செவ்வாய், 29 செப்டம்பர், 2009

பாலஸ்தீனை நோக்கி பார்வையை திருப்புகிறது ஹாலிவுட்

சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பிய டொரோண்டோ திரைப்பட விழா தற்பொழுது இஸ்ரேல் பாலஸ்தீனிய பிரச்னையை மறுபடியும் முன்னுக்கு வைக்கின்றது.

கடந்த செப்டம்பர் 26 ல் தொடங்கிய டொரோண்டோ திரைப்பட விழா, "குழந்தைப் பருவத்திலிருந்து அகதிகளாக வாழும் அவலம்" உட்பட பாலஸ்தீனின் அடையாளங்களை கேமரா ஊடே பல கோணங்களில் ஆராயும் என்று நம்பப்படுகின்றது.

இந்த திரைப்பட விழா ஏழு நாட்களில் 34 திரைப்படங்களை டோரோண்டோவின் பல பகுதிகளில் திரையிட உள்ளது.

இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் பல படங்கள் பாலஸ்தீனிற்கு எதிராக இஸ்ரேலின் கொள்கைகளை குறித்து விமர்சிப்பதாக இருக்கும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்பட விழாவின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டானியா மஜித் கூறுகையில், "இந்த திரைப்பட விழாவை டொரோண்டோ பார்வையாளர்களை பாலஸ்தீன் மற்றும் பாலஸ்தீனின் நிதர்சனங்களுடன் இணைக்கும் வழி" என்று கூறினார்.

"இந்த திரைப்பட விழா, தங்களுடைய கருத்துகளை படமாக்க தடைபோடப்பட்டு சிரமப்படும் பாலஸ்தீனிய திரைப்பட தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி, அவர்களது படைப்புகளை உலக்கு வெளிக்கொணரும் அமைப்பு" என்றும் கூறினார்.

இந்த விழா அமரீகா என்ற கனடிய திரைப்படத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்த திரைப்படம், மேற்குக் கரையிலிருந்து இல்லிநோயிசிர்க்கு இடம்பெயர்ந்த கணவனை இழந்த ஒரு பெண் மற்று அவளின் மகனை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

பாலஸ்தீனிய அமெரிக்க தயாரிப்பாளரான Cherien Dabis கூறுகையில், "இந்த திரைப்பட விழாவில் என்னுடைய ஈடுபாடு, ஹாலிவுட் மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் அரபியர்களை குறித்து மக்களிடம் காலம் காலமாக பிரச்சாரம் செய்துவரும் கருத்துக்களுக்கு பதில் கொடுப்பதற்காகவே" என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "பாலஸ்தீனிய படங்களை ஆதரிக்கும் விழாக்கள் மிகவும் அற்புதமாக உள்ளன. மேலும் அவை அரபியர்கள் மற்றும் உலக மக்களிடம் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மேலும் கூறுகையில், "கனடாவில், பாலஸ்தீன கலாச்சார கல்வி நிறுவனம் ஒன்று அமைப்பதற்காக முயற்சி எடுத்து வருவதாக கூறினார்.

மேலும் அந்த திரைப்பட விழாவில் பாலஸ்தீனிய கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாக பாலஸ்தீனிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பெத்தேலேகேமிலிருந்து டொரோண்டோ இஸாம் அல் கைசி அராபிய உணவு விடுதி வைத்திருப்பவர், இவர் உணவு விடுதி அராபிய உணவு வகைகளை இந்த விழாவில் தயாரித்து வழங்கியது.

ரீனா கட்ஸ் என்ற கனடிய திரைப்பட கலைஞர் Jewels in the Machine: New Media Works என்ற தலைப்பில் பாலஸ்தீன் உட்பட உலகளாவிய அளவிலுள்ள வேலைப்பாடுகளை குறித்து படமாக்கியுள்ளார். இவர் கூறுகையில், "யூத மற்றும் பாலஸ்தீனிய மக்களிடையே ஏற்ற இறக்கங்கள் வெகுவாக இருக்கிறது, பாலஸ்தீனியர்களை விட யூத மக்களின் குரல்களே ஓங்கி ஒலிக்கின்றன" என்று கூறினார்.

Elle Flanders இயக்கிய Road Movie, என்ற திரைப்படம் இன ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலைகள் என்ற கருத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் பாலஸ்தீனில் சில சாலைகளில் யூதர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளன.

டொரோண்டோ திரைப்பட விழாவை தொடர்ந்து London, Sydney மற்றும் Houston நகரங்களில் நடக்க இருக்கும் திரைப்பட விழாவில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்கப்படுகின்றது.

இது போன்ற திரைப்பட விழாக்கள் பாலஸ்தீனியர்களை தீவிரவாதிகளாக மட்டும் சித்தரிக்கும் செயலுக்கு ஒரு முடிவு ஏற்படும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியின் இயக்குனர் ரபேப் ஜியாதாஹ் கூறுகையில் "பாலஸ்தீனிய வரலாற்றை பாதுகாத்து வளரும் இளைய சமுதாயத்திற்கு தெரியப்படுத்துவது மிக அவசியமானது" என்று கூறினார்.

இந்த திரைப்பட விழா செப்டம்பர் 26 ல் இருந்து அக்டோபர் 2 வரை நடக்க இருக்கிறது. இந்த திரைப்பட விழா குறித்து தகவலறிய www.tpff.ca பார்க்கவும்.

நன்றி
அல் ஜசீரா

ஷோபியான்: ஆயிஷா, நிலோஃபர் உடல் விசாரணைக்காக தோண்டி எடுப்பு.

காஷ்மீர், ஷோபியான்:
ராணுவத்தினரால் கற்பழித்து கொல்லப்பட்ட நிலோஃபர் மற்றும் ஆயிஷாவின் உடல்கள் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டன.
சோதனைக்காக புதிய மாதிரிகள் எடுக்கப்பட்டன. டெல்லியின் All India Institute of Medical Sciences மற்றும் Central Forensic Lab ஐ சேர்ந்த மருத்துவக் குழுக்கள் ஷோபியானில் இந்த சோதனைக்காக வரவழைக்கப் பட்டுள்ளனர். ஷோபியான் பகுதியில் உள்ள மருத்துவர்கள் யாரும் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்படவில்லை.

இவர்கள் முந்தைய சோதனையின் போது போலியான மாதிரிகளை சமர்பித்தமையால் அப்பகுதியின் மருத்துவர்களை இந்த முறை தவிர்த்துள்ளது C.B.I.

C.B.I. இந்த வழக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து ஏறத்தாழ ஒரு வாரம் ஆகிறது.

ஆயிஷா மற்றும் நிலோஃபரின் உடல்களை அவர்கள் கொலை செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆனதற்கு பின்பு C.B.I விசாரணைக்காக தோண்டி எடுத்திருக்கின்றது.

கொல்லப்பட்டவர்களின் சோதனை மாதிரிகளை தயார் செய்த மருத்துவரை C.B.I. விசாரித்தபோது அவர் இதற்கு முன்பு புல்வாமா மாநிலத்தை சேர்ந்த Gynaecology பிரிவில் பயன் படுத்தப்பட்ட கை உறைகளிலிருந்து மாதிரிகளை சேகரித்ததாக ஒப்புக்கொண்டார்.

C.B.I. இந்த வழக்கை தன் கையில் எடுத்துக்கொண்டதை அடுத்து உண்மை வெளிவரும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நம்புகின்றனர்.

பாதிக்கப்பட்டவரின் கணவரான ஷகீல் அஹ்மத் கூறுகையில், "நான் இது வரை விசாரணைக்காக வந்த எல்லோருக்கும் என்னுடைய முழு ஒத்துழைப்பை கொடுத்துள்ளேன். நான், C.B.I. இடம் நானும் என்னுடைய குடும்பத்தாரும் இந்த வழக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு தருவோம் என்றும் கூறியிருக்கின்றேன்" என்று கூறினார்.

சோதனைக்காக தற்பொழுது உடல்களை தோண்டி எடுப்பதின் மூலம் பல உண்மைகள் வெளி வரும் என்று நம்பப்படுகின்றது.

நன்றி
NDTV

எகிப்தில் 16 இஹ்வான்கள் கைது

எகிப்தில் 16 இஹ்வான்கள் கடந்த சனி அன்று சிறை பிடிக்கப்பட்டார்கள். இதுவரை எகிப்தில் இது போன்று 250 இஹ்வான்கள் சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார்கள். கடந்த சனி அன்று பெஹெரியா என்ற பகுதியில் கமால் கெஷ்மத் என்ற இஹ்வான் உட்பட பதினாறு பேர்களை எகிப்திய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

எகிப்தில் இது போன்று அவ்வப்போது இஹ்வான்கள் கைது செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. இஹ்வான்களில் ஒருவரான முஹம்மத் ஹபீப் இது பற்றி கூறுகையில், "அடுத்த வருடம் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இஹ்வான்கள் போட்டியிடுவதை தவிர்க்கவே இது போன்ற கைது நடவடிக்கைகளை எகிப்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. இது இஹ்வான்களையும் எகிப்திய அரசியலையும் பிரிப்பதற்கான முயற்சி" என்று ஹபீப் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "இதுவரை மட்டும் இதுபோன்று மொத்தம் 250 இஹ்வான்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் சிலபேர் விசாரணை கைதிகளாகவும் சிலர் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்யப்படிருப்பதாகவும்" அவர் கூறினார்.

படம்: இஹ்வானுல் முஸ்லிமீனின் முத்திரை

கடமையை சரியா செய்யுமா காவல்துறை?

சுதந்திர தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் பைப் வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டியை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக சரவணன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் சக்தி வாய்ந்தவை என்றும், வெடித்தால் 200 மீட்டர் தொலைவுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை என்றும் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.


வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று வெடிகுண்டு வைக்க சதி என்று முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து பியூஸ் போன பேட்டரிகளை டேபிளில் வைத்து பீதியைக் கிளப்புவது தான் தமிழக போலீசின் வழக்கம். உடனே அனைத்து செய்தி ஊடகங்களும் 'முஸ்லிம் தீவிரவாதிகள் கைது' என்று தலைப்புச் செய்தியாக பீதியைப் பரப்புவார்கள்.


ஆனால் சக்தி வாய்ந்த வெடிகுண்டு களுடன் பிடிபட்டுள்ள இருவரைப் பற்றிய எந்தச் செய்திகளும் முழுமையாக போலீசாலும் வெளியிடப்படவில்லை. பத்திரி கைகளும் பெரிதாக கண்டுகொள்ள வில்லை. இதுதான் இவர்களின் நடுநிலைத் தன்மைக்குச் சான்று.


இந்நிலையில், கைது செய்யப்பட்டவர் களில் சரவணன் என்பவன் தென்காசி யைச் சேர்ந்தவன் என்று தெரியவந்துள் ளது. தென்காசியில் கொல்லப்பட்ட இந்து முன்னணி அமைப்பின் குமார பாண்டி யன் மற்றும் அவனது சகோதரர்களின் நினைவு நாள் வருவதால் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற் காகக் கூட வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படு கிறது. மேலும், சுதந்திர தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய தினங்களில் சதிவேலைகள் செய்து, அப்பழியை அப்பாவிகளின் மீது போட திட்டமிட்டி ருக்கலாம். ஏற்கனவே தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகளை தாங்களே வீசி கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்த இந்து முன்ன ணியினர் பிடிபட்டது நினைவிருக்கலாம்.


எனவே சரவணனின் பின்னணியை போலீசார் தீவிரமாக ஆராய வேண்டும். சரவணன் மற்றும் குமாரபாண்டியன் குடும்பத்திற்கும் உள்ள தொடர்புகள், அவனது மும்பை தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மேலும் சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பி.ஜே.பி. ஆகிய அமைப்புகளுடன் அவனுக்குள்ள தொடர்புகள் பற்றியும் தீவிர விசாரணை செய்து உண்மைகளைப் பகிரங்கப்படுத்த வேண்டும். மாலேகான் போன்ற குண்டுவெடிப்புகளை சங்பரிவார சக்திகள் தமிழகத்திலும் நடத்திவிடாமல் காவல்துறை விழிப்புடன் இருந்து கண்காணிப்பது அவசியம்.

ஆய்வு செய்ய வேண்டும்!

குமார பாண்டியன் மற்றும் அவனது சகோதரர்களின் நினைவு நாளை ஒட்டி நெல்லை தினத்தந்தி மற்றும் பல பத்திரிகைகளில் விளம்பரம் வெளிவந்துள்ளது. அதில், ''நீங்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வோம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடச் சென்ற இளைஞர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்துதான் உயிரை இழந்தனர் குமார பாண்டியனின் சகோதரர்கள்.

இவர்களின் கொலை வெறியில் இருந்து தப்பித்தவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சி நடக்கலாம் என்று தெரிகிறது. எனவே அவர்களுக்கு தகுந்த பாதுகாப்புகளை காவல்துறையினர் செய்ய வேண்டும். விளம்பரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திங்கள், 28 செப்டம்பர், 2009

உன்னைப்போல் ஒருவன் - விடுபட்டவை

ஒருவழியாக யாரோ ஒரு புண்ணியவான் தயவில் உன்னைப் போல் ஒருவன் இணையத்திலிருந்து தரவிறக்கி பார்த்தாகிவிட்டது. தொழில்நுட்பம், இசை என்கிற பல கோணங்களில் இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் சந்தேகமேயில்லாமல் ஒரு மைல்கல். ஆனால் அற்புதமான ஒரு மேஜையமைத்து, அதில் உயர்தரமான ஒரு பட்டுத்துணியை விரித்து, அதன் மேல் கலைவேலைப்பாடு மிகுந்த தங்கத் தட்டில் வைத்து நரகலை வைத்து பரிமாறியது போல இத்தனை சிறப்பான ஒரு படத்தின் மூலம் இந்துத்துவா என்கிற விஷத்தை பரிமாறியிருக்கிறார் கமல்.

உன்னைப் போல் ஒருவன் படத்தை இந்துத்துவா குப்பை என்று பலரும் விமரித்திருந்தாலும் அவர்களால் கவனிக்கப்படாத பல முக்கிய sub text கள் என் அவதானிப்பிற்கு கிடைத்தன. திரைப்படத்தில் இந்துத்துவா விஷத்தை கலப்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பாத்திரம்தான் கரம்சந்த் லாலா என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. படம் பார்க்கும் முன்புவரை (நான் படித்த விமரிசனங்களில் இருந்து) சந்தானபாரதியின் பாத்திரத்திற்கும் இந்துத்துவா தீவிரவாததிற்கும் தொடர்பு இருக்கும் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் படத்தை பார்த்த பிறகு கரம்சந்த் லாலா என்கிற கதாபாத்திரம் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் கடத்தி உதவி செய்த ஒரு ஆயுத வியாபாரி. அதாவது தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள்தானா என்கிற கேள்வி எழுந்தால் அதுதான் ஒரு கரம்சந்த் லாலா என்கிற இந்து கதாபாத்திரத்தை தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாக காட்டியிருந்தோமே என்று சப்பைக் கட்டுவதற்காகதான் சந்தானபாரதி. அதுபோக “ஒன்னு போனா என்ன? அதான் மிச்சம் இரண்டு இருக்கே” என்று சொந்த வாழ்வின் சோகத்தை பகடி செய்தாலும் ஆத்திரப்படாத அளவிற்கு தீவிரவாதியும் கரம்சந்த்லாலாவும் நண்பர்கள். சந்தானபாரதியின் கதாபாத்திரமே பார்ப்பனீய கருத்தாக்கத்தை படத்தில் புகுத்த திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.

இன்னுமொரு உள்குத்தை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. சந்தானபாரதியின் குற்ற வரலாற்றை விளக்கும்போது Community and Currency - Agnostic என்று ஒரு வசனம் வரும். நானறிந்தவரை Agnostic என்கிற ஆங்கில சொல்லுக்கு கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்று அர்த்தம். அதாவது கரம்சந்த் லாலா ஒரு உண்மையான சனாதானவாதி இல்லை. இதில் யாரை ஏமாற்ற நெற்றியில் திலகம் என்று தெரியவில்லை. இது யாருக்கு வைக்கப்பட்ட ஆப்பு என்றும் புரியவில்லை.

மேலும் அப்துல்லா, இனாயத்துல்லா என்ற பெயர்களைக் கொண்டவர்கள் மட்டும்தான் தீவிரவாதிகள். பிரக்யா சிங் தாகூர், ஸ்ரீகாந்த் புரோகித் என்று பெயர் வைத்தவர்கள் குண்டு வைத்தாலும் அவர்கள் தேசபக்தர்கள். மும்பையிலும், டெல்லியிலும் குண்டுவைத்தவர்கள் மட்டும்தான் தீவிரவாதிகள். மாலேகானில் குண்டுவைத்தவர்கள், நான்டேட்- கான்பூர்- தென்காசி ஆகிய இடங்களில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மகாத்மாக்கள். இதையும் மீறி கரம்சந்த் லாலா என்ற பெயர்களை உடையவர்கள்களுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்க வேண்டுமென்றால் அவர்கள் அப்துல்லாவிற்கும், இனாயத்துல்லாவிற்கும் உதவியிருக்க வேண்டும். மற்றபடி ஸ்ரீகாந்த் புரோகித் என்கிற பெயர்களை உடையவர்கள் எல்லாம் தீவிரவாத பட்டியலிலே இடம்பெற முடியாது. இராமகோபாலன், அர்ஜூன் சம்பத் போன்றவர்களை எல்லாம் மிஞ்சிவிட்டார் கமல்.

இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பற்றிய வசனங்களில் மட்டும் மும்பை, டெல்லி, கோவை என இடங்களின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லத் தெரிந்தவர்களுக்கு, முஸ்லிம் பெண்ணை கருவறுத்த கதையில் மட்டும் North India என்று பொத்தாம் பொதுவாக சொல்லுவது ஏனோ?. குஜராத் என்கிற் சொல் கெட்டவார்த்தையா என்ன சென்சாரில் வெட்டி விடுவார்கள் என பயப்பட? இங்கு குஜராத் என்கிற சொல்லை மட்டுறுத்த தெரிந்த கமலுக்கு “ குஜராத்ல மோதிப்பார், மோதிப் பார்த்தா தெரியும்” என்கிற வசனத்தில் மட்டும் குஜராத் என்கிற சொல்லை பயன்படுத்த முடிகிறது. இவையெல்லாம் யாரை திருப்தி படுத்த என்று தெரியவில்லை.

கரப்பான்பூச்சிகள் வீட்டுக்குள் வந்தால் அடித்துக் கொல்லச் சொன்னவர்கள், விஷப் பாம்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வது என்று சொல்லவில்லையே? சிலருக்கு அது விஷப் பாம்பு சிலருக்கு அது நாகராஜன். இதில் கமல் இரண்டாம் வகைப் போல இருக்கிறது, அதனால்தான் பாம்புகளை கண்டுக்காமலே விட்டுவிட்டார்.

என்னதான் மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் அந்நியன், எவனோ ஒருவன் போல உன்னைப் போல் ஒருவனும் ஒரு இந்துத்துவா குப்பைதான்.

thanks to :

சனி, 26 செப்டம்பர், 2009

ஓரின சேர்க்கை: முஸ்லிம்பெண்கள் மாநாட்டில் எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் த.மு.மு.க., மகளிர் அணி சார்பில் மாநாடு நடந்தது. இதில் காயல்பட்டணம் பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் ஷபானா ஆலிமா, 'ஸகாபா பெண்கள் கற்றுத்தந்த பாடம்' என்ற தலைப்பிலும், அஜ்ஹரா ஆலிமா 'நமது பெண்களும் நவீன கலாச்சாரமும்' என்ற தலைப்பிலும், பாத்திமா சோபியா 'இறையச்சம்' என்ற தலைப்பிலும் பேசினர்.

பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கு வரதட்சணை பெரும் தடையாக உள்ளது. எனவே வரதட்சணைக்கு எதிராக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனிதகுலத்திற்கு எதிரான ஓரின சேர்க்கைக்கு மத்திய அரசு அங்கீகாரம் தர முயற்சிப்பதற்கு பெண்கள் மாநாடு கண்டனம் தெரிவித்ததோடு ஓரின சேர்க்கைக்கு தடை செய்யும் 377வது சட்டப்பிரிவை நிரந்தரமாக அமல்படுத்த மாநாடு வலியுறுத்தியது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவும், பொருளாதார சீரழிவை தடுக்க வட்டியில்லாத பாங்க் முறையை அமல்படுத்தவும் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ச்சே.. ஜஸ்ட் மிஸ்..! மவனே! அடுத்த விஜயகாந்து படத்திலும் கமலஹாசன் படத்திலும் வில்லனா வர்றது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் ராணுவ வீரர்!

பீகார் தலைநகர் பாட்னாவில் வசிக்கும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இந்திய ராணுவத்தில் 5 ஆண்டுகாலம் சிப்பாயாக பணிபுரிந்த இந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பாட்னா அருகே கான்கர்பாக் என்ற இடத்தில் ரகசிய ஆவணங்களுடன் அவர் பதுங்கி இருந்தது காவல்துறைக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

மேலும் விசாரணையில் அவருக்கு ஐ எஸ் ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்பு உள்ளது என்ற திடுக்கிடும் தகவலும் வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள ராணுவ நிலைகளின் வரைபடங்கள், ஏவுகணை வகைகள் மற்றும் அதன் தொழிற்நுட்பம் பற்றிய விவரங்கள் அதன் இருப்பிடங்கள் போன்றவைகள் அடங்கிய தஸ்தாவேஜூகளும் அந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

ராணுவத்தில் உள்ள சிப்பாய்களுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு பல உறுதியான தகவல்களை விவரங்களை இவர் சேகரித்துள்ளார். இந்திய பகுதி காஷ்மீரில் உள்ள ஏவுகணைகளின் தொழிற்நுட்பம், நிறுத்தி வைக்கபட்டுள்ள இடங்களின் வரைபடம் ஆகியவை அவரது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவரிடமிருந்து 5 சிம்கார்டுகளும் ஒரு மொபைல் போனையும் கைப்பற்றிய காவல்துறையினர் அதிலுள்ள நேபாளநாட்டு தொலை பேசி எண்களை கொண்ட சிம்கார்டை கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தகவல்: இந்நேரம்.காம்

மேலே கண்ட தகவலில் சொல்லாமல் விட்ட ஒன்று அந்த நபரின் பெயர்.. அது சுதன் சுதாகர்.

ச்சே.. ஜஸ்ட் மிஸ்..! மவனே! ஒன் பேரு மட்டும் சலீம் அபூபக்கர் என்று இருந்ததுன்னா, இன்னேரம் 'இணைய நீதிமான்'களெல்லாம் சேர்ந்து உன்னை, உன் பரம்பரையை, உன் மதத்தை, உன் மதத்தை பின்பற்றும் மற்ற எல்லோரையும் நார் நாராக கிழித்து தொங்க விட்டு, உனக்கு 'தேசத்துரோகி' பட்டம் சுமத்தி, தூக்குத் தண்டனை கொடுத்து தொங்க விட்டிருப்பார்கள்.

அத்துவானியிலேருந்து தமிழ் புளோக் எழுதுற அம்மாஞ்சி வரைக்கும் உனக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றினாத்தான் இந்தியாவுக்கே விமோசனம் கிடைக்கும் என்று போராட்டம் நடத்தியிருப்பாங்க!

அடுத்த விஜயகாந்து படத்திலும் கமலஹாசன் படத்திலும் வில்லனா வர்ற கொடுப்பினையும் உனக்கு கெடச்சிருக்கும்.

சுதாகர்னு பேரு வச்சிருந்ததாலே தப்பிச்சிட்டேடா மவனே!

உன்னைப் போல் ஒருவன்:ஒரு நடுனிலையாளனின் நியாயமான கேள்வி

இது உன்னைப் போல் ஒருவன் விமர்சனமல்ல
உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் வெளியிடப்பட்டதிலிருந்து பலதரப்பட்ட விமரிசனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில விமரிசனங்கள் அது ஒரு அப்பட்டமான இந்துத்துவா என்கிற பார்ப்பனீயத்தின் பிரச்சாரப் படம் என்றும் மற்ற சில விமர்சனங்கள் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்டவர்கள் (மரண தண்டனை மூலம்)தண்டிக்கப்படாமல் உயிரோடுதான் இருக்கிறார்கள், அதன் காரணமாக மனம் குமுறும் ஒரு சராசரி மனிதனின் சினத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படம் என்கிறது.

நான் இன்னும் உன்னைப் போல் ஒருவனை பார்க்காததால் (இன்னும் எந்த புண்ணியவானும் இணையத்தில் ஏற்றவில்லை) அப்படத்தை என்னால் விமரிசிக்க இயலவில்லை. ஆனால் திரைப்படத்தை இணையத்தில் பலரும் அலசி கிழித்துவிட்டதால் இப்பதிவிற்கு போதிய விடயங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அது மட்டுமில்லாமல் வெட்னஸ்டே வை நான் ஏற்கனவே பார்த்திருப்பதால் இது அறிமுகமான கதைக்களம்தான்.

வெட்னஸ்டே படத்தைப் பார்த்த நடுநிலையாளர்களுக்கு ஏன் முஸ்லிம்களுக்கே அந்தப் படத்தில் இந்துத்துவ சாயல் சற்றும் தட்டுப்படாது. அப்படம் உண்மையிலேயே ஒரு சராசரி மனிதனின் சினத்தின் வெளிப்பாடாகதான் இருந்தது. ஆனால் உன்னைப் போல் ஒருவன் வெட்னஸ்டேயின் கதைக்களத்தில் இருந்து தடம் மாறி சில நச்சுக் கருத்துகளை வெளிப்படுத்தும் படமாக எடுக்கப்பட்டதாகவே உணரமுடிகிறது. உதாரணமாக குஜராத் கலவரத்தில் தன் மூன்று மனைவியரில் ஒருவரை இழந்தவரிடம் ”அதுதான் மிச்சம் இரண்டு இருக்கிறதே” என்கிற குதர்க்க வசனம். அடிப்படையில் Bigamy பற்றி பேச கமலுக்கு நிச்சயமாக அருகதை கிடையாது. இதற்கு மேல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை.


இஸ்லாமியர் என்றாலே நான்கு மனைவிகள் இருப்பார்கள் என்கிற ஒரு கருத்தை படம் பார்க்கும் மக்கள் மீது திணிக்கும் முயற்சியாகவே இது படுகிறது. முஸ்லிம்களிடையே பலதார மணம் என்பது வளைகுடா நாடுகளில்தான் அதுவும் செல்வந்தர்களிடம்தான் பரவலாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பலரும் சமூக பொருளாதார அளவீடுகளில் கீழ்நிலையில்தான் இருக்கிறார்கள். பிழைப்பதற்கே கடினமான சூழ்நிலையில் அவர்கள் பலதார மணம் புரிகிறார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. எனக்கும் பல இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோ அல்லது அவர்கள் குடும்பத்திலோ யாருக்குமே ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் முடித்ததாக நான் அறிந்தவரை இல்லை. மேலும் பதிவுலகத்திலேயே பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களில் எத்தனைப் பேர் பலதார மணம் புரிந்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?. அப்படி பலதார மணம் புரிந்த இஸ்லாமியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவில் இஸ்லாமிய தனிநபர் சட்டம் இஸ்லாமியர்களுக்கு பலதார மணம் புரியும் சலுகையை எனக்கு தெரிந்து முஸ்லிம்களை விட அதிகமாக பயன்படுத்துபவர்கள் இந்தி நடிகர் தர்மேந்திரா, ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வர் சந்தர் மோகன் போன்ற ஹிந்துக்கள்தான். இவர்கள் இரண்டாவது திருமணம் செய்வதற்காகவே பேருக்காக மதம் மாறியவர்கள்.

தீவிரவாதத்திற்கு தீவிரவாதம்தான் பதில் என்றால் இந்தியாவில் பல தீவிரவாத இயக்கங்கள் அதைதானே செய்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போலதான் உன்னைப்போல் ஓருவன் (வெட்னஸ்டே வில் இந்த மாதிரி வசனங்கள் இடம் பெற்றதாக எனக்கு நினைவில்லை) 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மும்பையில் பல முஸ்லிம்கள் இந்த்துத்துவா வெறியர்களால் கொல்லப்பட்டு அந்த தீவிரவாதத்திற்கு பழிவாங்கும் விதமாக 1993 மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழும் வரை இந்தியாவில் குண்டு வெடிப்புகள் காஷ்மீரில் மட்டும்தான் நிகழ்ந்ததாக நான் நாளிதழ்களில் படித்து வந்திருக்கிறேன். 1993க்கு முன் இந்தியாவில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர இந்தியாவில் எத்தனை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது என யாரேனும் சொல்ல இயலுமா?

உன்னைப் போல ஒருவனில் குண்டுவைத்தவனை குண்டுவைத்துக் கொல்வதுபோல மும்பை, குஜராத், ஒரிசா கலவரங்களில் ஈடுப்பட்டவர்களையும் அவர்களை தூண்டிவிட்டவர்களையும் அதே போல பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்வாரா கமல். வெட்னஸ்டேயில் இது போன்ற காட்சிகள் இல்லை என நீங்கள் கேட்கலாம். ஆனால் கமல்தான் வெட்னஸ்டேயை அப்படியே எடுக்கவில்லையே? எடுத்திருந்தால் இத்தனை விமரிசனங்கள் எழுந்திருக்காதே!

இந்தியாவில் சிறுபாண்மையினருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கு வக்காலத்து வாங்க ஜெரிமி பெந்தாமை துணைக்கு அழைப்பவர்கள் அதே ஜெரிமி பெந்தாமின் கருத்தை மலேசியாவில் ஒடுக்கப்படுகிறோம் என்று போராடும் ஹிந்தராஃப் அமைப்பிடம் போய் சொல்வார்களா? இவர்களின் ஆதரவு இலங்கையில் தமிழர்களை இனவொழிப்புக்கு ஆட்படுத்தும் சிங்கள வெறியர்களுக்கும், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சகோதரர்களில் வாயில் மலத்தை திணித்த சாதிவெறியர்களுக்கும், காவிரி பிரச்சினையின்போது பெங்களூரில் தமிழர்களில் உயிர்களை உடைமைகளையும் சூறையாடிய கன்னட வெறியர்களுக்கும் உண்டு என்றே நம்புகிறோம். ஏனென்றால் இந்த இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் அப்பகுதியின் சிறுபாண்மையினர்தான்.

இவர்களின் கருத்துபடிப் பார்த்தால் இந்தியாவில் சாதிரீதியாக பார்த்தால் பார்ப்பனர்கள்/பனியாக்கள் மைனாரிட்டி. வர்க்கரீதியாக பார்த்தால் அம்பானிகளும், டாடாவும், மிட்டலும் மைனாரிட்டி.மொழிரீதியாகப் பார்த்தால் (மத்திய அரசு உயர்பதவியில் இருக்கும்) மலையாளிகள் மைனாரிட்டி.தொழில் அடிப்படையில் பார்த்தால் பொட்டித் தட்டும் ஐ.டிக்காரர்கள் மைனாரிட்டி.

இவர்களுக்கு எல்லாம் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்கிற உணர்வு வராதபட்சத்தில் முஸ்லீம்களும் தலித்துகளும் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று நினைப்பது ஏன் என்று விளக்க முன் வருவார்களா? குறைந்தப்பட்சம் அவர்களுக்கு மும்பை, அகமதாபாத் டெல்லிப் போன்ற நகரங்களில் அவர்கள் விரும்பும் இடங்களில் வீடு வாங்கதான் உதவ முடியுமா?

படைப்பாளியின் படைப்புக்களைதான் விமரிசிக்கவேண்டும் அவர்களின் பிறப்பை வைத்து அவர்களது படைப்புகளை விமரிசிக்கச் கூடாது என்பது மிக மிக நியாயமான வாதம். இதே கருத்தை ஓவியர் எம். எஃப் ஹூசைனை அவரது சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தி அவர் இந்தியாவிற்கு திரும்ப முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளியிருக்கும் பார்ப்பனீய கிரிமினல்களிடம் போய் சொல்லிவிட்டு உடலில் காயம்படாமல் திரும்பி வரச் சொல்லுங்கள் பார்க்கலாம். தஸ்லீமா நஸ்ரினை நாடு கடத்திய வகாபிய கிரிமினல்களுக்கும் எம்.எஃப் ஹுசைனை நாடு கடத்திய பார்ப்பனீய கிரிமினல்களுக்கும் ஒரு வேறுபாடும் கிடையாது. அதேபோலதான் மதத்தின் பெயரால் குண்டுவைப்பவனும் தாயின் வயிற்றிலிருந்து கருவை கிழித்தெடுத்து கொல்பவனும். இருவருமே தீவிரவாதிகள்தான். இவர்களை ஒரே தட்டில்தான் எடைப்போட வேண்டும்.

வெட்னஸ்டே யில் நான்கு பேரையுமே தீவிரவாதிகளாகதான் காட்டியிருப்பார்கள். அதனால்தானோ என்னவோ அப்படத்திற்கு அதிகமாக விமரிசனங்கள் எழவில்லை. ஆனால் உன்னைப் போல் ஒருவனில் தீவிரவாதிகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்துத்துவா தீவிரவாதிகள் என தரம் பிரித்துவிட்டு அதில் ஒரு தரப்பினரை கடுமையாக கண்டித்துவிட்டு இன்னொரு தரப்பினரை பேருக்காக கண்டித்திருப்பது (சோ கலைஞரை கடுமையாக விமர்சித்து, அம்மாவை பேருக்காக விமரிப்பது போல) விமரிசனங்களை எழுப்பவே செய்யும்.
நன்றி:உறையூர்காரன்

வியாழன், 24 செப்டம்பர், 2009

மேற்கு நாடுகளின் தீவிரவாதம்-அகமதிநிஜாத்

Ahmadinejad
நியூயார்க்: மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய நாடுகள் போரையும், ரத்த வெறியையும், ஆவேசத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பி வெறியாட்டம் போட்டு வருகின்றன என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதிநிஜாத் ஆவேசமாக கூறியுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அகமதிநிஜாத் பேசினார். அவர் கூறுகையில், மரியாதையுடன் எங்களை நோக்கி நீட்டப்படும் கைகளைப் பிடித்துக் குலுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், திமிருடன் கை நீட்டினால் அதை வெட்டவும் தயங்க மாட்டோம்.

மேற்கத்திய நாடுகள் திமிருடனடேயே நடந்து கொள்கின்றன. ஜனநாயகத்தைப் போதிக்கும் அந்த நாடுகள், அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறும் வகையிலேயே நடந்து கொள்கின்றன. இதற்கு உலக நாடுகள் பதிலடி தர வேண்டிய நேரம் வந்து விட்டது.

அவர்களுடைய அடக்குமுறை மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

இஸ்ரேல், காஸா முனையில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து வருகிறது. மனிதாபிமானமற்ற கொள்கைளைக் கொண்டுள்ள இஸ்ரேல் அவற்றை பாலஸ்தீனத்தில் அரங்கேற்றி வருகிறது. உலக அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் அது தலையிடுகிறது, ஆதிக்கம் செலுத்த முனைகிறது.

எந்தவித எதிர்ப்பையும் செலுத்த இயலாத அப்பாவிப் பெண்கள் , குழந்தைகளைக் கொல்வதையும், வீடுகள், வயல்கள், மருத்துவமனைகள், பள்ளிகளை அழிப்பதையும் எப்படி குற்றமற்ற செயல்கள் என கூற முடியும்?. இந்த செயல்களை சில அரசுகள் கண்மூடித்தனமாக ஆதரிப்பது வேதனையைத் தருகிறது.

உலகின் ஒரு சிறிய சிறுபான்மை குழு (யூதர்கள்) உலகப் பொருளாதாரத்தையும், அரசியலையும், கலாச்சாரங்களையும் ஆக்கிரமிக்க முயல்வதையும், அடக்குமுறையைக் கையாளுவதையும் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.

புதிய வகை அடிமைத்தனத்தை இந்த சக்திகள் உருவாக்கி வருகின்றன. பிற நாடுகளின் கெளரவத்தை இவர்கள் சீரழிக்கிறார்கள். இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அடக்கம் என்பது வேதனையானது என்றார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அல்ல, தீவிரவாத கவுன்சில்-கடாபி ஆவேசம்

Moammar Gadhafiநியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் என்று சொல்வதை விட தீவிரவாத கவுன்சில் என்று தாராளமாக சொல்லலாம் என்று லிபிய அதிபர் கடாபி ஆவேசமாக பேசினார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.

கடாபி பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க்க கூடாது.

பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக் கடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை . அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பின்லேடன் தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.

குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள்

குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சூன் 8, 2006 அன்று சாகியா அஹ்சன் ஜாப்ரி, குஜராத்தின் அன்றைய காவல் துறை தலைவரான பி.சி. பாண்டேவுக்கு 119 பக்கங்கள் கொண்ட ஒரு புகார் மனுவை அனுப்பினார். இதில் நகை முரண் என்னவெனில், அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 29 ஆவது நபராக பி.சி. பாண்டேயின் பெயரும் இருந்தது. "நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' எனும் சட்ட உதவி அமைப்பு தனது செயலாளர் தீஸ்தா செடல்வாட் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஆவணத்தை தயாரிக்க சாகியாவுக்கு சட்ட உதவிகளை வழங்கியது. இந்த ஆவணத்தைத் தயாரிக்க ஏறத்தாழ 5 மாதங்கள் ஆயின. காவல் துறை உதவித் தலைவர் மகாபத்ராவை, புகார் அளித்தவரை சந்திக்க காவல் துறை தலைவர் அனுப்பியது போன்ற சில சடங்குகள் நடந்தாலும், 2000 பக்கத்திற்கு மறுக்க இயலாத சான்றுகள் அளிக்கப்பட்டிருந்த அந்த ஆவணத்தில், புகாருக்கு வலு சேர்ப்பதற்கான எதையும் கண்டுபிடிக்க காவல் துறை தலைவரால் முடியவில்லை.

தெளிவான சட்ட வழிமுறைகள் இருந்த போதிலும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து குற்றங்களை விசாரிக்க குஜராத் காவல் துறை மறுத்து 8 மாதங்கள் கழித்து, மாநில காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவும் புகாரை விசாரிக்கவும் ஆணையிடக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் புகார்தாரரும், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' அமைப்பும் இணைந்து வழக்கு ஒன்றினை பதிவு செய்தனர். நடந்ததாகச் சொல்லப்படும் குற்றங்களில் மாநில காவல் துறை உயர் அதிகாரிகள் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பதால், சி.பி.அய். மூலம் சார்பற்ற ஒரு விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 2007இல் நடந்த விசாரணையின்போது குஜராத் அரசின் சார்பாக வாதிட்ட அட்வகேட் ஜெனரல் கமல் திரிவேதி, மனுதாரரின் வாதங்களை கடுமையாக மறுத்து வாதிட்டார்.

தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மனுதாரர்கள் ஒரு கூடுதல் மனுவை அளித்தனர். அக்டோபர் 25, 2007 அன்று வெளியிடப்பட்ட "தெகல்கா' வின் ஆபரேசன் சலங்க்' மூலம் வெளிக் கொணரப்பட்டவை குற்றச் சதி திட்டத்தின் பின்னணி குறித்த சட்டத்தை மீறிய ஒப்புதல் வாக்குமூலங்களாகக் கருதி அவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அந்த கூடுதல் மனு கேட்டுக் கொண்டது. நவம்பர் 2007 இல் குஜராத் உயர் நீதிமன்றம் முதல் மனு, கூடுதல் மனு இரண்டையுமே தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சில மாதங்கள் கழித்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததில், மார்ச் 3, 2008 அன்று இம்மனு முதன் முதலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, உச்ச நீதிமன்றம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு பதில் தருமாறு தாக்கீது அனுப்பியதோடு, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனை நீதிமன்றத்திற்கு துணை புரிய "அமிகஸ் க்யூரியாக' நியமித்தது. புகாரின் குறிப்பான தன்மை மற்றும் குற்றச்சாட்டுகளின் பெரும் எண்ணிக்கையை அங்கீகரித்ததோடு, உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு கூறியது : பெருமளவிலான ஆதாரங்கள் இருந்தும் காவல் துறை விசாரிக்க மறுத்தால், ஒரு குடிமகன் என்னதான் செய்ய இயலும்? அந்த குடிமகனுக்கு என்னதான் தீர்வு இருக்கிறது?

வழக்கமான நடைமுறை தாமதங்களுக்குப் பிறகு ஒரு வழியாக ஏப்ரல் 27, 2009 அன்று வழக்கு விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே மார்ச் 26, 2008 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த ஆணையின்படி சி.பி. அய்.யின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.கே. ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருந்தது. அக்குழு பிற 8 முக்கிய வழக்குகளை விசாரிப்பதோடு, இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீதி விசாரணையையும் மேற்பார்வையிடும் என ஆணையிட்டிருந்தது.

இந்தப் புகாரின் தகுதியையும் அதன்பின் இருக்கும் பெரும் உழைப்பையும் அங்கீகரித்த உச்ச நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் உடனடியாக இந்த புகார்களை விசாரித்து மூன்று மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

புகாரில் குற்றம் சாட்டப்பட்ட 63 நபர்களில், 12 பேர் அரசியல்வாதிகள். அதிலும் 2006 இல் மாநில அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள். இதில் நால்வர், முதல்வர் நரேந்திர மோடி (உள் துறை, போக்குவரத்து, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் பொறுப்புகளை ஏற்றிருந்தார்), அமித் ஷா (உள்துறை இணை அமைச்சர்), இந்திர விஜய்சிங் கே. ஜடேஜா (சாலை மற்றும் கட்டடங்கள் துறை அமைச்சர்) மற்றும் பிரபாத் சிங் சவுகான் (பழங்குடியினர் மேம்பாட்டிற்கான இணை அமைச்சர்) ஆகியோர் அதிகாரத்திலும் பதவியிலும் தொடர்கின்றனர். 2007 வரை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்த அசோக் பட், தற்பொழுது மாநில சட்டமன்றத் தலைவராக இருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் மீதமுள்ளவர்களில், 3 பேர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்; 7 பேர் பா.ஜ.க., விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள்ளின் மாநிலப் பொறுப்பாளர்கள் (வி.எச்.பி.யின் அனைத்துலக பொதுச் செயலாளர் டாக்டர் பிரவீன் தொகாடியாவும் இதில் அடக்கம்); 10 பேர் அய்.ஏ.எஸ். அதிகாரிகள், 28 பேர் அய்.பி.எஸ். அதிகாரிகள்.

புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 23ஆம் நபரான கேசவராம் காஷிராம் சாஸ்திரி, வி.எச்.பி.யின் குஜராத் பிரிவு முன்னாள் தலைவராகவும் மற்றும் அகமதாபாத்தின் பால்டியிலிருந்து, வெளிவந்த "விசுவ இந்து சமாச்சார்' இதழின் ஆசிரியராகவும் இருந்தவர். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவர் மார்ச் 2002இல் ரிடிப்டாட்.காம் இணைய தளத்திற்கு வழங்கிய நேர்காணலில், முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் தேர்ந்தெடுத்த முறையில் சேதம் விளைவித்தமைக்காக மிகுந்த பெருமிதத்தோடு உரிமை கொண்டாடியிருந்தார்.

இந்தக் கட்டுரை அச்சேறும் தருணத்தில், சிறப்புப் புலனாய்வுக் குழு தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது போன்று விசாரணை நடப்பது இதுவே முதல் முறையாகும். சூன் 8, 2006 அன்று அளிக்கப்பட்ட புகாரில், விசாரணைக்கு உதவக்கூடிய சாட்சிகளின் பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த சாட்சிகள் அனைவரும் குஜராத்தின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள். நானாவதி-ஷா விசாரணைக் குழுவின் முன் காவல் அதிகாரிகள் அளித்த வாக்குமூலங்கள் மற்றும் மனுக்கள் ஆகியவை முக்கிய ஆதாரங்களாக அளிக்கப்பட்டுள்ளன.

முதன்மைக் குற்றவாளி : நரேந்திர மோடி, குஜராத்தின் முதல்வர்.

பாரதிய ஜனதா கட்சியின் அவதூறு உற்பத்தியாளர்களுடன் இந்தியாவின் பெரும் ஊடகங்களின் மந்தமான புலனாய்வுத் திறனும் இணைந்து, தற்பொழுது சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரிக்கும் புகாரில் முதலமைச்சர் நரேந்திர மோடி மீது எந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டும் இல்லை என்ற பிம்பத்தை வளரச் செய்தன. இதைவிட உண்மைக்குப் புறம்பானது வேறு இருக்க முடியாது. மிக கவனமாக தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலானது, நரேந்திர மோடி மீது நூற்றுக்கும் மேற்பட்ட நேரடியாக குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடுகிறது.

முதன்மைக் குற்றச்சாட்டுகள் :

கோத்ரா நிகழ்வு குறித்து தவறான புரிதலை உருவாக்குதல். பிப்ரவரி 27, 2002 அரசியல் சட்டத்தின் வழி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத் அரசினால் முழுமையான அங்கீகாரம் அளிக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைகளை அரங்கேற்ற, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரசின் எஸ்-6 பெட்டியில் தீயினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், திரித்துப் பயன்படுத்தப்பட்டன.

கோத்ரா அமைந்துள்ள பஞ்ச்மகால் மாவட்டத்தின் நீதிபதியும் ஆட்சித் தலைவருமான ஜெயந்தி ரவி, ரயில் நிலையத்தில் நடந்தது ஒரு விபத்து என்று கூறினார். அதைப் போலவே அன்றைய பிரதமர் வாஜ்பாய், நிகழ்வு நடந்த அன்று மாலை 5 மணிக்கு நாடாளு மன்றத்திலேயே அந்த நிகழ்வு ஒரு விபத்து என்றே கூறினார். அன்று பிற்பகல் 2 மணிக்கு வி.எச்.பி.யைச் சேர்ந்த தனது நம்பிக்கைக்குரிய டாக்டர் ஜெய்தீப் படேல் போன்றவர்களுடன் கோத்ரா வந்து சேர்ந்த முதலமைச்சர் நரேந்திர மோடி வேறு மாதிரியாக முடிவெடுத்தார். அன்று இரவு 7.30 மணியளவில் அகில இந்திய வானொலியின் குஜராத்தி ஒலிபரப்பு ஒன்றில், கோத்ரா நிகழ்வு அய்.எஸ்.அய்.யால் இயக்கப்பட்ட (கோத்ரா முஸ்லிம்களால் நிறைவேற்றப்பட்ட) திட்டமிட்ட சதி என்றார். அதைத் தொடர்ந்த நாட்களில், மோடியின் குருவான எல்.கே. அத்வானியின் பொறுப்பில் இருக்கும் உள்துறை அமைச்சகம், கோத்ரா நிகழ்விற்குப் பின்னால் ஒரு பெரும் சதி இருப்பதாக உலகை நம்ப வைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டது. இன்று வரை அப்படியான சதி ஒன்றும் கண்டறியவோ, நிரூபிக்கவோ படவில்லை.

மோடி அத்துடன் நிற்கவில்லை. எரிந்த அந்த ரயில் பெட்டி அகமதாபாத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதற்கு மாவட்ட நீதிபதி ஜெயந்தி ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் எரிச்சலடைந்த மோடி அடுத்த செயலை செய்தார். எரிந்த உடல்கள் வி.எச்.பி.யின் அன்றைய மாநில பொதுச் செயலாளரான ஜெய்தீப் பட்டேலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உடல்களை ஒரு வாகனப் பேரணியாக அகமதாபாத் "சோலா' சமூக மருத்துவமனைக்கு எடுத்து வரவும் பணித்தார். அங்கு அந்த உடல்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மறுநாள் பிப்ரவரி 28, 2002 அன்று காலை குஜராத்தி நாளிதழான "சந்தோஷ்' வெள்ளைத் துணியில் போர்த்தப்பட்ட எரிந்த உடல்களின் பெரிய வண்ணப்படத்தை ஏழு பத்திக்கு வெளியிட்டு, கொடூரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அந்தப் படத்தில் உடல்களின் அருகில் ஒரு சூலமும் தெரிந்தது. இதன் விளைவுகளைப் பற்றி எந்த அச்சமும் இன்றி உண்மையைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி மோடி தனது சூழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

படுகொலைகளைத் திட்டமிட நடைபெற்ற ரகசியக் கூட்டங்கள் :

பிப்ரவரி 27, 2002 காந்தி நகர், லூனா வாடா, கோத்ரா, பிப்ரவரி 27 அன்று பின்னிரவில் காந்தி நகரில் மோடி ஒரு ரகசியகூட்டத்திற்கு அழைத்திருந்தார். அக்கூட்டத்தில் மூத்த உறுப்பினர்கள் சிலரும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான உத்தரவுகள் போடப்பட்டன. காவல் துறையினரும் அதிகாரிகளும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டனர்.

நீதியரசர்கள் வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் பி.பி. சாவந்த் ஆகியோரை கொண்ட "அக்கறையுள்ள குடிமக்கள் ஆயம்-குஜராத் 2002' வெளியிட்ட அறிக்கையின்படி, “உடனடியாக ஓர் இந்து எதிர்வினை எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அது எவ்வகையிலும் தடுத்து நிறுத்தப்படவோ, அடக்கப்படவோ கூடாது என்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், அரசு நிர்வாக அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடியும் அவருடன் குறைந்தது அவரது அமைச்சரவையின் மூன்று சகாக்களேனும் நேரடியாகப் பங்கு பெற்றனர்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நடந்த நிகழ்வுகளுக்கு இணையாக மோசமானது என்னவெனில், குஜராத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் உட்பட கிடைத்துள்ள சந்தேகத்திற்கு இடமில்லாத சான்றுகளின்படி, முதல்வர் ஒரு ரகசிய கூட்டத்திற்கு அழைத்திருந்தார் என்பதும், அக்கூட்டத்தில் அன்றைய தலைமைச் செயலாளர் சுப்பாராவ், கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அசோக் நாராயண் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள பணிக்கப்பட்டிருந்தனர் என்பதும், அக்கூட்டத்தில் “இந்து கலவரக்காரர்களை தடுக்க வேண்டாம்'' என்று வெளிப்படையாக உத்தரவிடப்பட்டதும் தெரிய வந்தது. ஆக, சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை உட்பட அனைத்து கொடூர வன்முறைகளுக்கும் அரசின் அங்கீகாரமும் ஒத்துழைப்பும் வழங்கப்பட்டிருக்கிறது ("மனிதத்திற்கு எதிரான குற்றம்'-அக்கறையுள்ள குடிமக்கள் ஆயம், குஜராத் 2002 இன் அறிக்கை).

2002 மே மாதத்தில், மோடி அமைச்சரவையின் அமைச்சர் ஒருவர் இந்த ஆயத்தின் முன் இது குறித்து சாட்சியம் அளித்திருக்கிறார். அவரது அடையாளம் மறைக்கப்பட்டிருந்தது. நவம்பர் 2002இல் ஆயத்தின் அறிக்கை வெளியானபோது, ஆய உறுப்பினர்களில் ஒருவர், அவ்வாறு சாட்சியம் அளித்தவர் ஹரன் பாண்டியா என்பதை "அவுட் லுக்' இதழில் வெளிப்படுத்தினார். சில மாதங்களிலேயே பாண்டியா கொல்லப்பட்டார்.

காவல் துறை கையகப்படுத்தும்

முதலமைச்சரின் அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்களான அசோக் பட் (புகாரில் 2ஆவது குற்வாளியாக குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்), இந்திர விஜய் சிங் கே ஜடேஜா (புகாரில் 3ஆவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்) ஆகியோர் காவல் துறையை தங்கள் விருப்பப்படி செயல்பட வைக்க எடுத்த சட்ட விரோத முயற்சிகள். முதலமைச்சர் மற்றும் அவரது சகாக்கள் தீட்டிய ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதி. அமைச்சர்கள் எவ்வாறு காந்தி நகர் மற்றும் ஷாஹிபாக்கில் காவல் துறை கட்டுப்பாட்டு அறையிலேயே அமர்ந்திருந்து காவல் துறை சட்டங்களையும் மரபுகளையும் உடைத்து, காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையிலும் இறங்காமல் பார்த்துக் கொண்டனர் என்பது குறித்தும், அதோடு பல நேரங்களில் குற்றத்திற்கு உடந்தையாகவும் சாட்சியங்களை அளிக்கவும் உத்தரவிட்டனர் என்பது குறித்து அக்காலக் கட்டத்தில் ஊடகங்களில் பல செய்திகள் வெளிவந்தன.

2002 முதல் 2007 வரை சட்ட அமைச்சராக இருந்த பட் இன்று சட்ட மன்றத் தலைவராக இருக்கிறார். குஜராத்தின் சட்ட மற்றும் நீதித்துறையின் ஒட்டுமொத்த தலைவர் என்ற முறையில் 2007 வரை அரசு வழக்குரைஞர்களை நியமிக்கும் முழு அதிகாரத்தையும் அவர் பெற்றிருந்தார். பிப்ரவரி 27 கூட்டம் குறித்தும், அகமதாபாத் நகரம் மற்றும் குஜராத் மாநில காவல் துறை கட்டுப்பாட்டு அறைகளில் அமைச்சர்கள் அமர்ந்து, காவல் துறையினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திய சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

மோடியின் "பழிக்குப் பழி”

பிப்ரவரி 28, 2002 நரோதாவில் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் "தெகல்கா' வெளியிட்ட ஒலிப்பதிவுகளில் உள்ளது. நரோதாவில் 112 பேர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, வெட்டிக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டு வெகு நேரம் ஆவதற்குள் மோடி அங்கு வந்ததாகவும், தனது கறுப்புப் பூனை கமாண்டோக்கள் சுற்றியிருந்த நிலையிலும் கூட அக்கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அவர் மனதாரப் பாராட்டியதாகவும் அந்த ஒலிப்பதிவில் அவர் குறிப்பிடுகிறார் (இதன் மூலம் மோடியின் கறுப்புப் பூனை கமாண்டோக்களும் இந்நிகழ்விற்கு சாட்சிகளாகின்றனர்).

"ஆபரேசன் கலங்க்' "தெகல்கா'வால் பல மாதங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு அக்டோபர் 2007இல் வெளியிடப்பட்டது. 2002 குஜராத் இனப்படுகொலைகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்த பலரது வாக்குமூலங்களும், உரையாடல்களும் கொண்ட ஒலிப்பதிவுகளை தற்போது சி.பி.அய். நீதிமன்றத்திற்கு வெளியே பெறப்பட்ட வாக்குமூலங்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த உரையாடல்களின் உள்ளடக்கங்கள் அதிர்ச்சியூட்டுவனவாகவும் பல செய்திகளை அளிப்பனவாகவும் உள்ளன. கும்பல் கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்றவற்றை அச்சமின்றி வெளிப்படையாக ஒப்புக் கொள்வதோடு, பிப்ரவரி 27, 2002க்கு பல வாரங்களுக்கு முன்பாகவே கோத்ரா மற்றும் கோத்ராவிற்குப் பிந்தைய வன்முறைகளுக்கான திட்டமிடுதல்களும், பிற மாநிலங்களிலிருந்து எவ்வாறு ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டன என்பது குறித்தும் விளக்குகின்றனர்.

அதோடு கும்பல் கொலைகள் மற்றும் வன்புணர்ச்சிகளைத் தூண்டி விடுவதில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு இருந்த நேரடி பங்கையும் விவரிக்கின்றன "தெகல்கா' ஒலிப்பதிவுகள் மூலம் வெளிப்பட்டவற்றின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இந்த ஒலிப்பதிவுகளின் நம்பகத்தன்மை குறித்து ஆராய வேண்டும். "தெகல்கா' பதிவில் பேசிய அனைவரையும், தங்கள் உரையாடலில் அவர்கள் குறிப்பிடும் நபர்களையும் (அவர்கள் எவ்வளவு அதிகாரம் கொண்ட பதவிகளில் இருந்த போதிலும்) சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும்.

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் கணக்கு அலுவலகத்தில் பணிபுரிந்த வதோதரா என்பவருடன் இப்படியான ஓர்உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் மோடி மற்றும் மோடியின் கையாளான பாபு பஜ்ரங்கியின் நேரடி உத்தரவுகள் குறித்து அவர் சொல்கிறார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோடி சென்றது, கொடூரமாக பாதிக்கப்பட்டு சிதைந்து போய் அருகிலுள்ள புனரமைப்பு முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ள மக்களை காண அல்ல; இந்த உரையாடல்களின் மூலம் அவர் கொடூரத்தின் வெற்றி நாயகனாகவே அங்கு சென்றுள்ளதாகத் தெரிகிறது. - அடுத்த இதழிலும்

“கொல்லப்பட்டவர்களின் தலையை வைத்து கிரிக்கெட் விளையாடினோம்''

மோடி நடத்திய ஆவணப்படுத்தப்படாத ரகசியக் கூட்டங்கள் :

பிப்ரவரி 27, 2002 அன்று முதலமைச்சர் மோடியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட ரகசியக் கூட்டத்திற்கு கூட்டக் குறிப்புகளோ அல்லது வேறு ஆவணங்களோ இல்லாதது மட்டுமல்ல; இதே போன்ற பல கூட்டங்கள் உயர் அதிகாரிகளால் நடத்தப்பட்டு, அவர்களுக்கு கீழிருக்கும் அதிகாரிகள் அதில் கலந்து கொண்டுள்ளனர் என்பதோடு, அந்தக் கூட்டங்களுக்கும் எவ்வித ஆவணமும் பராமரிக்கப்படவில்லை.

அன்று காவல் துறை கண்காணிப்பாளர் (பாதுகாப்பு) பதவி வகித்த சஞ்சீவ் பட், இம்மாதிரியான பல கூட்டங்களில் காவல் துறை கூடுதல் தலைவரான ஜி.சி. ரெய்கரின் ஊழியர் அதிகாரியாக கலந்து கொண்டுள்ளார். ஆனால் தனக்கு இடப்பட்ட உத்தரவுகள் குறித்து எவ்வித ஆவணங்களையும் அவர் வைத்திருக்கவில்லை.

கே. என். ஷர்மா, அகமதாபாத் பகுதி காவல் துறை அய்.ஜி. பதவி வகித்த இவரது பகுதியில்தான், அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலவரத்தில் கொல்லப்பட்டிருந்தனர். இவரும் இத்தகைய சட்ட விரோதமான கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

தீபக் ஸ்வரூப், வதோரா பகுதி காவல் துறை அய்.ஜி. இவர் பதவி வகித்த பகுதியில்தான் கோத்ரா நிகழ்வு நடந்தது. அதோடு, சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் கொலைகள் மற்றும் பிற வன்கொடுமைகளையும் நடத்தியிருக்கின்றன. இவரும் இக்கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

எம்.கே. டாண்டன், அகமதாபாத் உதவி ஆணையர். இவரது பகுதியில்தான் நரோதா பாட்டியா, குல்பர்கா சமூகம் உள்ளிட்ட பல கொடூர கும்பல் கொலைகள் நடந்துள்ளன. இவர் உயர் மட்ட வலைப் பின்னலின் பகுதியாக இருந்திருக்கிறார்.

குல்பர்கா தாக்குதலில் தப்பியவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு தப்பியோடிய போதும், கொல்லப்பட்ட 70 பேரின் உடல்கள் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்த போது அவர் அந்த இடத்தில் இருந்திருக்கிறார். 3 நாட்களுக்குப் பிறகு, குல்பர்க் மற்றும் நரோதாவில் கொல்லப்பட்ட 133 உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்ட போது உடல்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தன. "தெகல்கா' விடம் உரையாடும்போது குல்பர்க் சமூக படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மதன் சவால், கொல்லப்பட்டவர்களின் தலையை வைத்து தான் கிரிக்கெட் விளையாடியதாகக் குறிப்பிடுகிறார், விடை தெரியாத கேள்வி என்னவென்றால் அந்த உடல்களைத் துண்டாடியதில் டாண்டனும் பங்கேற்றாரா என்பதே.

அமிதாப் பதக், காந்தி நகர் பகுதி அய்.ஜி. இவரது பகுதியில்தான் கோத்ராவிற்கு பிந்தைய கலவரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். எடுத்துக்காட்டாக, மெஹ்சானா மாவட்டம் சர்தார்புரா மற்றும் சபர்கந்தா மாவட்டத்தில் பல இடங்கள். இவரும் இச்சதியில் பங்கு பெற்றிருந்தார்.

ஷவானந்த் ஜா, அகமதாபாத் காவல் துறை கூடுதல் ஆணையர். இவரது பகுதியில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பல கொடுமைகள் நடந்தன. இவர் முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவர். 2004-2006க்கு இடைப்பட்ட காலத்தில் உள்துறைச் செயலாளராக, அரசு சார்பாக பல தவறான அறிக்கைகளை அவர் உச்ச நீதிமன்றத்தில் அளித்தார். தற்போது உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இவரும் ஓர் உறுப்பினர் என்பது நகை முரண்.

டி.டி. துதேஜா, வதோரா பகுதி காவல் துறை ஆணையர். ஏறத்தாழ 37க்கும் மேற்பட்ட வன்முறை நிகழ்வுகள் இவரது பகுதியில் நடந்துள்ளன. இதில் பெஸ்ட் பேக்கரி நிகழ்வும் அடங்கும்.

நன்றி : ‘கம்யூனலிசம் காம்பட்'

தமிழில் : பூங்குழலி

புதன், 23 செப்டம்பர், 2009

ரம்ஜானுக்காக தோரணக் கொடி கட்டிய 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் ரம்ஜான் பண்டிகைக்காக தோரணக் கொடியை கட்டிய 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக இந்து முன்னணி
ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தோரணக் கொடி

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் சூரியத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எம். ஷேக் பரீத் (வயது 35), மதுக்கூரைச் சேர்ந்தவர் மன்சூர் (21). இவர்கள் இருவரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு மதுக்கூர் பள்ளிவாசல் முதல் கடைத்தெரு வரை தோரண கொடியை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மதுக்கூர் பஸ்நிலையம் அருகே நின்ற ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து, தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டியது. இதில் ஷேக் பரீத்திற்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த மன்சூர் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து மதுக்கூர் போலீசார் இந்து முன்னணி அமைப்பின் மதுக்கூர் ஒன்றிய தலைவரான புலவஞ்சி கிராமத்தைச் சேர்ந்த போஸ் என்ற குபேந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சங்பரிவாரின் புதிய முகம் நடிகன் கமல்?உன்னைப்போல் ஒருவன்!விமர்சனம்

திரை வகை :முஸ்லிம்கள் மட்டுமே திவிரவாதிகள்!

(காதல்,பொழுதுபோக்கு,கலை அல்ல)






சென்னை நகர போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு மர்ம போன் வருகிறது. அதில் பேசிய கமல் ஐந்து இடங்களில் அதி பயங்கர குண்டுகள் வைத்திருப்பதாக மிரட்டுகிறார். போலீஸ் நிலையத்தில் வைத்துள்ள குண்டு பற்றி மட்டும் விவரம் சொல்கிறார். போலீஸ் படை அங்கு முற்றுகையிடுகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் குண்டை செயலிழக்க செய்கின்றனர்.

போலீஸ் வட்டாரமும் அரசும் அதிர்ந்து நிற்கிறது. கமல் திரும்பவும் கமிஷனரிடம் பேசி மீதி நான்கு குண்டுகளும் வெடிக்காமல் இருக்க ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்கும்படி “கெடு” வைக்கிறார்.
போனில் பேசுவது யார்? எங்கிருந்து பேசப்படுகிறது? என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போலீசும், உளவுத்துறையும் அல்லோலப்படுகிறது. கெடு நேரமும் நெருங்குகிறது. வேறு வழியின்றி கமல் கோரிக்கையை கமிஷனர் ஏற்கிறார். நான்கு தீவிரவாதிகளும் கமல் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்படுகின்றனர்.
அவர்களிடம் மேலிட உத்தரவுப்படி உங்களை விடுவிப்பதாகவும் வேனில் தப்பிச் செல்லுங்கள் என்றும் கமல் போனில் கூறுகிறார். கடைசியாக 3 திவிரவாதிகளும், திவிரவாதிகளுக்கு பொருட்கள் சப்ளை செய்தவரும் கொல்லப்படுகிறார்கள்!
திவிரவாத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் உலகில் வாழத்தகுதியற்வர்கள் என்ற கதை நன்றாக உள்ளது; நல்ல கதை தந்தமைக்கு எமது வாழ்த்துக்கள்!
ஆனால்,மிஸ்டர் கமல்! திவிரவாதியென்றால் அது முஸ்லிம் மட்டும் தான் என நீங்கள் நினைப்பதும் அதை அடுத்தவர் மனதில் பதியச்செய்வதும் ஏன்?
இதுவரை நடைப்பெற்ற வகுப்பு கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள் உயிர், உடமை, கற்பு என எல்லாவற்றையும் இழந்தவர்கள் யார்?
அதை நடாத்தியது யார் என்பதை நம் நாட்டு வரலாற்றை ஒரு முறை வாசித்தாலே தெரியும்!
இப்படி உண்மைகளை உறங்கச்செய்துவிட்டு முஸ்லிகளை மட்டும் சித்தரிப்பது சங்பரிவார்களுக்கு நானும் "நம்மவர்"தான் என்று காட்டும் காவிக்கொடியோ?
அல்லது பார்பன விசுவாசமா...?

சனி, 19 செப்டம்பர், 2009

ஈகைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

PLZ RAISE YOUR VOICE AGAINST THIS RACIST ACT





"Kaaba" Bar will be opened soon in New York

Shocking?

In the business area of MID TOWN MAN HATTAN in?New York?a new BAR is opened in the name of APPLE MECCA which is familiar to KAABA MAKKAH This bar will be used for supply of VINE and Drinks. The Muslims of New York are pressurizing Government of USA to not open this BAR.

Please do Forward this to as many peoples as you can.

We need 2 wake up and 2 stand for the dignity of our RELIGION ISLAM!!

Together we can and we will?Inshallah.

வியாழன், 17 செப்டம்பர், 2009

நோன்பு பெருநாள் - ஈகைத் திருநாள்!

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள்.
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.


நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள்.
அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை.
அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள்.
அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.
அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள்.
அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

திங்கள், 14 செப்டம்பர், 2009

மேற்கத்திய நாடுகளில் இஸ்லாம்

மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்



உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் - கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.
பழமையானது - உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே.
இளமையானது - முகமது (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.




உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. வாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.

பல்கேரியாவில் தொழுகை

இத்தாலியில் தொழுகை
இத்தாலியில் தொழுகை
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள்; ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகம் சி.என்.என். (CNN) இந்த தகவலை நமக்குத் தருகின்றது.
குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கறுப்பின அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்கள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவதை கண்டு வெதும்பி இஸ்லாம் கூறும் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை தழுவுகின்றனர்.
அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதே நிலைதான். கிறிஸ்துவத்தின் மீது நம்பிக்கை குறைந்து சர்ச்சுகளுக்கு கூட்டம் வருவது குறைந்து கொண்டே செல்கின்றது. இங்கிலாந்தில், சர்ச்சுகள் மூடப்பட்டு “பார்” களாக மாற்றப்படுகின்றன; அதே நேரம் பல சர்ச்சுகள் முஸ்லிம்களால் முழு நேர வாடகைக்கு எடுக்கப்பட்டு பள்ளிவாசல்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாமே அதுமாதிரியான பள்ளிவாசலில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் சென்றிருக்கும் போது, அங்கே ஜூம்ஆ தொழுதுள்ளோம்.
இஸ்லாம் தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பினும், ஓர் எல்லைக்குட்பட்டே வழங்கி உள்ளது; தனி மனித உரிமைகளை விட சமுதாயத்தின் உரிமைகளுக்கு முதலிடம் கொடுக்கின்றது. ஆனால், மேற்கத்திய உலகமோ சமுதாயத்தின் உரிமைகளை கண்டு கொள்வதே இல்லை. இதனை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் விளங்கலாம். ஒரு பெண் தனக்குப் பிடித்த ஆடையை அணிவது அவளுடைய தனி மனித உரிமை என்கிறது மேற்கு. அது, உடலின் பாகங்களை அசிங்கமாக வெளிப்படுத்தினாலும் சரியே; ஆனால், இஸ்லாமோ கீழ்த்தரமாக ஆடை அணியும் பெண்ணால், சமுதாயத்திற்கு தீங்கு விளையும்; தவறான செயல்களுக்கு தூண்டுதலாக அமையும்; அதனால், அப்பெண்ணின் தனிமனித உரிமையும் பாதிக்கப்படும்; ஆகவே மறைக்க வேண்டிய பாகங்கள் மறைக்கப்பட்டு, ஒரு பெண் இயங்குவதில் தவறில்லை என்று பொது நன்மையை நாடி கூறுகின்றது. இதே போன்றே ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் இதனை தனி மனித உரிமை என்கின்றனர்; ஆனால், இதனால் சமூக கட்டமைப்பு கெட்டு, சமுதாய ஒழுக்கம் தவறி, மாபெரும் அநீதி இழைக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இஸ்லாம் ஓரினச் சேர்க்கையை வேரோடு சாய்க்கின்றது. சமூக உரிமைகளை மதிக்கும் இஸ்லாத்தின் இக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மேற்கத்திய உலகம் மிக வேகமாக இஸ்லாத்தினை நோக்கி நெருங்கி வந்து கொண்டுள்ளது.


ஃபிரான்ஸில் ஹிஜாஜுபுக்கான போராட்டக் காட்சி)
இவ்வாறு இஸ்லாத்தினை நோக்கி முஸ்லிமல்லாதோர் வரும் இவ்வேளையில், மேற்கத்திய முஸ்லிம்களிடையேயும் வெகுவாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஃபிரான்ஸில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய முறைப்படி, தலையை மறைத்துக் கொண்டு (Headscarves) வருவதைத் தடுக்க சட்டம் இயற்றிய போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் இறங்கி தமது உரிமைக்குரிலை எழுப்பினர். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளான எகிப்து, குவைத், ஈராக், லெபனான் மட்டுமன்றி மேற்கத்திய உலகம் முழுமையாக, ஸ்வீடன், கனடா, பிரிட்டன், அமெரிக்கா என பல நாடுகளிலும் முஸ்லிம்கள் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள் நடத்தினர்.
“ நமக்குத் தேவை மாற்றம்” – (Change We need) என்ற தேர்தல் கோஷத்தை முன் வைத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பராக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த கறுப்பின முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தந்தைக்கும், வெள்ளை அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவராவார் இவர். இவர் முஸ்லிமாக வாழவில்லை எனினும், முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதிகளாக சித்தரித்த மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவிற்கு முஸ்லிம் பின்னணியிலிருந்து, அதுவும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதல் குடிமகனாக ஆகியுள்ள நிகழ்வு கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகின்றது.

(நீதிமன்றம் மூலம் ஹிஜாம் அணிய போராடி வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லிம் பெண் சபீனா பேகம்)
முஹம்மது (ஸல்) -வைப் போன்று ஒருவர் இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால், உலகின் அனைத்து பிரசினைகளையும் களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள் வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும் என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷா வின் கூற்றுக்கிணங்க, இன்ஷா அல்லாஹ், அமெரிக்க வெள்ளை மாளிகையை ஒரு சீரிய இஸ்லாமிய சிந்தனையுள்ள முஸ்லிம் ஒருவர் அலங்கரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இந்திய முதல் ஏவுகணை

போரில் முதன்முதலில் ஏவுகணையை பயன்படுத்தியது இந்தியாவின் திப்பு சுல்தான்தான்



திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னேற்றம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில், பிரம்மாஸ் ஏவுகணை திட்ட நிர்வாக இயக்குனர் சிவதாணுப்பிள்ளை பேசியது:


"போரில் முதன்முதலில் ஏவுகணையை பயன்படுத்தியது இந்தியாவின் திப்பு சுல்தான்தான். மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த போரில் அவர் ஏவுகணையை பயன்படுத்தினார். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடியும் அவர்தான். அதிநவீன சூப்பர் சானிக் ஏவுகணையான பிரம்மாஸ் இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. நிலம் மற்றும் கடலில் இருந்தும் ஏவும் பிரம்மாஸ் ஏவுகணை தயாரிப்பு நிறைவு பெற்றுள்ளது. 2012ம் ஆண்டுக்குள் பிரம்மாஸ் ஏவுகணை தயாரிப்பு பணி நிறைவு பெறும்". இவ்வாறு சிவதாணுப்பிள்ளை கூறினார்.


பின்னர் மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், ‘‘சந்திரயான் செயற்கைகோள் பழுதடைந்து விட்டது என்று கவலைப்படத் தேவையில்லை. இவ்வளவு நாள் வந்ததே பெரிய வெற்றிதான். சந்திரனை ஆய்வு செய்யும் நமது முயற்சிக்கு உரிய பலன் கிடைத்துள்ளது. அதை ஏவியதன் நோக்கம் நிறைவேறிவிட்டது. எனவே சந்திரயான் திட்டம் தோல்வியில்லை. நானோ தொழில் நுட்பம் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களை தீர்க்கும் வாய்ப்பும் உள்ளது’’ என்றார்.

மோடி அரசை டிஸ்மிஸ் செய்

போலி என்கவுண்டர்கொலைகள்:நரேந்திரமோடி அரசை டிஸ்மிஸ் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தல்
போலி என்கவுண்டர்கள் மூலம் அப்பாவிமக்களை கொலைச்செய்த நரேந்திரமோடி தலைமையிலான குஜராத் பாரதீய ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டுமென்றும், இதுவரை குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ள அனைத்து என்கவுண்டர்கொலைகள் பற்றியும் அதில் குஜராத் அரசின் பங்கை பற்றியும் விரிவான விசாரணையை மேற்கொள்ளவேண்டுமென்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
19 வயதான கல்லூரி மாணவி இஸ்ரத் ஜஹானையும் மற்றும் 3 நபர்களையும் குஜராத் போலீஸ் இரத்தத்தை உறையவைக்கும் வகையில் என்கவுண்டர் பெயரால் சுட்டுக்கொன்றுள்ளனர் என்ற அதிர்ச்சிதரும் தகவல் இந்தவாரம் அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் நீதிமன்ற நீதிபதி தமாங்கின் நீதிவிசாரனை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநில முதல்வராக இருக்கும் நரேந்திரமோடி மனிதத்தன்மையையும், ஜனநாயகத்தையும் மதிப்பவராக இருந்தால் இந்தக்கொலைகளுக்கு பொறுபேற்று பதவி விலகவேண்டும். நீதி விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள போலி என்கவுண்டர்களின் மூலம் அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றுள்ள குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும்.
குஜராத் போலீஸ் கூறுகிறது, இஸ்ரத் ஜஹானும் மற்ற 3 நபர்களும் லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தைச்சார்ந்தவர்களென்றும் அவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி குஜராத் மாநிலத்திற்கு முதல்வர் நரேந்திரமோடியை கொல்லவந்தார்களென்றும் அப்போது அவர்களை சுட்டுவீழ்த்தியதாகவும் கூறுகிறது. ஆனால் நீதி விசாரணை அறிக்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் நரேந்திரமோடியை கொல்ல முயற்சி என்று கூறி அவருக்கு சிந்தனை ரீதியான ஆதரவை உருவாக்கும் நோக்கத்தில் தீட்டப்பட்ட விரிவான வகுப்புவாத சதித்திட்டம் இந்த போலி என்கவுண்டர் கொலைகள் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே புலனாய்வு ஏஜன்சிகள் 2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு நரேந்திர மோடி ஆதரவளிக்கிறார் என்று கூறியுள்ள நிலையிலும் அவர் முதல்வராகவே தொடர்கிறார்.தற்பொழுது சொரஹ்புதீன் சேஹ்,இஸ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர்களின் என்கவுண்டர்கள் போலி என்று தெளிவுப்படுத்தப்பட்ட நிலையில் மோடி குஜராத் மாநில முதல்வராக தொடர்வது ஜனநாயகத்தை கேலி செய்வதும், நமது நாட்டின் மதசார்பின்மை அடையாளத்திற்கு அவமானகரமானதுமாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் அவர்கள் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.

ஐய‌ம்ஹ‌லால் தேடிய‌ந்திர‌ம் imhalal search



ஐய‌ம்ஹ‌லால் என்னும் பெய‌ரில் அந்த‌ தேடிய‌ந்திர‌ம் அறிமுக‌மாகியுள்ளது.

இண்டெர்நெட்டில் ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ளோடு ஆபாடச‌மான‌ ச‌ங்க‌திக‌ளும் உள்ள‌ன‌. உண்மையான‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இத‌னை விரும்பமாட்டார்க‌ள்.அத‌ற்காக‌ இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்த‌ம‌லும் இருக்க‌ முடிய‌து.என்ன‌ க‌வ‌ன‌த்தோடு ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்.

எத்த‌னை தான் க‌வ‌ன‌மாக‌ இருந்தாலும் ச‌ம‌ய‌ங்க‌ளில் வேண்டாத‌ த‌க‌வ‌ல்க‌ளும் ஆபாச‌மான‌ ப‌ட‌ங்க‌ளும் எட்டிப்பார்த்து ச‌ங்க‌ட‌த்தை த‌ருவ‌துண்டு.

இந்த‌ ச‌ங்க‌ட‌த்தை த‌விர்த்து ந‌ல்ல‌வித‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே த‌ருவ‌து தான் ஐய‌ம்ஹலால் தேடிய‌ந்திர‌த்தின் நோக்க‌ம்.இஸ்லாமிய‌ர்க‌ள் த‌வ‌று என்று க‌ருத‌க்கூடிய‌ ப‌த‌ங்க‌ளை த‌விர்த்து விட்டு தேட‌ல் முடிவுக‌ளை இது ப‌டியலிட்டு த‌ருவ‌தாக‌ கூறுகிற‌து.

என‌வே இஸ்லாமிய‌ர்க‌ள் இதில் ச‌ங்க‌ட‌மில்லாம‌ல் தேட‌லாம்..

சனி, 12 செப்டம்பர், 2009

"ஏன் இஸ்லாம்?"கலிஃபோர்னியாவில் விளம்பரப் பிரச்சாரம்

Why Islam?பலவித விளம்பரப் பலகைகளைக் கண்டு பழகிய அமெரிக்க மக்களுக்கு இப்பொழுது புதிதாய்த் தென்படத் துவங்கியுள்ள விளம்பரப் பலகை, "ஏன் இஸ்லாம்?" என்பதாகும். ஆங்கிலத்தில் ”Why Islam?" என்று சட்டெனச் சுண்டியிழுக்கும் விளம்பரம். பே ஏரியா (Bay area) எனப்படும் பகுதியில் அமைந்துள்ள சான் ஓசே, சான்டா க்ளாரா, கன்கார்ட் நகரங்களில், பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில் என அங்கெங்கெனாதவாறு கலிஃபோர்னியாவில் எங்கெங்கும் திடீரெனத் தோன்றியுள்ள ”ஏன் இஸ்லாம்?” எனும் விளம்பரப் போஸ்டர்கள், இலவசக் குர்ஆன் பிரதிகள் அளிக்கப்படுவது பற்றியும் இஸ்லாமிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் கட்டணமற்ற தொலைபேசி (டோல் ஃப்ரீ) எண் பற்றியும் தெரிவிக்கின்றன.
ஏறக்குறைய செப்டம்பர் 11, நிகழ்வுக்கு ஓராண்டுக்கும் முன்பாகவே இந்த விளம்பரப் பலகைத் தி்ட்டம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான தாரிக் அமானுல்லா, உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்து போனது ஒரு வினோத முரண்.

இந்த விளம்பரத் திட்டத்தின் எளிய செய்தி, "இஸ்லாம் என்பது மக்களைக் கொல்லும் தீவிரவாதம் அல்ல; ஆனால் அவர்களின் உயர்வுக்கான மார்க்கம்".


Why Islam travelsஅமெரிக்காவில் முழு வீச்சாய் இஸ்லாமியப் பணியாற்றி வரும் அமைப்பு ICNA (Islamic Community of North America). ”ஏன் இஸ்லாம்?” எனும் இந்தத் திட்டத்திற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்று ஆதரவளித்து வருகிறது. இதன் பே ஏரியா கிளையின் வெளித்தொடர்பு செயலாளர் அஹ்மத் கலீலுக்கு 30 வயது. "செப்டம்பர் 11 நிகழ்விற்குப் பின், இங்கு இஸ்லாம் என்பது 'சாந்தி'க்கு எதிர்மறையான தீவிரவாதமாகப் பார்க்க ஆரம்பிக்கப்பட்டது. இஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே! மக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும். மக்கள் முஸ்லிம்களைக் கடின உழைப்பாளிகளாகவும் அமைதி விரும்பும் குடும்பஸ்தர்களாகவும் உணர வைக்க இந்தத் திட்டம் பயன்படும்" எனும் கருத்துப்பட கூறியுள்ளார்.

நியூ ஜெர்சியிலுள்ள இந்த அமைப்பின் தொலைபேசித் தகவல் மையத்தில் பணியாற்றும் தொண்டர் அஷ்ஃபாக் பார்க்கர், "யூதர்கள், கிறி்த்தவர்கள்போல் நாங்களும் ரமளானில் நோன்பு நோற்கிறோம். இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மதத்தவர் என்ற அடிப்படையில் அவர்களிடமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவை வளர்க்க முயல வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” எனறார்.

அதற்கேற்ப சான் ஓஸே 880 தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை, ”இஸ்லாம் என்பது ஆபிரகாம், மோஸஸ், ஈசா மற்றும் முஹம்மது நபியின் பிரச்சாரத்தின்படி அமைந்த மார்க்கம்தான்” என்று அறிவிக்கிறது. கலிஃபோர்னியாவில் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களும் அதிகம் ஆதலால், சில பலகைகள் ஸ்பானிஷ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் முஸ்லிம்களின் பொருளுதவி இந்த விளம்பரப் பலகை நிர்மாணத்திற்கு உதவுகின்றது. சிகாக்கோ, ஹுஸ்டன், பிலடெல்ஃபியா, பாஸ்டன், ஃப்ளோரிடா ஆகிய மாநிலங்களின் நெடுஞ்சாலைகளிலெல்லாம் இந்த விளம்பரம் பரவி வருகிறது. நெடுஞ்சாலைகளிலுள்ள பெரிய விளம்பரப் பலகைகள் அமைக்க ஒவ்வொன்றும் 1,000 முதல் 5000 டாலர்கள் வரையும், சிறிய விளம்பரங்கள் ஒவ்வொன்றுக்கும் 200 முதல் 500 டாலர்கள் வரையும் செலவாவதாய்த் தெரிகிறது.

"இஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே! மக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும்

1-877-WHY-ISLAM எனும் தொலைபேசி ஹாட்லைனுக்கு சராசரியாய் ஒரு மாதத்தில் 1000 தொலைபேசி விசாரணைகளும் ஏறக்குறைய அதே அளவு மின்அஞ்சல் விசாரண WhyIslam.org எனும் இணைய தளத்திற்கு வருவதாகவும் பார்க்கர் தெரிவிக்கிறார்.

சான்டா க்ரூஸ் பகுதியிலிருந்து பே ஏரியாவுக்குப் பயணிக்கும் ப்ரூஸ் க்ரீன் என்பார் ஒரு கிறித்தவ மத போதகர். அனைத்து மதத்திற்கு மத்தியிலும் பாலம் அமைக்கும் நல்முயற்சியில் ஈடுபட்டுள்ள இவருக்கு நிறைய இஸ்லாமிய நட்பும் உண்டு. இந்த விளம்பரங்களை நெடுஞ்சாலைகளில் கண்ணுற்ற அவர், முஸ்லிம்கள் இப்பொழுது மேற்கத்திய மக்களை சென்றடையும் வகையில் பணியாற்றுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சான்டா க்ளாரா ICNA கிளையின் உதவித் தலைமையாளர் அமீன் அஷ்ரப், இந்த விளம்பரங்களுக்குப் பிறகு இஸ்லாம் பற்றி விசாரிக்கும் ஆர்வத்தில் மஸ்ஜிதுகளில் பல புதிய முகங்கள் தென்படுவதாகவும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8000 தொலைபேசி விசாரணைகள் இருந்தன என்றும் கூறினார்.

எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரே ஒருவரின் இஸ்லாமிய விரோத மனப்போக்கைக் களைய முடிந்தாலே அது இந்தத் திட்டத்தின் வெற்றிதான் என்பது இதன் அமைப்பாளர்களின் கருத்து. அவ்வகையில் நோக்கினால் பரவலாக அமெரிக்கா முழுவதும் இது சிறப்பான பலனைத் தருவதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.

தகவல் : சகோ. நூருத்தீன், கலிஃபோர்னியா.

துபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு



துபாய்: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியாவுக்கு முதலிடம்.
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12-வது வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச்சார்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதுதான் 84 நாடுகளைச்சார்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றவர்.
இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழுக்குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம்பெற்றவர்.
முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது. துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பரிசினை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார். இப்ராஹீமின் தந்தை ராசல்கைமா அஹ்மத் பின் ஃபவ்ல் மஸ்ஜிதில் 20 வருடமாக இமாமாக வேலைபார்த்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக துபாய் புனித குர்ஆன் மனனப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குக்கொள்வது கோழிக்கோடு மர்க்கஸைச்சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதை நாமும் வாழ்த்துவோம்.

டெல்லி:வதந்தியால் ஏற்பட்ட நெரிசலில் 5 மாணவிகள் பலி


டெல்லி: டெல்லியில் பள்ளிக் கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களில் ஷாக் அடிப்பதாக கிளம்பிய வதந்தியையடுத்து மாணவிகள் அலறியடித்து வெளியேறிதில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர்.
மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.டெல்லியில் கன மழை பெய்து வரும் நிலையில், கஜுரிகாஸ் என்னுமிடத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள இந்த பள்ளியின் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களிலும் தரையிலும் மின்சாரம் பாய்ந்துள்ளதாக வதந்தி பரவியது.இதையடுத்து முதல் மாடி வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவிகள் பீதியடைந்து கீழே இறங்கினர். இந் நிலையில் கீழ் தளத்தில் இருந்த மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் மேலே ஏறினர். மிகக் குறுகலான அந்தப் படிக்கட்டுகள் வழியாக மாணவ-மாணவிகள் மேலே ஏறவும், கீழே இறங்கவும் முயற்சித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் பல மாணவ, மாணவிகள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பிற மாணவ, மாணவிகள் ஏறி மிதித்துக் கொண்டு ஓடியதில் 5 மாணவிகள் பலியாயினர். 12 வயதான அஃப்ரோஸை காணாமல் தேடி அலைந்த அவருடைய தாயார் ஷம்சாரி "எனது மகள் ரமலான் நோன்பு நோற்றிருந்தாள்.இனி அவள் நோன்பு திறக்க வரமாட்டாள்".என்று கூறி அழுதது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 26 பேர் மாணவிகள் ஆவர். அவர்கள் ஜி.டி.பி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்து ஆறுதல் கூறினார். மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து விசாரணைக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தாடி வளர்த்ததால் நீக்கப்பட்டமுஸ்லிம் மாணவரை மீண்டும் சேர்க்க வேண்டும்

புதுடெல்லி, செப்.12-மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள `நிர்மல் கான்வெண்ட்' பள்ளியில் 10-ம் வகுப்பில் படித்த மாணவர், முகமது சலீம். அவர் தாடி வளர்த்ததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோரைக் கொண்ட `பெஞ்ச்' முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாடி வளர்த்ததற்காக பள்ளியில் இருந்து முஸ்லிம் மாணவரை நீக்குவது என்றால், சீக்கிய மாணவர் தாடி வளர்த்தாலும் நீக்கப்படுவாரா? வருங்காலத்தில் சிவப்பான நிறத்தின் அடிப்படையில் கூட ஒரு மாணவரை நீக்கும் நிலை வருமா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பினார்கள்.மாணவர் முகமது சலீமை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவரின் மனு குறித்து பதில் அனுப்பவும் நோட்டீசு அனுப்பினார்கள். சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் தற்போது 3-வது முறையாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 10 செப்டம்பர், 2009

கணக்கு தெரியாத இஸ்ரேல்

இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பு ஒன்று, 22 நாட்கள் இஸ்ரேல் அநியாயமாக பாலஸ்தீன் மீது நடத்திய ஆக்கிரமிப்பு தாக்குதலில் பலியானவர்களில் பாதிக்கும் மேலானோர் அப்பாவிப் பொதுமக்களே என்று கூறியுள்ளது. தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, இஸ்ரேல் தாக்குதலின் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போராளிகள் என்று கூறியது பொய் என்று தெரிய வந்துள்ளது.

B'Tselem என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1387 பாலஸ்தீனியர்கள் இந்த ஆக்கிரமிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 773 பேர் அப்பாவிப் பொது மக்கள் என்றும், 330 பேர் போராளிகள் என்றும், 248 பேர் காவல்துறையினர் என்றும் 36 பேர் போராளிகளா இல்லை பொதுமக்களா என்று அடையாளம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

அந்த அறிக்கை மேலும் கூறுகையில், கொல்லப்பட்டவர்களில் 320 பேர் 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் என்றும் கூறியுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிக்கையின்படி 1166 பேர் இஸ்ரேல் தாக்குதல் நடத்த முயன்ற போது கொல்லப்பட்டதாகவும், அதில் 709 பேர் போராளிகள் எனவும், 295 பொதுமக்கள் என்றும், 162 பேர் யார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

தற்பொழுது B'Tselem வெளிட்டுள்ள அறிக்கையைப் பற்றி இஸ்ரேல் அதிகாரிகளிடம் கேட்டதிற்கு அவர்கள் அதனை மறுத்துள்ளனர். B'Tselem ன் கணக்கெடுப்பு தவறானது என்றும் அது வலையுலக தகவலை வைத்து இந்த முடிவிற்கு வந்ததாக கூறியுள்ளனர்.

இதனை மறுத்த B'Tselem, அது காசாவின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்று இந்த அறிக்கையை தயார் செய்ததாக கூறியுள்ளது. அது மேலும் இஸ்ரேலிய அரசை இது தொடர்பான சுதந்திரமான விசாரணையை தொடங்க கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாவது, இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் சர்வதேச சட்டம் ஒழுங்கை பேணி நடந்தது என்று கூறியுள்ளனர். (இந்த ஆக்ரமிப்பு தாக்குதலில் இஸ்ரேல் நடத்திய அத்துமீறல்கள் நாம் அனைவரும் அறிந்ததே....)

இஸ்ரேலின் இந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி இஸ்ரேலிய

துபாய் மெட்ரோ ரயில் ஓடத்துவங்கியது











துபாய்: 2800 கோடி செலவில் 4 வருடமா நடைபெற்ற பணி பூர்த்தியான நிலையில் அரபு நாடுகளில் முதன்முதலாக ட்ரைவர் இல்லாத மெட்ரோ சர்வீஸ் நேற்று இரவு (செப்.09/09) துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேஹ் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பச்சைகொடி காண்பித்து துவங்கி வைத்தார்.








ஷேக் செய்யத் சாலையிலிலுள்ள மால் ஆஃப் எமிரேட்ஸில் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஷேஹ் முஹம்மது மெட்ரோ ரெயிலை பொதுமக்களுக்காக திறந்துக்கொடுத்தார்.

நாளை காலை முதல் பயணிகளுக்காக மெட்ரோவின் கதவுகள் திறக்கும். பணிகள் நிறைவடைந்த 10 ஸ்டேசன்களில் ரெயில் ஓடும். துபாய் சர்வதேச விமானநிலையத்தின் அருகிலிலுள்ள ராஷிதியா ஸ்டேஷனிலிருந்து ஜெபல் அலி வரையிலான ரெட்லைனிற்கு 52 கி.மீ நீளம். இந்தவழியில் 19 ஸ்டேசன்களின் பணி பிப்ரவரியில் முடிவடையும்.

மிட்சுபிஷிஹெவி இண்டஸ்ட்ரீஸ், ஒபயாஸி, கஜிமா கார்ப்பரேஷன், யாபி மார்க்கஸி, மிட்சுபிஸி ரெயில்வே உள்ளிட்ட உலகின் பிரபல 5 கம்பெனிகளும், 150 சிறிய கட்டுமான கம்பெனிகளும், 30 ஆயிரம் தொழிலாளர்களும் இணைந்து சாதனை வேகத்தில் துபாய் மெட்ரோவை பூர்த்தியாக்கியுள்ளனர்.

கிஸைஸ் முதல் துபாய் ஷாப்பிங்காம்ப்ளக்ஸ்களை சுற்றி ஜித்தாஃபில் முடிவடையும் கிரீன் லைன் மார்ச் மாதத்தில் பயணிகளுக்காக திறக்கப்படும். ஒரு மணிநேரத்தில் 6 ரெயில்களில் 3858 பயணிகளுக்கு தற்ப்போது பயணம் மேற்க்கொள்ளலாம். வி.ஐ.பி, சாதாரண நபர்கள், பெண்கள் குழந்தைகள் என 3 விதமான வகுப்புகள் துபாய் மெட்ரோவில் உள்ளது. தற்ப்போது 6 லட்சம் பேருக்கு தினமும் பயணம் செய்ய இயலும்.

2020 முதல் இது 18 லட்சமாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் 17 சதவீதம் குறையுமென்றும் கருதப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் 1.7 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுகிறது.

மெட்ரோ ரெயில் பயணத்திற்காக இந்தியர்கள் பலரும் பெருநாள் விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.

புதன், 9 செப்டம்பர், 2009

என்னை எவரும் மதமாற்றவில்லை, மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் – ஸில்ஜா ராஜ்


பத்திரிகையாளர் சந்திப்பில் ஸில்ஜாராஜ் தனது கணவர் அஸ்கருடன்

கடந்த
சில வாரங்களாக கேரள பத்திரிகைகளில் விவாத்ததைகிளப்பிய செய்தி என்னவெனில் சிலர் பெண்களை இஸ்லாத்திற்கு மதமாற்றம்செய்யும் பணியை மேற்க்கொள்வதாகவும் அவர்கள் தீவிரவாத இயக்கத்தைச்சார்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுவந்தன.

ஹிந்து
ஐக்கியவேதி என்ற ஹிந்துத்துவா பாசிச அமைப்பும் முஸ்லிம்கள் லவ்ஜிஹாதை துவக்கியுள்ளதாக பிரச்சாரம்செய்தது.

பத்திரிகைகளின் இந்த சூடான செய்திகளுக்கும் ஹிந்து ஐக்கியவேதியின் லவ் ஜிஹாதிற்கும் காரணமானவராக கருதப்படும் ஸில்ஜா ராஜ் என்பவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து சத்தியம் என்ன என்பதை தெளிவுப்படுத்தினார்.

ஸில்ஜா
ராஜ் கர்நாடகா மாநிலத்தில் சாமராஜ் நகர் சதி ரோடில் அமைந்துள்ள பங்கஜ் என்ற பேக்கரி உரிமையாளரான செல்வராஜின் மகள். இவர் கண்ணூரில் சிற்றாரிக்கடையில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு வந்தபொழுது டாக்ஸி ட்ரைவரான அஸ்கருடன் காதல் ஏற்படுகிறது. சிவில் என்ஞ்சினியரிங் மாணவியான ஸில்ஜா டிப்ளமோ முடித்தவுடன் கம்ப்யூட்டர் படிக்கும் காலக்கட்டத்தில் அஸ்கரை திருமணம் முடிக்க முடிவெடுக்கிறார். கடந்த மாதம் 8 ஆம் தேதி பெற்றோரை அறிவிக்காமல் அஸ்கரை சந்திக்க அவர் வேலைபார்க்கும் கோட்டயம் அருகிலிருக்கும் ஈராட்டுப்பேட்டை என்ற ஊருக்கு வந்துள்ளார். வரும் வழியில் தனது தாயாரிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸில்ஜாவின் உறவினர்கள் ஈராட்டுப்பேட்டைக்கு வந்து அஸ்கர் தன்னை கடத்திச்சென்றதாக போலீசில் புகார் அளிக்க வற்புறுத்தியுள்ளனர். இவர் மறுக்கவே வழக்கறிஞருடன் வந்து அஸ்கரை திருமணம் முடிக்கும் முடிவை மாற்றுமாறு கூறியுள்ளனர். இதற்கும் ஸில்ஜா அசைந்துக்கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து
இச்செய்தியை மோப்பம் பிடித்த பத்திரிகை வியாபாரிகளும் ஹிந்து ஐக்கியவேதியும் விவாதத்தை கிளப்பி விட்டன. இதுபற்றி பேட்டியளித்த ஸில்ஜா கூறுகையில், "நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில் எந்தவித வற்புறுத்தலும் நிர்பந்தமும் இல்லை. மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டேன். தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை சரியாக விசாரிக்காமல் தேவையற்ற சர்ச்சைகளுக்கு என்னையும் என்னுடைய கணவரையும் உள்ளாக்கிய ஹிந்து ஐக்கியவேதி மீது சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்துவருகிறேன். எனக்கு ஒன்றரை வருடமாக அஸ்கரை தெரியும். அவருக்கு எந்தவொரு தீவிரவாத செயலுக்கும் சம்பந்தமில்லை. நான் இஸ்லாத்தை பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தது எந்தவொரு நிர்பந்தத்தின் அடிப்படையிலும் அல்ல. ஈராட்டுப்பேட்டைக்கு வந்தபிறகே நான் இஸ்லாத்தை பற்றி படிக்கவேண்டும் என்று அஸ்கரிடம் கூறினேன்.பின்னர் அஸ்கர் என்னை வாரிசேரி என்ற இடத்திலுள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் என்னை சேர்த்தார். மேஜரான எனக்கு எந்த மதத்தின் அடிப்படையில் வாழ்வதற்கும் விரும்பும் நபரை திருமணம் முடிப்பதற்கும் சுதந்திரமுண்டு. இனரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே ஹிந்து ஐக்கியவேதி எனக்கெதிராக பிரச்சாரம் செய்துவருகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்