இந்தக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இந்தப் படுகொலை குறித்து விசாரிப்பதற்கு தமிழக முதல்வர் சிறப்புப் புலனாய்விற்கு உத்தரவிட்டதை வரவேற்கின்றோம். மேலும், முஸ்லிம் சமுதாயத்தின் வழிபாட்டுத் தலங்களும் வணிக நிறுவனங்களும் அப்பாவி முஸ்லிம்களும் தாக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, தமிழக முதல்வர் அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்தக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

சனி, 6 ஜூலை, 2013

பெங்களுரு குண்டு வெடிப்பு: கர்நாடக முதலமைச்சரிடம் தமிழக முஸ்லிம் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு. அப்பாவிகள் தண்டிக்கப்பட கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதி

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களுருவில் கடந்த ஏப்ரல் 17 அன்று மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு முன்பு குண்டு வெடித்தது. கர்நாடகத்தில் மே 5ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பில் 16 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 13 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மிக கடுமையாக சித்ரவதைச் செய்யப்பட்ட செய்திகளும் வந்தன. இந்த பின்னணியில் பெங்களுருவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்ற கைதுகள் குறித்து கர்நாடக முதலமைச்சர் சீத்தாராமைய்யாவை சந்தித்து முறையிட தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு முடிவுச் செய்தது. கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதற்கான முயற்சியை எடுக்கும் பொறுப்பு மனிதநேய மக்கள் கட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா எடுத்துக் கொண்ட முயற்சிகளின் வாயிலாக கர்நாடக சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினர் நஸீர் அஹ்மது வழியாக கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதற்கான அனுமதிப் பெறப்பட்டது.

கடந்த சூலை 4ம் தேதி மாலை 6 மணிக்கு கர்நாடக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வமான இல்லமான கிருஷ்ணாவில் முதலமைச்சரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனிபா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக எ.எஸ். இஸ்மாயீல், சோசியல் டிமோகிரடிக் பார்டி ஆப் இந்தியா சார்பாக மவ்லவி தெஹ்லான பாகவி, இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எஸ்.எம். பாக்கர், ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் சார்பாக ஷப்பீர் அஹ்மது, வெல்பேர் பார்டி ஆப் இந்தியா சார்பாக எஸ்.என். சிச்கந்தர், தாருல் இஸ்லாம் அறக்கட்டளை சார்பாக எம். குலாம் முஹம்மது, ஜம்யிய்யத்துல் உலமா சார்பாக மவ்லவி மன்சூர் காஷிபி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் சார்பாக அ.ச. உமர் பாரூக், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் சார்பாக மவ்லவி தர்வேஷ் ரஷாதி ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு கர்நாடக முதலமைச்சரை சந்திக்க மாலை 5 மணியளவில் முதல்வர் இல்லத்திற்கு வந்தார்கள். தமிழக முஸ்லிம் பிரதிநிதிகளை நஸீர் அஹ்மது எம்.எல்.சி. தலைமையில் கர்நாடக காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் பல்வேறு பொறுப்பாளர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

கர்நாடக முதலமைச்சரின் கூட்ட அரங்கில் சிறுபான்மை மக்களின் விவகாரங்கள் தொடர்பான கலந்தாலோசனை கூட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சீத்தராமைய்யா, கர்நாடக மாநில அமைச்சர்கள் கமருஸ் ஸமான் மற்றும் ஹாரீஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜாபர் ஷரீப் மற்றும் சி.எம். இப்ராஹீம், கர்நாடகத்தின் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள், சிறுபான்மை துறை செயலாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.
சந்திப்பின் தொடக்கத்தில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவை முதலமைச்சருக்கு அறிமுகப்படுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம். இப்ராஹீம் தமிழகத்தில் இருந்து இரண்டு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளார்கள். அவர்களுடன் தமிழக முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் வந்துள்ளார்கள். முதலில் அவர்களது கருத்தைக் கேட்கலாமே என்று முதலமைச்சரிடம் தெரித்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவிடம் பேசும்படி கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா முதலில் தன்னுடன் வந்த கூட்டமைப்பின் பல்வேறு தலைவர்களை கர்நாடக முதலமைச்சருக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் பேசுகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மிக முக்கிய கோரிக்கையை உங்களிடம் முன்வைப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வேளையில் ஏப்ரல் 17ல் பெங்களுரு மல்லேஸ்வரத்தில் பா.ஜ.க. அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 13 அப்பாவி முஸ்லிம்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளார்கள். எங்களுடைய விசாரணையில் கைதுச் செய்யப்பட்ட தமிழக முஸ்லிம் இளைஞர்களுக்கும் இந்த குண்டுவெடிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. கைதுச் செய்யப்பட்ட இளைஞர்களை இந்த வழக்கை விசாரிக்கும் பெங்களுரூ காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மிக மோசமான சித்ரவதைக்கு இலக்காகியுள்ளார்கள். ஒரே நேரத்தில் மலமும் விந்தும் வெளிவரும் வகையில் பம்பாய் கட்டு பாணியில் முஸ்லிம் இளைஞர்களை சித்ரவதைச் செய்து அவர்களிடம் கட்டாய வாக்குமூலம் வாங்கியுள்ளார்கள் என்பதை நான் நேரடியாகவே அறிந்தேன். இந்த குண்டு வெடிப்பை உண்டாக்கிய செல்போனின் சிம்கார்டு கர்நாடக கேரளா எல்லை பகுதியைச் சேர்ந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவருக்குச் சொந்தமானது. ஆனால் அவர் தனது செல்பேசி தொலைந்துப் போனதாக கூட புகார் தெரிவிக்காத நிலையில் அவரை இந்த வழக்கில் பெங்களுரூ காவல்துறை விசாரிக்கவேயில்லை. மேலும் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவுகளையும் முறையாக விசாரிக்கவில்லை. இது தொடர்பாக விரிவாக எங்கள் கோரிக்கை மனுவில் அளித்துள்ளோம். எனவே இந்த வழக்கின் விசாரணையை தேசீய புலனாய்வு முகமை (என்ஐஏ)விடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் எங்கள் இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாக விசாரித்த பெங்களுரூ நகர குற்றப் பிரிவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தான் இந்த அத்துமீறல்கள் முடிவுக்கு வந்ததாகவும் பேராசிரியர் குறிப்பி்ட்டார்.

அடுத்து பேசிய மு. குலாம் முஹம்மது தற்போது இந்த வழக்கு இரு மாநிலங்கள் தொடர்புடையதாக காட்டப்பட்டுள்ளதால் இதனை தேசீய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டும். அதற்கான அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு என்று கூறினார். மேலும் கைதுச் செய்யப்பட்ட தமிழக இளைஞர்களின் வீடுகளுக்கு வந்த பெங்களுரூ காவல்துறையினர் அங்கு சந்தேகத்திற்கிடமான பொருளை வைத்துவிட்டு அங்கிருந்து எடுக்கப்பட்டது போல் நாடகம் ஆடினார்கள். இதனைத் தடுத்த ஒரு வயதான பெண்மணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் சீத்தராமைய்யா முஸ்லிம் தலைவர்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டார். ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட பல தவறுகளை குறுகிய காலத்தில் உங்கள் ஆட்சி சரி செய்துள்ளது. இதே போல் இந்த பிரச்னையிலும் நீதி வேண்டும் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா குறிப்பிட்ட போது அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்பட கூடாது என்றும் இது தொடர்பாக உரிய விசாரனை செய்து நீதிக்கு வழி வகுப்பதாக முதலமைச்சர் சீத்தாராமய்யா குறிப்பிட்டார்.

கர்நாடக முதலமைச்சர் சீத்தராமைய்யா மிக சகஜமாக அனைத்து தலைவர்களிடமும் கைக்குலுக்கி அனுப்பி வைத்தார்.

____________________________________________
கர்நாடகத்தில் முஸ்லிம் மணமகளுக்கு ரூ50 ஆயிரம் அரசு நிதி உதவி
கர்நாடக முதலமைச்சருடான கூட்டம் தொடங்குவதற்கு முன்பு முதலமைச்சரின் கூட்ட அறைக்கு செல்லும் முன் வழியில் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை பார்த்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம். இப்ராஹீம் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பெயர் சொல்லி அழைத்து கட்டி தழுவி ஆலிங்கானம் செய்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பேராசிரியர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பல நன்மைகளைச் செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தண்டனை முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் சீத்தராமைய்யா முதல் வேலையாக நீக்கினார். பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் கப்ருஸ்தான் பராமரிப்பிற்கும் ரூ300 கோடியை கர்நாடக அரசு ஒதுக்கியிருப்பதாகவும் முஸ்லிம் பெண்களுக்கான திருமண உதவி ரூ 50000 அளிப்பதாகவும் மொத்தத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்கும் அரசாக சீ்த்தாராமைய்யா தலைமையிலான அரசு செயல்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்


படங்கள்: அபூபக்கர்
http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=3412:2013-07-05-15-57-28&catid=58:2009-10-11-12-42-41

செவ்வாய், 25 ஜூன், 2013

மோடியின் காசுக்கு விலை போகும் பத்திரிக்கைகள்!​


மாலை மலர் இணையதளத்தில்"உத்தரகாண்டில் தவித்த 15,000 குஜராத் பக்தர்கள் மீட்பு" என்ற தலைப்பில் ஒரு செய்தி.

உத்தரகாண்ட் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் இராணுவமும் தன்னார்வலர்களும் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் நேரடிக் காட்சிகளாகவே வந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரேயடியாக குஜராத்தைச் சேர்ந்த 15,000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த இடம் அழைத்து வரப்பட்டதான அச்செய்தி மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது.
ஆனால், செய்தியின் உள்ளே வாசித்தபோது இப்படியும் பத்திரிக்கைகள் மக்களின் காதில் பூச்சுற்றுமா என்ற ஆச்சரியமே மேலோங்கியது.
மீட்கப்பட்ட பக்தர்களைக் குஜராத் அழைத்து வந்தது தொடர்பாக செய்தியினுள் மாலை மலர் குறிப்பிட்டுள்ள வா
க்கியம் கீழே:
"சுமார் 80 டொயோட்டா இன்னோவா கார்கள் வரவழைக்கப்பட்டன. அதில் ஏற்றப்பட்ட பக்தர்கள் டேராடூன் வந்தனர். அங்கிருந்து அவர்கள் 4 சிறப்பு விமானம் மூலம் குஜராத் போய் சேர்ந்து விட்டனர். மேலும் 25 ஏ.சி. பஸ்கள் மூலம் குஜராத் பக்தர்களில் மற்றொரு குழுவினர் டெல்லி அழைத்து செல்லப்பட்டனர்."
ஒரு இன்னோவா காரில் 15 பக்தர்களை அடித்துத் திணித்து கொண்டு வந்ததாக கணக்கிட்டாலும் 80 x 15 = 1200 பேர்.
ஒரு ஏ சி பஸ்ஸில் 50 பேர் எனக் கணக்கிட்டாலும் 25 x 50 = 1250 பேர்
மொத்தம் 2450 பேர் தான் வருகிறது. சரி இன்னோவா காரில் 25 பேர் என்றும் ஏ சி பஸ்ஸில் 100 பேர் என்றும் கணக்கிடுவோம். அப்படிப்பார்த்தாலும் 4750 பேர் தான் வருகிறது. எப்படியோ, 5000 பேர் போனார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இன்னும் 10000 பேர் எப்படி போய் இருப்பார்கள் என்று புரியவில்லை. கணக்கு எங்கோ இடிக்குது.
என்னமா கலர் கலர் ரீல் விடுறீங்க. காசு வாங்கிட்டு எழுதுங்க. அதுக்காக இப்படியா. முடியல!
இதையே தினமலர், "இந்த வேகம் யாருக்கப்பா வரும்.... 15000 பேரை மீட்ட 'ரேம்போ மோடி'" என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளது.
"இதற்கென 80 டோயோட்டா இன்னோவோ கார்கள் வரவழைக்கப்பட்டன. இதில் பக்தர்கள் ஏற்றி டேரோடூனுக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் இவர்கள் 4 விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வர 25 சொகுசு பஸ்கள் தயார் நிலையில் இருந்தன . மொத்தம் 15 ஆயிரம் குஜராத்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மோடி தானே களத்தில் இறங்கி தமது மாநில மக்களை மீட்டு வந்த சம்பவம் இம்மாநில மக்களின் பெரும் பாராட்டை பெற்றுள்ளது."
மீட்பு இடத்திலிருந்து 80 இன்னோவா கார்களில் டேராடூன் வரை. டேராடூனிலிருந்து 4 விமானங்களில் டெல்லி வரை. டெல்லியிலிருந்து 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திற்கு!

அப்படி எடுத்துக்கொண்டாலும், 4 விமானம் 15,000 பேரை டெல்லி கொண்டு வர எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும். 25 பேருந்துகள் டெல்லியிலிருந்து குஜராத்திற்கு 15000 பேரை ஏற்றி செல்ல எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும். 80 இன்னோவாக்கள் உத்தர்காண்டிலிருந்து டேராடூனுக்கு 15000 பேரைக் கொண்டு செல்ல எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும்?
மோடி ரேம்போவோ, சில்வஸ்டர்ஸ்டாலனோ, ஹிட்லரோ - யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். மோடியின் விளம்பர காசுக்கு, கொஞ்சம் கூட மானம் சூடு சுரணையின்றி சுய அறிவை மொத்தமாக இழந்து துதிபாடும் இப்பத்திரிக்கைகளின் மாமா வேலைக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என்பதுதான் தற்போதைய கேள்வி!
thanks : இந்நேரம்.
http://inneram.com/
- See more at: http://www.importmirror.com/2013/06/blog-post_25.html#sthash.eCbsPckF.dpuf

செவ்வாய், 28 மே, 2013

உலகிலேயே இந்துக்கள் மகிழ்ச்சியாக வாழும் தேசம் மலேசியா

பிரபல ‘மக்கள் ஓசை’ தமிழ் நாளேடு தலையங்கம்
சென்ற 17.05.2013 அன்று தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மலேசியாவில் இந்தியர்கள் பாதிக்கப்படுவதாக ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக அந்த அறிக்கை இருந்தது. இந்த அறிக்கை மலேசியாவில் உள்ள இந்தியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் பல்வேறு வேலைகளுக்கு தொழிலாளர்களாக இந்தியத் தமிழர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
1957ல் மலேசியா, சுதந்திரம் பெற்றபோது அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், பெருந்தன்மையோடு அங்கு குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கினார்.
இன்று மலேசியாவில் 7.5 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் தமிழர்கள் ஆவர். மதரீதியாகப் பார்த்தால் அவர்களில் 4 சதவீதம் பேர் இந்துக்களாகவும், 2.5 சதவீதம் பேர் முஸ்லிம்களாகவும், மீதி 1 சதவீதத்தினர் கிருத்தவர்கள் மற்றும் சீக்கியர்களாகவும் வாழ்கிறார்கள்.
அங்கு ஐந்து தமிழ் தினசரிகள் உட்பட ஏராளமான தமிழ் செய்தி ஏடுகள் வெளிவருகின்றன. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழில் வெளிவருகின்றன. அங்குள்ள அரசு வேலை வாய்ப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் இந்துக்கள் உள்ளனர். மலேசிய வழக்கறிஞர்களில் இவர்களின் சதவீதம் அதிகமாகும். அந்த நாட்டின் பூர்வீக மலாய் முஸ்லிம்களைவிட பல நல்ல தொழில்களையும் வசதிகளையும் பல துறைகளில் பெற்றிருக்கிறார்கள்.
தற்போதைய புதிய அரசில் 6 இந்துக்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இந்திய முஸ்லிம்களை விட இந்தியாவிலிருந்து குடியேறிய இந்துக்களுக்கு அங்கு அரசியல், சமூக மரியாதைகள் அதிகம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
மலேசியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூகங்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும்கூட, அங்கு குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். இந்தியப் பொதுமக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
இந்தியாவுக்கு வெளியே இந்துக்கள் மகிழ்ச்சியாக, வளமுடன் வாழும் நாடு மலேசியாதான்!
இதை உறுதிப்படுத்தும் விதமாக மலேசிய தமிழ் நாளிதழான ‘மக்கள் ஓசை’யில் அதன் ஆசிரியர் ராஜன் அவர்கள் எழுதிய தலையங்கத்திலிருந்து சில பகுதிகளை இங்கே வெளியிடுகிறோம்.
இந்தப் பத்திரிகையானது நடுநிலை நாளிதழாக கூறிக்கொண்டாலும், எதிர்க்கட்சி செய்திகளுக்கும், இந்துத்துவ செய்திகளுக்கும் முன்னுரிமைக் கொடுக்கிறது என்ற கருத்தும் அங்கே நிலவுகிறது.
அப்பத்திரிக்கையின் தலையங்கம் பாஜகவு க்கு மட்டுமல்ல; மலேசிய இந்துக்களின் வாழ்வுரிமை குறித்த பல அபாண்டக் குற்றச்சாட்டுகளுக்கும் மனசாட்சியோடு சாட்டையடி தருகிறது. இனி ‘மக்கள் ஓசை’யைப் படியுங்கள்...
“எந்த நாட்டிலும் உள்ள ஒரு சிறுபான்மை சமூகம் அடைய முடியாத வசதிகளைப் பெற்று, நாம் வாழும் தேசம் இது என்பதை மனசாட்சியுடன் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அரசியல் சட்டத்திலேயே நமக்குரிய அடிப்படை உரிமைகள் நிலை நாட்டப்பட்டு கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரத்தை வழங்குகின்ற நாடு இது. கூடவே இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட அற்புதமான தாய்த்திருநாடு இது. நமது வாழ்வும் தாழ்வும் இங்கேதான். இங்கே உழைக்கத் தயாராக இருந்தால், உன்னதமான வாழ்க்கை நமக்குச் சொந்தம் என்பதை அனுபவப்பூர்வமாகத் தந்திருக்கிற நாடு இது. உங்கள் வளர்ச்சியைத் தடுக்க இங்கே யாருமில்லை.
தமிழ்நாட்டில் கூட, இப்படிப்பட்ட கோவில்கள் உண்டா? என்று வியக்கும் அளவிற்கு, பளிங்குக் கல்லாலான ஆலயங்களில் நமது தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் அழமைகக் காண்கிறோம். இவ்வளவு அழகான தரமிக்க கோவில்கள் உங்கள் நாட்டில் உண்டா என்று தமிழர்கள் வாழும் நாடுகளுக்கே நம்மால் சவால்விட முடியும். நிறைவான வருமானம், வசதியான வீடு, வாகனம் என்று ஒன்றல்ல இரண்டு மூன்று என்கின்ற அளவில், நாம் உழைத்து ஒரு தரமான வாழ்க்கையை அனுபவிக்கும் பேறு கிடைத்திருக்கிறது.
55 ஆண்டுகள் இந்த அரசாங்கம் நமக்கு எதுவுமே செய்யவில்லை என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டால், மனசாட்சி உள்ள மலேசிய இந்தியர்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படியென்றால், தேசத்தந்தை துங்கு காலம் தொடங்கி, நஜிப் காலம் வரை, நாம் ஏதோ இருண்ட காட்டில் வாழ்வதாக அர்த்தமாகி விடும். இந்த நூற்றாண்டு காலம், இங்கு ஆலயங்களோ, தமிழ்ப் பள்ளிகளோ, இந்தியர்கள் குடியிருக்க வீடுகளோ, அடிப்படை வசதிகளோ இல்லாமல் நாம் வாழ்கிறோம் என்றாகி விடும்.”
& ஆசிரியர்,
மக்கள் ஓசை 5.5.2013, மலேசியா
மக்கள் ஓசை நாளிதழ் உண்மையை உலகிற்கு கூறிவிட்டது. பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத அமைப்புகளும், தமிழின உணர்வாளர்களும் இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து வரும் இந்து சமூக மக்களை இந்தியாவின் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ‘ஹின்ராப்’ போன்ற அமைப்புகள் தவறாக வழிநடத்தி கடந்த காலங்களில் அவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கிவிட்டன. இனியாவது அவர்களின் பாசிச வழிகாட்டுதல்களிலிருந்து விடுபட்டு பெரியாரிய, தமிழ் & பாரம்பரிய பண்பாட்டு சிந்தனைகளோடு அவர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்து கொள்ளவேண்டும். அதுவே அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாக இருக்கும்.
நன்றி  :http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=3342:2013-05-26-17-01-36&catid=58:2009-10-11-12-42-41

சனி, 11 மே, 2013

கட்சியாவது.... கத்தரிக்கையாவது.... உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் உறுதி!


(08/05/2013) நாடாளுமன்றக் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் "வந்தே மாதரம்" பாடல் ஒலித்தபோது, கூட்டத்திலிருந்து "வெளி நடப்பு" செய்த BSP கட்சியின் ஷபீகுர் ரஹ்மான் எம்பி., அதற்காக "மன்னிப்பு" கேட்க முடியாது என்றார்.

"வந்தே மாதரம்" பாடல் ஒளிபரப்பின் போது, நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தமைக்காக "மன்னிப்பு" கேட்க வேண்டும், என்ற சபாநாயகர் மீரா குமாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஷபீகுர் ரஹ்மானுக்கு, தற்போது கட்சித் தலைமையின் மூலம் நெருக்குதல் தரப்பட்டு வருகிறது.

இறைவனைத்தவிர எவரையும் - எப்பொருளையும் வணங்கக் கூடாது, என்ற கொள்கை உறுதி கொண்ட இஸ்லாமியர்கள் "மண்ணை வணங்க" வலியுறுத்தும் வந்தே மாதரம் பாடலை, ஒரு போதும் பாட முடியாது என்பதுடன், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுந்து நிற்கவும் முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான்.

தேசிய கீதம் என்பது வேறு, இறைவனுக்கு இணை கற்பிக்கும் வாசகம் கொண்ட "வந்தே மாதரம்" பாடல் வேறு என்றார், அவர்.
செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ஷபீக், இதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த அவர், சபாநாயகர் மட்டுமல்ல கட்சித்தலைமை சொன்னாலும், என் உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் என்றார்.

எனினும், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் நோக்குடன் தாம் வெளி நடப்பு செய்யவில்லை, எனக்கூறிய அவர், பல ஆண்டுகளாக எம்பி.யாக இருக்கும் தான், "வந்தே மாதரம்" பாடல் நிகழ்ச்சிக்கு, முன் கூட்டியே வெளியில் சென்று விடும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்த போதும், தவிர்க்க முடியாமல் இப்படி ஆகி விடுகிறது,என்றார்.
கடந்த 1997ம் ஆண்டிலும், நாடாளுமன்றத்தை விட்டு தாம் வெளி நடப்பு செய்ததை சுட்டிக் காட்டிய அவர், பதவிக்காக ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான் பர்க்.
- நன்றி மறுப்பு !

புதன், 24 ஏப்ரல், 2013

இஸ்லாமிய பெண்களே எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!!!

இஸ்லாமிய பெண்களே எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!!!
போலி ஹிந்து முன்னணி RSS சங்கபரிவார் கும்பல் இஸ்லாமிய பெண்களை ஹிந்து இளைஞர்கள் காதலிப்பது போல நடித்து கற்பமாக்கி கைவிட்டால் ஒரு லட்சம் பணமும் மற்றும் போலீஸ் வழக்கு உள்ளிட்ட செலவுகளைவும் ஏற்றுகொள்வதாக ரகசிய செயல் திட்டம் வைத்து செயல்படுத்தி வருகின்றனர்.இதுபோல் செயல்படும் கயவர்களை அடையாளம் கண்டு சட்டமும்,-நீதியும் -அரசும் தகுந்த தண்டனை வழங்கி தன்டிக்கணும்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகுந்த நீதி கிடைக்னும்.
முஸ்லிம் சகோதிரிகளே சிந்தியுங்கள் rss ஹிந்துமுன்னணி சொன்னது நினைவானதா முஸ்லிம் பெண்ணின் வயிற்றில் குழந்தையே கொடுத்தால் ஒரு லட்சம் ருபாய் பரிசு என்று காவிகள் சொல்லியது நினைவானதா ஏன் பலதடவை நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை உங்களுக்கு நடு வீதியில் நிற்ப்பதுதான் உங்களுக்கு பிடிக்குதா இஸ்லாத்தை விடவும் ஈமானை விடவும் காதல் முக்கியம்மா இப்போது காலில் விழுவது யார் கெஞ்சுவது யார் உன்னை பெற்ற பெற்றோர்களை விட காதல் முக்கியம்மா இப்போதாவது திருந்துவியா அல்லது நீ நடுத்தெருவில் நிப்பேன் என்று முடிவெடுத்தல் அழிவது நீயே சஹோதிரி சிந்தியுங்கள் காவிகள் வலையில் சிக்காமல் இருங்கள் இது ஒன்றல்ல இன்னும் இதுப்போன்ற பல சஹோதிரிகளின் வாழ்க்கை சிரளிந்ததே பெற்றோர்களே உங்களின் பிள்ளைகளை கவனியுங்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

பர்மா முஸ்லிம்களைக் காக்கக் கோரி தமுமுக ஆர்பாட்டம் !

கடந்த சில நாட்களாக பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்கள் குறித்து அங்கிருக்கும் நம் உறவினர் ஏதேனும் செய்யுங்கள் என நம்மிடம் மனம் வருந்திய போது இதை நாம் தமுமுகவின் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் ! அல்ஹம்து லில்லாஹ்.சகோதரர் அன்சாரி அவர்கள் இதை உடனடியாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுத்து ஆர்பாட்டத்தை அறிவித்ததுடன் நம்மையும் தொடர்பு கொண்டு அதை தெரிவித்தார்.
இதை அடுத்து சென்னையில் நேற்று பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்களைக் காக்க மத்திய அரசையும் , ஐ.நா.வையும் கோரியும் , மஸ்ஜிதுகளையும் மதரசாக்களையும் குறி வைத்து கொளுத்தும் பவுத்த இன வெறி அரசிக் கண்டித்தும் தமுமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது!
இதில் மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களும் , ஹாஜாகனி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் நான் , அப்துல் ஹமிது ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினோம் !
நீண்ட நாட்களுக்குப் பின் பர்மா முஸ்லிம்களுக்காக் தமுமுகவின் போராட்டக் களத்தில் கலந்து கொண்டது ஆறுதலாய் இருந்தது!

ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ் தைமியா , ஹாருன் ரசித் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் , வாடா சென்னை தென் சென்னை மாவட்ட நிர்வாகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆவேசத்துடன் பர்மாவுக்கு எதிராக முழங்கினர்!.



புதன், 3 ஏப்ரல், 2013

விசாரணை கைதிகளாக சிறையில் வாடுபவர்களை மீட்க புதிய அமைப்பு : மார்கண்டேய கட்ஜு தொடங்கினார்


புதுடெல்லி, ஏப். 3-

சந்தேகத்தின் பேரில் நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை சட்டரீதியாக மீட்க இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக புதுடெல்லியில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

சந்தேகத்தின் அடிப்படையிலும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக இருந்தால், அந்த சமுதாயத்தில் உள்ள அனைவருமே குற்றவாளிகள்தான் என்ற எண்ணத்தில் இன்று சிறுபாண்மையினர் பலர் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத செயல்கள் எப்போது நிகழ்ந்தாலும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாரால் முடிவதில்லை. உடனடியாக சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து அவர்களை சிறைகளில் அடைக்கின்றனர்.

இப்படி ஆண்டு கணக்கில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கவும் 'கடைசி சேர்விடத்திற்கான நீதி மன்றம்' (தி கோர்ட் ஆப் லாஸ்ட் ரிசல்ட்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் பிரபல வழக்கறிஞர் மஜீத் மேமன், பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் உள்பட பலர் என்னுடன் சேர்ந்து பணியாற்றுவார்கள்.

1948-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கிரிமினல் வழக்கறிஞர் எர்ல் ஸ்டாண்லி கார்ட்னர் என்பவர் ஏற்படுத்திய அமைப்பு இந்த அமைப்பை உருவாக்கும் ஊக்கத்தை அளித்தது.

தவறே செய்யாமல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் தண்டனையை ரத்து செய்யும்படி ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள் ஆகியோரிடம் முறையீடு செய்து கைதிகளை விடுதலை செய்ய தேவையான அனைத்தையும் எங்கள் அமைப்பின் மூலம் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி :  http://www.maalaimalar.com/2013/04/03043026/Katju-launched-organisation-to.html
நன்றி  : http://www.facebook.com/mohaashik (MuhammadAshik Bin HabibMuhammad (உலகக்குடிமகன்)

வியாழன், 28 மார்ச், 2013

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும் - எம். தமிமுன் அன்சாரி

எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு.

இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள்.

பேச்சாளர்களை விட நாட்டில் எழுத்தாளர்கள் அதிகம். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் இவர்களின் பங்களிப்புகள் அமைகின்றன. சிறந்த பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, சிறந்த எழுத்து ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாகும்.

அது நின்று; நிதானித்து; யோசித்து; ஒரு மனிதனை நீண்டகால சிந்தனைப் போராட் டத்திற்கு வழிவகுக்கும்.

இன்று சமூக இணையதளங்கள் வந்தபிறகு அதைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் தங்களை எழுத்தாளர்களாக உருவாக்கிக் கொள்கிறார்கள். அத்தகைய நல்வாய்ப்பை இணையதளங்களும், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களும் வழங்குகின்றன.

ஒரு புத்தகம் அல்லது பத்திரிக்கையில் எழுதும் கருத்துகள் போய்ச் சேரும் வாசகர் எண்ணிக்கையை விடக் கூடுதலான இலக்கை இவைகள் அடைய வழிவகுக்கின்றன. அதுவும் விரைவாக!

இந்தியாவில்; தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு காலத்தில் தங்களது கருத்துக்களைப் பரப்பவும், வாதிடவும், தவறான கருத்துகளுக்கு பதில் சொல்லவும் வாய்ப்புகளும், வழிகளும் இல்லையே என ஏங்கியது.

அந்த ஏக்கத்தை இணைய தளங்களும், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களும் ஓரளவு நிவர்த்தி செய்திருக்கின்றன. படித்தவர்களும், வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் இதில் பெரும் பங்காற்றுகிறார்கள்.

இதில் ஆறுதல் அடையும் அதேநேரம், துயரமடையச் செய்யும் சில நிகழ்வுகளும் நடக்கின்றன.

சில இளைஞர்கள் உணர்ச்சிப் போக்கில் கருத்துக்களைப் பதிகிறார்கள். சிலர் தாங்கள் ஏதோ ‘முஸ்லிம் நாடுகளில்’ வாழும் மன நிலையிலும் கருத்துக்களைப் பதிகிறார்கள். சிலர் தங்களது கருத்துக்களை முஸ்லிம்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்ற மனநிலையில் பதிகிறார்கள். சிலர் நடுநிலையாளர்களையும் எதிரிகளாக்கும் வகையில் பொறுப்பற்றத்தனமாக கருத்துக்களைப் பதிகிறார்கள்.

இது சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பண்பாடு இல்லாமல், நாகரீகம் இல்லாமல், ஒரு உன்னதமான சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்ற பொறுப்பு இல்லாமல் சிலர் வெளியிடும் கருத்துக்களும், ஆவேசமானப் பதிவுகளும் இதை கவனிக்கும் பிற சமூக மக்களை மட்டுல்ல; சொந்த சமூக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

இவர்களிடம் பக்குவம் இல்லையா? பண்பாட்டுடன் கூடிய அறிவு இல்லையா? என பிறர் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இயக்க வேறுபாடுகள் & மோதல்கள்

தலைவர்களின் மீதான எதிர் கருத்துக்கள்

பிற சமூகங்களைப் பற்றிய மதிப்பீடுகள்

அரசியல் தலைவர்கள் குறித்த விமர்சனங் கள்

பொது அரங்கில் நடைபெறும் சம்பவங்கள்

சர்வதேச நிகழ்வுகள்

போன்றவை குறித்து சிலர் பக்குவமில்லாமல் எழுதும் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான மதிப்பீடுகளைக் குறைக்கிறது.

நாம் பன்முக சமூகங்கள் வாழும் உலகத்தில் வாழ்கிறோம் என்பதையும், நம்மைச் சுற்றிலும் நல்லெண்ணம் கொண்ட சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பதை யும், நாம் பதியும் கருத்துக்கள் எதிரிகளின் எண்ணிக்கையை கூடுதலாக உருவாக்கி விடக் கூடாது என்பதையும் மறந்து விடுகிறார்கள். அல்லது இதைப் புரியாமல் வாழ்கிறார்கள்.

அநாகரீகமான சொல்லாடல்களும், முரட்டுத்தனமான விமர்சனங்களும்; நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய ஆதரவுகளை ஒரு சமூகமே இழக்க வேண்டிய சூழல் உருவாவதை அப்படிப்பட்ட சகோதரர்கள் உணர வேண்டும்.

தாலிபான்கள் விவகாரமாக இருக்கட்டும்; திரைப்படங்கள் குறித்த சர்ச்சைகளாகட்டும்; விடுதலைப் புலிகள் குறித்த விமர்சனங்களாக இருக்கட்டும்; சவூதியில் தலை துண்டிக்கப்பட்ட இலங்கைச் சிறுமி ரிசானா விவகாரமாக இருக்கட்டும்; சமீபகாலமாக ஃபேஸ் புக்கில் பரிமாறப்படும் எதிர்வினைகள் முஸ்லிம் சமூகத்திற்கு வலுவான ஆதரவை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பெருவாரியான ஆதரவாளர்களை எதிர் முகாமுக்கு தள்ளியிருக்கிறது என்ற பொதுவான கருத்து குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.

எதிரிகளிடம் விவாதம் புரியுங்கள். ஆனால் கண்ணியத்தை கடைப்பிடியுங்கள். நமது கருத்தை ஆழமாக வாதிடுங்கள். ஆனால் தரத்தைப் பின்பற்றுங்கள்.

அறிவை உணர்ச்சி வென்றுவிடக் கூடாது. கோபம் பண்பாட்டை குலைத்துவிட அனுமதிக்கக் கூடாது. விமர்சனங்கள் எல்லை மீறிவிடக் கூடாது. திருக்குர்ஆன் ‘உண்மையைப் பேசுக (3:17), நேர்மையாகப் பேசுக (33:70), நீதமாகப் பேசுக (6:152), நல்லதைப் பேசுக (2:83), மிக அழகியதைப் பேசுக (17:53), மரியாதையாகப் பேசுக (17:23)’ என மனிதர்களுக்கு அறிவுரை வழங்குகிறது. இதை சற்று எண்ணிப் பாருங்கள்.

நமது கருத்துப் பதிவுகள் எதிரிகளின் மனப்போக்கை மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். நடுநிலையாளர்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். பதிலடி களைக் கூட நிதானமாகவும், அறிவுப்பூர்வ மாகவும் பதியுங்கள்.

மாறாக, நமது கருத்துப் பதிவுகள் எதிரிகளுக்கு ஆதரவையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துவிடக் கூடாது. நமது நியாயங்களை பலமிழக்க செய்துவிடக் கூடாது.

சமூக ஊடகங்களும், இணைய தளங்களும் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப் படுகிறது என்பதையும், நமது கருத்துக்கள் நம் சமூகத்தின் தரத்தை மதிப்பிடுவதாகவும் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

குழாயடிச் சண்டைகளை; உள்விவகாரங்களை; தனிநபர் தாக்குதல்களை; மூன்றாம் தர எழுத்துக் களை தயவு செய்து இணையங்களிலும், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களிலும் பயன்படுத்தக் கூடாது. கோபத்தோடும், அவசரப் பட்டும், பொறுப்பில்லாமலும் கருத்துக் களைப் பதியாதீர்கள். பல சமூகத்தினரும் நம்மை கவனிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெருந்தன்மை, கண்ணியம், தொலை நோக்கு, சமூகப் பொறுப்பு, மன்னிப்பு என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஊடக உலகில் பணியாற்ற வேண்டியுள்ளது.

தனது சிறிய தந்தை ஹம்ஸாவைப் படு கொலை செய்த ஹிந்தாவை மன்னித்த மானுட வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

நபிகள் நாயகத்தை உஹது போர் களத்தில் எதிர்த்த காலித் பின் வலீத் அவர்கள் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்று பல போர்களில் நபிகள் நாயகத்தோடு அணிவகுத்தார்கள்.

காலமெல்லாம் நபிகள் நாயகத்தை எதிர்த்தே வாழ்ந்திட்டவர் அபுஜஹல். அவரது மகன் இக்ரிமா அவர்கள் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகத்தோடு பணியாற்றினார்.

இந்த வரலாறுகளுக்கு உரிய சமூகத்தின் உறுப்பினர்கள் நாம் என்பதை உணருங்கள்.

உயரிய அணுகுமுறைகள் பெரும் வெற்றி களைத் தருகின்றன. நாம் சார்ந்த சமூகத்திற்கு நன்மைகளை அளிக்கின்றன.

கருத்துக்களைப் பரப்பும் ஊடக உலகில் கவனமாகப் பணியாற்றுங்கள். நமது எழுத்துக் களால் ஏற்படும் நன்மைகளுக்கு இறைவனிடம் கூலி உண்டு என்பதைப் போலவே, நமது எழுத்துக்களால் ஏற்படும் விபரீதங்களுக்கும் நாளை மறுமை நாளில் விசாரணை உண்டு என்பதை உணருங்கள்.

நடுநிலையாக சிந்திப்பதும், நேர்மையாக செயல்படுவதும், உண்மையாக வாதிடுவதும் நமது இலக்கணங்கள் என்பதை மறவாதீர்கள்.

 ஜஸாகல்லாஹ் :http://www.facebook.com/m.thamimunansari


திங்கள், 25 மார்ச், 2013

கூத்தாநல்லூர் நகர தமுமுக மமக ஆலோசனைக் கூட்டம்




கூத்தாநல்லூர்  நகர தமுமுக மமக ஆலோசனைக் கூட்டம் 23-03-2013 அன்று மாலை 6 மணி அளவில் கூத்தாநல்லூர்  நகர தமுமுக அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக தலைவர் K.H. நூர்தீன் அவர்கள் தலைமையிலும் தமுமுக மாவட்ட செயலாளர் A குத்துபுதீன், கூத்தாநல்லூர் மமக நகர செயலாளர் P.M.A  சீனி ஜெஹபர் சாதிக், கூத்தாநல்லூர் தமுமுக நகர செயலாளர் K.H.காதர் முஹைனுதீன் இவர்களது முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. 2-4-2013 அன்று காலை 10 மணி அளவில் லக்ஷ்மாங்குடி மதுக்கடை 9637ஐ  அகற்ற கோரி   மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் அனைத்து கட்சிகள் ஒன்று சேர்ந்து பொதுமக்களை திரட்டி சாலை மறியல் செய்வது.

2.29-03-2013 அன்று மாலை 4 மணி அளவில் கூத்தாநல்லூர் நகர தமுமுக மமக பொதுகுழு கூட்டம் நடத்துவது

3.பொதுகுழு கூட்டத்தில் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்வது

4.பொதுகுழு கூட்டத்தில் தமுமுக மமக மாணவர் இந்தியா ஆகியவற்றிற்கு வார்டு வாரியாக புதிய நிர்வாகிகள் மற்றும் புதியஅணி நிர்வாகிகள் தேர்தெடுப்பது

5. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது

6. இலங்கை போர்குற்றம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

கலந்து கொண்டவர்கள் விபரம்:
மாவட்ட வழக்கறிங்ஞர் அணி செயலார் N.R. பிரபு தாஸ் BA.BL.,
மன்னை ஒன்றிய மமக செயலாளர் M.A.ஜெஹபர் அலி
மக்கள் செய்தி தொடர்பாளர் : M .A அப்துல் வஹாப்.M A .,,
செயற்குழு உறுப்பினர்கள் :P .M. செய்யது அஹமது, K.ஹாஜா மைதீன் 
நகர மாணவரணி செயலாளர் K.H. அக்பர் சலீம்
நகர மாணவர் இந்தியா செயலாளர் S .A  நூருல் அமீன்
நகர இளைஞரணி  செயலாளர்: ஜபருல்லாஹ்
நகர தொண்டரணி செயலாள: N .S N ஹாரூன் ரசீது
மற்றும் 35 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
முடிவில் நகர தமுமுக துணை செயலாளர் M அபுதாஹிர் நன்றி கூறினார்.

சனி, 16 மார்ச், 2013

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்


சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே!
மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்? அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது.
அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் 'ஹாட்ரிக்' சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை 'சூசகமாக' தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!
"இது போன்ற முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ராஜ்நாத்சிங் வியந்து புகழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியாவில் குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வருகிறதோ, இல்லையோ பாரதப் பிரதமருக்கான பஞ்சம் நிறையவே வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளையவர் ராகுல் காந்திதான் பிரதமருக்குரிய அனைத்துத் தகுதிகளோடும் அதற்கான அங்க அடையாளங்களோடும் தென்படுவதால் அவரை முன்னிறுத்துகிறார்கள். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏழைகளின் தலையில் விலைவாசி உயர்வும் பிரதமர் பற்றாக் குறையைத் தவிர்க்க நேரு குடும்பத்தின் வாரிசுகளில் யாராவது ஒருவரும் தேர்ந்தெடுக்கப் படலாம். அது அக்கட்சியின் மரபுரீதியிலான ஜனநாயகம்!
எரிக்கும் பூ! இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கும் பி.ஜே.பி.யால்தான் முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், ஏற்கெனவே பி.ஜே.பி.யின் ஆட்சியில் நடந்தேறிய ஊழல்களும் பயங்கரவாத சம்பவங்களும் அவர்களிடத்தில் அனுபவமாக நிறைய இருக்கிறது. அதை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர, பி.ஜே.பி.யின் கண்களுக்கு மோடி இன்னொரு ராமராக காட்சி தருகிறார்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக்கலவரங்களை மிகத் தேர்ந்த முறையில் "கையாண்டு" வெற்றி பெற்ற மோடி போன்ற ஒரு முதலமைச்சரை ராஜ்நாத்சிங் பார்த்திருக்க முடியாதுதான். பவர்கட் இல்லாத மாநிலம், மது இல்லாத மாநிலம், என இந்தியாவில் குஜராத் ஒரு மாடல் மாநிலமாக ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டதால் நடந்து முடிந்த வகுப்புக் கலவரங்கள் வெற்றியின் மூலம் மறந்தே போனது அல்லது மறைக்கப்பட்டது.
மசூதி இடிக்கப்படுவதற்கு முன்புவரை அங்குள்ள இடத்தைச் சுத்தப்படுத்தி, சமதளமாக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவே நீதிமன்றத்தின் முன்னால் கூறிக்கொண்டிருந்தார்கள். இடித்த பிறகும் 'அதுவாக இடிந்துவிட்டது' என்றும் "கரசேவையின் வெற்றி" என்றும் "பூகம்பம் ஏற்பட்டால் சில அதிர்வுகள் இருக்கத்தானே செய்யும்" என்றும் கூறிக்கொண்டார்கள்.
ஆயிரம் முகமூடிகளை அணியும் அபூர்வ சிந்தாமணிகளான சங்பரிவார் அமைப்பினருக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி என்ற முகமூடி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், குஜராத் அல்ல இந்தியா! எத்தனை முறை கோட்சே அவதாரம் எடுத்து மகாத்மாவைக் கொன்றாலும் மதச்சார்பற்ற இந்திய மக்களின் நல்லிணக்கத்தை அவர்களால் வீழ்த்த முடியாது.
பிரித்தாளும் முறையை அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை வாக்குப் பிரிவுகளை பலப்படுத்துவதில் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது. ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.
இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின் கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது. அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களைப் பயன்படுத்துகிறது. ஜனநாயக நிர்வாக அமைப்புகளுக்குள் ஊடுருவுவதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தேர்தலில் ஆதாயம் பெறுவதே சங்பரிவாரத்தின் சூழ்ச்சியாகும்.
பசு வதை தடைச் சட்டம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குகிறது. குஜராத்தில் இச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு இந்துத்துவாவின் முக்கிய கொள்கையாகும். அதை மோடி அரசு உயர்த்திப் பிடித்துள்ளது.
முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்களுக்கு சில பள்ளிகளில் சேர்க்கைக்கான அனுமதி கிடைப்பதில்லை. இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் நகர்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. வீட்டுக் கடன், வங்கிக் கடன், மாணவர்களுக்கான உதவித்தொகை இவற்றில் தலித், கிறிஸ்துவர், முஸ்லிம் ஆகியோருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அமைதியான முறையில் பிரித்தாளும் தந்திரங்கள் அங்கே நிறைவேற்றப்படுகின்றன.
இச்சாதனை இந்தியா முழுமைக்கும் தொடர நேர்ந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவங்களுக்கு முன்னால் மோடி அணிந்திருந்த மதச்சார்பற்ற முகமூடி, அதன் பின்னால் தொடர்ந்த கலவரங்களின்போது கழன்று விழுந்தது. இஸ்லாமிய மக்களும் பெண்களும் குழந்தைகளும் கூட அடித்தும் உயிரோடு எரித்தும் கொல்லப் பட்டார்கள். வீடுகளும் கட்டடங்களும் எரித்து சாம்பலாக்கப் பட்டன.
கர்ப்பிணிப் பெண்ணைக் கொல்ல மனமில்லாமல் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவினை எடுத்து தன் காதில் அணிந்தபடி அசுரப் பெண்ணை போரில் அழித்ததாக தமிழக கிராமத்தின் வக்கிரகாளியம்மன் வழிபாட்டு புராணக்கதை கூறுகிறது.
ஆனால், இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி.யின் பெண் அமைச்சர் மாயா முன்னிலையில் இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பிலே எரித்துக் கொன்ற சம்பவம் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் 28 ஆண்டு கால சிறைத் தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இச்சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கி எடுத்தன.
பிரிட்டிஷ் ஆட்சியில் வகுப்புக் கலவரங்கள் நிறைந்த நகரமாக கொல்கத்தா விளங்கியது. ஆனால், கடந்த 34 ஆண்டுகால இடதுமுன்னணி ஆட்சியில் ஒரு வகுப்புக் கலவரச் சம்பவமும் நடைபெறவில்லை என்பது அந்த ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். 5 முறை தொடர்ச்சியாகவும் 7 முறை ஆட்சியிலும் இடது முன்னணியே வெற்றிபெற்ற திரிபுராவில் எந்த கலவரச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு இது ஒரு சாதனையாகத் தெரிவதும் இல்லை.
தொழில் வளர்ச்சியில் குஜராத் சாதனை என்று புகழப்படுகிறது. ஆனால், அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வரும். 3.95% இருந்த குஜராத்தின் தொழில் வளர்ச்சி 12.65% ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவிலோ 6.04% ஆக இருந்த தொழில் வளர்ச்சி 17.53% ஆக உயர்ந்துள்ளதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வங்கியின் வர்த்தக முதலீட்டில் குஜராத் முழுவதும் 4.7 % தான். ஆனால், ஆந்திராவில் 5.2 %, தமிழ்நாடு 6.2%. வங்கிக் கடன் வழங்கலில் குஜராத் 4.22 % ஆகவும், மகாராஷ்டிரா 26.6% ஆக கடன் வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மா பயிரிட்டுள்ளது. ரிலையன்ஸ் மேங்கோஸ் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. உருளைக்கிழங்கு, பருத்தி, எள், வெங்காயம், மாம்பழம் போன்ற பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள விவசாயிகள் இதைச் செய்யவில்லை. அக்ரோசெல், மெக்டொனால்ட், ஜெயின் போன்ற நிறுவனங்களே செய்கிறது. இதனால் சிறு குறு விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . விவசாயத் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளார்கள். பட்டினியால் 166 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என குஜராத் முதல்வரே சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
வறுமை, பட்டினி, ஊட்டச்சத்தின்மை, பெண்கள், குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் பீடித்துள்ளது. இவைதான் குஜராத்தின் மறைக்கப்பட்ட சாதனைகளாக விளங்குகிறது. கள்ளச்சாராய சாவுகள் அங்கே நிகழ்ந்தபோது மோடி அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. காந்தியின் கொள்கையை இம்மாநில அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது எனவும் மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே! மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்?
பாலபாரதி MLA,.
 நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (14-03-2013)
 நன்றி :   http://www.nidur.info

புதன், 6 மார்ச், 2013

தலிபான்களை தவறாகக் காட்டிய விஸ்வரூபம் தவறான படம்தான் - இயக்குநர் அமீர் பேச்சு


 
தன் நாட்டுக்காகப் போராடும் தலிபான்களைத் தவறாக சித்தரிக்கும் விஸ்வரூபம் தவறான படம்தான். விடுதலைப் புலிகளைப் போலத்தான் தலிபான்களும்... - இப்படிக் கூறியிருப்பவர் இயக்குநர் அமீர்!

விஸ்வரூபம் படம் பல்வேறு பரபரப்புகளை, சர்ச்சைகளைக் கிளப்பி, ஒருவழியாக வெளியாகி ஓடி முடிக்கும் சூழலில், மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் அமீர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆப்கன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை மீட்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியை விஸ்வரூபத்தில் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

எப்படி ஈழத்திற்காகப் போராடிய போராளிகளான பிரபாகரனையும் அவரது கூட்டாளிகளையும் தவறாக சித்தரிச்சா என்ன வருமோ அதுதான் விஸ்வரூபம். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும் தீவிரவாதிகள் என்று காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள்.

இப்போது தான் அது பற்றிய விவாதத்தை வைத்திருக்க வேண்டும். யாரும் செய்யவில்லை. ஆக, விஸ்வரூபம் படத்தின் மூலம் தன் மண்ணுக்காகப் போராடும் தலிபான் போராளிகளை தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை," என்று கூறியுள்ளார்.

புதன், 27 பிப்ரவரி, 2013

கூத்தாநல்லூர் லக்ஷ்மாங்குடி மதுக்கடை9637ஐ அகற்றக் கோரி மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்


லக்ஷ்மாங்குடி மதுக்கடை 9637ஐ அகற்றக் கோரி 24-2-2013 அன்று மாலை 5 மணி அளவில் உதிராபதீஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கு.ரவிச்சந்திரன் (கைப்பிள்ளை ) அனைத்து வர்த்தர்கள் சங்கம் லக்ஷ்மாங்குடிமற்றும் S.A.முஹம்மது அஸ்ரப் பத்ரு சபை செயலாளர் ஆகியோர் முன்னிலையிலும் P.M .A.சீனி ஜெஹபர் சாதிக் மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, அனைத்து வர்த்தர்கள் சங்கம் , பத்ரு சபை, செல்வி ஸ்டோர் நடராஜன், A.R. காம்ப்ளெக்ஸ் நிறுவனர் ஆகிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. 2-4-2013 அன்று காலை 10.30 மணி அளவில் மதுக்கடையை அகற்றக் கோரி லக்ஷ்மாங்குடியில் சாலை மறியல் செய்வது

2. சமபந்த பட்ட அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்புவது

3. சாலை மறியல் செய்வது சமபந்தமாக அனைத்து கட்சிகளிடம் ஆலோசனை கேட்பது

4. சாலை மறியல் செய்வது சமபந்தமாக பொதுமக்களிடம் தெரிவித்து அவர்களை போராட்டத்திற்கு திரட்டுவது

மனிதநேய மக்கள் கட்சி
கூத்தாநல்லூர் நகரம்

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

அமீரகத்தி(UAE)ல் மருத்துவ துறையில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள், பார்மசிஸ்ட், நர்ஸ் மற்றும் டெக்னிசியன்களுக்கு நல்ல செய்தி

 
அமீரகத்தி(UAE)ல் மருத்துவ துறையில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள், பார்மசிஸ்ட், நர்ஸ் மற்றும் டெக்னிசியன்கள் இன்னும் இந்த துறையை சார்ந்தவர்கள் அங்குள்ள மருத்துவ துறையினால் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற்ற பின்பு தான் அமீரகத்தில் உள்ள ஏதேனும் தனியார் மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கல் போன்ற நிறுவனங்களில் பணியாற்ற தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஆனால்







தற்போது மருத்துவ துறையை சார்ந்தவர்கள் குறிப்பாக சொந்த நாட்டில் (OUT SIDE THE UAE) வசிப்பவர்கள் அமீரகத்தில் நடக்கும் தேர்வுகளை ஆன் லைன் வழியாக எழுதும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

முன்பு இது போன்ற தேர்வுகளில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் அமீரகத்தில் தங்கியிருந்த நேரடியாக அங்குள்ள மருத்துவ தேர்வகத்தில் விண்ணப்பித்து தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளவேண்டும், மேலும் இதில் வெற்றி பெறாதவர்கள் அடுத்து இரண்டு மாதங்கள் கழித்து பின்பு தான் மீண்டும் தேர்வு எழுத முடியம். இதனால் அமிரகத்திர்க்கு சுற்றுலா(VIST VISA) விசாவில் வந்து கலந்து கொள்ளவேண்டிய நிலையும், மேலும் இதில் ஒரு முறை தோல்வியுற்றால் மீண்டும் கலந்து கொள்வது என்பது சிரம்மான நிலையாக இருந்தது.


தற்போது இந்த நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு விண்ணப்பதாரர்கள் தாங்கள் இருக்கும் நாட்டில் இருந்தவாறு தகுதியானவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து, வாரம் ஒருமுறை ஒரு தேர்வு என்ற அடிப்பாடையில் நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் இந்த தேர்வுக்கான பாஸ்போர்ட் நகல், போட்டோ மற்றும் தகுதி சான்றுகள் மற்றும் விண்ணப்ப கட்டணம் ஆகியவை ஆன் லைன் வழியாக தங்களுடைய சொந்த நாட்டில் இருந்தவாறு பூர்த்தி செய்து அனுப்பலாம், விண்ணப்ப கட்டணம் மின்னணு கார்ட்(E-Dirham card ) வழியாக ஆன்லைனில் செலுத்தலாம், இத்தகைய E-Dirham Cardகள் அமீரகத்தால் அங்கீகரிக்கபட்ட வங்கிகளில் அதாவது நிதி மற்றும் உள்த்துறை(MINISTRY OF FINANCE OR MINISTRY OF INTERIOR) அல்லது அபுதாபி வணிக வங்கி மற்றும் துபாய் வர்த்தக வங்கி(Abu Dhabi Commercial Bank and Commercial Bank of Dubai) ஆகியவற்றில் நேரடியாக அல்லது ஆன் லைன் மூலமாக பெற்று கொள்ளலாம்.



தேர்வு முடிவுகளை இணைய தளம் வழியாகவும் தெரிந்து கொள்ள முடியும். இத்தகைய நடைமுறைகள் மூலமாக ஏற்கனவே அமீரகத்தில் லைசன்ஸ் பெற்று பணியாற்ற கூடிய வெளிநாட்டவர்கள் அல்லது அமீரகத்தில் லைசன்ஸ் பெற்று தற்போது அமீரகத்தை விட்டுவெளியே(OUT SIDE THE UAE) இருப்பவர்களும் தங்களுடைய சான்றிதழ் மறுமதிப்பீடு(upgrade Qualification and Experience) ஆகியவற்றையும் செய்து கொள்ள முடியும்.



இத்தகைய நடைமுறைகள் தற்போது அமீரக மருத்துவ துறையால் ஏற்படுத்தபட்டுள்ளதால் பண செலவு மற்றும் நேர விரையம் தவிர்க்கபடுகிறது மேலும் தேர்வுக்காக விசாவில்(VISIT OR EMPLOYMENT VISA) வரவேண்டிய நிலையும் தவிர்க்கலாம் எனவே இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறது.


கீழே கொடுத்துள்ள இணைய தளம் மூலம் கூடுதல் தகவல்களை பெற்று கொள்ளாம்.

http://www.moh.gov.ae/en/Pages/default.aspx



தகவல்: கல்ப் நியூஸ்

அன்புடன்...
N.அஸ்ரப் அலி
நன்றி  : Muduvai Hidayath      http://www.facebook.com/muduvai.hidayath

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சட்டவிதிமுறைக்கு முரணாக அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து தூக்குத்தண்டனை எதிர்ப்பாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என்ற தீர்ப்பின்படி அப்சல் குரு தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குரு எந்த பயங்கரவாதக் குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.

அப்சல் குருவுக்காக வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் மிக முக்கியமான சாட்சியங்களைக்கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கிரமச் செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அந்தக் கொடிய குற்றம் குறித்த விசாரணைகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

நாடாளுமன்றக் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகள் பிடிபடவில்லை, தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிச்செயலில் ஈடுபட்டதாக நிரூப்பிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட பாரபட்சமான தூக்குத்தண்டனை நியாயமற்றது, சட்டவிதிமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டு மக்களின் கூட்டுமனசாட்சியின் படி துôக்குதண்டனை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்பை சட்டவல்லுனர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும், விமர்சனம் செய்திருந்த நிலையில் மத்திய அரசு துôக்குத்தண்டனை நிறைவேற்றியிருப்பது பாரபட்சமான நடவடிக்கை, எனவே மத்திய அரசைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையான துôக்குதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று சென்னையில் ஆர்பாட்டம் நடைபெருகிறது.தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் நடைபெரும் ஆர்பாட்டத்தில் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, (மனிதநேய மக்கள் கட்சி) .பழ. நெடுமாறன் (தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு) தொல். திருமாவளன் எம்.பி, (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்) மல்லை சத்யா (துணை பொதுச் செயலாளர் மதிமுக) விடுதலை இராஜேந்திரன்,(பொதுச் செயலாளர், திவிக) அப்துல் ஹமீது (எஸ் டி பி ஐ) தியாகு (தமிழர் தேசிய விடுதலை இயக்கம்) திருமுருகன் (மே-17 இயக்கம்) அற்புதம்மாள் (பேரரிவாளனின் தாயார்) செந்தில் (சேவ்தமிழ்) செல்வராஜ்(மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்) சீனிவாசன் (பூவுலகின் நண்பர்கள்) உள்ளிட்ட தலைவர்களும் தென் சென்னை மாவட்ட தமுமுக தலைவர் சீனிமுஹம்மது, செயலாளர் ஹனிபா, பொருளாளர் மகதும் நாசர் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

சனி, 9 பிப்ரவரி, 2013

அப்சல் குருவுக்கு கூட்டு மனசாட்சிப்படி தூக்குத்தண்டனை தமுமுக கண்டனம்

 
 
அப்சல் குரு விவகாரத்தில் நேரடியான சாட்சியம் இல்லாத நிலையில் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத்தண்டனை கண்டிக்கத்தக்கது:
இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இந்திய உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என தீர்ப்பின்படி அப்சல் குரு இன்று அதிகாலை தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குருவுக்கு எந்த பயங்கரவாத குழு அல்லது அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அப்சல் குருவுக்காக வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் மிக முக்கியமான சாட்சியங்களைக்கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கிரம செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை ஆனால் அந்த கொடிய குற்றம் குறித்த விசாரணைகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை தண்டனையும் வழங்கப்படவில்லை இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிசெயலில் ஈடுபட்டதாக நிருப்பிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை நியாயமற்றது.
அப்சல் குரு தூக்கிலிடபட்டதன் மூலம் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கும் நோக்கமும் நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கும் உண்மையான கரணம் யார் எது என நடவடிக்கையும் புறம் தள்ளப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அப்சல் குரு மீது நேரடியான, மறைமுகமான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் இந்திய மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்தி படுத்தவே இவருக்கு தூக்கு என்பது, நீதிக்கு ஆதாரம் தேவை இல்லை, இவன் குற்றம் செய்தான் என்று நம்பினாலே போதும் என்பது ஆபத்தானது, இது இந்திய அரசியல் சாசனத்தினை குழிதோண்டி புதைக்கும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே, இத்தூக்கு தண்டனையை கண்டித்து வரும் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமுமுக, மமக, மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் பங்குபெறும் மாபெரும் கண்ட ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
இவண்,
(ஜே.எஸ்.ரிபாயீ)

இந்திய அரச பயங்கரவாதம்:அப்பாவி அப்சல் குருவை தூக்கிலிட்ட காங்கிரஸ் அரசு!

  Afzal Guru hanged in Tihar jail
புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கூட்டு இந்துத்துவா மனசாட்சியின் படி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்சல் குருவை இன்று காலை 8:00 மணியளவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தூக்கிலிட்டு படுகொலைச் செய்துள்ளது.
அப்சல் பிறந்த மாநிலமான கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி பாராளுமன்ற தாக்குதலில் சதியாலோசனை நடத்தியதாக குற்றம் சாட்டி 2002 டிசம்பர் 18-ஆம் தேதி அப்சல் குருவிற்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. இது 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி உயர்நீதிமன்றமும், 2005 ஆகஸ்ட் நான்காம் தேதி உச்சநீதிமன்றமும் உறுதிச் செய்தது. 2006 அக்டோபர் 20-ஆம் தேதி திஹார் சிறையில் மரணத்தண்டனையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.
குடியரசு தலைவருக்கு அளிக்கப்பட்ட கருணை மனு 2 வாரத்திற்கு முன்பு தள்ளுபடிச் செய்யப்பட்டது. ஒரு அப்பாவியின் உயிரை காவு வாங்கிய இந்திய அரசு, மனித உரிமையை உச்சக்கட்டமாக மீறியுள்ளது.

நன்றி : http://www.thoothuonline.com/afzal-guru-hanged-in-tihar-jail-38709/