திங்கள், 14 ஜூன், 2010

ஈரானுக்கு எதிரான வான் வழித் தாகுதல்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் செய்திக்கு சவுதி அரேபியா மறுப்பு

ரியாத்:ஈரானை தாக்குவதற்கு தனது வான் பகுதியை இஸ்ரேல் பயன்படுத்த சவுதி அரேபியா அனுமதி அளிக்கும் என்பது அவதூறான செய்தி என சவுதி தெரிவித்துள்ளது.

ஈரானின் அணு சக்தி திட்டத்தின் மீதான துவேசத்தின் காரணமாக ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு வளைகுடா நாடுகள் ஆதரவளிக்காது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .

"சவுதி அரேபியா ஈரானுக்கு எதிரான இராணுவ் நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலுடனோ அல்லது வேறு எந்த நாட்டுடனவோ ஒத்துழைப்பு தராது. ஈரானின் நெருக்கடியான நிலைக்கு நாங்கள் முன்பே அமைதியான தீர்வை பரிந்துரைத்தோம்". என கிங் சவுதி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் ஹமத் கல்ப் நியூஸிற்க்கு அளித்த செய்தியில் தெரிவித்தார்.

"ரியாத் இஸ்ரேலின் ஜெட் போர் விமானங்களை சவுதியின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்கும். டேல் அவிவ் ஈரானின் அணுசக்தி உலைகள் மீது தாக்குதல் நடத்த முடிவெடுத்தால் சவுதியின் வான்வெளியை இஸ்ரேலின் போர் விமானங்கள் பயன்படுத்த அனுமதி அளித்து விட்டது மேலும் வேறு வழிகளும் ஆராயப்படும்." என சவுதி மற்றும் அமெரிக்க பதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக டைம்ஸ் நாளிதழ் அறிக்கை ஒன்றில் மேற்கோள்காட்டி உள்ளது.

ஆதரவு இல்லை: இஸ்ரேலின் போர் விமானகள் ஈரான் வரை தொடர்ந்து பறக்க முடியும் அப்போது எதீனுக் போர் விமானத்தை சுட்டு வீழ்த்த வாய்ப்பு உள்ளதா என முன்பே பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அமெரிக்கா உடனான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இது செய்து முடிக்கப்பட்டது. என பெயர் வெளியிடாத ஒரு சவுதி அதிகாரி தெரிவித்தார்.

எது எப்படியானாலும் வளைகுடா நாடுகள் ஈரான் மீதும் அதன் திட்டங்கள் மீதும் அக்கறை கொண்டு தொடர்ந்து செயல்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரைத் கவாஜி என்ற துபையைச் சார்ந்த நியர் ஈஸ்ட் அண்ட் கல்ப் மில்லிடரி அனலைஸின் தலைவர், 'ஈரான்- அமெரிக்கா இடையேயான போராட்டம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஈரானை தாக்குவதற்கு சவுதி -இஸ்ரேல் இடையேயான ஓத்துழைப்பு தேவை இல்லாதது.

மேலும் ஈரானின் நான்கு அணு உலைகளை தாக்குவதற்கு இஸ்ரேலால் முடியும். அதற்க்கான ஆற்றலை அது பெற்றுள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாங்கிய டால்பின் நீர்மூழ்கி போர் கப்பல்கள் ஈரானின் அணு உலைகளை தாக்கும் சக்தி படைத்தவை .

எதிர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இஸ்ரேலின் மூன்று நீர்மூழ்கி போர்கப்பல்கள் வளைகுடா நீர் பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதோடு ரேடார் கண்காணிக்கும் கருவியில் இருந்து தப்பிக்கும் திறனும். செங்கடல் முழுவதும் பறக்கும் அளவுக்கு எரிபொருளால் நிரப்பி கொள்ளும் வசதியையும் இஸ்ரேல் கொண்டுள்ளது'என்று ரைத் கவாஜி கூறினார்.

வளைகுடா பேச்சுவார்த்தை மைய அபுதாபியின் தலைவர். 'வளைகுடா பகுதியில் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் ஒரு அபாயகரமான சூழல் நிலவுகிறது இதன் பயன்பாட்டை இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்ப்பு உள்ளது. ஆனால் வளைகுடா நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் என்று அர்த்தம் இல்லை' என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: