செவ்வாய், 27 அக்டோபர், 2009

அலிகார் முஸ்லீம் பல்கலை-மாணவர் சுட்டு கொலை

அலிகார்: வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

நேற்று இரவு அலிகார் ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக புராக்டர் பேராசிரியர் முசாபர் சித்திக்கி கூறுகையில், பி.எஸ்.சி இறுதியாண்டு படித்து வந்த மாணவர் ஷானவாஸ் என்பவர், அந்த ஹோட்டலுக்குப் போயிருந்த போது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது அவருக்கும், இன்னொருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர் ஷானவாஸை துப்பாக்கியால் சுட்டு விட்டார்.

இதையடுத்து உடனடியாக அவரை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஷானவாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர் என்றார்.

ஷானவாஸை சுட்டுக் கொன்ற நபரின் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், விரைவில் அவர் பிடிபடுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும், ஒரு நபரை இதுதொடர்பாக பிடித்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: