புதன், 28 மார்ச், 2012

மன்னார்குடியில் பள்ளி மாணவிகளுக்கான கோடைகால குர்ஆன் வகுப்புகள்

பள்ளி மாணவிகளுக்கான கோடை விடுமுறை குர்ஆர் வகுப்புகள் ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை மன்னார்குடியில் நடைபெற உள்ளது.

பள்ளி ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து விரைவில் கோடை விடுமுறை விடப்படவிருக்கிறது. பள்ளி மாணவிகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மன்னார்குடியில் தங்குமிடத்துடன் கூடிய குர்ஆன் வகுப்புகள் நடைபெற உள்ளது.

மன்னார்குடியில் உள்ள வாணக்காரத் தெருவில் உள்ள பெண்கள் அரபி ஹிஃப்ளு மத்ரஸாவில், ஜாமிஆ மன்பஉஸ் ஸாலிஹாத்தில் பள்ளி மாணவிகளுக்கான கோடை விடுமுறை குர்ஆன் வகுப்புகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடைபெறும் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குர்ஆன் வகுப்புகளில் தஜ்வீதுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி, இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள், ஐந்து வேளை தொழுகைப் பயிற்சி, சுன்னத்தான துஆக்கள், சுன்னத்தான வாழ்க்கை நடைமுறை, வரலாற்றுச் சம்பவங்கள் (ஹயாத்துஸ் ஸஹாபா), அவசியமான ஹதீஸ்கள் (முன்தகப் அஹாதீஸ்), அரபி மொழி ஆகிய வகுப்புகள் நடைபெறும். மேலும் எம்பிராய்டிங் பயிற்சியும் அளிக்கப்படும்.

இது குறித்து மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் 04367-252925, 9500608252 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் girlsislamicschool@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

திங்கள், 12 மார்ச், 2012

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் அபாயப் பள்ளிகள்



அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பலின் செயல் பாடுகள், ஊடுருவல்கள் பற்றி வெளிப்படுத்திய கருத்துகளை, தகவல்களை அலட்சியப் படுத்தினால், அதற்காக நாடு மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைத் திணிக் கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த அமைப்புகள் மூலம் இந்தியாவில் 28,861 கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன. இதில் 32,33,337 மாணவர்கள் பயிலுகிறார்கள். 1,57,741 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்குத் தனியாக பாரதிய சிக்ஷா மண்டல் என்ற அமைப்பும் உண்டு.
இவையன்றி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை எல்லா வற்றிலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன என்றால், பெரிய விளக்கங்கள் தேவைப்படாது.
முழுக்க முழுக்க இந்துத்துவா வெறி என்னும் நஞ்சு ஊட்டப்படுவதோடு, சிறுபான்மை மதங்கள் மீது குரூரமான முறையில் வெறுப்பு விதைகளும் தூவப்படும் அபாயமும் உண்டு.
இவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்கள் வெளியே வருவார்களேயானால், நாட்டில் அமளி துமளிகளும், வன்முறைகளும், அமைதியற்ற தன்மையும்தானே தலை விரித்தாடும்? இதற்கான பயிற்சிதானே அவர்களுக்குத் தரப்படுகிறது?
ஆசிரியர் தினம் என்று அரசு அறிவித்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக வியாச முனிவர் பிறந்த நாள் என்று ஜூன் 25 ஆம் தேதி கடைப் பிடிக்கப்படுகிறது.
குழந்தைகள் தினம் என்று அரசு அறிவித் துள்ள நேருவின் பிறந்த நாளை இவர்கள் ஒப்புவதில்லை. மாறாக இந்துக் கடவுள் கிருஷ் ணன் பிறந்த நாள் என்று கோகுலாஷ் டமியைத்தான் கொண்டாடச் செய்கிறார்கள்.
பாடத்திட்டங்கள் எப்படி இருக்கும்? எடுத்துக் காட்டாக ஒன்று. உத்தரப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பாடத்தில் இடம் பெற்றிருப்பதாவது : முலாயம் சிங் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்? பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந் துக்கள் கொல்லப்பட்டனர்? (அவுட் லுக் 10.5.1999)
யூதர்கள் மீது வெறியைக் கிளப்புவதற்காக அடால்ப் ஹிட்லர் இப்படித்தான் பாடத் திட்டங்களை அமைத்துக் கொடுத்தார்.
இந்திய வரலாற்றுக் குழுவை மாற்றி அமைத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அதில் திணித்தது பி.ஜே.பி. ஆட்சி.
இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bomb Factories) மாற்றப்பட்டுவிட்டது பா.ஜ.க. ஆட்சியில்என்று ஃப்ரன்ட் லைன் ஏட்டில் கட்டுரையாளர்கள் பார்வதி மேனன், டி.கே.ராஜ லட்சுமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகள் கண் காணிக்கப்பட வேண்டும்.
ஆய்வுக் குழு ஒன்றை நியமித்து இப்பள்ளிகளின் பாடத் திட்டங்கள், பயிற்சிகள் பற்றி உண்மை கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஞாயிறு, 11 மார்ச், 2012

14 ஆண்டுகள் சிறையில் சித்ரவதை... ஓர் அப்பாவி இளைஞரின் பரிதாபக் கதை


--மரியம் குமாரன்

நூறு குற்றவாளி தப்பித்தாலும் தவறில்லை, ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் நம்நாட்டு நீதி பரிபாலனத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் தப்பிப்பது நம் நாட்டில் சாதாரண நிகழ்வு. அதேபோல ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொடுமையாக தண்டிக்கப்படுவதும் இயல்பாகி விட்டது. தப்பிக்கின்ற ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் முஸ்லிம் அல்லாதவர்களாகவும், சிக்கிக்கொண்டு சிறைகளில் சீரழிக்கப்படுகிற ஆயிரக்கணக்கான அப்பாவிகள் முஸ்லிம்களாக இருப்பதும்தான் இதில் குறிப்பிடத்தக்கது.

டெல்லி குண்டுவெடிப்பில் 16 வயதில் கைது செய்யப்பட்டு 29 வயதில் ‘குற்றமற்றவர்’ என்று விடுதலை செய்யப்பட்டவர், 400 ரூபாய் திருட்டு வழக்கில் 8 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர் என ஏராள முஸ்லிம்களின் வரிசையில் முஹம்மது அமீர்கான் என்ற இளைஞரும் சேருகிறார். இந்திராணி பாசு, பிப்.11,2012 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் இவரைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தபோது கண்கள் பனித்தன. ஆயிரக்கணக்கில் இதுபோன்ற அநியாயங்கள் நடக்கும் நாட்டில் இலட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான மக்கள் மௌனம் காக்கும் கொடுமையை எண்ணும்போது, அழுகை ஆத்திரமாகியது.

1998ஆம் ஆண்டு பிப்.20ம் நாள் தலைநகர் டெல்லியில் இரவு சுமார் 10 மணியளவில், முஹம்மது அமீர்கான் என்ற 18 வயது இளைஞன், சிறுநீரகக் கல்லின் சித்ரவதை தாங்க முடியாமல், பகதூர்கரில் உள்ள யுனானி மருத்துவர் வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறார். நடக்கப்போகிற பயங்கரங்கள் எதுவும் தெரியாமல், வலியில் துடித்தபடி வழியில் போகிறார் அந்த இளைஞர். ஒரு வெள்ளைநிற மாருதி ஜிப்சி அவர் அருகே வந்து நிற்கிறது. அதில் வந்தவர்கள் இவரை உள்ளே இழுத்துப் போடுகிறார்கள். வாகனம் சீறிக் கிளம்புகிறது. சாதாரண பெட்டிக் கடைக்காரரின் மகனை, பெரிய பணக்காரரின் மகன் என்று தவறாகக் கருதி கடத்துகிறார்களோ என்று சந்தேகம் வந்தது அமீர்கானுக்கு. கடத்திச் செல்பவர்களோ, சீருடைய அணியாத காவலர்கள். மறைவிடத்தில் உள்ள ஒரு சித்ரவதைக் கூடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

பிறகு நடந்ததை அமீர்கான் சொல்கிறார்: ‘‘அந்த இடமே பயங்கரமாக இருந்தது. பேசினால் எதிரொலி கேட்டது. அங்கே வைத்து அவர்கள் என் ஆடைகளை முழுவதும் களைந்தார்கள். நேர்கோட்டில் என் இரு கால்களையும் அகலமாய் விரித்தார்கள். சிறுநீரக் கல்லால் சித்ரவதைப்பட்ட எனக்கு இந்தக் கூடுதல் சித்ரவதைக் கொடூரமாக இருந்தது. காலை உச்சகட்ட அகலத்திற்கு விரித்து, விலங்குகளை மாட்டி மீண்டும் சேர்க்க முடியாமல் செய்தார்கள். என் ஆணுறுப்பில் பெட்ரோலை ஊற்றினார்கள். தாறுமாறாக பிரம்பால் அடித்தார்கள். சோப்புத் தண்ணீரைக் குடிக்க வைத்தார்கள். ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சினார்கள். மயங்கி விழுந்தேன். உடம்பின் மீது மிகக்கனமான இரும்பு உருளைகளை உருட்டி நசுக்கினார்கள். பலமணி நேரம் இந்த சித்ரவதை தொடர்ச்சியாக நடந்தது. கடைசியாக சில வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கினார்கள். என்னுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்தார்கள். ஒருவாரம் நடந்த இந்தக் கொடுமையான சித்ரவதையில் நான் இளமையை முழுமையாக இழந்தேன்.

பிப்.20 முதல் என்னை அடைத்து வைத்துச் சித்ரவதை செய்த காவல்துறை, பிப்.27, 1998 அன்றுதான் என்னைக் கைது செய்ததாக அறிவித்தார்கள். 1996 முதல் 1997 வரை நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு நான்தான் மூளையாக செயல்பட்டவன் என்று குற்றஞ்சாட்டி, 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.’’ 14 நீண்ட ஆண்டுகள் சிறையில் முஹம்மது அமீர்கான் வதைக்கப்பட்டார். 2012 ஜனவரி மாதம், 17 வழக்குகளிலிருந்து முஹம்மது அமீர்கான், ‘குற்றமற்றவர்’ என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். அமீர்கான் கைது செய்யப்பட்டதை மறுநாள் பத்திரிகை வாயிலாகத் தெரிந்துகொண்ட அவரது எளிய குடும்பம் அனலில் புழுவாய்த் துடித்துள்ளது. பெட்டிக் கடை வைத்து ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த அவரது வயதான தந்தை, தோள் கொடுக்க வேண்டிய ஒரே மகனை சட்டத்தின் சூதாட்டம் சிறையில் அடைத்து விட்டதையும், விடுதலைக்கான் வெளிச்சக்கீற்றே இல்லாததையும் அறிந்து, அதிர்ச்சியிலேயே இறந்துவிட்டார்.

பெட்டிக் கடையையும், இருந்த நகைகளையும், வீட்டின் தட்டுமுட்டுச் சாமான்களையும் விற்று, ஒரு குடும்பமும் ஜீவனம் நடத்தியது. “என்னை மீட்க விதவையான என் பாமரத் தாய் பெரும் பாடுபட்டார். நீதிமன்ற வளாகத்தில் 2007ம் ஆண்டு நான் போலீஸ் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த போது, கொட்டும் மழையில் நனைந்து கொண்டே என் தாய் வந்ததையும், அங்கே அவர் அலைக்கழிக்கப்பட்டதையும் பார்த்தபோது, இதைப் பார்ப்பதற்கு பதிலாக இறந்துவிடலாமே என்று தோன்றியது. என்னைப் பழைய டெல்லி ரயில் நிலையம் அருகே கைது செய்ததாகவும், அப்போது பயங்கர வெடிகுண்டுகளையும், ஆயுதம் செய்யும் கருவிகளையும், பள்ளிக்கூட நன்னடத்தைச் சான்றிதழையும் வைத்திருந்ததாக கதைவசனம் எழுதி இருந்தார்கள். இதனால் என்னை எல்லோரும் பயங்கரவாதியாகவே பார்த்தனர். ஒரு பயங்கரவாதி, பள்ளிக்கூடத்தின் நன்னடத்தைச் சான்றிதழை சூட்கேசில் வைத்துக்கொண்டு சுற்றுவானா- என்று யாரும் யோசிக்கவில்லை.

ஒரு ஹிந்தி பத்திரிகை, நான் பாகிஸ்தான்காரன் என்றும், இந்தியாவை சீர்குலைக்க அனுப்பப்பட்டவன் என்றும் எழுதிவிட்டது. எனவே எனக்குச் சரியான வழக்குரைஞர் கூட கிடைக்கவில்லை. எனது வழக்கை ஏற்று நடத்தவே எல்லோரும் அஞ்சினார்கள். இந்நிலையில், எனது நிலையை அறிந்து இரக்கப்பட்டு, மனிதஉரிமை ஆர்வலரும் வழக்குரைஞருமான என்.டி.பஞ்சோலி, எனது வழக்கை எடுத்து நடத்தினார். அவரது சட்டப் போராட்டம் அப்பாவியான என்னை 17 வழக்குகளிலிருந்து விடுவித்துள்ளது. மீதி இரு வழக்குகளிலிருந்தும் விரைவில் விடுதலைக் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.

எனது விதவைத் தாய் நடத்திய சட்டப் போராட்டத்தில் மனரீதியாக அவர்பட்ட சித்ரவதைகள் கொஞ்சமல்ல. மன உளைச்சலாலே அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். மூளையிலும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. நான் செய்த குற்றம் என்ன? முஸ்லிமாகப் பிறந்ததுதான் என் குற்றமா?’’ என்கிறார் முஹம்மது அமீர்கான். தீர்ப்புரையில் நீதிபதி, காவல்துறையைக் கடுமையாகக் கண்டித்திருந்தனர். மிக பயங்கரமான குற்றச்சாட்டுகளை முஹம்மது அமீர்கான் மீது சுமத்திய காவல்துறை, எதையும் நிரூபிக்கவில்லை. 18 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அமீர் 32 வயதில் விடுதலை செய்யப்படுகிறார். வாழ்வின் பொன்னான தருணங்களை யாரால் திருப்பித்தர முடியும். எனவே அமீர்கானுக்கு அரசு நஷ்டஈடு தரவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஓர் அப்பாவி இளைஞன் மீது அபாண்டம் சுமத்தி, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்து, அவன் குடும்பத்தை சீரழித்ததுதான் அந்தக் காவல்துறை சட்டம்ஒழுங்கைக் காக்கும் லட்சணம்.

டிசம்பர் 1996 முதல் அக்டோபர் 1997 வரை நடந்த குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் அமீர்கான் என்ற அப்பாவியைப் பலிகொடுத்து விட்டார்கள். அதேசமயம், அந்தக் குற்றங்களைச் செய்த உண்மைக் குற்றவாளிகளையும் காவல்துறை தப்பவைத்துவிட்டது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள். உண்மையான பயங்கரவாதிகள் யார்? என்று. மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். அநீதிகளுக்கு எதிராக மௌனம் காப்பது சரிதானா-? என்று.

புதன், 7 மார்ச், 2012

பாஜகவை தூக்கிப் போட்ட அயோத்தி-முலாயமுக்கு ஜேஜே!

அயோத்தி: சர்ச்சைக்குரிய அயோத்தி தொகுதியை பாஜக இழந்து விட்டது. 1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து இங்கு வென்று வந்த பாஜகவுக்கு இந்த முறை அயோத்தி மக்கள் டாட்டா காட்டி விட்டனர். மாறாக, சமாஜ்வாடிக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

அயோத்தியிலிருந்துதான் தனது அரசியல் மறுமலர்ச்சியைத் தொடங்கியது பாஜக என்பது நினைவிருக்கலாம். அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை பாஜகவினரும், இந்து அமைப்புகளும் சேர்ந்து இடித்தது இன்று வரை இந்தியாவின் பெரும் கரும்புள்ளியாக திகழ்ந்து வருகிறது. அன்று முதல் அயோத்தியில், தொடர்ந்து பாஜகவே வென்று வந்தது. ஆனால் இந்த முறை அயோத்தி மக்கள் மாற்றி யோசித்து, ஓட்டை மாற்றிப் போட்டு விட்டனர். சமாஜ்வாடிக் கட்சி இங்கு வென்று விட்டது.

பாஜகவின் லல்லு சிங், தொடர்ந்து 1991ம் ஆண்டு முதல் இங்கு வென்று வந்தார். இந்த முறை அவர் இளம் சமாஜ்வாடி தலைவரான தேஜ் நாராயண் பாண்டேவிடம் 5700 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போய்விட்டார்.

கடந்த தேர்தலிலேயே லல்லு சிங் ஆடிப் போய்த்தான் வென்றார். அதாவது அவரது வெற்றி வித்தியாசம் 6500 மட்டுமே.

இப்போதைய தேர்தலில் லல்லுவுக்கு அயோத்தி நகர்ப் புறங்களில் முன்னிலை கிடைத்தது. அதேபோல வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளிலும் அவருக்கே அதிக ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. ஆனால் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் அவரைக் கவிழ்த்து விட்டு விட்டனர்.

அயோத்தி வேட்பாளராக பாண்டேவை அறிவித்த கையோடு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் பலமுறை அயோத்தியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களை கவர ஆரம்பித்தார். அவரது அணுகுமுறைக்கு நல்ல பலனும் கிடைத்தது. இப்போது வெற்றியும் வந்து சேர்ந்துள்ளது.

உத்தர பிரதேச முஸ்லிம் MLA க்கள்

நடந்து முடிந்த உத்திரபிரதேசம் தேர்தலில் முலாயம்சிங் யாதவ் முதல்வராக நான்காம் முறையாக பதவி ஏற்கிறார் முஸ்லிம் வாக்கு வங்கிகளை அப்படியே முழுவதுமாக பெற்றதின் விளைவாக வெற்றி பெற்றதாக அரசியல் வல்லுநர் கருத்து தெரிவித்துஉள்ளனர் . உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன இதில் குறைந்தது முஸ்லிம்கள் 150 பேராவது வெற்றி

பெற்று இருக்கவேண்டும் ஆனால் 69 பேர் மற்றுமே வெற்றி பெற்று உள்ளனர் அவரது விபரங்களை தந்துள்ளோம் ....








No. Name of winners Party Constituency Winning Margin














1 ZAFAR AALAM Samajwadi Party Aligarh 23086

2 HAJI PARVEJ AHMAD (TANKI) Samajwadi Party Allahabad South 414

3 MEHBOOB ALI Samajwadi Party Amroha 21805

4 ABID RAZA KHAN Samajwadi Party Badaun 15413

5 ATAURREHMAN Samajwadi Party Baheri 18

6 DR. WAQAR AHMAD SHAH Samajwadi Party Bahraich 15496

7 BADLU KHAN Samajwadi Party Bangermau 6795

8 MOHD.GHAZI Bahujan Samaj Party Barhapur 27375

9 JAHID BEG Samajwadi Party Bhadohi 16241

10 SHAZIL ISLAM Ittehad-E-Millat Council Bhojipura 17948

11 JAMALUDDIN SIDDIQUI Samajwadi Party Bhojpur 18629

12 MHD.IRFAN Samajwadi Party Bilari 1540

13 MUSARRAT ALI Bahujan Samaj Party Bilsi 8328

14 NAWAZISH ALAM KHAN Samajwadi Party Budhana 10588

15 MOHD. ALEEM KHAN Bahujan Samaj Party Bulandshahr 6947

16 MOHD ASHIF JAFRI Bahujan Samaj Party Chail 1290

17 ALI YUSUF ALI Bahujan Samaj Party Chamraua 1846

18 IQBAL Bahujan Samaj Party Chandpur 15013

19 NOOR SALEEM RANA Bahujan Samaj Party Charthawal 12706

20 ADIL SHEIKH Samajwadi Party Didarganj 2227

21 KAMAL YUSUF MALIK Peace Party Doomariyaganj 1589

22 SYED QASIM HASAN Samajwadi Party Fatehpur 3786

23 WASEEM AHMAD Samajwadi Party Gopalpur 30134

24 KAMAL AKHTAR Samajwadi Party Hasanpur 32228

25 MO. ASIF Bahujan Samaj Party Husainganj 2851

26 ABRAR AHMAD Samajwadi Party Isauli 13941

27 NADEEM JAVED Indian National Congress Jaunpur 1239

28 ANEESURREHMAN Peace Party Kanth 1534

29 DR. MOH. AYUB Peace Party Khalilabad 5392

30 SHAHID MANZOOR Samajwadi Party Kithore 11106

31 ZAMEER ULLAH KHAN Samajwadi Party Koil 599

32 MOHAMMAD RIZWAN Samajwadi Party Kundarki 17201

33 FAREED MAHFOOJ KIDWAI Samajwadi Party Kursi 23937

34 MO. JASMIR ANSARI Bahujan Samaj Party Laharpur 17672

35 ZAKIR ALI Bahujan Samaj Party Loni 25248

36 MOHD REHAN Samajwadi Party Lucknow West 7812

37 YASAR SHAH Samajwadi Party Matera 2801

38 MUKHTAR ANSARI Quami Ekta Dal Mau 5904

39 JAMIL AHMAD QASMI Bahujan Samaj Party Meerapur 12733

40 SULTAN BAIG Bahujan Samaj Party Meerganj 7921

41 SIBGATULLA ANSARI Quami Ekta Dal Mohammadabad 7333

42 MOHAMMAD YUSUF ANSARI Samajwadi Party Moradabad Nagar 20238

43 SHAMEEMUL HAQ Samajwadi Party Moradabad Rural 22736

44 SHAH ALAM URFA GUDDU JAMALI Bahujan Samaj Party Mubarakpur 8566

45 BABBAN Bahujan Samaj Party Mughalsarai 15440

46 WAHAB Bahujan Samaj Party Muradnagar 3622

47 TASLEEM Bahujan Samaj Party Najibabad 11583

48 ASHFAQ ALI KHAN Samajwadi Party Naugawan Sadat 3662

49 ALAMBADI Samajwadi Party Nizamabad 23843

50 SHAKIR ALI Samajwadi Party Pathardeva 4554

51 NAJEEVA KHAN ZEENAT Samajwadi Party Patiyali 27775

52 ANSAR AHMAD Samajwadi Party Phaphamau 5296

53 SAYEED AHAMAD Samajwadi Party Phulpur 7900

54 RIAZ AHMAD Samajwadi Party Pilibhit 4235

55 MOHAMMAD AZAM KHAN Samajwadi Party Rampur 63269

56 CHOUDHARI FASIHA BASHIR ALIAS GAJALA LARI Samajwadi Party Rampur Karkhana 7147

57 IQBAL MEHMOOD Samajwadi Party Sambhal 30047

58 BABU KHAN Samajwadi Party Shahabad 11134

59 MUHAMMAD RAMJAN Samajwadi Party Shrawasti 11205

60 JIAUDDIN RIJVI Samajwadi Party Sikanderpur 28531

61 HAJI IRFAN SOLANKI Samajwadi Party Sishamau 19663

62 GHULAM MOHAMMED Samajwadi Party Siwalkhas 3587

63 NAWAB KAZIM ALI KHAN URF NAVED MIAN Indian National Congress Suar 13715

64 DILNAWAZ KHAN Indian National Congress Syana 1664

65 AZIMULHAQUE PAHLWAN Samajwadi Party Tanda 27521

66 DR. MOHD. MUSLIM Indian National Congress Tiloi 2710

67 ABDUL MASHHOOD KHAN Samajwadi Party Tulsipur 33710

68 ARIF ANWAR HASHMI Samajwadi Party Utraula 1005

69 SYEDA SHADAB FATIMA Samajwadi Party Zahoorabad 10478

thanks : http://kiliyanur.net