வியாழன், 29 மே, 2014

மல்லிப்பட்டிணத்தில் முஸ்லிம்கள் மூவர் மீது அரிவாள் வெட்டு...இந்துத்வா தீவிரவாதிகளின்அட்டூழியம்



தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அனைத்து சமூக மக்களும் தாய் பிள்ளையாய் வாழ்ந்து வருவதை சீர்குலைக்கும் நோக்கில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அராஜகத்தில் ஈடுபட்ட பாஜக துணை பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் அவருடைய தீவிரவாத கும்பல்கள் முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்ட இந்துத்துவா காவி தீவிரவாதிகளை காவல்துறையினர் தடியடி நடத்தி 144 தடை உத்தரவு போட்டனர். இந்நிலையில்.... 

நேற்று இரவு 9 மணிக்கு  முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடைய பகுதியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் 4 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 காவி
தீவிரவாதிகள் அரிவாள், கத்தி, சைக்கிள் செயின் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களோடு வந்து முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூரமான முறையில் கொலைவெறி தாக்குதல் நடத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதலில் அப்பாவி 3 சகோதரர்களுக்கு கடுமையான முறையில் வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி உயிருக்கு போராடியவாறு பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மல்லிப்பட்டினம் முழுவதும் இரத்த வெள்ளத்தில் களேபரமாக காட்சியளிக்கிறது.

எந்த ஒரு  ஊடகமும்  இது வரையிலும் செய்தியை வெளியிடவில்லை

கருத்துகள் இல்லை: