திங்கள், 19 மே, 2014

தென்காசி செங்கோட்டை அருகில் உள்ள வள்ளம் என்கிற ஊரில் மதரஸத்நூர் பள்ளியில் பாசிசவெறியாட்டம்


நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை அருகில் உள்ள வள்ளம் என்கிற ஊரில் மதரஸத்நூர் பள்ளி வாசலில் இன்று 18-05-2014 மக்ரிஃப் தொழுகையின் போது பாங்கு சொல்லி தொழுதுக்கொண்டு இருக்கும் போது சுமார் 6 பேர் கொண்ட பாசிச கும்பல் பள்ளி வாசளுக்கு அருகில் நின்றுக்கொண்டு 2 பேர் மட்டும் பள்ளிவாசல் உள்ளே வந்து மைக் உட்பட அங்கு இருந்த பள்ளிவாசல் சாதனங்களை அடித்து நொறுக்கி முஸ்லீம்களை அசிங்கமாக தகாத வார்த்தைகளில் பேசிகொண்டு இருக்கும் போதே தொழுகை முடிந்தவுடன் தொழுகையாளிகள் என்னடா என கேட்ட போது வெளியில் காத்து இருந்த 4 பேரும் வந்து இந்த இரண்டு பேரை அழைத்துக்கொண்டு ஓடி விட்டனர் .

இந்த தகவல் கிடைத்து ஊரில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் ஒன்று இணைந்து வள்ளம் காவல்துறையிடம் முறையிட்டனர் உடனே குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என சொன்னவுடன் காவல்துறை இதுவரை முதல்தகவல் அறிக்கை கூட கொடுக்கவில்லை எனவும்

சுமார் 500 பேருக்கு மேல் காவல்நிலையத்தில் இருக்கின்றனர் ஆனால் ஊடகம் (செய்தியாளர்கள்) இதுவரை அங்கு வரவில்லை என்றும் . ஊடகத்தை அழைத்தால் A.S.P.அரவிந்தன் அவர்கள் ஊடகத்திற்க்கு உத்திரவு போட்டுள்ளாராம் இந்த செய்தி சேகரிக்க
யாரும் வரகூடாது என்று .

இந்த செய்தி அறிந்து சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அதிகாரிகளிடம் கேட்ட போது உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர்

எப்படியோ மோடி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் முதல் பாசிசவெறியாட்டம் நடத்த முன்னோட்டம் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது …

சமுதாயமே விழிப்போடு இருந்தால் இன்ஷாஅல்லாஹ் விஷமிகளின் சதியை முரியடிக்கலாம் .
ஒன்று படுவோம் ! வென்று காட்டுவோம் !!

குறிப்பு :- 2 இரண்டு பேரை கைது செய்துள்ளதாக கடைசியாக வந்த தகவல்..

கருத்துகள் இல்லை: