சனி, 2 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பு : முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் ?

புது தில்லி : அயோத்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நேற்று நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லீம்களுக்கும் இரண்டு பங்கை ஹிந்துக்களுக்கும் கொடுக்குமாறு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உண்மையில் இந்தியாவின் மதசார்பின்மைக்கு வைக்கப்பட்ட இத்தேர்வில் இந்தியா வெற்றியடைந்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று சிறுபான்மை சமூகத்தினர் கருதுவதாக கருதுகிறது.

புகழ் பெற்ற வரலாற்றாசியர் இர்பான் ஹபீப் தீர்ப்பு குறித்து கூறும் போது “ வரலாறு மற்றும் உண்மைகளை குழி தோண்டி புதைத்து இச்சமரச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வரலாற்று தகவல்களை கையாளும் போது கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சேனல்களில் விவாதம் நடத்தும் முஸ்லீம் அறிவு ஜீவிகள் தங்கள் சோகத்தை காட்டாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இது சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த அநீதி என்றே கருதுகின்றனர். மத்திய பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒருவர் “ பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே முஸ்லீம்கள் வாழ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இத்தீர்ப்பு வழிகோலியிருப்பதாக கூறினார்.

சமூக சேவகியும் சஹ்மதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மியோ இத்தீர்ப்பு தன்னை இந்தியாவின் இரண்டாம் தர குடிமகனாக உணர வைத்துள்ளதாக கூறினார். திட்ட குழுவின் உறுப்பினரான சையதா ஹமீதோ இத்தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

மேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது. மேலும் அம்முன்னாள் துணைவேந்தர் கூறும் போது பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். வேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

கருத்துகள் இல்லை: