வியாழன், 29 மே, 2014

ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்தினால் பேரழிவுதான் : காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் யாசின் மாலிக்

பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடியும் அவரது சித்தாந்த தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தங்களது 3 முக்கிய கொள்கைகளை செயல்படுத்துவதில் மும்முரம் காட்டுகின்றனர். முஸ்லிம் தனிநபர் சட்டத்தை ஒழித்துவிட்டு பொதுசிவில் சட்டத்தை உருவாக்குவது, ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மக்களின் விருப்பங்களுக்கு எதிராக முழுமையாக இந்தியாவுடன் இணைப்பது என்கிற திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டப்படுகிறது. இந்த அபாயகரமான செயல்திட்டங்களை மோடி செயல்படுத்த முனைந்தால் ஒட்டுமொத்த துணைக்கண்டமுமே மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். நிச்சயமாக இது பேரழிவுகளையே ஏற்படுத்தும். இவற்றில் இருந்து விடுபட்டு
அமைதியை உருவாக்க மோடி முனைய வேண்டும். மோடி அரசின் அண்மைய செயல்பாடுகள் அனைத்தும் அமைதியை முன்னெடுப்பதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இனவாத போக்கையே பின்பற்றுவதாக இருக்கிறது. காஷ்மீரத்து மக்களின் கருத்துகளைக் கேட்காமலேயே எப்படி
பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்திவிட முடியும்? பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
 நடத்துகிறார். மறுபுறமோ ஜம்மு காஷ்மீரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிற 370வது பிரிவை நீக்குவது குறித்து அவரது இணை அமைச்சர் பேசுகிறார். இதன் மூலம் எப்படி இந்த அரசின் மீது நம்பிக்கை வரும்? லட்சக்கணக்கான காஷ்மீரிகளை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு
 இந்தியா- பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவுகளை அடைந்துவிட முடியுமா என்ன? ஜம்மு காஷ்மீரத்து மக்களைப் பொறுத்தவரையில் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் நட்புறவைத்தான் விரும்புகிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த இருநாட்டு தலைவர்களுமே ஜம்மு காஷ்மீரிகளை மனிதர்களாகக் கூட பார்ப்பதில்லை. தங்களது உதடுகளில் காஷ்மீர் என்ற சொல்லையே உச்சரிக்க மறுக்கிறார்களே.. இப்படி நீங்கள் மவுனமாக இருந்து கொண்டே எப்படி காஷ்மீரத்து பிரச்சனையை தீர்க்கப் போகிறீர்கள்? காஷ்மீரத்து பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட உறவுகள் மேம்பாடு அடையும் என்று கனவு கண்டால் அது நிறைவேறாத ஒன்றாகவே இருக்கும்.







மல்லிப்பட்டிணத்தில் முஸ்லிம்கள் மூவர் மீது அரிவாள் வெட்டு...இந்துத்வா தீவிரவாதிகளின்அட்டூழியம்



தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அனைத்து சமூக மக்களும் தாய் பிள்ளையாய் வாழ்ந்து வருவதை சீர்குலைக்கும் நோக்கில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அராஜகத்தில் ஈடுபட்ட பாஜக துணை பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் அவருடைய தீவிரவாத கும்பல்கள் முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்ட இந்துத்துவா காவி தீவிரவாதிகளை காவல்துறையினர் தடியடி நடத்தி 144 தடை உத்தரவு போட்டனர். இந்நிலையில்.... 

நேற்று இரவு 9 மணிக்கு  முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடைய பகுதியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் 4 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 காவி
தீவிரவாதிகள் அரிவாள், கத்தி, சைக்கிள் செயின் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களோடு வந்து முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூரமான முறையில் கொலைவெறி தாக்குதல் நடத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதலில் அப்பாவி 3 சகோதரர்களுக்கு கடுமையான முறையில் வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி உயிருக்கு போராடியவாறு பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மல்லிப்பட்டினம் முழுவதும் இரத்த வெள்ளத்தில் களேபரமாக காட்சியளிக்கிறது.

எந்த ஒரு  ஊடகமும்  இது வரையிலும் செய்தியை வெளியிடவில்லை

புதன், 28 மே, 2014

மீத்தேன் அரக்கன்!




முன்னால் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, ‘விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.
கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.
மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?
மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்… ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல… அடுத்த 100ஆண்டுகளுக்கு!
பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.
காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.
”நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.
இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு ‘நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!
உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!” என்கிறார் இரணியன்.
வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?
மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது!
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா… உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.
அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.
நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக, ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது!

மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமனிடன் பேசியபோது…
”நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோலியம் எடுப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பல இடங்களில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கான குழாய் பதிப்பு வேலைகள், ஓ.என்.ஜி.சி-யின் பெயரில் நடைபெறுகின்றன. நரசிங்கம்பேட்டை, திருநகரி என்று பல இடங்களில் இப்படிச் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணை செயற்பாட்டாளர்கள் (co-operators). ஆகவே, அவர்களுக்காக இவர்கள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து தருகின்றனர். அதனால் ஓ.என்.ஜி.சி. பெயரில் நடந்தாலும் அது மீத்தேன் திட்டத்துக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.
ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றுவரும் நிலக்கரி மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளில் ஓ.என்.ஜி.சி-யுடன், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான் செயல்பட்டு வருகிறது. அங்கு, மொத்தப் பணிகளில் 25 சதவிகிதத்தை கிரேட் ஈஸ்டர்ன் செய்கிறது. ஆனால், டெல்டா பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது என்றபோதிலும், முழு திட்டமும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போதைய நிலையில் ‘மன்னார்குடி பிளாக்’ என்று அழைக்கிறது.
காவிரிக்கும் மீத்தேனுக்கும் என்ன தொடர்பு?
இந்தத் திட்டத்தின் வேறொரு கோணத்தை விவரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு.
”35 ஆண்டுகளில், 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பகுதியில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது எங்கேயோ இருக்கும். விவசாயத்தை நம்பி நடைபெறும் இதரத் தொழில்களையும், கால்நடைகளின் மதிப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால்,  35 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 35 லட்சம் கோடி மதிப்புக்கு இங்கே விவசாயம் நடைபெறும். ஆகவே, லாபம் என்ற அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் முட்டாள்தனமான திட்டம்.
மேலும், இவர்கள் நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர். அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால்          தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் சரிந்துவிழும் வாய்ப்பு இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது” என்று அதிரவைக்கிறார்.
திருநாவுக்கரசு குறிப்பிடும் மற்றொரு கோணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த  40 ஆண்டுகளுக்கும்  மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் ‘பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? ‘இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்!
தேர்தலுக்குப் பிறகு என்னவாகும்?
இந்தத் திட்டத்துக்காக, மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,000 இடங்களில் கிணறுகள் அமைத்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்திருக்கும். மீத்தேன் வாயுக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக வயல்வெளிகளில் பாய்ந்தோடும். இதற்காக ஒவ்வோர் இடத்திலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல நிலங்களை வாங்கியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு தற்போது சற்றே மெதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மிதவேகம் தேர்தலுக்கானது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசின் அசுர பலத்துடன் திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்!

”அப்படித்தான் நாங்களும் யூகிக்கிறோம்” என்ற பேராசிரியர் ஜெயராமன் இதன் அரசியல் கோணத்தை விளக்கினார்.
”இந்த மீத்தேன் வாயுத் திட்டத்துக்காக 2010-ல் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 2011-ல் அப்போதைய மாநில தி.மு.க. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்பட அனைத்து அனுமதிகளையும் பெற்று நாங்களே திட்டம் செயல்படுத்துவதை உறுதி செய்வோம்’ என்றது அந்த ஒப்பந்தம். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். திட்டத்துக்கு எதிர்ப்பு இருப்பதைப் பார்த்ததும் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய்ந்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிப்பார்கள் என்று சொன்னார். அவர்கள் ஆராய்ந்தார்களா… இல்லையா? என்று தெரியாது. இன்னமும் அறிக்கை வரவில்லை. ஆனால், அந்த நிபுணர் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையும் இருக்கிறது. அமெரிக்கா, நைட்ரஜன் குண்டு தயாரிக்க வைத்திருந்த வேதிப்பொருள்களை நைட்ரேட் உப்பாக்கி இங்கு கொண்டுவந்து பசுமைப் புரட்சி என்ற பெயரில் மண்ணை மலடாக்கியவர் சுவாமிநாதன். ஆகவே, அறிக்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.
எங்களைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களுக்கு விரோதிகளாகத்தான் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள்கூட அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பது இல்லை. இப்போது நாங்கள் நம்பியிருப்பது மாபெரும் மக்கள் சக்தியை மட்டும்தான். குழாய் அமைக்கப்படும் ஒவ்வோர் ஊரிலும் 2,000 பேர் திரண்டு அதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே எங்கள் திட்டம். ஏனெனில், அரசாங்கமும் சட்டமும் அதிகாரபூர்வமாக எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அதைத் தட்டிக்கேட்பது எங்கள் கடமை!” என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் அவர்.
கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் அலுவலகம் எதுவும் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் அவர்கள் தரப்பின் விளக்கம் பெறுவதற்காக மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டோம். ‘விரைவில் உங்களைத் தொடர்புகொள்கிறோம்’ என பதில் வந்த நிலையில், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரையிலும் எந்தப் பதிலும் வரவில்லை.
கருணாநிதி, திருவாரூர்க்காரர். அ.தி.மு.க-வில் மன்னார்குடிக்காரர்களின் ஆதிக்கம்தான் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன… பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தங்கள் சொந்த ஊர்களைக்கூட திறந்துவிடுவதில் இவர்களுக்கு சிறு தயக்கமும் இல்லை. ஆனால், உழவர்களைப் பொறுத்தவரை இது ‘வாழ்வா, சாவா?’ போராட்டம். இதில் விட்டுக்கொடுத்தால் அநாதைகளாகப் பஞ்சம் பிழைக்க ஊர், ஊராகத் திரியவேண்டி இருக்கும். வண்டல் மண்ணின் வாசம் நிறைந்த மருத நிலத்தின் உழவர்கள், தங்களின் பல்லாயிரம்  ஆண்டு கால விவசாயப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைக்க நடத்தப்போகும் இறுதிப் போர் இது!

கூடங்குளம் தரும் படிப்பினை!
சமகாலத்தில் இதே மின்சாரத்தை முன்வைத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் போராட்டங்களில் ஒன்று கூடங்குளம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம் தொடர்ந்தாலும்கூட நோக்கத்தில் வெற்றி அடைய முடியவில்லை. மின் உற்பத்தியும் பகுதி அளவில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் இருந்து மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும், டெல்டா பகுதி மக்களும் சில படிப்பினைகளைப் பெறவேண்டியது அவசியம்.
இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஜெயராமன், ”மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை, பரவலாக ஆயிரக்கணக்கான இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டும். அந்தந்தப் பகுதி மக்களின் எழுச்சி இல்லாமல் இதை முறியடிக்க முடியாது. அதனால் மக்களிடம் இதுகுறித்த விழிப்பு உணர்வையும், இதன் அரசியல் நியாயத்தையும் எடுத்துச் செல்கிறோம். மேலும், போராட்டத்தை லாபகரமாக மாற்றவும் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும் முயலும் என்.ஜி.ஓ. குழுக்களைத் தடுத்து நிறுத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம்!” என்றார்.
கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன?
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்… கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்.
கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, ‘அவர்கள் யார்?’, ‘நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும்.
  கிராமசபா கூட்டத்தில், ‘எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!
 
நன்றி: http://bharathithambi.com/?p=365

ஞாயிறு, 25 மே, 2014

முசப்பர் நகரில் 'ஆலிம்'கள் மீது 'வகுப்பு வெறியர்கள்' துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி !

முசப்பர் நகரில் 'ஆலிம்'கள் மீது 'வகுப்பு வெறியர்கள்' துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி !

தாருல் உலூம் 'தேவ்பந்த்' மதரசாவில் 'தவ்ரா' பாடங்கள் படித்து வரும், 2 ஆலிம்(மாணவர்)களின் மீது, வகுப்பு வெறியர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகிவிட்டார்.

நேற்று முன்தினம் (23/05), முசப்பர் நகரின் 'மல்லோ புரா' பகுதியில், 'ஜும்ஆ' தொழுகை நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த, அபூசபா ஆசமி, முஹம்மத் முபாரக் ஆகியோர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும், முதலுதவிக்கு பின்னர்' மீரட்' மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

முபாரக்'கின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தபடியால், மேல்சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

வெள்ளிக்கிழமை தோறும், தேவ்பந்த் மதரசாவின் சார்பில், சுற்றுப்புற ஊர்களில் தொழுகை நடத்த அனுப்பி வைக்கும் ஆலிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை தாக்குதலால், மதரசா நிர்வாகம் கடும் அச்சத்தில் உள்ளது.

மதரசா மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது.

குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தற்போது, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் H.N.சிங், தெரிவித்துள்ளார்

நன்றி :மறுப்பு பக்கம்
https://www.facebook.com/photo.php?fbid=639332772820583&set=a.300599480027249.78504.246687175418480&type=1&theater

வியாழன், 22 மே, 2014

அக்ஷர்தாம் தாக்குதல் வழக்கு குற்றமற்றவர்கள் என முஸ்லிம்கள் விடுதலை..

அக்ஷர்தாம் தாக்குதல் வழக்கு
குற்றமற்றவர்கள் என முஸ்லிம்கள் விடுதலை..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குஜராத் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் சம்பவத்தில்
தொடர்புடைய பயங்கரவாதிகள் என்று
குஜராத் அரசால் கைது செய்யப்பட்டுச்
சிறையில் அடைக்கப்பட்ட முஹம்மது சலீம் உட்பட
ஐந்து முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள், நிரபராதிகள் என்று
உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது-
11 ஆண்டுகளுக்குப் பின்பு..!

வரலாற்றுச் சிறப்பு மிக்க
தேர்தல் வெற்றியை மோடி பெற்ற அதே
மே 16ஆம் நாள்தான் இந்த ஐந்து அப்பாவி முஸ்லிம்களையும்
உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இதில் என்ன கொடுமை என்னவென்றால்
அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்த
குஜராத் காவல்துறை,

“கோத்ரா ரெயில் எரிப்பு,
ஹரேன் பாண்டியா கொலை வழக்கு,
அக்ஷர்தாம் தாக்குதல் வழக்கு ஆகியவற்றில்
எதில் மாட்ட விரும்புகிறீர்கள் என்று
நீங்களே தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள்” என்று
குரூரமாகச் சிரித்தபடி எங்களிடம் சொன்னார்கள்”
என்கிறார் விடுதலையான முஹம்மத் சலீம்.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது
இன்னும் பல தகவல்களையும் வெளிப்படுத்தினர்.

“இவர்களைக் காரணமின்றிச் சிறையில் அடைத்த
அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும் என்று
நாங்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என
செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த
ஜமீயத்துல் உலமாயே ஹிந்த் அமைப்பினர் கூறினர்.
-சிராஜுல்ஹஸன் (
Siraj Ul Hasan)

புதன், 21 மே, 2014

"ஆர்.எஸ்.எஸ்=பாரதிய ஜனதா =காங்கிரஸ்"

பாரதிய ஜனதாவின் கொள்கைகளான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டம், பொதுசிவில் சட்டம், மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கு தடை போன்றவற்றை அரசியல் சாசனத்துக்குட்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா 
************************************************
சார் வேறு யாரும் இல்லை .

பல ஆண்டு காலம் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அதை தொடந்து காங்கிரஸின் முத்த தலைவர் மற்றும் குஜராத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
 
 "ஆர்.எஸ்.எஸ்=பாரதிய ஜனதா =காங்கிரஸ்"

 


மீத்தேன் வாயு திட்டத்தை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் ?

மீத்தேன் திட்டம் நடைமுறை படுத்த பட்டால் நம் தலைமுறை
இப்படித்தான் இருக்கும் .ONGC செயல் பாடுகள் அனைத்தும் மீதேன் எரிவாயு எடுக்க பயன் படுத்த படுகிறது அதை நாம் அனுமதிக்க கூடாது
நன்றி:G.v. Varadharajan

தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும் அனுமதி மூன்று நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பெயர்கள்
1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் ( Oil and Natural Gas Corporation Ltd ONGC ) ,
2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் ( Gas Authority of India Ltd GAIL )
3.கிழக்கத்திய எரிசக்தி நிறுவனம் ( Great Eastern Energy Corporation Ltd GEECL ).
இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. இந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும் , அந்த நிலத்தில் எத்தனை மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அந்த நிலத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.

நன்றி :லெனின் பாபு

 

செவ்வாய், 20 மே, 2014

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யலாம்: மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தகவல்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முடிவு களை மாற்றும் வகையிலான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளதாகவும், எனவே, அந்த இயந்திரங்கள் பாதுகாப் பானவை என்று கூறுவது தவறு என்றும் அமெரிக்கப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆய்வுப் பணி களை மேற்கொண்ட பேராசிரியர் ஜே.அலெக்ஸ் ஹால்டர்மேன் தலைமை யிலான மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், முடிவுகளை மாற்ற உதவும் சிறிய கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த கருவியை, வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தி, செல் போன் மூலம் தகவல்களை அனுப்பி, ஏற்கெனவே பதிவாகியுள்ள தகவல் களில் மாற்றம் செய்ய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளதைப் போன்ற டிஸ்ப்ளே போர்டை உருவாக்கியுள்ளதாகவும், அதன்மூலம், பதிவாகியுள்ள வாக்கு களின் விவரத்தை அறிந்து நாம் விரும்பும் மாற்றத்தைச் செய்ய முடியும். இதற்காக பிரத்யேகமாக மைக்ரோபிராசஸர்களை தயாரித்து அக்கருவியில் பொருத்தியுள்ளோம்” என்று அலெக்ஸ் ஹால்டர்மேன் கூறியுள்ளார்.
இதன்படி வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே இயந்திரத்தில் பதிவான தகவல்களில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பான செயல்விளக்கத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக ‘பிபிசி நியூஸ்’ ்கூறியுள்ளது.
இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அலோக் சுக்லா கூறுகையில், “வாக்குப்பதிவு இயந்திரத் தில் மாற்றம் எதையும் செய்ய முடியாது. அது வெறும் இயந்திரம் மாத்திரமல்ல. நிர்வாக ரீதியாகவும் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதை யாராலும் அவ்வளவு எளிதாக திறக்க முடியாது.
வாக்குப்பதிவு நடைபெற்ற பின்பு, சீலிடப்படுகிறது. இந்த சீலை சேதப்படுத்தாமல் இயந்திரத்தில் கைவைக்க முடியாது. எனவே, முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை” என்றார்

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண் 'அபரூபா' எம்.பி'யானார்!

மேற்கு வங்கத்தை சேர்ந்த 'அபரூபா பொட்டார்' என்ற 28 வயது இளம்பெண், சமீபத்தில் தனது பெயரை 'ஆப்ரீன் அலி' என மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவிய நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

BSC LLB பட்டதாரிப் பெண்ணான ஆப்ரீன் அலி'யின், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் பழைய (APARUPA PODDAAR) பெயரே இருந்தபடியால், அதே பெயரில் தேர்தலை சந்தித்தார்.

திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹூக்ளி மாவட்டத்தில் அரம்பாக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆப்ரீன் அலி என்ற தனது இஸ்லாமிய பெயரை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டு தேர்தலை சந்தித்தார்.

ஆரம்பாக் தொகுதியில், 7,48,764 வாக்குகளைப் பெற்ற ஆப்ரீன் அலி, சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக வேட்பாளர்களை தோற்கடித்தார்.

திங்கள், 19 மே, 2014

ஒவைஸியை கொல்ல முயற்சி : ஆர்எஸ்எஸ் தீவிரவாதி சுட்டு கொலை....!!

ஒவைஸியை கொல்ல முயற்சி : ஆர்எஸ்எஸ் தீவிரவாதி சுட்டு கொலை....!!

கர்நாடகா மாநிலம் இந்துப்பூர் அருகே  MIM கட்சியின் தலைவர்களில் ஒருவரான அக்பருதீன் ஒவைஸி அவர்களை கொலை செய்ய காவி தீவிரவாதிகள் முயற்சி செய்துள்ளனர்.

இந்துத்துவ ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகளுக்கும் காவல்துறைக்கும் நடந்த மோதலில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதி கோவிந்த் என்பவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.

மேலும் இரண்டு ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓவைஸியை கொலை செய்ய வந்த இந்த சம்பவத்தால் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் பரபரப்பு காணப்படுகிறது.

தற்போது இறை அருளால் ஒவைஸி நலமுடன் உள்ளார்.

பா

தென்காசி செங்கோட்டை அருகில் உள்ள வள்ளம் என்கிற ஊரில் மதரஸத்நூர் பள்ளியில் பாசிசவெறியாட்டம்


நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை அருகில் உள்ள வள்ளம் என்கிற ஊரில் மதரஸத்நூர் பள்ளி வாசலில் இன்று 18-05-2014 மக்ரிஃப் தொழுகையின் போது பாங்கு சொல்லி தொழுதுக்கொண்டு இருக்கும் போது சுமார் 6 பேர் கொண்ட பாசிச கும்பல் பள்ளி வாசளுக்கு அருகில் நின்றுக்கொண்டு 2 பேர் மட்டும் பள்ளிவாசல் உள்ளே வந்து மைக் உட்பட அங்கு இருந்த பள்ளிவாசல் சாதனங்களை அடித்து நொறுக்கி முஸ்லீம்களை அசிங்கமாக தகாத வார்த்தைகளில் பேசிகொண்டு இருக்கும் போதே தொழுகை முடிந்தவுடன் தொழுகையாளிகள் என்னடா என கேட்ட போது வெளியில் காத்து இருந்த 4 பேரும் வந்து இந்த இரண்டு பேரை அழைத்துக்கொண்டு ஓடி விட்டனர் .

இந்த தகவல் கிடைத்து ஊரில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் ஒன்று இணைந்து வள்ளம் காவல்துறையிடம் முறையிட்டனர் உடனே குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என சொன்னவுடன் காவல்துறை இதுவரை முதல்தகவல் அறிக்கை கூட கொடுக்கவில்லை எனவும்

சுமார் 500 பேருக்கு மேல் காவல்நிலையத்தில் இருக்கின்றனர் ஆனால் ஊடகம் (செய்தியாளர்கள்) இதுவரை அங்கு வரவில்லை என்றும் . ஊடகத்தை அழைத்தால் A.S.P.அரவிந்தன் அவர்கள் ஊடகத்திற்க்கு உத்திரவு போட்டுள்ளாராம் இந்த செய்தி சேகரிக்க
யாரும் வரகூடாது என்று .

இந்த செய்தி அறிந்து சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அதிகாரிகளிடம் கேட்ட போது உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர்

எப்படியோ மோடி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் முதல் பாசிசவெறியாட்டம் நடத்த முன்னோட்டம் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது …

சமுதாயமே விழிப்போடு இருந்தால் இன்ஷாஅல்லாஹ் விஷமிகளின் சதியை முரியடிக்கலாம் .
ஒன்று படுவோம் ! வென்று காட்டுவோம் !!

குறிப்பு :- 2 இரண்டு பேரை கைது செய்துள்ளதாக கடைசியாக வந்த தகவல்..

ஞாயிறு, 18 மே, 2014

மங்களூர்: வெற்றி ஊர்வலத்தில் மஸ்ஜிதை தாக்கிய பாஜகவினர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேற்றைய தினம் (மே 16, வெள்ளிக் கிழமை ) மத்தியில் பாஜகவின் வெற்றியையும் தக்ஷன கன்னட நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது தடவையாக மீண்டும் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தில் பாஜகவினரால் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வெற்றி ஊர்வலங்களில் இரண்டு மஸ்ஜித்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பந்த்வல் தாலுக்காவில் இருக்கும் கம்பலப்பட்டு என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு மஸ்ஜிதுக்கு அருகில் பாஜக வினர் "ஹரஹர மோடி" என்ற வெறிக் கூச்சல்களுடன்,கற்களை மஸ்ஜிதுக்குள் வீசியும்,வெடிகளை வெடித்தும் அராஜகம் செய்திருக்கின்றனர்.
மேலும் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப் பட்டிருக்கிறது.அந்த பள்ளி வளாகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்காக கட்டப்பட்டு வரும் மேடையும் தாக்கி சேதப்படுத்தப் பட்டிருக்கிறது.
பகல் 12:55 மணியளவில் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஒரு குழுவாக புறப்பட்டு வந்த பாஜகவினர் பள்ளிவால் வளாகத்துக்குள் தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு கற்களை வீசத் தொடங்கியதாக நேரில் கண்டவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கிராமத்தில் இரண்டு மஸ்ஜித்கள் இருக்கின்றன. முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜித் எனும் பெயர் கொண்ட இந்த பள்ளியை தான் காவிகள் தாக்கி இருக்கிறார்கள்.
இந்த வாரம் ஜும்மா தொழுகையை இங்கே இருக்கும் இப்ராஹீம் கலீல் மஸ்ஜிதில் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற அந்த கிராமத்து முஸ்லிம்கள் தீர்மானித்து அணைவரும் அந்த பள்ளியில் குழுமத் தொடங்கி இருந்த வேளையில் இந்த முஹியதீன் பள்ளி தாக்கப் பட்டிருக்கிறது.
இந்த பள்ளியின் கதீபாக இருக்கும் ஆலிம் ஜும்மா தொழுகையை நிறைவேற்ற இப்ராஹீம் கலீல் பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அவரை தாக்க பாஜகவினர் முற்பட்டிருக்கிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக அவர்களது தாக்குதலில் இருந்து அவர் தப்பித்திருக்கிறார்.
சம்பவம் நடைபெற்ற இடங்களை போலிஸ் துணை சூப்பிரண்டு நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்.இந்த தாக்குதல் தொடர்பாக 9 பேர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
மேலும் இதே மாவட்டத்தில் கிக்கம்பா அருகே இருக்கும்
சுரல்பாடி என்ற கிராமத்தில் இருக்கு ஒரு மஸ்ஜிதை பாஜகவினர் தாக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.
தகவல் : Zafar Rahmani


http://www.coastaldigest.com/index.php/ls-polls-2014/64664-bjp-activists-resort-to-vandalism-attack-masjids-amidst-celebrations?fb_action_ids=777811275576487&fb_action_types=og.likes