சனி, 26 ஜூன், 2010

நெல்லை புரோட்டாக் கடை விவகாரம்:கல்வீச்சு தாக்குதல்

நெல்லையில் புரோட்டா கடை மோதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லை ஜங்ஷன் த.மு. ரோட்டில் உள்ள புரோட்டா கடைக்கு இரு தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதுத்தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில் ஏற்கனவே அங்கு புரோட்டா கடை நடத்தி வந்த அப்துல் ஹமீது என்பவருக்கு கோர்ட்டில் சாதகமாக தீர்ப்பு வந்தது. இருப்பினும் அவருக்கு எதிர்தரப்பினரான நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரின் சகோதரர் போஸ் பாண்டியன் கடையை திறக்கவிடாமல் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் அப்துல் ஹமீது தனது ஆதரவாளர்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் சென்று கடையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.


இதையறிந்த எதிர்தரப்பினரான போஸ் பாண்டியன் கோஷ்டியினர் அங்கு திரண்டு கடையை சீரமைக்க கூடாது என்று கூறி தடுத்தனர். இச்சூழ்நிலையில் போஸ் பாண்டியன் கும்பலை சேர்ந்த ரவுடிகள் கடையின் பின்புறமாக வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. கடையின் வெளிப்புறம் நின்றுக் கொண்டிருந்த போஸ் பாண்டியன் கும்பலை சேர்ந்த குண்டர்கள் கடையின் மீதும் அப்பாவி மக்கள் மீதும் கற்களை வீசித் தாக்கினர்.


இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அபய்குமார்சிங், துணை கமிஷனர் அவினாஷ்குமார், உதவி கமிஷனர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ஜெபராஜ், சற்குணம், வீரபாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் வந்து ரவுடிக் கும்பல்களை விடுத்து அப்பாவிகள் மீது தடியடி நடத்தினர்.


மேலும் போலீஸார் ரவுடிக்கும்பலுக்கு சாதகமாகவே செயல்பட்டதாகவும், அருகில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில் ஒழிந்துக் கொண்ட அக்கும்பலை கைது செய்ய முயற்சிக்கவுமில்லை என்றும் கூறப்படுகிறது.


இது தொடர்பாக ஜங்ஷன் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 40 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுத்தவிர 145 வது பிரிவின் கீழ் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புரோட்டா கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: