திங்கள், 28 மார்ச், 2011

துரோகத்தின் பரிசு தோல்வி...!!!

தமிழகத்தின் சட்டபேரவைக்கான வேட்புமனுதாக்கல்
இன்றுடன் நிறைவு பெற்றுவிட்டது... மாநிலம்முழுவதும்
தேர்தல்களம் சூடுபிடிக்க துவங்கிவிட்டது... பரபரப்பான
பரப்புரைகள்... விறுவிறுப்பான இலவச அறிவிப்புகள்...
என்று மாநிலத்தின் இரண்டு பெரும் கட்சிகளான திமுக அதிமுக
ஆகியவற்றின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழகத்தை
தேர்தல்திருவிழா கொண்டாடதினால் திக்குமுக்காடவைக்க துவங்கிவிட்டார்கள்...
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒருநாள் முதல்வர் போல
சில நாட்கள் மட்டும் எஜமானர்களாக அரசியல்வாதிகளால்
ஆராதிக்கப்படும் வாக்காளப்பெருமக்கள் யாருக்கு வாக்களிப்பது
டிவியை போனமுறை தந்துவிட்டு இம்முறை கிரைண்டர் தருவேன் என்பவருக்கா...?
இல்லை கிரைண்டருடன் மிக்சியும் சேர்த்து தருவேன் என்பவருக்கா..?
என்கிற தீராத குழப்பத்தில்...
இந்த தருணத்தில் சில விசயங்களை வாழ்வுரிமை மறுக்கப்பட்ட
மூன்றாம்தரமாக வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோம். சிந்தனை வளம் நம்மில் இல்லாததினால் இழந்தது ஏராளம்...
ஆகவே இனியாவது சிந்திக்க பழகவேண்டியது கட்டாயம்... யாருக்கு வாக்களிப்பது
என்கிற கேள்வியைவிட யாருக்கு வாக்களிக்க கூடாது என்கிற கேள்விதான்
இப்போது நமக்கு தேவை...!
எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் ஏறக்குறைய அணைத்து
(ஒரு சில கட்சிகளை தவிர அவைகள் குறித்து பின்னுரையில் பார்ப்போம்)
அரசியல் கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்புதந்துள்ளது
மகிழ்ச்சிக்குரியது...
திமுக முஸ்லிம்களின் தியாகத்தில் வளர்ந்த இயக்கம்... இந்த சட்டப்பேரவை
தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் சகோ.அசன் முகமது ஜின்னா, மதுரை மத்தியில்
சகோ.முகமது கவ்ஸ், பாளையங்கோட்டையில் அமைச்சர் மைதீன்கான், தஞ்சையில்
அமைச்சர் உபயதுல்லா என நான்கு முஸ்லிம்களை வேட்பாளாராக களமிறக்கி உள்ளது
இது தவிர தனது கூட்டணியில் உள்ள முஸ்லிம்லீக்கிற்கு தனது சின்னத்திலேயே
மூன்று தொகுதிகளை கொடுத்துள்ளது... அதிமுக முஸ்லிம்களுக்கு என்றைக்குமே
நம்பிக்கைக்குரிய தலைமையாக இல்லாதபோதும் இந்த தேர்தல்களத்தில் தன பங்கிற்கு
ராணிபேட்டையில் சகோ.முகமது ஜான், ஆவடியில் சகோ.அப்துல் ரஹீம், திருச்சியில்
சகோ.மரியம் பிச்சை ஆகிய மூவரை வேட்பாளராக்கி உள்ளது. அதே கூட்டணியில்
உள்ள மமகவிற்கு மூன்று தொகுதிகளை தனி சின்னத்தில் போட்டியிடும் தகுதியுடன்
ஒதுக்கியுள்ளது...
ரணகளதிற்கு பெயர்பெற்ற காங்கிரஸ் கட்சிகூட கிருஷ்ணகிரியிலும் இராமநாதபுரதிலும்
முஸ்லிம்களையே வேட்பாளராக்கி உள்ளது. (முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற
ஜீவாதார கோரிக்கைகளை காங்கிரஸ் எள்ளிநகையாடி வருவதை கவனிக்க வேண்டும்)
முதன் முறையாக பெரிய கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கும் தேமுதிகவும்
திருவாடனை தொகுதியில் சகோ.முஜிபுர்ரஹ்மான் என்கிற முஸ்லிம் வேட்பாளருக்கு
வாய்ப்புகொடுதுள்ளது.
பலவிதமான தியாகங்கள் போராட்டங்கள் இவைகளை கடந்து அரசியல் ஆளுமையாக
வளர்ந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது உளுந்தூர்பேட்டை வேட்பாளராக
சகோ.முகமது யூசுப் என்கிற முஸ்லிமைத்தான் நிறுத்தி இருக்கிறது... விசிகவின்
இந்த வளர்ச்சியில் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஏதுமில்லை. விசிக
வளர்ச்சி பாதையில் வேகமாக பயணிக்க துவங்கிய பிறகே முஸ்லிம்களின் பங்களிப்பு
விசிகவில் ஏற்பட்டது. இருப்பினும் விசிக தனது கொள்கை முழக்கத்திற்கு அடிதளமிட
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற எப்படியும் எட்டு தொகுதிகளில் வெற்றிபெற
வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தபோதும் எதிர்பார்த்ததைவிட மிக குறைவான தொகுதிகளை
திமுக தலைமையால் ஒதுக்கபட்டிருந்த போதும் இரண்டு பொது தொகுதியை போராடி பெற்று
ஒரு தொகுதியில் முஸ்லிம் வேட்பாளரை களமிறக்கி உள்ளது.
ஆனால்...
ஆனால்...
ஆனால்...
தனது சமுதாயத்தின் இளைஞர்களின் உண்ணதமான உயிர் தியாகத்தின் மூலமாக
அரசியல் பாதையில் அடி எடுத்துவைத்த பாட்டாளி மக்கள் கட்சி... என்னவெல்லாமோ
போராடிபார்த்தும் "மரம்வெட்டி கட்சி" என்கிற பெயரை மாற்றமுடியாமல் திண்டிவனம்
தைலாபுரம் தோட்டத்தை தாண்ட முடியாமல் அரசியல் அனாதையாக நின்ற பொது
கைகொடுத்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றுதந்தவர்கள் முஸ்லிம்களும் தலித்துகளும்
என்பதை மறந்துவிட்டு நாங்கள் ஜாதிகட்சிதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது...
வடக்கே வன்னியர்கள்... தெற்க்கே தேவேந்திரர்கள்... இணைப்பு பாலமாய் இஸ்லாமியர்கள்...
இந்த முழக்கம் இன்று மருத்துவர் அய்யாவிற்கு மறந்துபோய்விட்டது...
சமுதாய தந்தை ஷஹீத் பழனிபாபா அவர்கள் ஒவ்வொரு குக்கிராமங்கள் தோறும்
முஸ்லிம்கள் மத்தியில் மருத்துவரை அடையாள படுத்தியது மறந்துபோய்விட்டது...
தனது தொழிலைக்கூட விட்டுவிட்டு முழுநேரமும் பாமகவின் வளர்ச்சி பணிகளிலேயே
மூழ்கி இருந்த பெரியவர் குணங்குடி ஹணிபா அவர்களின் சேவை இப்போது மருத்துவருக்கு
மறந்துபோய்விட்டது... எங்கெல்லாம் எதிர்ப்புகள் உள்ளதோ அங்கெல்லாம் ஓடோடி சென்று
கட்சியை வளர்த்த அண்ணன் கே.எம்.சரீப் அவர்களை மருத்துவருக்கு மறந்துபோய்விட்டது...
எண்பதுகளின் இறுதியில் துவங்கப்பட்ட பாமகவை மக்களிடம் கொண்டு செல்ல
அன்றைக்கு முஸ்லிம்களும் தலித்துகளும் தேவை பட்டார்கள் சொற்ப வாக்குகள்தான்
பெறமுடியும் என தெரிந்தும் கட்சியை அறிமுகபடுத்த தேர்தல் களம்தான் சரி என்பதால்
பெரும் பொருளாதாரத்தை செலவலித்து தேர்தலில் போட்டியிடிடார்கள். ஆனால் பெரிய
கட்சிகளின் கூட்டணியுடன் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவுடன் பேருக்கு சில தலித்துகளுக்கு
வாய்ப்புகள் கொடுத்துவிட்டு அவர்கள்மீது அடக்குமுறையை ஏவி கட்சியைவிட்டே
வெளியேற செய்தார்கள்... 2001 தேர்தலில் வந்தவாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக
தேர்வுசெய்யபட்ட அண்ணன் மதுரை முருகவேல் ராஜன் போன்றவர்கள் இன்று ஏன்
பாமகவில் இல்லை...? தனது ஆளுமை பலத்தால் பாமகவை தேவேந்திர மக்களிடம்
கொண்டு சென்ற அண்ணன் ஜான் பாண்டியன் அண்ணன் பசுபதி பாண்டியன் போன்றோர்
ஏன் பாமகவைவிட்டு வெளியேறினார்கள்...?
ஆனால் இவற்றில் கொடுமை தனித்து களம்கண்ட காலத்தில் முஸ்லிம்களை
பெருவாரியாக வேட்பாளராக்கிய பாமக கூட்டணி பலத்துடன் களம்கானும் இந்த
மூன்றாவது தேர்தலிலும் ஒரு முஸ்லிமிற்கு கூட வாய்ப்பளிக்கவில்லை... இது
இன்றும் அந்த கட்சியில் எந்தவிதமான அதிகார பதவிகளும் பெறாமல் விசுவாசத்துடன்
செயலாற்றும் முஸ்லிம்களுக்கு மட்டும் பாமக செய்துள்ள துரோகமல்ல...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...!!!
ஒரு தலித்தை முதல்வராக்குவோம் இதுவும் மருத்துவர் அய்யாவின் முழக்கம்தான்
ஆனால் இன்று தேர்தலில் தலித்துகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் வெறும் மூன்று...
மருத்துவர் அய்யா அவர்களே...
உங்கள் துரோகத்திற்கான பரிசை நீங்கள் நிச்சயமாக வரும் மே 13 அன்று பெறுவீர்கள்
அந்த பரிசு கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியைவிட
அதிகமான மகிழ்ச்சியை தரும்...
ஆம்...
துரோகத்திற்கான பரிசை பாமக போட்டியிடும் 30 தொகுதிகளிலும் உள்ள இஸ்லாமிய
வாக்காள பெருமக்களும் தொப்புள்கொடி உறவுகளான தலித் சமூக மக்களும் பாமகவிற்கு
வழங்கி பாடம் புகட்ட வேண்டும்... இனிவரும் காலங்களில் நம்மை ஒதுக்கிவிட்டு யாரும்
அரசியல் செய்ய முடியாது என்பதை நிருபிக்க வேண்டும்...
யாராக இருப்பினும் "துரோகத்தின் பரிசு தோல்வி" என்பதை விளங்க செய்வோம்....
thanks :

சனி, 26 மார்ச், 2011

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ம.ம.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி போட்டியிடுகின்றார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜும்மா தொழுதுவிட்டு தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் சென்னை மாநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கரன் அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரவேற்புடன் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று பகல் 3 மணியளவில் மனு தாக்கல் செய்தார்.

Last Updated ( Friday, 25 March 2011 20:49 )

முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத்தல்

07kk

புதுடெல்லி:நாடாளுமன்றத்திலும்,சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து,இன்று மக்களவையில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்;”மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. முக்கியமான 14 மாநிலங்கள் சார்பாக மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம்.

ஆகவே இந்த நிலை மாற வேண்டுமானால்,மக்களவையிலும்,மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.” என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும்-ஜெ (Video)

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்


புதன், 23 மார்ச், 2011

முஸ்லிம் சமுதாயம் அப்துல்லாஹ்வைத் தவறாகப் பயன்படுத்துகிறதா?


Print E-mail

முஸ்லிம் சமுதாயம் அப்துல்லாஹ்வைத் தவறாகப் பயன்படுத்துகிறதா?

"பெரியார்தாசன் அப்துல்லாஹ்வாக மாறி ஓராண்டு ஆகிவிட்டது. அவர் இஸ்லாத்திற்கு வந்ததில் இருந்து இன்றுவரை அவர் முஸ்லிம்கள் மத்தியிலேயே ‘பிசி’யாக இருக்கிறார். இது அப்துல்லாஹ் என்கிற ஆளுமையின் தவறா? அல்லது அப்துல்லாஹ்வைத் தவறாகப் பயன்படுத்தும் முஸ்லிம் சமூகத்தின் தவறா? ஏனெனில் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) ஒரு போர்க்கருவி. அந்தக் கருவியைப் பொதுக்களத்திலும், அறிவுத்தளத்திலும் பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல் புழக்கடையில் போட்டு வைத்திருக்கிறது முஸ்லிம் சமுதாயம்... '"

இப்படி ஓர் அபாண்டமான குற்றச்சாட்டை முஸ்லிம் சமுதாயத்தை நோக்கி வீசியிருக்கிறார் அன்புச் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ். (சமநிலைச் சமுதாயம் மார்ச், 2011) ‘புழக்கடையில் போர்க்கருவி’ எனும் தலைப்பிட்ட அவருடைய நீ.....ண்ட ஏழு பக்கக் கட்டுரை அப்துல்லாஹ் பற்றிய திறனாய்வு மட்டுமே இருக்கும் என நினைத்து ஆவலுடன் படித்தால் குழப்பமே மிஞ்சியது.

1. பெரியார்தாசனும் முஸ்லிம் சமூகமும்.

2. இஸ்லாமிய அமைப்புகளும் அழைப்புப் பணியும்

3. அழைப்பப் பணியும் முஸ்லிம்களும்

4. களப்பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்

5. இஸ்லாத்தைத் தழுவி வந்தோரின் சிக்கல்கள்

என ஐந்து தலைப்புகளில் நிதானமாகத் தொலைநோக்குடன்; எழுதவேண்டிய ஆக்கங்களை ஒரே கட்டுரையில் அவசர அடியாகப் போட்டு குழப்பியுள்ளார்.

பெரியார்தாசன் அப்துல்லாஹ்வாக மாறியது கண்டு முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சியடைந்தது உண்மைதான். அதைத்தவறு என்று சொல்ல முடியாது. நாடறிந்த பன்முக ஆளுமை கொண்ட ஒருவர் இறைநெறியை ஏற்றுக்கொண்டபோது அவரை நெஞ்சிலே ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து வரவேற்றதில் என்ன தவறு கண்டுவிட்டார் ஷா நவாஸ்?

‘அப்துல்லாஹ்வாக மாறியதிலிருந்து அவர் முஸ்லிம்கள் மத்தியிலேயே ‘பிசி’யாக இருக்கிறார், இது யாருடைய தவறு?’ என்று வினவுகிறார் ஆளூரார். இது ஒரு குழப்ப வினா. முஸ்லிமான பிறகு முஸ்லிம்கள் மத்தியில் இருக்காமல் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் யூதர்கள் மத்தியிலுமா போய் இருக்க முடியும்?

கூட்டங்களில் கலந்துகொள்ளும்படி முஸ்லிம்கள் அன்போடு அழைக்கும்போது அப்துல்லாஹ் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதிலோ, முஸ்லிம்கள் மத்தியில் தம் பட்டறிவைப் பகிர்ந்து கொள்வதிலோ, அதன் மூலம் சமுதாயத்தினருக்கும் களப்பணியாளர்களுக்கும் சில புதிய வெளிச்சங்களைக் காட்டுவதிலோ தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

‘முஸ்லிம் சமுதாயத்தில் இந்துத்துவாவைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள ஆளுமைகள் எவரும் இல்லை. அந்தப் போதாமையைப் போக்கும் வகையில் வந்திருக்கும் பெரியார்தாசனுக்கு, இந்துத்துவாவுக்கு எதிரான தளத்தை முஸ்லிம் சமுதாயம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்’ என்கிறார் ஆளூர் ஷாநவாஸ்.

இதற்குப் பெயர் ஆலோசனையல்ல, அபத்தம். இந்துத்துவாவைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள தேசிய அளவிலும் மாநில அளவிலும் முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் பலர்; உள்ளனர். அந்தப்பட்டியல் நீளமானது. அவ்வளவு ஏன், சமநிலைச் சமுதாயத்தின் பத்தி எழுத்தாளரான மதிப்பிற்குரிய தோழர் அப்துல் அஜீஸ் பாகவியிடம் சொல்லிப் பாருங்கள் இந்துத்துவவை நார் நாராய் கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்.

இன்னொன்று; கண்டு மிரளும் அளவுக்கு இந்துத்துவா ஒன்றும் பெரிய சித்தாந்தமோ தத்துவதோ அல்ல. அந்த கொள்கையை எதிர்ப்பதுதான் நோக்கம் எனில் அதற்கு ‘அப்துல்லாஹ்வாக’ மாறவேண்டிய அவசியமும் இல்லை.

பேராசிரியர் அப்துல்லாஹ்வை முஸ்லிம் சமுதாயம் எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தவுமில்லை. தவறாகப் பயன்படுத்தும் அளவுக்கு பேராசிரியர் அப்துல்லாஹ் எடுப்பார் கைப்பிள்ளையும் அல்லர் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கிறோம்.

- சிராஜுல் ஹஸன்

நன்றி: சமரசம், 16-31 மார்ச் 2011

முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு கேள்வி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு அவரை பெரியார்தாசன் என்றே அழைத்துக் கொண்டிருப்பீர்கள் ?!

''அப்துல்லாஹ்'' என்றே அழையுங்கள் மக்களுக்குப்புரியாமல் இருக்காது. பெயர்களிலேயே மிகவும் சிறப்பிற்குறிய பெயரன அப்துல்லாஹ் - 'அல்லாஹ்வின் அடியார்' எனும் பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு திரும்பத்திரும்ப அவரை பெரியார்தாசன் என்று அழைப்பது முஸ்லிம்களின் பலவீனம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அறிமுக அடையாளத்திற்கு ஆரம்பத்தில் பயன்படுத்தியதை இனியும் தொடர்வது சரியல்ல.

உதாரணமாக உலகக்குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ இஸ்லாத்தைத்தழுவிய ஆரம்ப நாட்களில் அவரை அவரது பழைய பெயரான ''கேஷியஸ் கிளே'' என்று எவெரேனும் அழைத்தால் அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். ''ஒரு அடிமைத்தனமான பெயரில் என்னை அழைக்காதீர்கள், முஹம்மது அலீ (புகழுக்குறிய உயர்ந்தவர்) என்றே அழையுங்கள்'' என்று அவர் ஓங்கி ஒலித்ததை நினைவுபடுத்திக்கொள்வோம்.

குத்துச்சண்டையின்போது சில வீரர்கள் அவரை பழைய பெயரில் அழைக்கும்போது அவர்களிடம் 'என்னுடைய பெயர் முஹம்மது அலீ' என்று சொல்லியே எதிரிகளை ஓங்கி ஓங்கி குத்துவிட்டார் என்பது அக்காலத்தின் பிரபலமான செய்தி.

இன்று அவரை கேஸ்ஷியஸ் கிளே என்று அழைப்பவர் எவரும் இல்லை. ஆகவே, இனி அப்துல்லாஹ்வை அப்துல்லாஹ் என்றே அழைப்போம். -

thanks : nidur.info
source : www.nidur.info

திங்கள், 21 மார்ச், 2011

தமிழகத்தில் தொடரும் காவல் துறை ஆரஜகம்!!


மார்ச் 21, திண்டுக்கல்: ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு அனுமதி மறுத்து போராட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தனது சிறுபான்மை வெறுப்புணர்வை உமிழ்ந்துள்ளது.

கடந்த 2010 டிசம்பர் 6 முதல் 2011 ஜனவரி 30-ஆம் தேதி வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பாப்ரி மஸ்ஜித் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தியது. தமிழகத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தியாவின் இரு பெரும் பயங்கரவாதச் செயல்கள், ஒன்று தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படுகொலை. இரண்டாவது மாபெரும் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான இறையில்லம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பட்ட நிகழ்வுமாகும்.

இந்த இருபெரும் பயங்கரவாதச் செயல்களைக் குறித்த தகவல்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நிறைவுதினமான ஜனவரி-30-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆனால், இந்த பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டத்திற்கு அன்றைய தினம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்ததோடு மீறி பேரணி நடத்த முயன்ற பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மது பஹ்ருத்தீன் உட்பட பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோரை கைது செய்தது.

அதனைத் தொடர்ந்து காவல்துறையின் இந்த அராஜகத்தை கண்டிக்கும் விதமாகவும், திண்டுக்கல் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்தும் மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான எதிர்ப்பை பதிவுச் செய்யும் விதமாகவும் இன்று(20.03.2011) திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுச் செய்திருந்தது.

ஆனால், பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் தடைச் செய்த காவல்துறை பேரணி செல்ல முயன்ற மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ஏ.முஹம்மது யூசுஃப், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஏ.கைஸர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் நூற்றுக்கணக்கானோரை கைதுச் செய்துள்ளது.

காவல்துறையின் இச்செயலை கண்டித்த பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலத் தலைவர் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் திண்டுக்கல் காவல்துறையின் இச்செயலை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. நீதிக்கான போராட்டத்திலும், காவி பயங்கரவாதத்தை மக்களிடையே தோலுரித்து காட்டும் முயற்சியிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இக்கைது நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் திட்டமிட்டுள்ளது என்பதை உளவுத்துறை மூலம் அறிந்ததையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, 2)ஆம்பூர் 3) இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இராமநாதபுரத்தில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம். தமிமுன் அன்சாரி, ஆம்பூரில் அஸ்லம் பாட்ஷா ஆகியோர் போட்டியிடுவார்கள்.

-ம.ம.க தலைமையகம்

ஞாயிறு, 20 மார்ச், 2011

முஸ்லிம் அமைப்புகளுடன் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு சட்டமன்றத் தேர்தலுக்கு ஆதரவு திரட்டினர்

E-mail Print PDF
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன்...

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன்...

சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அதிமுக கூட்டணிக்கும் ஆதரவு கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் ஆகியோர் சந்தித்து வருகிறார்கள்.

ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் நிர்வாகிகளுடன்...

ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் நிர்வாகிகளுடன்...



கடந்த 4.3.2011 அன்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். 5.3.2011 அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ம.ம.க. தலைமை நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினர்.


5000 முஸ்லிம்களை கொலைச்செய்ய திட்டமிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் – சி.பி.ஐ

610x

ஹைதராபாத்:இந்தியாவில் 5000 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 76 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசியத் தலைவர் இந்திரேஷ் குமாரின் தலைமையில் கடந்த 2006-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி குஜராத் சமாஜம் கெஸ்ட் ஹவுஸில் கூடிய கூட்டத்தில் இதற்கு தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, லோகேஷ் சர்மா, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் இந்த சதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

முஸ்லிம்கள் அதிகமாக திரளும் வழிப்பாட்டுத் தலங்களைத்தான் இவர்கள் குறிவைத்துள்ளார்கள். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்களை சேகரிப்பதற்கான பொறுப்பு கல்சங்கரா மற்றும் லோகேஷ் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுனில் ஜோஷிக்கு நிதியை திரட்டுவதற்கான பொறுப்பு. ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி கலவை வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதையும் சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.

மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா, மலேகான் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் இத்திட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.

source : http://www.thoothuonline.com/

உலகின் ஒரே 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்..!

பண்டையகால உலகில் பனை ஓலைகளிலோ, துணிகளிலோ பின்னர் காகிதங்களிலோ எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகள்தான், தினசரிகள் என்று புழக்கத்தில் இருந்து வந்தன. இந்நிலையில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் அச்சு இயந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்ஸ் கூட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட, முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது.


இது மேலும், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நவீனமாகி, பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத்தொடங்கினர். பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகமான அச்சுக்கூடம் என்பது... தினசரிகள், வார இதழ்கள் போன்றவை பிறக்கும் மிகவும் முக்கியமான இடம்..! இந்த அச்சுப்புரட்சி ஏற்பட்டபின்னர் கையெழுத்துப்பிரதி எழுதும் கலை (calligraphy) என்ற ஒன்றே இல்லாமல் ஆகி, வழக்கொழிந்து போய்விட்டது. யாரும் தினசரிகளை... அவ்வளவு ஏன்... வார, மாத இதழ்களையோ கூட கையினால் எழுதுவதில்லை. அனைவரும் எப்போதோ அச்சுக்கோர்க்க துவங்கி விட்டனர். ஆனாலும், ஐம்பது-நாற்பது வருடங்களுக்கு முன், நம் பல்கலைக்கழக பட்டங்களில் வித்தியாசமாக ஓவியங்கள் போல ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்குமே..! University Degree Certificate -- இப்படி..! நினைவு இருக்கிறதா..? இந்த சான்றிதழ்களை அதற்கென்றே உள்ள பட்டை நிப் உள்ள பேனா வைத்து தொழில்ரீதியாகவே அப்போது கையால் எழுதுவார்கள்.


(மேலே உள்ள மூன்றும் வெவ்வேறு...! அரபிகளுக்கு வனப்பெழுத்தில் ஆர்வம் மிக அதிகம்)


பின்னாளில், அதே போன்ற அச்சு, அப்புறம் கணிணி 'ஃபான்ட்கள்' என வந்ததனால் நாளடைவில் இதனை தொழில் முறையாக எழுதுபவர்களான 'calligraphers' என்று அழைக்கப்பட்டவர்களும் காணமால் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மற்ற மொழிகளை விட அரபி, உருது மற்றும் சீன எழுத்துக்கள் இந்த calligraphy அடிப்படையில் எழுதுவதற்காகவே அமைந்தது போன்ற எழுத்துக்களானதால் இம்மொழிகளில் மட்டும் இன்னும் இவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். என்னுடன் பணிபுரியும் ஒரு சவூதிக்காரர், ஒரு ' வனப்பெழுத்தர் '. (அதாவது...Colligrapher). அதற்கென்றே உரிய பேனாக்களை வைத்து எல்லார் லாக்கர் கதவுகளிலும், சேஃட்டி ஹெல்மெட்டுகளிலும், கோப்புகளின் அட்டைகளிலும் அவரவர் பெயர்களை ஆர்வத்துடன் தானாகவே அச்சு எடுத்தது போல மிக அழகாக அரபியில் 'வரைந்து' தள்ளுவார்..!

இந்த இருபத்தோராம் நூற்றாண்டில்... கணிணி பயன்பாட்டினால், டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சியில், 'அச்சுக்கோர்ப்பு' என்பது எங்கேயோ உயர்ந்துவிட்ட சூழலில், 'நாடு முழுதும் தினமும் 22,000 பிரதிகள் விற்பனை ஆகும் ஒரு தினசரி, அச்சுக்கோர்க்கப் படாமல் கையால் எழுதப்பட்டு, பின்னர் படி-அச்சு இயந்திரத்தில் பல ஆயிரம் பிரதிகள் எடுக்கப்பட்டு, இத்தனை வருடங்களாய் ஒரு 'கையெழுத்துப்பிரதி'யாகவே இன்னும் வெளிவந்து கொண்டு இருக்கிறது' என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா..? உலகிலேயே ஒன்றே ஒன்றாய்..! அதுவும் அந்த தினசரி வெளி வருவது நம் இந்தியாவில் ..! அதுவும் நம் தமிழகத்தில்..! சென்னையில்..! திருவல்லிக்கேணியில்... என்றால்..!!! ஆம்..! வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது..!

அதன் பெயர் "தி முசல்மான்"..! இது ஒரு உருது தினசரி..! இதனை 1927-ல் துவக்கியவர் சையத் அஸ்மத்துல்லாஹ். அப்போதைய சென்னை மாகான காங்கிரஸ் தலைவர் டாக்டர்.முக்தார் அஹ்மத் அன்சாரியால் இக்கையெழுத்து தினசரி பத்திரிக்கை துவக்கி வைக்கப்பட்டது. இதன் உரிமையாளர் சையத் அஸ்மத்துல்லாஹ் இறந்தபின்னர் அவர் மகன் சையத் ஃபஸ்ளுல்லாஹ் பொறுப்பேற்றார். இவர் கடந்த 2008-ல் இறந்த பின்னர், இவர் மகன் சையத் நசருல்லாஹ் பொறுப்பேற்று இருக்கிறார். இன்னும் அது கையெழுத்து பிரதியாகவேதான் வெளிவந்து கொண்டு இருப்பதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

இங்கே பணியாற்றுவோர் மொத்தமே நான்கு பேர்..! உருதில் 'காத்திப்' எனப்படும் மூன்று வனப்பெழுத்தர்கள் தினசரி, இத்தினசரியை எழுதுகிறார்கள். இந்த calligraphers-களில், ரஹ்மான் ஹுசைனி -- தலைமை வனப்பெழுத்தர் ஆவார். மற்ற இருவர் ஷபனா மற்றும் குர்ஷித் என்ற பெண்கள். இவர்களுக்கு செய்திகளை தருவது சின்னச்சாமி பாலசுப்ரமணியம் என்ற ஒரு நிருபர்.

ஒரு குழல் மின் விளக்கு, இரண்டு கூரை மின் காற்றாடிகள், மூன்று குமிழ் மின் விளக்குகளுடன், 1950-ல் அமெரிக்காவின் ஒரு ஓய்ந்துபோன தினசரியிடம் இருந்து ஃபஸ்ளுல்லாஹ் வாங்கிய, ஒரு பிரதி எடுக்கும் இயந்திரத்தத்துடனும் (மேலே உள்ள படம்), 800 சதுர அடியில் ஒரு அறையில் இந்த அலுவலகம் இன்னும் இயங்கி வருகிறது.

தினசரியில் மொத்தம் நான்கே பக்கங்கள். முதல் பக்கம் தேசிய-சர்வதேச செய்திகளும், மற்ற இரு பக்கங்களில் உள்ளூர் செய்திகளும் கடைசி பக்கத்தில் விளையாட்டு பற்றிய செய்திகளையும் எழுதுகிறார்கள். இவர்களுக்கு, ஒரு பக்கம் எழுத 60 ரூபாய் ஊதியம். இந்த தினசரியின் விலை: 75 காசு..!


'பத்திரிக்கை உலகில் குறிப்பாக அச்சுத்துறையில் இவ்வளவு தொழில்நுட்பப்புரட்சி ஏற்பட்டபின்னும் ஏன் இப்படி பழங்கால வழக்கத்தில் இன்னும் கையால் தினசரிகளை எழுதுகிறீர்கள்..?' என்று இவர்களை கேட்டால்..." உருது மொழியை கையால் எழுதுவது என்பதே ஒரு சிறந்த கலை; அதை நாங்கள் விரும்பி ஏற்று ரசித்து செய்கிறோம்" என்கிறார்கள்..!

இப்படியும் இயல்பான மனிதர்கள், எளிமையாக நம்முடன் வாழ்கிறார்களே..! மொழியார்வம் என்றால் இதுதானோ..! ஆச்சர்யம்தான்..!

source : http://pinnoottavaathi.blogspot.com/2011/03/blog-post_20.html

சனி, 19 மார்ச், 2011

அனைத்து இயக்கங்களும் திரண்டதால் மேலப்பாளையம் குலுங்கியது!

IMG_1009

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் காதியானிகளுக்கு எதிராக அனைத்து இயக்க மற்றும் சமுதாய தலைவர்களும் மற்றும் ஆலிம் உலமாக்களும் ஒரே மேடையில் தோன்றி மாபெரும் இறுதி நபித்துவ பாதுகாப்பு மாநாடு – சரியத் பாடுகாப்பு பேரவை சார்பாக மேலபாளையம் பஜார் திடலில் வைத்து பல தடைகளை மீறி பல இன்னல்களுகிடையே நடைபெற்றது. இதற்கு அனைத்து இயக்க தலைவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

இந்த மாநாட்டில், காதியானிகளுக்கெதிராக பல தீர்மானங்கள் ஏற்றப்பட்டது. அனைத்து முஸ்லீம் இயக்கங்களும் ஒன்று திரண்டதால் மேலப்பாளையம் குலுங்கியது.

வெள்ளி, 18 மார்ச், 2011

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு


அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

2) ஆம்பூர்

3) இராமநாதபுரம்


thanks to : tmmk.in

புதன், 16 மார்ச், 2011

கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு Part-01

1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின் மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது.அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.

இதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

விடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.

1) இந்திய தேசிய காங்கிரஸ்,
2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது.

இன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது.

1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது. பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம்.

காங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார்.

திமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது.

முஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்!

1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக் கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர். இது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள்.

1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது.

1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட் டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர்.

காயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக் குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

தமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.

ஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.

சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற் காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத்; திமுக வெற்றியும் பெற்றது.

இந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத்? இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.

“சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார். காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந் தன. இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று? கேட்ட போது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில். அரசியல் வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்”

என்று எழுதி வைத்துள்ளார் துபாஷ். காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர் களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும்.

மேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். வலிமை யை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது.

‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” “முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார்.

மீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது.

தாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம்.

திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார்.

இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பி னார்கள்: முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே?

கருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல! வளர்பிறை!” என்றார். சமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின.

1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறி னார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கிய மானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலை வனாக நினைத்தது.

கருணாநிதி தோல்வி பள்ளத் தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப் பிடித்தது சமுதாயம்.

எம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல் பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது.

இந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன?

-இன்ஷா அல்லாஹ் தொடரும்...

ப.அப்துல் சமது

source : tmmk.in

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுல் அன்சாரி அவர்கள் அதிரை நிருபருக்காக அளித்த பிரத்தியேக நேர்காணல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று தமிழக அரசியல் அரங்கில் குறிப்பிட்டு பேசப்படும் முஸ்லீம் அரசியல் கட்சிகளில் ஒன்றான தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுல் அன்சாரி அவர்கள் 11-மார்ச்-2011 வெள்ளிக்கிழமை காலை நம் அதிரை நிருபருக்காக அளித்த பிரத்தியேக நேர்கால்.

இந்த நேர்காணலில் நம்முடன் ஐக்கிய அரபு அமீரக துபாய் மண்டல மர்கஸ் கிளை தலைவர் அதிரை அஸ்ரஃப் மற்றும் துணைத் தலைவர் ஷஹீதுல்லாஹ் மற்றும் சார்ஜா மண்டல நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிரைநிருபர்: அவசர அவசரமாக அ.தி.மு.க.வுடன் அடைக்கலம் பெற்றுள்ளதாக பரவலாக பேசப்படுகிறதே இதனைப் பற்றி தங்களின் கருத்து என்ன ?

தமீமுல் அன்சாரி: அவசர அவசரமாக என்ற அந்தக் கேள்வியே தவறானது தேர்தல் தேதி அறிவித்த அந்த நேரத்தில் ஏதாவது ஒரு கூட்டணில் அடைக்கலமாவது என்பது அவசர அவரமாக எடுத்த முடிவாக இருக்கும், ஆனால் மனிதநேய மக்கள் கட்சி ஏழுமாதங்களுக்கு முன்பாகவே அனைத்திந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதாவின் அழைப்பின் பேரிலேயே அதனை ஏற்று முறையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதனால், நிதானமாக கூட்டணியிலே நாங்கள் இணைந்தோம். எனவே அவசர அவசரமான கூட்டணி என்பது தவறானது, இன்றைய சூழலில் அனைந்திந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியிலே எங்களது அணி இருந்து கொண்டிருக்கிறது. அந்த அணிதான் 200 மேற்பட்ட தொகுதிகளில் இன்ஷா அல்லாஹ் வெற்றியை பெறும்.

அதிரைநிருபர்: எவ்வகையான நிபந்தனைகளை வைத்து மூன்று தொகுதிகளைப் பெற்றீர்கள் ?

தமீமுல் அன்சாரி: அனைந்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஒரு நியாயமான தொகுதிகளைப் பெறுவதிலே பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்தோம். ஆனால் இன்றைய அரசியல் சூழலில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கக் கூடிய சூழல் தமிழகத்திலே ஏற்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு தமிழகத்தின் "ஹோஸ்னி முபாரக்"காக இருக்கக் கூடிய கலைஞர் கருணாநிதியும், மன்னராட்சிபோல தமிழகத்தில் சுரண்டிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தினரையும் அகற்றுவதுதான் எங்களுடைய முதல் செயல் திட்டமாக இருக்கிறது. அந்த அடிப்படையில பல்வேறு பெரிய கட்சிகளெல்லாம் எங்களது கூட்டணியில் வருகை தந்து கொண்டிருந்த காரணத்தினால், நாங்கள் ஒருசில தொகுதிகளை குறைக்க வேண்டிய ஒரு சூழல் உருவானது.

குறைந்தது 15 தொகுதிகளின் பெயர்கள் பட்டியலை செல்வி ஜெயலலிதா அவர்களிடம் கொடுத்து, அதிலிருந்து 12 தொகுதிகளை நேரடியாக எங்களுக்கு வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம். அவர்கள் பேச்சு வார்த்தை குழுவினருடன் தொடர்ந்து பேசுங்கள் அவர்கள் இறுதி செய்வார்கள் என்றும் சொன்னார்கள். அதன் பிறகு ஐந்து சுற்று பேச்சு வார்த்தைகள் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினருடைய குழுவுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் குழுவுக்கும் நடைபெற்றது. அதன் அடிப்படையிலே கடைசியாக விட்டுக் கொடுங்கள் என்று சொல்லும்போது, ஏழு தொகுதிகள் என்று இறங்கி வந்தோம். பிறகு சூழ்நிலைகள் மிகவும் நெருக்கடியாக இருக்கிறது பல்வேறு அமைப்புகளுக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று வழியுறுத்திச் சொன்னார்கள். கடைசியாக தமிழகத்திலே மூன்று தொகுதிகளும் புதுச்சேரியிலே ஒரு தொகுதியும் தருவதாக அவர்கள் சொன்னார்கள் இதனை ஏற்பதா வேண்டாமா என்ற பல்வேறு சிந்தனை பொறுப்பு எங்கள் மத்தியிலே ஏற்பட்டது. அந்த நேரத்திலே மீண்டும் தனித்து போட்டியிடலாமா அல்லது மூன்றாவது அணி அமைக்கலாமா எனது போன்ற பல்வேறு கருத்துகளை பல சகோதரர்களால் முன் வைக்கப்பட்டது. ஆனால் சமுதாயத்தில் பெரும்பாலான சகோதர்கள், சமுதாய ஆர்வளர்கள், அரசியல் விரும்பிகள், ஜமாத்தார்கள் வந்து கலந்து கொண்டு நீங்கள் எதிர்பார்த்த ஆறு அல்லது ஏழு எண்ணிக்கை கிடைக்காத நிலையில், இந்த மூன்றும் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியையும் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை காரணம் மீண்டும் தனித்து நிற்பது ஆபத்தானது. விஜயகாந்த் போன்ற பெரிய கட்சிகளே தனித்து நிற்கக் கூடிய நிலையில் இல்லை. எனவே அரசியல் விழிப்புணர்வு இல்லாத இச்சமூகத்தில் இதுபோன்ற முடிவுகளை நாம் எடுப்பது தற்போது நல்லதல்ல, முதலில் நல்ல தொடக்கமாக வைத்துக் கொண்டு அதிமுகவுடன் இணைய வேண்டுமென்றும் வேண்டுகோள்களையும், நிர்பந்தங்களையும் அறிவுத்தல்களையும் சொன்னார்கள்.

பலநேரம் நாம் கட்சி அமைப்பை நடத்தினாலும் எந்த சமூகத்தை முன்வைத்து நாம் சமுகப் பணி செய்கிறோமோ அந்தச் சமூகத்தின் பெரும்பான்மையோரின் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது அந்த அடிப்படியிலே இந்த மூன்று மற்றும் ஒன்று மொத்தம் நான்கு தொகுதிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதே நேரம் இந்த நான்குத் தொகுதிகளை நீங்கள் குறைவானது என்று நினைத்து விடக் கூடாது, 1991க்கு பிறகு ஒரு முஸ்லீக் கட்சிக்கு தனி சின்னத்தில் நான்கு தொகுதிகள் கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை. இங்கே காணாமல் போன முஸ்லீம்களுடைய அரசியல் கண்ணியத்தை முதன்முறையாக் மீட்டிருக்கின்றோம். இதில் முழு திருப்தி இல்லாவிட்டாலும் ஒரு நல்ல தொடக்கமாக கருதுகிறோம், எதிர்காலத்திலே கூடுதல் தொகுதி என்ற இலட்சியத்தை அடைவோம்.

அதே நேரத்தில் இன்னொன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் மனிதநேய மக்கள் கட்சிகளை விட புகழ் பெற்ற பல்வேறு கட்சிகளின் இன்றைய நிலை என்னவென்று பார்த்தோமென்று சொன்னால் பிரபல நடிகர் சரத்குமாருடைய கட்சி தமிழகத்தில் பத்து மாவட்டங்களிலே முழுமையான ஒருங்கிணைப்பாக வைச்சிருக்காங்கன்னு சொல்லலாம் அவர்களுக்கே இரண்டு தொகுதிகள்தான் கிடைத்திருக்கிறது. அதேமாதிரி பத்து பதினைந்து மாவட்டங்களில் இருக்கும் டாக்டர் கிருஷ்னசாமி பிரபலமான தலைவர் பல்வேறு தேர்தல்களை சந்தித்தவர் அவருக்கே இரண்டு தொகுதிகள்தான் கிடைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலைகளை பார்க்கும்போது மனிதநேய மக்கள் கட்சி நான்கு தொகுதிகளை சொந்த சின்னத்தில் பெற்றிருப்பதும் மிகப் பெரிய ஒரு தொடக்கம் என்பதை இந்த முஸ்லீம் சமுதாயம் பாராட்டுகிறது.

இது மட்டுமல்லாமல் இந்தச் சமுதாயத்தினுடைய பல்வேறு கோரிக்கைகளை செல்வி ஜெயலலிதாவிடம் வைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு 3.5 சதவிகித இட ஒதுக்க்கீட்டை எதிர்காலத்தில் கூடுதலாக்குவதற்கான சட்ட முன்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கின்றோம். உருது பேசக் கூடிய முஸ்லீம்கள் தமிழகத்திலே ஆறு ஏழு மாவட்டங்களிலே பரந்து இருக்கின்றார்கள் அந்த மக்களுக்கு சமச்சீர் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது அதை நிவர்த்தி செய்வதற்கான முன் முயற்சிகளைச் செய்ய வேண்டும். அடுத்ததாக திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லீம்களின் தனிப்பட்ட உரிமைகளில் சங்கடங்களும் பாதிப்புகளும் ஏற்படுத்தும் விதத்தில் தலைவர் கருனாநிதியின் அரசால் ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ள காரணத்தினாலே அவைகளையும் எதிர்காலத்திலே அதிமுக கழக ஆட்சி அமைந்த பிறகு சரி செய்ய வேண்டும் என்பது போன்ற பெரிய கோரிக்கைகளையும் ஏராளமான துணைக் கோரிக்கைகளையும் நாங்கள் வைத்திருக்கிறோம். அவைகளையெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.

அதிரைநிருபர்: தேர்தல் செலவுகளுக்கு கூட்டணிக் கட்சியிலிருந்து பணம் கிடைக்கிறதா? தேர்தல் ஆனையம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதும் வேறு எந்த வழிகளில் தேர்தல் செலவுகளுக்கு பணம் திரட்டுகிறீர்கள்?

தமீமுல் அன்சாரி: நாங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக இருந்தால் அனைந்திந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஒன்பது தொகுதியும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியும் மொத்தம் பத்து தொகுதிகளைக் கூட கொடுத்திருப்பார்கள். தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றிருப்பார்கள் ஆனால் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயல்படமுடியாது என்ற காரணத்தினால், எம்.எல்.ஏ.க்களாக பத்து பேரும் ஆகக் கூடிய வாய்ப்பு இருந்தும் கூட சமுதாயத்தின் தன்மானம் மீண்டெடுக்கப் படவேண்டும் என்ற சொந்தச் சின்னம், குறைவான தொகுதிகள் கிடைத்தாலும் பரவாயில்லை, தேர்தல் நிதி அவர்கள் தராவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலையைத்தான் எடுத்திருகின்றோம். எனவே எங்கள் கூட்டணியிரிடம் இருந்து பத்து பைசாவைக் கூட பெறவில்லை என்பதை ஊரறிந்த உண்மையறிந்த அரசியல் அறிவறிந்த அனைவருக்கும் தெரியும்.


இரண்டாவது, இந்த தேர்தல் செலவுகளை எப்படி செய்யப் போகிறீர்கள் என்று கேட்டீர்கள், எங்களுடைய தாய் கழகமான த.மு.மு.க. பதினாறு ஆண்டுகளை கடந்து பதினேழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. எங்களுக்கு அம்பானிகளோ, டாட்டாக்களோ, வளைகுடாவில் இருக்கும் பெரும் முதலாளிகளோ உதவி செய்யவில்லை, சாதாரண கூலித் தொழிலாளிகள் நடுத்தர மக்கள் சிறு வணிகர்கள் சிறு முதலாளிகள் என்று சமுகத்தின் சாமானிய மக்கள் அளிக்கும் நிதியை வைத்துதான் எங்களது தாய் கழகமான த.மு.மு.க.வை நடத்தி வருகிறோம் அந்த மக்களின் நிதியைக் கொண்டுதான் இன்ஷா அல்லாஹ் தேர்தலையும் சந்திப்போம்.

அதிரைநிருபர்: போட்டியிடும் தொகுதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல் உள்ளதா?

தமீமுல் அன்சாரி: நாங்கள் தனிநபர் சார்ந்த அமைப்பல்ல தனிநபர் துதிபாடுவதையும் தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய ஒரு பேரமைப்பிலிருந்து வெளியே வந்த ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் எங்களுடைய எந்த முடிவாக இருந்தாலும் மாநில செயற்குழுவிலே ஆலோசனை செய்து அதன் பின்னால் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவால் முடிவு செய்து, அதை நாங்கள் அறிவிப்போம் 15ம் தேதி எங்களுடைய மாநில செயற்குழு கூடி ஆலோசிக்கிறது 16ம் தேதி எங்களுடைய உயர்நிலைக் குழு கூடி அநேகமாக 17ம் தேதி வேட்பாளர் பட்டியலை இன்ஷா அல்லாஹ் அறிவிப்போம்.

அதிரைநிருபர்: இறையச்சமுள்ள முஸ்லீம் ஒருவர் உங்களின் கூட்டணிக்கு எதிரணியில் போட்டியிடுகிறார் அவரை ஒரு முஃமீன் என்று ஏன் ஆதரிக்கக்கூடாது? இங்கு உங்கள் அரசியல் கொள்கை முக்கியமா அல்லது இஸ்லாமிய கோட்பாடு முக்கியமா?

தமீமுல் அன்சாரி: இது ஒரு சமூகப் பொறுப்புள்ள கேள்வி என்பதை நான் மறுக்கவில்லை, கடந்த காலங்களில் நாங்கள் எப்படியெல்லாம் செயல்பட்டோம் என்பதை புரிஞ்சுகிட்டீங்கன்னா இந்தக் கேள்விக்கான விடைகளை சொல்வேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திராவிட முன்னேறக் கழகம் சார்பாக சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் போட்டியிட்டார்கள் அங்கேயே அப்துர்ரஹ்மானுக்கு எதிராக வேட்பாளர்களை நிற்கவைக்கும் வாய்ப்புகள் இருந்தது, நாங்கள் அதனைச் செய்யாமல் அவர்களுக்கு ஆதரவைத் தெரிவித்தோம். அதேபோல் தேனி பாராளுமன்றத் தொகுதியிலே சகோதரர் ஹாருன் அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டார்கள் அவருக்கு எதிராகவும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் அவர்களையே ஆதரியுங்கள் என்றும் சொன்னோம். கடந்த காலங்களிலே ஒரு நல்ல அணுகுமுறையை நாங்கள் பின்பற்றி இருக்கிறோம் ஆனால், வெற்றி பெற்ற பிறகு அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களே ஆதரித்தார்கள் என்று கூட அல்லாமல், சமுதாய உணர்வுடன் நன்றி சொல்ல வேண்டும். மாறாக வெற்றி பெற்ற பிறகு எங்களுக்கு எதிரான வேலைகளையும் எல்லா செயல் திட்டங்களையும் அறிவித்தார்கள், செயல்படுத்தினார்கள் பல இடங்களிலே. சகோதரர் ஹாரூன் அவர்கள் சென்னையிலே நமது தொண்டர்கள் மீது வன்முறையை ஏவும் நிலையெல்லாம் ஏற்பட்டது, இதையெல்லாம் பார்க்கின்றபோது நமக்காக ஒருகாலத்தில் களத்தில் நின்று எதிர்பாராமல் வாக்களித்தார்களே ஆதரவளித்தார்களே அவர்களுக்கு எதிராக நாம இப்படி செய்து கொண்டிருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியும் அவர்களிடமில்லை. எனவே இப்படிப்பட்டவர்கள் இருக்கும்போது நாங்கள் ஏன் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற கேள்வி எங்களுடைய ஆதரவு தரப்பிலிருந்து எழுகிறது.

இப்போ நாங்கள் அரசியல் கட்சியை உருவாக்கியிருக்கின்றோம் இப்படி நாங்கள் ஒரு முடிவை எடுத்தால் எங்கள் கட்சியில் இருக்கக் கூடிய கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட்டணிக் கட்சியில் இருக்கக் கூடிய பல்வேறு சமூக அமைப்பினரும் என்ன செய்வார்கள் நாம் போட்டியிடும் தொகுதியில் அவர்களின் சாதியைச் சார்ந்தவர்கள் வேட்பாளராக போட்டியிட்டால் அவர்கள் அதேபோல் ஒரு முடிவை எடுத்தால் என்னவாகும் எனவே ஒரு முஸ்லீம் ஒப்பந்தத்தை காப்பாற்ற வேண்டும். அந்த அடிப்படையில் கூட்டணியில் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கின்றோம் யார் எப்படியிருந்தாலும் நம்முடைய கூட்டணியில் இருக்கும் வேட்பாளரை ஆதரவு அளிப்பது என்று வாக்குறுதி அளித்திருக்கின்றோம், ஒரு முஸ்லீம் வாக்குறுதியை காப்பாற்றக் கூடியவனாக இருக்க வேண்டும் அந்த அடிப்படையிலே எங்களது கூட்டணியில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் வாக்களிப்போம் வாக்கும் சேகரிப்போம், இதில் இரட்டை வேடங்களுக்கு இடமில்லை.

அதிரைநிருபர்: ம.ம.க.போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று (இன்ஷா அல்லாஹ்).. எதிரணியினருக்கு அதாவது தி.மு.க கூட்டணிக்கு பெரும்பான்மை பெற தேவையிருக்கும் பட்சத்தில் உங்களது ஆதரவை கோறினால் உங்களது நிலைபாடு என்ன ?

தமீமுல் அன்சாரி: இன்ஷா அல்லாஹ் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எங்களுடைய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது... தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை நம்புவதே ஒரு பகல் கனவு, கானல் நீர், அத்தைக்கு மீசை முளைத்திருப்பதுபோல்.

அதிரைநிருபர்: ஒற்றுமை ஒற்றுமை என்று வாய்கிழியப் பேசும் இயக்கங்களும் சமுதாய அமைப்புகளும் எதைச் சாதித்தன? த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வையும் சேர்த்தான் கேட்கிறோம் ?

தமீமுல் அன்சாரி: சமுதாய ஒற்றுமை அவசியம், சமுதாய ஒற்றுமை தேவை என்ற கருத்து நமது சமூகத்திலே அரிதுபெரும்பான்மையாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அந்தக் கருத்திலே நூறு சதவிகிதம் உடன்பாடுண்டு. ஆனால் நடைமுறையில் இந்த உலகம் இந்த ஊர் எப்படி இருக்கிறது இங்கு கூற வேண்டும் ஒரு பதினைந்து நபர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தை ஒற்றுமையாக வழிநடத்த முடியாத நிலைதான் இன்றைய சூழல் இருக்கிறது.

ஒரு பத்தாயிரம் இருபாதிரம் மக்களைக் கொண்ட அதிராம்பட்டினத்தில் கூட ஒரு ஐக்கிய ஜமாத்தை நிறுவி நடத்த முடியவில்லை. அப்படியிருக்கும்போது தமிழகத்தில் ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமாக முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஒரு ஊரிலே ஐக்கிய ஜமாத்தை நிறுவுவதற்கு ஒரு போராட்டத்தை நடத்தும்போது ஐம்பது இலட்சத்திற்கும் மேல் பரந்து விரிந்த தலைமையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படுத்துவது என்பது ஒரு எளிதான காரியம் அல்ல. ஆனாலும் எப்படியாவது அதனை நெருங்கி விடவேண்டும் என்று பாடுபடுகிறோம், அவர்களுடைய கருத்தினை ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதான் நான் சொல்வது 2001லே குஜாரத்திலே கலவரம் ஏற்பட்டபோது தமிழகத்திலே எல்லா முஸ்லீம் அமைப்புகளோடு இணைந்து ஒரே மேடையிலே கலந்து கொண்டு எங்களது கண்டனங்களை வலியுறுத்தியிருக்கிறோம், அதே போன்று திருமண பதிவுச் சட்டத்தை கலைஞர் கருனாநிதி அவர்களின் அரசாங்கம் கொண்டு வந்து முஸ்லீம்களுடைய தனியுரிமைகளுக்கு எதிராக செயல்பட்டபோது அனைத்து முஸ்லீம் அமைப்புகளோடு கலந்து இது குறித்து அமைச்சர் துரைமுருகன் அவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான அனைத்து முஸ்லீம் அமைப்புகள் அடங்கிய குழு சென்று அவர்களை சந்தித்து அதில் திருத்தம் செய்வதற்கான முழு முயற்சியும் செய்தது. அதுவும் அடுத்து திருவிடைச்சேரி எனும் ஊரிலே ஒரு படுகொலைச் சம்பவம் நடைபெற்றபோது அது ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் கண்ணியத்தை பாதிக்கக் கூடிய செயலாக இருக்கிற காரணத்தினாலே 19 முஸ்லீம் அமைப்புகள் இணைந்து இது குறித்து பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளிலும் நாங்கள் ஈடுபட்டோம்.

இப்போதும்கூட நாங்கள் தொகுதிகளைப் பெற்ற பிறகு சகோதர அமைப்புக்களை நாங்கள் சென்று சந்தித்து வருகிறோம். நாகர்கோவிலுக்குச் சென்று ஜாக் அமைப்பின் தலைவர் கமாலுதீன் மதனி அவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சந்தித்து பேசினார்கள். அடுத்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகத்திற்கு சென்று அதன் தலைவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் சந்தித்து பேசினார்கள். தொடர்ந்து பாக்கர் அவர்களுடைய இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பிடமும் பேசியிருக்கிறோம், ஜமாத்துல் உலமா அமைப்புடனும் பேசியிருக்கிறோம், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் சந்தித்து பேசியிருக்கிறோம் இதேபோன்று ஜமாத்தே இஸ்லாமி, ஜமியத்துல் அஹ்லே ஹதீஸ் போன்ற சகோதர அமைப்புகளோடு சந்தித்து பேசி அரசியலிலே ஒரு ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். இவைகளெல்லாம் ஒற்றுமைக்கான முயற்சியின் அடித்தளங்கள் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்குப் பிறகு இதனை மேலும் வலுவூட்டுவதற்கு மனிதநேய மக்கள் கட்சியும் எனது பெருமைமிகு தாய் கழகமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கும் இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர்: நேற்றைய தினம் பேட்டி அளித்த முஸ்லீம் லீக் மகளிர் அமைப்பு சகோதரி ஃபாத்திமா முசாஃபர் அவர்கள் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார் இச்சந்தர்பத்தை பயன்படுத்தி அவரை உங்கள் அணிக்கு சேர்த்துக் கொள்ள முயற்சிப்பீர்களா?

தமீமுல் அன்சாரி: முஸ்லீம் இயக்கங்கள் எந்தக் காலத்திலும் பிளவுபடுவதை நாங்கள் விரும்பவில்லை பல்வேறு அமைப்புகள் செயல்படலாம் அவர்கள் மத்தியிலே மாற்றுக் கருத்துகள் இருக்கலாம் தவறு கிடையாது. ஆனாலும் முஸ்லீம் லீக் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களால் உருவாக்கப்பட்ட நீண்ட நெருங்கிய அரசியல் பாரம்பரியமிக்க ஒரு கட்சி அந்தக் கட்சிக்கு மூன்று தொகுதிகளை உதயசூரியன் சின்னத்தில் கொடுத்ததே ஒரு அவமானம் என்பது முஸ்லீம் சமுதாயத்தின் கருத்து. மூன்றைக் கொடுத்து அதில் ஒரு தொகுதியைப் பறித்த கலைஞர் கருனாநிதியுடைய சர்வாதிகாரப் போக்கை முஸ்லீம் சமுதாயம் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கிறது இந்த நிலையிலே கலைஞர் கருனாநிதி முஸ்லீம் சமுதாயத்தை எப்படியெல்லாம் கிள்ளிக் கீரையாக நினைக்கிறார் என்பதற்கு உதாரணம்.

அவரால் கொங்கு முன்னேற்றக் கழகத்திலிருந்து ஒரு தொகுதியை கூட பெற முடியவில்லை எல்லோரும் சொல்கிறார்கள். கொங்கு முன்னேற கழகத்தின் மதிப்பு என்பது ஐந்துதான் என்று, காங்கிரசை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு கூடுதலாக இரண்டு தொகுதிகளை கொடுத்து ஏழு தொகுதிகளாக அதிகரிச்சு கொடுத்திருக்காங்க, அதிலிருந்து ஒரு தொகுதியை பறித்திருக்கலாம். அல்லது திருமாவளவன் என்பவருடைய சக்தி என்பது ஏழு அல்லது எட்டு தொகுதிகள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் அவர்களிடமிருந்தாவது ஒன்றை கேட்டுப் பெற்றிருந்திருக்கலாம். டாக்டர் ராமதாஸுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்தார் ஸ்டாலின் அவர்கள் லண்டன் செல்வதற்கு முன்பாக ப.ம.க.விற்கு மொத்தமே அதிகபட்சமாக இருப்பத்தி ஐந்து தொகுதிகள்தான் தரமுடியும் என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர் லண்டனில் இருக்கும்போது கலைஞர் கருனாநிதி காங்கிரஸ் கட்சியை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே முப்பத்தி ஓர் தொகுதியை கொடுத்திருக்கிறார் அவர்களிடமிருந்தாவது அந்த மூன்றை எடுத்து பெற்று கொடுத்திருக்கலாம். ஆனால், மிக மிக குறைவாக முஸ்லீம் லீக்கிற்கு கொடுத்த மூன்றில் ஒன்றை பறித்துக் கொண்டது மிக மிக அநியாயம் சகோதரி ஃபாத்திமா முசாஃபர் அவர்களின் குரல் ஒட்டு மொத்த முஸ்லீம் லீக் தொண்டர்களின் குரலாகத்தான் இருக்கிறது. இது பற்றி முஸ்லீம் லீக் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். முஸ்லீம் லீக்கிற்கு இந்நிலை ஏற்பட்டதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்திடவில்லை, வருத்ததில் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

அதிரைநிருபர்: அனைத்து முஸ்லீம்களின் வாக்குகளை ஒன்றிணைக்க வழிகள் என்ன ? எப்போது முஸ்லீம்கள் தங்களது பலத்தைக் காட்ட வாய்ப்பு ஏற்படும் ? அதற்கு ம.ம.க.வின் செயல் திட்டங்கள் என்ன ?

தமீமுல் அன்சாரி: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம் முஹல்லாக்களில் முஸ்லீம் வாக்குகளின் நிலைமை பற்றி மனிதநேய மக்கள் கட்சியில் என்ன நினைக்கிறது என்பது பற்றி அவைகளையெல்லாம் வெளிப்படையாக இப்போது விவாதிக்க முடியாது களத்தில் மிகவும் நிதானமாக சமூக மக்களின் பேராதவோடு அதனை நாங்கள் செய்து காட்டுவோம் அந்த வாக்குகள் எங்களது அணிக்கு வருகின்ற காரனத்தினால்தான் திராவிட முன்னேற்ற கழக தலைமியிலான அணி 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோற்கப்போகிறது என்பதை காலம் நிரூபிக்கும். இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர்: பிரிந்த சகோதரர்களிடம் அதாவது த.த.ஜ. சகோதரர்களிடம் சமாதானம் பேசி சுமூகமான சூழல் உருவக்க ஏன் பகிரங்கமாக இதுவரை நீங்கள் முயற்சி செய்யவில்லை ? இதுவரை தாங்கள் சந்தித்த அமைப்புகள் பற்றி சொன்னீர்கள் அவர்களிடமும் சமுதாய நலன் கருதி ஒற்றுமைக் கரம் நீட்டலாமே ? கருத்து வேறுபாடுகளை தூக்கியெரிந்து, விட்டுக் கொடுத்துதான் போனால் என்ன ? இதனை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?

தமீமுல் அன்சாரி: விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை என்பது ஒரு பழமொழி. அந்தப் பழமொழியை நாங்கள் உணர்ந்திருக்கிறோம், நாங்கள் வலைந்து போக தயராக இருக்கிறோம், அதற்காக முதுகை ஒடித்துக் கொள்ள முடியாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களிலே தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்துடம் ஆழமான கருத்து வேறுபாடுகள் இருந்தது என்பது உண்மை, மறுக்க முடியாது.

ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் அதை சுமூகம் செய்வதற்கான சில முயற்சிகளை நாங்கள் செய்தும் வந்திருக்கிறோம். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது மனிதநேய மக்கள் கட்சி துவங்கப்பட்ட பிறகு எங்களது அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையான மக்கள் உரிமையிலே பார்த்தால் அவர்கள் மீது வைத்த விமர்சனங்கள் ஒன்று அல்லது இரண்டாகத்தான் அல்லது மூன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு அவர்கள் மீதான எந்த விமர்சனமும் செய்யாமல் நாங்கள் மவுனமாக இருந்து எங்களுடைய களத்திலே எங்களுடைய பணிகளை செய்து வந்தோம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 2009 தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவும் அதற்கு பின்னாலும் அவர்கள் எங்கள்மீது சுமத்திய அநியாமான குற்றச்சாட்டுகளும் எங்களுக்கு அவர்கள் அளித்த தொந்தரவுகளும் எங்களைப் பற்றி அவர்கள் எழுதிய கீழ்த்தரமான மூன்றாம் தர விமர்சனங்களும் கொஞ்ச நஞ்சமல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள். அதையும் மீறி நாங்கள் மவுனம் சாதித்தோம், ஆனால் அந்த மவுனத்தை பலவீனமாவர்கள் என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து இவர்கள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் ஓர் எல்லையுண்டு, அவர்கள் எல்லை மீறிப் போய்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இன்னும் சொல்லப் போனால் அவர்களுடைய மாநாடு ஜூலை 4ம் தேதி ஒன்று சென்னையிலே நடைபெற்றது அந்த மாநாட்டிற்கு எதிராக எந்த வேலையும் நாங்கள் செய்யவில்லை இன்னும் சொல்லப் போனால் எங்களிடம் சிலர் கேட்டபோது கூட அவர்கள் நடத்தினால் நல்லவிதமாக நடத்தட்டும் என்றுதான் சொன்னோம். மறைமுகமாகக் கூட நாங்கள் தொந்தரவு செய்யவில்லை. சகோதரர் பி.ஜே. அவர்களே ஆன்லைன் பி.ஜே.யில் குறிப்பிட்டிருந்தார்கள் என்று உங்களுகே தெரியும் அந்த அளவுக்கு செயல்பாடுகளில் எங்களது கன்னியத்தை செயல்படுத்தினோம்.

இன்னும் சொல்லப் போனால் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஒரு பத்து நாட்களில் சகோதரர் பி.ஜே.அவர்களை கொலை செய்வதற்காக ஒரு செயல் திட்டம் ரகசியமாக முன்னிருத்தப்பட்டது அந்தச் செய்தி எங்களுக்குத் தெரிய வந்த பிறகு உடணடியாக பி.ஜே.அவர்களுக்கு தெரியப்படுத்தி உரிய பாதுகாப்புகளை செய்ய வேண்டும் என்று சொல்லி நானும் எனது தாய் கழகத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்களும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் தலைமை நிர்வாக குழு அறிவுறுத்தலின் அடிப்படியில் அன்றே உளவுத்துறை ஐஜியாக இருந்த சகோதரர் ஈஸ்வர மூர்த்தியை நேரில் சந்தித்து பி.ஜே.அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்றும் சொன்னோம். காரணம் என்னவென்று கேட்கும்போது எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இதுபோன்ற வன்முறைகளை பயங்கரவாதங்களை ஒருபோதும் யாரும் யார்மீதும் ஏவிவிடக் கூடாது என்று உறுதியாக இருக்கிறோம். நீங்கள் அவருக்குரிய பாதுகாப்பை கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டோம். அந்த நேரத்திலே சகோதரர் பி.ஜே அவர்கள் பாக்கருடன் இருந்தார்கள் எங்களுடைய பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள், பாக்கர் அவர்களை தொடர்பு கொண்டு பி.ஜே.அவர்களுக்கு பாதுகாப்பை கொடுங்கள் அவர் வழக்கமாக இருக்குமிடத்தில் இருக்காமல் வேறு இடத்தில் இருக்க வையுங்கள் என்றும் அறிவுறுத்தினோம். அப்படியெல்லம் நாங்கள் எங்கள் நல்ல எண்ணத்திலே பல்வேறு கால கட்டங்களிலே நெருங்கியிருக்கிறோம்.

இன்னும் சொல்லப் போனால் 2004ம் வருடம் என்று நினைக்கிறேன் கும்பகோனத்தில் அவர் ஒரு மாநாடு நடத்தியபோது பத்திரிக்கையலே ஊடகத்துறையிலே அந்த அமைப்பைச் சேர்ந்த எ.எஸ்.அலாவுதீன், எம்.ஐ. சுலைமான் என்பவர்களின் பெயராலே வெடிகுண்டு கடிதங்கள் வந்தது. இதைப் பற்றி கூட எங்களது பத்திரிக்கையிலே அந்த அமைப்புக்கும் எங்களுக்கும் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் இத்தகைய பங்கரவாத வன்முறையெல்லாம் செய்ய மாட்டார்கள் என்று உறுதிபட எங்களது மக்கள் உரிமையிலே தெரிவித்தோம். இப்படியாக பல்வேறு காலகட்டங்கள் எங்களது நல்ல எண்ணங்களை அவர்களிடம் தெரிவித்து வந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் கடந்த ரமளானிலே ஆன்லைனில் இணையதளத்திலே சகோதரர் பி.ஜே.அவர்கள் அவருடைய உயிருக்கு ஆபத்து என்று கூறி அதற்கு த.மு.மு.க.வில் உள்ள்ச் பலரும் உடந்தை என்பது போல எழுதியது மிகப் பெரிய கோபத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. நாங்கள் எங்களது வேலையப் பார்த்துச் சென்று கொண்டிருந்த தருணங்களில் வீண் பழிகள் போட்டு கொந்தளிப்பான சூழலை உருவாக்க சகோதரர் பி.ஜே.செய்தார்கள்.

அடுத்து திருவிடச்சேரி சம்பவத்திலே அவர்கள் நடந்து விதமும் அதன் பின்னால் அளித்த தன்னிலை விளக்கவும் சமுதாய மக்களிடையே பெரிய கொந்தளிப்பைதான் ஏற்படுத்தியது. அன்றை நிலையில் எங்களது மாற்றுக் கருத்தையும் தெரிவித்தோம் அதைகூட அவர்கள் ஜனநாயகபூர்வமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு மோசமான எதிர் எழுத்துத் தாக்குதலையும் செய்தார்கள்.

இப்போது கூட மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் போர்க் கொடி தூக்க சபதம் செய்திருக்கிறார்கள் இத்தகைய நிலையில் அவர்களிடம் எப்படி நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த முடியும் ? நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். கொஞ்ம் கூட நல்லெண்ணமில்லாமல், கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாமல், கொஞ்சம் கூட பண்பாடு இல்லாமல் பெருந்தன்மையில்லாமல் குர்ஆன் ஹதீஸ் பேசிக் கொண்டு இப்படிப் பட்ட சமுதயத்தை பிளவுபடுதும் வேலைகளை செய்பவர்களிடம் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதில் நம்பிக்கையில்லை, அதனை நாங்கள் தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை சமுதாயமும் விரும்பவில்லை. சமுதாயத்திலுள்ள 99% மக்கள் நம்மோடு இருக்கிறார்கள், அவர்களுடைய ஆதவரவும் எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ஓரிறைவனின் கிருபையும் எங்களுக்கு இருப்பதாக நம்புகிறோம் அந்த நம்பிக்கையோடு வெற்றிவாகை சூடுவோம், இன்ஷா அல்லாஹ்..

அதிரைநிருபர்: கொள்கை வேறுபாடு உள்ள ஒரே காரணத்திற்காகத்தான் ம.ம.க.வை எதிர்க்கிறோம் என்று த.த.ஜ.சகோதரர்கள் சொல்லி வருகிறார்கள், சரி அப்படி என்னதான் கொள்கை வேறுபாடுகள் உள்ளது த.மு.மு.க.வுக்கும் த.த.ஜ.வுக்கும் ?

தமீமுல் அன்சாரி: கொள்கை வேறுபாடு என்னவென்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும் அவர்களின் கொள்கை என்ன என்பதை அவர்கள் இதுவரை தெளிவாக வெளியிடவில்லை அபூஅப்துல்லாவோடு என்ன கொள்கை வேறுபாடு என்று அவர்கள் விளக்கவேண்டும், S. கமாலுதீன் மதனியோடு என்ன கொள்கை வேறுபாடு என்று விளக்க வேண்டும், இதுபோன்று பல்வேறு பாக்கர் அவர்களோடு என்ன கொள்கை வேறுபாடு என்று விளக்க வேண்டும், எல்லோரிடமும் கொள்கை வேறுபாடுதான் காரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதைப் பற்றி ஆழமாக நான் ஆழமாக விமர்சிக்க விரும்பவில்லை, ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன் மனசாட்சிக்குரிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் தேர்தலிலே மனிதநேய மக்கள் கட்சியை தோற்கடிப்போம் என்று அவர்களுடைய தலைவர் சகோதரர் பி.ஜெயுனுலாபிதீன் அவர்கள் செய்திருக்கக் கூடிய இந்த சபதம் உண்மையிலேயே உங்களது மனசாட்சிக்கு உடண்பாடு உள்ளதா என்று கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள் அதாவது இணைவக்கக் கூடிய எத்தனையோ முஸ்லீம் வேட்பாளர்களை நாங்கள் ஆதரித்து வெற்றுபெற செய்வோம் என்று சொல்லுகிறார்கள். முழுக்க முழுக்க எந்த கொள்கையும் இல்லாத பல்வேறு சமூகங்களை சார்ந்த வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் எல்லா மேடைகளிலும் இறைகொள்கை அடிப்படியிலும், தெளிவு அடிப்படையிலும், சமுதாய நலனின் அடிப்படையிலும் இணைந்து இருக்கக் கூடிய மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களை தோர்கடிப்போம் என்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பி அவர்கள் (ததஜ சகோதரர்கள்) சரியான முடிவு எடுவில்லை என்று சொன்னால் நிச்சயமாக நாளை மறுமையிலே அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

அதிரைநிருபர்: நிறைவாக ஒரு கேள்வி, இதுவரை தமிழக இஸ்லாமிய கட்சிகளிடம் இல்லாத தெளிவும் ம.ம,க.விடம் அப்படி என்னதான் இருக்கிறது ?

தமீமுல் அன்சாரி: எங்களுடைய அரசியலே மாறுபட்டதாகத்தான் இருக்கும், உதாரணத்திற்கு தனிமனித துதிபாடலை முன் வைத்துதான் எல்லா அரசியல் கட்சிகள் செயல்படுது, ஆனால் நாங்கள் ஒரு கூட்டுத் தலைமையை முன்வைத்து செயல்படுகிறோம். தனிநபரின் ஆளுமைகள் வெளிப்படும் அவர்களின் திறன்கள் வெளிப்படும், ஆனால் தனிநபரின் முடிவிலே அல்லது சார்ந்தே எங்களது கட்சி செயல்படுவது இல்லை.

இரண்டாவதாக எங்களிடம் இந்த பணக்காரர்களிடம் மண்டியிடக் கூடிய அரசியலில் நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இப்போதிருக்கும் முஸ்லீம் கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்றால், தங்களுக்கு சீட்டு கிடைத்த உடனே யாராவது கோடீஸ்வரங்க கிட்ட அல்லது கட்சிக்கு தொடர்பில்லாத உறுப்பினரல்லாத, கட்சித் தொடண்டர்களுக்கும் தொடர்பில்லாத ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த தொகுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்று வாருங்கள் என்று சொல்லக் கூடிய சூழலைதான் சமுதாயத்தில் இருக்கிறது.

ஆனால் எங்களுடைய கட்சியில அப்படியெல்லாம் இல்லை குறைந்தது மூன்றாண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும், அவரது உழைப்பை உதாரணத்திற்கு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் அவர் பங்கு பெற்றாரா, சிறைச் சாலைகளுக்குச் சென்றார்களா ? சமுதாய பிரச்சினைகளுக்கு எத்தகைய போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்ற அளவுகோளின் அடிப்படையில்தான் எங்களது வேட்பாளர்களை முடிவு செய்கிறோம்.

மூன்றாவது விசயம் என்னவென்றால் எங்களுடைய கட்சியிலே வேட்பாளர்கள் செலவு செய்ய முடியாது உதாரணத்திற்கு தமிழ்நாட்டிலே மூன்றும் பாண்டிச்சேரியிலே ஒன்றும் நான்கு தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென்றால் போட்டியிடும் வேட்பாளர் ஒரு ருபாயைக் கூட அவரது சொந்தக் காசில் செலவிடக் கூடாது என்பதை எங்களது கட்சியின் கொள்கையாக வைத்திருக்கின்றோம். காரணம் சொந்த காசை செலவு செய்யும் போது அந்த வேட்பாளர் வெற்றி பெற்று வரும்போது தான் செலவு செய்த காசை எடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. பல பேர் ஊழலை ஒழிப்போம் என்று சொல்வார்கள், ஆனால் ஊழலை ஒழிப்பதற்கான அடித்தளத்தையே நாங்கள் சரியாக செய்து திட்டமிட்டு வருகிறோம். அந்த அடிப்படையிலே கட்சி பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி அந்த நிதியிலிருந்துதான் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகள் செய்யப்படும்.

இவைகளெல்லாம் நம் முஸ்லீம் சமுதாயத்திலே ஒரு மாறுபட்ட நல்ல அரசியலாக கருதுகிறோம். அடுத்ததாக இன்றைக்கு பொதுவாகவே அரசியல் என்பது இந்தியாவிலே ஆயிரம் அல்லது ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்ப வலையங்களுக்குள் சுற்றி வரக்கூடிய அரசியலாக சுற்றி வரக்கூடிய சூழலை பார்க்கிறோம். ஒன்று அவர்களிடம் பணம் இருக்க வேண்டும், அல்லது பழைய பாரம்பரியம் இருக்க வேண்டும், அல்லது அரசியலிலே அவர்களது முன்னோர்கள் யாராவது இருந்திருக்க வேண்டும். இப்படிப் பட்ட நிலையில் உள்ள குடும்பங்கள்தான் அரசியலிலே முதன்மைபடுத்தி முன்னிலைக்கு வரக்கூடிய நிலை எல்லா அரசியல் கட்சிகளிடமும் உண்டு அது முஸ்லீம் கட்சிகளிடமும் இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியில் மட்டும்தான் பொருளாதர பின்னனிக்கோ, பாரம்பரிய பின்னனிக்கோ, குடும்ப பின்னனிக்கோ, குடும்ப அரசியல் பின்னனிக்கோ இடமில்லாமல் யாரெல்லாம் சமுதாயத்திற்கா தியாகம் செய்தார்களோ, உழைத்தார்களோ ஆற்றல் இருக்கிறது அறிவு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் முன்னுரிமை என்ற அடிப்படையிலே வாய்ப்புகளையும் பொறுப்புகளையும் நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

இதை எல்லாம் ஒரு மாறுபட்ட நல்ல அரசியல் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மிக முக்கியமாக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நிறைய வாய்ப்புகளைத் தருகிறோம் பெண்களுக்குரிய மரியாதையை கொடுக்கிறோம் ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய வேலையை செய்கிறோம் அதனுடைய ஒரு அம்சம் தான் தேர்தலிலே நாங்கள் தொகுதிகளைப் பெற்ற பிறகு சமுதாயத்தில் இருக்கக் கூடிய பல்வேறு அமைப்புகளோடு கலந்துரையாடி வருகிறோம் இத்தகைய முன் முயற்சிகளை கடந்த காலங்களில் வேறு எந்த முஸ்லீம் அமைப்புகள் யாரும் செய்யவில்லை என்பதை இந்த நேரத்திலே நினைவூட்ட கடமைபட்டிருக்கிறேன்.

எனவே ஒரு மாறுபட்ட அரசியலை, நல்ல அரசியலை, மனிதநேய அரசியலை முன்னிருத்தி, முஸ்லீம் சமுதாயத்தின் எல்லா சகோதரர்களும் அமைப்புகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து, கட்சி வேறுபாடுகளை மறந்து நான்கு தொகுதிகளிலும் (3+1) நாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்த சமுதாயத்தின் பேராதரவை நாங்கள் கேட்கிறோம். குறிப்பாக அதிராம்பட்டினம் என்பது தமிழகத்திலே இருக்கக் கூடிய முஸ்லீம் ஊர்களிலே முதல் ஐந்தில் பிரதானமாக இருக்கக் கூடிய ஊர் மறுப்பதற்கில்லை அதிராம்பட்டினத்து சகோதரர்களை இந்த இணைய தளத்தின் வாயிலாக சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். அதிராம்பட்டினம் சகோதர்கள் உலகமுழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறார்கள் தங்களுடைய அந்த வாய்ப்பினை பயன்படுத்தி எங்களுக்கான ஆதரவை தளத்தை அதிகமாக முன்னிருந்த வேண்டும் என்று இந்த அதிரைநிருபர் வலைத்தளத்தின் வாயிலாக நான் தலைமையின் சார்பாக உங்களை கேட்டுக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
source : /www.tmmk-ksa.com

திங்கள், 14 மார்ச், 2011

தோல்வி பயம் தொகுதி மாறும் கருணாநிதி!!

சென்னை: பிப் 13, பல முறை எம்.எல்.ஏ., வாகவும் 5 முறை முதல்வராகவும் இருந்து வரும் கருணாநிதி இந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது. சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதற்கான தேர்தல் பணிகளை துவக்க கட்சி தொண்டர்களுக்கு தலைமை கழகம் சிக்னல் கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. ஏன் இவர் சேப்பாக்கம் தொகுதியைவிட்டு மாறுகிறார் என்றால் அங்கு முஸ்லிம்கள் வாக்கு அதிகம் அது இந்த முறை நிச்சயம் கருணாநிதிக்கு கிடைக்காது என்பாதால்தான்.

அதே போன்று, துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் அன்பழகன், காங்., கைவசம் வைத்துள்ள நாகை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதியைத் தேர்வு செய்துள்ளாராம். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் உறவினர் ஒருவர் அங்கு சேர்மனாக இருப்பதால், அவரது ஆதரவோடு அந்தத் தொகுதியில் எளிமையாக ஜெயித்து விடலாம் என, பன்னீர்செல்வம் ஆலோசனை கூறி யுள்ளார்.


துணை முதல்வர் ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, பாளையங்கோட்டை தொகுதி பக்கம் போய்விடலாம் என திட்டமிட்டுள்ளார்.


ஆற்காடு வீராசாமி சென்னை புறநகர் பகுதியில் இருந்து செங்கல்பட்டு தொகுதியைத் தேர்வு செய்து வைத்துள்ளார்.


இப்படி தி.மு.க., வின் மூத்த தலைகள் சென்னையை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதற்கு காரணம், சென்னையில் தி.மு.க., கவுன்சிலர்களின் அடாவடி அதிகரித்து, மக்கள் எரிச்சலில் இருப்பதால், பாதகமாகி விடுமோ என்ற அச்சமே காரணம் என கூறப்படுகிறது

சிந்திக்கவும் : ஈழ தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்த தமிழர் தலைவர் என்று சொல்லிகொள்ளும் மு.கருனாதியையும் அவரது கூட்டணியையும் தோற்கடிக்க தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் தோல்வியை கொடுக்கவேண்டும். அப்போதுதான் முள்ளி வாய்காலில் கொல்லப்பட்ட நமது தொப்புள் கொடி உறவுகளின் படுகொலைக்கு இதுதான் முதல் பழிவாங்கும் நடவடிக்கை. அடுத்த நடவடிக்கைகள் இனிமேல் தொடரும் என்பதற்கு இது ஒரு முகவுரையாக இருக்கட்டும். திருவாரூர் இல்லை தமிழகத்தின் ஏந்த மூலையில் இவர் நின்றாலும் தோற்பது நிச்சயம்.

source : http://www.dinamalar.com/ , http://www.sinthikkavum.net/

ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம்

புதுடெல்லி,மார்ச்.14:உலகில் அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதிச் செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவை முந்திய இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஸ்டாக்ஹோம் இண்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஆய்வில் இந்தியாவை ஆயுத இறக்குமதியில் முதலிடத்திலிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டுவரை ஒன்பது சதவீதம் அனைத்து சர்வதேச ஆயுதங்களையும் இந்தியா இறக்குமதிச் செய்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதேவேளையில், சீனா ஆறு சதவீதம் மட்டுமே சர்வதேச அளவில் ஆயுதங்களை இறக்குமதிச் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா
உள்நாட்டில் ஆயுதங்களை தயாரிப்பதாக ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஃபெலோ ஸீமன் வெஸ்மான் கூறுகிறார்.

அமெரிக்கா ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.

32.5 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கியதை விட 40 சதவீதம் அதிகமாகும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் 70 சதவீதத்தையும் இந்தியா ஆயுத இறக்குமதிக்காக பயன்படுத்துகிறது. இவற்றில் 82 சதவீத ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதிச் செய்யப்படுகின்றன.

ஆயுத இறக்குமதி ஒப்பந்தங்களை மேற்கொள்ள சமீபத்தில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகைப் புரிந்ததாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.

கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியாவுக்கு வந்த பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் காமரூன் 57 ஹவுக் நவீன ட்ரைனர் ஜெட் இறக்குமதிச் செய்வதற்கான 1.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை உறுதிச்செய்தார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வருகை தந்த பொழுது 10 சி-17 ட்ரான்ஸ்போர்ட் ஏர்க்ராஃப்ட் இறக்குமதிச் செய்வதற்கான 4.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அறிவித்தார். பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு வருகைத் தந்தபொழுது பிரான்சிலிருந்து மிராஜ் 2000 ஃபைட்டர் ஏர்க்ராஃப்ட் வாங்குவதற்கான 2.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை உறுதிச்செய்தார்.

இதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகைத் தந்த ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் தனது சுற்றுப்பயண வேளையில் ஐந்தாவது தலைமுறை ஃபைட்டர் ஏர்க்ராஃப்டுகள் உருவாக்குவதற்கான ஒருங்கிணந்த திட்டத்தை துவக்கிவைத்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் ,