திங்கள், 7 ஜூன், 2010

கஷ்மீர்:போலி என்கவுன்ட்டர்- ராணுவ கர்னல் பதவி நீக்கம்

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் 3 இளைஞர்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் ராணுவ கர்னல் ஒருவர் பதவி நீக்கமும் மேஜர் ஒருவர் தாற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜபுத்திர 4-வது படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் டி.கே.பதானியா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ராஜபுத்திர 4-வது படைப்பிரிவு மேஜர் ரூபிந்தர் மீது எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் அவர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று ராணுவத்தின் வடக்கு படைப்பிரிவு தளபதி தெரிவித்துள்ளார்.

குப்வாரா மாவட்டத்தில் கடந்த ஏப்ரலில் 3 இளைஞர்கள் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தனர்.அவர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்ததில், போலி என்கவுன்ட்டர் மூலம் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்துக்கும் கர்னல் பதானியா,மேஜர் ரூபிந்தருக்கும் தொடர்பிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.இதையடுத்து அவர்கள் மீது ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: