ஞாயிறு, 20 மார்ச், 2011

முஸ்லிம் அமைப்புகளுடன் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு சட்டமன்றத் தேர்தலுக்கு ஆதரவு திரட்டினர்

E-mail Print PDF
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன்...

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன்...

சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அதிமுக கூட்டணிக்கும் ஆதரவு கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் ஆகியோர் சந்தித்து வருகிறார்கள்.

ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் நிர்வாகிகளுடன்...

ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் நிர்வாகிகளுடன்...



கடந்த 4.3.2011 அன்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். 5.3.2011 அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ம.ம.க. தலைமை நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினர்.