புதன், 31 அக்டோபர், 2012

இளையான்குடியில் பாஜகவின் ரவுடித்தனத்திற்கு பாடம் புகட்டியது தமுமுக - பத்திரிக்கை செய்திகள்

> பொதுக்கூட்டத்தில் மனம்போனபடி கீழ்த்தரமாகப் பேசுவதும், தட்டிக்கேட்க ஆளில்லாததால் தறுதலைப் பேச்சுகளை மென்மேலும் வளர்ப்பதும்தான் சங்பரிவாரக் கும்பலின் கடந்தகால வரலாறு.
> காமத்தில் விஞ்சியது கன்னிமேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்றெல்லாம் அருவறுப்புத் தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தி, தமிழகத்தில் மதவெறி நெருப்பை இந்து முன்னணி பற்றவைத்தது.
> 1995க்குப் பிறகு தமுமுக இந்தக் கயமைத்தனங்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தது.
> அண்மையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறாகப் பேசிய சங்பரிவார பேச்சு பயங்கரவாதி மீது தமுமுக வழக்குப் பதியச் செய்தது.
> வேலூரில் பாஜக பிரமுகர் டாக்டர் அரவிந்த ரெட்டியின் படுகொலையைக் கண்டித்து 26.10.2012 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
> இதன் ஒரு கட்டமாக (மாவட்டத் தலைநகரமல்லாத) இளையான்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கலந்துகொண்டு தனக்கே உரிய நடையில் மிகக் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார். அந்த சாக்கடைப் பேச்சிலிருந்து சில வரிகள்:
> ‘‘வேலூர் டாக்டர் அரவிந்த ரெட்டியை இடப்பிரச்சினை காரணமாகக் கொலை செய்ததாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் காவல்துறை கைது செய்த இரண்டு முஸ்லிம் தீவிரவாதிகளை ராமநாதபுரத்தில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒரு நாய் வெளியில் விடச் செய்துள்ளது. அந்த நாய் எந்தக் கட்சி (கூட்டத்தில் இருப்பவர்கள் மனிதநேய மக்கள் கட்சி) ‘மனிதநேயத்துக்கும் உங்களுக்கும் என்னடா சம்பந்தம், மனிதர்களைக் கொல்றவங்கடா நீங்க... ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளையும் இந்த நாய்தான் விடுதலை செய்ய வைத்திருக்கிறது’’
> என்றும், இதைவிட இன்னும் கேவலமாகவும் எச்.ராஜாவின் பேச்சு அமைந்துள்ளது. தமுமுகவையும், மமக சட்டமன்றத் தலைவர் பேரா. டாக்டர் ஜவாஹிருல்லாவையும், தனிப்பட்ட முறையில் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேருந்து நிலையம் முன்பு பள்ளிவாசலின் அருகில் நின்று எச்.ராஜா பேசுவதை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த நகர தமுமுகவின் மக்கள் தொடர்பு அலுவலர் ஷேக் தட்டிக் கேட்டுள்ளார்.
> பாஜக மேடையின் முன்பு துணிச்சலாகப் போய் நின்று, தமுமுகவை அவதூறாகப் பேசிய ராஜாவே மன்னிப்புக்கேள், பேரா. ஜவாஹிருல்லாஹ்வை அவதூறாகப் பேசிய ராஜாவே மன்னிப்புக்கேள் என்று முழக்கமிட்டுள்ளார்.
> பாஜகவினர் அவரைத் தாக்கப் பாய்ந்துள்ளனர். உடனே காவல்துறை அதிகாரி ஒருவர் இவரை அழைத்து வந்துள்ளார்.
> இதோடு சென்றுவிடாமல், பாஜகவினர் மறுபடியும் வம்புக்கு வந்துள்ளனர். அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த முஸ்லிம்களை மிகக்கேவலமாக ஏசியுள்ளனர். மாவட்டச் செயலாளர் பி.எம்.ராஜேந்திரன் செருப்பைத் தூக்கிக் காட்டியுள்ளார். மல்லேந்திரன், ஆபாச வார்த்தைகளால் ஏசியுள்ளார்.
> இது தமுமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் பொறுமையிழக்க வைத்துள்ளது.
> அருவறுக்கத்தக்க நடவடிக்கையில் இறங்கியவர்களுக்கு சரமாரி அடி உதைகள் விழ, பாஜக குண்டர்கள் தெருத்தெருவாக ஓடியுள்ளனர்.
> ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட தமுமுகவினர், உரிய பாடம் பெற்றபிறகும் தப்பி ஓடமடியாமல் தவித்த பாஜகவினரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
> 50 பேர் கொண்ட பாஜகவின் குண்டர் கும்பல் இளையான்குடியில் இப்படி ஒரு பாடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
> மமக மாநில அமைப்புச் செயலாளர் மௌலா நாசர், மாவட்டத் தலைவர் சைபுல்லா, பொருளாளர் காஜா மற்றும் நிர்வாகிகள், கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளனர்.
> இனியேனும் அருவறுப்புப் பேச்சுகளை பாஜக கும்பல் நிறுத்திக் கொண்டால் நல்லது.

-எழில் யாசிர்
 

செவ்வாய், 23 அக்டோபர், 2012

நெய்வேலி- அனல் மின்நிலையம் முற்றுகை - 1500 பேர் கைது


காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தரமறுக்கும் கர்நாடக அரசையும், வன்முறையைத் தூண்டும் கன்னட வெறியர்களையும் கண்டித்தும், காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான நீரை வழங்காத கர்நாடகத்திற்கு நெய்வேலி-யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வ-லியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தலைமையில் நெய்வே-லி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் 22.10.2012 அன்று நடைபெற்றது.
நெய்வேலி- அனல் மின்நிலையத்தின் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மந்தாரகுப்பத்திலி-ருந்து 100க்கும் அதிகமான வாகனத்தில் அனல் மின்நிலையத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் முதற்கட்டமாக நெய்வேலி- அனல் மின்நிலைய தலைமை அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்போராட்டத்தின் இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி, தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். ஹனிபா, மமக துணை பொது செயலாளர் சரணபாண்டியன் தமுமுக மாநில செயலாளர் தருமபுரி சாதிக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இதையடுத்து தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நெய்வேலி- அனல் மின்நிலையத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது 300 குழந்தைகள் 70 பெண்கள் உட்பட 1500 மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் தானாகவே சென்று கைதாகினர்.
இப்பேராட்டத்தில் இறுதியில் கண்டன உரை நிகழ்த்திய ஜே.எஸ்.ரிபாயி அவர்கள்,
‘‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கர்நாடக அரசு நடத்திவருகிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் திட்டமிட்டு தடுத்தும் மறுத்தும் வருகிறது. இதனைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஓசூரில் சாலை மறியல் போராட்டத்தையும், கடந்த 19.10.2012 அன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் தலையில் கறுப்பு முன்டாசு கட்டி அறவழிப் போராட்டத்தையும் நடத்தினோம். அதேபோல் தற்போது அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டத்தை நடத்தியுள்ளோம். இம்மாபெரும் போராட்டத்தின் வாயிலாக மத்திய மாநில அரசுக்கு ஒருசில கோரிக்கைகளை வைக்கிறேன்:
1. மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நியாணீமான தண்ணீரைத் தரமறுக்கும் கர்நாடக அரசுக்கு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தரக்கூடாது.
2. இந்திய ஜனநாயக நாட்டில் அனைத்து மாநிலத்திற்கும் சமமாக நடக்கவேண்டிய மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என பிரதமரை வ-லியுறுத்தினார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். எஸ்.எம்.கிருஷ்ணா உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
3. காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும்.
4. தமிழகத்தின் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வ-லியுறுத்த வேண்டும்.
காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்கும்வரை மனிதநேய மக்கள் கட்சி தொடந்து போராடும்’’
இவ்வாறு தமுமுக தலைவர் உரையாற்றினார்.


செவ்வாய், 16 அக்டோபர், 2012

திருவாரூரில் முண்டாசு கட்டி ம.ம.க போராட்டம்


தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் கன்னட வெறியர்களை கண்டித்து காவிரி டெல்டா மாவட்டத்தின் மைய்யப்பகுதியான திருவாரூரில் இன்று 16-10-2012 காலை 10.30 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கருப்பு முண்டாசு கட்டி அறவழி போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட தலைவர் கே.ஹெச்.நூர்தீன் அவர்கள் தலைமையில் பழைய இரயில் நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் திருவாரூரின் முக்கிய பகுதிகளின் வழியாக கன்னட வெறியர்களை கண்டித்து கோஷம் எழுப்பிக்கொண்டே புதிய இரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டனர். 
புதிய இரயில் நிலையத்தை அடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணி மற்றும் போராட்டத்தில் தமுமுக ம.ம.க மாநில தலைவர் மவ்லவி.ஜே.எஸ்.ஆர். ரிபாயி ரஷாதி அவர்களும் ம.ம.க மாநில பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்களும், ம.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் சரவணப்பாண்டியன் அவர்களும், ம.ம.க மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா அவர்களும், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜூதீன் அவர்களும் கலந்துகொண்டு பேரணியை வழிநடத்தி கண்டன உரை நிகழ்த்தினர்.

இறுதியாக ம.ம.க மாவட்ட செயலாளர் முத்துப்பேட்டை மாலிக் நன்றி கூறினார். இதில் மனிதநேய மக்கள் கட்சியினர் உள்பட மாவட்ட முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.