ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

காவிகள் - கறுப்புப் பணம் - கத்திக் குத்து.

ஜெய்ப்பூர்: 03-09-2009

விஷ்வ ஹிந்து பரிசத்தின் தலைவர்களுள் ஒருவரான தாமோதர் மோடியின் வீட்டில் 10 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டெடுப்பு. கட்டு கட்டாக இரும்புப் பெட்டியில் அடுக்கி வைக்கப் பட்டுருந்தன. தாமோதர் மோடியின் வீட்டில் வேலை செய்தவர் அதே வீட்டில் கத்தியால் குத்தப் பட்டிருக்கிறார்.

சுஷில் என்பவர் விஷ்வ ஹிந்து பரிசத்தின் தலைவர்களுள் ஒருவரான தாமோதர் மோடி என்பவரது வீட்டில் 15 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். அவர் தாமோதர் மோடியின் வங்கி லாக்கரின் சாவியை தொலைத்ததாக கூறப்படுகிறது. மோடியின் குடும்பத்தார் சுஷிலிடம் அந்த சாவியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அன்று இரவே , சுஷில் அந்த பகுதியைச் சேர்ந்த மோடியின் வீட்டில் வேலை செய்த மோடியின் அடியாட்களால் குத்தப் பட்டிருக்கிறார்.


கடந்த மாதம் நடந்த வருமான வரிச் சோதனையில், மோடியின் வீட்டிலிருந்து 10 கோடி ரூபாய் கறுப்புப் பணமும், அவரது வங்கி லாக்கரில் 13 கோடி ரூபாயும் வருமான வரித்துறை அதிகாரிகளால் கண்டெடுக்கப் பட்டது.

பல இடங்களில் குத்துக் காயம் பட்ட சுஷிலின் உடல் நிலை மருத்துவமனையில் தேறி வருகிறது. அவர் கூறியதாவது, "மோடியின் பேத்தி என்னை தொலைந்து போன லாக்கர் சாவியை தேட சொன்னார். அவர் என்னை மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து அவர்கள் தங்கும் இடத்தில் பூய் தேடச்சொன்னார். நான் அங்கு சென்று பார்க்கும் போது நான் தாக்கப் பட்டேன்," என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தை போலீஸார், சுஷில் தாமோதரின் கறுப்புப் பணம் பற்றிய தகவல் தெரிந்ததால் தாக்கப் பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இதிலாவது உண்மை வெளி வருமா, இல்லை வழக்கம் போல் உண்மை மூடி மறைக்கப் படுமா? பொறுத்திருந்து பார்ப்போம். . .

நன்றி
NDTV

கருத்துகள் இல்லை: