திங்கள், 21 ஜூன், 2010

உதவிக் கப்பல்களை தடுப்போம் இஸ்ரேல் கொக்கரிப்பு

லெபனானில் பெண்கள் அமைப்பு காஸ்ஸாவுக்கு உதவுவதற்காக கப்பலைத் தயார் செய்து வருகிறது.

இந்நிலையில் "அனைத்து பலங்களையும் பிரயோகித்து அத்துமீறும் கப்பல்களைத் தடுப்பதற்க்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது" என்று இஸ்ரேலிய ஐ.நா தூதர் மிரட்டல் விடுத்துள்ளார்.

அவர் இதுக் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைக் தெரிவித்துள்ளதாக இஸ்ரேல் வனொலிகளும் இணைய செய்திகளூம் கூறுகின்றன.

இந்தக் கப்பல்களை ஏற்பாடு செய்பவர்களூக்கு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பினரோடு தொடர்பு இருக்கலாம் என்று இஸ்ரேலிய ஐ.நா தூதர் கப்ரியல்ல ஷலேவ் கூறினார்.

"சர்வதேசச் சட்டப்படி அனைத்துப் பலங்களையும் பிரயோகித்து இந்தக் கப்பல்களைக் தடுப்பதற்க்கு இஸ்ரேலுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. ஏனெனில் காஸ்ஸா பகுதியின் மேல் கடல் மார்க்கத் தடைவிதிக்கபட்டுள்ளது இதனை மீறக்கூடாது" என்று அவர் சொன்னதாக 'ஹாரெட்ஸ்' நாளிதழின் இனணயதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
7days

கருத்துகள் இல்லை: