சனி, 19 ஜூன், 2010

பிரிட்டனுக்குள் நுழைய ஜாஹிர் நாயக்கிற்கு விசா மறுப்பு

லண்டன்:மும்பையைச் சார்ந்த பிரபல முஸ்லிம் அறிஞரும் மதங்களுக்கிடையேயான கலந்துரையாடலில் வல்லுநராக விளங்கும் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்குள நுழைய அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.

ஜாஹிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும், வெறுப்பைத் தூண்டும் உரையை நிகழ்த்துபவர் என்று சில பத்திரிகைகளும்,சில அமைப்புகளும் குற்றம் சாட்டியிருந்தன.

"இந்த நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் இந்த நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்" என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
BBC

கருத்துகள் இல்லை: