வியாழன், 10 ஜூன், 2010

மார்கோவா குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி சரண்

பானாஜி:மார்கோவா குண்டுவெடிப்பு வழக்கில்,தலைமறைவகியுள்ள 5 ஹிந்துத்தவ தீவிரவாதிகளில்,ஒரு தீவிரவாதி இன்று நீதிமன்றத்தில் சரண்னடைந்தான்.

இதுக்குறித்து,அரசு தரப்பு வக்கீல் எஸ்.பி.பாரியா கூறுகையில், பிரஷாந்த் அஷ்டேகர் என்ற அந்த தீவிரவாதி மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்தவனென்றும், கடந்த வருடம் தீபாவளி தினத்தன்று கோவாவில் தொடர்குண்டு வெடிப்பு நடத்த திட்டம் தீட்டியவர்களில் இவனும் ஒருவன் என்றும் அவர் தெரிவித்தார்.

மார்கோவா குண்டுவெடிப்பபை தேசிய புலனாய்வு ஆணையமான (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. பிரஷாந்த்தின் சகோதரன் தனன் ஜெயத்தையும் முன்பு என்.ஐ.ஏ கைது செய்தது.

கடந்த அக்டோபர் 16,2009ல் மால்டோண்டா படில் மற்றும் யோகேஷ் நாயிக் ஆகியோர் குண்டு வைக்கும் முன்னர் வெடித்து பலியாகினர்.
விநாயக் படில்,வினை தலேகர்,தனஞ்சய் அஷ்டேகர் மற்றும் திலிப் மங்கோங்கர் ஆகியோரை இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கோவா போலீஸ் ஏற்கனேவே கைது செய்ததிருந்தது.

பிரஷாந்த் அஷ்டேகர் என்.ஐ.ஏவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாவான். இவன் தான் குண்டுகளை தயாரிக்க சர்க்கியுட் வரைபடங்களை தயார் செய்துள்ளான். பின்னர் சதிகளை மறைக்க கணினியின் ஹார்ட் டிஸ்கையும் மாற்றியவனாவான்.
source:Times Of India

1 கருத்து:

Zia சொன்னது…

Assalau allikum..,

Dear admin, pls post this video and let the world knows the truth about the israhell zionist army how brutally killed the peace activist in the ship mavi marvmara last week.
http://vimeo.com/12429821

http://networkedblogs.com/4J3RM

pls aslo spread this word to all and put pressure on indian govt