ஞாயிறு, 4 அக்டோபர், 2009

இஸ்ரேலின் அணு ஆயுதம் - அமைதிகாக்கும் அமெரிக்கா

அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேலுடனான 40 வருட ஒப்பந்தத்திற்கு அடிபணிந்துள்ளார். இந்த ஒப்பந்தப்படி இஸ்ரேல் எந்த ஒரு சர்வதேச சோதனைக்கு ஒத்துக்கொள்ளாமல் அணு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இந்த செய்தியை அமெரிக்க செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

"3 பெயர் கூற விரும்பாத செய்தி ஆதாரங்கள் கூறியதாவது, இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு விடம் அமெரிக்க அதிபர் ஒபாமா 'எதுவும் கேக்காதே, எதுவும் சொல்லாதே' (don't ask, don't tell policy) கொள்கையை கடைபிடிப்பதாகக் கூறியுள்ளார்" என்று வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகை சனி அன்று செய்தி வெளிட்டுள்ளது.

இந்த சம்பவம், நேதன்யாகு மற்றும் ஒபாமா வெள்ளை மாளிகையில் சந்திக்கும் போது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேலிய வல்லுநர் மற்றும் எழுத்தாளரான அவன் கொஹெந் இது பற்றி கூறுகையில், "அந்த ஒப்பந்தப்படி அமெரிக்கா, இஸ்ரேல் தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை வெளி உலகத்திற்கு காட்டாத வரை அதனை மறைமுகமாக ஆதரிக்கும்" என்று தெரிவித்தார்.

1969 ல் முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்ஸ்சன் மற்றும் அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் உடன் நடந்ததாகக் கூறப்படும் இந்த ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான ஆவணங்கள் இல்லை.

கடந்த வாரம் இஸ்ரேலின் Channel 2 என்ற தொலைகாட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இஸ்ரேலிய பிரதமர், "ஒபாமாவின் அணு ஆயுதங்கள் இல்லாத உலகம் என்ற கூற்று இஸ்ரேலிற்கு பொருந்தாது" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "ஒபாமா கூறியதிலிருந்தே அது ஈரான் மற்றும் வட கொரியா குறித்தது என்று நமக்கு புரியும்" என்று கூறினார்.

"ஒபாமா உடனான என்னுடைய முதல் சந்திப்பிலேயே அவரிடமிருந்து அமெரிக்க இஸ்ரேல் இடையே பல வருடங்களாக இருக்கும் உறவு குறித்து உறுதி செய்து கொண்டேன்", என்று அவர் மேலும் கூறினார்.

எந்த விதமான முறைப்படியான பதிவுகள் இல்லாவிட்டாலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசுகள் இதனை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாவிட்டாலும் சில ஆவணங்கள் இது குறித்து சிறு குறிப்புகள் தருகின்றன.

நிக்ஸ்சன் நூலகம், இந்த விவகாரத்தை சிறிது உறுதி செய்யும் வகையில் உள்ள ஜூலை 19, 1969 வெளியான ஹென்றி கிஸ்ஸின்ஜெரின் செயற்குறிப்பு ஒன்றை, 2007 ல் வகை படுத்தி உள்ளது.

அந்த செயற்குறிப்பு "இஸ்ரேல் தற்பொழுது வைத்திருப்பதை தடுக்க நாம் நினைத்தாலும், நமக்கு உண்மையில் என்ன வேண்டுமென்றால், இஸ்ரேல் வைத்திருப்பது உலகளாவிய உண்மையாக மாறிவிடக் கூடாது என்பதே" என்று கூறுகின்றது.

நன்றி
அல்-ஜசீரா

கருத்துகள் இல்லை: