திங்கள், 4 அக்டோபர், 2010

அபத்தங்கள் நிறைந்த அகழ்வாராய்ச்சித் துறையின் அறிக்கை: பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப்

புதுடெல்லி,அக்.4:ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதற்கு ஆதாரமாக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் கூறிய ஆர்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா என்ற இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் அறிக்கை அபத்தங்கள் நிறைந்தது என பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப் கூறியுள்ளார்.

மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சிதிலங்களின் கற்களில் விஸ்வஹிந்து பரிசத்தால் கண்டெடுக்கப்பட்டது எனக்கூறப்படும் பழங்கால கல்வெட்டுகள் திட்டமிட்டே இட்டுக்கட்டப்பட்ட செய்தி என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் சமர்ப்பித்தது.

ராம்சாபுத்ரா எனக்கூறப்படும் இடத்திற்கு கீழ் செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்து கட்டப்பட்ட ஐந்து மாடி கட்டிடத்தின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் பாபரால் தகர்க்கப்பட்ட ராமர்கோயில் என்ற கண்ணை மூடிக்கொண்ட முடிவுக்கு வந்துள்ளது நீதிமன்றம்.

ஆனால், செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்த கட்டிடக்கலை மொகாலாயர்களின் வருகையின் மூலமே இந்தியாவிற்கு வந்தது என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.

பழங்கால ஹிந்துக் கோயில்கள் இம்மாதிரியான கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்படவில்லை. ஏறத்தாழ சம அளவிலான கட்டிகளை பயன்படுத்தி இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது என அவ்வறிக்கையில் கூறப்பட்டாலும், அதன் சுவர்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுக் குறித்து அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் விவரிக்கப்படவில்லை. ஆனாலும், அது ஒரு முக்கிய கட்டிடம் என அகழ்வாராய்ச்சித்துறை அறிக்கையில் கூறப்படுகிறது.

கட்டிடத்திற்கு கலைநயம் மிகுந்ததாக அஸ்திவாரம் இருந்ததாக கூறும் அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் அந்த கலை நயம் எத்தகையது என்பதுக் குறித்து கூறவில்லை. இவ்வாறு இர்ஃபான் ஹபீப் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

கருத்துகள் இல்லை: