வெள்ளி, 4 செப்டம்பர், 2009

கோவை குண்டுவெடிப்பு கைதிகள் மூவர் விடுதலை

கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பழனியைச் சேர்ந்த அப்துல்கரீம்(30), கோவை, மானியத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சர்தார் (31) ஆகியோர், தண்டனை காலம் முடிந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த பாபு (30) என்பவர் நேற்று முன் தினம் விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்து, போலீசார் கூறுகையில், "குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு கோர்ட்டில் 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த மூவரும், நன்னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்' என்றனர்.

கருத்துகள் இல்லை: