செவ்வாய், 13 நவம்பர், 2012

ஆந்திராவில் பா.ஜ.க.வுடன் "காங்கிரஸ்" கள்ளக்கூட்டு : "மஜ்லிஸ் கட்சி" விலகியதால் ஆட்சிக்கு வேட்டு!



சார்மினாரை ஆக்கிரமித்து கோவில் கட்டும் பா.ஜ.க.வுக்கு, காவல்துறை மூலம் காங்கிரஸ் ஆதரவளித்ததையடுத்து, ஆக்கிரமிப்புக் கோவிலுக்கு மேற்கூரை போடப்பட்டது.

நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கு எதிராக ஆளுகின்ற அரசே செயல்பட்டு, கலவர திட்டத்துடன் களமிறங்கியுள்ள சங்க்பரிவாரங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்து "மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன்" (M.I.M.) கட்சி, காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது.

M.I.M. கட்சிக்கு ஆந்திராவில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் உள்ளனர்.

294 உறுப்பினர்கள் கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 152 உறுப்பினர்கள் உள்ளனர்.

இது, பெரும்பான்மைக்கு தேவையான 148 உறுப்பினர்களின் எண்ணிக்கை யை விட 4 உறுப்பினர்கள் அதிகம் என்றாலும், இவர்களில் பலர் "ஜெகன் மோகன் ரெட்டி"யின் YSR காங்கிரசுக்கு ஆதரவானவர்கள்.

மேலும், YSR காங்கிரஸ் இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கு தேசம் (TDP) கட்சிக்கு 86, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (TRS) கட்சிக்கு 17 உறுப்பினர்களும், சி.பி.ஐ. 4, மார்க்சிஸ்ட் 1, பாஜகவுக்கு 3 இடங்களும் உள்ளன.

மஜ்லிஸ் கட்சியின் முடிவை வரவேற்றுள்ள YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் கூறுகையில், காங்கிரசுக்கு எதிராக "நம்பிக்கையில்லா தீர்மானம்" கொண்டு வந்தால் ஆதரிப்பதாகவும் வாக்களித்துள்ளனர்.

மஜ்லிஸ் கட்சி, காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்பட்டால் தற்போதைய கணக்குப்படி (7+86+17+17+4+1= 132) 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கும் என்பதோடு, காங்கிரசில் உள்ள "ஜெகன்" ஆதரவாளர்களும் சேர்ந்து யோசித்தால், காங்கிரஸ் அரசு கவிழுவது நிஜம்.

- மறுப்பு மீடியா செய்தி

திங்கள், 12 நவம்பர், 2012

கூத்தாநல்லூர் நகர தமுமுக மமக செயல் வீரர்கள் கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )11-11-2012 அன்று காலை 11 மணி அளவில் கூத்தாநல்லூர் நகர தமுமுக மற்றும் மமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மமகநகரசெயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார், நகர செயலாளர் காதர் முஹினுதீன், மன்னை ஒன்றிய செயலாளர் ஜெஹபர் அலி,முன்னாள் நகர செயலாளர் நைனாஸ் அஹமது முன்னிலை வகித்தார்கள். நகர கூட்ட
த்தில் தமுமுக,மமக, மற்றும் மாணவர் இந்தியா நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அஸ்லம் ஸ்போர்ட்ஸ் கிளப், நியூ பிரெண்ட்ஸ் கிளப் , இஸ்மாயில் கிரிக்கெட் கிளப், ஜமாலியா பிரெண்ட்ஸ், மரக்கடை இஸ்லாமிய பொதுநல கமிட்டியை சர்ர்ந்த நண்பர்கள் தங்களது அமைப்பை தமுமுகவோடு இணைத்து கொண்டனர்.
நகர கூட்ட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. முன் அறிவிப்பின்றி மின்வெட்டை ஏற்படுத்தும் மின்சாரத்துறையை வன்மையாக கனடிக்கிறது.
2. டெங்கு காய்ச்சல் பரவமால் தடுக்க கூத்தாநல்லூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
3. வரும் நவம்பர் 22 ஆம் தேதி திருவாரூர் மன்னார்குடி சாலையில் அமைந்துள்ள லக்ஷ்மாங்குடி அரசு மது பான கடைக்கு மாபெரும் பூட்டு போடும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது
4. திருவாரூரில் டிசம்பர் 6 தர்ணா போரட்டதிற்கு கூத்தாநல்லூர் நகரத்தில் இருந்து 30 வாகனங்களில் மக்களை அழைத்து செல்வதென முடிவு செய்ய பட்டது
நிகழ்சிகளை நகர தமுமுக மாணவரணி செயலாளர் அக்பர் சலீம், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல் காதர் ஏற்பாடு செய்தனர்

முடிவில் முன்னாள் சோழ மண்டல மாணவரணி செயலாளர் அபுதாஹிர் நன்றி உரை ஆற்றினார்

ஞாயிறு, 11 நவம்பர், 2012

மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!




மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ஆம் தேதி தேச கல்விதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் கல்வித் துறையைவடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச்சென்றார்.
ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும்என்று ஆசாத் வலியுறுத்தினார்.
அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல்அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில்ஆசாத் உறுதி காட்டினார். 10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியாமுழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்தியஅமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத்இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச,கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. நமது நாட்டின் செல்வம்வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர்.1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயேகுரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்றஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார்பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரதுகுடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத்துவக்கி நடத்தினார்.
1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாகஎதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன்இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாகஇருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியாசுதந்திரத்தை வெல்கிறது (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்றநூலை எழுதினார்.சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பலஆண்டுகளைக் கழித்தார்.
இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராகவிளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார்.இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள்கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார். முஸ்லீம் லீக் கட்சி காந்தியின்உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன்பணியாற்றினார்.
தமது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல்வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான்பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில்இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சாரஉறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத்உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பானஅம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும்முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராகஇருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில்சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்றுவலியுறுத்தினார்.
பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்றுகூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாகஇருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும்தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்துபயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்கவேண்டும் என்றார்.
தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவானஅமைப்பாக மாற்றினார். 1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல்திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத்மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மைகுறித்து அவர் வேதனைப்படுவார். 1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில்ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள்தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.
இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையானபயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம்கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களைஎழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப்பிரசுரித்தது.மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரைஇந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார். தேசிய கல்வி தினமாககொண்டாடப்படும் அவரின் பிறந்த தினத்தன்று ஆசாத் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூர்வோம்.
 
tks : http://moulanaazad.blogspot.com/2008/11/blog-post_928.html

சனி, 10 நவம்பர், 2012

விஸ்வரூபம் திரைப்படம்: முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-தமுமுக கோரிக்கை



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:
பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.
கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம் பற்றி மாறுப்பட்ட கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ளன அவர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது.
இந்த சந்தேகங்களை போக்கை வகையில், இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும், மனிதஉரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கோருகிறோம்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையிலான ஊடக திரிபுகளை அனுமதிக்க முடியாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
(ஜே.எஸ். ரிபாயி)

வியாழன், 8 நவம்பர், 2012

மேட்டுப்பாளையத்தில் காவி பதற்றம்


கோவை மாவட்டம் மேட்டுப்பாலயத்தை சார்ந்த ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாலுகா செயலாளராக இருக்கிறார். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் அவரை சிலர் தாக்கி இருக்கின்றனர்.

இதை வழக்கம்போல சமூக மோதல்களாக சங்பரிவார்

அமைப்புகள் திரித்து பதற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தனி நபர மோதல்களை வன்முறையாக்க முயன்றுள்ளனர். சுற்று வட்டாரம் முழுக்க கடைகளை அடைத்து பொது மக்களை அச்சுறுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து அரசு பேருந்தை தீ வைத்து எரித்துள்ளனர். கோவை, ஊட்டி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுள்ளனர். சில இடங்களில் இந்து முன்னணியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை உடைத்துள்ளனர்.

தீபாவளி நேரத்தில் இந்து முன்னணி நடத்தும் பந்த உள்ளிட்ட வன்முறைகளால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வர்த்தக சங்கங்களும் இந்து முன்னணியினரின் நடவடிக்கைகளை வெறுத்து உள்ளனர்.

காவி மத வெறியர்களின் வன்முறைகளால் சமூக நல்லிணக்கம் கேட்டு விடக்கூடாது என கவனத்தில் கொண்டு தமுமுக துணை பொதுச்செயலாளர் கோவை உம்மர் அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறார். அங்குள்ள நிலைமைகள் குறித்து மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களிடம் மமக பொதுச்செயலாளர் அலைபேசி வழியாக நிலைமைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதிகள் காவி வெறியர்களால் பதட்ட நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டுமென தமுமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

மாபெரும் இலவச இருதய ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம்


இன்ஷா அல்லாஹ் வருகின்ற 17.11.2012 அன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் சென்னை பீ்ல்ரோத் மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இலவச இருதய ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம்

இடம் :

மத்லபுல் ஹைராத் தொடக்கப்பள்ளி, கொடிக்கால்பாளையம் ,திருவாரூர்.

முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை
முன்பதிவு செய்ய:
M.முஜிபுர் ரஹ்மான்,செல்;9965981742
I.கலிபுல்லா செல்;950095991960
ஆன்லைன் முலம் பதிவு செய்ய www.tmmkkom.in


அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
கொடிக்கால்பாளையம்,திருவாரூர் நகரம்

சனி, 3 நவம்பர், 2012

முஸ்லிம்களின் திருமணப் பதிவுச் சட்டம் எளிமைப்படுத்தப்பட வேண்டும்: அஸ்லம் பாஷா MLA வேண்டுகோள்


2012-2013 ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளுக்கான மானியக் கோரிக்கையின் போது கடந்த 1.11.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
ஒரு முக்கியமான கோரிக்கை, எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சனை. சென்ற திமுக ஆட்சியிலே மறைமுகமாக எங்கள் ஷரீயத் சட்டத்திலே கை வைத்துவிட்டார்கள் என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அதற்கு தக்க பதிலடியும் கொடுத்துவிட்டார்கள் எங்கள் சமுதாய மக்கள். முஸ்லிம்களுக்கான திருமணப் பதிவுச் சட்டம் எளிமைப்படுத்தப்பட வேண்டுமென்று நாங்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றோம். சென்ற சட்டமன்றத் தேர்தலின்போதுகூட நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அவர்களும் அதைப் பரிசீலிப்பதாகச் சொன்னார்கள் ஆகவே, வெகுவிரைவிலே தமிழகத்திலே முஸ்லிம்களின் திருமணப் பதிவுச் சட்டம் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று, இந்திய அரசியல் சாசனச் சட்டம், முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பின்பற்ற அனுமதி அளித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் கூட சென்ற மாதம் அதை உறுதி செய்திருக்கிறது. தமிழகத்திலே கடந்த 6 மாத காலமாக முஸ்லிம் பெண்கள் திருமணத்தின்போது அவர்கள் 18 வயதை முடிக்கவில்லையென்ற ஒரு காரணத்திற்காக அந்தத் திருமணத்தை சமூக நலத் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் தடுத்து நிறுத்துகின்றார்கள். ஜமாத்தினர் மீது வழக்குப் போடுவது, பெற்றோர்களைக் கைது செய்வது போன்ற பணிகளில் அரசு ஊழியர்களும், காவல் துறையும் சமூக நலத் துறையைச் சேர்ந்தவர்களும் ஈடுபடக் கூடாது என்பதை நான் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.
சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி: சட்டத்திற்கு மாறாக திருமணம் நடப்பதாக தகவல் வந்தால், பாதுகாப்பிற்காக, போலீசாரை உடன் அழைத்துச் சென்று, துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். பெண்ணிற்கு, 18 வயது பூர்த்தியான சான்றிதழைக் காட்டினால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதற்கு மாறாக இருந்தால் மட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அஸ்லம் பாஷா: ஷரீயத் சட்டத்தின்படி எங்கள் மார்க்கத்திலே பெண்கள் வயதிற்கு வந்தவுடனே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் 13 வயது 14 வயது குழந்தைகளுக்குத் திருமணம் செய்யவில்லை. 16 அல்லது 17 வயது ஆகின்ற 18 வயது நிறைவடையாத பெண்களுக்கு திருமணம் செய்கிறோம் அவ்வளவுதான். ஆனால் 16லி17 வயதில் திருமணம் குழந்தைத் திருமணம் என்பது குழந்தைத் திருமணம் கிடையாது