சனி, 30 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்! ஜுனியர் விகடன் இதழில் தமுமுக தலைவர் பேட்டி

பேராசிரியர் ஜவாஹிருல்லா


ஜுனியர் விகடன் (நவம்பர் 3, 2011 இதழில்) தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அயோத்தி தீர்ப்பு குறித்து அளித்த பேட்டி
இடம் பெற்றுள்ளது. அதனை நன்றியுடன் பிரசுரிக்கிறோம்
அயோத்தி தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்!

அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வேலையை முஸ்லிம் அமைப்புகள் அமைதி யாகச் செய்து வருகின்றன. அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் என்ற அமைப்பு இது தொடர்பான ஆலோசனைகளை லக்னோவில் கூடி விவாதித்தது. அந்தக் கூட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து சென்று கலந்து கொண்டார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா.

''லக்னோ கூட்டத்தின் சாராம்சம் என்ன?''

''பெரும்பாலான முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தைக்கொண்ட அமைப்புதான் 'அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்'. அயோத்தி வழக்கை முஸ்லிம்கள் சார்பில் உ.பி-யின் வஃக்பு வாரியம் நடத்தி வருகிறது. அதன் பின்புலத்தில் அதை இயங்கவைப்பது, இந்த அமைப்புதான்.

நான் கலந்துகொண்ட கூட்டத்தில் தீர்ப்பு பற்றி விரிவாக அலசப்பட்டது. நம் நாட்டின் அரசியல் சாசன சட்டத்துக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகள்பற்றி, எல்லோரும் ஒருமித்த கருத்துகளை எடுத்துவைத்தனர். 'இந்தத் தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. சுப்ரீம் கோர்ட்டை நாடி தீர்ப்பைத் திருத்தி எழுத வேண்டும், அதற்கான பணிகளைத் தொடர வேண்டும்' என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சொத்து தொடர் பான வழக்குகளில், சந்தேகத்தின் அல்லது நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படக் கூடாது. இந்த வழக்கைப் பொறுத்த வரையில், மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 'அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். பிரச்னையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்ளலாம்' என்று சங்பரிவார் தரப்பில் ஆரம்பத்தில் இருந்தே பேச்சுகள் எழுந்து வந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்குப் பிறகும்கூட 'பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்கிற கோரிக்கைகள் எழுகின்றன. முஸ்லிம் ஷரியத் சட்டம் மற்றும் அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு பேச்சுவார்த்தையை நடத்த முஸ்லிம்கள் இப்போதும் தயாராகவே இருக்கிறார்கள்!''

''ஒரு தரப்பினருக்கு மட்டும் சாதகமாக தீர்ப்பு வழங்கியிருப்பதாகத் தெரியவில்லை யே... இரண்டு தரப்புக்கும் ஏற்ற வகையில் தானே வழங்கப்பட்டுள்ளது?''

''தன் மகன் ஹ§மாயூனுக்கு பாபர் எழுதிய உயில், டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அந்த உயிலில், 'மக்களின் வழிபாட்டுத் தலங்களை ஒருபோதும் இடித்துவிடாதே!' என்று பாபர் குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு, தினசரிக் குறிப்புகளாக பாபர் எழுதிய சுயசரிதமான 'பாபர் நாமா'வில்கூட ராமர் கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக எதுவும் சொல்லவில்லை. கோயில் இடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசிதாசர். அவர் எழுதிய 'ஸ்ரீராமசந்திர மானஸ்'கூட இதுபற்றி ஒரு வரியும் கூறவில்லை.

இந்த வழக்கில் முஸ்லிம்கள் தரப்பில் சாட்சி சொன்ன 11 இந்து வரலாற்று ஆசிரியர்கள்கூட, 'கோயிலை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டவில்லை' என்று சான்றுகளுடன் சாட்சி யம் அளித்து இருக்கிறார்கள். சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தால், முஸ்லிம்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைத்திருக்கும். ஆனால், மத அடிப் படையில்தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதனால்தான் இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.''

''பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்று வந்தீர்கள். அங்கே நிலைமை எப்படி இருக்கிறது?''

''பாபர் மசூதி இடிப்பதற்கு முன்பு 1980-களில் அங்கே சென்றேன். சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் போனேன். அந்த இடத்தைக் கண்காணிப்பதற்காக நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளர்களில் ஒருவரான பைசாபாத் நகரைச் சேர்ந்த காலிக் அஹ்மதுடன் சென்றேன். செல்போன், கேமரா, பேனா, காகிதம் என்று எதையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பலமான சோதனைகளைக் கடந்து, மசூதி இடித்த இடத்தைப் பார்த்தேன்.

அரை மணிக்குப் பிறகு வெளியே வந்தபோது என் மனதில் தோன்றியது ஒரே ஒரு விஷயம்... '1992 டிசம்பர் 6-ம் தேதி அன்று இந்த அளவுக்குப் பாதுகாப்பு போட்டு இருந்தால், மசூதியைக் காப்பாற்றி இருக்கலாம்' என்பதுதான்.

'ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியைக் கட்டினார்' என்று இந்து அமைப்புகள் சொல்லி வருகின்றன. அப்படியானால், உ.பி. சித்ரக்கூட்டில் இருக்கும் பாலாஜி கோயில் ஒளரங்கசீப் அளித்த தானத்தில் கட்டப்பட்டதற்கு சான்றுகள் இருக்கின்றனவே... அந்தக் கோயிலையும் 'அடிமைச் சின்னம்' என்று சொல்லி சங்பரிவார் அமைப்புகள் இடிக்குமா? வெள்ளையர்களால் கட்டப்பட்ட நமது நாட்டின் நாடாளுமன்றத்தையும் அடிமைச் சின்னம் என்று சொல்லி இடிப்பார்களா?''

''முஸ்லிம்கள் என்ன தீர்வைத்தான் எதிர்ப்பார்க் கிறார்கள்?''

''நியாயத்தை அதுவும் சட்டத்தின் தீர்ப்பைத்தான் எதிர்நோக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட நிலம் குறித்த வழக்கை, ஒரு சொத்துரிமை வழக்காகப் மட்டுமே பார்க்கப்பட வேண்டும். மத மற்றும் இதர நம்பிக்கைகளைக் கொண்டு இதை அணுகக் கூடாது.''

- எம்.தமிழ்ச்செழியன்

வியாழன், 28 அக்டோபர், 2010

ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி

ஷார்ஜா,அக்.28:ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி (http://www.sharjahbookfair.com/) ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நேற்று துவங்கியது. இது அடுத்த மாதம் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த புத்தகக் கண்காட்சியை நேற்று காலை 10 மணி அளவில் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி திறந்து வைத்தார். இதனை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இக்கண்காட்சியில் உலகெங்கிலும் இருந்து 789 புத்தக நிறுவனங்களின் புத்தககங்களும், 53 நாடுகளில் இருந்து 200,000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் உள்ள புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

இதில் இந்தியாவிலிருந்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் தன்னாட்சியுடன் செயல்பட்டு வரும் தேசிய புத்தக நிறுவனம் (http://www.nbtindia.org.in/), கேரளாவைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இந்திய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

தேசிய புத்தக நிறுவனத்தின் துணை இயக்குநர் அனில் கண்ணா அவர்கள் இந்தக் கண்காட்சிக்கு இந்திய மக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பொழுதுபோக்கு அம்சங்கள், இலக்கியச் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இக்கண்காட்சியினையொட்டி நடைபெற்று வருகின்றன.

கேரள உள்ளாட்சித் தேர்தல்:வெற்றிப் பெற்ற எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள்

திருவனந்தபுரம்,அக்.28:கேரள மாநிலத்தில் முதன்முறையாக தேர்தலில் பங்கேற்ற சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் நான்கு நகரசபை வார்டுகளிலும், ஒரு ப்ளாக் பஞ்சாயத்திலும், ஏழு கிராமப் பஞ்சாயத்துகளிலும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

பல்வேறு கட்சிகளைக் கூட்டணியில் உட்படுத்தி தேர்தல் களத்தில் குதித்த இடதுசாரி மற்றும் காங்கிரஸ் முன்னணியினருக்கு மத்தியில் தன்னந்தனியாக போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ தனது தேர்தல் பிரவேசத்தை கம்பீரமாக்கியது.

வெற்றிப்பெற்ற இடங்களைத் தவிர 70க்கும் மேற்பட்ட வார்டுகளில் நிர்ணய சக்தி என்பதையும் எஸ்.டி.பி.ஐ நிரூபித்துள்ளது.

பத்தணம் திட்டா நகரசபையில் குலசேகரபதி வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் எஸ்.ஷைலஜா 244 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.

தொடுப்புழா நகரசபையில் கீரிக்கோடு வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஆசிரியை சுபைதா 310 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

சொர்ணூர் நகரசபையில் முனிசிபல் வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பீனா 270 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.

கண்ணூர் நகரசபையில் கஸனாக்கோட்டை தெற்கு வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸுஃபீரா 325 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.

எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் 1903 வாக்குகளின் பெரும்பான்மையோடு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பேராசிரியர் அனஸ் வெற்றிப் பெற்றுள்ளார்.

முவாற்றுப்புழா பேராசிரியரின் கை வெட்டி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர் அனஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெற்றிப்பெற்ற இதர வேட்பாளர்கள் வருமாறு:
எர்ணாகுளம் கடுங்கல்லசூர் பஞ்சாயத்து வார்டு-எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸீனத் ஜலீல் வெற்றி

ஈராட்டுப்பேட்டை பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் என்.என்.பினு நாராயணன் வெற்றி

கொல்லம் குலசேகரபுரம் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ ஆதரவுப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் எ.நாஸர் வெற்றி

கொல்லம் போருவழி பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஆமினா வெற்றி

திருச்சூர் சுவனூர் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஷாமிலா கபீர் வெற்றி

காஸர்கோடு மஞ்சேஷ்வரம் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் மைமூனா வெற்றி

மலப்புரம் வேங்கர பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் கதீஜா ஷம்ஸ் வெற்றி

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

சிறையிலிருந்து போட்டியிட்டு வெற்றிப பெற்ற எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்

கொச்சி,அக்.28:தனது சொந்த வாக்கையே பதிவுச் செய்ய அனுமதியில்லாமல் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளராக போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் 3992 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எ.எம்.குஞ்சு முஹம்மது 2089 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இடதுசாரி வேட்பாளரான யு.எஸ்.குஞ்சு முஹம்மதிற்கு 1666 வாக்குகளே கிடைத்தன.

இத்தொகுதியில் பி.டி.பி, ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான ஜனகீய விகசன முன்னணி, கேரள காங்கிரஸ் மாணி பிரிவு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள அரசியல் வரலாற்றில் சிறையிலிருந்து ஒரு வேட்பாளர் வெற்றிப் பெறுவது அபூர்வ சம்பவமாகும்.

முவாற்றுப்புழாவில் பேராசிரியர் ஜோசப் என்பவர் நபி(ஸல்...) அவர்களை அவமதிக்கும் விதமாக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வினாத்தாள் தயாரித்த சம்பவத்தில் கோபமடைந்த இளைஞர்கள் யாரோ சிலர் அவருடைய கையை வெட்டினர். இதுத் தொடர்பாக போலீசாரால் பேராசிரியர் கைதுச் செய்யப்பட்டார்.

சிறைச் சட்டப்படி தண்டனைப் பெற்ற குற்றவாளிகளுக்கு வாக்களிக்க உரிமையில்லை. ஆனால், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சிறை அதிகாரிகள் மேற்கண்ட சட்டத்தையே நடைமுறைப்படுத்தியதால் பேராசிரியர் அனஸ் வாக்களிக்க இயலவில்லை.

பேராசிரியர் அனஸ் கைவெட்டி வழக்கில் நிரபராதி என இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளே கூறியதால் மக்களின் தீர்ப்பை எதிர்நோக்கி தேர்தலில் களமிறங்கினார் பேராசிரியர் அனஸ்.

முவாற்றுப்புழா நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்து அனுமதி கிடைத்த பிறகுதான் பேராசிரியர் அனஸ் தேர்தலில் போட்டியிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி போலீஸ் அழைத்ததன் பேரில் முவாற்றுப்புழா காவல் நிலையத்தில் ஆஜரான அனஸை கைதை பதிவுச் செய்யாமலேயே இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்தனர்.

சமூக-கலாச்சார களங்களில் தீவிர பணியாற்றிய முவாற்றுப்புழா இலாஹியா கல்லூரி பேராசிரியரான அனஸ் போட்டியின் துவக்கத்திலேயே தான் நிரபராதி என்பதை மக்கள் முன் விவரித்ததால் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

போலீசார் சதித்திட்டம் தீட்டி கல்வியறிவுப் பெற்ற முஸ்லிம் இளைஞர்களை தேசிய நீரோட்டத்திலிருந்து அகற்றும் வகையில் செயல்பட்டதே தனது விவகாரத்திலும் நடந்ததாக பேராசிரியர் அனஸ் வாக்காளர்களை புரியவைத்ததன் பலனாக அனஸிற்கு உயரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக அவரை தேர்தலில் வெற்றிப்பெற வைத்துள்ளனர் மக்கள்.

சிறையிலிருந்து தனது வெற்றியை அறிந்த பேராசிரியர் அனஸ் தனது நன்றியை வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொண்டார். தான் நிரபராதி என்பதை நிரூபித்து சிறையிலிருந்து விடுதலையானால் உடனடியாக ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து நன்றி தெரிவிப்பதாகவும் அனஸ் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அனஸை கைவெட்டிய வழக்கில் குற்றவாளியாக சேர்த்தைத் தொடர்ந்து இலாஹியா கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது. ஆனால் அக்கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் 21 இடங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

சிறைக்குள் வேண்டாம் போலீஸ்! இப்படிக்கு குணங்குடி ஆர்.எம்.அனீபா! ஜீனியர் விகடனில் வெளிவந்தக் கட்டுரை

அரசியல் கைதிகளால் நிரம்பி வழிகிறது, அமைதிப் பூங்காவான தமிழகச் சிறைச்சாலைகள்!

கைதிகள், தாங்கள் செய்த குற்றங் களை உணர்ந்து, திருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தச் சிறைகள், சித்ரவதைக் கூடங்களாக விளங்குவதை... அதனுள் 13 ஆண்டுகள் இருந்து அனுபவித்த நான், எந்த தவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவன்.

வெள்ளைக்காரன் ஆண்ட 1894-லிலேயே சிறைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவன் இந்த நாட்டைவிட்டுப் போன பிறகும், அந்த ஷரத்துகள் இன்று வரை அமலில் இருக்கின்றன. தன்னுடைய அரசாங்கத்தை எதிர்க்கும் அடிமைகளைத் துன்புறுத்தக் கொண்டுவரப்பட்ட சிறைச் சட்டம், சுதந்திர இந்தியாவில் 'விடுதலை' இந்தியனைப் பழிவாங்கவும் பயன்படுத்தப்படுவதுதான் கோரமானது!

பீகார் மாநிலம் பாகல்பூர் சிறையில், கைதிகளின் கண்களையே பிடுங்கி வீசினர். 1998-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத் தில், 10-க்கும் மேற்பட்ட கைதிகள் கொலை செய்யப்பட்டார்கள். 1999-ல் பாளையங்கோட்டை சிறையில் இருந்து குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழு நபர்கள் அதிரடியாக வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, 30 நாட்கள் நிர்வாணமாக வைக்கப்பட்டார்கள். அதே ஆண்டின் இறுதியில் மதுரை, பாளை மத்திய சிறை தவிர, மற்ற ஆறு மத்திய சிறைகளில் இஸ்லாமிய சிந்தனையாளர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, தனி செல்லில் 45 நாட்கள் சூரிய வெளிச்சம்கூட படாத வகையில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

1990-களின் தொடக்கத்தில் இருந்து சிறைகளில் 'உயர் பாதுகாப்புத் தொகுதி' என்ற தனிப் பிரிவை உருவாக்கி சித்ரவதை செய்து வருகிறார்கள். இங்கே மனித வாடையும், இயற்கைக் காற்றும் மருந்துக்குக்கூட கிடைக்காது. இதில்தான் புரட்சியாளர்கள், தமிழ் தேசிய மற்றும் இஸ்லாமியப் போராளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அரசின் சட்டபூர்வ, சட்ட விரோத வன்முறைகள் இவர்கள் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக, மனித உரிமைகளை மீறுகிற வகையில் இவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அரசியல் சிறைவாசிகள் முழுமையாக உளவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படுகின்றனர். சிறை நிர்வாகம் என்பது பெயர் அளவில்தான். உளவுத் துறையே சர்வ அதிகாரம் கொண்டதாக செயல்படுகிறது.

சிறையில் 90 சதவிகிதம் பேர் ஏழை மற்றும் சாதாரண மக்கள். இவர்கள் அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். 'இவர்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்றால், சட்டபூர்வமான எந்தத் தண்டனையும் தரட்டும். ஆனால், சிறைக்கூடங்களில் சித்ர வதைகள் செய்வது என்ன நியாயம்?' என்பதுதான் எங்களது கேள்வி!

பணம் படைத்த அதிகாரத்தின் ஆராதனைக்கு உரிய ஒருவர், பல கோடி மோசடியில் மாட்டி, இதே சிறைக்குள் வந்தால், அவருக்கு ராஜ மரியாதை தரப்படுகிறது. சிறை வாசலில் நின்று அதிகாரிகள் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். நோயே இல்லை என்றாலும், சிறை மருத்துவ மனைகளில் அவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள். சொகுசான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது. உள்ளே வருபவர் சாதாரணமானவர் என்றால், எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்படுகிறார்.

'சிறைக் கட்டடத்தில் உள்ள ஒவ்வோர் தொகுதியிலும், தனித் தனி புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு, அவை மாவட்ட முதன்மை நீதிபதியின் நேரடிப் பராமரிப்பில் இருக்க வேண்டும். மாத ஆய்வுக்கு மாவட்ட நீதிபதி சிறைக்கு வரும்போது, சிறை அதிகாரிகளைத் தவிர்த்து சிறைவாசிகளிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சொல்கின்றன. ஆனால், இவை எங்கும் நடைமுறையில் இல்லை.

இந்தக் குறைபாடுகள் அனைத்தை யும் ஒரேநாளில் முற்றிலுமாகத் தீர்த்துவிட முடியாதுதான். அவற்றைப் படிப்படியாகச் சரிப் படுத்தினாலும்கூடப் போதும். ஆனால், அதற்கும் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் இது தொடர்பான ஒரு குறைந்தபட்சக் கோரிக்கை என்ன வென்றால், மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் சிறைத் துறையைக் கவனிக்கும் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதே.

'கைதிகள் தங்களின் அடிமைகள்!' என்று நினைக்கும் போலீஸார் கையில் இன்று சிறைகள் இருக் கின்றன. காவல் துறை இயக்குநர் ஆர்.நட்ராஜ் சிறைத் துறை இயக் குநராக இருந்தபோது... இந்தியாவில் முதன் முதலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்துவப் பண்டிகை நாட்களில் சிறைவாசிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி அளித்தார். ஒரே ஒரு அதிகாரி மட்டும் இப்படி இருந்தால் போதாது. போலீஸார் அனைவருக்குள் ளும் அந்த மன நிலை புகுத்தப்பட வேண்டும்.

காவல் துறையினரால்அடக்கு முறைக்கு ஆளாகி, சிறைப்பட்டு உள்ளவர்களைப் பராமரிக்கும் மனிதாபிமானம் சார்ந்த பொறுப் புக்கு, அதே காவல் துறையின் தலைவர்களை நியமனம் செய் வதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, இந்திய ஆட்சிப் பணி, சுகாதாரத் துறை அல்லது நீதித் துறையைச் சார்ந்தவர்களை சிறைத் தலைவராக நியமனம் செய்வதன் மூலம், மனித உரிமைகள் மீறலை பெருமளவுக்குக் கட்டுப் படுத்தலாம்!

படம்: அ.ரஞ்சித்

நன்றி ஜுனியர்விகடன்

68 ஆயிரம் கஷ்மீரிகளை கொன்ற நாடு ஜனநாயக நாடா? குஜராத்தில் 2500 முஸ்லிம்களை கொன்ற நாடு மதச்சார்பற்ற நாடா? அருந்ததிராய் ஆவேசம்...!

டெல்லியில் ‘காஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார்.அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய் “என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்து கொள்ளுங்கள்” எனக் கூறியவாறு தனது உரையைத் தொடங்கினார். காஷ்மீரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தை இந்திய காலனி யாதிக்கம் பிடித்துக் கொண்டது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல்ல. காஷ்மீர் ஒருபிரச்சனைக்குரிய பகுதி தான் என்பதை ஐக்கிய நாடு கள் அவையில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 68 ஆயிரம் கஷ்மீரிகளைக் கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை.


குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுகூற தகுதியில்லை. வல்லமை மிகுந்த இந்திய ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கஷ்மீரி இளைஞர்களையும், பெண் களையும், குழந்தைகளையும் பார்த்து ராயல் சல்யூட் செய்யா மலிருக்க முடியவில்லை என அருந்ததிராய் நிகழ்த்திய உரை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இக்கருத்தரங்கில் கவிஞர் வரவரராவ், மனித உரிமை ஆர்வலர் கள் ஷேக் ஷவ்கத் ஹுசைன், அமீத் பட்டாச்சார்யா, என்.வேணு, மாலெம், நஜீப் முபாரகி, சுஜாதோ பத்ரா, பேராசிரியர்கள் எஸ்.எ.ஆர் கிலானி மற்றும் ஜி.என்.ஸாயிபாபா ஆகியோர் உரையாற்றினர். இதனிடையே அருந்ததி ராய் உள்ளிட்டோரின் உரையை வைத்து பாஜக சர்ச்சையை கிளப்பியதை அடுத்து இந்த கருத்தரங்கில் உரையாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தலைநகர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


-அபுசாலிஹ்



செவ்வாய், 26 அக்டோபர், 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் இந்திரேஷ்குமார் கைதாகிறார்

புதுடெல்லி,அக்.26:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸால் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள இந்திரேஷ் குமாரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தெளிவான தகவல்கள் கிடைத்தால் கைதுச் செய்யப்படுவார் எனவும் ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு ஆலோசனை நடத்திய ஜெய்பூர் குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் இவர்கள் தங்கியிருந்ததற்கான ஆவணங்களை போலீஸ் பரிசோதித்து வருகிறது.

குண்டுவெடிப்பிற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இங்கு வைத்து இந்திரேஷ்குமார் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றுள்ளது. தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சுவாமி அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசிய கூட்டங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தவேண்டிய இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்களிலும் இந்திரேஷ்குமாரின் பங்கேற்புக் குறித்த விசாரணையில் தற்பொழுது ஏ.டி.எஸ் இறங்கியுள்ளது.

குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் செக்-இன் பதிவேட்டில் முகவரி எழுதிய நபரின் கையெழுத்து இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷியுடையதுதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மனோஜ்சிங் என்ற பெயரில்தான் சுனில் ஜோஷி அறையை புக் செய்துள்ளார். சுனில் ஜோஷியின் தேவாஸ் என்ற இடத்திலிலுள்ள வீட்டில் வைத்து கண்டெடுக்கப்பட்ட் டயரியிலிலுள்ள தகவல்களையும் ஏ.டி.எஸ் பரிசோதித்து வருகிறது. தேவாஸில் தனது வீட்டில் வைத்து சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்.

குண்டுவெடிப்பில் நேரடித் தொடர்புடைய சுனில் ஜோஷியை ரகசிய வெளியே கசியாமலிருக்க அவருடைய சக தோழர்களே கொலைச் செய்துள்ளனர் என்பதும் தெளிவாகியுள்ளது.

இந்தூரிலிருந்து சுனில் ஜோஷியும், லோகேஷ் சர்மாவும் சேர்ந்து வெடிக்குண்டு நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே மார்க்கெட்டிலிருந்துதான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைப்பதற்கான வெடிக்குண்டுகளும் வாங்கப்பட்டுள்ளன.

இந்திரேஷ் குமாருடன், தற்பொழுது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கர்னல் புரோகித், பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரையும் ஏ.டி.எஸ் விசாரணைச் செய்யும். அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசியக் கூட்டத்தில் இருவரும் பங்கெடுத்திருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

குஜராத் கலவரம்:சுப்ரீம் கோர்ட்டில் 2வது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எஸ்ஐடி



டெல்லி,அக்.26:2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது 2வது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஷான் ஜாஃப்ரி கொலை வழக்கு உள்ளிட்ட 2002ல் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இந்த குழு தனது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இக்குழு கடந்த மே மாதம் தனது முதல் கட்ட விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதன் பின்னர் நேற்று தனது 2வது அறிக்கையை சமர்ப்பித்தது. எஸ்ஐடி தலைவரான ஆர்.கே.ராகவன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் அறிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எஸ்ஐடி தரப்பில் விசாரித்தபோது, மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவை பகிரங்கமாக அறிவிக்கப்படக் கூடிய தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த 2வது அறிக்கையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக ஜாப்ரி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜடாபியா, எம்.கே.தான்டன் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது எஸ்ஐடி என்பது நினைவிருக்கலாம்.

2வது விசாரணை நிலவர அறிக்கை இன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பரிசீலனைக்கு வரவுள்ளது.

திங்கள், 25 அக்டோபர், 2010

பர்தாவுக்குத் தடை - தாக்கரேவின் அரைவேக்காட்டுத் தனமான கருத்து! தாக்கரேவையும் கடவுளாகக் கருதும் சிலருக்காக இந்த பதிவு

சாம்னா - சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடு. இந்த நாளேட்டில் சில தினங்களுக்கு முன் எழுதப்பட்ட தலையங்கத்தில் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே கடத்தல் குற்றங்களை தடுப்பதற்காக தனது மூளையை கசக்கி பிழிந்து ஒரு வழியை கண்டு பிடித்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறார்.

அது வேறொன்றுமில்லை. கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று மும்பை சாந்தாகுரூசில் உள்ள மருத்துவமனையில் 2 மாத குழந்தை ஒன்று கடத்தப் பட்டு விட்டதாம். அந்த குழந்தையைக் கடத்தியவர் பர்தா அணிந்து இருந்தாராம். மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ள ரகசிய கேமராவில் இது பதிவாகியுள்ளதாம்.

இதைக் காரணமாகக் கூறி பர்தாவை தடை செய்ய கோரிக்கை வைத்து இருக்கிறார் குற்றங்களைத் தடுக்க நினைக்கும் மாபெரும் அறிவாளியான (?) தாக்கரே.

பாகிஸ்தான், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரும்போது எதிர்ப்பு தெரிவிப்பது, ஆடுகளத்தை சேதப் படுத்துவது, ஐபிஎல் கிரிக்கெட் ஏல விவகாரத்தில் ஷாருக்கான் மற்றும் டெண்டுல்கருக்கு எதிராக விமர்சனம் செய்வது போன்றவை விளம்பரதிற்க்காக தாக்கரே செய்யும் கோமாளித் தனத்துக்கு உதாரணங்கள். அது போன்ற கோமாளித் தனமே இது என்ற போதிலும் தாக்கரேவையும் கடவுளாகக் கருதும் சிலருக்காக இந்த பதிவு.

குற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற சமுதாய அக்கறை உள்ளவர் எந்தெந்த வழிகளில் குற்றத்தைத் தடுக்கலாம் என சிந்தித்து அறிவுரை கூற வேண்டுமே தவிர மத துவேசத்தில் சிந்திக்க மறந்து, மற்றவர்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு கருத்துக்களைக் கூறக் கூடாது. தாக்கரேவை கடவுளாகக் கருதும் நடிகர் நடித்து சமீபத்தில் வெளி வந்த திரைப்படத்திற்கு அதை தயாரித்தவரின் தொலைக் காட்சியில் வெளி வந்த ஒரு விளம்பரத்தில் நடிகர் தோன்றி, படப் பிடிப்பின் போது படத்தின் கதாநாயகியான உலக நாயகி (?) நடிகரின் முன்னால் வந்தவுடன் நடிகருக்கு தான் பயிற்சி செய்த அத்தனையும் மறந்து விட்டதாம். 60 வயது நடிகரையும் மறக்கடிக்கும் அளவுக்கு அந்த உலக நாயகியின் உடைகள்.

காற்றாட மேலே ஒரு ஆடையும், தொடையை காட்டிக் கொண்டு கீழே ஒரு ஆடையும் அணிந்து வரும் பெண்களாலேயே அளவுக்கதிகமான பாலியல் குற்றங்களும், வன்புணர்வுகளும் நடந்தேறுகின்றன. தாக்கரே சற்று சிந்தித்து கருத்து கூறி இருந்தால் உலக நாயகியையும், டூ பீஸ் ஆடைகளை அணியும் பெண்களையும் பர்தா அணியச் சொல்ல வேண்டாம் குறைந்த பட்சம் அந்த ஆடைகளை தடை செய்ய கோரிக்கை விடுக்கலாமே.


இது வரை இந்தியாவில் நடைபெற்ற ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எத்தனை சதவீதம் பேர் பர்தா அணிந்து கொண்டு செய்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை தருவாரா இந்த தாக்கரே? சரி. தாக்கரேவின் ஆலோசனைகளை ஏற்று பர்தாவை தடை செய்தால் இனி இந்தியாவில் ஆள்கடத்தல் போன்ற குற்ற சமபவங்கள் ஒரு சதவீதம் கூட நடக்காது என தாக்கரே உத்தரவாதம் தரத் தயாரா?

காஞ்சி சங்கராசார்யா, நித்யானந்தா போன்ற (ஆ)சாமிகள் பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றி காவி உடை தரித்து காமக் களியாட்டங்களில் ஈடுபட்டது உலகறிந்த விஷயம். இந்த செயலுக்காக காவி உடையத் தடை செய்யக் கோருவாரா பால் தாக்கரே? அர்ச்சகர் தேவநாதன் கோயில் கருவறையில் நடத்திய காமலீலைகள் சிடி போட்டு விற்கும் அளவுக்கு புகழ் பெற்ற நிலையில் அர்ச்சகர்கள் பதவியையே தடை செய்யக் கோருவாரா பால் தாக்கரே?

மும்பை மராத்தியர்களுக்கே என கோஷம் போடும் தாக்கரே பீகாரில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்தோ யாராவது ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள சென்றால் அவர்களை தாக்கேரேவின் சேனைகள் கொலை செய்யும் அளவுக்கு தாக்குதல் நடத்துவர். ஆனால் அயோத்தி போன்ற சில விவகாரங்களில் மட்டும் இவரது பாசம் மாநிலம் கடந்து எட்டிப் பாருக்கும். தாக்கரேவை கடவுள் எனக் கூறியவர் கூட என் தந்தை ஒரு மராத்தியர் என்ற அடையாளத்துடனே தாக்கரேவை சந்தித்தது குறிப்பிடத் தக்கது.

மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை அடிப்பதால் பிஸ்கட்டையும், ரயில், பஸ்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என எல்லா இடத்திலும் குற்றங்கள் நடப்பதால் இவை அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று அரைவேக்காட்டுத் தனமாக கருத்து கூறாமல் குற்றங்களைத் தடுக்க சிறப்பான ஆலோசனைகளையும், குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கக் கோரியும் தாக்கரே போன்றோர் கருத்து கூறினால் வரவேற்போம்.
- அப்துர் ரஹ்மான், ஓமான்

அஜ்மீர் குண்டுவெடிப்பு: குற்றப்பத்திரிகையில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயர்

ஜெய்பூர்,அக்.24:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமாரும் ஆறு முக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான ரகசியக் கூட்டத்தில் பங்கெடுத்ததாக, அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐந்து ஆர்.எஸ்.எஸ், அபினவ் பாரத் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை குறிப்பிட்டுள்ளது.

இந்திரேஷ் குமாருக்கு குண்டுவெடிப்பில் தொடர்புக் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் இவ்வழக்கில் அவரைகுற்றவாளியாக்கவில்லை எனவும் 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் ஏ.டி.எஸ் கூறுகிறது.

2005 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தி விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசியக் கூட்டத்தில்தான் இந்திரேஷ் குமாரும், இதர ஆறு முக்கிய் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளும் பங்கேற்றுள்ளனர்.

வெளியானது உண்மை மட்டுமே எனவும், இதனை அங்கீகரிக்க ஆர்.எஸ்.எஸ் தயாராக வேண்டுமெனவும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சிறிது காலம் கழிந்தால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களும் அவர்களின் பங்கும் பின்னணியும் வெளிவரும். சத்தியம் வெளிவரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அசோக்கெலாட் தெரிவித்தார்.

அதேவேளையில், தனது பெயர் அரசியல் தூண்டுதலின் காரணமாகவே குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திரேஷ்குமார் தெரிவிக்கிறார்.

தேசத்துரோகிகளை(?) பாதுகாக்கும் அரசு, தேச விசுவாசிகளூக்கெதிராக(?) போர் புரிகிறது. அநீதிக்கெதிராக நீதிமன்றத்தை அணுகுவோம் இவ்வாறு இந்திரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்திரேஷ்குமாரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. இத்தகையச் செய்திகளை சட்டரீதியாக எதிர்க் கொள்வோம் என ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவிக்கிறார்.முழுதாக மையப்படுத்து

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

குஜராத் இனக் கலவரத்தை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார் -முன்னாள் உள்துறை அமைச்சர் வாக்குமூலம்

அகமதாபாத்,அக்.24:2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

அவரை நிர்வாணமாக்கி தீவைத்துக் கொளுத்துவதை நான் கண்டேன்' - ஸாகியா ஜாஃப்ரியின் கண்ணீர் சாட்சியம்

புதுடெல்லி,அக்.24:தனது கணவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுபோய் நிர்வாணமாக்கிய பிறகு அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்வதை தான் நேரடியாக கண்டதாக, குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா கண்ணீர் சாட்சி அளித்துள்ளார்.

குல்பர்கா சொசைட்டி கூட்டு இனப் படுகொலையில் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கும் பொழுதுதான் கண்ணீர் மல்க இதனைத் தெரிவித்தார் ஸாகியா. 2002 பிப்ரவரி 22 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது.

ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்திருந்தது.

"கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து பந்த் அறிவிக்கப்பட்டதால் வன்முறைக்களமாக மாறியது சூழல். அதிகாலை முதல் அக்கம்பக்கத்து முஸ்லிம்கள் எங்கள் வீட்டை நோக்கி வரத் துவங்கினர்.

அவர்களை ஹிந்துத்துவாவாதிகளின் தாக்குதலிருந்து பாதுகாக்க போலீஸை அழைக்க அவர்கள் ஜாஃப்ரியிடம் கோரினர்.

காலை 7.30 க்கு அவர்களை வீட்டிற்குள் அழைத்த ஜாஃப்ரி, ஒன்றாக இருக்கக் கூறியதுடன் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் எனக் கூறினார்.

இந்த நேரத்திலிருந்தே ஜாஃப்ரி தொலைபேசியில் பலரையும் அழைக்க ஆரம்பித்தார். 11.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் பி.ஸி.பாண்டே வீட்டிற்கு வந்து ஜாஃப்ரியை வெளியே அழைத்தார். இதர முஸ்லிம்களை காப்பாற்றுவதற்கு பதிலாக தனது காரில் ஜாஃப்ரியையும், குடும்பத்தினரையும் மட்டும் அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதியளித்தார் பாண்டே.

ஆனால், மிரண்டுபோன இதர முஸ்லிம்களை விட்டுச்செல்ல ஜாஃப்ரி மறுத்துவிட்டார். பாண்டே திரும்பிச் சென்றபிறகு, வன்முறையாளர்கள் சிறிய கேட்டின் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் வீட்டை நெருங்கிய பொழுது வீட்டின் மாடிக்கு செல்லுமாறு என்னிடம் கூறினார் ஜாஃப்ரி.

கோஷங்களை எழுப்பியவாறு வந்த ஆயுதங்கள் ஏந்திய கும்பல் ஜாஃப்ரியிடம் வெளியே வருமாறு கூறினர். தான் வெளியே வருவதாகவும், ஆனால் தனது வீட்டில் புகலிடம் தேடி வந்தவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் எனவும் ஜாஃப்ரி வன்முறையாளர்களிடம் கூறினார்.

வெளியேவந்த ஜாஃப்ரியை அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஆடைகளை கீறி எறிந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கி அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி எறிந்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்தனர்." -இதனை சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி பி.யு.ஜோஷியின் முன்னால் ஸாகியா தெரிவித்தார்.

"ஆனால் போலீஸ் வந்தது மாலை 5.30 மணிக்காகும். வீட்டின் உள்ளே ஒழிந்திருந்த எங்களை வெளியேவருமாறு கூறினர். 18-19 உடல்கள் வீட்டின் வராந்தாவிலும் இதர இடங்களிலும் கிடந்தன. அதில் ஒன்று, தங்களுடைய அயல் வீட்டாரான கஸம்பாயின் கர்ப்பிணியான மருமகளாவார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு அதிலிருந்து சிசு வெளியே வந்திருந்தது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அக்கிரமக்காரர்கள்தான் இந்தக் கொலைகளை நடத்தினர்." இவ்வாறு ஸாக்கியா கூறினார்.

அதேவேளையில், குறுக்கு விசாரணையின்போது ஸாகியாவுக்கு மனித உரிமை ஆர்வலரான டீஸ்டா செடல்வாட், முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார், வழக்கறிஞர் ஷொஹைல் திர்மிஜி, ரைஸ்கான் பத்தான் ஆகியோருடன் தொடர்பிருப்பதாக கூற முயன்றார் எதிர்தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன். ஆனால், ஸாகியா அதனை மறுத்தார்.

டீஸ்டா செடல்வாட்டிடமிருந்து ஒரு உதவியையும் தான் பெறவில்லை எனவும், பல காலமாக அவரை தான் காணக்கூட செய்யவில்லை எனவும் ஸாகியா தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் ஸாகியா கண்ட ஏதேனும் உடல் சேதமாக்கப்பட்ட இறந்துப்போன ஒருவரின் பெயரைக் கூற இயலுமா என எதிர் தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன் கேள்வி கேட்டபொழுது, தனது கணவரை கொலைச் செய்த பாதகர்களிடம்தான் இதனைக் கேட்கவேண்டும் என ஸாகியா பதிலளித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? மனித உரிமை ஆர்வலர் தேவநேயன் (Video)

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? மனித உரிமை ஆர்வலர் தேவநேயன் (Video)


பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? யாதவர் மகா சபையின் தலைவர் தேவநாதன் கருத்து (Video)

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? யாதவர் மகா சபையின் தலைவர் தேவநாதன் கருத்து (Video)


சனி, 23 அக்டோபர், 2010

அமெரிக்க - ஈராக் படையினரின் சித்திரவதைகள் - ஆயிரக்கணக்கில் வீடியோ வெளியானது!

AddThis Social Bookmark Button

ஈராக் சிறைக்கைதிகளை ஈராக் மற்றும் அமெரிக்க படைகள் துன்புறுத்தும் 391,831 புதிய ஆதாரங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ளது.

DAT 36 என்ற படை நடவடிக்கை மூலம், 2006 ஜூலை 7ம் திகதி வடபக்தாத்தின் டார்மியா எனும் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டகைதிகள், அன்றைய இரவு பொழுதில் மணிக்கணக்கில் மிக மோசமாக துன்புறுத்தபப்ட்ட சம்பவங்கள், இவ் ஆதாரங்களில் பெரும் பங்கு வகிக்கின்றன.

கண்களை கட்டிவைத்து அடித்தல், முக உறுப்புக்களையும், ஏனைய உடல் அங்கங்களையும் மிகக்கொடூரமாக சிதைத்தல், மின்சாரம் பாய்ச்சல், வெந்நீர் பாய்ச்சல் என கட்டுக்கடங்காத சித்திரவதைக்காட்சிகள் 'the Secret Iraq Files' எனும் இவ்வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.

எனினும் இப்பதிவுகளில், அமெரிக்க இராணுவத்தினர் இருப்பதை, பெண்டகன் இராணுவ தலைமையகம் முற்றுமுழுதாக மறுத்துள்ளது.
இச்சித்திரவதைகளுக்கும் தமக்கும் தொடர்புமில்லை என அறிக்கைவெளியிட்டுள்ளது.

2004 ஜனவரி 1 ம் திகதி தொடக்கம், 2010 ஜனவரி 1ம் திகதி வரை ஈராக்கில் சந்தேகத்தின் பெயரில் தடுத்துவைக்கப்பட்ட அனைத்து சிறைக்கைதிகள் அனுபவித்த சித்திரவதைகளும் குறித்த தொகுப்பில் இடம்பிடித்துள்ளன.

இவற்றில் அதிகமானவற்றில், ஈராக்கின் கடைநிலை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன. 15,000 படுகொலை சம்பவங்களும் இதில் அடங்குகின்றன.

இத்தொகுப்பில் ஆயிரக்கணக்கான குற்றச்செயல்கள் வீடியோ காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. (இதயம் பலவீனமானோர் பார்க்க வேண்டாம்)



ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி

அமீரகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய வசதி அறிமுகம். இனி மாணவர்கள் தங்கள் செல்போனிலேயே பாடங்களை படித்துக்கொள்ளலாம், M-Education என்ற இந்த சேவை விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.

அமீரகத்தின் அரசு செல்போன் நிறுவனமான எதிசலாத், கல்வி கற்கும் முறையில் நவீன நுட்பங்கள் மூலம் புதுமைகளைப் புகுத்திவரும் பிளாக் போர்டு (Blackboard Inc) என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த M-Education சேவையை வழங்கப்போகிறது, அபுதாபி பல்கலைகழகத்தில் வரும் ஜனவரி 2011ஆம் ஆண்டில் இருந்து இது சோதனை முறையில் நடைமுறைக்கு வருகின்றது.

இந்த Blackboard Mobile Learn solution மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடங்களையும், பாடம் சம்பந்தப்பட்ட பிற தகவல்களையும் நினைத்த நேரத்தில் தங்களின் செல்போன் மூலம் பெறலாம்.

அமீரகத்தில் 99 சதவிகிதத்தை அடைந்துள்ள எதிசலாத் நிறுவனத்தின் 3.5G மொபைல் அலைவரிசை மூலம் இந்த சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் Android phone, BlackBerry, iPhone மற்றும் iPad. போன்ற அனைத்து மொபைல் சாதனைகள் மூலமும் எளிதில் பயன்படுத்தத்தக்கது.

இதற்கான் ஒப்பந்தம் எதிசலாத், பிளாக் போர்ட் மற்றும் அபுதாபி பல்கலைக் கழக அதிகாரிகளிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.

இது குறித்து எதிசலாத் உயரதிகாரி அப்துல்லா ஹஷிம் தெரிவிக்கையில் இந்த திட்டம் எதிசலாதிற்கு மட்டுமல்ல அமீரக கல்வி சமுதாயத்திற்கே ஒரு மிகமுக்கிய நிகழ்வு. இதன் மூலம் அமீரகத்தின் கல்வி முறை அதன் அடுத்த கட்டத்திற்கு புதிய பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!

அயோத்தியில் ராமர் கோயில் ராம் ஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்பால் கட்டப்படும் என்ற சாந்த் உச்சதிகார் சமிதியின் அறிவிப்புக்கு நிர்மோகி அகாரா தலைவர் மஹந்த் பாஸ்கர் தாஸ் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் மத அமைப்புமான விசுவ இந்து பரிஷத்தும் இந்தப் பிரச்சனையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தாஸ் எச்சரித்துள்ளார். சாந்த் உச்சதிகார் சமிதி என்ற விசுவ இந்து பரிஷத்தின் சாமியார்கள் பிரிவுதான் ராமர் கோயில் இயக்கதத்தை நடத்தி வருகிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நிர்மோகி அகாரா அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று கூறிய தாஸ், பிரச்சனைக்குரிய இடத்தின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் நிர்மோகி அகாராவுக்கே உரிமை உண்டு என்று கோருவோம் என்றும் அவர் கூறினார். செப்டம்பர் 30ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தற்போதைய கோயில் ராம் லாலா விராஜ்மான் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த அமைப்புக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் ஆர்எஸ்எஸ்சைச் சார்ந்தவர் என்றும் தாஸ் கூறினார்.

பிரச்சனைக்குரிய இந்த இடத்தை உயர் நீதிமன்றம் எந்த தனி நபருக்கோ அல்லது ஆர்எஸ்எஸ்ஸிற்கோ வழங்கவில்லை என்பதை சங்பரிவாரத்திற்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் தாஸ் கூறினார். மத்திய டுமிற்குக் கீழே உள்ள பகுதிகள் ஹிந்துக்களுக்கு என்றுதான் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரச்சனைக்குரிய நிலத்தின் உரிமை தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக எண்ணிக் கொள்ளும் இந்துக்களில் மிகச்சிலரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் ஆகியவை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் ஒரு முறை நன்றாக ஆய்ந்து கொள்ளட்டும் என்றும் தாஸ் கூறினார்.

ராம் சபுதரா மற்றும் சீதா ரஸோய் ஆகியவை நிர்மோகி அகாராவுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பாகம் ராம் லாலாவுக்கும் பொதுவாக இந்துக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே எங்களிடம் மூன்றில் ஒரு பாகம் உள்ளது. ராம் லாலா விராஜ்மானுக்கு நெருக்கமான இந்துக்கள் நாங்கள்தான் என்பதால், ராமர் கோயிலைக் கட்டும் உரிமை எங்களுக்கே உள்ளது என்றும் தாஸ் கூறியுள்ளார்.

சாந்த் உச்சதிகார் சமிதி மற்றும் ராம் ஜன்மபூமி நியாஸ் கோவா மற்றும் புது டில்லியில் விசுவ இந்து பரிஷத்தால் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. அவை இரண்டும் ஆர்எஸ்எஸ்ஸின் நிழல் அமைப்புகள் என்று குற்றம் சாட்டிய தாஸ், இத்தகைய குழுக்களை நாங்கள் அங்கீகரிப்பதில்லை. அயோத்தியில் உள்ள மக்களுக்கோ, பொதுவாக இந்துக்களுக்கோ அவர்களால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்றும் தாஸ் கூறினார்.

தன்னுடைய நிலையை அகில இந்திய அகாரா பரிஷத்தின் தலைவர் மஹந்த் கியான் தாஸும் ஆதரிப்பதாக பாஸ்கர தாஸ் கூறினார். இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறாக விங்கிக் கொண்டு ராமர் கோயிலை கடத்திச் செல்ல முயல்கின்றனர். அத்தகையோர் தொடக்கம் முதலே இதற்காக முயன்று கொண்டுள்ளனர். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு புதிய வியாக்கியானங்களை அவர்கள் அளிக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்றும் பாஸ்கர தாஸ் கூறினார்.

வியாழன், 21 அக்டோபர், 2010

கர்காரே படுகொலை:பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை,அக்.21:மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரேயின் கொலையின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் செயல்பட்டுள்ளன என்பதனை சுட்டிக்காட்டி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் பதில் அளிக்க மும்பை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பீகார் மாநில எம்.எல்.ஏக்களான ராதாகாந்த் யாதவும், ஜோதி பெடேக்கரும் சமர்ப்பித்த மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மும்பை தாக்குதலின்போது காமா மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கு காரணம், அஜ்மல் கஸாபோ அல்லது அபூ இஸ்மாயிலோ காரணமல்ல எனவும், அத்தாக்குதலின் பின்னணியில் அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் செயல்பட்டுள்ளது எனவும் ராதாகாந்த் யாதவ் தான் அளித்த மனுவில் கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் அதற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளான அபினவ் பாரத் பயங்கரவாதிகளை கர்காரே கைதுச் செய்திருந்தார்.இதற்கு பழிவாங்க அபினவ் பாரத் கர்காரேக்கு குறிவைத்தது.

முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலான எஸ்.எம்.முஷ்ரிஃப் தனது கர்காரேயைக் கொன்றது யார்? என்ற நூலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக யாதவ் குற்றஞ்சாட்டுகிறார். இதனைக் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவேண்டும் என ராதாகாந்த் யாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஷ்ரிஃப் எழுதிய புத்தகங்களில் உண்மைகளல்ல, அபிப்ராயங்கள்தான் உள்ளன என அரசு தரப்பில் வாதாடிய துணை சோலிசிட்டர் ஜெனரல் டாரியஸ் கம்பாட்டா வாதிட்ட பிறகும் நீதிமன்றம் அதனை அங்கீகரிக்கவில்லை.

கர்காரேயின் மரணத்தைக் குறித்து வேறு சிலரும் சந்தேகத்தை முன்வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பொறுப்பான போலீஸ் அதிகாரி இதற்கு பதிலளிக்கவேண்டுமென உத்தரவிட்டது.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நவம்பர் 29 ஆம் தேதி இதற்கு பதில் அளிக்கப்படும் என அரசுதரப்பு வழக்கறிஞர் பி.எ.பால் அறிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

எதிரியின் நோக்கம் ஈரானும், இஸ்லாமுமாகும் - காம்னஈ

டெஹ்ரான்,அக்.21:ஈரானுடன் இஸ்லாமும் எதிரியின் லட்சியம் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் காம்னஈ தெரிவித்துள்ளார். கும் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களிடம் உரை நிகழ்த்துகையில் காம்னஈ இதனை தெரிவித்தார்.

ஈரானின் புரட்சியை சீர்குலைக்க நாடுபவர்கள் குறிவைப்பது இரண்டாகும். ஒன்று ஈரான் மக்களின் மதமும் இரண்டாவதாக புரட்சியுடனான ஈரான் மக்களின் சமர்ப்பணமுமாகும்.

மத அடிப்படையில் அல்லாத புரட்சியால் எதிரிகளின் சதித் திட்டங்களை எதிர்த்து நிற்கமுடியாது என்பதை அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மதத்தின் அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் நிர்பந்தங்களுக்கு அதிகாரத்தின் அகங்காரத்திற்கு அடிபணியாது என அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.

ஈரான் மக்கள் புரட்சியை எப்பொழுதும் ஆதரித்தே வந்துள்ளனர். எல்லாத் துறையிலும் ஈரான் மக்களின் பரிபூரண ஆதரவும், அரசும் மக்களுக்குமிடையே ஐக்கியமும் தொடர்ந்து நீடிக்காவிட்டால் எதிரிகளின் சதித்திட்டங்களை எதிர்த்து முறியடிக்க முடியாது என்றும் காம்னஈ ஈரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

பர்தாவை தடை செய்ய வேண்டும்!- சிவசேனா கோரிக்கை

மும்பை,அக்,20:முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா எனப்படும் பர்தாவைத் தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 15-ம் தேதியன்று புறநகர் சாந்தாகுரூஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து பர்தா அணிந்த பெண்ணால் இரண்டரை மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தையை திருடுவதற்கு பர்தா பயன்படுத்தப்படுகிறது எனில் சட்டப்படி அதைத் தடை செய்ய வேண்டும் என சிவசேனை பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்தாவையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் பிரெஞ்சு அரசு தடை செய்துள்ளதை சாம்னா பத்திரிகை பாராட்டியுள்ளது. பர்தாவை தடைசெய்ய புரட்சிகர நடவடிக்கையை பிரெஞ்சு அதிபர் எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கியிலும் கமால் பாஷா, பர்தாவுக்கு தடை விதித்தார். இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை என்று சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா? மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள் முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.

கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பீஹாரில் வங்கிகள் மறுத்ததால் 50,000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான், முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் பலவற்றை “அபாயகரமான பகுதிகள்” (Red Zones) என்று அரசு வங்கிகளே ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.

நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர். “ஏழ்மையான பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை” என்று தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன வங்கிகள். கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின் உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன அபாயம்? ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை! வங்கிச் சேவையை மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை!

தேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28 அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை உருவாக்கித் தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம் புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.

சரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப் போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச் சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47%மும், கர்நாடகாவில் 46.2%மும், மேற்கு வங்கத்தில் 17.44%மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.

முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன. மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.

அயோத்தி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி Part-2 (Video )


பங்கேற்பு: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய குழு உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தமிழக பிரச்சாரக் குழு பொறுப்பாளர் சடகோபன். நெறியாழுகை: திரு. வீரபாண்டியன்.




புதன், 20 அக்டோபர், 2010

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவோம்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மிகுந்த உற்சாகத்தோடு தமுமுக மற்றும் மமகவின் நிர்வாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

முறையாக அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் மூலம் நடைபெற்று வரும் தேர்தல்; தமிழகத்தில் இருக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும், இந்தியா முழுதும் இருக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் ஒரு முன் மாதிரி என்றால் அது மிகையல்ல.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல்கள் மூலம் கிளை அமைப்புகள் புனரமைக்கப்பட்டு, மழையில் நனைந்த தாவரங்களைப் போன்ற புத்துணர்வுடன் தொண்டர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

ஆங்காங்கே நடைபெறும் தேர்தல்களில் சில இடங்களில் கடும் போட்டி ஏற்பட்டு, வாக்குச்சீட்டுகளின் வழியாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். சில இடங்களில் ஒருமித்த முடிவின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல்களின்போது ஊரெங்கும் கழகச் கொடிகளும், கட்சிக்கொடிகளும் கட்டப்பட்டு பெரும் பரபரப்புகளுக்கிடையே தேர்தல் நடைபெற்று வருவதாக தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சில இடங்களில் இரவு நேரங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் போடப்பட்டு விழாப் போலவும் தேர்தல்கள் நடைபெறுவதாகவும், தேர்தலை வேடிக்கைப் பார்ப்பதற்கே பெரும் கூட்டம் கூடுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

தமுமுக மற்றும் மமகவின் தேர்தலின் முடிவில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பதை தெரிந்துக் கொள்ள அப்பகுதி ஜமாத்தார்களும், பொதுமக்களும் காட்டக்கூடிய பேரார்வம் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

மாபெரும் இயக்கத்தின் மீது முஸ்லிம் மக்களும், இதர பொதுமக்களும் காட்டும் ஈடுபாட்டையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் தான் இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

எனவே வெற்றி பெற்றவர்கள் தங்கள் பொறுப்பையும், கடமையும், உணர்ந்து இறைவனுக்கு பதில் கூறவேண்டும் என்ற நினைவோடு செயல்படவேண்டும். தோல்வியடைந்தவர்களை நமது சகோதரர்கள் என்ற உணர்வோடு அரவணைத்து, மீண்டும் அவர்களுக்கான வாய்ப்பு உண்டு என்பதை நினைவூட்டி பணியாற்றுவது மிகவும் அவசியமாகும். மகிழ்ச்சியில் மூழ்கிவிடமால், தங்களை ஒற்றுமையுடன் தயார்படுத்த வேண்டிய நேரமிது.

இன்னும் 6 மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது. வலுவான அதிமுக கூட்டணியில் நாம் இடம் பிடித்திருக்கிறோம்.

நமக்கான நியாயமான அரசியல் ஒதுக்கீடுகள் கிடைக்கவிருக்கும் நிலையில், வலுவான தொகுதிகளை கண்டறிந்து, அங்கெல்லாம் நமது செயல் திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் விரிவுப்படுத்த வேண்டியுள்ளது.

தீவிர உறுப்பினர் சேர்ப்பு, சுவர் விளம்பரங்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி அமைத்தல், எல்லா சமூக மக்களுடனும் நெருக்கத்தை மேலும் ஏற்படுத்துதல், வட்டார ரீதியில் செயல்படும் சமுதாய அமைப்புகளுடன் உறவை வலுப்படுத்துதல் என நிறையப் பணிகள் காத்திருக்கின்றன. நிதி சேகரிப்பு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே அலட்சியமின்றி, கவனமுடன், நிதானத்துடன், பணிகளை தொடங்க வேண்டும்.

பெரும்பாலான மாவட்டங்களில் தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு சில மாவட்டங்களிலும் இம்மாதத்தில் தேர்தல்கள் முடிவடைய உள்ள நிலையில், புதிய ரத்தம் பாய்ச்சப்பட்ட உற்சாகத்தில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் உடனே களம் இறங்க வேண்டும். அது தான் நமது அடுத்த 6 மாத செயல்திட்டமாகும்.

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்!

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்! தமிழகத்திலிருந்து தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்றார்!



பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு அனைத்திந்திய முஸ் லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.



உ.பி. மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற நத்வத்துல் உலூம் அரபி பல்கலைக் கழகத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று நடைபெற்றது. அனைத்திந் திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப் புகளின் பிரதிநிதித்துவ அமைப் பாகும். முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவரும் நத்வா பல்கலைக்கழகத்தின் தலை வருமான மவ்லவி ராபி ஹசன் நத்வி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் 51 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். தமிழகத்தில் இருந்து இக்கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவ்லவி நிஜாமுத்தின், துணைப் பொதுச் செயலாளர் அப்துர் ரஹீம் குறைஷி, வாரியத்தின் துணைத் தலைவரும் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவருமான மவ்லவி ஜலாலுத்தீன் அன்சார் உமரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சைய்யது சஹாபுதீன், ஜம்மியத்துல் உலமா ஹிந்தின் தலைவர்கள் மஹ்மூத் மதனி எம்.பி. மற்றும் அர்ஷத் மதனி பிரபல மூத்த வழக்குரைஞர் யூசுப் முசாலா, தனியார் சட்ட வாரியத்தின் பாபரி பள்ளிவாசல் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கி.யூ.ஆர். இல்யாஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான், கர்நாடக இமாஅரத்தே ஷரீஅத் அமைப்பின் தலைவர் முப்தி அஷ்ரப் அலி, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேரா.சுலைமான், மில்லி கவுன்சில் பொதுச் செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2.30 வரை நீடித்தது. தொடக்கமாக பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து வழக்குரைஞர் ஜஃபர்யாப் ஜீலானி விவரித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் இக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துரையின் சுருக்கம் பின்வருமாறு:



“பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு 1993ல் ஜெய்பூரில் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இங்கே குழுமியுள்ள உறுப்பினர் களுக்கு மீண்டும் நினைவூட் டுகிறேன். அந்தக் கூட்டத்தில் ஒரு இடம் பள்ளிவாசலாக இருந்தால் அது என்றைக்குமே பள்ளிவாசலாகத் தான் இருக்க முடியும் என்று ஷரீஅத்தின் விதிமுறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அடிப்படையில் தான் நாம் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும். பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு வெளிவந்த பிறகு நமது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சில வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுகின்றன. இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அல்லாஹ்வின் ஆலயத்தை அன்பளிப்பாக அளிப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் ஆபத்தானது. உச்சநீதிமன்றத்தை நாடி இந்தத் தீர்ப்பை புதைக் குழிக்கு அனுப்புவதுதான் நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். இதற்காக சையது ஷஹாபுத்தீன் அவர்கள் குறிப்பிட்டது போல் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தலைசிறந்த வழக்குரைஞர்களின் பட்டாளம் இதற்காக அமைக்கப்பட வேண் டும். இந்தத் தீர்ப்பு நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என்பதையும் நாம் அனைத்து மக்களுக்கும் விளக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது மிகவும் ஆபத் தானது. தீண்டாமை ரீதியான கொடுங்கோன்மைகளைக் கூட இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக காட்டி நியாயப்படுத்தும் நிலை ஏற்படும். இவ்வாறு தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பேசினார்.

சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) பல்வேறு குழப்பங்களும், தவறுகளும் நிறைந்த அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது மிக அவசியமாகும். இந்த மேல்முறையீட்டின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளங்களை சிதைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப் பை திருத்தி எழுத முயற்சிகள் மேற்கொள்வது,

2) மேல்முறையீடு தொடர்பான நீதிமன்ற செலவுகளுக்காக பாபரி பள்ளிவாசல் சட்டநிதி உருவாக்குவது,

3) பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அபத்தங்களை விளக்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழுக் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. பாபரி பள்ளிவாசல் பிரச்சனையில் பேச்சு வார்த்தைக்கு வழி இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வாரியத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரைஷி, ‘நீதிமன்றத் திற்கு வெளியில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. எதிர்தரப்பு ஏதாவது திட்டத்தை முன்வைத்தால் அது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், ஷரீஅத் நெறிமுறைகள் மற்றும் முஸ்லிம்களின் கண்ணியம் ஆகியவற்றின் வெளிச்சத்தில் பரிசீலிக்கப்படும்‘ என்று பதிலளித்தார்.

ஹாசிம் அன்சாரி நடத்தி வரும் சமாதான பேச்சு வார்த்தைகள் குறித்து கருத்து கேட்டபோது, “அது தனி நபர் எடுக்கும் முயற்சி என்றும் ஆனால் தனியார் சட்டவாரியம் எடுக்கும் முடிவிற்கு தான் கட்டுபட்டு நடப்பதாக அன்சாரி தன்னிடம் தெரிவித்தார்” என டாக்டர் இல்யாஸ் தெரிவித்தார்.

மிகுந்த பாதுகாப்பு வளையத் திற்குள் இந்தக் கூட்டம் நடைபெற்றது. வாரிய உறுப்பினர் கள் மத்தியில் கருத்து மோதல் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அக்கருத் துகளையெல்லாம் பொய்ப்பிப்பது போல் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாப்ரி மஸ்ஜித் நில விவகாரம்:ஜெயேந்திர,விஜேந்திரருடன் இணைந்து வக்பு வாரியத்துடன் பேச்சு நடத்த இந்து மகாசபை முடிவு

சென்னை,அக்.20:அயோத்தி நிலவிவகாரம் குறித்து வக்பு வாரியத் தலைவர்களுடன் வரும் 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இந்து மகா சபை தேசிய தலைவர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

ராம ஜென்மபூமி இந்துக்களுக்கு உரியது. 1949-ம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக முதன் முதலாக வழக்கு தொடர்ந்ததும் இந்து மகாசபை தான்.

அயோத்தி இடத்தை மூன்றாகப் பிரித்திருப்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இடத்தை முழுமையாக இந்து மகா சபையிடம் ஒப்படைத்திருந்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பு எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம்.

ராமஜென்மபூமி முழுவதுமாக எங்களுக்கு கிடைத்தவுடனே ராமர் கோவில் கட்டும் பணியை துவங்குவோம். அங்கு ராமர் கோவில் கட்டுவது உறுதி.

இந்த விவகாரம் குறித்து வரும் 28-ம் தேதி வக்பு வாரியத் தலைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இதற்காக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் நானும் டெல்லி செல்கிறேன். அங்குள்ள மீனாட்சி கோவிலில் வைத்து தான் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம்.

இதில் ஏற்படும் உடன்பாட்டை பொருத்தே எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும், என்றார்.

குஜராத் இனக் கலவரம்:குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் ஆன்லைனில்

மும்பை,அக்.20:2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏராளமான முஸ்லிம்களைக் கொலை செய்து இன சுத்திகரிப்பு நடத்திய சங்கபரிவாரங்களுக்கு எதிரான வழக்குகளில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து முக்கிய பங்காற்றி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் "நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (The Citizens for Justice and Peace)" தான் இதுவரை இந்த இந்து தீவிரவாதிகளுக்கு எதிராக திரட்டிய மொத்த ஆதாரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்திய தேசத்திற்கு உலக நாடுகளின் முன்னிலையில் மாபெரும் அவமானத்தையும், தலைக் குணிவையும் ஏற்படுத்திய இந்த இன சுத்திகரிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, இதனை நடத்திய இந்து தீவிரவாத கும்பல்களுக்கு உரிய தண்டனை கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று களமிறங்கிய இந்த The Citizens for Justice and Peace அமைப்பு, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதில், குற்றம் செய்த தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பணிகளை செய்து வந்த அரசுக்கெதிராக போராடி வந்தது.

தான் சேகரித்த ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்தில் சமர்பித்தும் வந்தது. ஆனால் நமது நீதிமன்றங்கள் தம்மால் முடிந்த அளவிற்கு விசாரணையை காலம் தாழ்த்தின என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயம். மற்றொரு புறம், குற்றவாளிகளுக்கெதிராக தேவைக்கு அதிகமாகவே கிடைத்த ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தும், நீதி விசாரணையை காலவரையின்றி இழுத்தடித்தும் வந்தன.

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் முன் சமர்பிக்க எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் செய்து வந்துள்ளோம். அதில் புதிய முயற்சியாக அனைத்து ஆதாரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை http://www.gujarat-riots.com/ என்ற இணைய தளத்தில் கொடுத்துளோம் என்று TCJP அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாங்கள் எடுத்துவரும் இதுபோன்ற முயற்சிகளால் குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கீழ்காணும் முக்கிய ஆவணங்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன:

* தேசிய மனித உரிமை கழகத்தின் (NHRC) அதிகாரப்பூர்வ அறிக்கை
* தேசிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* குஜராத் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* உச்ச நீதிமன்றம் மற்றும் பிரத்தியோக விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்புகள்
* கலவர நேரத்தில் முக்கிய தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள். அதில் யார் யாருடன் பேசினர், கலவர நேரத்தில் என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரம்
* மாநில அரசு தெரிவித்த நிவாரண பணிகள் மற்றும் புணர்நிர்மான, மறுவாழ்வுக்கான பணிகளுக்கான அறிக்கைகள்
* முன்னாள் மாநில உளவுத்துறை தலைவர் RB ஸ்ரீகுமாரின் சட்டபூர்வ ஒப்புதல் அறிக்கைகள் (affidavits) அதன் மற்ற இணைப்புகள்

தேசிய அவமானமாகக் கருதப்படும் முஸ்லிம்களுக்கெதிரான இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கையை குஜராத் மாநில அரசாங்கம் தான் ஆசீர்வதித்து முன்னின்று நடத்தியது என்பதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதா? என்று அனைவராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு, மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய எங்களின் தொடர் முயற்சி வெகு விரைவில் விடை கிடைக்கும் என்று தாங்கள் நம்புவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

ஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் தகுந்த முறையில் விசாரிக்கப்பட்டு முறையான நீதி வழங்கப்படுமா என்பதை இப்போது நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாப்போம் என்றும் "இந்திய தேசத்தின் நீங்கா அவமானமாக நிலைபெற்றுவிட்ட இந்த கருப்பு நாட்களை நேர்மையோடு விசாரித்து நீதிவழங்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பிற்கு நீதியை நிலைநாட்டும் நேர்மையும் தைரியமும் உண்டா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

செவ்வாய், 19 அக்டோபர், 2010

இந்திய நீதி மன்றங்களில்...





இந்திய நீதிமன்றங்களில் மைனாரிட்டி குடிமக்களுக்கு சரியான நீதி...?

- சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஜி.முத்து கிருஷ்ணன் அவர்களின் உரை கீழே காண்க:


பயிரை மேயும் வேலிகள்!

பொதுமக்களைக் காக்க வேண்டியவர்கள், பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டியவர்கள், அதற்காகவே பணியமர்த்தப்பட்டவர்கள் - அரசு ஊழியர்கள் தாம் -, பொதுமக்களுக்கு தரும் இன்னல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது। இதனைச் சமீபத்தில் நடந்த கீழ்கண்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன.

சம்பவம் 1: திருச்சி சிறுகாவனூர் எனும் ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி செய்து வருபவர் சரவணன்। இவர் பெண் ஒருவரை மிரட்டுவதற்காக தனது துப்பாக்கியால் சுட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது। அதனைத் தொடர்ந்து சரவணன் மீது துப்பாக்கியைத் தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பிரிவு 308ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது।

சம்பவம் 2: நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை 9வது பட்டாலியனில் பணியாற்றி வந்தவர் பெண் காவலர் உமாமகேஸ்வரி। இவருக்கும் ஆயு‌தப்படை காவலராகப் பணியாற்றும் இசக்கியப்பன்னுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உமாமகேஸ்வரியைக் கொலை செய்துவிட்டு நாகர்கோவில் சென்று தற்கொலை செய்து கொண்டார் இசக்கியப்பன். மருத்துவப்பரிசோதனையில் உமாமகேஸ்வரி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் 3: நவி மும்பை பகுதியில் இருக்கும் லோட்டஸ் மருத்துவமனையில் அக்டோபர் 17, ஞாயிறன்று அதிகாலையில் இளம் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்। தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவரை விஷால் பெனே என்ற மருத்துவர் கற்பழித்துள்ளார்। இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் காவல்துறையில் பதிவு செய்தப் புகாரின் அடிப்படையில் மருத்துவர் விஷால் பெனே கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட இருக்கின்றார். வேலியே பயிரை மேய்கிறது!!! - சுல்தான், குவைத்.

அஹ்மது நிஜாத் லெபனானை விட்டு உயிரோடு போக கூடாது : இஸ்ரேல் எம்.பி.

ஜெருசலேம் : ஈரானை கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்யேஹ் எல்தாட் இஸ்ரேல் ரேடியோவுக்கு அளித்த நேர்காணலில் லெபனானில் இருக்கும் ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத்தை லெபனானை விட்டு வெளியேறும் முன் எல்லையில் உள்ள வீரர்கள் எப்பாடுபட்டேனும் தங்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொலை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லெபனானுக்கு அரச முறை பயணம் மேற்கொண்டுள்ள அஹ்மது நிஜாத் இஸ்ரேலின் எல்லையருகே நடந்த ஹிஸ்புல்லா பேரணியில் கலந்து கொண்டு இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்று பேசியது இந்நேரம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இச்சூழலில் இஸ்ரேல் எம்.பி. அஹ்மது நிஜாத்தை கொலை செய்ய வேண்டும் என்றும் அது ஹிட்லரை கொலை செய்வதற்கு ஒப்பானதாகும் என்றும் கூறியுள்ளார். தனக்கு பிடிக்காத உலக தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்வது புதிதல்ல என்பதும் தன் நலனுக்காக எந்தளவுக்கும் இஸ்ரேல் இறங்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அஹ்மது நிஜாத் கொலை செய்யப்பட்டால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதால் அம்முடிவுக்கு இஸ்ரேல் செல்லாது என்றே அரசியல் பார்வையாளர்கள் அவதானிக்கின்றனர். சமீபத்தில் கூட பல நாட்டு போலி பாஸ்போர்ட்டுகளை வைத்து துபாயில் ஹமாஸ் தலைவரை கொலை செய்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கன்னியாஸ்திரிகளை கடத்தி வன்புணர்வு!

பேருந்துக்கு காந்திருந்த கன்னியாஸ்திரிகளை கடத்தி வன்புணர்வு செய்த 'ஜர்கண்ந்த் சிறப்பு காவலர்' உட்பட நான்கு பேரை தேடி வருகிறார்கள் பிகார் காவல் துறையினர்। பீகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தில் உள்ள மோகனியா காவல் வட்டத்தில் உள்ள 'ஜர்கண்ந்த் சிறப்பு காவலர்'' இந்த வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். "இரவில் பேருந்துக்கு காந்திருந்த கன்னியாஸ்திரிகளை ஒரு கும்பல் கடத்தி ஆளில்லாத இடத்தில் வைத்து கற்பழித்துள்ளனர். அதில் ஒருவர் ' 'ஜர்கண்ந்த் சிறப்பு காவல்துறையை' சேர்ந்த ரஞ்சித் சிங் ஆவார். மற்றவர்கள் தர்மேந்திரா ராம், ராகேஷ் சாஹு மற்றும் பாரு குப்தா ஆவார்கள். இவர்களின் மேல் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்துள்ள புகாரின் பேரின் இந்திய ஃபினல் சட்டப்படி எஃப்.ஐ.ஆர். சம்பந்த பட்ட வழுக்குக்ளின் அடிப்படையில் பதிவு செய்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது" என டி.எஸ்.பி பங்கஜ் சிங் தெரிவித்துள்ளார்.


திங்கள், 18 அக்டோபர், 2010

பிராமண நீதிபதிகள், தலித் மனுதாரர் - குஜராத் நீதிமன்றத்தில் சலசலப்பு!

அகமதாபாத் : தலித் ஒருவர் பணியாளர் நியமனத்தில் தான் தலித் என்ற ஒரே காரணத்துக்காக தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாகவும் பிராமணர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான மாவட்ட நீதிபதி பணியாளர்களை நியமித்து உத்தரவிட்டதாகவும் நியாயம் கோரி தொடர்ந்த வழக்கு, மற்றொரு பிராமண நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்ட சம்பவம் குஜராத் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் உயர் நீதிமன்றத்தில் அஜித் மக்வானா என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், ஜுனாகாத் மாவட்ட நீதிபதி மீது புகார் ஒன்றைப் பதிவு செய்தார். அப்புகாரில், "மாவட்டத்தின் Class - III மற்றும் Class - IV பணியாளர்களை நியமிப்பதில் மாவட்ட நீதிபதி பிராமணர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். பணிகளில் நியமிக்கப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேர் பிராமணர்களாவர். இவ்வாறு தன் உயர் சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்களை நியமிப்பதற்காகவே விதிமுறை மீறி இருமுறை நேர்காணல் நடத்தி என்னை அப்பணிகளுக்குத் தகுதி இழக்க செய்தார்" என்று மக்வானா குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு குஜராத் உயர் நீதிநன்றத்தில் நீதிபதி R.R. திருப்தி அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் அஜித் மக்வானா சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் A.M. சௌஹான் உடனடியாக எழுந்து, "இவ்வழக்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியின் மீது தொடரப்பட்டுள்ளது. அவர் தன் சமூகத்துக்குச் சார்பாக நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கில், நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் அதே பிராமண வகுப்பை சார்ந்தவர் என்பதால், இவ்வழக்கில் முறையான நியாயம் கிடைக்கும் என்ற அச்சம் தனக்கு உள்ளதாகவும் எனவே, நீதிபதி திருப்தி இந்த வாழ்க்கை விசாரிப்பதில் தனக்கு ஆட்சேபணை உள்ளதாகவும்" தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி R.R. திருப்தி, "ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இவ்வாறு கூறுவது இதுவே முதன் முறை" என்றும், "இது நீதிமன்றத்தின் மீதான அவருடைய தவறான புரிதலை காட்டுவதாகவும்" சினத்துடன் கூறினார்.

தொடர்ந்து சினத்தோடு, "இவ்வாறு கூறியதற்காக வழக்கறிஞர் A.M. சௌஹான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவும், ஒருவேளை அவர் தனது கட்சிக்காரரான அஜித் மக்வானாவின் தூண்டுதலின் பேரில் அவ்வாறு பேசியிருந்தால் அவற்றின் மீதும் வழக்கு தொடுக்கவும் முடியும்" என்று கடுமையாகக் கூறிய நீதிபதி, ஒரு வழியாக தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு,

"நீதிமன்றத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்காகவோ அல்லது வேறு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றவோ தான் வழக்கறிஞர் A.M. சௌஹான் இவ்வாறு பேசியுள்ளார். இது போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க கூடாது என்ற காரணத்திற்காக இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்" என்று கூறி வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்தார்.

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதிக்குத் தடைவிதிக்குமாறு பிரிட்டிஷ் தூதுவர் கோரிக்கை

பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நிலத்தில் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை நிறுவிவரும் இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன்னாள் பிரித்தானியத் தூதுவர் லோர்ட் ரைட் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரியா மற்றும் சவூதி அரேபியாவுக்கான பிரித்தானியத் தூதுவராகப் பணிபுரிந்த லோர்ட் ரைட் கடந்த வெள்ளிக்கிழமை (15.10.2010) வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், பலஸ்தீன் நிலத்தில் தொடர்ந்தும் சட்டவிரோதமான குடியேற்றங்களை எத்தகைய தயக்கமும் இன்றி நிறுவிவரும் இஸ்ரேலின் அடாவடித்தனமான போக்கை மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இஸ்ரேலின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகள் மிக மோசமான விளைவுகளையே தோற்றுவிக்கும் எனக் கூறியுள்ள அவர், 'இஸ்ரேல் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்கள் நிறுவுவதை வழக்கமாக்கிக் கொண்டால், அதன் இந்தப் போக்கு மத்திய கிழக்குப் பிராந்திய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவது உறுதி' என்று எச்சரித்துள்ளார்.

அவர் தமது கட்டுரையில், இஸ்ரேல் கடந்த வருடமும் சட்டவிரோதமான யூதக் குடியேற்றங்கள் பலவற்றை நிறுவியுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார். மேற்குக் கரை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரங்களில் வாழும் பலஸ்தீனர்களைத் தத்தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி, அங்கு யூத ஆக்கிரமிப்பாளர்களைக் கொண்டுவந்து நிரப்பும் நிலைப்பாட்டை இஸ்ரேல் இனியும் மாற்றிக்கொள்ளாத பட்சத்தில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்து தடுத்துநிறுத்த வேண்டும் என்று லோர்ட் ரைட் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முறையீடு-தமுமுக தலைவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த நேர்காணல் (Audio)

E-mail Print PDF

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முறையீடு-தமுமுக தலைவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த நேர்காணலை இதில் பார்க்கலாம்.




முஸ்லிம்கள் பாபர் மசூதி இடத்தை விட்டுத் தரவேண்டும்: கட்டியார்

அயோத்தியில் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதி அமைந்திருந்த பிரச்சனைக்குரிய இடத்தை முஸ்லிம்கள் விட்டுத் தரவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சித் தலைவர் வினய் கட்டியார் கேட்டுக் கொண்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழியேற்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் பிரச்சனைக்குரிய அந்த இடத்தை விட்டுத் தருவதன் மூலம் தேச நலன் காக்கப்படும். இந்தியர்களின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவதாகவும் இது அமையும் என்று வினய் கட்டியார் அயோத்தியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

முஸ்லிம்கள் இவ்வாறு செய்ய முன்வராவிட்டால், நாடு முழுவதும் நில உரிமைகள் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

வினய் கட்டியாரை பாரதீய ஜனதா கட்சியிலிருந்து நீக்காவிட்டால் சாதுக்கள் பாஜகவை விட்டு விலகுவார்கள் என்று அகாரா பரிஷத்தின் தலைவர் கியான்தாஸ் கூறியிருப்பது தொடர்பாகக் கேட்கப்பட்டதற்கு, அவரது வார்த்தைகள் தனக்கு ஆசிர்வதம் அளிப்பது போலாகும் என்று கூறினார்.

சன்னி வக்ஃபோர்டு தலைவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் சந்திப்பு

அப்பீல் அளிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகின்றன

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை திரும்ப அளிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்து வருவதாக உ.பி மாநில சன்னி வக்ஃபோர்டு தலைவர் சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் ஆகிய தலைவர்களுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்தார் அவர்.

வழக்கில் வாதாடுவதற்கு பிரபலமான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்து சமரசத்திற்கு தயாராகவேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. நம்பிக்கையை மட்டும் ஆதாரமாகக் கொண்டுள்ள இந்த தீர்ப்பில் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் தராது. இவ்வழக்கில் மாயாவதி தலைமையிலான உ.பி அரசு வக்ஃபோர்டிற்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளது. வழக்கை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார ரீதியான குறைபாடுகள் உண்டு என சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பார்கள் இதற்கு பதிலளித்த தலைவர்கள் கூறுகையில்,பாப்ரி மஸ்ஜித் வழக்கு என்பது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையாகும். வழக்கை நடத்துவதில் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பர் என உறுதி வழங்கினர்.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு தேவையான விபரங்களை ஒரு வழக்கறிஞர் குழு தயாராக்கி வருவதாக வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார் மேலும் உச்சநீதிமன்றத்திலிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். வழக்கை நடத்துவதற்கு பெருமளவிலான பணம் தேவைப்படும். என்றும் தெரிவித்தார்.


சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன்- அன்சாரி

முஸ்லிம்கள் தரப்பில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் துவக்கம் கால மனுதாரரான ஹாஷிம் அன்சாரியையும் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI, இமாம் கவுன்சில் தலைவர்கள் சந்தித்து செய்திகளை பரிமாறிக் கொண்டனர்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை உலக முஸ்லிம்களின் பிரச்சனை என அன்ஸாரி சந்திப்பின்போது குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது: பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சன்னி வக்ஃப் போர்டுடன் நிற்பேன். சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன். அயோத்தியில் சில ஹிந்து சன்னியாசிகளுடன் நான் நடத்திய கலந்துரையாடலை ஊடகங்கள் தவறாக பரப்புரைச் செய்தன என்றும் அன்சாரி குறிப்பிட்டார்.

செய்தி:தேஜஸ்

இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது : அஹ்மது நிஜாத் ஆவேசம்

லெபனான் : இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்றும் இஸ்ரேலியர்கள் தாங்கள் பூர்விக நாட்டிற்கே திரும்ப போகும் நேரம் வந்து விட்டது என்றும் இஸ்ரேலிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள பின்ட் ஜிபில் எனுமிடத்தில் நடைபெற்ற ஹிஸ்புல்லாவின் பேரணியில் இஸ்ரேலின் கடும் எதிரியான ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறினார்.

2006-ல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் நடைபெற்ற போரில் இஸ்ரேலின் குண்டு வீச்சில் ஏராளமான மக்கள் பின்ட் ஜிபிலில் கொல்லப்பட்டார்கள். அவர்களின் மறைவை நினைவு கூறும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அஹ்மது நிஜாத் மக்களின் பலத்த கரகோஷங்களுக்கிடையே "பின்ட் ஜிபில் உயிரோடு உள்ளது. மலை போன்ற உறுதியுள்ள உங்களின் வீரத்தை பாராட்டுகிறேன். என்றும் உங்களுக்கு ஈரான் துணை நிற்கும்" என்று கூறினார்.

இஸ்ரேலுக்கு மிக அருகில் நடந்த ஹிஸ்புல்லா பேரணியில் அஹ்மது நிஜாத் கலந்து கொண்டது இஸ்ரேலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. அஹ்மது நிஜாத்தின் அதிகாரபூர்வ லெபனான் வருகையை அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டும் கண்டித்ததுடன் இப்பயணத்தின் மூலம் லெபனானும் தீமைகளின் அச்சு நாடுகளில் இணைந்து விட்டதாக கூறினர்.

பின்னர் லெபனான் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அஹ்மது நிஜாத் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஆதரித்து பேசினார். மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வித அறிவியல் வளர்ச்சியும் பெற்று விட கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பதாக கூறிய அவர் தாம் விஞ்ஞானத்தை பரப்ப நினைப்பதாகவும் அமெரிக்காவோ அதை தடுத்து இருட்டில் ஆழ்த்த நினைப்பதாகவும் கூறினார்.

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முறையீடு-தமுமுக தலைவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த நேர்காணல்

பெரியதாக பார்க்க படத்தின்  மேல் கிளிக் செய்யவும்.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இரண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பிரித்தளித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையின் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.



சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து லக்னோவில் கூடி விவாதித்த முஸ்லீம் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு ஓர் சொத்துரிமை வழக்காகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர மத மற்றும் இதர நம்பிக்கைகள் அடிப்படையில் அதை அணுகி தீர்ப்பளிப்பது பாரதூர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ள பிரபல வழக்கறிஞர்களை வைத்து முக்கிய நகரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் மனுதாரரான உத்தரப் பிரதேச வக்ப் வாரியம் மேல் முறையீடு செய்யும் போது, இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சனி, 16 அக்டோபர், 2010

இஸ்ரேலிய கெடுபிடியைமீறி ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சர் காஸாவில்...

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் பல நாட்களாக உட்பிரவேச அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஸ்டப் கடந்த வியாழக்கிழமை (14.10.2010) இஸ்ரேலியக் கெடுபிடிகளை மீறி காஸா சென்றடைந்துள்ளார்.

அமைச்சர் ஸ்டப் பெய்ட் ஹனூன் கடவை வழியாக காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அங்கே அவர் பல்வேறு அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரினால் கடும் சேதமடைந்துள்ள பகுதிகளையும் அமைச்சர் பார்வையிடவுள்ளார். காஸா மீதான இஸ்ரேலிய அத்துமீறல் யுத்தத்தின் விளைவாக காஸாவின் வடக்குப் பிராந்தியத்தில் சுமார் 20 000 வீடுகள் சிதிலமடைந்துள்ளதோடு, அப்பிரதேசத்தின் கீழ்க்கட்டமைப்பு வசதிகள் முற்றாகச் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பிரமுகர்களின் தொடர் காஸா வருகை "ஹமாஸ் இயக்கமே பலஸ்தீன் மக்களின் பிரதிநிதி" என்ற அங்கீகாரத்தை சர்வதேச அளவில் பெற்றுத்தர வழிவகுத்து விடும் என்று காரணங்காட்டி ஃபின்லாந்தின் வெளியுறவு அமைச்சருக்கு காஸாவுக்குள் பிரவேசிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை பல நாட்களாகத் தொடர்ந்து அனுமதி மறுத்துவந்தது.

இதேவேளை, ஜோர்தானைச் சேர்ந்த கால்பந்தாட்டக் குழுவினரை காஸாவுக்குள் செல்லவிடாமல் எகிப்து அதிகாரத் தரப்பு அனுமதி மறுத்துள்ளது. 'விஹ்தாத்' எனும் ஜோர்தானிய விளையாட்டுக் கழகத் தலைவர் தாரிக் கோரி இதுபற்றிக் குறிப்பிடுகையில், அம்மானில் உள்ள எகிப்தியத் தூதுவராலயத்தில் மேற்படி விளையாட்டுக் குழுவினருக்கு ரபாஹ் கடவையினூடே காஸா செல்வதற்குக் கடவுச் சீட்டுக்கள் வழங்குமாறு சுமார் 50 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பித்தும் எகிப்திய அதிகாரத்தரப்பு அதற்கு எத்தகைய மறுமொழியும் அளிக்கவில்லை என்று விசனம் தெரிவித்துத்துள்ளார்.

கடந்த நான்கு வருட காலமாக காஸா மீது நியாயமற்றுத் தொடரும் முற்றுகையை முறியடிக்கும் நோக்கிலும், காஸா விளையாட்டுக் கழகம் மற்றும் உள்ளூர் விளையாட்டுக் குழுக்களுடனான கால்பந்தாட்டப் போட்டிகளை ஏற்பாடு செய்யுமுகமாகவுமே தமது குழு காஸா பயணத்துக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது என கோரி கருத்துத் தெரிவித்துள்ளார்.