புதன், 23 ஜூன், 2010

இந்தியா பாகிஸ்தான் கைகள் இணைந்தால்

ஒரு வெறுப்பில் பிரிந்த இருவர் மீண்டும் இணைவதற்கான விருப்பு ஏற்பட வாய்ப்பே இல்லாமலிருப்பது இந்தியா பாகிஸ்தான் உறவில்தான். மூன்று போர்கள், எல்லைகளில் படை குவிப்பு, தூதரகங்களை மூடிக் கொள்ளுதல், பரஸ்பரம் குறை கூறிக் கொள்ளுதல், அமெரிக்க அண்ணாச்சியிடம் மாறி மாறி குற்றம் சாட்டு தல், சார்க் மாநாட்டை ஒத்திப் போடுதல், இதன் காரணங்க ளால் உள்நாட்டில் மதநல்லிணக் கத்திற்கு அச்சுறுத்தலும், சமூக பதற்றமும் உண்டாகுதல் என்று இந்த ‘வெறுப்பு’ ஏற்படுத்திய விளைவுகள் அதி பயங்கரமானவை.

இவை அனைத்தையும் கடந்து சமரசத்திற்கான ஏற்பாடுகளும் தடைபடாமல் நிற்கின்றன. ஆனால் பிரிந்த கைகள் இணைவதற்கும், இணைந்த கைகள் பிரிவதற்கும் காஷ்மீரும் அதன் பின்னணிகளும் தொடர காரணமாகவே இருந்து வருகின்றன, காஷ்மீரையும் தீவிர வாதத்தையும் எந்த அரசியல் ஆதாயத்திற்காகவும் பயன்படுத்திக் கொ ள்ளும் அவசியமற்றவர் இந் தியப் பிரதமர் மன்மோகன்சிங். ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் பெரும்பான்மை இனத்தை மத அரசியலுக்கு இழுக்கவும், மத வாத வாக்குவங்கியால் அரசி யல் நடத்தவும் தேவையற்ற, சிறு பான்மை சமூகத்தை சார்ந்த தலைவர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுஅமைந்த பொழுதே பாகிஸ் தானுடன் நட்புறவுக்கு அடியெடுத்து வைக்கப்பட்டது.பாகிஸ்தானும் தன் பங்கிற்கு இறங்கி வந்தது.

காஷ்மீர் நீங்கலாக, ஊடுறுவுதல், தீவிரவாதம், வர்த்தகம், நீர்பங்கீடு, போக்குவரத்து பற்றி பேசலாம் என இந்தியா அழைத்தது. காஷ்மீர் கதையை முதலில் பேசலாம், மற்ற வை அப்புறம்தான் என பாகிஸ் தான் இழுத்தடித்தது.

இந்த அரசியல் இழுபறிகள் இழுத்தடித்துக் கொண்டிருந்த போது தான் அமைதிப் பேச்சுகளை முறிக்கும் வகையில் மும்பை மாந கரத்தின் மீது பயங்கரவாத தாக் குதல்கள் நடந்தன. பேச்சுவார்த் தையின் அச்சு முறிந்து போக இந்த தாக்குதல்கள் கச்சிதமாக அமைந்தன. இதில் நிச்சயமாக ஓராண்டு ஓடிவிட்டது.

2010ல் மீண்டும் உறவாட பிரதமர் மன்மோகன்சிங் ஆர்வப்பட்டார். அதற்காக 2010, மே 25ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா ஜீலானிக்கு நட்பின் அடிப்படையில் அல்போன்சா மாம்பழங்களை அனுப்பி வைத்தார். ஒருநாள் முன்னர், மே 24 ஆம் தேதி அவர் கூறிய ஒரு செய்தியில், இரண்டு நாடுகளும் சந்திக்கும் பெரிய சவாலாக இருப்பது ‘நம்பிக்கை குறைபாடு’ தான் என்றார். அல்போன்சா மாம்பழம் நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்க வாழ்த்துகள். பாகிஸ்தானுடனும் காஷ்மீரின் பல்வேறு குழுக்களுடனும் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தப் தயாராக உள்ளதாக கூறினார். ஆனால் அவரது சமிக்ஞை காஷ்மீரில் பெரிய அளவு நம்பிக்கையைப் பெற வில்லை.

புத்துறவை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் ஜூன் 7&ம் நாள் பிரதமர் காஷ்மீர் பயணம் மேற்கொண்டார். காஷ்மீரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் விவசாய பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதோடு அங்குள்ள அரசியல் தலைவர்க ளையும் பிரதமர் சந்திப்பது பயணத்தின் நோக்கம். எனினும் பிரிவினைவாதிகள், மிதவாதிகள் மற்றும் தீவிர நோக்காளர்கள் ஆகியவர்களுடன் சந்திக்கவில்லை. பிரதமரின் முக்கிய நோக்கம், காஷ்மீர் முன்னேற்றத்தில் காங் கிரஸ் கட்சியின் செயல் பாட்டினை உறுதி செய்வதாக இருந்தது.

உண்மையில், காஷ்மீரில் அசுத் தமாக்கப்பட்டுவிட்ட தால் ஏரி’ மத்திய அரசின் 356 கோடி ரூபாய் நிதியுதவியில் சுத்தம் செய்யப்பட்டது, சோனியா காந் தியின் தலையீட்டால் இந்த நிதி ஒதுக்கப்பட்டது. காஷ்மீரின் குஜ் ஜார் தேஷ் அறக்கட்டளை உண்டாக்கிய பழங்குடி கலாச்சார மையத்தை திறந்து வைப்பதற்கு மே 29 ஆம் தேதி சோனியா காஷ்மீர் சென்றிருந்தார்.

இதனிடையே, ஹுரியத் மாநாட் டுக் கட்சியின் இரண்டு பிரிவும் மன்மோகன் சிங்கின் பேச்சு வார்த்தைக்கான அழைப்பை நிராகரித்துவிட்டன. ஆனால் பா கிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் செயல்படும் தீவிரவாத குழுக்கள், முக்கூட்டு (இந்தியா & பாகிஸ்தான் & பிரி வினை குழுக்கள்) பேச்சுவார் த்தைக்கு ஒப்புக் கொண்டனர். அதற்கு அவர்கள் சில நிபந்தனை கள் வைத்தனர். 1. காஷ்மீர் சர்ச் சைக்குரிய பகுதி என்று இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும். 2. ஆயுத படைகளின் சிறப்பு பாதுகாப்புச் சட்டம் (கிதிஷிறிகி), பொது பாதுகாப்புச் சட்டம் ஆகிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். 3. அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். 4. ஜம்மு & காஷ்மீரில் மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முடிவுக்கு கொ ண்டு வர வேண்டும். என்பது போன்றவை. “தன்னம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட £ல் தீவிரவாத செயலுடைய வர்கள் தாங்களாகவே கட்டுபட்டு விடுவர்” என்றார் ஐக்கிய ஜிஹாத் குழுவின் தொடர்பாளர் சதகத் ஹுசைன். மன்மோகன்சிங் வழங் கும் யோசனை, "புதிய பாத்திரத்தில் பழைய பதார்த்தம்" தான் புதிதாக ஒன்றுமில்லை என்றார் மீர்வாய்ஸ் உமர் பாரூக். இவர் ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் மிதவாத பிரிவின் தலைவர். 2006 ஆம் ஆண்டு இவர் பிரதிநிதிகள் குழு ஒன்றினை வழிநடத்தி சென்று பிரதமரை சந்தித்தார். பின்னாளில், ‘காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்வதில்லை’ என்று குற்றம் சாட்டினார்.

மீண்டும் 2009 ஆம் ஆண்டு, அமைதியான சாதுர்யமான வழி கள் காஷ்மீர் விசயத்தில் கடைபிடிக் கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்த பின்னர் மீர்வாய்ஸ் அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் தொடரப்பட் டன. ஆனால் ‘பஸல் ஹக்கீ ஹுரை ஸி’ என்ற மிதவாதி தாக்கப்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முறிந்து போனது. ப.சிதம்பரத்தின் அமைதி வழியிலான தீர்வை ஒரு சதி (மாவுர்சாயு) என்றார் கடின போக்குக் கொண்ட சயீத் அலிஷா ஜீலானி. காஷ்மீர் குறித்த மன்மோகன்சிங்கின் நிலை பாட்டையும் சதி என்றுதான் ஜீலானி கூறியிருந்தார். ஜம்மு காஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதி என்று இந்தியா ஒப்புக் கொள்ளாதவரை எந்த ஒரு பேச்சுவார்த்தையும் ஏற்றுக் கொள்ளப்படாது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே இந்த வாய் ப்புகள் பயன்படுத்தப்படும் என்றும் ஜீலானி குற்றம் சாட்டினார்.

ஆனால் மன்மோகன்சிங் காஷ்மீர் செல்வதற்கு முன்னரே சில நம்பிக் கையூட்டும் நடவடிக்கைகளை மத் திய அரசும் காஷ்மீர் மாநில அர சும் எடுத்திருந்தன. மே 21 ஆம் தேதி மீர்வாய்ஸ்க்கு, அவரது தந் தை தீவிரவாதிகளின் குண்டுக்கு பலி யானதன் 20-ஆம் ஆண்டு நினைவுகூரும் பேரணி என்று ஸ்ரீ நகரில் நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கியது. மேலு ம் பிரிவினைவாதியான நயீம் கான் சிறையிலிருந்து விடுவிக் கப்பட்டார். இந்த நடவடிக்கைகள் ஹுரைஸி தாக்கப்பட்டதில் கடும் கோபத்தில் இருக்கும் மிதவாதிகளை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டவையே.

பாகிஸ்தானுடன், எல்லைக் கட் டுப்பாட்டுக் கோடு, எல்லையில் ராணுவக் குறைப்பை கட்டுக்குள் வைப்பது நீர் ஆதாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறையில் இணைந்து செயலாற்ற இந்தியாவும் விருப்ப மில்லாமல் இல்லை. ஆனாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரி க்காவும் நேட்டோவும் வெளியேற உள்ளதான நிலைப்பாட்டை பொ றுத்து காஷ்மீர் தொடர்பான எதிர்கால பேச்சுவார்த்தைகளில் நீதமானதொரு நடையை தொ டர இந்தியா விரும்புகிறது. ஆப் கானிஸ்தானில் பாகிஸ்தான் ராஜ தந்திர செயல்களை பொறுத் தே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா வின் நடவடிக்கையும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆப்கா னிஸ்தானின் மக்கள் நலத் திட்டங்களில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்திருக்கிறது. காஷ்மீர் உள்ளிட்ட பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சனைகளையும் பேசித் தீர்ப்ப தில் இந்தியா&பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எதிர் காலத் திற்கு நலனாகும். அது மட்டு மின்றி காஷ்மீர் மக்களின் பொ து வாழ்க்கையிலும் அமைதி உண்டாகும். அதே நேரம், நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் ஆப்கனை விட்டு வெளியேறினால் மிச்சசொச்ச ஜிகாதிகளை காஷ் மீரை நோக்கி பாகிஸ்தான் திருப்பும் என்ற அச்சமும் இந்தியாவிற்கு உள்ளது.


நன்றி... தி வீக் (ஜூன் 13)

தமிழில்: அத்தேஷ்

கருத்துகள் இல்லை: