திங்கள், 21 ஜூன், 2010

ஈரானில் கொலை, கற்பழிப்பில் ஈடுபட்டவருக்கு தூக்கு

கற்பழித்து, கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற ஒரு கைதிக்கு ஈரானில் தூக்குத் தண்டனை வழங்கபட்டது.

ஈரானின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஸாளிதான் என்ற நகரத்தின் சிறையில் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தண்டனை பெற்ற அக்பர் இந்த வருடம் ஈரானில் தூக்கு தண்டனை பெற்ற 80 வது நபர் ஆவார்.

கடந்த வருடம் கடுமயான குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை பெற்றவர்கள் 270 பேர்.

கொலை,கற்பழிப்பு, ஆயுதந்தரித்து கொள்ளை, போதை மருந்து வியாபாரம், விபச்சாரம் ஆகியவைகளுக்கு ஈரானில் தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.
7days

கருத்துகள் இல்லை: