புதன், 16 ஜூன், 2010

பாலியல் தொழில் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும்.​


பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத்தர முயற்சிப்பது,​​ இந்தியாவின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை உலக வரலாற்றின் பக்கங்களிலிருந்து நாமே அகற்ற முயல்வதற்குச் சமமாகும்.​ ​

இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகவும்,​​ இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தைத் தொழிலாளர்கள் என்பதும் அண்மையில் மக்களவையில் தெரிவிக்கப்பட்ட தகவல்.​

மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு,​​ பெற்றோர்களின் பரிவின்மை,​​ போதிய பாலியல் கல்வி அறிவின்மை,​​ ​ விழிப்புணர்வின்மை,​​ ஊடகங்கள்,​​ காதல்,​​ சமுதாயத் தொடர்பு போன்றவற்றால் பாலியல் தொழிலில் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.​

பாலியல் தொழில் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்க சட்டம் கொண்டு​வர வேண்டும் என்றும் ஒரு சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.​ குடும்பப் ​ பொறுப்புகளாலும்,​​ சமுதாயச்சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும்,​​ திருமணம் மற்றும் குடும்ப வாழ்வைச் சுமை என்று கருதுபவர்களுக்கும் பாலியல் தொழில் சேவையாகத் தெரியலாம்.​ ​ ​ ​ ​ ​

பாலியல் தொழிலுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்து​விட்டால்,​​ குடும்பச்சூழல் காரணமாகவும்,​​ வயிற்றுப்பசியைப் போக்கி​கொள்ளவும் வாழ்க்கையோடு ஒவ்வொரு நாளும் போராடிக்​கொண்டிருக்கும் பெண்கள் பலர் இத்தொழிலுக்கு உள்ளே இழுத்துவரப்படும் மிகமோசமான நிலை ஏற்படும்.​

அரசு அங்கீகாரத்துடன் பாலியல் தொழில் நடைபெறும் ​ தாய்லாந்து,​​ இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்​குச்சுற்றுலா என்ற பெயரில் வெளிநாட்டினர் சென்று வருவது போன்ற நிலை இந்தியாவுக்கும் ஏற்பட்டால்,​​ உலக வரலாற்றில் நம் நாட்டின் பண்பாடு,​​ கலாசாரப் பக்கங்கள் காணாமல் போய்வி​டும்.​ ​ ​

திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தைப் போக்க முறையான பாலியல் கல்வி,​​ குடும்ப வாழ்வைச் சுமையாகக் கருதுபவர்களுக்கு கவுன்சலிங் போன்றவை பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும்.​​

இது​போன்று பாலியல் தொழிலுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும் பட்சத்தில் இத்தொழிலில் குழந்தை தொழிலாளர்களின் வருகையை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.​ ​

சேவையோ,​​ தொழிலோ பாலியல் தொழில் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும்.​ பலரது வாழ்க்கையைச் சீரழித்த லாட்டரிக்கும்,​​ பாலியல் தொழிலுக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை.​

source: தினமணியில் வெளியான ''காணாமல் போகும் கலாசாரப் பக்கங்கள்'' கட்டுரையிலிருந்து

கருத்துகள் இல்லை: