சனி, 19 ஜூன், 2010

குவைத் இளவரசர் உறவினரால் சுட்டுக் கொலை!

Shaikh Basel Salem
குவைத்: கார்கள் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் குவைத் இளவரசர் சேக் பன்சல் அல் சலேம் அவரது உறவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர், 1965ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை குவைத்தை ஆண்ட 12வது மன்னரான சேக் சபாவி்ன் பேரனாவார்.

கடந்த வியாழக்கிழமை இவரை அவரது மாமாவே சுட்டுக் கொன்றார். தங்களது மாளிகையில் உள்ள கார்களை உபயோகப்படுத்துவது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவரை சுட்டுக் கொன்றதாகவும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: