ஞாயிறு, 5 அக்டோபர், 2014

இந்து சகோதரர்களே எச்சரிக்கை ! எச்சரிக்கை ! !



இந்து சகோதரர்களே எச்சரிக்கை ! எச்சரிக்கை ! !
****************
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்க்காக இந்துக்களின் வீடுகளை எரித்த பா ஜ க தலைவர் கைது செய்யப்பட்டார்.
****************** 
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்க்காக இந்துக்களின் வீடுகளை பா ஜ க தலைவர் ஒருவரே எரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து
அந்த பா ஜ க தலைவர் உட்பட 36 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
குஜராத் மாநிலம் பரோடா நகர பாரதிய ஜனதா தலைவராக இருப்பவர் மனிஷ் வாக், இவர் கடந்த சில நாட்களாக இங்கு வசிக்கும் முஸ்லிம் மக்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் கலவரம் ஏற்ப்பட்டது இதையொட்டி சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரோடா நகரில் நவபுரா பகுதியில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த சிலருடைய வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது..
இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி மனிஷ் வாக் உள்பட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 36 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்து மக்கள் வீடு எரிக்கப்பட்ட வழக்கில் பாரதீய ஜனதா தலைவர் கைது செய்யப்பட்டது சில சந்தேகங்களை ஏற்ப்படுத்தி உள்ளது கலவரத்தை பெரித்தாக்க இவரே இந்து மக்களின் வீடுகளுக்கு தீ வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிரார்கள்.
செய்தி : தீக்கதிர் (05-10-14)
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ,தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை குறிவைத்து பேசி உள்ளநிலையில் இந்துக்களும்- முஸ்லிம்களும் இங்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
சங்கபரிவார சதிகாரர்கள் அரசியல் அதிகாரத்தை அடைய எதையும் செய்வார்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான வெகு மக்கள் ஊடகங்கள் இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டி கொள்ளாது.
நமது மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாக்க,
நாம் எச்சரிக்கையாக இருப்போம்!
நமது நாட்டை காப்போம் !!
ஜெய் ஹிந்த் !