புதன், 8 ஆகஸ்ட், 2012

சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் ம.ம.க. பொதுச் செயலாளர் சந்திப்பு



சிங்கப்பூர் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பாக இந்திய முஸ்லிம் பேரவை (FIM) செயல்படுகிறது. அக்கூட்டமைப்பு சார்பில் கடந்த 3.8.2012 அன்று சிங்கப்பூர் பென்கூலின் பள்ளிவாசல் அருகே நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் துணைப் பிரதமர் டியோ சீ ஹீயான் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் தீன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரிக்கு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் எம். தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் தீன், மமக பொதுச் செயலாளரை சிங்கப்பூர் துணைப் பிரதமருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இந்நிகழ்வில், அங்கீகரிக்கப்பட்ட 16 இந்திய முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் பெருமளவில் பங்கேற்றனர். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

கருத்துகள் இல்லை: