ஞாயிறு, 25 மே, 2014

முசப்பர் நகரில் 'ஆலிம்'கள் மீது 'வகுப்பு வெறியர்கள்' துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி !

முசப்பர் நகரில் 'ஆலிம்'கள் மீது 'வகுப்பு வெறியர்கள்' துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி !

தாருல் உலூம் 'தேவ்பந்த்' மதரசாவில் 'தவ்ரா' பாடங்கள் படித்து வரும், 2 ஆலிம்(மாணவர்)களின் மீது, வகுப்பு வெறியர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகிவிட்டார்.

நேற்று முன்தினம் (23/05), முசப்பர் நகரின் 'மல்லோ புரா' பகுதியில், 'ஜும்ஆ' தொழுகை நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த, அபூசபா ஆசமி, முஹம்மத் முபாரக் ஆகியோர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும், முதலுதவிக்கு பின்னர்' மீரட்' மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

முபாரக்'கின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தபடியால், மேல்சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

வெள்ளிக்கிழமை தோறும், தேவ்பந்த் மதரசாவின் சார்பில், சுற்றுப்புற ஊர்களில் தொழுகை நடத்த அனுப்பி வைக்கும் ஆலிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை தாக்குதலால், மதரசா நிர்வாகம் கடும் அச்சத்தில் உள்ளது.

மதரசா மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது.

குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தற்போது, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் H.N.சிங், தெரிவித்துள்ளார்

நன்றி :மறுப்பு பக்கம்
https://www.facebook.com/photo.php?fbid=639332772820583&set=a.300599480027249.78504.246687175418480&type=1&theater

கருத்துகள் இல்லை: