ஞாயிறு, 27 ஜூன், 2010

ஈரான் மீது பொருளாதாரத் தடை: நிறைவேற்றியது அமெரிக்க செனட்!

வாஷிங்டன்: அணு ஆயுதத் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஈரான் மீது பொருளாதாரத் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது அமெரிக்க செனட்.
உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி அணுஆயுத திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐரோப்பிய யூனியன் ஆகியவை சமீபத்தில் பொருளாதார தடை விதித்தன.
இந்நிலையில், அமெரிக்கா தன்னிச்சையாக ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கான மசோதா, அமெரிக்க செனட் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, ஈரானுக்கு கேசோலின் வினியோகிக்கும் கம்பெனிகள், ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு உதவும் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் அமெரிக்கா எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளாது என்று இந்த மசோதா கூறுகிறது.
இதனால் ஈரானுடன் தொடர்புடைய மற்ற நாடுகளும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக ஈரானின் நட்பு நாடுகளும் மறைமுக பொருளாதாரத் தடைக்குள்ளாகியுள்ளன.
source:thatstamil

கருத்துகள் இல்லை: