செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சங்பரிவாரின் புதிய முகம் நடிகன் கமல்?உன்னைப்போல் ஒருவன்!விமர்சனம்

திரை வகை :முஸ்லிம்கள் மட்டுமே திவிரவாதிகள்!

(காதல்,பொழுதுபோக்கு,கலை அல்ல)






சென்னை நகர போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு மர்ம போன் வருகிறது. அதில் பேசிய கமல் ஐந்து இடங்களில் அதி பயங்கர குண்டுகள் வைத்திருப்பதாக மிரட்டுகிறார். போலீஸ் நிலையத்தில் வைத்துள்ள குண்டு பற்றி மட்டும் விவரம் சொல்கிறார். போலீஸ் படை அங்கு முற்றுகையிடுகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் குண்டை செயலிழக்க செய்கின்றனர்.

போலீஸ் வட்டாரமும் அரசும் அதிர்ந்து நிற்கிறது. கமல் திரும்பவும் கமிஷனரிடம் பேசி மீதி நான்கு குண்டுகளும் வெடிக்காமல் இருக்க ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்கும்படி “கெடு” வைக்கிறார்.
போனில் பேசுவது யார்? எங்கிருந்து பேசப்படுகிறது? என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போலீசும், உளவுத்துறையும் அல்லோலப்படுகிறது. கெடு நேரமும் நெருங்குகிறது. வேறு வழியின்றி கமல் கோரிக்கையை கமிஷனர் ஏற்கிறார். நான்கு தீவிரவாதிகளும் கமல் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்படுகின்றனர்.
அவர்களிடம் மேலிட உத்தரவுப்படி உங்களை விடுவிப்பதாகவும் வேனில் தப்பிச் செல்லுங்கள் என்றும் கமல் போனில் கூறுகிறார். கடைசியாக 3 திவிரவாதிகளும், திவிரவாதிகளுக்கு பொருட்கள் சப்ளை செய்தவரும் கொல்லப்படுகிறார்கள்!
திவிரவாத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் உலகில் வாழத்தகுதியற்வர்கள் என்ற கதை நன்றாக உள்ளது; நல்ல கதை தந்தமைக்கு எமது வாழ்த்துக்கள்!
ஆனால்,மிஸ்டர் கமல்! திவிரவாதியென்றால் அது முஸ்லிம் மட்டும் தான் என நீங்கள் நினைப்பதும் அதை அடுத்தவர் மனதில் பதியச்செய்வதும் ஏன்?
இதுவரை நடைப்பெற்ற வகுப்பு கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள் உயிர், உடமை, கற்பு என எல்லாவற்றையும் இழந்தவர்கள் யார்?
அதை நடாத்தியது யார் என்பதை நம் நாட்டு வரலாற்றை ஒரு முறை வாசித்தாலே தெரியும்!
இப்படி உண்மைகளை உறங்கச்செய்துவிட்டு முஸ்லிகளை மட்டும் சித்தரிப்பது சங்பரிவார்களுக்கு நானும் "நம்மவர்"தான் என்று காட்டும் காவிக்கொடியோ?
அல்லது பார்பன விசுவாசமா...?

கருத்துகள் இல்லை: