புதன், 27 ஆகஸ்ட், 2014

8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக வெற்றிகரமான ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது .









8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம்
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக
வெற்றிகரமான ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது ..

இதில் குறிப்பிடப்படும்நடைமுறை படுத்தும் இடைகால
ஒப்பந்தத்தத்தில் கையெழுத்து இடப்பட்டு உள்ளது

1 -காஸா மீது யூதபயங்கரவாதிகளின்முற்றுகை முழுமையாக
விளக்கப்படுவதற்க்கு ஒப்புதல்.

2-சர்வதேச நாடுகளின்மேற்ப்பார்வைகளின் கீழ் காஸா புனரமைப்பு.

3- மின்சார பிரச்சினைகளை முழுவதுமாககாஸாவின் கட்டுப்பாட்டின் கீழ்வழங்குதல் .

4- காஸாவுக்கான கடல் எல்லையில்இருந்து மீன் பிடித்தல்களை 96
இருந்து அனுமதித்தல்.

5- காஸாமீதானநிதி தடைகளை முற்று முழுதாக நீக்குதல்.

6- போர் தொடங்குவதற்க்கு முதல்எப்படி அமைதி இருந்ததோ அப்படியே அமைதியை இரு தரப்பும் தொடர்வது.

7- காஸா நிர்வாகம் தொழில் நுட்ப்பம்துறைமுகம் மற்றும் விமான நிலையம் மற்றும் நிதி. நீதி .போன்றவைகளை காஸா மக்களே சுதந்திரமாக இயக்குவது.

8- யூத பயங்கரவாதிகளால்கைது செய்யப்பட்ட பலஸ்தீன்
கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது.

source-QNN
Press- Jazwan
#JournalisticviewAbusheikMuhammed

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

அரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா?

கடியப்பட்டினத்தில் நுழைந்தபோதே சாவு வரவேற்றது. ‘அது' சாவு. மக்களின் முகத்தில் துக்கத்தைத் தாண்டி ஆக்கிரமித்திருக்கிறது பயம். துக்கத்துக்காகக் கூடியிருப் பவர்கள் குனிந்து கிசுகிசுக்கிறார்கள். ‘அது' பற்றியது இந்தப் பேச்சு. வாயைத் திறந்து ‘அது' பெயரைச் சொன்னாலே 'அது' வீட்டுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ‘அது'வோ ஈவிரக்கம் இல்லாமல் மக்களை வேட்டையாடுகிறது.
தமிழகத்திலேயே கதிரியக்கத்தை அதிக அளவில் எதிர்கொள்ளும் ஊர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறது கடியப்பட்டினம். ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் புதிதாக வெளியூர் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய சூழல் உருவாகிறது. ஒவ்வொரு மாதமும் யாரோ ஒருவருக்குப் புதிதாக ‘அது' கண்டறியப்படுகிறது. வெகு சீக்கிரம் ஒரு நாள் ‘அது' கொன்றுபோடுகிறது.
அபலைகளின் கதறல்
“ஐயா, பொறுப்புள்ள பிள்ளையா. பதிமூணு வயசுல இப்பிடி ஒரு பிள்ளையை நீங்க பார்க்க முடியாது. தாய் - தந்தை மேல அப்பிடி ஒரு பிரியம், மதிப்பு. கடலுக்குப் போயி நூறு, எரநூறுக்கு உயிரைக் கொடுத்து, அப்பன் பொழைக்கிறாம்னு சொல்லி, நல்லாப் படிச்சுக் குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிடுவேன்னு சொல்லிக்கிட்டிருந்த பிள்ளை. ஒரு நா கைய வலிக்குண்ணாம். கடுக்குண்ணாம். ஆஸ்பத்திரி போனோம். மருந்து மாத்திரை கொடுத்தாங்க. வலி கட்டுபடல்ல. பரிசோதனை பண்ணணும்னாங்க. கடைசில அதுன்னாட்டாங்க. எலும்புல வந்துடுச்சு.
ஐயா, ஒரு பாவம் அறியாத பிள்ளைய்யா. பச்ச பிள்ளைக்கு என்ன தெரியும்? ஐயோ, ஒரு கெட்ட பழக்கம், அது இதுன்னு இருந்து செத்தாக்கூட, தப்புன்னு சொல்லி ஆத்திக்கலாமே... ஏ, ஐயா, புருனோ... உன்னையே பொறுப்பே இல்லாம பறி கொடுத்துட்டேனேய்யா...”
- மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வெளிப்படும் அந்த அழுகுரல் இதயத்தைச் சுக்கு நூறாக்குகிறது.
ஒன்று, இரண்டல்ல; அங்கொன்றும் இங்கொன்றும் அல்ல; இதோ எதிர்த்த வீட்டில் ரத்தப் புற்று, அதோ பக்கத்து வீட்டில் எலும்புப் புற்று, இங்கே பின் வீட்டில் கருப்பைப் புற்று என்று கூப்பிட்டுச் சொல்கிறார்கள்.
யாருக்கும் தெரியவில்லை!
கடியப்பட்டினம் பங்குத்தந்தை செல்வராஜ், வரிசை யாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர் கள் தொடர்பான கோப்புகளை விரித்துக் காட்டுகிறார்.
“ஒவ்வொரு வருஷமும் 20 பேர் புத்துநோயால மரிச்சுப்போறாங்க. இந்தச் சின்ன ஊர்ல இதோ, ரெண்டு மாசத்துல நாலு பேர் அடுத்தடுத்து, புத்துநோயால பாதிக்கப்பட்டிருக்காங்க. கொடுமை என்னன்னா, காட்டுறதுக்கு ஆஸ்பத்திரிகூட இங்கே ஏதும் கிடையாது. ஒண்ணு திருவனந்தபுரம் ஓடணும், இல்ல, சென்னைக்கு ஓடணும். சரியான மருத்துவ வசதி, பரிசோதனை வசதி இல்லாததால, முத்துன நெலையிலதான் நோய் பாதிப்பே தெரியவருது. ஒவ்வொரு நாளும் மக்கள் வந்து கதறுறாங்க. என்ன செய்யுறதுன்னே தெரியலை” என்கிறார்.
கடற்கரை முழுவதும் பாதிப்பு
இங்கே குமரி மாவட்டத்தில் தொடங்கி அங்கே திருவள்ளூர் மாவட்டம் வரை புற்றுநோய் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கடற்கரை ஊர்களில் நுழையும்போதெல்லாம், மக்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவர்கள் சொல்லும் செய்திகள் குலைநடுங்க வைக்கின்றன. அரசுக்கோ ஊடகங்களுக்கோ இதன் தீவிரம் தெரியவில்லை. நம் கடற்கரை மக்கள் வாழ்க்கையை எந்த அளவுக்குப் புற்றுநோய் குலைத்துப்போட்டிருக்கிறது என்பதற்குச் சரியான உதாரணம் காயல்பட்டினம்.
ஒரு உயிர் ஒரு உலகம்
காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே எதிர்ப்படுகிறார்கள் புற்றுநோயாளிகள். சுப்பிரமணியன் பேருந்து நிலைய வளாகத்தில் வல்கனைசிங் தொழில் செய்கிறார். மனைவியும் புற்றுநோயாளி, மகனும் புற்றுநோயாளி. “டயருக்கு பஞ்சர் ஒட்டிப் பொழப்பு நடத்துறவங்க. பொஞ்சாதிக்கு நுரையீரல்ல புத்து. புள்ளைக்கு ரத்தத்துல புத்து. ஒரே நேரத்துல ஒருத்தரை சென்னையிலேயும் இன்னொருத்தரை மதுரையிலேயும் வெச்சுக்கிட்டுப் போராடுனேன் பாருங்க. எவ்வளவோ செலவு செஞ்சி பாத்தாச்சு. பொஞ்சாதி போய்ட்டாங்க. பிள்ளையைக் காப்பாத்தணும், அதுக்காகத்தான் ஓடிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லும் தந்தையையே பார்த்துக்கொண்டிருக்கிறான் ஐயன்ராஜ். மருத்துவச் செலவை எதிர்கொள்ள படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவோடு கடையில் உதவிக்கு உட்கார்ந்திருக்கிறான். “அப்பா ஒண்டியா எவ்ளோண்ணே கஷ்டப்படுவாங்க, பாவம் இல்லேண்ணே, என்னால பெருசா ஒண்ணும் முடியாது. ஆனா, பக்கத்துலேயே உட்கார்ந்துருக்கும்போது அப்பாவுக்கு ஒரு ஆறுதலா இருக்கு” என்கிறான், கண்ணில் ததும்பும் நீரை அடக்கிக்கொண்டு.
புற்றுக்கு எதிராகத் திரளும் ஊர்
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பாரம்பரியமான ஊர் காயல்பட்டினம். சமீப காலத்தில் மட்டும் 60 பேர் இறந்திருக்கிறார்கள்; அவர்களில் 20 பேர் புற்றுநோயாளிகள் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். அரசு கண்டுகொள்ளாத நிலையில், புற்றுக்கு எதிராக இப்போது ஊரே திரள ஆரம்பித்திருக்கிறது. ‘காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு’ என்று ஒரு குழுவை அமைத்து அறிவியல்ரீதியிலான ஆய்வுகளில் களம் இறங்கியிருக்கிறார்கள்.
“ஒண்ணுபட்ட சமூக அமைப்பு உள்ள ஊர் காயல் பட்டினம். பொண்ணு கொடுக்க, எடுக்க எல்லாமே பெரும்பாலும் இங்கைக்குள்ளேதான் நடக்கும். அதனால, இந்த நோயால பாதிக்கப்பட்டாகூட மக்கள் வெளியே சொல்லத் தயங்குனாங்க. பலர் இதை வெளியே சொல்ல விரும்புறதில்லை. ஆனா, இப்படியே போனா இந்தத் தலைமுறையையே பறி கொடுக்க வேண்டியதாம்னு சொல்லிக் களத்துல எறங்கிட்டோம்.
ஒவ்வொரு வீட்டுலேயும் எத்தனை பேர் புத்துநோயால் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு 40 தன்னார்வலர்களை வெச்சுக் கணக்கெடுத்தோம். விஞ்ஞான ரீதியா என்ன காரணமா இருக்கும்னு நிலத்தடித் தண்ணீர்ல ஆரம்பிச்சு மளிகைக் கடை சாமான்கள் வரைக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரியை அனுப்பிச்சு ஆய்வுசெஞ்சோம். புத்துநோய் மருத்துவர் சாந்தாவைக் கூட்டிட்டு வந்து இந்த அறிக்கைங்க, பாதிப்பு எல்லாத்தையும் கொடுத்து ஆலோசனை கேட்டோம். தொடர்ந்து அரசாங்கத்துக் கதவைத் தட்டிக்கிட்டேதாம் இருக்கோம். ஆனா, செவிசாய்க்க ஆள் இல்லை” என்கிறார் உள்ளூரில் மருத்துவ உதவிக்காக இயங்கும் ஷிஃபா கூட்ட மைப்பின் செயலாளரான தர்வேஷ் முஹம்மத்.
கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 125 பேருக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் கண்டறியப் பட்டுள்ளதாகக் கூறுகிறார் மருத்துவ அறிக்கைகளோடு.
ஊருக்குள் நோயாளிகளுடன் உரையாடும்போது, நோய் வேதனையைக் காட்டிலும் அரசின் புறக்கணிப்பு தரும் விரக்தி அவர்களைத் துளைத்தெடுப்பதை உணர முடிகிறது. நான்கு குழந்தைகளின் தாயான ஜீனத் தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பேசும்போது துக்கம் வெடிக்கிறது. தந்தை முஹம்மது ஹசன் சிறுநீர்ப்பை புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளான பிறகு, தாய் ஆப்பம் விற்கப்போவதாகச் சொல்லும் 12 வயது சஹர் பானு குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது மலங்க மலங்க விழிக்கிறாள். “அப்பாவுக்கு நல்லாயிடுமாண்ணே?” என்று அவள் கேட்கும் கேள்வி துரத்திக்கொண்டே வருகிறது.
தொடர்ந்து கடற்கரையோர ஊர்களில் நோயாளி களைச் சந்திக்கும்போதெல்லாம் எழும் கேள்வி ஒன்று தான்: இவ்வளவு நடக்கிறது, அரசாங்கம் என்ன செய்கிறது?
(அலைகள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

நன்றி  : http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE/article6315574.ece 

புதன், 13 ஆகஸ்ட், 2014

நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் -யுவன் சங்கர் ராஜா




நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:
"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது, அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார் ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான் உயிரோடு இருந்தார்.
எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்" எனக் கூறி ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்) எனக்குத் தந்தார். "இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது இதில் உட்கார்ந்து பார்" என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.
சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில் நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.
முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். ’எனது பாவங்களை மன்னியுங்கள் அல்லா’ என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில் ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன். ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.
படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். "நான் குரானை படிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர், "யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். ஆனால் எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக் கொண்டு, "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் சொல்வதாக எனக்குப் பல முறை தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.

மோடி மவுன சாமியாராகி விட்டார்!


 மோடி மவுன சாமியாராகி விட்டார்!

மோடி பதவியேற்று 60 நாட்கள் ஆகிவிட்டதாம். சரி இந்த 60 நாட்களில் அவர் என்னதான் செய்து விட்டார்? முக்கியமாக இந்த 60 நாட்களில் மோடி அரசியலில் ஊடகத்தின் பங்கை கட்டாயம் எழுத வேண்டும். காரணம் மோடி அரசின் குறைகளை ஒரு விழுக்காடு கூட மக்களுக்குக் கூறவில்லை. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று எனப்படும் ஊடகம் அரசின் தவறான கொள்கைமுடிவை எதிர்க்காமல் நாட்டில் ஒன்றுமே இல்லை என்பதுபோல கண்மூடி இருக்கிறது. தமிழகத்தில் இருந்தே பார்க்கலாம், தேர்தலுக்கு முன்பு மீனவர், ஈழத்தமிழர் போன்ற சிக்கல்களை மோடியின் கூட் டணிக் கட்சிகள் தான் அதிகம் பேசினர். மோடியின் எந்த பேச்சிலும் இலங்கை அல்லது மீனவர் பிரச்சனைகளை ஆழமாக பேசவில்லை; அப்போதே தெரிந்துவிட்டது மோடி மனதில் இலங்கை பற்றிய பார்வை என்ன என்பது. ஆனால் பாமக, மதிமுக, தேமுதிக இதர கூட்டணிக் கட்சிகளும் தமிழக பாஜகவும் மேடைக்கு மேடை முழங்கின.
ஈழம்
1. மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வது தொடர்கிறது.
2. இலங்கை அரசுடன் உள்ளார்ந்த நட்புறவை மேற்கொள்வது.
3. ஈழத்தில் உள்ள மக்கள் தற்போது அமைதியாக வாழ்கிறார்கள் என்றெல்லாம் பேசுவது.
4. இலங்கையில் உள்ள ஆன்மீக மற்றும் புராதன சின்னங்களைப் பாதுகாக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. ஆந்திராவில் இலங்கை அரசுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஒதுக்கீடு, தொழில் தொடங்கவாம்!
6. மூன்று முறை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் இந்தியா வந்துள்ளார். ஈழத்தமிழர்கள் பற்றி எந்த ஒரு பேச்சும் பேசவில்லை.
7. அகதிகளை திருப்ப அனுப்பும் திட்டத்திற்கு ஆதரவு.
8. அய்நாவின் அகதிகள் மறுவாழ்வு திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை.
9. ராஜபக்சேவிற்கு ஆதரவாக அய்நா குழுவிற்கு விசாவழங்க மறுப்பு
10. இலங்கையில் நடக்கவிருக்கும் இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்க விருப்பது.
தமிழகம்
11. ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு
12. பொது பட்ஜெட்டில் தமிழகம் புறக் கணிப்பு.
13. இந்தித் திணிப்பு
14. சமஸ்கிருத வாரம் கட்டாயம் என்று கொண்டு வந்தது
15. நாடாளுமன்றத்தில் தமிழக உறுப் பினர்கள் கோரிக்கை புறக்கணிக்கப்படுவது
16. நதிநீர் தொடர்பான சிக்கல்களில் அமைதிகாண்பது
16. தமிழக அணைகளையும் நதிகளை யும் கேரளாவிற்கு சொந்தமானது என அறிக்கையில் குறிப்பிடுவது.
17. தமிழக மீனவர் பிரச்சினைகள் குறித்த தொடர் கடிதங்களுக்கு இதுவரை தீர்விற்கான பதில் அளிக்காதது.
18. முக்கிய வளர்ச்சிப்பணிகளுக்கான குழுவில் தமிழ் நாட்டிற்கான பிரதிநிதித் துவம் கொடுக்காதது.
19. முக்கிய தொழில் வளர்ச்சித் திட் டத்தில் தமிழகத்திற்கு பங்கு அளிக்காதது,
20. எழுவர் விடுதலை (ராஜீவ் கொலை வழக்கு) தொடர்பான வழக்கில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்தது.
விலைவாசி
21. பணவீக்கம் தொடர்ந்து வீழ்ச்சியில் உள்ளது. 22. டாலர் 50-லிருந்து 60 ரூபாயைக் கடந்துவிட்டது.
23. ஏற்றுமதிக்கான எந்த ஒரு ஆக்க பூர்வமான செயல்திட்டமும் இல்லாமல் தேர்தல் பிரச்சார மேடைப் பேச்சு போன்றே அறிக்கை விடுவது.
24. இறக்குமதியைத் தாராளமாக்கி உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு போட்டியை ஏற்படுத்துவது.
25. பதுக்கல்காரர்கள் தங்களின் நட வடிக்கையை மிகத்தீவிரமாக்கிவிட்டார்கள், இதுபற்றி வெறும் அறிக்கையோடு நின்று விட்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது.
25. தக்காளி விலை மும்பை ரூ85 சென்னை ரூ60, டில்லி ரூ90 கொல்கத்தா ரூ85 குஜராத்தைச் சேர்ந்த சூரத் நகரில் ரூ.100 இனி தொடர்ந்து திருவிழாக்காலம் வருவதால் விலைவாசி குறைவிற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.
26. முக்கிய உணவுப்பொருள் விநியோகம் தனியார் வசம் ஒப்படைப்பு,
27. உணவுத் தானியங்களின் விலை தொடர்ந்து 17 விழுக்காடு உயர்ந்து வரு கிறது.
28. மருந்துப் பொருள்கள் தயாரிப்பு தனியார் வசம் ஒப்படைப்பு; விளைவு அத்தியாவசிய மருந்துகள் எழைகளுக்குக் கிடைக்காதது.
29. 88 விழுக்காடு மக்கள் பயன்படுத்தும் எரிவாயு உருளையின்விலை தொடர்ந்து மாதத்திற்கொருமுறை ஏற்றப்படும் என்று அறிவித்தது.
30. பெட்ரோல் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை ஏற்றம்
வளர்ச்சிப் பாதை
31. போன ஆட்சியில் இருந்த திட்டங் கள் இன்றும் அப்படியே இயக்கப்படாமல் இருப்பது,
32. கட்டுமானப்பணிக்கான அனைத்து உபயோகப் பொருள்களும் விலை உயர்ந்து விட்டதால் முக்கிய நகரங்களில் விரிவாக்கப்பணி செயலிழந்துவிட்டது.
33. பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்காதது.
34. மாநிலங்களின் வளர்ச்சிக்கான நிதிஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது.
35. வளர்ச்சிப் பணிக்கான திட்டத்திற் கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டில் காண் பிக்கப்பட்ட தொகைக்கும் தொடர்பின்மை.
36. கங்கை சுத்திகரிப்பிற்கு பல ஆயிரம் கோடி ஆனால் நாட்டின் மற்ற அனைத்து நதிகளின் பராமரிப்பிற்கு சில நூறுகோடிக்கு ஒதுக்கீடு செய்தது. ஆனால் விவசாயத் திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு.
37. நலிந்துவரும் தொழில்களுக்கு (கைத்தறி, குடிசைத்தொழில்) மானியம் மற்றும் பயிற்சிக்கான எந்த ஒரு திட்டமும் முன்வைக்காமை
38. முக்கியத்துறைகளில் தனியார் முழுமையாக உட்புக ஒப்புதல்.
39. அரசு கனரக தொழிற்சாலைகளின் பெரும்பான்மையான பங்குகள் தனியார் வசம்
40. அந்நிய நேரடிமுதலீடு முழுமையாக் கப்பட்டது.
பாதுகாப்புத் துறை
41. பாகிஸ்தான் 4 முறை போர்நிறுத்ததை மீறியதாக கூறப்படுவதற்கு இதுவரை அரசுத்தரப்பில் பதிலில்லை.
42. பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 11 இராணுவவீரர்கள் மற்றும் 5 பொது மக்கள் உயிரிழப்பு.
43. சீனா தனது புதிய வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்த்தது.
44. இலங்கையில் சீனாவின் விமான பழுதுபார்க்கும் தளம் அமைப்பதைக் கண்டு கொள்ளாமை.
45 கச்சத்தீவு இலங்கையின் சொத்து என நீதிமன்றத்தில் கூறியது.
46. ராணுவத்திலும் தனியார் முதலீடு,
47. கப்பற்படையில் தொடந்து நடக்கும் விபத்துகள் குறித்து இதுவரை எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காதது,
48. சீனா அத்துமீறி இந்தியப்பகுதிகளில் தனது நிலைகளை அமைத்தது குறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமை,
49. எல்லையில் கண்காணிப்பை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு முக்கியத் துவம் கொடுக்காதது,
50. அதி முக்கியத்துறையான பாதுகாப்பு போன்ற முக்கிய அமைச்சகத்திற்கு தனி அமைச்சர் நியமிக்காமை.
தடுமாற்றம்
51. இந்திய காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதிகொடுத்தது,
52. ரெயில்வே பட்ஜெட்டில் பயண சீட் டின் விலை ஏற்றிவிட்டு, கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று நிர்ணயம் செய்து மக்களைக் குழப்பியது,
53. தங்க நாற்கர சாலைப் பணிகள் வடமாநிலங்களில் இன்றும் பாதியிலேயே இருக்கும் போது வைரநாற்கரச்சாலை என அவசரகதியில் அறிவித்தது. 54. விலையேற்றம் மற்றும் மக்கள் விரோத கொள்கைத் திட்டங்களை அறி வித்துவிட்டு, முந்தைய அரசின் மீது பழி போடுவது,
55. மதரீதியாக மொழிச்சிக்கலை உருவாக்கி கல்வித்திட்டத்தில் குழப்பத்தை விளைவிப்பது.
56, இந்தித் திணிப்பிற்கு முதல் முறை யாக நாடு முழுவதிலும் முக்கியத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது; உப்பு சப்பில்லாத காரணத்தை சொல்லி விளக்குவது,
57. வர்த்தகம் தொடர்பான எந்த ஒரு முன்னேற்பாடான ஆக்கபூர்வ நடவடிக் கைகளை இதுவரை மேற்கொள்ளாதது, 58. மத ரீதியாக ஒருபக்க சார்பு நிலையை மேற்கொண்டு வருவது
59. விளையாட்டுத்துறை முற்றிலும் புறக்கணிப்பு
60. மரபணுமாற்றம் குறித்த விவகாரத்தில் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் நட வடிக்கை எடுத்தது. மோடி அரசு கடந்த 60 நாட்களாக எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்த வில்லை. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்போனால் பத்திரிகை யாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் அளிக்க மோடியும் அவரது அமைச்சரவை சகாக் களும் பதில் கூறும் நிலையில் இல்லை. குஜராத் மாடல் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். குஜராத் மாடல் என்பது இதுதான் போலும்! தேர்தலுக்கு முன் மோடிக்காக முழக்கம் போட்டவர்கள், மோடிக்காக நன்னடத்தை சான்று பத்திரங்களை அடித்துக் கொடுத்த வர்கள் எங்கே? எங்கே? மக்கள் முகத்தில் விழிக்க முடியாமல் பதுங்கியுள்ளவர் களைத் தேடிக் கண்டுபிடியுங்கள்! கண்டு பிடியுங்கள்! கண்டுபிடியுங்கள்!!

நன்றி:  கலி. பூங்குன்றன்
கலி. பூங்குன்றன்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஹிந்துத்துவ வெறியர்களின் மதவெறி

ஒரு முஸ்லிம் கசாப்புகடைகாறரை மாட்டின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவைத்த ராஜஸ்தான் ஹிந்துத்துவ வெறியர்கள்.

புதன், 6 ஆகஸ்ட், 2014

மோடி ஒப்படைத்த நேபாள வாலிபர் ஏற்கனவே குடும்பத்தோடு இணைந்தவர் பேஸ்புக் பட ஆதாரம்

புதுடெல்லி, ஆக. 6–
நரேந்திரமோடி கடந்த ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் நேபாளம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்த பயணத்தின் போது நரேந்திரமோடி தன்னுடன் 26 வயது ஜித்பகதூர் என்ற இளைஞரையும் அழைத்து சென்றார்.
ஜித்பக்தூரின் சொந்தநாடு நேபாளம் ஆகும். 1998–ல் வேலை தேடி ராஜஸ்தான் வந்த அவர் வழிதவறி குஜராத் சென்று விட்டார். திக்கு தெரியாமல் தவித்த அவருக்கு அப்போது 10 வயது.
அவர் ஏதேட்சையாக நரேந்திரமோடியை சந்திக்க நேர்ந்தது. பகதூர் மீது இரக்கப்பட்ட மோடி அவரை தன் கண்காணிப்பில் வளர்த்து வந்தார். மோடி பிரதமரான நிலையில் பகதூரின் பெற்றோர் நேபாளத்தில் எங்கு வசிக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜித்பகதூரை பிரதமர் மோடி தன்னுடன் நேபாளத்துக்கு அழைத்து சென்று அவர் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
நரேந்திரமோடியின் . இந்த நிலையில் மோடியால் ஒப்படைக்கப்பட்ட ஜித்பகதூர், ஏற்கனவே கடந்த 2012–ம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் இணைந்து விட்டவர் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
2012–ம் ஆண்டு தன் குடும்பத்தினரை சந்தித்ததை ஜித்பகதூர் தன் ‘‘பேஸ்புக்’’ இணைய தள புத்தகத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘‘ஹாய் பிரண்ட்ஸ், இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். ஏனெனில் நான் இன்று என் வீட்டில் இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஜித்பகதூர், 2012 ஆண்டு தன் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட படத்தையும் அதில் இணைத்துள்ளார். இதன் முலம் ஜித்பகதூர் ஏற்கனவே நேபாளத்தில் உள்ள தன் குடும்பத்தினருடன் இணைந்து விட்டவர் என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் 10 வயதில் ஆமதாபாத் வந்த ஜித்பகதூர் 16 வருடங்கள் கழித்து அவரது 26–வது வயதில்தான் நேபாளம் திரும்பி இருப்பதாக கூறப்பட்டது. மோடியும் தன் டூவிட்டர் பக்கத்தில் இது பற்றி பெருமையாக கூறி இருந்தார்.
இந்த தகவல் பொய் என்று பேஸ்புக் பக்கம் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
http://www.maalaimalar.com/2014/08/06104606/Modi-handed-over-the-family-of.html

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

பிரதமரே, இயர்போனைக் கழற்றுங்கள்… சாமானியரின் குரல் கேட்கட்டும்!

 




காப்பீட்டுத் துறையில் கூடுதல் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மறுப்பதற்கான சாட்டையடி ஆதாரங்கள்!
ஆட்சியில் அமர்ந்து 60 நாட்களுக்குள்ளாகக் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 26%-லிருந்து 49% ஆக உயர்த்தும் சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது மோடி அமைச்சரவை. மாநிலங்களவையில் இன்று இது விவாதத்துக்கு வருகிறது. 2008-ல் ப.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்ட சட்ட வரைவு இது. கடந்த ஆறு ஆண்டுகளாக இதை எதிர்த்து அரசியல் செய்தது பாஜக. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற 60 நாட்களில் நிலைப்பாடு தலைகீழாகிவிட்டது. காங்கிரஸைவிட வேகமாக அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாகக் களத்தில் நிற்கிறது பாஜக.
நாடாளுமன்ற மாநிலங்களவை விவாதப் பொருளில், இந்தச் சட்ட வரைவு ஜூலை 31 அன்று இடம்பெற்றிருந்தது. அதே நாளில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரியின் இந்திய வருகையும் அமைந்திருந்தது. செப்டம்பரில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்திக்கச் செல்வதற்கான முன்தயாரிப்பு இது. அமெரிக்க-இந்திய வணிக கவுன்சிலில் தொடர்ந்து வைக்கப்படும் முக்கியக் கோரிக்கை, காப்பீட்டுத் துறையில் கூடுதல் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்பதே! ஜான் கெர்ரி இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கும்போது, அவருக்குப் பூங்கொத்து கொடுப்பதற்குப் பதிலாக இந்தச் சட்ட வரைவைத் தந்திருக்கிறார் அருண் ஜேட்லி.
கேட்பீர்களா... நீங்கள் கேட்பீர்களா?
மோடி அவர்களே! நீங்கள் செப்டம்பர் மாதம் ஒபாமாவைச் சந்திக்கும்போது, “உலகம் முழுவதும் எந்தத் தடைகளும் இல்லாமல் உங்கள் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளும் கடைவிரிக்க வேண்டும் என விரும்புகிறீர்களே! ஆனால், 2008 பொருளாதார நெருக்கடியில் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களும், 500-க்கும் மேற்பட்ட தனியார் வங்கி களும் உங்கள் நாட்டில் சீட்டுக்கட்டு சரிந்ததுபோல் திவாலாகி வீழ்ந்தது ஏன்?” என்ற கேள்வியைக் கேட்பீர்களா?
“எங்கள் நாட்டில் ஆயுள் காப்பீட்டுத் துறையை தேசியமயமாக்கி 57 ஆண்டுகளாகவும், பொதுக் காப் பீட்டுத் துறையைத் தேசியமயமாக்கி 41 ஆண்டுகளாக வும் திவால் என்ற வார்த்தையே எங்கள் காதுகளில் விழவில்லையே! ஆனால், நாங்கள் இந்தியாவில் டாடாவோடு கைகோத்துக் காப்பீட்டு இணைவினைச் செய்ய அனுமதித்த உங்களின் பிரம்மாண்ட நிறு வனம் ஏ.ஐ.ஜி., நிதி நெருக்கடிச் சூறைக் காற்றில் தடுமாறிப்போனதே! இங்கே, அரசுப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனைபற்றி பேசுகிறோம். ஆனால், உங்கள் நாட்டிலோ ஏ.ஐ.ஜி-யின் 80% பங்கு களை அரசாங்கம் வாங்கி அல்லவா நெருக்கடியிலிருந்து அதைக் காப்பாற்றினீர்கள்” என்று கேட்பீர்களா?
எல்.ஐ.சி. 57 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் திகழ்கிறது. ஆனால், இந்திய காப்பீட்டுத் துறை அந்நிய முதலீட்டுக்கு 26% என்ற வரையறையோடு திறந்துவிடப்பட்டு 13 ஆண்டுகளுக்குள்ளாக இங்கே வந்த அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி-யும், ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி-யும் வந்த வழியே திரும்பி ஓடிவிட்டன. ஆயுள் காப்பீடு என்பது பாலிசிதாரரோடு உருவாகும் நீண்ட கால ஒப்பந்தம். 10 ஆண்டுகள்கூட நீடிக்காமல் நடையைக் கட்டும் இவர்களுக்கு எதற்காக, எந்த நம்பிக்கையில் இன்னும் இன்னும் கதவுகளைத் திறக்க வேண்டும்?
இரை தேடி இங்கே…
அந்நிய முதலீடுகள் ஏதோ தர்ம சிந்தனையோடு சமூகத்தின் கடைசி மனிதருக்கும் காப்பீட்டுப் பாது காப்பைத் தருவதற்காக வருகிறது என்பதுபோல இந்திய அரசு பேசுவது பாமரத்தனமானது. உண்மையில், பன்னாட்டு காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தாய்நாடுகளில் பெரும் நெருக்கடி. வட அமெரிக்காவில் சந்தை -2.9% எனச் சுருங்கியுள்ளது. ஐரோப்பாவில் -0.6%. புகழ்பெற்ற ‘சிக்மா’அறிக்கை தரும் தகவல்கள்தான் இவை. அங்கே குளம் வற்றிப்போனதால் இங்கு இரை தேடி அவர்கள் வருகிறார்கள் என்பதே உண்மை.
இந்தியாவில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் விற்றுள்ள பாலிசிகளின் ஆண்டு சராசரி பிரிமியம் எவ்வளவு தெரியுமா? ரூ. 30,000! எல்.ஐ.சி-யின் சராசரி பிரிமியம் ரூ. 12,000. மோடிக்கு ஆலோசனை கூறும் நிபுணர்கள் இதையெல்லாம் குறிப்புகளில் எழுதவில்லையா?
கசக்கும் சிற்றூர்கள்
இந்தியாவில் 10,000 பேருக்கும் கீழே வசிக்கும் சிற்றூர்களில் காப்பீட்டு அலுவலகங்கள் திறக்கப்படும் என 2013-ல் நிதிநிலை அறிக்கையில் அப்போதைய அரசு அறிவித்தது. யாரை நம்பி இந்த அறிவிப்பு? எந்தத் தனியார் நிறுவனமாவது இந்தச் சிற்றூர்களுக்குப் போயிருக்கிறதா? முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம் பரத்தின் சொந்தக் கிராமமான கண்டனூரில்கூட எல்.ஐ.சி-தானே தன் அலுவலகத்தைத் திறந்துள்ளது. மோடியின் குஜராத்தில் எப்படி? இந்திய காப்பீட்டுத் துறையை வெறும் வியாபாரம், லாபம் என்று பார்க்கக் கூடாது. அதற்கு மேல் தேச ஒற்றுமை, பொது நீரோட்டத்தில் விளிம்பு நிலை மக்களை இணைத்தல் என்கிற உன்னத இலக்குகள் அதற்கு உள்ளன. எல்.ஐ.சி. ஊற்றி வளர்த்த விழுமியங்கள் அவை.
யாருக்காகக் கூவுகிறீர்கள்?
ஜேட்லி அவர்களே! உங்களுக்கு முந்தைய நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ள பொருளாதார ஆண்டு ஆய்வறிக்கைகளைப் புரட்டிப் பாருங்கள். காப்பீட்டுத் துறையில் கடந்த 13 ஆண்டுகளில் 26% வரையறையோடு அந்நிய முதலீடு அனுமதிக்க பட்டுள்ளதே, ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி வந்தது? எல்.ஐ.சி. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்துக்குத் திரட்டித் தந்துள்ள தொகை ரூ. 7,04,000 கோடி. காப்பீட்டுத் துறையில் 13 ஆண்டுகளில் வந்துள்ள மொத்த அந்நிய முதலீடே ரூ. 6,300 கோடிதான். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆனால், நீங்கள் மடுவின் மீது ஏறி நின்று அதுதான் பெரிது என்று கூவுவீர்கள் என்றால், நீங்கள் யாருக்காகக் கூவுகிறீர்கள் என்று கேட்க மக்களுக்கு உரிமை இருக்கிறது.
ஹீரோவுக்கே அந்த கதி!
எல்.ஐ.சி-யின் உரிமப் பட்டுவாடா விகிதம் 99.5%. உலகத்தில் எந்தக் காப்பீட்டு நிறுவனமும் செய்யாத சாதனை!
மும்பை தாஜ் ஓட்டல் மீதான தீவிரவாதத் தாக்குதல் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். அதில், தனது உயிரையே விலையாகக் கொடுத்தவர் தீவிரவாத எதிர்ப்பு அதிரடிப்படைத் தளபதி ஹேமந்த் கர்கரே. அவருடைய பாலிசி உரிமத்தை அவர் இறந்த 48 மணி நேரத்துக்குள் வீடு தேடிச் சென்று கதவைத் தட்டித் தந்தது எல்.ஐ.சி. ஆனால், அவர் ஒரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். அந்த நிறுவனமோ “எங்கள் பாலிசி விதிமுறைகளில் தீவிரவாதம் உள்ளடங் கவில்லை. அவர் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே அந்தச் செயலில் ஈடுபட்டார்’’ என்றெல்லாம் கூறி, உரிமத் தொகையை வழங்க மறுத்தது. தேசம் போற்றிய ஹீரோவுக்கே இதுதான் கதி என்றால், சாதாரண மக்களின் கதி என்ன?
இயர்போனைக் கழற்றுங்கள்!
மோடி அவர்களே! ஹை-டெக் பிரதமர் நீங்கள்! பெருநிறுவன ஊடகங்கள் உங்களைப் பாராட்டலாம். ஒபாமா உங்களுக்குத் தடபுடல் வரவேற்பை அளிக்கலாம். ஆனால், உங்கள் காதுகளில் உள்ள இயர்போனை முதலில் கழற்றுங்கள்! அதன் பேரிரைச்சலில், காப்பீட்டுப் பயனுக்காக ஏங்கும் ஒரு சாமானிய மனிதரின் குரல் கேட்காமல் போய்விடக் கூடாது.
- க. சுவாமிநாதன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர்,
தொடர்புக்கு: swaminathank63@gmail.com

நன்றி : http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6277790.ece 

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

தன் உயிரை பணைய வைத்து 15 நாள்களாக பாலஸ்தீன் ஷிபா ஹாஸ்பிடலில் காயமுற்றோருக்கு அயராமல் ட்ரீட்மென்ட் கொடுத்த நார்வே டாக்டர்





தன் உயிரை பணைய வைத்து 15 நாள்களாக பாலஸ்தீன் ஷிபா ஹாஸ்பிடலில் காயமுற்றோருக்கு அயராமல் ட்ரீட்மென்ட் கொடுத்த நார்வே டாக்டர் நேற்று முன்தினம் தன் தாய்நாட்டிற்கு திரும்பினார் ...விமான நிலையத்தில் பெரும்திரளாக மக்கள் அவரை வரவேற்றனர்
2009 பாலஸ்தீன தாக்கபட்ட போதும் இவர் அங்கே சென்று சேவை செய்துள்ளார் ..அவர் குறிப்பிடும் பொழுது இந்த தடவை இஸ்ரேல் மனுசத்தன்மை அற்று மிகவும் வெறிபிடித்தவர்களாக பச்சிளங்களையாக குறி வைக்கின்றனர் ...பல ஹாச்பிடல்களில் மருத்துவம் செய்ய முடியாபடி அடிப்படை வசதிகளை தகர்த்தும் ..ஈவு இரக்கம் இன்றி அகதி முகாம்கள் , மருத்துவமனைகள் என எல்லா இடத்தையும் அழிக்கிறார்கள் என்றார்.

நன்றி  : நாகூர் மீரான்