கோவை குண்டுவெடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவை குண்டுவெடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 செப்டம்பர், 2010

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை; திறக்காத, மு.க.வின் மனக்கதவு!

இந்திய திருநாட்டில் கரசேவை[!] என்ற பெயரில் காடையர்களை கூட்டிச்சென்று, கருணை நாயனாகிய அல்லாஹ்வின் ஆலயத்தை இடித்தவர்களுக்கு ஒரு நாளில் சிறைக்கதவு திறக்கிறது. அவர்கள் துணைப் பிரதமர் பதவி வரைக்கும் அலங்கரிக்க முடிந்தது.

முதல்வரின் ஆசியோடுதான் நாங்கள் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை குஜராத்தில் நிகழ்த்தினோம் என பகிரங்கமாக சொன்னவர்களை சிறைக்கதவு உள்வாங்க மறுக்கிறது. ஆசி வழங்கி முஸ்லிம்களின் ஆவியை பறித்தவர் அரியாசனத்தில் முதல்வராய் அமரமுடிகிறது.

மும்பையில் ஒரே நாளில் சுமார் மூவாயிரம் முஸ்லிம்கள் கருவறுக்கப் பட்டதற்கு காரணமாக அமைந்த 'தலையங்கம்' தீட்டிய, பிரபல மும்பை அரசியல் தாதா இன்றைக்கும் சுதந்திரமாக 'தலையங்கம் தீட்டமுடிகிறது. அவரை சிறைக்கதவு உள்வாங்க மறுக்கிறது.

கோவை குண்டு வெடிப்புக்கு முன்னால் நடந்த முஸ்லிம் இனப்படுகொலை என்ன ஆனது என்று எவருக்கும் தெரியவில்லை. மேலும், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பலமான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட, ஆனந்தாக்களும், .........ரிகளும் சாவகாசமாக வலம் வரமுடிகிறது.

இவ்வாறாக சட்டம் தனது நடு[!] நிலையான கடமையை செய்து கொண்டிருக்கும் நிலையில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் பதினான்கு ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் சட்டத்தின் கதவு திறக்கமாட்டேன் என்று சண்டித்தனம் செய்கிறது.

ஆம்! அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களில் ஒரு தொகையினரை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. இந்த மனிதாபிமான விடுதலையில் முஸ்லிம் சிறைவாசிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு, இன்னும் பத்து நாளில் தாமாகவே தண்டனை முடிந்து வெளியே வரவிருந்த சில முஸ்லிம்களை விடுவித்துவிட்டு, எதோ முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றியது போன்று நாடகமாடினார் முதல்வர். சரி! இந்த ஆண்டாவது கோவை சிறையில் பதினான்கு ஆண்டுகளாக வாடிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளில் கணிசமானோரை அண்ணா பிறந்த நாளில் விடுவிப்பார் என்று முஸ்லிம்கள் பெருத்த நம்பிக்கை வைத்திருந்த நிலையில்,


பேரறிஞர் அண்ணாவின் 102-வது பிறந்த நாள் விழாவையொட்டி மனிதாபிமான அடிப்படையில் 70 வயது நிரம்பிய மற்றும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவு செய்து, கடலூர், பாளையங்கோட்டை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர் மற்றும் திருச்சி பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றில் உள்ள 80 வயது உடைய ஒரு பெண் கைதி உட்பட 13 சிறை வாசிகளை முன் விடுதலை செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து,

மீண்டும் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார். ஏனெனில் நாமறிந்தவரை கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட சிறைவாசிகளில் 70 வயது நிரம்பியவர் எவரும் இல்லை.

எனவே தொடர்ந்து முஸ்லிம்கள் விஷயத்தில் தொடர் மவுனம் சாதிக்கும் திமுகவின், சில சீட்டுக்களுக்காகவும், வீசும் நோட்டுகளுக்காகவும், அல்லது வேறு சில நோக்கங்களுக்காகவும் இனியும் இந்த முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், கருணாநிதிக்கு வெண்சாமரம் வீசப்போகிறதா..? அல்லது தனது ஒற்றுமையின் வலிமையை வாக்குகளாக மாற்றி, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பப் போகிறதா என்பதை தேர்தல் நேரத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 10 ஜூன், 2010

மார்கோவா குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி சரண்

பானாஜி:மார்கோவா குண்டுவெடிப்பு வழக்கில்,தலைமறைவகியுள்ள 5 ஹிந்துத்தவ தீவிரவாதிகளில்,ஒரு தீவிரவாதி இன்று நீதிமன்றத்தில் சரண்னடைந்தான்.

இதுக்குறித்து,அரசு தரப்பு வக்கீல் எஸ்.பி.பாரியா கூறுகையில், பிரஷாந்த் அஷ்டேகர் என்ற அந்த தீவிரவாதி மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்தவனென்றும், கடந்த வருடம் தீபாவளி தினத்தன்று கோவாவில் தொடர்குண்டு வெடிப்பு நடத்த திட்டம் தீட்டியவர்களில் இவனும் ஒருவன் என்றும் அவர் தெரிவித்தார்.

மார்கோவா குண்டுவெடிப்பபை தேசிய புலனாய்வு ஆணையமான (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. பிரஷாந்த்தின் சகோதரன் தனன் ஜெயத்தையும் முன்பு என்.ஐ.ஏ கைது செய்தது.

கடந்த அக்டோபர் 16,2009ல் மால்டோண்டா படில் மற்றும் யோகேஷ் நாயிக் ஆகியோர் குண்டு வைக்கும் முன்னர் வெடித்து பலியாகினர்.
விநாயக் படில்,வினை தலேகர்,தனஞ்சய் அஷ்டேகர் மற்றும் திலிப் மங்கோங்கர் ஆகியோரை இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கோவா போலீஸ் ஏற்கனேவே கைது செய்ததிருந்தது.

பிரஷாந்த் அஷ்டேகர் என்.ஐ.ஏவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாவான். இவன் தான் குண்டுகளை தயாரிக்க சர்க்கியுட் வரைபடங்களை தயார் செய்துள்ளான். பின்னர் சதிகளை மறைக்க கணினியின் ஹார்ட் டிஸ்கையும் மாற்றியவனாவான்.
source:Times Of India

சனி, 19 டிசம்பர், 2009

கோவை தொடர் குண்டுவெடிப்பு: 21 பேர் ஆயுள் தண்டனை ரத்து

கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 21 பேரின் அப்பீல் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்தத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேசமயம், 16 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

அதேபோல மதானி இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத் தொரப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி அத்வானி தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்தார். அவர் வருவதற்கு முன்பு மாலை 4 மணியளவில், ஒரே நேரத்தில் 17 இடங்களில் பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை தனி நீதிமன்றம் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

அல் உம்மா தலைவர் பாட்சா உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

64 பேருக்கு 3 ஆண்டு முதல் 13 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2007 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 43 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

அதேபோல, மதானி உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து குண்டு வெடிப்பில் மரணம் அடைந்த ஒருவரின் தந்தை மனுதாக்கல் செய்தார். மேலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.

சம்பவம் நடந்தபோது மைனர்களாக இருந்ததால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முஜ்புர் ரகுமான், முகமது அம்ஜத் அலி ஆகியோரை நீதிபதிகள் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

மற்றவர்களின் அப்பீல் மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7 ந் தேதி தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் 39 பேரில் 16 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. 21 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் ரத்து செய்யப்பட்டது.

மேலும் மதானி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

கோவை குண்டுவெடிப்பு கைதிகள் மூவர் விடுதலை

கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பழனியைச் சேர்ந்த அப்துல்கரீம்(30), கோவை, மானியத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சர்தார் (31) ஆகியோர், தண்டனை காலம் முடிந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த பாபு (30) என்பவர் நேற்று முன் தினம் விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்து, போலீசார் கூறுகையில், "குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு கோர்ட்டில் 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த மூவரும், நன்னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்' என்றனர்.