புதன், 29 ஆகஸ்ட், 2012

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: முன்னாள் அமைச்சர் உள்பட 32 பேர் குற்றவாளிகள்! – சிறப்பு நீதிமன்றம்!...

 2002 Gujarat Riots 32 Convicted
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 2008ம் ஆண்டு, நரோடா பாடியாவில் நடந்த கொடும் இனவெறி கலவரம் தொடர்பான வழக்கில் முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என அகமதாபாத் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ஏளது. 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோத்ராவில் நடந்த ரயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் இந்து அமைப்புகள் பெரும் வன்முறையில் இறங்கின. ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவத்தில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடந்தது. அதற்கு முதல் நாளில்தான் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டது.
28ம் தேதி பந்த் நடத்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அன்றைய தினம், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் நரோடா பாடியா என்ற இடத்தில் பெரும் திரளான விஎச்பி தொண்டர்கள் கூடினர். அவர்கள் பயங்கர வன்முறை வெறியாட்டத்தில் குதித்னர். கண்ணில் பட்ட முஸ்லீம்களையெல்லாம் வேட்டையாடினர். இதில் 97 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் 33 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கு அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை விசாரித்த கூடுதல் முதன்மை மாவட்ட நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தீர்ப்பை ஜூன் 30ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் விஎச்பி தலைவர் பாபு பஜ்ரங்கி, நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம், 29 பேரை விடுவித்து அவர் உத்தரவிட்டார்.
மாயா கோத்னானி தற்போதும் பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்கியது. மொத்தம் 70 பேர் மீது குற்றம சாட்டப்பட்டது. அதில் விஜய் ஷெட்டி உள்ளிட்ட 7 பேர் விசாரணைக் காலத்திலேயே இறந்து விட்டனர்.
மொத்தம் 327 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கெய்தான். முதலில் 46 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் 24 பேரை எஸ்ஐடி சிறப்புப் படையினர் கைது செய்தனர்.
இவர்களில் ஜாமீனில் வெளிவந்த மோகன் நேபாளி மற்றும் தேஜாஸ் பதக் ஆகிய இருவரும் தப்பி விட்டனர். இன்னும் இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் வன்முறையிலேயே ஒரே இடத்தில் அதிக அளவிலான பேர் கொல்லப்பட்டது இந்த நரோடா பாடியாவில்தான் என்பது வேதனைக்குரியது.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

உச்சத்தை அடைகிறது உணர்வு போராட்டம்!

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாகவே தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளில் பல்லாண்டுகாலமாக வாடிவரும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் குறிப்பாக பத்தாண்டுகள் கழித்துவிட்ட அனைவரையும் எதிர்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளின்போது பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டுமென்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்றைக்கு தமிழகம் முழுவது இஸ்லாமிய சமுதாய அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் போராடி வரக்கூடியதை அறிவீர்கள்... இன்றைய‌ எழுச்சிக்கான விதை மார்ச் மாதம் 30 நாள் திருப்பூரில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தால் விதைக்கப்பட்டது... எப்போதுமில்லாத வகையில் இந்த நியாயமான கோரிக்கை இப்போது பரவலாக அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டங்களால் நீதி மறுக்கப்படும்போது மக்கள் எழுச்சியே அதனை மாற்றியமைக்க இயலும் என்பதற்கு பல்வேறு உதாரணகள் உண்டு. சட்டங்கள் சாமானிய மக்களுக்கு சாத்தியமாக வேண்டுமென்பதுதான் ஜனநாயகம். ஆனால் இன்றைக்கு நாம் போராடி வரக்கூடிய கைதிகளுக்கு, சட்டம் தொடர்ந்து நீதியை வழங்க மறுத்து வருகிறது என்பதுதான் நிதர்சனம். நாம் வாழக்கூடிய நாட்டில் எல்லாமுமே அரசியலாகிவிட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்ரீதியாக பழி வாங்கப்படுகிறார்கள். கோவை கலவரத்தை காரணமாகக் கொண்டு கைது செய்யப்பட்ட பல அப்பாவிகள் இன்றைக்கு சுமார் பதினான்கு ஆண்டுகாலமாக சிறைக்கொட்டடிகளில் தங்களின் இளைமையை இனிமையான வாழ்க்கையை தொலைத்துவிட்டு நடைபிணங்களாக தங்களின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் இம்மக்களை விடுவிக்க அரசின் கவனத்தை ஈர்க்க பொதுமேடையை அமைத்தது. இதில் மதமில்லை... சாதியில்லை... அரசியலில்லை... ஆம் ஆரம்பம் முதலாக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைத்து அப்பாவிகளின் விடுதலைக்காக ஒரே மேடையில் முழக்கமிட  செய்தது.
நீதி மறுக்கபட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமில்லாது சகோதரி நளினிக்காகவும் ராபர்ட் பயாசுக்காகவும் மாதையனுக்காகவும் இம்மேடைகள் முழங்கின. தூக்குக் கயிற்றின் அருகாமையில் நின்று நீதிப்போராட்டம் நடத்திவரும் தோழர்கள் மூவரின் மரண தண்டனைக்கு எதிராகவும் வீரியமான கருத்துக்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்க மேடைகளில் பதிவுசெய்யப்பட்டது. இந்த புரட்சிப் பயணத்தில் ஆரம்பம் முதலாகவே ஆலோசனைகளையும் வற்றாத ஆதரவையும் வழங்கி வரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் அய்யா கொளத்தூர் மணி அவர்களையும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களையும், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களையும் மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் அய்யா ப.பா.மோகன் அவர்களையும் இவ்வேளையில்  நன்றியுடன் நினைவுகூர வேண்டியது கடமை.
இதே கோரிக்கையை முன்னெடுத்து கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் இந்திய தேசிய லீக் கட்சியின் பணியும் மக்களிடம் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பதினேழாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து குற்றமற்றவராக விடுதலையடைந்த தோழர் "தடா" ரஹீம், அநீதி சிறையின் அவலத்தை அனுபவரீதியாக உணர்ந்தவர் என்பதால் அவரது  இந்த கையெழுத்து இயக்கம் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்தது.
இந்த  உண்மையான கோரிக்கைக்காக உன்ன‌தமான இலட்சிய உணர்வுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத் தோழர்கள் மனதார பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களது இந்த விடுதலை பயணத்தின் இறுதி நிகழ்வு எதிர்வரும் ஆகத்து 31ம் நாள் தலைநகர் சென்னை மண்ணடியில் நடைபெறவுள்ளது. வழக்கம்போலவே இஸ்லாமிய இயக்கத் தலைவர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒருங்கிணைந்து விடுதலை முழக்கமிட இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கான இந்த அநீதியை இதுவரை ஒரு சமுதாயப்பிரசச்னையாக மட்டுமே பார்த்த தமிழக மக்கள் இப்போது இது ஒரு சமுதாயத்தின்  பிரச்சனையல்ல... அப்பட்டமான மனித உரிமை மீறல் என்கிற உண்மையை உணர்ந்துவிட்டார்கள்.
நெடுங்காலமாக சிறையில் வாடிவரும் இந்த அப்பாவிகளின் வாழ்க்கை மிக மிகக் கொடுமையானது. வயது முதிர்ந்த பெற்றோர்களை கவனிக்க வேண்டிய பிள்ளைகள் சிறையில்... பரிதாபத்திற்குரிய இப்பெற்றோரோ இன்றைக்கும் அஞ்சுக்கும் பத்துக்கும் கொடும் வெயிலில் கூலி வேலை செய்யும் பரிதாபம்... பெற்ற பிள்ளை இன்று வருவான் நாளை வருவான் என ஏங்கி ஏங்கியே இறந்துபோன தாய்மார்களும் தந்தைமார்களும் ஏராளம்... உன் தகப்பனார் என்ன செய்கிறார் என்கிற சக நண்பர்களின் கேள்வியை எதிர்கொள்ள இயலாமல் பள்ளிக்கே போகமாட்டோம் என அழுதிடும் அப்பாவி குழந்தைகள் ஏராளம்...
இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு எழுதப்படவேண்டும். அது அரசின் கருணையில்தான் இருக்கிறது. அந்த கருணையைப் பெறுவது நமது மக்கள் எழுச்சியில்தான் உள்ளது. ஆகவே எதிர்வரும் ஆகத்து 31ம் நாள் சென்னை மண்ணடியில் சங்கமித்து அப்பாவிகளின் விடுதலையை வென்றெடுக்க ஆயத்தமாகுங்கள். உங்களின் வருகையால்தான் அரசின் கவனத்தை ஈர்க்க முடியும். அதன்மூலமாகத்தான் கருணையை கட்டாயமாக்கிட முடியும்.
- வேங்கை.சு.செ.இப்ராஹீம் ( vengaiibrahim@yahoo.com)

+++++++++++++++++++++++++++++
prisoners_mannadi_640
prisoners_mannadi_641
prisoners_mannadi_643
prisoners_mannadi_642
 http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20937%3A2012-08-27-02-03-04&catid=902%3A2009-08-16-17-58-44&Itemid=268

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

முப்பது ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி! - தமுமுக-மமக முயற்சியால் சித்தாலப்பாக்கம் கபரஸ்தானுக்கு இடம் ஒதுக்கித் தந்தது அரசு!

சென்னை அருகே மேடவாக்கம் அருகிலுள்ள சித்தாலப்பாக்கத்தில் இஸ்லாமிய மக்கள் முப்பது ஆண்டுகளாக அடக்கஸ்தலம் (கபரஸ்தான்) இன்றி, இறந்தவர்களின் உடல்களை 5 கிலோமீட்டர் தூரமுள்ள மேடவாக்கத்திற்கும், சிலர் ராயப்பேட்டைக்கும் கொண்டு சென்று அடக்கம் செய்துவந்தனர். இந்தக் கஷ்டத்திற்கு ஒரு முடிவுகட்ட கடந்த முப்பது ஆண்டுகளாக முயற்சி செய்தும் பலனின்றி இருந்த நிலையில், 2008-ம் ஆண்டு, சித்தாலப்பாக்கத்தில் தமுமுக கிளை நிறுவப்பட்டது. அதன்பின் கிளைத் தலைவர் கௌஸ்பாஷா, இம்தியாஸ், இமாம்பாஷா மற்றும் கிளை நிர்வாகிகள் இப்பிரச்சனையைக் கையிலெடுத்தனர்.
இந்நிலையில், ஊராட்சித் தலைவரிடத்தில் முறையிட்டு மனு கொடுத்தனர். அதனடிப் படையில் 19.08.2008 அன்று ஊராட்சியில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு (தீர்மான எண்.40) சர்வே எண் 12/3ல் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை கபரஸ்தானுக்காக ஒதுக்கினார்கள். அந்த நிலத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்க ஜமாத் சார்பில் வசூல் செய்யப்பட்டு ஆறு இலட்சம் ரூபாய் செலவில் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டது. 90 சதவீத வேலை முடிந்த தருவாயில் சில புறம்போக்கு நில வியாபாரிகளும், இந்துத்துவ பாசிஸ்ட்டுகளும் இணைந்து வருவாய்துறையில் பொய்யான புகார் அளித்ததன் பேரில், அதிகாரிகள் அந்த காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளிவிட்டனர். இந்நிலையில், கடந்த சட்டசபைத் தேர்தலின் போது சித்தாலப்பாக்கம் தமுமுக கிளை நிர்வாகிகள் காஞ்சி வடக்கு மாவட்ட மமக செயலாளர் யாக்கூபிடம் முறையிட்டனர். யாகூப், கால்நடைத்துறை அமைச்சர் சின்னையாவை நேரில் சந்தித்து முறையிட்டார். அமைச்சர், மாவட்ட அதிகாரிகளையும், ஆர்.டி.ஓ.வையும் வருவாய்த்துறை அமைச்சரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இப்பிரச்சினையை விரைந்து, சுமூகமாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அமைச்சரின் உதவியாளர் அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்புகொண்டு பேசி வந்தார்.
மேலும் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள், எம்.எல்.ஏ கந்தன் அவர்களையும், வருவாய்த்துறை அமைச்சரையும், அமைச்சர் சின்னையா அவர்களிடமும் இப்பிரச்சினையை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதன்பின்னர் வருவாய்த்துறை அலுவலர், தாசில்தார், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து பீஸ் மீட்டிங் போட்டு 12/3 சர்வேயுள்ள இடம் நீர்நிலை ஆதாரப் பகுதி என்றும் எனவே, புதிய இடத்தைத் தேர்வு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இம்முடிவை மமக மாவட்டச் செயலாளர் யாக்கூப் அவர்களும், கிளைத் தலைவர் கௌஸ்பாஷா மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதன்பின்னர் இரு இடங்களைப் பார்த்து அதில் ஒரு இடத்தில் சர்வே எண் 12/1ல் சுமார் 30 சென்ட் இடத்தை ஒதுக்கிய தாசில்தார், இந்த இடம் இஸ்லாமியர்களின் இடுகாட்டுக்கு (கபரஸ்தானுக்கு) ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்புப் பலகையும் வைத்துவிட்டுச் சென்றார்.
ஆனால் சில விஷமிகள் இதை மறைமுகமாக தடுத்து வந்தனர். இடத்தை செயல்பாட்டுக்கு விடாமலே இருந்தது வருவாய்த்துறை. தாம்பரத்தில் நடந்த இரட்டைக்கோரிக்கை பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ அவர்கள் இப்பிரச்சினைப் பற்றி கண்டித்துப் பேசிய செய்திகள் தினத்தந்தி, தினகரன், தமிழ்முரசு, மாலைமலர் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்தது. இது அதிகாரமட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து யாக்கூப் தலைமையில் மாவட்ட செயற்குழு சித்தாலப்பாக்கத்தில் கூடி விவாதிக்கப்பட்டு அதில், வரும் வாரம் தமுமுக மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது அவர்கள் தலைமையில் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு முற்றுகைப் போராட்டத்திற்காக போஸ்டர்களும், சுவர் விளம்பரமும் செய்யப்பட்டது. இதையடுத்து தாசில்தார், 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பீஸ் மீட்டிங் நடத்தி பிரச்சினையை சுமூகமாக முடித்திட அழைப்பு விடுத்தார்.
ஆர்.டி.ஓ. எட்டியப்பன் தலைமையில் நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில், தாசில்தார், ஆர்டி.ஓ., பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர், காவல் துணை ஆணையர், ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்பது வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும், மமக மாவட்டச் செயலாளர் யாக்கூப், சலீம்கான், சௌகத் அலி மற்றும் நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். பிரச்சினை காரசாரமாக தொடங்கி, சுமூகமான முடிவுக்கு வந்தது.
12/1 சர்வே எண்ணில் வட்டாட்சியர் ஒதுக்கிய இடத்தில் மாற்றுவழியாக (கோத்தாரி கார்டன் வழியாக) இஸ்லாமிய சமூகத்தினர் அடக்கஸ்தலத்தை அமைத்துக்கொள்ள இறுதி முடிவு எடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒப்புதல் கடிதத்திற்குப் பிறகு இவ்விடம் முழுமையான பயன்பாட்டிற்கு வந்து விடும். (எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே) இதன்மூலம் ஒருவழியாக முப்பதாண்டு கால பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

ஆஸாத் காமில்

நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ

நம் நாட்டில் மிகவும் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் மிக்கதாக இருப்பது நேர்மை. இன்னவர் நேர்மையானவர் என்று யாருக்கும் சான்றளிக்க இயலவில்லை. யாரையும் நேர்மையாளர் என்று யாரும் நம்பத் தயாரில்லை என்பதாக சூழ்நிலை இருக்கிறது. இந்த நேர்மைப் பஞ்சத்தைப் போக்குவதற்காக வேண்டி சமூகதளத்தில் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமைப்புகளாகவும் உருவாகி இருக்கிறார்கள்.
ஆன்மீக, சித்தாந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்ட காரணத்தால் மக்கள் பேராசைப் பிடித்து லஞ்சம் பெறவும், ஊழல் செய்யவும் துணிந்துவிட்டனர். ஆனால் மக்கள் மத்தியில் ஆன்மீகம் பெருக்கெடுத்து ஓடுவதுபோல் தோன்றுகிறது. இது, வெறும் வழிபாட்டு ஆன்மீகம். அதாவது, பத்து பைசாவுக்கு செலவில்லாத அல்லது அதிகபட்சம் பத்து ரூபாய்க்குள் செலவு கெண்ட ஆன்மீகம். ஆனால் மக்கள் வாழ்வியலில் ஆன்மீகம் வரண்டுவிட்டது. அதனால் நேர்மை நழுவிவிட்டது.
இந்த நழுவிய நேர்மையை மீட்டெடுக்கும் முயற்சியாக, ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் ஒன்றிணைந்து, நேர்மையாக நடப்பவர்களைப் பாராட்டி கௌரவிப்பது என்று முடிவெடுத்தன. அரசியல்வாதிகளில் யாராவது நேர்மையாக இருப்பதாகச் சொன்னால் அது நம்பவே முடியாத செய்தி. அதனால்தான் அரசியலில் நேர்மையாக இருப்பவர்களை முதலில் கௌரவிப்பது என்று முடிவெடுத்தன.
அதன்படி, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சில கேள்விகள் உள்ளடங்கிய படிவத்தை அனுப்பிவைத்து, அதனை நிரப்பி அனுப்ப வேண்டி கேட்டுக்கொண்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட படிவத்தை மொத்தமே நான்கு பேர்தான் நிரப்பி அனுப்பி இருந்னர். அவர்கள்:
1) பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
2) இரா. அண்ணாதுரை (மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
3) ஜெ. புஷ்பலீலா ஆல்பன் (பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
4) க. பாண்டியராஜன் (விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ‘திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.
இதற்கான நிகழ்ச்சி 11.08.2012 அன்று சென்னை, எத்திராஜ் மகளில் கல்லூரி கேரளங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் வெ. பொன்னுலிங்கம் (வயது 90) தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், பாராளுமன்ற ஜனநாயக முறையே ஊழலுக்கு காரணம். பிரதமர் மற்றும் முதல்வர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை வரவேண்டும் என்றார்.
வாழ்த்துரை வழங்க இலக்கிய செல்வர் குமரி அனந்தன், பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) மற்றும் மாலன் ஆகியோர் வந்திருந்தனர்.
நிகழச்சிக்கு இடையே நோன்பு துறப்பதற்கான நேரம் வந்ததையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வந்திருந்த முஸ்லிம்களுக்கு நோன்பு துறக்க வசதி ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் மஃரிப் தொழுகையை பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையேற்று நடத்தினார்.
குமரி அனந்தன் தனது உரையில், காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது அவர் நேர்மையாக நடந்துகொண்ட சம்பவங்களைச் சொல்லி, விருது பெற்றவர்களைப் பாராட்டினார். மாலன் பேசுகையில்,
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 60 ஆண்டுகளில் நேர்மையாளன் என்று சொல்லிக் கொள்வதில் நமக்குத் தயக்கம் ஏற்பட்டிருப்பதைத்தான் சுதந்திரம் நமக்குத் தந்த அனுபவம். லஞ்சம் வாங்குவது சட்டப்பூர்வமாகி இருக்கிறது. மக்களும் இதனை சட்டப்பூர்வமாகப் பார்ப்பதில்லை. தேசத்தை விற்று தங்களைக் காப்பாற்றத் துணிந்திருக்கிறார்கள்.
நோமயாக நடக்க விரும்பாதவர்கள் மத்தியில் நேர்மையாக நடக்க விரும்புபவர்களைப் பாராட்டியாக வேண்டும். இல்லையென்றால் நேர்மையாக நடப்பவர்களுக்கே வந்துவிடும். அதனால்தான் நேர்மையாக நடந்தகொள்பவர்களை அழைத்துப் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். முதலில் அரசியலில் இருப்பவர்களைப் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். இப்படிப்பட்ட முயற்சி எடுத்த அரசு அவர்களைப் பாராட்டுவதாகக் கூறினார்.
அடுத்ததாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.ராகவன் பேசும்போது சுவாரஸ்யமான தகவல்கள் பல கூறினார். தனது வாழ்நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகவும் ஆனால் இந்த நிகழ்ச்சிதான் தன்னை அதிகம் அர்ப்படுத்தியதாகவும் கூறினார். அந்தக் காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மக்களுக்காக வேலை செய்வதைத் தொண்டதாக கருதினார்கள்.
ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட சமயத்தில், ஆட்சித் தலைவரான வைஸ்ராயை யாரும் பார்த்துவிட முடியாது. ஆனால் அவருக்கு சாதாரண ஒரு குடிமகன் கடிதம் எழுதினாலும் அதற்கு பதில் கடிதம் ஏழு நாட்களில் வரும். அந்த பதில் கடிதத்தில், வைஸ்ராய்கள், மி ணீனீ க்ஷிவீநீமீக்ஷீஷீஹ் ஷிவீக்ஷீ, ஹ்ஷீuக்ஷீ னீஷீst ஷீதீமீபீவீமீஸீt ணீஸீபீ sமீக்ஷீஸ்மீஸீt என்று எழுதினார்கள். சுதந்தித்திற்குப் பிறகு, நேரு அமைச்சரவையில்தான் ஜிலீமீ விஷீst ஷீதீமீபீவீமீஸீt ணீஸீபீ ஷிமீக்ஷீஸ்மீஸீt என்பதை எடுத்துவிட்டார்கள். மக்களுக்கு பதில் சொல்லக் கடமை அற்றவர்களாக கருதிக் கொண்டார்கள். நம்மை அடிமைப்படுத்தியதாகக் கூறப்படும் ஆங்கிலேயர்கள்கூட ஒவ்வொரு குடிமகனையும் மதித்தார்கள் என்று கூறினார்.
சுதா ராமலிங்கம் அவர்கள் பேசுகையில், நாம் ஏற்கனவே மாற்றப்பட்டவர்களோடுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். இங்கு இளைஞர்கள் யாரும் வரவில்லை என்று ஆதங்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முன்னாள் நாடா-ளுமன்ற உறுப்பினர் இல்லத் திருமணம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான செலவில் நடந்ததைச் சுட்டிக்காட்டி, நேர்மை விருதுªற்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பாராட்டினார்.
விருது பெற்றவர்கள் ஏற்புரை
இரா. அண்ணாதுரை
தனது சகோதரி வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததற்காக அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் நெல்லை மஜீத் அவர்களை காமராஜர் கடிந்துகொண்டதையும், அந்தக் குழாய் இணைப்பைத் துண்டிக்கச் செய்ததையும் சுட்டிக் காட்டினார்.
திரிபுதா முதலமைச்சர் நிருபன் சக்ரவர்த்தி, பதவியைவிட்டுப் போகும்போது ஒரு பெட்டியில் தனது துணிகளையும், மறு பெட்டியில் புத்தகங்களையும் கொண்ட இரண்டு பெட்டிகளோடு மட்டும் வீட்டுக்குப் போதையும் நினைவுகூர்ந்தார்.
பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் ஏற்புரை நிகழ்த்துகையில்,
ஊழல், மக்களின் மனசாட்சியாகிவிட்டது. பாராட்டுத் தேவை இல்லை. எனினும், ஊழலை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்று மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டியது இருக்கிறது.
1995ல் தமுமுக உருவானபோது அது சாதி, சமயம் பார்க்காமல் மக்கள் சேவை புரிவதற்காகவே உருவாக்கப்படட்து. முதலில் தேர்தலிலி போட்டியிடுவதில்லை; அரசியல் ரீதியாக குறிப்பிட்ட கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுத்தோம். தேர்தல் அரசியலிலும் பங்கேற்க வேண்டும் என்று பலர் வற்புறுத்திக் கூறிய பின்னர்தான் அரசியலில் பங்கெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதும் சிலர், அரசியல் ஒரு சாக்கடை என்று எச்சரிக்கை செய்தார்கள்.
இன்று, அரசியல் ஒரு தொழிலாகிவிட்டது. ஆனால் அது சேவையாக இருக்கவேண்டும். அதற்காகவே, மாற்று அரசியலுக்கான களம் என்று மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்கினோம். எங்கள் கட்சியில் வேட்பாளர் செலவு செய்யக்கூடாது; கட்சிதான் செலவு என்பதை அடிப்படைக் கோட்பாடாக வைத்தோம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலிலே மூன்று தொகுதிகளிலே போட்டியிட்டு இரண்டில் வெற்றியும் பெற்றோம். ஆம்பூரிலும், இராமநாதபுரத்திலும் வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கவில்லை. அப்படிக் காசு கொடுத்து வாங்கும் வாக்குகள் தேவை இல்லை என்று சொல்லிவிட்டேன். நாங்கள் இருவரும் இதுவரை ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை. இனியும¢வாங்கப் போவதில்லை.
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரும், உச்சிப்புளியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரும், திட்டங்களுக்கான அரசு நிதி ஒதுக்கீட்டில் இருந்து எனக்கு பங்கு தருவதாகக் கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன். மேலும் எனது தொகுதிக்கு உட்பட்ட பணிகளில் தரம் குறைவாக இருந்தால் சும்மா விடமாட்டேன் என்றும் கூறினேன். அதேபோல் மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து, ‘என் பெயர் சொல்லி யாராவது லஞ்சம் கேட்டால் நான் பொறுப்பல்ல; எனது சார்பாக நான் யாரையும் நியமிக்கவில்லை என்றும் கூறிவிட்டேன்’’ என்றார்.
மேலும் அவர், ‘‘சுதந்திர இந்தியாவில் யாருடைய ஆட்சி மாதிரி அரசு அமையவேண்டும் என காந்தியடிகளிடம் கேட்டபோது அவர், ‘கலீஃபா உமரின் ஆட்சியைப் போன்று அந்த அரசு அமையவேண்டும்’ என்றார். கலீஃபா உமர் அவர்கள் ஒருமுறை இங்கும் அங்குமாக பரபரத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அலீ(ரலி), உமர்(ரலி) அவர்களிடம், ‘ஏன் இங்கும் அங்குமாக அலைகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள், ‘‘அரசுக்கு ஜகாத்தாக வந்த ஒடட்ங்களில் ஒன்றைக் காணவில்லை. அதற்கு நான்தான் பொறுப்பு. அந்த ஒட்டகம் இறுதிவரை கிடைக்காமல் போனால் நாளை இறைவனின் சந்நிதானத்தில் அதற்கான பதிலை நான்தானே கூறவேண்டும்’ என்றார்கள். அப்படிப்பட்ட நேர்மை அவசியமாகும்.
எனவே நானும் லஞ்சம் வாங்கமாட்டேன், அடுத்தவர்களையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன். லஞ்சத்தை ஒழிக்கப் பாடுபடுவேன்’’ என்று கூறி முடித்தார்.
இறுதியாக வந்த கா. பாண்டியராஜன் (தேமுதிக),
‘‘என் தொகுதி மக்கள், இவன் நம்ம ஆளு என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ஊழல் ஆழமாக வேரூன்றிய மாநிலம். சராசரியாக ஒரு துறைக்கு 350 கோடி ரூபாய் செலவு ஆகிறது. அதில் 10, 15 சதவீதம் லஞ்சமாகப் போய்விடுகிறது. ஆனால் இந்த ஆட்சியில் மாற்றம் தெரியும். கட்சிக்காரங்க பலர் பங்கு கிடைக்கலனு சொல்றாங்க. சில கட்சிகள் நீங்கலாக, இந்த சட்டசபையில் பல உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
அடுத்த நாள் யாரைக் கொண்டு ஜெயிக்கப் போகிறேன் என்ற சந்தேகம் அரசியல்வாதிகள் மனதில் இருக்கிறது. சித்தாந்த கட்சிகள்ல அந்த சிக்கல் இல்லை. ஆனால் பெரிய கட்சிகளில் இருப்பவர்களுக்கு அந்த சிக்கல் இருக்கு. பெரிய கட்சிகள் இரண்டும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காங்க. தமிழகத்தில் மாற்று அரசியல் தேவை இருக்கு. இது ஒரு நன் முயற்சி. இங்கு வந்திருந்த நான்கு பேர் தவிர மற்றவர்கள் தவறு செய்பவர்கள் என்று எண்ண வேண்டாம். பலர் நல்லது செய்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முனீர்சேட், சமுதாய சேவகர் ஹனீபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



ஜி.அத்தேஷ்
http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=2460:2012-08-13-12-37-14&catid=96:arasial&Itemid=367

சனி, 11 ஆகஸ்ட், 2012

பேராசிரியர்.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்,MLA., அவர்களுக்கு நேர்மையான சட்டமன்ற உறுப்பினர் என்று பாராட்டி "திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது" வழங்கப்படுகிறது.



தமுமுக மமக வின் மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்,MLA., அவர்களுக்கு நேர்மையான சட்டமன்ற உறுப்பினர் என்று பாராட்டி "திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது" வழங்கப்படுகிறது.


நேர்மையான தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு "திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது" வழங்கி பாராட்டு விழா

நாள்: 11 ஆகஸ்ட் 2012 (சனிக்கிழமை), மாலை 5 மணி

இடம்: எதிராஜ் மகளிர் கல்லூரி கேளரங்கம், சென்னை

நிகழ்ச்சி ஏற்பாடு: ஊழலை எதிர்த்த ஒருங்கிணைப்பு, சென்னை

மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை - சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மேற்கு பர்மாவில் முஸ்லிம்கள் திரளாக வசித்துவரும் ராகின் மாநிலத்தில் பௌத்த வெறிக்கும்பல் அரசாங்கத்தின் ஆதரவோடு முஸ்லிம்களை ஈவிரக்கம் இல்லாமல் இனப்படுகொலை செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த வெறியாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். புத்த பிக்குகள் கொலைப்படையை வழிநடத்துவதும், துப்பாக்கிகளோடு திரிவதும் இணையதங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
ராகின் தேசியவாதிகள் எனப்படும் பௌத்த பயங்கரவாதிகளால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்வது 1942ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. 18.03.1942 அன்று 5 ஆயிரம் ராகின் முஸ்லிம்கள் பௌத்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை அந்த வெறியாட்டம் பௌத்த பேரினவாதப் பின்னணியோடும் அரசு ஆதரவோடும் தொடர்ந்து வருகிறது.
குடியுரிமை மறுக்கப்பட்டு கல்வி வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்டு கொடுமைகள் இழைக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் பீதியோடு நிறுத்தப்பட்டுள்ள வறுமை முஸ்லிம்களுக்கு தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதோடு, மத்திய அரசு மியான்மர் அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டுமென்றும், மியான்மர் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென்றும் தமுமுக வலியுறுத்துகிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் முஸ்லிம்கள் போடோ பயங்கரவாதி களால் சொல்லொணா துயருக்கு ஆளாகியுள்ளனர். உண்மை அறியும் குழுக்களின் அறிக்கையின்படி இதுவரை மூன்று லட்சம் மக்கள் 300 அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும், 73 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. அகதி முகாம்களிலும் முஸ்லிம்கள் மிகப்பெரிய கொடுமைகளை சந்தித்து வருகின்றனர்.
சங்பரிவாரத்தால் இயக்கப்படும் போடோ பயங்கரவாதிகள் மண்ணின் மைந்தர்களான அஸ்ஸாமிய முஸ்லிம்களை "ஊடுருவல்காரர்கள்' என்று கொச்சைப்படுத்தி பச்சைப்படுகொலை செய்து வருகின்றனர்.
1983ஆம் ஆண்டு சங்பரிவார் மாணவர் அமைப்பான ஆஆநம (AASU (All Assam Students Union)ஐ பயன்படுத்தி வன்முறையை உருவாக்கி ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர்.
நெல்லிப் படுகொலைகள் எனப்படும் இந்த முஸ்லிம் இனப்படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பூபன்தாஸ் திவாரி ஆணையத்தை முடக்கி, அதன் அறிக்கைகளை குப்பையில் வீசி, பயங்கரவாதிகளைத் தப்பிக்கவைத்தது சங்பரிவார ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அஸ்ஸாம் கன பரிஷத்.
இப்போது மீண்டும் போடோக்கள், பயங்கர ஆயுதங்களுடன் கோக்ரஜா, பஸ்கா, சிராங், உதல்கிரி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தும், வீடுகளை இடித்தும் சீரழித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இந்த வன்முறைகளை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றன.
அவலங்களால் சூழப்பட்டு, அபலைகளாய் நிற்கும் அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கும் தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிக்கிறது.
கொடுமைக்குள்ளான முஸ்லிம்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய இழப்பீடு தருவதோடு, அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு உரிய ஏற்பாடுகளை செய்துதர வேண்டுமென தமுமுக கோருகிறது.
ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்காமல் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் ஆதரவோடு வெறியாட்டம் நடத்திவரும் போடோ பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென தமுமுக வலியுறுத்துகிறது.
மேற்கண்ட முஸ்லிம் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், அதற்காக தீர்வு காண வலியுறுத்தியும் தமுமுக சார்பில் 10.08.2012 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். அனிபா, மாநிலச் செயலாளர்கள் பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி, பி.எஸ். ஹமீது, மீரான் மொய்தீன், மமக இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், வடசென்னை, தென்சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.











 

http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=2442:2012-08-10-14-40-30&catid=58:2009-10-11-12-42-41

புதன், 8 ஆகஸ்ட், 2012

சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் ம.ம.க. பொதுச் செயலாளர் சந்திப்பு



சிங்கப்பூர் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பாக இந்திய முஸ்லிம் பேரவை (FIM) செயல்படுகிறது. அக்கூட்டமைப்பு சார்பில் கடந்த 3.8.2012 அன்று சிங்கப்பூர் பென்கூலின் பள்ளிவாசல் அருகே நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் துணைப் பிரதமர் டியோ சீ ஹீயான் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் தீன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரிக்கு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் எம். தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் தீன், மமக பொதுச் செயலாளரை சிங்கப்பூர் துணைப் பிரதமருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இந்நிகழ்வில், அங்கீகரிக்கப்பட்ட 16 இந்திய முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் பெருமளவில் பங்கேற்றனர். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

துபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டியில் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ வைக்கும் த‌ஜிகிஸ்தான் சிறுவ‌ன்



துபாய்: துபாயில் நடந்து வரும் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டுள்ள 12 வயது தஜிகிஸ்தான் சிறுவன் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளான்.
துபாய் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சியையொட்டி ச‌ர்வதேச‌ அள‌விலான‌ திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. இப்போட்டியில் ப‌ங்கேற்றுள்ள‌ த‌ஜிகிஸ்தானைச் சேர்ந்த‌ லுத்புல்லாஹ் கோலிகோவ் எனும் 12 வ‌ய‌து சிறுவ‌ன் த‌ன‌து திற‌மையினால் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ச் செய்து வ‌ருகிறான்.
திருக்குர்ஆனின் எந்த‌ப் ப‌குதியில் இருந்து எந்த‌ வ‌ச‌ன‌த்தைக் கேட்டாலும் அது எந்த‌ சூராவில் வ‌ருகிற‌து, எத்த‌னையாவ‌து ப‌க்க‌ம், அந்த‌ சூராவில் எத்த‌னை எழுத்துக்க‌ள், வ‌ச‌ன‌ம் இற‌ங்கிய‌ வ‌ர‌லாறு என‌ அனைத்துத் த‌க‌வ‌ல்க‌ளையும் எவ்வித‌ த‌ய‌க்க‌மும், யோச‌னையுமின்றி உட‌னுக்குட‌ன் தெரிவித்து வ‌ருவ‌து நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்றுள்ள‌ ந‌டுவ‌ர்க‌ளை வியக்க வைத்துள்ளது.
அந்த‌ மாண‌வனை ந‌டுவ‌ர்க‌ளும், பார்வையாளர்களும் மனம் மகிழ்ந்து வாழ்த்தின‌ர்.
16வது ஆண்டாக‌ ந‌டைபெற்று வ‌ரும் இந்த‌ ச‌ர்வ‌தேச‌ குர்ஆன் மனனப் போட்டியில் இதுவ‌ரை இப்பொடியொரு திற‌மை மிகுந்த‌ மாண‌வ‌ரை பார்த்த‌தில்லை என‌ இப்போட்டிக்கான‌ ஏற்பாட்டுக் குழுவில் இட‌ம் பெற்றுள்ள‌ ஒரேயொரு இந்தியரான‌ த‌மிழ‌க‌த்தின் ம‌துக்கூரைச் சேர்ந்த‌ நூருல் அமீன் தெரிவித்துள்ளார்.

சனி, 4 ஆகஸ்ட், 2012

நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? கவனிப்பாரா தமிழக முதல்வர்??

நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? கவனிப்பாரா தமிழக முதல்வர்??



அறந்தாங்கியில் ஒரு நரேந்திர மோடி ...!

மனசாட்சி இல்லாத மக்கள் பிரதிநிதி...!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் சிறுமருதூர்.அங்கு இஸ்லாமிய மக்களும், உடையார் இன மக்களும், முக்குலத்தோர் இன மக்களும் , தலித் மக்களும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இஸ்லாமிய மக்களுக்கு நிலம் சொத்துகள் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது இவற்றின் மீது நெடுங்காலமாக கண் வைத்து இருந்த அந்த ஊரை சார்ந்த ராஜநாயகம் என்பவர் அங்கு வாழ்ந்து வந்த 30 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களை குண்டர்களை கொண்டு அடித்து சித்திரவதை செய்து கொடுமை படுத்தினார், பின்பு அனைவரின் சொத்துகளையும் பறித்து கொண்டு அந்த மக்களை ஊரை விட்டே விரட்டி விட்டார். எந்த வம்புக்கும் போகாத அந்த அப்பாவி மக்கள் எதிர்க்க தைரியம் இல்லாத நிலையில் அவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் , உயிரோடுதான் இருக்கிறார்களா? இல்லையா என தெரிய வில்லை. இந்த பிரச்சினையை கிளப்பிய சில சமுதாய அமைப்புகள் கூட வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு அமைதியாய் இருந்து விட்டன.

அந்த அப்பாவி மக்களை விரட்டியதோடு இல்லாமல் அங்கு அமைந்து இருந்த பழமையான ஜும்மா பள்ளிவாசலும்தரை மட்டமாகி உள்ளது.இவ்வளவு அநியாயம் நடந்தும் இந்த விஷயம் வெளி உலகத்துக்கு வராமல் மிகவும் கவனமாக பார்த்துகொண்டார் ராஜநாயகம்.

கடந்த பொது தேர்தலில் அறந்தாங்கி தொகுதிக்கு நல்ல பிள்ளையாக சீட்டும் வாங்கி தி.மு.க. ஆட்சியில் மேல் மக்கள் இருந்த வெறுப்பின் காரணமாக இவரும் அந்த அலையில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் அதிகாரம் கைக்கு வந்து விட்டது என்ற மமதையில் அந்த விரப்பட்ட மக்களில் ஒருவரான நைனா முகமது என்பவர் வாசித்த வீட்டை அபகரித்து இன்று அந்த வீட்டில் தான் குடி இருக்கிறார்.

பள்ளிவாசல் இருந்த இடத்தின் மேல் தார் சாலை போட்டு பள்ளிவாசல் இருந்த அடையாளமே இல்லாமல் செய்து விட்டார். ஆனால் வருவாய் துறையின் பதிவுகளில் இவை அனைத்தும் தெளிவாய் உள்ளது. இன்று வரை ராஜநாயகம் வசிக்கும் வீடு அந்த இஸ்லாமிய சமுதாய நண்பர்கள் பெயரில் தான் அணைத்து ரெக்கார்டுகள் உள்ளன. பள்ளிவாசலை இடித்து அதன் மேல சாலை போட்டு எல்லா வற்றையும் அபகரித்து உள்ளார். பாதிக்க பட்டவர்கள் கேட்கவே பயபடுகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. உயிரோடுதான் உள்ளார்களா என்பது கூட சந்தேகமாக உள்ளது.

எல்லோரையும் விரட்டி விட்டு இன்று அவர் மட்டும் சந்தோசமாக இருக்கிறார்..

சமூக சேவகர்கள் யாராவது இதை தட்டி கேட்டால் தன்னுடைய பதவி அதிகாரங்களை காட்டி மிரட்டுகிறார் . இவரால் அ. இ. அ. தி. மு.க கட்சிக்கும் தூய்மையான ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படும் சூழல் உள்ளதால் இதன் உண்மை நிலைமையை தமிழகமுதல்வர்
உளவுத்துறையின் மூலமாக அறிந்து அவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் , இஸ்லாமிய அமைப்புகள் , மனித உரிமை இயக்கங்கள் போன்றவை முன் வர வேண்டும். எந்தவித பிரச்சனையிலும் ஈடுபடாத அந்த மக்களின் நிலைமை என்று என்ன வென்றே தெரியவில்லை.
அதிகாரம், குண்டர்களின் துணை என வலம் வரும் இவரை போன்றவர்களை எதிர்ப்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் சர்வாதிகாரன் ஹிட்லருக்கு ஏற்பட்ட நிலைமை தான் இவரை போன்றவர்களுக்கும் ஏற்படும் என்பதனை நாம் தெரிய படுத்துவோம்..

தயவு செய்து இந்த செய்தியை படிக்கும் அனைத்து நண்பர்களும் இதை share செய்யவும். எங்காயாவது ஒளிந்து வாழும் அந்த மக்கள் வெளிச்சத்தின் முன்னே வர ஒரு தைரியம் கிடைக்கும்.
கேட்க கூட நாதி இல்லாத அந்த இஸ்லாமிய குடும்பங்களுக்காக சகோதருக்காக நம்மால் ஆனா உதவியை செய்வோம்.

வெளி உலகத்துக்கு வராமல் இருக்கும் இந்த செய்தியை வெளி உலகத்திற்கு எப்படி கொண்டு வந்து அவர்களுக்கு தண்டனை வாங்கி தந்து பாதிக்கப்பட்ட அந்த மக்கள் தன்னுடைய சொந்த வீட்டுக்கு செல்லும் நாளை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.. மக்களே ஒன்று கூடுங்கள்..

தகவல் - முஹம்மது யூசுப், கோட்டைப்பட்டினம்,

புனே குண்டுவெடிப்பு - ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு தொடர்பா?


மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற சுசீல்குமார் ஷிண்டேயின் வருகைக்கு சற்று முன்பு புனேயில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஏழு நிமிடங்களுக்கு இடையே நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதர 3 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் செயலிழக்கப்பட்டன.

பாலகந்தர்வா திரையரங்கு, ஜங்கிலி மகாராஜா சாலையில் (ஜே.எம். சாலை) உள்ள தேனா வங்கிக் கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டொனால்ட் உணவகம் அருகிலிருக்கும் குப்பைத் தொட்டி, கார்வாரே பாலம் ஆகிய 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இதை தொடர்ந்து இந்தப் பகுதிகள் அனைத்தும் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப் படை, வெடிகுண்டு சோதனைப் பிரிவு, குண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் அடங்கிய குழு ஆகியன குண்டுவெடிப்பு நடந்த இடங்களுக்கு விரைந்தன. அந்தப் பகுதிகளில் இருந்த 6 குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன.

கேக்குகளை வைக்கும் பெட்டியொன்றில் வெடிப்பொருள்களை வைத்து, காயமுற்ற நபர் எடுத்துச் சென்றுள்ளார். அந்தப் பெட்டியில் 2 டெட்டனேட்டர்கள், ஒரு பென்சில் செல் ஆகியன இருந்தன. இவற்றில் ஒரு டெட்டனேட்டர் குண்டு வெடிக்கப் பயன்பட்டுள்ளது. மற்றொன்று வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

முதல் குண்டு பாலகந்தர்வா திரையரங்கில் வெடித்தது. இங்குதான் குண்டு வைத்தவரே காயமுற்றார்.

இரண்டாவது குண்டு மெக்டொனால்ட் உணவகம் அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வெடித்தது.

3வது மற்றும் 4வது குண்டுகள் கார்வாரே பாலத்திலும் தேனா வங்கி அருகிலும் வெடித்தன. இந்த 2 இடங்களிலும் ஒரு சைக்கிளில் கட்டப்பட்டிருந்த வாளியிலிருந்து குண்டுகள் வெடித்துள்ளன.

இந்த 4 இடங்களில் ஒரு இடத்தில் வெடிப்பொருள்கள் பாலிதீன் பைகளில் சுற்றப்பட்டுக் கிடந்தன. வெடிகுண்டுகளை எடுத்துச் சென்ற ஒருவர் காயமடைந்துள்ளார். அவரைப் பிடித்துள்ள போலீஸார், சசூன் மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே. சிங் தெரிவித்தார்.

இந்தக் குண்டு வெடிப்பு சம்பவங்கள் திட்டமிட்ட தாக்குதல்களாகத் தெரிவதால், இதற்கு தீவிரவாத பின்னணி இருப்பதை மறுப்பதற்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வெடிக்குண்டு சம்பவம் குறித்து மஹராஷ்ட்ரா மாநில காவல்துறை தலைவர் சஞ்சீவ் தயாளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போது இது பற்றி கருத்துக் கூறுவது பொருத்தமாக இருக்காது. காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் குண்டு வெடித்த இடங்களை அடைந்துவிட்டன. அவை குண்டு வெடிப்பு குறித்து அலசி வருகின்றன என்றார்.

புனே தொடர் குண்டுவெடிப்பு குறித்து புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, இந்தச் சம்பவங்கள் இரவு 7.27 முதல் 8.15 மணிக்குள் நடந்ததாகவும்; இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய புலனாய்வு ஏஜென்சி குழுவும் தேசிய பாதுகாப்புப் படையினரின் வெடிகுண்டு செயலிழப்புக் குழுவும் புனேவுக்கு விரைந்துள்ளதாக ஷிண்டே தெரிவித்தார்.

மஹாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் புனேயில் உள்ள நிலைமை குறித்து உள்துறையின் மூத்த அதிகாரிகளுடன் புதன்கிழமை இரவு அவசர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தங்கும் விடுதிகள், மார்க்கெட்டுகள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று மாநில உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புனேயில் இப்போது நடந்துள்ளவை சிறிய அளவிலான குண்டுவெடிப்புகள்தான். எனவே, மக்கள் பீதியடையத் தேவையில்லை. காவல்துறையினர் உஷாராக உள்ளனர். அவர்கள் தங்கள் கடமையை ஆற்றி வருகின்றனர் என்று மாநில கூடுதல் காவல்துறை தலைவர் சத்யபால் சிங் தெரிவித்தார்.

குண்டு வெடிப்புச் சம்பவத்தை விஷமத்தனமான செயல் என்று புனே மாநகர காவல்துறை ஆணையர் குலாப் ராவ் போல் குறிப்பிட்டார்.

அதேவேளையில் 2006 ஆம் ஆண்டு மலேகானில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு மாதிரியில் புனே தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. மலேகானிலும் சைக்கிளில்தான் குண்டுவைக்கப்பட்டது. மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முதலில் சிமி இயக்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஹிந்துத்துவா தீவிரவாதி சுவாமி அஸிமானந்தா கைது செய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தைத் தொடர்ந்து சிமி உறுப்பினர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் போலீஸ் மற்றும் புலனாய்வு ஏஜன்சிகளின் விசாரணை ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பக்கம் திரும்புமா? அல்லது வழக்கம் போல ஏதேனும் முஸ்லிம் இயக்கங்களின் தலையில் வைத்து கட்டப்படுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.