அணு ஆயுதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அணு ஆயுதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 ஜூன், 2010

ஈரான் மீது பொருளாதாரத் தடை: நிறைவேற்றியது அமெரிக்க செனட்!

வாஷிங்டன்: அணு ஆயுதத் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஈரான் மீது பொருளாதாரத் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது அமெரிக்க செனட்.
உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி அணுஆயுத திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐரோப்பிய யூனியன் ஆகியவை சமீபத்தில் பொருளாதார தடை விதித்தன.
இந்நிலையில், அமெரிக்கா தன்னிச்சையாக ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கான மசோதா, அமெரிக்க செனட் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, ஈரானுக்கு கேசோலின் வினியோகிக்கும் கம்பெனிகள், ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு உதவும் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் அமெரிக்கா எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளாது என்று இந்த மசோதா கூறுகிறது.
இதனால் ஈரானுடன் தொடர்புடைய மற்ற நாடுகளும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக ஈரானின் நட்பு நாடுகளும் மறைமுக பொருளாதாரத் தடைக்குள்ளாகியுள்ளன.
source:thatstamil

வியாழன், 31 டிசம்பர், 2009

ஈரான் அணுகுண்டு, இஸ்ரேல் பரப்பிய கட்டுக்கதை: முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி

வாஷிங்டன்:அணு ஆயுத தயாரிப்பதற்கு அவசியமான நியூட்ரான் இன்ஷியேட்டர் ஈரான் ரகசியமாக உருவாக்குவதாக லண்டன் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெளிவந்த செய்தி கட்டுக்கதையென முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி கூறுகிறார்.

டிசம்பர் 14ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் லண்டன் என்ற பத்திரிகையில் இதுத்தொடர்பாக வெளிவந்த பொய்யான செய்திக்குப்பின்னால் இஸ்ரேலோ அல்லது பிரிட்டனோ இருக்கலாம் என முன்பு சி.ஐ.ஏவின் தீவிரவாத எதிர்ப்பு அதிகாரியாக பணியாற்றிய ஃபிலிப் கிரால்டி கூறுகிறார்.

இவரை மேற்க்கோள் காட்டி இண்டர் பிரஸ் சர்வீஸ் என்ற செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் லண்டனில் வெளிவந்த செய்தி அடிப்படையற்றது என்று அன்றே ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரமீன் மெஹ்மான் பரஸ் தெளிவுப்படுத்தியிருந்தார்.
2007 முதல் ஈரான் நியூட்ரான் இன்ஷியேட்டர் உருவாக்குவதாக ஏசியன் இண்டலிஜன்ஸ் செண்டர் வெளிப்படுத்தியதாக டைம்ஸ் ஆஃப் லண்டன் பத்திரிகை கூறுகிறது. இந்த செய்தி வெளியானவுடன் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஈரானுக்கு எதிராக மீண்டும் களமிறங்கின. ராபர்ட் மர்டோக்கின் மீடியாக்கள் இஸ்ரேல் மற்றும் பிரிட்டீஷ் அரசிடமிருந்து வரும் பொய்யான தகவல்களை பரவலாக வெளியிட்டுவருகிறது என்கிறார் கிரால்டி கட்டுக்கதையான செய்திகளின் உண்மை நிலையை வெளிக்கொண்டுவருவதில் முன்பும் முக்கிய பங்குவகித்தவர்தான் சி.ஐ.ஏ வின் முன்னாள் அதிகாரியான ஃபிலிப் கிரால்டி.

சதாம் ஹுசைன் ஈராக் அதிபராகவிருந்தபோது நைஜரிலிருந்து யுரேனியம் வாங்குவதாக குற்றஞ்சாட்டி வந்த கடிதத்தின் பின்னணியில் பெண்டகனின் முன்னாள் ஆலோசகரும், வலதுசாரி சிந்தனையாளருமான மைக்கேல் லீடன் உள்ளார் என்ற உண்மையை கிரால்டி வெளிக்கொணர்ந்தார். ஆனால் ஈராக் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டது அன்றைய புஷ்ஷின் அலுவலகம்.

ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பிறகே கிரால்டி கூறியது உண்மை என ஒத்துக்கொண்டது அமெரிக்கா.சதாம் ஹுசைனின் உளவுத்துறை நைஜரிலில் தாக்குதலுக்கு திட்டமிடுவதாக வந்த கடிதத்தின் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அண்டர் செகரட்டரியின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்ததும் கிரால்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

இஸ்ரேலின் அணு ஆயுதம் - அமைதிகாக்கும் அமெரிக்கா

அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேலுடனான 40 வருட ஒப்பந்தத்திற்கு அடிபணிந்துள்ளார். இந்த ஒப்பந்தப்படி இஸ்ரேல் எந்த ஒரு சர்வதேச சோதனைக்கு ஒத்துக்கொள்ளாமல் அணு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இந்த செய்தியை அமெரிக்க செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

"3 பெயர் கூற விரும்பாத செய்தி ஆதாரங்கள் கூறியதாவது, இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு விடம் அமெரிக்க அதிபர் ஒபாமா 'எதுவும் கேக்காதே, எதுவும் சொல்லாதே' (don't ask, don't tell policy) கொள்கையை கடைபிடிப்பதாகக் கூறியுள்ளார்" என்று வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகை சனி அன்று செய்தி வெளிட்டுள்ளது.

இந்த சம்பவம், நேதன்யாகு மற்றும் ஒபாமா வெள்ளை மாளிகையில் சந்திக்கும் போது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேலிய வல்லுநர் மற்றும் எழுத்தாளரான அவன் கொஹெந் இது பற்றி கூறுகையில், "அந்த ஒப்பந்தப்படி அமெரிக்கா, இஸ்ரேல் தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை வெளி உலகத்திற்கு காட்டாத வரை அதனை மறைமுகமாக ஆதரிக்கும்" என்று தெரிவித்தார்.

1969 ல் முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்ஸ்சன் மற்றும் அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் உடன் நடந்ததாகக் கூறப்படும் இந்த ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான ஆவணங்கள் இல்லை.

கடந்த வாரம் இஸ்ரேலின் Channel 2 என்ற தொலைகாட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இஸ்ரேலிய பிரதமர், "ஒபாமாவின் அணு ஆயுதங்கள் இல்லாத உலகம் என்ற கூற்று இஸ்ரேலிற்கு பொருந்தாது" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "ஒபாமா கூறியதிலிருந்தே அது ஈரான் மற்றும் வட கொரியா குறித்தது என்று நமக்கு புரியும்" என்று கூறினார்.

"ஒபாமா உடனான என்னுடைய முதல் சந்திப்பிலேயே அவரிடமிருந்து அமெரிக்க இஸ்ரேல் இடையே பல வருடங்களாக இருக்கும் உறவு குறித்து உறுதி செய்து கொண்டேன்", என்று அவர் மேலும் கூறினார்.

எந்த விதமான முறைப்படியான பதிவுகள் இல்லாவிட்டாலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசுகள் இதனை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாவிட்டாலும் சில ஆவணங்கள் இது குறித்து சிறு குறிப்புகள் தருகின்றன.

நிக்ஸ்சன் நூலகம், இந்த விவகாரத்தை சிறிது உறுதி செய்யும் வகையில் உள்ள ஜூலை 19, 1969 வெளியான ஹென்றி கிஸ்ஸின்ஜெரின் செயற்குறிப்பு ஒன்றை, 2007 ல் வகை படுத்தி உள்ளது.

அந்த செயற்குறிப்பு "இஸ்ரேல் தற்பொழுது வைத்திருப்பதை தடுக்க நாம் நினைத்தாலும், நமக்கு உண்மையில் என்ன வேண்டுமென்றால், இஸ்ரேல் வைத்திருப்பது உலகளாவிய உண்மையாக மாறிவிடக் கூடாது என்பதே" என்று கூறுகின்றது.

நன்றி
அல்-ஜசீரா