சனி, 26 ஜூன், 2010

கோவை கோட்டை மேடு இக்பால் திடலில் மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம்

கோவை கோட்டை மேடு இக்பால் திடலில் மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர் தலைமையில் நடைபெற்றது.

சிறப்புரையாக, தமுமுக மாநில தலைவர் போராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள், விடுதலை கோரிக்கை என்ற தலைப்பிலும், தமுமுக மாநில பொது செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள், கோவை முஸ்லிம்கள் நேற்றும் இன்றும் என்ற தலைப்பிலும், தமுமுக மேலாண்மை குழு உறுப்பினர் குணங்குடி அனிபா அவர்கள், விடுதலை சிந்தனைகள் என்ற தலைப்பிலும், மற்றும் தமுமுக மாநில செயலாளர் இ.உம்மர் அவர்கள், தமுமுக மாநில துணைச் செயலாளர்கள், கோவை சாதிக், கோவை சைய்யது, கோவை ஜாகீர், மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட பொருளாளர், டி.எம்.எஸ். அப்பாஸ், மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள், அப்பாஸ், ஷாஜகான், அதுபோல் தமுமுக மாவட்ட நிர்வாகிகள், அகமது கபீர், பர்கத்துல்லாஹ், மமக நகர தலைவர் ரபிக், மற்றும் ஜபார், கவிஞர் ஹக், அக்பர் அலி, திருப்பூர் மாவட்ட தமுமுக தலைவர் யுசுப், ஊட்டி மாவட்ட தமுமுக தலைவர் சமது, ஈரோடு மாவட்ட தமுமுக தலைவர் பாருக், திருப்பூா மாவட்ட மமக தலைவர் ஹாலித்தீன், மற்றும் கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், ஊட்டி,உடுமலை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம்,ஆகிய இடங்களில் இருந்து தமுமுக, மமக, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டார்கள், இதில் 700க்கும் மேற்பட்ட பெண் உட்பட 3500 பேர்கள் கலந்து கொண்டார்கள்.



கோட்டை மேடு பகுதிகள் மாநாடு போல் காட்சி அளிதத்து. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பொதுகூட்டம் நடந்த இடம் இக்பால் திடல் 13 ஆண்டு காலம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ, சமுதாய அமைப்புகளுக்கோ, பொது கூட்டம் பேச அனுமதி மறுக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு பிறகு இதில் கடைசி பொதுகூட்டம் 1997 ஆம் ஆண்டு கோவையில் 19 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்ட போது முஸ்லிம் வணிகம் செய்யும் கடைகள் ஷோபா துணிகடை உட்பட பல முண்னணி நிறுவனங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டது. இதில் பல கோடி ருபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக தமுமுக பல இடங்களில் வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது.



அப்போது இந்த இக்பால் திடலில் வைத்துதான் நல உதவிகள் வழங்கிய போது தான் அன்று கோவையில் குண்டு வெடித்தது. அன்று முதல் யாருக்கும் பொதுகூட்டம் அனுமதி இல்லை. அதோ தமுமுக 13 ஆண்டு பிறகு பொதுகூட்டத்திற்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. இழந்த உரிமையை மீண்டும் மீட்போம் என்ற உரையுடன் பொதுகூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை: