திங்கள், 11 அக்டோபர், 2010

தெலுங்கானா மாநிலம் அமைந்தால்முஸ்லிம்களுக்கு 12 சதவீத ஒதுக்கீடு:சந்திரசேகரராவ் அறிவிப்பு

ஐதராபாத்:''தனி தெலுங்கானா மாநிலம் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும்இ'' எனஇ தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.இ) தலைவர் சந்திரசேகரராவ் கூறியுள்ளார். முஸ்லிம் தலைவர்கள் டி.ஆர்.எஸ்.இ கட்சியில் இணையும் விழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது.

அப்போது கட்சியில் இணைந்த முஸ்லிம் தலைவர்களை வரவேற்றுப் பேசிய டி.ஆர்.எஸ்.இ தலைவர் சந்திரசேகரராவ் கூறியதாவது:முஸ்லிம் சமுதாயம் மேம்பாடு குறித்து அரசியல் கட்சிகள் முழங்கினாலும்இ அனைத்து தட்டு முஸ்லிம் மக்களும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதே உண்மை. ஆந்திராவில் ஆட்சி நடத்திய எந்த ஒரு கட்சியும்இ முஸ்லிம்கள் நலத்திட்டங்களுக்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. டி.ஆர்.எஸ்.இ கட்சி மட்டுமே முஸ்லிம் சமுதாயம் மீது அக்கறை கொண்ட உண்மையான மதசார்பற்ற கட்சி.

இதற்குச் சான்றாகஇ தனி தெலுங்கானா அமைந்தால் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். டி.ஆர்.எஸ்.இ ஆட்சி அமைக்கும் பட்சத்தில்இ முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும். தவிரஇ அமைச்சரவையில் நான்கு அல்லது ஐந்து முஸ்லிகள் இடம் பெறுவர்.இவ்வாறு சந்திரசேகரராவ் கூறினார்.

கருத்துகள் இல்லை: