செவ்வாய், 10 டிசம்பர், 2013

ஆர்.எஸ்.எஸ்.இரகசிய சுற்றறிக்கை




தமிழர்களே!
                              தமிழனாய் பிறந்த நாம்,இந்தியா எங்கின்ற ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கோண்டு ஒற்றுமையாய் வாழ்ந்து வருகிறோம்.ஆரிய சூழ்ச்சியாலும்,திராவிட துரோகத்தாலும் தமிழன் கொஞ்சம்,கொஞ்சமாக  தன் தமிழ் தாயின் மடியிலேயே தன் அடையாளத்தை தொலைத்து வருகிறான் மதமற்ற தமிழனிடம் வைதீக மதமாக உட்புகுந்த பிராமணியம் ஆட்சி அதிகாரத்தின் துனை கொண்டு இந்து மதமாக உருமாற்றம் செய்து உழைப்பு பிரிவினையை , மாற்ற முடியாத சாதி பிரிவினையாக நிலைபெறச் செய்தது.இச் சாதி வேற்றுமையின் கொடுமை தாங்காது,மாற்று மதமாகிய இஸ்லாம்,கிறித்துவ மதத்திற்கு தமிழர்களில் ஒரு பகுதியினர் மாறிச்சென்றனர்.இன்நிலையில் அகண்ட பாரதம் என்னும்(இந்தியா,பாக்கிஸ்தான்,இலங்கை,பர்மா,மலேசியா,இந்தோனேசியாவை உள்ளடக்கிய) இந்துதுவ பாசிச கொள்கையை கொண்ட ஆர்.எஸ்.எஸ்.,சங் பரிவார் கூட்டம் திடீரென்று தமிழ் தேசியம்,தமிழர் நலன்,ஈழ விடுதலை பேசி வருகிறது தமிழ் நாட்டில் மட்டும்.நாடு முழுவதும் தேசிய இனப்பிரச்சனை கூர்மை அடைவதை கண்ட அகண்ட பாரத சங் பரிவார் கூட்டம் அதே தேசிய இனப் பிரச்சனையை பேசி குழப்பம் விளைவிக்கின்றது.தமிழ் தேசிய வாதிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழ் பற்றாளர்களில் ஒரு பெரும் பிரிவினர் இந்த அகண்ட பாரத கூட்டம்,போட்டுக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய முகமூடியை அறிந்தும்,அறியாமலும் பின்னே சென்று கொண்டிருக்கிறது.இந்த சங் பரிவாரங்கள் இந்திய தலைமையை கைப்பற்றினால் தமிழ் தேசிய எழுச்சி இன்னும் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என்பது தவிர்க்க  முடியாத்தாகிவிடும்.15 ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தன் சங் பரிவாரங்களுக்கு அனுப்பிய இரகசியச் சுற்றறிக்கையின் தமிழாக்கம் விடுதலை நாளிதழில் (27/03/1995)வெளியான தகவல் இங்கு தரப்படுகிறது.இதை பார்த்த பிறகாவது தமிழர்கள் பி.ஜே.பி. யையும்,பி.ஜே.பி. யுடன் கூட்டுச்சேரும் கட்சியையும் புறக்கணித்து தேர்தலில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
http://madhamatratamilan.blogspot.ae/2013/12/blog-post_7.html?m=1

கருத்துகள் இல்லை: