செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

வியாபம் முறைகேடு பாரதீய ஜனதா முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் தொடர்பு அமபலம் முக்கிய ஆதாரம் சிக்கியது


போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொறியியல், மருத்து வம் மற்றும் நிர்வாக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த கடந்த 1982-ம் ஆண்டு ‘‘வியாபம்’’ எனும் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டது. பிறகு இந்த தேர்வு வாரியம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என பல்வேறு துறைகளுக்கும் பணியாளர்களை தேர்வு செய்யும் அமைப்பாகவும் மாறியது. வியாபம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாக கடந்த 2007-ம் ஆண்டு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அப்போது மத்திய பிரதேச மாநில கல்வி மந்திரியாக இருந்த சிவராஜ் சிங் சவுகான் இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு வியாபம் முறைகேடு பூதாகரமாக வெடித்தது. அப்போது தான் மத்தியப் பிரதேச அரசு தேர்வு வாரியத் தில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேடுகள் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமானது. இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநில ஐகோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக்குழு 2007-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை மத்திய பிரதேசத்தில் நடந்த 167 தேர்வுகளை ஆய்வு செய்தது. போலீஸ் விசாரணையில் மத்தியப்பிரதேசத்தில் கவர்னரில் தொடங்கி கடை நிலை ஊழியர் வரை பல ஆயிரம் பேருக்கு இந்த முறை கேடுகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பா.ஜ.க. காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் பணப்பரிமாற்றம் செய்து தேர்வு வாரிய பணிகளில் விளையாடி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மத்திய பிரதேச கவர்னர் ராம் நரேஷ் யாதவும் பணம் பெற்றுக் கொண்டு, சிபாரிசு கடிதம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இதுவரை சுமார் 2 ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர். மேலும் 700 பேரை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த முறைகேடு பற்றிய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைவது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அருண் சர்மா, முன்னாள் முதல்வர் டாக்டர் டி.கே.சகல்லே, டி.வி நிருபர் அக்சய் சிங், போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பணிக்கு தேர்வாகி பயிற்சி பெற்று வந்த அனாமிகா சிகர்வார் ஆகிய 4 பேர் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து மரணம் அடைந் தது வியாபம் முறைகேடு விவகாரத்தை கொந்தளிக்க செய்துள்ளது. இதுவரை வியாபம் முறைகேட்டில் தொடர்புடைய 48 பேர் மரணம் அடைந்திருப்பது மர்மத்தை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மற்றும் ஆம் ஆத்மி பிரமுகர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் வியாபம் முறைகேடை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத் தரவைத் தொடர்ந்து இந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்த 40 அதிகாரிகள் கொண்ட குழுவை சி.பி.ஐ. அமைத்துள்ளது. சி.பி.ஐ. இணை இயக்குனர் ஒருவர் தலைமையில் இந்த 40 அதி காரிகள் குழு வியாபம் ஊழல் பற்றி விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அரசு தேர்வு வாரிய முறை கேட்டில் (வியாபம்) மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர் குடும்பத்தினரும் இந்த ஊழலில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. இந்த குற்றச்சாட்டை முதல்-மந்திரி சிவ்ராஜ் சவு கான் மறுத்து வந்தார். இந்த நிலையில் முதல்- மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் மீது ஆதாரப்பூர்வமான வியா பம் ஊழல் குற்றச்சாட்டு ஒன்று பரபரப்பாக வெளியாகி உள் ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள மதன்லால் சதுர்வேதி தேசிய பல்கலைக்கழக சிலரை பணி நியமனத்துக்கு அவர் பரிந்துரை செய்து இருப்பதாக தகவல் வெளி யாகி உள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் சில தனி நபர்களை மூத்த பேராசிரியர்களாக பணி நியமனம் செய்யும்படி முதல்-மந்திரி சவுகான் தன் கைப்பட கடிதம் எழுதி கொடுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்புத் துறை செயலாளர் மூலம் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கடிதம் கொடுத்து இந்த பணி நியமனத்தை முதல்-மந்திரி சவுகான் செய்திருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.சவுகான் இதற்காக தன் கைப்பட எழுதிய கடிதத்தை தகவல் கேட்பு உரிமை சட்டத்தை பயன்படுத்தி சிலர் பெற்றுள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த பணி நியமனங்கள் செய்யப்பட் டுள்ளன. முதல்-மந்திரி சவுகான் பரிந்துரை செய்து கடிதம் கொடுத்த ஒரே நாளில் அன்றைய தினமே துணை வேந்தர் அந்த நபர்களுக்கு பதவியில் நியமித்து உத்தர விட்டுள்ளார். இந்த தகவல்களை ஆர்.டி.ஐ.யை பயன்படுத்தி சமூக ஆர்வலர் புர்னேந்து சுக்லா என்பவர் கண்டு பிடித்து வெளியில் கொண்டு வந்துள்ளார். மூத்த பேரா சிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதில் முதல்- மந்திரிக்கு கணிசமான தொகை கொடுக்கப்பட்டி ருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாபம் ஊழல் தொடர் பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் நிலையில் முதல்-மந்திரி மீதான புதிய குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பரபரப்பை உரு வாக்கியுள்ளது.
நன்றி :
http://www.dailythanthi.com/News/India/2015/08/11105117/Vyapam-scam-MP-CM.vpf

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன?



தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமன் கடந்த 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அதே தினத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் நல்லடக்கம் நடைபெற்றது.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் கலாமின் நல்லடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதைக் காண ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் யாகூப் மேமன் உடல் நல்லடக்கத்தின்போது ஊடகங் களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதற்கு ஊடகங்களும் கட்டுப் பட்டு செயல்பட்டன. இரு காரணங் களுக்காக ஊடகங்களும் யாகூப் மேமன் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டன.
முக்கியமாக அந்த இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொள்ளாமல் கட்டுப்படுத்தி வன்முறை ஏற்படாமல் தடுப்பதும் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவரின் மீது தேவையற்ற அனுதாபம் ஏற்படுவதை தடுப்பதுமே ஆகும். மும்பையில் உள்ள சில டி.வி. சேனல்கள் இதுபோன்ற மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்துவிட்டன. எனினும் அடுத்த நாளில் நாளிதழ்களில் வந்த புகைப்படங்கள், செய்திகள் மூலம் யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் தெரியவந்தது. யாகூப் மேமன் நமாஸில் 8 ஆயிரம் முஸ்லிம்கள் பங்கேற்றதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இவ்வளவு பேர் ஏன் வந்தார்கள் என்ற கேள்வி இப்போது முக்கியமாக எழுகிறது.
இதுபற்றி பாஜக மூத்த தலைவரும் திரிபுரா ஆளுநருமான தத்தகதா ராய் ட்விட்டரில் ஒரு கருத்து தெரித்தார். அதில் யாகூப் மேமனின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தவிர மற்றவர்களில் பெரும்பாலானோர் தீவிரவாதிகளாக இருப்பார்கள். எனவே இதில் உளவுத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இவ்வளவு பேர் யாகூப் இறுதிச் சடங்கில் குவிந்ததற்கு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் பரவிய தகவலும் முக்கிய காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவை தவிர யாகூப் தூக்கி லிடப்பட்டதை தொடர்புபடுத்தி வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய தகவல்கள் பரவியதாகவும், அது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. யாகூப் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் எவ்வித கோஷங்களும் எழுப்பக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்தனர். அதனால் பிரச்சினை ஏதும் இன்றி இறுதிச் சடங்கு முடிந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்படி இருக்கும்போது ஏன் இவ்வளவு போலீஸ் கெடுபிடி என்பது அடுத்து எழும் கேள்வி.
1993-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளியான யாகூப் இப்போது தூக்கிலிடப்பட்டுள்ளார். அதே ஆண்டு ஜனவரியில் மும்பையில் நடைபெற்ற கலவரத்தில் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும், 200-க் கும் மேற்பட்ட இந்துக்களும் உயிரிழந்துள்ளனர். அதற்கு ஒரு மாதம் முன்புதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
எனவே மும்பை தொடர் குண்டு வெடிப்பு என்பது வேறு பல்வேறு தொடர் சம்பவங்களுடன் தொடர்புள்ளது. இந்த சம்பவங் களில் இறந்தவர்கள் ஒருபுறம் என்றால் தொழிலை இழந்தவர்கள், காயமடைந்தவர்கள், பலாத் காரத்துக்கு உள்ளான பெண்கள், வாழ்ந்து வந்த இடத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள், வாழ் வாதாரத்தை இழந்தவர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இது தான் குண்டுவெடிப்புகளுக்கு பின்னணி.
யாகூப் தூக்குக்கு முன்பாகவும் பல சர்ச்சைகள் எழுந்தன. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவரை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டுமென்று டி.வி. சேனல்களில் பல விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனிடையே, இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவர்களில் 94 சதவீதம் பேர் முஸ்லிம் மற்றும் தலித்துகள் என்று தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரத்தை தந்தது ஒரு பத்திரிகை. இது தாம் பின்பற்றும் மதம் காரணமாகவே தாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என முஸ்லிம்கள் மனதில் உள்ள கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
பாஜக சார்ந்த மாயா கோத்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியோர் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர் என்றும் ஒருசாரார் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் தீவிரவாதம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகளுக்கு வாசகர்கள்தரும் விமர்சனத்தை படிக்கும்போது. பல இடங்களில் முஸ்லிம்கள் என்றால் நம்பத்தக்கவர்கள் அல்ல என்ற கருத்தே உள்ளது. இதனால் முஸ்லிம்களுக்கு வேலை தேடுவதில் இருந்து வீடு கிடைப்பது வரை பிரச்சினை ஏற்படுகிறது.இதுதான் இந்தியாவில் முஸ்லிம்களாக உள்ளவர்களின் உண்மை நிலை.
யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் கூடியவர்கள் அனைவரும் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்பதாலோ அல்லது, வன்முறையில் ஈடுபடவோ வரவில்லை. தாங்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அனுதாபம் தெரிவிக்க வந்தவர்கள்.

thaks : 
http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article7489835.ece?homepage=true